Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

05 ஜூன் 2009

ரஜினி,கமல் வாழ்த்து ஜெயம் ரவி ஆர்த்தி திருமண புகைப்படங்கள்

Jeyam ravi aarthi marriage photo gallery wallpapers -2

Please click the photo for wallpaper view 1280 x 1000 px

கருணாநிதியின் கதையில் மீரா!

'உளியின் ஓசை' படத்துக்குப் பிறகு முதல்வர் [^] கருணாநிதியின் கதை வசனத்தில் உருவாகும் புதிய படம் [^] நீ இன்றி நான் இல்லை. உளியின் ஓசை படத்தைத் தயாரித்த நந்தினி ஆர்ட்ஸ் சார்பில் ஆறுமுகநேரி முருகேசனே இந்தப் படத்தையும் தயாரிக்கிறார். உதய்கிரண் நாயகனாகவும் மீராஜாஸ்மின் நாயகியாகவும் நடிக்கும் இந்தப் படத்துக்கு தேவா இசையமைக்கிறார். வடிவேலு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன் கருணாநிதி [^] எழுதிய 'சுருளி மலை' கதைதான் சில மாறுதல்களுடன் 'நீ இன்றி நான் இல்லை' என்ற படமாக உருவாகிறது. அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுத, பி கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். இளவேனில் இயக்குகிறார். அடுத்தமாதம் படப்பிடிப்பு [^] துவங்குகிறது.

கணனியில் அனைத்தும் சரியாக இருக்கின்றதா?

கம்ப்யூட்டரில் பல வகையான ஹார்ட்வேர் சாதனங்கள் உள்ளன. ஹார்ட் டிஸ்க் மட்டும் நாம் அறிவோம். மதர் போர்டு என ஒன்று இருப்பதைப் பொதுவாகத் தெரிந்து கொண்டிருப்போம். இதனுடன் பல துணை சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கீ போர்டு, மவுஸ் போன்றவை பொதுவாக உள்ளவை. இவை எல்லாம் சரியாக உள்ளனவா? அல்லது பிரச்னையை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றனவா ? திடீரென நம் காலை வாரிவிடுமா? என்பதை எப்படி அறிந்து கொள்வது? அல்லது அவை இயங்க வேண்டிய வேகத்தில் அதற்கான தன்மையுடன் இயங்குகின்றனவா? என்று எப்படித் தெரிந்து கொள்வது? PC Wizard என்ற இந்த புரோகிராமினை டவுண்லோட் செய்து இயக்கினால் இந்த கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கும். உங்களுடைய கம்ப்யூட்டரின் பாகங்கள் மற்றும் அவற்றின் செயல் திறனை சிறிது ஆழமாகத் தெரிந்துகொள்ள இந்த புரோகிராம் பயன்படுகிறது. அவற்றின் செயல் திறன் பொதுவான இவற்றின் செயல் திறனுடன் ஒப்பிடுகையில் சரியாக உள்ளதா? என்பதனையும் அறியலாம். இதனை இன்ஸ்டால் செய்து இயக்கியவுடன் இந்த புரோகிராம் உங்கள் கம்ப்யூட்டரை முழுமையாக ஸ்கேன் செய்திடும். பின் ஒவ்வொரு சாதனமும் எந்நிலையில் இயங்குகின்றன என்று தொழில் நுட்ப ரீதியில் தகவல் தரப்படும். எந்த சாதனங்கள் சரியில்லை என்று கண்டறிந்து இவற்றை எல்லாம் மாற்றிவிடுங்கள் என்று அட்வைஸ் தரும். அப்படியா சேதி! என்று இவற்றை எல்லாம் பார்த்த பிறகு அங்குள்ள Benchmarks என்ற பட்டனை அழுத்தவும். இது கீழாக இடது புறம் கொடுக்கப்பட்டுள்ளது. இது சாதனங்களுக்கான செயல்திறன் சோதனையை மேற்கொண்டு அதன் பொதுவான தன்மையுடன் ஒப்பிட்டு காட்டும். இவை மட்டுமல்லாது உங்கள் கம்ப்யூட்டர் குறித்த இன்னும் பல தகவல்களையும் சோதனைகளையும் மேற்கொள்ளலாம். பிசி விஸார்ட் புரோகிராமினை இயக்கிப் பார்த்து ரசித்துப் பாருங்கள்.

02 ஜூன் 2009

ஏர் பிரான்ஸ் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்தது-228 பேர் பலி!

பிரான்ஸ்: பிரேசிலின் ரியோ டி ஜெனீரோவில் இருந்து 228 பயணிகளுடன் பிரான்ஸ் நோக்கி வந்த ஏர்-பிரான்ஸ் நிறுவன விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்து நொறுங்கிவிட்டதாகத் தெரிகிறது. இதையடுத்து அந்த விமானத்தைத் தேடும் பணியில் பிரேசில் மற்றும் பிரான்ஸ் விமானப் படை விமானங்களும் கடற்படை கப்பல்களும் ஈடுபட்டுள்ளன. AF 447 என்ற அந்த விமானம் பிரேசிலில் இருந்து ஞாயிற்றுக்கிழமை இரவு 11.30 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் காலை 9.10 மணிக்கு பாரிஸை அடைந்திருக்க வேண்டும். ஆனால், நள்ளிரவு 2.33 மணிக்கு அந்த விமானத்துடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதையடுத்து அடுத்த நான்கு நிமிடங்களுக்கு விமானத்தின் பல்வேறு முக்கிய மின்சார பாகங்கள் சரியாக செயல்படவில்லை என்று அந்த விமானத்தின் தானியங்கி கம்ப்யூட்டர்கள் பிரான்சில் உள்ள அந்த விமான நிறுவனத்தின் பராமரிப்புப் பிரிவுக்கு தொடர்ந்து தகவல்களை அனுப்பியபடி இருந்தது. விமானம் மிக மோசமான வானிலையைக் கடந்ததாகவும், மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி மின்சார எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்களை அனுப்பியது. இதனால் அந்த விமானம் 2.33 மணிக்கே கடலில் விழுந்திருக்கலாம் என்றும் அதன் பின்னரே கம்ப்யூட்டர்கள் தகவல்களை அனுப்பியிருக்கலாம் என்றும் ஏர் பிரான்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். ஏர்பஸ் A330 ரகத்தைச் சேர்ந்த அந்த விமானம் மிக நவீனமானது. பிரான்ஸ் வரும் வழியில் ஆப்பிரிக்கா-பிரேசில் இடையே வழக்கமான தீவிர காற்றோட்டம் காரணமாக ஏற்படும் அதிர்வுகளால் (turbulence) விமானத்தை இயக்குவது வழக்கமாகவே சிரமமானது தான் என்ற அவர், ஆனால், அது தான் காரணம் என்று இப்போதே சொல்லிவிட முடியாது என்றார். மேலும் அப் பகுதியில் கடும் மின்னல்-இடியோடு வானிலையும் மோசமாக இருந்துள்ளது. இதனால் மின்னல் தாக்கி விமானத்தின் மின் பாகங்கள் இயங்காமல் போய் விபத்து நடந்திருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது. அந்த விமானம் விபத்துக்குள்ளானது உறுதியாகிவிட்ட நிலையில், அதிலிருந்த பயணிகளி்ன் உறவினர்கள், விமானம் வந்திறங்கியிருக்க வேண்டிய சார்லஸ் டி குலே சர்வதேச விமான நிலையத்தில் குவிந்துள்ளனர். பிரேசிலில் இருந்து 400 கி.மீ. தொலைவில் அட்லாண்டிக் கடலில் அந்த விமானம் விழுந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தப் பகுதியில் அமெரிக்க செயற்கைக் கோள்கள் மூலமும் விமான பாகங்களைத் தேடும் பணி நடக்கிறது. விபத்துக்குள்ளானபோது அந்த விமானம் 35,000 அடி உயரத்தில் மணிக்கு 760 கி.மீ. வேகத்தில் பறந்து கொண்டிருந்தாகவும் தெரியவந்துள்ளது. தீப் பிழம்பை பார்ப்போம்-பிரேசில் விமானிகள் இதற்கிடையே அந்தப் பகுதியில் பறந்து கொண்டிருந்த TAM என்ற பிரேசில் விமான நிறுவனத்தின் விமானத்தை இயக்கிக் கொண்டிருந்த பைலட்டுகள், அட்லாண்டிக் கடலில் இரவில் தீப் பிழம்பைப் பார்த்ததாக தெரிவித்துள்ளனர். விமானத்தில் 126 ஆண்கள், 82 பெண்கள், 7 குழந்தைகள், ஒரு பச்சிளம் குழந்தை, 2 விமானிகள் உள்ளிட்ட 12 விமான சிபந்திகள் இருந்தனர் என ஏர் பிரான்ஸ் தெரிவித்துள்ளது. இதில் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என பிரான்ஸ் அதிபர் சர்கோசி தெரிவித்துள்ளார். மின்னல் தாக்கினாலும் கூட அதை அழகாக வெளியில் கடத்திவிட்டு பாதுகாப்பாக பறக்கும் ரகத்தைச் சேர்ந்தது தான் ஏர்பஸ் A330 விமானம். இது எப்படி மின்னலால் பாதிக்கப்பட்டது என்பது விமானத்துறை வல்லுனர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் முழு விசாரணைக்குப் பி்ன்னரே விபத்து குறித்து எந்த முடிவுக்கும் வர முடியும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

நிருபர்களுடன் ரம்யா வாக்குவாதம்-மோதல்

பெங்களூர் நடந்த பத்திதிரிகையாளர் சந்திப்புக்கு ஒரு மணி நேரம் தாமதமாக வந்த நடிகை ரம்யா, அவர்களுடன் வாக்குவாதத்தில் இறங்கினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தமிழில் குத்து படம் மூலம் அறிமுகமானவர் ரம்யா. இவர் பொல்லாதவன், வாரணம்ஆயிரம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். பெங்களூரை சேர்ந்த இவர் தற்போது கன்னடத்தில் படு பிசியாக இருக்கிறார். முன்னாள் கர்நாடக முதல்வரும், தற்போதைய மத்திய அமைச்சருமான எஸ்.எம்.கிருஷ்ணாவின் நெருங்கிய உறவினரான இவர் சமீபத்திய நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மாண்டியா தொகுதியில் நிறுத்தப்படலாம் என்ற பேச்சும் அடிபட்டது. இந்நிலையில் நேற்று பகல் 1 மணிக்கு இவர் நடிகர் பிரேமுடன் நடித்து விரைவில் வெளிவர இருக்கும் ஜொதெகார என்ற கன்னட படம் தொடர்பான நிருபர்கள் சந்திப்பு பெங்களூர் நட்சத்திர ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 1 மணிக்கு பத்திரிகையாளர்கள், கதநாயகன் பிரேம், தயாரிப்பாளர் அஸ்வினி ராம்பிரசாத் உள்ளிட்ட படக் குழுவினர் வந்துவிட்டனர். ஆனால் நடிகை குத்து ரம்யா வரவில்லை. அவருக்கு தயாரிப்பாளர் போன் செய்த போது விரைவில் வந்துவிடுவதாக தெரிவித்தார். வெகு நேரமாகியும் அவர் வரவில்லை. மீண்டும் இரு முறை அவரிடம் பேசியபோதும் ஒரே பதிலை தான் தெரிவித்தார். இதையடுத்து சுமார் 1 மணி நேரம் கழித்து அங்கு வந்தார். வந்த வேகத்தில் அவருக்காக காத்திருந்தவர்களிடம் சிறிய வருத்தம் கூட தெரிவிக்காமல் பேசத் தொடங்கினார். இதையடுத்து கூட்டத்துக்கு வந்திருந்த பத்திரிகையாளர்கள் சிலர் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த ரம்யா,பத்திரிகையாளர்கள் சந்திப்பு நடக்கிறது என்பது குறித்து எனக்கு தகவல் கொடுக்கப்படவில்லை. எனக்காக யாரும் காத்திருக்க வேண்டாம் என நான் அப்போதே தயாரிப்பாளிடம் கூறிவிட்டேன். இன்று ஞாயிற்றுக்கிழமை ஓய்வு நான் என்பதால் இங்கு சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என்று தான் வந்தேன். நீங்கள் என்னிடம் கேட்பதற்கு எதுவும் இல்லை. எது கேட்பதாக இருந்தாலும் அதை தயாரிப்பாளர் ராம்பிரசாத்திடம் தான் கேட்க வேண்டும். நான் யாரிடமும், எதற்கும் வருத்தம் தெரிவிக்க வேண்டியதில்லை. என்னை பற்றி ஒன்றும் எழுத வேண்டிய அவசியமில்லை. விருப்பம் இருந்தால் இங்கே இருங்கள். இல்லையென்றால் புறப்பட்டு செல்லுங்கள் எனறார் ரம்யா. இதையடுத்து நிருபர்கள் அனைவரும் கோபத்துடன் வெளியேறிவிட்டனர். நிருபர்கள் மற்றும் நடிகை ரம்யா இருவரையும் தயாரிப்பாளர் ராம்பிரசாத் சமாதானம் முயன்றார். ஆனால் அதற்கு போதிய கிடைக்கவில்லை. அவர்கள் நடிகை ரம்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தனர். அதன் பின்னர் வெளியே வந்த நடிகை ரம்யா கூறுகையில், கூட்டத்தில் நிருபர்கள் தான் முதலில் ஆவேசமாக பேசினார்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை என்பதால் என்னால் மன்னிப்பு கேட்க முடியாது எனறார் ரம்யா.

நான் அழகில்ல!- மம்தா மோகன்தாஸ்

அழகான தென்னிந்திய நடிகைகளுள் ஒருவர் என எல்லாரும் மம்தா மோகன்தாஸைப் பாராட்ட, அவரோ வேறு ஒருவருக்கு அந்த சர்ட்டிபிகேட்டைத் தருகிறார். யார் அந்த அழகி தெரியுமா? விவேக் தானாம்.. 'அட உண்மைதாங்க... சமீபத்தில் நானும் விவேக்கும் குரு என் ஆளு படத்துல ஒரு காட்சியில் சேர்ந்து வருவோம். அந்தக் காட்சியில் பெண் வேடத்தில் வருவார் விவேக். உண்மையில் அந்தக் காட்சியில் அவரது தோற்றம் பார்த்து அசந்துவிட்டேன். எனக்கே நான் அழகா இருக்கேனா இல்லையான்னு சந்தேகம் வந்துடுச்சி. அவர்கிட்ட நான் இப்படிச் சொன்னேன்... 'என்னை விட இப்போ நீங்கதான் அழகா இருக்கீங்க'ன்னு!", என்கிறார் மம்தா. விவேக்கின் காமெடிக்கு பெரிய ரசிகையாம் மம்தா. முதல்முறை அவரைச் சந்தித்தபோது, ஹலோ என்று விவேக் கை நீட்ட, இவர் பதிலுக்கு கை கொடுக்காமல் குலுங்கிக் குலுங்கி சிரித்துக் கொண்டே இருந்தாராம்

பென் ட்ரைவ், மெமரி கார்டுகளில் மால்வேர்களை நீக்க..,

நாம் உபயோகிக்கும் பென் ட்ரைவ் மற்றும் மெமரி கார்டுகளில் அடிக்கடிதொல்லைத் தருவது, AutoRun.inf, REGSVR, SVCCHOST, Loverahul.vbs, r8.bat, Newfolder.exe போன்ற மால்வேர்கள். இவை நம் கணினியில் லைசன்ஸ்டு ஆண்டிவைரஸ் ப்ரோகிராம் இருந்தால்பெரிதாக ஒன்றும் பாதிப்பில்லை. சில சமயங்களில் ஒவ்வொரு ஃபோலடர் பெயரிலும் ஒரு EXE file உருவாவது, Exe file கள் அனைத்தும் காணாமல் போவது, Windows Generic 32 error வருவதுபோன்ற பல சிக்கல்களை உருவாக்கும். இது போன்ற மால்வேர்களை அழிக்க என்ன செய்யலாம். http://pcsafety.us என்ற தளத்திலிருந்து Combofix.exe என்ற சிறு கோப்பை தரவிறக்கம் செய்து ரன்செய்யுங்கள். இதை உபயோகிக்கும் பொழுது. 'Do you want to download Windows recovery console?' என்று கேட்கும். அதற்கு No கொடுத்துவிடுங்கள். மேலும் இதை ரன் செய்வதற்கு முன்பாக உங்கள் பென்டிரைவ், மெமரி கார்டுகளை கணினியில் இணைத்துக் கொள்ளுங்கள். இப்படி தரவிறக்கம் செய்யும் Combofix ஒரு வாரத்திற்கு மட்டுமே வேலைசெய்யும். மறுபடியும் வேண்டுமென்றால் திரும்பவும் தரவிறக்கம் செய்யவேண்டியதுதான். மேலும் இது ஏற்கனவே உள்ள மால்வேர்களை அழிக்குமே தவிர புதிதாக வருவதை தடுக்காது.

நடிகை சோனாவிடம் கேட்கப்பட்ட "ஏ" டாகூடமான கேள்விகளும் அவரின் பதில்களும்?

"குசேலன்" புகழ் நடிகை சோனாவின் பிறந்தநாள், அதை முன்னிட்டு ஒரு நட்சத்திர ஹோட்டலில் அவர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நிருபர்கள் ஏடாகூடமான கேள்விகளை கேட்டார்கள்,அவரும் கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் பதிலளித்தார். கேள்வி : சோனா நீங்க பாக்குறதுக்கு சும்மா "கொத்தும் கொலையுமா,மப்பும் மந்தாரமுமா" இருக்கீங்க? அதுக்கு என்ன சாப்புடுறீங்க? சோனா : ஒண்ணுமே இல்ல சார், உங்கள மாதிரி நானும் சாப்பாடுதான் சாப்புடுறேன். கேள்வி : பல நடிகைகள் நீச்சல் உடையில ஆபாசம் இருக்குன்னு பயந்து போய் நடிக்கிறதுக்கு தயங்குறப்போ நீங்க மட்டும் எப்படி தாராளமா நடிக்கீறீங்க ? சோனா : சார், நம்ம நிஜ வாழ்க்கையில எல்லோரும் நீச்சல் குளத்துல நீச்சல் டிரஸ் போட்டு குளிக்கிறோம்,அத யாரும் ஆபாசம்னு சொல்றதில்ல, அதுவே சினிமாவுல போட்டு நடிக்கிறப்போ அத ஆபாசம்ன்னு சொல்றாங்க,இ தெல்லாம் சும்மா அவகள நல்லவங்களா காட்டிக்க போட்டுக்குற முகமூடி தான். கேள்வி : பெண்களுக்குன்னு "யுனிக்" ன்னு ஒரு கடை தொறந்திருக்கீங்க? அதே மாதிரி ஆம்பளைங்களுக்கு ஏதாவது தொறப்பீங்களா? சோனா : அந்த கடையில ஆம்பளைங்களுக்கான அயிட்டங்களும் இருக்கு சார்,ஆனா எதிர்காலத்துல ஆம்பளைங்களுக்கு ஒரு சரக்கடிக்கிற "பப்" ஓப்பன் பண்ணலாம்முன்னு இருக்கேன்.அப்போ உங்க எல்லாருக்கும் ப்ரீயா சரக்கு தருவேன் கேள்வி : ரசிகர்கள் தொல்லைகள் இருக்கா? யாராவது உங்கள நேர்ல பாக்க வந்தாங்களா? சோனா : ஆமாம், அப்படித்தான் திருத்தணியில இருந்து ஒரு ரசிகர் போன் பண்ணினார்,மேடம் நான் உங்கள பாக்கனும்னு ஒரே தொல்லை, சரி நானும் வாங்கன்னு என்னோட ஆபீஸ் அட்ரஸ கொடுத்தேன்,ஆழ பாத்ததும் ஸாக்காயிட்டேன், என்ன வந்தது ஒரு அம்பது வயசு ஆளு. எனக்கு சேலை,சுவீட்டு,பஞ்சாமிர்தம் எல்லாம் வாங்கிட்டு வந்தாரு. கேள்வி : சரி, உங்க கல்யாணம் எப்போ? சோனா : என்ன யார் சார் கட்டிப்பாங்க.., வேணுமுன்னா நீங்க மாப்புள்ள பாத்து குடுங்க நிருபர் : சோனாவுக்கு கிடைக்காத மாப்பிள்ளையா? வந்து வரிசையில நிப்பாங்களே? சோனா : எங்க சார் எல்லாரும் "வேலைக்கு ஆகாத" ஆட்களா இருக்காங்க.

உங்கள் கணினி "குதிரைவேகம்" எடுக்க வேண்டுமா?

நம் கணினி வேகம் குறைவா இருப்பதற்கு இரண்டே இரண்டு காரணங்கள் தான் உள்ளன. 1. நம் கணினியில் உள்ள ஹார்டுவேர்களை அப்டேட் செய்யாமல் இருப்பது.., 2. நம் கணினியில் நாம் இன்ஸ்டால் செய்துள்ள மென்பொருட்களை அப்டேட் செய்யாமல் இருப்பது.., இந்த இரண்டையும் நாம் சம்பந்தப்பட்ட நிருவனங்கள் தரும் புதிய அப்டட்டுகளை நாம் பதிந்து கொண்டாலே போதும்। நம் கணினியின் வேகம் குதிரை வேகம் தான்। இந்த இரண்டு வேலைகளையும் செய்யும் மென்பொருட்களை நீங்கள் இங்கே இலவசமாக தரவிறக்கம் செய்து உங்கள் கணினியில் வைத்து ஓடச்செய்தால் அவைகள் புதுப்பிக்க வேண்டியவைகளை காடிகொடுத்து அதை தரவிறக்கமும் செய்ய வழிவகை செய்து விடும். சரி இவங்க நமக்கு இலசமா தர்ரதுனால்இலவசமா தர்ரதுனால அவங்களுக்கு என்ன பிரயோசனம்னு நீங்க கேட்கலாம், அவங்க மென்பொருளை நாம ஓடச்செய்யும் போது இடைஇடையே விளம்பரங்களை காண்பிப்பார்கள் அவைகளை "கிளிக்" செய்ததால் போது, அவங்களுக்கு வருமானம் லாபம், நமக்கு இலவச தரவிறக்கம் லாபம். ஹார்டுவேர்களை அப்டேட் செய்ய : http://www.radarsync.com/installers/radarsync.exe மென்பொருட்களை அப்டேட் செய்ய : http://filehippo.com/updatechecker/FHSetup.exe 552 Views

31 மே 2009

அசத்தப்போவது யாரு’ புகழ் கோவை ரமேஷ் விபத்தில் பலி

கோவையைச் சேர்ந்தவர் ரமேஷ் என்ற ரமேஷ்குமார் (30). சன் டி.வி.யில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் ஒளிபரப்பாகிவரும் அசத்தப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்கேற்று வந்தார். பெண் வேடத்தில் ரசிகர்களை கவர்ந்திழுப்பார். இந்த நிகழ்ச்சியால் பிரபலமான ரமேஷ், தனியாக கலை நிகழ்ச்சியும் நடத்தி வந்தார். இவரும், இவரது நண்பர் கோவை மதுக்கரை மார்க்கெட் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (25) என்பவரும் நேற்றிரவு திருவாரூரில் கலைநிகழ்ச்சி நடத்திவிட்டு, காரில் கோவை திரும்பிக் கொண்டிருந்தனர். காரை கார்த்திகேயன் ஓட்டினார். இன்று அதிகாலை 5.30 மணி அளவில் காங்கயம் - திருச்சி ரோடு கொடுமுடி பிரிவு என்ற இடத்தில் வரும்போது கோவையில் இருந்து மணல் எடுக்க கரூர் சென்ற லாரியும் காரும் நேருக்குநேர் மோதிக்கொண்டது. இதில் காரின் முன்பகுதி அப்பளம்போல் நொறுங்கியது. ரமேஷ், கார்த்திகேயன் இருவரும் காருக்குள்ளேயே உடல் நசுங்கி பலியாயினர். இதுபற்றி தகவலறிந்ததும் காங்கயம் போலீசாரும் தீயணைப்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். நீண்டநேரம் போராடி காரில் சிக்கியிருந்த உடல்களை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தால் அந்தப் பகுதியில் சுமார் 30 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் அம்மாதுரை, வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

உங்கள் சருமத்துக்கு ஏற்ற உணவுகள்:

என்ன..டா இது உடல் ஆரோக்கியத்துக்கு தானே உணவு சருமத்துக்கு ஏற்ற உணவா என்று கேட்க தோணுதா? நம்முடைய வயது அதிகம் ஆவதை முதலில் சொல்வது நமது சருமம் தான். இது உண்மைதானுங்க. ஆகையால் உணவில் மீது அக்கரை கொண்டால் நம் இளைமையினை தக்க வைக்க முடியும். ஏற்க்கனவே நாம் முன்று வகையான சருமத்தை பற்றி இதில் பார்த்திருக்கோம். அவர்களுக்கு ஏற்ற உணவுகளை இப்ப பார்ப்போம். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்கள் அதிகமாக முகத்தில் திட்டு திட்டாக எண்ணெய் வழியும்.. அவர்களுக்கு பொடுகு, பருக்கள் வர வாய்ப்புள்ளதால் மிகவும் தலையினை சுத்தமாக வைக்கவும்.வாரம் ஒரு முறை முகத்துக்கு ஆவி பிடிக்கவும். இதனால் முகத்தில் உள்ள அழுக்கு வெளியாகும். துவரங்கள் அடைப்படும். உணவில் அதிகம் பச்சை காய்கறிகள், சாலட்,பழங்கள் அதிகம் சேர்க்கவும். கொழுப்பு நீக்கிய பால்,த்யிர்,மோர் சேர்க்கவும். அடிக்கடி உணவில் முளைகட்டிய பயிறு வகைகள் சேர்க்கலாம். உலர்ந்த சருமம் கொண்டவர்கள்: இவர்களின் சருமம் எப்பொழுதும் டல்லாகவே இருக்கும். இவர்களுக்கு சீக்கரமே முகச்சுருக்கம் வர வாய்ப்புகள் இருக்கு. ஆகையால் இவங்க அதிகமாக உணவில் விட்டமின்கள் நிறைந்த உணவுகளும் மினரல்ஸ் நிறைந்த உணவுகளை சேர்க்கவும். விட்டமின்களை நாம் அதிகம் சேர்த்துக்கொண்டால் நம் உடம்பில் உள்ள செல்கள் மற்றும் திசுக்களுக்கு தேவையான எனர்ஜியை இது தருகிறது। மலச்சிக்கல் அதிகம் ஏற்ப்படாமல் பார்த்துக்கொள்ளவும் நார்மல் சருமம் கொண்டவர்கள்: இவங்க ரொம்ப கொடுத்து வைச்சவங்க. இவங்களுக்கு பெரும் பாலும் எல்லா வகையான பேக் மற்றும் உணவுகளும் ஏற்றுக்கொள்ளும்.. இப்படியே உங்கள் சருமத்தை பாதுகாத்தால் போதும். அதிகமாக மோர்,தண்ணீர் குடிக்கவும்.ஆயிலி அயிட்டம், நான் - வெஜ் உணவுகளை குறைப்பது அனைவரின் சருமத்துக்கும் நல்லது. இப்படி நிங்கள் அதிகமாக உணவில் சேர்த்துக்கொண்டால் உங்கள் உண்மையான வயதை விட 5 வயது கம்மியாக தான் தெரிவிங்க... அப்பறம் என்ன...ம்ம்...ம்ம்

தோரணை - செம ரோதனை..

சென்னையில ரெண்டு பெரிய ரவுடிகள். ஒருவர் பிரகாஷ்ராஜ் மற்றொருவர் 'பொல்லாதவன்' கிஷோர். இருவருக்கும் தொழில் முறை போட்டி. இதற்கிடையில் சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடி போன தன அண்ணனை கண்டுபிடிக்க அலங்காநல்லூர் கிராமத்திலிருந்து சென்னை வரும் 'புரட்சி தளபதி' விஷால். ஒரு கட்டத்தில் ஸ்ரீமானை தன் அண்ணனாக கருதி, ஸ்ரீமானைக் கொல்லவரும் கிஷோரிடம் மோதத்துவங்கி, பின் தன் உண்மையான அண்ணன் கிஷோர்தான் என்பதை கண்டுபிடித்து அவரை திருத்தி, அவரை பழிவாங்க துடிக்கும் பிரகாஷ்ராஜிடம் இருந்து தன் அண்ணனை காப்பாற்றினாரா என்பது மீதிக்கதை. இதற்கிடையில் நண்பன் சந்தானத்தோடு காமெடி, ஷ்ரியாவோடு காதல், தாய்பாசம் etc., அலாங்கானல்லூர் கிராமத்தில் இருந்து வரும் விஷால் கார் சேசிங்கில் கலக்குவது, துப்பாக்கிகளை இயக்குவது, பிரகாஷ்ராஜ்-கிஷோர் அனாயாசமாக துப்பாக்கிகளால் Gang War செய்வது, விஷால் அடித்தால் மற்றவர்கள் பல அடிகள் தாண்டிப்போய் விழுவது, அலங்காநல்லூர் கிராமத்தில் இருந்து ஓடிப்போன அண்ணனைத் தேடி, மதுரையோ திருச்சியோ கோயம்பத்தூரோ அல்லது வேறு மாநிலமோ செல்லாமல், சென்னைக்கு வருவது, இன்னும் பற்ப்பல லாஜிக் மீறல்களை, விறுவிறுப்பான திரைக்கதையையும், புதிதான காட்சிகளையும் கொண்டு மறைத்து, "கமர்ஷியல் மசாலா" வெற்றிப்படத்தை கொடுக்க முனைந்திருக்கலாம். ஆனால்........................ விஷால் : டாக்டர் விஜய், ரஜினியின் கமர்சியல் மற்றும் தெலுங்கு மசாலாவை காப்பி செய்து, கமர்சியல் ஹீரோவாகிவிட்டார். விஷால், விஜயை ஜெராக்ஸ் எடுக்கிறார். என்னக் கொடுமை சார் இது. கிராமத் திருவிழாவில் குதித்து வந்து ஓபனிங் சாங். பாடல் முழுதும் பூமாரி பொழியுது. துதி பாடும் வரிகள். படம் முழுதும் காமெடி, பாட்டு, பன்ச் டயலாக், திரும்ப காமெடி, பாட்டு, பன்ச் டயலாக், திரும்ப காமெடி, பாட்டு, பன்ச் டயலாக்- இப்படியாக கமர்சியல் நாயகனாக முயற்சி எடுக்கிறார். ஒண்ணியும் வேலைக்காவல. படத்தில் பட டயலாகுகளில் "தோரணை". தாங்கல. மேலும் செல்லமே, சண்டைக்கோழி விஷால் முகம் மிஸ்ஸிங். குளோஸ்-அப் காட்சிகளில் அவர் முகம் பார்க்கவே பயமா இருக்கு. விஷால், ரொம்ப ஸ்மோக் பண்றீங்களோ??? ஷ்ரியா : படத்தில, ஷ்ரியாவ மட்டும்தான் பார்க்கற மாதிரி இருக்காங்க. அழகு + செக்ஸி. சந்தானம் : விரசமா ரொம்ப இல்லாம, ஓரளவுக்கு நல்லா பண்ணி இருக்கார். சிரிக்க வைக்கிறார். படத்தின் ஒரே ஆறுதல். பிராகாஷ்ராஜ் : இந்த மாதிரி படங்களில் எல்லாம் நீங்க நடிக்கணுமா பிராகாஷ்ராஜ்? சரி சரி நடிங்க. இப்படி சம்பாதிக்கும் காசை வச்சுதானே நல்ல படங்களை தயாரிக்கிறீங்க. விஷால், சந்தானம், பறவை முனியம்மா, மயில் சாமி, டி.பி.கஜேந்திரன், இவங்க எல்லாரும் ஒரே காலனிக்காரங்க. இவங்க காமெடி என்ற பெயரில் அடிக்கும் லூட்டி, உலகமகாக் கொடுமை...............முடியல.. பாடல்கள் ஓகே ரகம். "வா செல்லம்" பாடல் நல்லா இருக்கு. எல்லாப்பாடல்களிலும் ஷ்ரியா செக்ஸி. படம் துவங்கும் போது "சண்டைக்காட்சிகள் அபாயகரமானவை. பயிற்சி பெற்ற ஆட்களால் வடிவமைக்கப்பட்டவை. நீங்கள் செய்து பார்க்காதீர்கள்" என்ற அறிவிப்பு வருகிறது. ஆனால் படத்தில சண்டைக்காட்சிகள் அப்படி ஒண்ணும் பெரிசா இல்லை. கடைசியா விஷாலுக்கு ஒரு விஷயம் சொல்ல விரும்பறேன் : சண்டைக்கோழி, மலைக்கோட்டை படங்களிலிருந்து வெளியே வாங்க. தோரணை : செம ரோதனை :: படம் பார்த்தவர்கள் வேதனை டிஸ்கி : ஆனாலும் ஒரு விஷயம், படம் கொஞ்சம் விறுவிறுப்பா இருக்கு. படம் சுமாரான வெற்றியை பெறலாம். விஷாலின் "சத்யம்" போல் பெருத்தத் தோல்வியாக இராது என்று நினைக்கிறேன்.

பவுர்ணமி நாகத்தில் முமைத் கானின் டூ பீஸ் ஆட்டம்!

நீச்சல் உடையில் குத்தாட்டம் போடுவது முமைத் கானுக்கு புதிதில்லை என்றாலும், தெலுங்கு [^] அளவுக்கு தமிழில் அவர் பெரிய அளவு பேசப்படவில்லை. தெலுங்கில் இப்போது முன்னணி நாயகியாக வேறு மாறிவிட்டார். ஆனால் தமிழில் இதுவரை அவர் குத்தாட்டப் பாடல்களோடு தன் கலைச் சேவையை நிறுத்திக் கொண்டிருந்தார். இப்போது முதல் முறையாக ஒரு தமிழ்ப் படத்திலும் ஹீரோயினாக நடிக்கிறார். புன்னமி நாகு என்று தெலுங்கில் ஏற்கெனவே அவர் நடித்து வெளி வந்த படம்தான் இப்போது தமிழில் பவுர்ணமி நாகம் என்ற பெயரில் தயாராகிறது. இந்தப் படத்தில் ஒரு பாடல் காட்சி முழுவதிலும் நீச்சலுடையில் வருகிறாராம் முமைத் கான். இந்தப் பாடலுக்கு தெலுங்கில் பயன்படுத்திய அதே பாடலை தமிழிலும் பயன்படுத்தியுள்ளார்களாம். பீச்சில் டூ பீஸில் அவர் போட்டுள்ள ஆட்டம் இளசுகளை சூடேற்றும் என்கிறார் இயக்குநர் [^]. புன்னமி நாகுவால் தெலுங்கில் எனக்கு தனி இடம் கிடைத்துவிட்டது. இப்போது அதே படம் [^] பவுர்ணமி நாகமாக தமிழில் வருகிறது. இதுவும் எனக்கு பெரிய திருப்பு முனையைத் தரும் என்கிறார் முமைத் கான் சந்தோஷத்துடன்.

லாரன்ஸ் கட்டிய கோவிலை ரஜினி திறந்து வைக்கிறார்

தமிழ் பட உலகில், டான்ஸ் மாஸ்டர்' ஆக இருந்து கதாநாயகன் ஆகியிருப்பவர், லாரன்ஸ். இவர், ராகவேந்திர சாமிகளின் தீவிர பக்தர். ராகவேந்திர சாமிகளின் தீவிர பக்தரான இவர், தனது பெயரை ராகவேந்திரா லாரன்ஸ் என்று மாற்றிக்கொண்டதுடன், சென்னை அம்பத்தூரில் ராகவேந்திர சாமிகளுக்கு சொந்த செலவில் கோவில் கட்டி வந்தார். அந்த கோவிலின் கட்டுமானப்பணிகள் நிறைவடைந்தன. கோவில் திறப்பு விழா, வருகிற ஆகஸ்டு மாதம் நடைபெற இருக்கிறது. நடிகர் ரஜினிகாந்த் விழாவில் கலந்துகொண்டு, கோவிலை திறந்து வைக்கிறார் என்று ராகவேந்திரா லாரன்ஸ் நிருபர்களிடம் தெரிவித்தார். இவர் ஏற்கனவே ஆதரவற்றவர்கள், முதியோர்கள், உடல் ஊனமுற்றவர்களுக்காக சென்னையில் இல்லம் நடத்தி வருகிறார். இந்த சேவை மனப்பான்மை உங்களுக்குள் எப்படி வந்தது? என்ற கேள்விக்கு, நான் 7 வயது சிறுவனாக இருந்தபோது, மூளையில் கட்டி ஏற்பட்டு, அதன் காரணமாக என் கை கால் விழுந்து விட்டது. அதில் இருந்து குணம் அடைந்து, மீண்டு வந்தது தெய்வச்செயல். அப்போது முடிவெடுத்தேன். இல்லாதவர்களுக்கு உதவ வேண்டும் என்று தீர்மானித்தேன். அதன் விளைவுதான், ஆதரவற்றோர் இல்லம் என்றார்.

29 மே 2009

இரும்புக்கோட்டை.. முரட்டு சிங்கம்-ரூ.1 கோடி செட்!

இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம் படத்துக்காக அம்பாசமுத்திரம் அருகே ரூ. 1 கோடி செலவில் இரும்பு கோட்டை போன்ற பிரமாண்ட அரங்கம் அமைக்கப்பட்டு படபிடிப்பு நடந்து வருகிறது. ராகவா லாரன்ஸ்- பத்மபிரியா- லட்சுமி ராய்- சந்தியா இணைந்து நடிக்கும் புதிய படம் இரும்புகோட்டை முரட்டுசிங்கம். சிம்புதேவன் இயக்குகிறார். பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. இந்த படத்துக்காக அம்பாசமுத்திரம் அருகே உள்ள அடையக்கருங்குளத்தில் ரூ.1 கோடி செலவில் பிரமாண்டமான இரும்பு கோட்டை போன்ற செட் போடப்பட்டுள்ளது. இந்த அரங்கில்தான் கடந்த நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. நேற்று முன்தினமும், நேற்றும் மழை பெய்ததால் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. தமிழில் ஜெய்சங்கர் காலத்துக்குப் பிறகு எடுக்கப்படும் முதல் கௌபாய் படம் என்பதால் இந்தப் படத்துக்கு பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

பைல்களை அழிக்க முடியவில்லையா!

ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைந்து வருகிறது. தேவையற்ற சில பைல்களை அழிக்கலாமே என்று முயற்சிப்போம். அப்போது நமக்கு எதிரியாக கம்ப்யூட்டர் நடந்து கொள்ளும். பைலை அழிக்க முடியாது (“Cannot Delete File”) என்று அதிரடியாகத் தகவல் தரும். அது ஒரு டாகுமெண்ட் பைலாகவோ அல்லது மியூசிக் மற்றும் பட பைலாகவோ இருக்கலாம். என்ன இது இவ்வாறு எதிர்வாதம் செய்கிறது? என்று எண்ணி மறுபடியும் மறுபடியும் முயற்சி செய்வோம்; ஆனால் மீண்டும் மீண்டும் அதே செய்திதான் வரும். சில வேளைகளில் காரணங்களும் காட்டப்படும். ஹார்ட் டிஸ்க்கில் போதுமான இடம் இல்லை. அதனால் அழிக்க முடியவில்லை என்று காரணம் கிடைக்கலாம். இது இன்னும் அதிகமான குழப்பத்தில் உங்களை சிக்க வைக்கும். ஏனென்றால் அதிக இடம் வேண்டும் என்பதற்காகத்தானே நீங்கள் பைலை அழிக்க முயற்சிக்கிறீர்கள். சில பைல்களுக்கு இந்த பைலை இன்னொருவர் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். அல்லது இன்னொரு புரோகிராம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. அதனால் அழிக்க முடியாது என்று காரணம் வரலாம். எனவே அழிப்பதாக இருந்தால் அந்த பைலைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் புரோகிராமை முதலில் நிறுத்து என்று செய்தி கிடைக்கும். இப்ப என்னதான் செய்றது? என்ற பெரிய கேள்விக் குறியுடன் நீங்கள் மானிட்டரைப் பார்த்துக் கொண்டு அமர்ந்துவிடுவீர்கள், இல்லையா? கீழே சில டிப்ஸ்கள் தரப்பட்டுள்ளன. அவற்றைப் பின்பற்றினால் இந்த பிரச்னைகளிலிருந்து தப்பிக்கலாம். முதலில் நீங்கள் அழித்திட எண்ணும் பைல் கம்ப்யூட்டரில் எங்கே உள்ளது என்று சரியாகத் தெரிந்து கொள்ளுங்கள். எடுத்துக்காட்டாக “myessay. txt” என்னும் பைல் என்னும் போல்டரில் இருக்கலாம். இதனுடைய சரியான முகவரி C:\Documents and Settings\ User Name \ My Documents என்பது. பைலின் பெயரையும் இந்த முகவரியையும் ஒரு பேப்பரில் குறித்துக் கொள்ளுங்கள். இனி கம்ப்யூட்டரை ரீ ஸ்டார்ட் செய்திடுங்கள். கம்ப்யூட்டர் பூட் ஆகும் போது எப்8 கீயை அழுத்துங்கள். அப்போது திரையில் Advanced Boot Options Menu மெனு கிடைக்கும். அந்த மெனுவில் Safe Mode with Command Prompt என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இனி டாஸ் ப்ராம்ப்ட்டில் கம்ப்யூட்டர் பூட் ஆகி நிற்கும். இனி டாஸ் மோடில் துடிக்கும் புள்ளியில் cd C:\Documents and Settings\Your Name\My Documents என டைப் செய்திடவும் இதில cd என்பது Change Directory என்பதைக் குறிக்கிறது. டைப் செய்து என்டர் அழுத்தியவுடன் டாஸ்கர்சர் உங்கள் பைல் உள்ள டைரக்டரியில் சென்று நிற்கும். இனி del myessay.txt என டைப் செய்து என்டர் தட்டினால் நீங்கள் பல வழிகளில் டெலீட் செய்திட முயன்று தோற்றுப் போன பைல் இப்போது நீக்கப்பட்டுவிடும். அப்பாடி! கம்ப்யூட்டர் உங்களுக்குக் கொடுத்த சவாலில் வெற்றி பெற்றுவிட்டீர்களா! சந்தோஷமா!!

தமிழக போலீஸ் படத்துக்கு ரஹ்மான் இசை!

காவல் துறையின் அருமை பெருமைகள், சவால்கள், அவர்கள் மக்களுக்கு எப்படியெல்லாம் நண்பர்களாக உதவுகிறார்கள் என்பதை விளக்கும் 'காவலர் நமது சேவகர்' என்ற படத்தை இரு ஆண்டுகளுக்கு முன் எடுத்தார் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன். இதில் பல நிஜ காவல் துறை உயர் அதிகாரிகளே நடித்திருந்தனர். மீண்டும் இதே போன்றதொரு படத்தை எடுக்கும் திட்டத்தில் உள்ளது காவல் துறை. ஆனால் இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்தால் படம் பெறிய ஏளவில் பேசப்படும், இளைஞர்களைக் கவரும் என நம்பிய காவல்துறை உயர் அதிகாரிகள் பலர், சில தினங்களுக்கு முன் ரஹ்மானைச் சந்தித்து, தங்கள் படத்துக்கு இசையமைத்துத் தர முடியுமா என்று கேட்டார்கலாம். ரஹ்மானும் மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டாராம். நீங்கள் படத்தை எடுத்துவிட்டு சொல்லுங்கள்... நிச்சயம் நான் இசை அமைத்துத் தருகிறேன். பாடலும் அப்போதே கம்போஸ் செய்து கொள்ளலாம் என அவர் கூறிவிட, சந்தோஷத்துடன் தயாரிப்பாளரிடம் சீக்கிரம் வேலைகளை ஆரம்பிக்கச் சொல்லி வருகிறது சென்னை மாநகர போலீஸ்.

கணணியில் இருக்க வேண்டிய அடிப்படை மென்பொருட்கள்

நண்பர்களே அனைவருக்கும் வணக்கம். உலகத்தில் எத்தனையோ மென்பொருட்கள் இருந்தாலும் சில மென்பொருட்கள் நம் கணணியில் கட்டாயம் இருக்க வேண்டிய மென்பொருட்கள் என்று சில உண்டு. அதன் பட்டியல் கீழே கொடுத்துள்ளேன். இல்லாதவர்கள் தரவிறக்கி நிறுவிக் கொள்ளுங்கள். உங்களிடம் இருந்தால் தரவிறக்கி நிறுவ வேண்டாம். அதற்குப்பதில் இதை கிளிக் செய்யுங்கள். சி சி கீளினர் (CCleaner) இந்த மென்பொருள் இருந்தால் உங்கள் தேவையில்லாத இண்டெர்நெட் குக்கீஸ், மற்றும் தற்காலிக கோப்புகள், தேவையில்லாத கோப்புகள் அனைத்தும் நீக்கி விடும். அதுமட்டும் அல்ல இதில் தேவையில்லாத ரெஜிஸ்டரி கீகளையும் நீக்கி தரும். உங்களுக்கு தேவையில்லாத மென்பொருட்கள் நிறுவி இருந்தால் இதன் மூலம் நீக்க முடியும். மென்பொருள் தரவிறக்க சுட்டி டெஸ்க்டாப் டோபியா (DesktopTopia) உங்கள் கணணியில் உள்ள டெஸ்க்டாப்பில் வால்பேப்பர்கள் தானாகவே மாற்ற இது உதவும் சுட்டி ஆடாசிட்டி (AudaCity) இந்த மென்பொருள் உங்களிடம் உள்ள எம்பி3 இசைக்கோப்புகளை திறந்து இசையை நீங்கள் விரும்பியவாறு மாற்றம் செய்ய உதவுகிறது. சுட்டி அப்டேட் செக்கர் (Update Checker) நீங்கள் கணணியில் நிறுவி உள்ள அனைத்து மென்பொருட்களுக்கும் ஏதாவது புதிய பதிப்பு வெளியிடப்பட்டால் தானாகவே உங்களிடம் தெரிவித்து தரவிறக்கி தந்து நிறுவி விடும். சுட்டி லான்சி (Launchy) இந்த மென்பொருள் மூலம் பலதரப்பட்ட மென்பொருட்களை இயங்க வைக்க முடியும். சுட்டி விஎல்சி ப்ளேயர் (VLC Player) இந்த மென்பொருள் அனைவரும் அறிந்ததே. இருந்தாலும் தெரியாதவர்களுக்காக புதியவர்களுக்காக இந்த மென்பொருள் மூலம் நீங்கள் உங்களிடம் உள்ள ஒலி மற்றும் எந்த விதமான ஒலி ஒளி கோப்புகளையும் இயக்கிப் பார்க்க கேட்க முடியும். சுட்டி பிக்காஸா (Picasa) இந்த மென்பொருளை உருவாக்கியவர்கள் கூகிள் தேடல் நிறுவனத்தினர். இந்த மென்பொருள் மூலம் உங்கள் புகைப்படங்களை தனித்தனி தொகுப்புகளாக பதிந்து வைத்துக் கொள்ள முடியும். அது மட்டுமில்லை உங்கள் புகைப்படங்கள் எடிட் செய்ய முடியும். சுட்டி யுட்யுப் டவுண்லோடர் (YouTube Downloader) இந்த மென்பொருள் மூலம் யுட்யுப படங்களை தரவிறக்கி காண முடியும். இந்த மென்பொருள் இப்பொழுது யுட்யுப் மட்டும் இல்லாமல் டெயிலி மோசன், யாகூ வீடியோ போன்ற தளங்களையும் ஆதரிக்கிறது. சுட்டி டிபிராக்லர் (Defraggler) மாதம் ஒரு முறை இந்த மென்பொருள் மூலம் டிபிராகிங் செய்தால் உங்கள் கோப்புகள் உங்கள் வன்தட்டில் பல இடங்களில் பிரித்து பதியப்பட்ட கோப்புகள் ஒரே கோட்டில் வரிசையாக பதிக்கப்படும் இதனால் உங்கள் கணணியில் உள்ள கோப்புகளை கையாளும் வேகம் வெகுவாக அதிகரிக்கும். சுட்டி பதிவுகளை படித்து பயன் பெறும் நீங்கள் நாங்களும் பயன் பெற விளம்பரங்களை கிளிக் செய்யவும்.

நீச்சலுடையில் ஆறு நாட்கள், தூங்கவிடாதா சோனா...

இசைஞானி இளையராஜாவின் அருமையான இசை, முதல்முறையாக ஒரு பாடலில் அவர் இசைஞானியாகவே தோன்றுவது, சின்ன இடைவெளிக்குப் பிறகு இணைந்திருக்கும் பானு, எந்தப் படத்துக்கும் இல்லாத அளவு அதிகபட்சம் 20 நாட்கள் கால்ஷீட் கொடுத்து காமெடியில் பின்னியெடுத்திருக்கும் வடிவேலு... இப்படி பல சிறப்புகள் கொண்ட அழகர் மலை படத்தில் இன்னொரு 'சிறப்பு'ம் இருக்கிறது. அது சோனாவின் ஜில் தோற்றம்! அட.. நிஜமாவே ஜில் தோன்றம்தாங்க... குசேலனுக்குப் பிறகு மீண்டும் வடிவேலுவுடன் ஜோடி போட்டிருக்கும் அவருக்கு, இந்தப் படத்தில் அதிகபட்ச காஸ்ட்யூமே பிகினி எனப்படும் நீச்சலுடைதான்! இந்தப் படத்துக்காக 6 நாட்கள் நடித்த அவர், அந்த 6 நாட்களும் நீச்சலுடையிலேயே வலம் வந்திருக்கிறார். படக்குழுவுக்கு தூக்கம் போயே போச்... வழக்கமாக பிரேக் கேட்கும் யூனிட் ஆட்கள் கூட, அதை மறந்து சோனாவையே 'பராக்' பார்த்துக் கொண்டிருந்தது தனிக் கதை! அழகை ஆபாசமில்லாமல் காட்டினால் சென்சாரும் ரசிப்பார்கள் என்ற நம்பிக்கையோடு காட்சிகளை 'செம ஹாட் மச்சி' என சொல்லும் விதத்தில் சுட்டுத் தள்ளிவிட்டாராம் இயக்குநர் எஸ்பி ராஜ்குமார். படத்தில் நடித்த அனுபவம் குறித்து இப்படிச் சொல்கிறார் சோனா: "எனக்கு இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைச்சிருக்கு... ரொம்ப சந்தோஷமா இருக்கு. வடிவேலு சார் கூட திரும்பவும் ஜோடியா நடிக்கிறேன். 6 நாட்கள் என்னோட கால்ஷீட்... 6 நாளும் என்னை நீச்சல் டிரஸ்லயே நடிக்க வச்சிட்டார் இயக்குநர். என்னைப் பொறுத்தவரை அதுவும் நடிப்பு... ஒரு நடிகையா என் வேலையை பக்காவா பண்ணியிருக்கேன். கிளாமர்னாலும் ரசிக்கிற மாதிரி அந்தக் காட்சிகள் இருக்கும். இந்தப் படத்துல நடிச்சது நிஜமாகவே ஒரு இனிய அனுபவம். மறக்க முடியாதது...", என்கிறார் சோனா. ஆர்கே நாயகனாக நடித்துள்ள இந்தப் படத்தை விஜயா மூவீஸுக்காக கருமாரி கந்தசாமி தயாரித்துள்ளார்.

27 மே 2009

2வது கணவரிடமிருந்தும் நந்திதா விவாகரத்து!

தனது இரண்டாவது கணவரிடமிருந்தும் விவாகரத்து பெற கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளார் நடிகை நந்திதா தாஸ். இருவரும் சுமூகமாக பிரிந்து செல்ல முடிவு செய்துள்ளனர். 'பயர்' படம் மூலம் பரபரப்பான நடிகையான நந்திதா தாஸ், தமிழில் அழகி, கன்னத்தில் முத்தமிட்டால் போன்ற படங்களில் நடித்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் தனது முதல் கணவரை விவாகரத்து செய்த அவர், கடந்த 2002-ல் சௌமியா சென் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்தத் திருமணமும் அவருக்கு கசந்துவிட்டது. எனவே இருவரும் சுமூகமான முறையில் பிரிந்துவிடுவது என தீர்மானித்து டெல்லி கூடுதல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளனர். நேற்று இந்த மனு நீதிபதி மித்ரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது நந்திதா தாஸ் மற்றும் சவுமியா சென் இருவரும் கோர்ட்டில் நேரில் ஆஜராகி இருவரும் மனம் விரும்பி பிரிவதாக கூறினர். எனவே அவர்களுடைய முடிவை மறுபரிசீலனை செய்ய 6 மாதங்களுக்கு அவகாசமளித்து வழக்கை ஒத்திவைத்துள்ளார் நீதிபதி.

மலையாளத்தில் தமன்னா

தமன்னா முதல் முறையாக மலையாளப் படம் ஒன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். தெலுங்கு, அங்கிருந்து தமிழ் என மாறி வந்தவர் தமன்னா. தமிழுக்கு வந்த புதிதில் ராசியில்லாத நடிகையாக பார்க்கப்பட்டார். ஆனால் இப்போது தமன்னாவின் கால்ஷீட்டைப் பெறுவது குதிரைக் கொம்பாகியுள்ளது. அந்த அளவுக்கு பிசியாகி விட்டார் தமன்னா. இந்தநிலையில் மலையாளப் பட இயக்குநர் லால், தமன்னாவை அணுகி ஒரு கதையைக் கூறி இதில் நீங்கள்தான் நடிக்க வேண்டும், வேறு யாரும் பொருத்தமாக இருக்க மாட்டார்கள் எனக் கூறியுள்ளார். கதையைக் கேட்டதுமே நடிக்க ஒப்புக் கொண்டு விட்டாராம் தமன்னா. அந்த அளவுக்கு கதை அவருக்குப் பிடித்துப் போய் விட்டதாம். லால், வழக்கமாக நடிகர், நடிகைகளுக்காக கதையை உருவாக்குபவர் இல்லை. கதையை உருவாக்கி விட்டு, அந்தக் கதைக்குப் பொருத்தமான கலைஞர்களைத் தேடுவதுதான் அவரது ஸ்டைல். ஆள் கிடைக்காவி்ட்டால் பொறுமையாக காத்திருந்து நடிக்க வைப்பார். அவரே தேடிப் போய் தமன்னாவை நாடியுள்ளதால், நிச்சயம் இது தனக்கான கதைதான் என்பதை உணர்ந்தே நடிக்க ஒப்புக் கொண்டாராம் தமன்னா. இந்தப் படத்தின் மூலம் 3வது தென்னிந்திய மொழிப் படத்தில் அறிமுகமாகிறார் தமன்னா.

தற்காலிக இமெயில் முகவரிகள்

நமக்கு தொல்லை தரும் வகையில் தொடர்பே இல்லாமல் பல இமெயில்கள் வருகின்றன. அதற்காக நாம் விரும்பும் புரோகிராம்களை டவுண்லோட் செய்திட முயற்சிக்கையில், பொருள்களை ஆன்லைனில் வாங்கிட விரும்புகையில், பயணங்களுக்கான டிக்கட்களை புக் செய்திட எண்ணுகையில் இமெயில் முகவரிகளைத் தராமல் இருக்க முடியாது. அடிக்கடி இன்டர்நெட் சைட்டுகளில் உங்கள் இமெயில் முகவரிகளைத் தருகிறீர்களா? பொருட்கள் வாங்குகையில், ஏதேனும் புரோகிராம்களை டவுண்லோட் செய்து இறக்குகையில் அந்த செயல்பாட்டை முடித்துவைக்க நிச்சயமாய் உங்கள் இமெயில் முகவரி கேட்கப்படும். பின் அந்த முகவரிக்கு ஒரு லிங்க் அனுப்பப்பட்டு அதனைப் பெற்று நீங்கள் கிளிக் செய்தாலே அப்போது மேற்கொண்ட செயல்பாடு முற்றுப் பெறும். எனவேதான் நாம் நம் இமெயில் முகவரிகளைத் தர வேண்டியுள்ளது. இதனால் நம்முடைய இமெயில் முகவரிகள் பல தளங்களில் பதியப்படுகிறது. ஒரு சிலர் இது போல இமெயில் முகவரிகளைப் பெற்று வர்த்தக ரீதியாகச் செயல்பட்டு ஸ்பேம் மெயில் அனுப்பும் நிறுவனங்களுக்கு விற்றுவிடுகின்றனர். இதனால் நமக்கு தொல்லை தரும் வகையில் தொடர்பே இல்லாமல் பல இமெயில்கள் வருகின்றன. அதற்காக நாம் விரும்பும் புரோகிராம்களை டவுண்லோட் செய்திட முயற்சிக்கையில், பொருள்களை ஆன்லைனில் வாங்கிட விரும்புகையில், பயணங்களுக்கான டிக்கட்களை புக் செய்திட எண்ணுகையில் இமெயில் முகவரிகளைத் தராமல் இருக்க முடியாது. இந்த சிக்கலுக்கு என்னதான் தீர்வு? தற்காலிகமாக இமெயில் முகவரிகளை அமைத்துக் கொள்வதுதான். இதற்கென்றே சில தளங்கள் உள்ளன. இந்த தளங்களை கூகுள் சர்ச் இஞ்சின் மூலம் தேடிக் கண்டுபிடித்துப் பயன்படுத்திக் கொள்ளலாம். நான் தேடிய போது சில தள முகவரிகள் கிடைத்தன. இவற்றில் ஒரு தளத்திற்குச் சென்றால் அவை தற்காலிக இமெயில் முகவரியைத்தரும். சிறிது காலம் பயன்படுத்திய பின்னர் விட்டுவிடலாம். அல்லது இந்த தளத்தில் இமெயில் முகவரியை உருவாக்கி அதற்கு வரும் மெயில்களை உங்கள் நிரந்தர இமெயில் முகவரிகளுக்கு பார்வேர்ட் செய்திடும் பணியையும் இந்த தளங்கள் மேற்கொள்கின்றன. இதனால் ஸ்பேம் போன்ற கூட்ட மெயில்களிலிருந்து நாம் தப்பிக்கலாம். அவற்றின் முகவரிகள் : 1. Mytrashmail 2. ExplodeMail 3. Mailinator 4. Temporaryinbox 5. Maileater

IPL பேசப்படாத பக்கங்கள்...

இலங்கையில் யுத்தம் முடிவடைந்துவிட்டதாக அரசாங்கத்தின் அறிவிப்பு- கொண்டாட்டங்கள், இந்திய தேர்தல்கள், உலக பொருளாதார நெருக்கடி, வடகொரியா மற்றும் ஈரானின் ஏவுகணை பரிசோதனைகள், பன்றிக் காய்ச்சல் என்று வளர்ந்து கொண்டே செல்லும் சர்வதேச நிகழ்வுகளுக்கு மத்தியில் உலகின் பெரும் எண்ணிக்கையிலான மக்களின் மணித்தியாலங்களை கட்டிப் போட்டிருந்தது IPL பருவம் 2. இலங்கையைப் பொறுத்தவரையில் அனைத்து ஒலி ஊடகங்களிலும் IPL பருவம் 2 போட்டிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்த போதிலும், ஒளி ஊடகங்களில் இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் விளையாட்டுச் சேவையான செனல் ஐ மாத்திரமே போட்டிகளை ஒளிபரப்பியிருந்தது. எனினும், முதல் இரண்டு நாட்களுக்கு பின்னரே செனல் ஐயில் போட்டிகள் ஒளிபரப்பாகின. 50 நாட்களை கடந்து நடைபெற்ற போட்டிகளில் ஆரம்ப நாட்களில் எவ்விதமான விளம்பர இடைவேளையும் இன்றி ஒளிபரப்பாகிய போட்டிகள் இறுதி நாட்களில் அதிகப்படியான விளம்பரங்களால், போட்டிகளின் போது ஓட்டங்கள், பந்துவீச்சுப் பெறுதிகள் என்பன போடப்படும் சந்தர்ப்பங்களில் விளம்பரங்கள் வந்து குறுக்கிட்டமை சிறிது எரிச்சலை ஏற்படுத்தியது. எவ்வாறாயினும், எல்லா ஊடகங்களும் IPL பருவம் 2 போட்டிகள் தொடர்பான விபரங்களை தெரிவித்து வந்த போதிலும், போட்டிகள் தவிர சிறப்பு கவனஞ் செலுத்தப்பட வேண்டிய இரண்டு விடயங்கள் பெரிதாக பேசப்படவில்லை என்றே கூறவேண்டும். • தென்ஆபிரிக்க மாணவர்களுக்கு வழங்கப்பட்ட புலமைப்பரிசில். • பொலிவூட்டுக்கான தென் ஆபிரிக்க அழகி தெரிவு. உலக பொருளாதாரம் எதிர்கால ஸ்திரத் தன்மை தொடர்பில் பாரிய கேள்விக்குறியாக நிலவும் சந்தர்ப்பத்தில், IPL பருவம் 2 போட்டிகளுக்கான வீரர்களை ஏலம் விடுதல் நிகழ்வின் போது, இந்திய பொருளாதார சுட்டிகள் உயர்வை காட்டியிருந்தன. IPL பருவம் 2 போட்டிகள் இந்தியாவில் நடைபெற்றால் பொருளாதார சுட்டிகளில் மேலும் உயர்வினை எதிர்பார்க்கலாம் என பல நிறுவனங்களும் ஆசையோடு இருந்தன. ஆனால், எதிர்பார்ப்புகளுக்கு மாறாக தேர்தல் காலம் என்ற காரணத்தைக் காட்டி போட்டிகளின் போது பாதுகாப்பு வழங்குவது சிரமம் என இந்திய பொலிஸார் தெரிவித்ததைத் தொடர்ந்து, போட்டிகள் தென் ஆபிரிக்காவுக்கு மாற்றப்பட்டன. மிகவும் குறுகிய காலப் பகுதிக்குள் IPL பருவம் 2 போட்டிகளை தென் ஆபிரிக்காவில் மிகவும் சிறப்பாக ஒழுங்கு செய்திருந்தமைக்கு நிச்சயமாக லலித் மோடி பாராட்டப்பட வேண்டியவரே. அதனையும் மீறி அவர் செய்த மற்றுமொரு விடயமும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் நல்லதொரு இடத்தை லலித் மோடிக்கு ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. அதுதான் 8 மில்லியன் ரான்ட் பணத்தை தென்ஆபிரிக்காவின் கல்வி வளர்ச்சிக்காக இரண்டு கட்டங்களில் வழங்குவதற்கு IPL இணங்கியிருந்தமை. போட்டிகள் நடத்தப்படுவதற்கு தென் ஆபிரிக்க அரசினால் இது ஒரு நிபந்தனையாக விதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எது, எப்படியிருந்தாலும் ஒரு நல்ல காரியம் நடந்திருக்கின்றது என்ற வகையில் திருப்தியடைந்து கொள்ள முடிகின்றது. 'Help Educate And Teach' (HEAT) என்ற இந்த நிகழ்ச்சித் திட்டத்தில் 8 மில்லியன் ரான்ட், தென் ஆபிரிக்காவில் உள்ள பாடசாலைகளுக்கும், மாணவர்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 32 பாடசாலைகளுக்கு தலா ஒரு இலட்சம் ரான்ட் பணம் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணம் அப்பாடசாலைகளின் புலமைப்பரிசில் நிதிய கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளது. இந்த பணத்தை எந்த வகையில் புலமைப்பரிசில்களுக்கு பயன்படுத்தப் போகின்றார்கள் என்பது அப்பாடசாலையின் நிர்வாகக் குழுவையே சார்ந்துள்ளது. அடுத்து போட்டிகளையும் காண வருபவர்களில் ஒரு போட்டிக்கு தலா 5 மாணவர்கள் வீதம் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா 15 ஆயிரம் ரான்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த பணம் அவர்கள் பெயரில், அவர்கள் கல்வி கற்கும் பாடசாலைகளில் பாடசாலை கட்டணமாக வைப்பிலிடப்பட்டுள்ளது. விளையாட்டு நிறுவனம் ஒன்று நாடொன்றின் கல்வித்துறைக்காக இவ்வளவு பெரிய நிதியை வழங்கியுள்ளமை இதுவே முதற்தடவையாகும். தென் ஆபிரிக்காவின் கல்வி முறை குறித்த ஒரு சுருக்கமான பார்வையும், இவ்வளவு பெரிய நிதி கல்வித்துறைக்காக வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும். தென்ஆபிரிக்காவில் கல்வி. தென் ஆபிரிக்காவில் 12.3 மில்லியன் மாணவர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் 38600 ஆசிரியர்களின் கீழ் 26292 பாடசாலைகளில் கற்கின்றனர். அவற்றில் 1098 பாடசாலைகள் பதிவு செய்யப்பட்ட சுதந்திரமான தனியார் பாடசாலைகளும் இயங்கி வருகின்றன. கல்விக்கான தேசிய திணைக்களமே தென்ஆபிரிக்காவின் அனைத்து கல்வி நடவடிக்கைகள் தொடர்பான விடயங்களையும் கண்காணித்து வருகின்றது. அது தவிர்த்து தென்ஆபிரிக்காவின் ஒன்பது மாகாணங்களுக்கும் தனித்து கல்வித் திணைக்களங்களும் இருக்கின்றன. தென்ஆபிரிக்க கல்வித் திட்டம் பொது, வேறு மற்றும் உயர் ஆகிய மூன்று பிரிவுகளாக காணப்படுகின்றது. உலகிலேயே கல்விக்காக அதிகம் முதலீடு செய்யும் நாடுகளில் ஒன்றாகவும் தென்ஆபிரிக்கா காணப்படுகின்றது. மிஸ். பொலிவூட் IPL 34வயதான மொடல் நடிகையான டூன் கொசட்ஸ், IPL பருவம் 2 போட்டிகளின் மிஸ்.பொலிவூட் அழகியாக தெரிவுசெய்யப்பட்டார். மிஸ்.பொலிவூட் பட்டத்திற்காக ஒவ்வொரு போட்டியிலிருந்தும் தெரிவுசெய்யப்பட்டவர்களில் 48 அழகிகள் இறுதிப் போட்டியில் கலந்து கொண்டனர். உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட வாக்களிப்புக்களின் அடிப்படையிலேயே டூன் கொசட்ஸ், IPL பருவம் 2 போட்டிகளின் மிஸ்.பொலிவுட் அழகியாக தெரிவுசெய்யப்பட்டார். இந்த வாக்கெடுப்பு IPL T20 இணையத்தளத்தின் ஊடாக நடத்தப்பட்டது. 24 வயதான ஜினா க்ளவ்ட் இரண்டாவது இடத்தையும், டுனாய் னோர்ட்ஜே மூன்றாவது இடத்தையும் பெற்றனர். மிஸ். பொலிவுட்டாக தெரிவுசெய்யப்பட்ட டூன் கொசட்ஸ் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தியவராவார். இந்த பட்டத்திற்கான பரிசாக, இலவச இந்திய சுற்றுப் பயணம் ஒன்றுக்கு டூன் கொசட்ஸ் தயாராகி வருகின்றார். இதில் வெற்றி பெறுபவர் பொலிவூட்டில் ஷாருக்கானுடன் நடிக்கும் வாய்ப்பை பெறுவார் என ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. உதிரிகள்: • அனைத்துப் போட்டிகளிலும் மொத்தமாக 16320 ஓட்டங்கள் குவிக்கப்பட்டதுடன், 697 விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட்டன. • வேகப்பந்துவீச்சாளர்கள் 388 விக்கெட்டுக்களையும், சுழற்பந்துவீச்சாளர்கள் 226 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர். • டெக்கான் சார்ஜர்ஸ் அணி அதிக எண்ணிக்கையிலான(99) ஆறு ஒட்டங்களை பெற்றது. • அதிக ஆறு ஓட்டங்களை கொடுத்த பந்துவீச்சாளர்களாக முதலிடத்தை ராஜஸ்தான் ரோயல்ஸின் ஷேன் வோர்னும், பெங்களுர் ரோயல் செலன்ஜர்ஸின் பிரவீன் குமாரும் தலா 14 ஆறு ஓட்டங்களுடன் பகிர்ந்து கொள்கின்றனர். • ஓட்டமற்ற பந்துகளை வீசியவர்கள் வரிசையில் டெக்கான் சார்ஜர்ஸின் ஆர்.பி.சிங் 169 ஓட்டமற்ற பந்துவீச்சுக்களுடன் முதலிடத்தில் இருக்கின்றார். சென்னை சுப்பர் கிங்ஸின் முத்தையா முரளிதரன் 144 ஓட்டமற்ற பந்துவீச்சுக்களுடன் இரண்டாமிடத்தில் இருக்கின்றார். • அணியொன்றினால் வீசப்பட்ட செல்லுபடியாகாத பந்துவீச்சுக்களின் எண்ணிக்கை வரிசையில் டெல்லி டெயார் டெவில்ஸ் அணி 19 செல்லுபடியாகாத பந்துவீச்சுக்களுடன் முதலிடத்தில் உள்ளது. • அதிக அகலப்பந்துகளை வீசிய அணிகளின் வரிசையில் 68 அகலப் பந்துகளுடன் டெல்லி டெயார் டெவில்ஸ் அணி முதலிடத்தில் உள்ளது. • அதிக முறை ஓடும் போது ஆட்டமிழப்பு செய்யப்பட்ட அணி வீரர்களின் வரிசையில் 22 ஆட்டமிழப்புக்களுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலிடத்தில் உள்ளது. • 20க்கு20 போட்டிகளின் நிர்ணயமிக்க கடைசி 6 ஓவர்களில் அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்கள் வரிசையில் 13 விக்கெட்டுக்களுடன், மும்பை இந்தியன்ஸின் லசித் மலிங்க முதலிடத்தில் உள்ளார். • 12 போட்டிகளில் 572 ஓட்டங்களைப் பெற்ற சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் மெத்யூ ஹெய்டன் அதிக மொத்த ஓட்டங்களைப் பெற்ற வீரர் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். • 16 போட்டிகளில் 23 விக்கெட்டுக்களை வீழ்த்திய டெக்கான் சார்ஜர்ஸின் ஆர்.பி.சிங், அதிக விக்கெட்டுக்களை வீழ்த்தியவர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். • பெங்களுர் ரோயல் செலன்ஜர்ஸின் இளம் வீரரான மனிஷ் பான்டே ஆட்டமிழக்காத 114 ஓட்டங்களுடன், அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரர்கள் வரிசையில் முதலிடத்தில் உள்ளார். • அதிக பிடிகளை எடுத்த வீரர்கள் வரிசையில் டெல்லி டெயார் டெவில்ஸின் எபி. டிவிலியர்ஸ், 15 போட்டிகளில் 13 பிடிகளுடன் முதலிடத்தில் உள்ளார். • போட்டியொன்றில் அதிக ஓட்டங்களை கொடுத்த பந்துவீச்சாளர்கள் வரிசையில் 4 ஓவர்களில் 58 ஓட்டங்களை கொடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸின் மஸ்ரபி மோர்டாசா முதலிடத்தில் உள்ளார். • அதிக 50 ஓட்டங்களைப் பெற்றவர்கள் வரிசையில் மும்மை இந்தியன்ஸின் ஜே.பி. டும்னி மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸின் மெத்யு ஹெய்டன் ஆகியோர் 5 தடவைகள் 50 ஓட்டங்களைப் பெற்று முதலிடத்தில் உள்ளனர். • அதிக முறை ஓட்டம் எதனையும் பெறாமல் ஆட்டமிழந்தவர்கள் வரிசையில் டெக்கான் சார்ஜர்ஸின் ஹேர்சல் கிப்ஸ், 4 போட்டிகளில் ஓட்டம் எதனையும் பெறாது முதலிடத்தில் உள்ளார்.

ஷெரீன் அக்கா ஆகிறார்

தமன்னாவின் அக்கா கேரக்டரில் நடிக்கப் போகிறார் முன்னாள் நாயகி ஷெரீன். துள்ளுவதோ இளமை - இது மட்டும்தான் ஷெரீன் என்றால் ரசிகர்களுக்கு வரும் நினைவு. அந்தப் படத்துக்குப் பிறகு பெரிய இடத்திற்குப் போவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பெரும் தேக்கத்தை சந்தித்தார் ஷெரீன். இப்போது ஷெரீன் என்ற பெயரையே கிட்டத்தட்ட ரசிகர்கள் மறந்து போய் விட்டார்கள். இந்த நிலையில் மீண்டும் ரீ என்ட்ரி கொடுக்கப் போகிறார் ஷெரீன். ஆனால் இந்த முறை நாயகியாக அல்ல - சூப்பர் நாயகி ஒருவரின் அக்காவாக. தமன்னா, பரத்துடன் இணைந்து நடிக்கும் படம் கண்டேன் காதலை. ஜப் வி மெட் இந்திப் படத்தின் ரீமேக் இது. இதில் தமன்னாவின் அக்காவாக நடிக்கப் போகிறார் ஷெரீன். ஜப் வி மெட் படத்தில் நாயகி கரீனா கபூருக்கு தங்கை கேரக்டர்தான் படத்தில் உள்ளது. ஆனால் தமிழுக்காக இதை அக்காவாக மாற்றி விட்டனர். காரணம், வயதில் ஷெரீனை விட தமன்னா இளையவர் என்பதால். இந்தப் படத்தில் நடிக்க முதலில் ஷெரீன் சற்று தயங்கியுள்ளார். இருப்பினும் கேரக்டர் தனது கேரியருக்கும் உதவலாம் என்பதால் ஒப்புக் கொண்டாராம்.

25 மே 2009

ஈழத் தமிழர்களுக்கு என்றும் துணையாக இருப்போம் - நடிகர் சங்கம்

ஈழத் தமிழர்களுக்கு என்றென்றும் துணையாக இருப்போம் என தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு தெரிவித்துள்ளது. நடிகர் சங்க பொதுக்குழுக் கூட்டம் நடிகர் சங்க அலுவலகத்தில் இன்று காலை 10 மணிக்கு கூடியது. சங்கத் தலைவர் சரத்குமார் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ராதாரவி, நடிகர்கள் ஜெயம் ரவி, நெப்போலியன், விஜயகுமார், பாண்டியராஜன், செந்தில், சார்லி, மன்சூர்அலிகான், எஸ்.வி. சேகர், ஜே.கே.ரித்தீஷ் எம்.பி.. ஜே.கே.ரித்தீஷ், கே.ராஜன், குண்டு கல்யாணம், கஞ்சா கருப்பு, சின்னி ஜெயந்த், ரியாஸ் கான், ஜெயகோவிந்தன், அஸ்வின் சேகர், சின்னையன், நடிகைகள், மும்தாஜ், சத்யபிரியா, பத்மபிரியா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் பொதுக்குழுவில் தவறாது பங்கேற்குமாறு ரஜினி, கமல், விஜய், விக்ரம், அஜீத், சூர்யா, நயன்தாரா, திரிஷா, அசின், பாவனா, பிரியாமணி உள்பட சங்க உறுப்பினர்கள் 2500 பேருக்கு சரத்குமார், ராதாரவி கடிதம் அனுப்பியிருந்தனர். தே.மு.தி.க. தலைவரும் நடிகருமான விஜயகாந்த்துக்கும் அழைப்பு விடப்பட்டிருந்தது. ஆனால இவர்களில் ஒருவர் கூட தலை காட்டவில்லை. இதைக் குறிப்பிட்டு ராதாரவி கண்டித்துப் பேசினார். அவர் பேசுகையில், நடிகர் நடிகைகளுக்கு பிரச்சினைகள் வந்தால் சங்கம் தலையிட்டு தீர்த்து வைக்கிறது. ஆனால் பெரிய நடிகர் நடிகைகள் பலர் சங்க நிகழ்ச்சிகளுக்கு வருவதில்லை. நடிகர் சங்கம் எங்கே இருக்கிறது என்று கூட சிலருக்கு தெரியாது. இப்படி ஒத்துழைக்காமல் இருப்பது சரியல்ல. சங்க நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும், அப்போது தான் உங்களை நாங்கள் காப்பாற்ற முடியும் என்றார். பின்னர் கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. - நடிகர் சங்கத்தில் உறுப்பினர் ஆகாமல், தமிழ் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நடிகர் நடிகைகள் அனைவரும் உடனடியாக நடிகர் சங்கத்தில் தங்களை உறுப்பினர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும். - அனைத்து நடிகர் நடிகைகளும் தான் நடிக்கும் படத்தின் தயாரிப்பாளருடன் கண்டிப்பாக எழுத்து மூலம் ஒப்பந்தம் போட வேண்டும். ஒப்பந்தம் போடாத உறுப்பினர்களுக்கு ஏற்படும் பிரச்சினையில் சங்கம் தலையிடாது. - பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் தமிழ் மக்கள் வாழ்வு மலர தென்னிந்திய நடிகர் சங்கம் என்றும் உறு துணையாக நிற்கும். - இலங்கை தமிழர்கள் நிதிக்கு 62 லட்சத்து 69 ஆயிரத்து 8 ரூபாயை நிதியாக அளித்த உறுப்பினர்களுக்கு நன்றி. ஜூலை 12ல் தேர்தல்... - 2009 2012 ம் ஆண்டிற்கான நடிகர் சங்க தேர்தல் ஜூலை 12 ந் தேதி நடைபெறும். - வெளியூரில் நடக்கும் படப்பிடிப்புகளில் மதுரை, சேலம், புதுக்கோட்டை, கரூர், திருச்சி, நாமக்கல் ஆகிய மாவட்ட நாடக நடிகர் சங்க உறுப்பினர்களை துணை நடிகர்களாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். - பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் நெப்போலியன், ஜே.கே.ரித்தீஷ் ஆகியோரை பொதுக்குழு வாழ்த்துகிறது. - நடிகர் சங்கதுக்கு ஊதியத்தில் இருந்து 2.5 சதவீதம் தொகையை அளித்த ராதிகா சரத்குமார், எம்.எஸ்.பாஸ்கருக்கு பொதுக்குழு நன்றி தெரிவிக்கிறது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

IPL 2009 - கோப்பையை வென்றது டெக்கான் அணி

_______________________________________________________________________________________________________ இறுதிப் போட்டியின் இறுதி ஓவர். 15 ரன் எடுக்க வேண்டும். பெங்களூர் கேப்டன் அனில் கும்ப்ளேயும் ராபின் உத்தப்பாவும் களத்தில் இருக்கிறார்கள். அணியின் கடைசி ஜோடி இது. ஆர்.பி. சிங் பந்து வீசுகிறார். முதல் பந்தில் கும்ப்ளே ஒரு ரன் எடுக்கிறார். அடுத்த பந்தில் ரன் இல்லை. அடுத்த பந்திலும் ரன் இல்லை. அடுத்த மூன்று பந்துகளில் 7 ரன்கள் மட்டுமே எடுக்கப்படுகின்றன. அற்புதமான பந்து வீச்சு, அபாரமான ஃபீல்டிங் ஆகியவற்றால் டெக்கான் வெற்றி வாகை சூடியது. 2008 ஐ.பி.எல். போட்டிகளில் கடைசி இடத்தில் இருந்த டெக்கான் அணி இரண்டாம் ஆண்டில் சாம்பியனாகத் தலை நிமிர்ந்தது. கடந்த 40 நாட்களாக நடந்துவந்த பரபரப்பான போட்டிகள் முடிவுக்கு வந்தன. கடைநிலையில் இருந்த இரண்டு அணிகள் கடுமையாகப் போராடி உச்சத்தை அடைந்து சிகரத்தைத் தொடுவதற்கான இறுதிப் போட்டியில் இன்று களம் கண்டன. டாஸை வென்று பந்து வீச்சைத் தேர்ந்தெடுத்த அனில் கும்ப்ளே முதல் ஓவரைத் தானே வீசினார். ஆடம் கில் கிறிஸ்டை மூன்றாவது பந்திலேயே அவுட் ஆக்கினார். அதன் பிறகு திருமலசெட்டி சுமன் வினய் குமார் பந்தில் வீழ்ந்தாலும் ஆன்ட்ரூ சைமன்ட்ஸும் ஹர்ஷல் கிப்ஸும் அணியை நிலைப்படுத்தத் தொடங்கினார்கள். சைமன்ட்ஸை அவுட் ஆக்கி அணியின் நம்பிக்கையைப் புதுப்பித்தார் கும்ப்ளே. ரோஹித் ஷர்மாவும் கிப்ஸும் மெதுவாகத் தொடங்கிச் சீராக வேகம் பெற்று ஆடினார்கள்.ரன் வேகம் ஏறத் தொடங்கியது. 17ஆம் ஓவரை வீசிய கும்ப்ளே மீண்டும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார். ஷர்மாவையும் வேணுகோபால் ராவையும் அவுட் ஆக்கினார். டெக்கானின் வேகம் தடைப்பட்டது. கேப்டன் கும்ப்ளே இறுதி ஆட்டத்தில் சிறப்பாக ஆடி 4 ஓவர்களில் 16 ரன் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். டெக்கான் 143 ரன்களுக்குக் கட்டுப்படுத்தப்பட்டது. டெக்கான் அணி அவ்வளவு சுலபமாகப் பணிந்துவிடத் தயாராக இல்லை. ரையான் ஹாரிஸ் ரன்களை அதிகம் கொடுத்தாலும் ஆர்.பி. சிங்கும் பிரக்யான் ஓஜாவும் சிக்கனமாகப் போட்டதுடன் முக்கியமான விக்கெட்களையும் வீழ்த்தினார்கள். சிங் ஜேக் காலிஸை அவுட் ஆக்கினார். ஓஜா கடந்த இரு ஆட்டங்களின் ஹீரோவான மனீஷ் பாண்டேயையும் நன்றாக ஆடிக்கொண்டிருந்த மெர்வையும் அவுட் ஆக்கினார். 57-3 என்னும் நிலையில் 9ஆம் ஓவரில் ஜோடி சேர்ந்த திராவிடும் ரோஸ் டெய்லரும் அணியை மீட்கும் போராட்டத்தில் இறங்கினார்கள். ஆட்டம் பெங்களூருக்குச் சாதகமாகப் போய்க்கொண்டிருந்த நேரத்தில் ஹர்மீத் சிங்கின் பந்தில் திராவிட் வீழ்ந்தார். டெய்லரையும் விராட் கோஹ்லியையும் அடுத்தடுத்த பந்துகளில் அவுட் ஆக்கித் திருப்பத்தை ஏற்படுத்தினார் சைமன்ட்ஸ்.பிறகு மார்க் பவுச்சரை ஹம்ரீத் சிங்கும் பிரவீண் குமாரை ஓஜாவும் அவுட் ஆக்கியதில் ஆட்டம் பெங்களூரின் கையை விட்டு நழுவியது. 113-8 என்று தள்ளாடியது. இன்னும் 18 பந்துகளில் 31 ரன் எடுக்க வேண்டும் என்னும் நிலையில் ராபின் உத்தப்பாவால் சாதிக்க முடியவில்லை. பெங்களூர் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. இன்றைய ஆடுகளம் மட்டை வீச்சுக்குச் சாதகமானது இல்லைதான். ஆனால் ரன்கள் குறைவாக இருந்ததால் சற்றுக் கவனமாக ஆடியிருந்தால் பெங்களூர் வென்றிருக்கலாம். காலிஸ்,பாண்டே, திராவிட், கோஹ்லி, பவுச்சர் ஆகிய மட்டையாளர்கள் நின்று ஆடத் தவறியதால் கோப்பை கை நழுவியது. குறைவான ரன் எடுத்தாலும் கட்டுப்பாடான பந்து வீச்சு, நல்லஃபீல்டிங் ஆகியவற்றின் மூலம் வெற்றி பெறலாம் என்று டெக்கான் உணர்த்தியது. தான்தலைமை ஏற்ற 9 போட்டிகளில் 7இல் வெற்றி பெற்ற அனில் கும்ப்ளே அரை இறுதிப்போட்டி முடிந்ததும் நாளை இரவு மேலும் ஒரு வெற்றி கிடைத்தால் நன்றாகஇருக்கும் என்று சொன்னார். அவர் ஆசை நிரைவேறவில்லை என்றாலும் இறுதிப் போட்டிக்கு வந்த பெங்களூர் அணியின் அபாரமான முயற்சியையும்கும்ப்ளேயின் சிறப்பான தலைமையையும் பங்களிப்பையும் பாராட்டாமல் இருக்கமுடியாது. மிகக் குறுகிய காலத்தில் தென்னாப்பிரிக்காவில் போட்டிகளை ஏற்பாடு செய்து வெற்றிகரமாக நடத்திக் காட்டிய இந்தியக் கிரிக்கெட் வாரியத்தைப் பாராட்டாமல்இருக்க முடியாது. பல திறமைசாலிகளை அடையாளம் காட்டிப் பல துடிப்பான மேட்சுகளைஅரங்கேற்றிய ஐ.பி.எல். 2009 போட்டித் தொடர் அற்புதமான ஒரு மேட்சுடன் முடிவுக்கு வந்தது.

கூகுளுக்கு ஒரு சவால்.... வந்திருச்சு வொல்ஃப்ரம் ஆல்பா!!

நமக்கு ஏதாவது ஒரு பொருளைப்பற்றியோ அல்லது துறையைப் பற்றியோ உடனடியாகத் தெரிந்து கொள்ள என்ன செய்கிறோம்? விக்கிபீடியா, கூகுள் போன்ற வலைத்தளங்களில் தேடுகிறோம். கூகுள் என்றால் தேடிய விஷயம் சார்ந்த வலைத்தளத்தையும், விக்கிபீடியா என்றால் அந்த தளத்திலேயே நொடிப்பொழுதில் தேடித்தருகின்றன.. இவை இரண்டும் நமக்கு அருமையான சேவை தருகிறது என்பதில் வேறு கருத்தில்லை... ஆனால், நமக்கு ஏதாவது ஒரு விஷயத்தை கணித்தும், சம்பந்தப்படுத்தியும் பார்க்க வேண்டுமென்றால் இந்த சேவைகளால் முடிகிறதா? உதாரணத்திற்கு "இன்று காலை நான் உண்ட வாழைப்பழத்தில் எத்தனை காலோரி சக்தி உள்ளது, நமக்கு அது எந்த அளவிற்குப் போதுமானது" என்று பார்க்க, கூகுளில் தேடினால் வேறோரு தளத்தில் மீண்டும் தேட வேண்டும். இன்னொரு தேடல், "நம்ம ஊர் உடுமலைப்பேட்டையில் இருந்து நியூயார்க் எவ்வளவு தூரம்?" என்று தேடினால், பதில் கிடைக்க குறைந்தது 10 நிமிடம் ஆகும்.. இது போன்ற கேள்விகளுக்கு உடனடியாக பதில் வேண்டுமா? கவலை வேண்டாம்.. புதிதாக வந்திருக்கிறது "வொல்ஃப்ரம் ஆல்பா" ஓரிரு உதாரணங்களைப் பார்க்கலாமா? முதலில் உடுமலைப்பேட்டை டு நியூயார்க் - உடுமலையில் இருந்து நியூயார்க் எவ்வளவு தூரம், இரண்டு ஊர்லயும் மக்கள் தொகை எவ்வளவு, இரண்டு ஊர்களைப் பற்றியும் மேலும் சில தகவல்கள் அங்கேயே!! http://www40.wolframalpha.com/input/?i=udumalpet+to+Newyork இன்னொரு உதாரணம்.. ஆப்பிள் நிறுவனத்தையும், கூகுள் நிறுவனத்தையும் நொடியில் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டுமா? இதோ... http://www40.wolframalpha.com/input/?i=Apple+Google உங்கள் தங்கைக்கு அல்லது மகளுக்கு ஒரு புள்ளியியல் கணக்குப் போடனுமா? இதோ... http://www40.wolframalpha.com/input/?i=SD+of+55%2C35%2C78%2C50%2C68%2C70%2C48 நம்ம நாட்டோட தனி நபர் வருமானத்தை வேற ஏதாவது ஒரு நாட்டோட ஒப்பிடனுமா கவலை வேண்டாம் இதோ... http://www40.wolframalpha.com/input/?i=India+China+per+capita+income இது மட்டும் இல்லை.. கணிதம், புள்ளியியல், புவியியல், சமூக பொருளாதார தகவல்கள், வானிலை, மொழிகள், வானிலை, பொருட்கள், பொருளாதாரம், புத்தகங்கள், மருத்துவத் தகவல்கள் என அனைத்து துறைகள் சார்ந்த ஒப்பீடுகளையும் கணிப்புகளையும் தெரிந்து கொள்ள வேண்டுமா இதோ இருக்கிறதே வொல்ஃப்ரம் ஆல்பா.. http://www40.wolframalpha.com/examples/ வொல்ஃப்ரம் ஆல்பா.. - மே 18ம் தேதியன்று வெளியிடப்பட்ட ஒரு தேடல் சேவை நிறுவனம். எந்த வகையான கேள்வியையும், கணிப்புகளையும் தர "வொல்ஃப்ரம்" எனபவர் ஆரம்பித்த நிறுவனம் தான் வொல்ஃப்ரம் ஆல்பா. என்ன? இப்ப சொல்லுங்க வொல்ஃப்ரம் ஆல்பா.. கூகுளுக்கு சவால் தானே? ..

காபி் கடை' திறந்த முன்னா!

இரு படங்களில் நடித்துள்ள முன்னா, சென்னையில் ஒரு காபி ஷாப்பைத் திறந்துள்ளார். சிலந்தி படத்தில் மோனிகாவுடன் இணைந்து நடித்தவர் முன்னா. அப்படத்தில் நடித்தபோது மோனிகாவை கண்ட இடத்திலும் கிள்ளியதாக புகாருக்குள்ளாகி மீண்டவர். இப்போது மணிரத்தினத்தின் ராவணா படத்திலும் சிறிய பாத்திரத்தில் நடித்துள்ளார் முன்னா. அந்த மெய் சிலிர்ப்பிலிருந்து இன்னும் மீளவில்லையாம் முன்னா. இந்த நிலையில் திடீரென சென்னையில் ஒரு காபி ஷாப்பை தொடங்கியுள்ளார் முன்னா. என்ன இந்த திடீர் முடிவு முன்னா என்று கேட்டால், இது ஹாபிக்காக என்கிறாராம். திறந்ததோடு நிற்காமல் அதை திறம்படவும் நடத்தப் போகிறாராம். கையில் இப்போது முன்னாவிடம் புதுப் படம் எதுவும் இருப்பதாக தெரியவில்லை. வரும் வரை காபி கடையைப் பார்க்கும் ஐடியாவில் இருக்கிறாராம். பரவாயில்லை, சினிமாக்காரர்கள் இப்போதெல்லாம் விவரமாகத்தான் இருக்கிறார்கள்.

சென்னை அணியின் தோல்விக்கு காரணம

இட்லிவடையில் தொடர்ந்து வரும் சூடான அரசியல் பதிவுகளுக்கு இடையே அரைகுறையாய் ஆடினாலும் அரையிறுதிவரை சென்று பெங்களுரு அணியிடம் உதைவாங்கி திரும்பியிருக்கும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வீரர்கள் பற்றிய விமர்சனம். ஹைய்டன் : வெல்டன் என்று ஒரு வார்த்தையில் சொல்லலாம் அரையிறுதியை தவிர மற்ற எல்லா போட்டிகளிலும் ஆடிய இவரை. ரைனா : 'ரன் ரெயினா' என்று சில போட்டிகளில் மட்டும் சொல்லவைத்தார். முக்கால்வாசி போட்டிகளில் கோடை 'ரெயின்' ஆனார் பாலாஜி : வேகமாக ஓடிவந்து, நிதானமாக 'பேட்டை' நோக்கி பந்து விசினார். தோல்விக்கு இவர் முக்கிய பங்கு வகித்தார். பெயரில் 'லட்சுமி(!) ' இருப்பதாலோ என்னவோ தோனி இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்து எரிச்சல் மூட்டினார். ஜேகப் ஓரம் : ஜேகப் 'ஓரம்போ' என்று இவருக்கு பெயர் வைத்திருக்கலாம். எதற்கு அணியில் இருக்கிறோம் என்று இவருக்கு கடைசி வரை தெரியவில்லை. இவரை தேர்வு செய்தவர்களுக்கும் தெரியவில்லை. ஜகாதி : ஆடிய முதல் போட்டியில் 'ஜிகாதி' போன்று செயல்பட்டவர் பின் சதாம் போன்று எதிரணியிடம் சரண் அடைந்துவிட்டார். முரளிதரன் : முரளி 'தரம்' . அணியில் இருந்த ஒரே ஒரு பௌலர். தியாகி : சரியான பெயர் வைத்திருகிறார்கள் என்பதுபோல துவக்க ஓவர்களில் ரன்களை 'தியாகம்' செய்தார். ஆல்பி மோர்கல் : காலை 'வாருகல்' . ஒரு நல்ல ஆல் ரௌண்டர் என மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இவர் கடைசியில் 'வைகோ' பணியில் பார்ம் அவுட் ஆகி கவுத்துவிட்டார். பத்ரிநாத் : சரியான 'உதிரி'நாத். ஓடி ஓடியே ரன் எடுக்கும் இவர் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டும்தான் லாயக்கு. பர்திவ்படேல் : வேகபந்து வீசும்போது மட்டும் 'பளார்' படேல் ஆகி, சுழல் பந்து வரும்போது 'பரிதாப' படேல் ஆகிவிடுகிறார். மகேந்திர சிங்க் தோனி : சரியான திட்டமிடல் இல்லாதது, சூழ்நிலைக்கு ஏற்றதுபோல அணியை தேர்வு செய்யாதது, தன் பலம, பலவீனம் அறியாதது, அளவுக்கு மீறிய தன்னம்பிக்கை போன்ற காரணங்களால் 'கேப்டன்' தோற்றுவிட்டார். (கவனிக்க இரண்டு 'கேப்டன்'களும் ). அரையிறுதியில் ஒரு பவுண்டரி கூட அடிக்காமல், ஐந்து ஓவர்களை வீணடித்தார். வெற்றிகோப்பை 'மிஸ்' ஆனதற்கு அடிப்படை காரணம தோனியின் சென்னை 'மிஸ்' ஸிங்தான்.

சுறா வேட்டை - திகைப்பூட்டும் படங்கள்

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com