Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

31 மே 2012

விண்டோஸ் XP/Vista வை பென்டிரைவிலிருந்து நிறுவலாமா?


மடிக்கணினி உபயோகிக்கும் சிலர் என்னிடம் விண்டோஸ் XP/Vista தொகுப்பை பென்டிரைவிலிருந்து நிறுவமுடியுமா? என கேட்டார்கள். அதற்கு காரணம் பொதுவாக netbook கணினிகளில் சிடி/டிவிடி ரோம்கள் இருப்பதில்லை. ஆப்பரேட்டிங் சிஸ்டம் corrupt ஆகும் போது மீண்டும் நிறுவவேண்டிய நிர்பந்தத்தில் இருக்கிறோம். இவ்வேளைகளில் USB External சிடி/டிவிடி மட்டும் தான் சரியான தீர்வா? கண்டிப்பாக இல்லை 1 GB பென்டிரைவ் இருந்தாலே விண்டோஸ் XP தொகுப்பை கண்டிப்பாக நிறுவமுடியும்

என்பதை என்னிடம் கேட்டவர்களுக்கு நான் செய்து காட்டினேன். மேலும் இது மடிக்கணினிகளுக்கு மட்டுமல்லாது அனைத்து கணினிகளுக்குமே பயன்படும்.

என்னுடைய 8GB பென்டிரைவில் விண்டோஸ் XP மற்றும் விஸ்டா தொகுப்பை பூட்டபிளாக உருவாக்கி அதை நிறுவும் வீடியோ தொகுப்பை பாருங்களேன்.



Read more: http://www.anbuthil.com/2012/05/xpvista.html#ixzz1wTuscVRZ

கம்யூட்டர் இன்ஜினியர்.



வீட்டினை பார்த்துக்கொள்ள ஒரு மகாலட்சுமி வந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லுவார்கள். அதுபோல நமது கம்யூட்டரை நன்கு பார்த்துக்கொள்ள ஒரு சாப்ட்வேர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். கம்யூட்டர் மெயின்டனஸ்க்காக நாம் செய்யும் அனைத்துப்பணிகளையும் இந்த சின்ன சாப்ட்வேர் நமது ஒரு கிளிக் மூலம் செய்து முடிக்கின்றது.Wise PC Engineer என பெயருடன் 8 எம்.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக்  செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும்.
இதில் Registry Utility,Disk Utility,Other Utility  என மூன்றுவிதமான Utility கள் கிடைக்கும். Registry Utility யில் Registry Backup.Registry Clean.Registy Defrog மற்றும் Startup Programme Manager என யுடிலிட்டிகள் உள்ளன. தேவையானதை நாம் தேர்வு செய்துபயன்படுத்தலாம். மேலும் Disk Utility யில Disk Cleaner.Disk Defregment.File recovery File Scrap என பல உபயோகமான யுடிலிட்டிகள் உள்ளது.
இதில் உள்ள Disk Defragment கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகியது. இதில் வண்ணவண்ண சதுரமான சின்ன கட்டங்கள் நமது பார்வைக்கு தெரிந்து ஒழுங்கான வடிவில் வந்தது கண்கொள்ளா காட்சியாக இருக்கும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.'
கடைசியாக Other Utility  memory optimizer.Auto shotdown.,File Hidern.File Encrypter  என பல யுடிலிட்டிகள் இருக்கும்.Memory Optimizer கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகியது.
மற்ற சாப்ட்வேர்களில் இல்லாத சிறப்பு அம்சமாக பைல் ரெகவரி இதில் உள்ளது.இதனை கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் தேவையான டிரைவினை தேர்வு செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் நல்ல நிலையில் உள்ள பைல்களை நாம் தேர்வு செய்து நமது டிரைவில் சேமித்து பின்னர் பயன்படுத்தலாம்.இந்த் சாப்ட்வேரினை பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.
thanks toவேலன்.

30 மே 2012

டிவிலியர்சின் ஆலோசனை கைகொடுக்கும் * புஜாரா நம்பிக்கை



புதுடில்லி: ""டிவிலியர்ஸ் வழங்கிய ஆலோசனைகள், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் கைகொடுக்கும்,'' என, இந்தியா "ஏ' அணி கேப்டன் புஜாரா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் செய்யவுள்ள இந்தியா "ஏ' அணி, மூன்று டெஸ்ட், இரண்டு "டுவென்டி-20' மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக புஜாரா நியமிக்கப்பட்டுள்ளார்.
இத்தொடர் குறித்து புஜாரா கூறியது: வெஸ்ட் இண்டீஸ் பயணத்தை மிகுந்த ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளேன். ஏனெனில் முதன்முறையாக கரீபிய மண்ணில் விளையாட இருப்பது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் முடிந்த ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில், பெங்களூரு அணிக்காக ஒரு சில போட்டிகளில் மட்டுமே விளையாடும் வாய்ப்பு கிடைத்தது. இருப்பினும் சக வீரர்களுடன் போதுமான வலைப்பயிற்சி மேற்கொண்டேன்.
ஐ.பி.எல்., தொடரின் போது சகவீரரும், தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த டிவிலியர்ஸ் பேட்டிங் குறித்து நிறைய ஆலோசனைகள் வழங்கினார். இதேபோல பெங்களூரு அணியின் பயிற்சியாளர் வெங்கடேஷ் பிரசாத், வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளம் குறித்து கூறினார். இவர்களது ஆலோசனைகள், கரீபிய மண்ணில் சாதிக்க நிச்சயம் கைகொடுக்கும் என நம்புகிறேன். வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெய்லிடம் ஆலோசனைகள் கேட்க நேரம் அமையவில்லை.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருப்பதால், எவ்வித கூடுதல் நெருக்கடியும் இருப்பதாக தெரியவில்லை. அணியில் உள்ள நிறைய வீரர்கள், ஏற்கனவே அந்நிய மண்ணில் இந்தியா "ஏ' அணிக்காக விளையாடி உள்ளனர்.
முழங்கால் காயத்தில் இருந்து மீண்ட பின், ரஞ்சி மற்றும் துலீப் டிராபி தொடரில் விளையாடி உள்ளேன். ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் ஒரு சில போட்டிகளில் விளையாடி இருப்பதால், "பார்ம்' மற்றும் உடற்தகுதி குறித்து கவலைப்படத் தேவையில்லை.
அணியில் திறமையான பவுலர்கள் இடம் பெற்றிருப்பதால், வெஸ்ட் இண்டீஸ் ஆடுகளம் குறித்து எவ்வித பிரச்னையும் இருப்பதாக தெரியவில்லை. கரீபிய மண்ணில் இந்திய பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி சாதிப்பார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு புஜாரா கூறினார்.

நடிகர் சங்க தலைவராக 3வது முறையாக சரத்குமார் தேர்வு



Sarathkumar elect as president of south indian film artistes associationநடிகர் சங்க தலைவராக 3வது முறையாக நடிகர் சரத்குமார் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  தென்னிந்திய நடிகர் சங்கத்தில் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகளை சேர்ந்த நடிகர், நடிகையர் என மொத்தம் 1500க்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக இருக்கின்றனர். இந்த சங்கத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. தலைவர், துணை தலைவர், பொருளாளர், செயலாளர் என பல்வேறு பிரிவுகளுக்கு தேர்தல் நடக்கும். தற்போதைய தலைவராக நடிகர் சரத்குமார் இருந்து வருகிறார். இவர் கடந்த 6 வருடங்களாக தலைவராக இருக்கிறார்.

இந்நிலையில் 2012-15ம் ஆண்டுக்கான தேர்தல் வருகிற ஜூன் 10ம் நடைபெற இருந்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடர்ந்து நடந்து வந்தது. நடிகர் சங்க தலைவர் பதவிக்கு மீண்டும் சரத்குமாரே போட்டியிட்டார். இதுதவிர ஏற்கனவே பொருளாளர், பொதுச் செயலாளர் பதவியில் வகித்தவர்களே மீண்டும் அப்பதவிக்கு போட்டியிட்டு வேட்புமனு தாக்கல் செய்தனர்.

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று(30.05.12) நடந்தது. இதில் சரத்குமார் அணியினர் தவிர்த்து வேறு யாரும் போட்டியிடாததால், 3வது முறையாக மீண்டும் நடிகர் சங்க  தலைவராக சரத்குமாரே போட்டியின்றி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். மேலும் பொதுச் செயலாளராக ராதாரவியும், பொருளாளராக வாகை சந்திரசேகரும், நடிகர் சிம்பு, சந்தானபாரதி, கே.ஆர்‌.செல்வராஜ் உள்ளிட்ட 24பேர் நிர்வாக குழு உறுப்பினர்களாகவும் ‌தேர்வு செய்யப்பட்டனர்.

கொண்டாட்டத்தில் திண்டாட்டம்! * முதல்வருடன் ஷாருக் குத்தாட்டம் * ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி, ரகளை



கோல்கட்டா: ஐ.பி.எல்., கோப்பை வென்ற கோல்கட்டா அணிக்கு மேற்கு வங்க அரசு நடத்திய பாராட்டு விழாவில் "அரசியல்' புகுந்து விளையாடியது. முதல்வர் மம்தா பானர்ஜி, சர்ச்சைக்குரிய பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டது பார்வையாளர்களை முகம் சுழிக்க வைத்தது. போதிய பாதுகாப்பு வசதிகள் செய்யப்படாத நிலையில், லட்சம் பேர் ஈடன் கார்டன் மைதானத்தில் திரண்டதால் போலீசார் தடியடி நடத்த வேண்டிய படுமோசமான நிலைமை ஏற்பட்டது. 
ஐந்தாவது ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா நைட்ரைடர்ஸ் அணி, முதன் முறையாக கோப்பை வென்றது. இந்த அணி வீரர்கள் கோல்கட்டா திரும்பினர். வெளிநாட்டு வீரர்கள் கோல்கட்டா செல்லவில்லை.
போக்குவரத்து பாதிப்பு:
நேற்று காலை 11.10 மணிக்கு, கோல்கட்டா அணி வீரர்கள், திறந்த பஸ்சில் ஹம்ஜா பகுதியில் இருந்து கோப்பையுடன் ஊர்வலமாக கிளம்பினர். இதில் பங்கேற்க, மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட ரசிகர்கள் திரண்டதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
மாநில அரசின் தலைமையகம் அமைந்துள்ள "தி ரைட்டர்ஸ் பில்டிங்' வந்த போது, முதல்வர் மம்தா பானர்ஜி, வீரர்களை வரவேற்றார். பின் அங்கிருந்து ஊர்வலம் ஈடன் கார்டன் மைதானத்தை அடைந்தது.
பரிதாப ரசிகர்கள்:
 அனுமதி இலவசம் என்பதால், 67 ஆயிரம் இருக்கைகள் கொண்ட மைதானம் நிரம்பி வழிந்தது. இது தவிர, உள்ளே செல்ல முடியாமல் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், கடும் வெயிலிலும், வெளியில் காத்திருந்தது பரிதாபமாக இருந்தது.
ஷாருக்கான் நடனம்:
மைதானத்தில் அமைக்கப்பட்டு இருந்த மேடையில் பாடல்கள் இசைக்கப்பட்டு நடன நிகழ்ச்சி நடந்தது. கோல்கட்டா அணி உரிமையாளரும் நடிகருமான ஷாருக்கான் தனது பங்கிற்கு குத்தாட்டம் போட, அரசு விழா தானா என்ற சந்தேகம் ஏற்பட்டது.
சர்ச்சை நடிகருடன்:
திடீரென, மம்தா பானர்ஜியின்  தலையில் முத்தமிட்ட ஷாருக்கான்,, அவரையும், மாநில கவர்னர் நாராயணனையும் நடனமாட அழைத்தார். அவர்கள் முதலில் மறுத்தனர். ஆனால், பிடிவாதமாக இருவரது கைகளையும் பிடித்தவாறு நடனம் ஆடினார். இத்தொடரில் மைதானத்தில் புகை பிடித்தல், போதையில் மும்பை கிரிக்கெட் சங்க நிர்வாகிகளுடன் மோதலில் ஈடுபட்ட ஷாருக் கானுடன் சேர்ந்து மம்தா ஆடியது புதிய சர்ச்சைக்கு வழிவகுத்தது.
அடுத்தடுத்து உத்தரவு:
பின் "மைக்' பிடித்த மம்தா, வீரர்கள் மட்டும் தான்  மைதானத்தை சுற்றி வர வேண்டும், மியூசிக் இசைக்க வேண்டாம் என மாறி, மாறி உத்தரவுகளை போட்டுக் கொண்டே இருந்தார். மாநில அரசு சார்பில் வீரர்களுக்கு, பொன்னாடை போர்த்தி, தங்கச் சங்கிலி அணிவித்தார். 
போலீஸ் தடியடி:
இதனிடையே வெளியில் காத்திருந்த ரசிகர்கள், அங்கிருந்த தடுப்புகளை தாண்டி, உள்ளே செல்ல முற்பட்டனர். இதற்கு போலீசார் மறுத்தனர். இதனால் பெரும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போலீசாருடன் மோதல் ஏற்பட, தடியடி நடத்தப்பட்டது. வெறுப்படைந்த ரசிகர்கள் தடுப்புகளை உடைத்து எறிந்தனர்.
குழந்தைகள் கண்ணீர்:
இதில் ஏராளமானோர் காயமடைந்தனர். மைதானத்துக்கு வெளியே ஆயிரக்கணக்கான கிழிந்த "ஷூக்களும்', செருப்புகளும் சிதறி கிடந்தன. பெற்றோரை விட்டுப் பிரிந்த குழந்தைகள், ஆங்காங்கே கண்ணீருடன் கதறினர். மொத்தத்தில் அரசியல் ஆதாயம் தேட பாராட்டு விழாவை மம்தா முழுமையாக பயன்படுத்திக் கொண்டார். 
கங்குலியை காணவில்லை
வெற்றி விழாவில் "கோல்கட்டா தாதா' கங்குலி பங்கேற்கவில்லை. நேற்று திடீரென, குடும்பத்துடன் லண்டன் கிளம்பி சென்று விட்டார். இது ஏற்கனவே திட்டமிடப்பட்ட பயணம் என, அவரது அலுவலத்தில் இருந்தவர்கள் தெரிவித்தனர்.
எதிர் பார்க்கவில்லை
தடியடி குறித்து போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறுகையில்,"" விழாவுக்கு இந்தளவுக்கு கூட்டம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. இந்நிகழ்ச்சியே கடைசி நிமிடத்தில் தான் ஏற்பாடு செய்யப்பட்டது. இதனால் தான் முழு அளவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படவில்லை,'' என்றார்.
லாலுவை மிஞ்சிய செயல்
சமீப காலமாக மம்தா "ஆட்டம்' அதிகமாக உள்ளது. பள்ளி பாடத்தில் மாற்றம், கம்யூனிஸ்ட்கள் வீட்டில் திருமணம் செய்ய வேண்டாம் என்ற உத்தரவு, தன்னைப்பற்றிய கார்ட்டூன் வெளியிட்டவரை கைது செய்தது என நிறைய சர்ச்சையில் சிக்கி தவிக்கிறார். இந்த எதிர்ப்புகளில் இருந்து தப்பித்துக் கொள்ள, இப்போது கிரிக்கெட் பக்கம் திரும்பியுள்ளார்.
கோல்கட்டா அணி ஏதோ உலக கோப்பை வென்றுவிட்டதைப் போல, அரசு சார்பில் பாராட்டு விழா நடத்துகிறார். ஏற்கனவே மாநில நிதிநிலை மோசமாக உள்ள நிலையில் இது தேவை தானா. இவரது செயலுக்கு இணையதளத்தில் பலர் தங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 
இதுகுறித்து ஒருவர் "டுவிட்டரில்' கூறுகையில்,"" மம்தா பானர்ஜியின் செயல்கள், 1990 களில் பீகாரில் லாலூ பிரசாத் செய்த கோமாளித்தனம் போல உள்ளது,'' என குறிப்பிட்டுள்ளார்.
இருவர் மட்டுமே வங்காளி
ஐ.பி.எல்., கோப்பையை கோல்கட்டா அணி, வென்றதை கொண்டாடிய முதல்வர் மம்தா பானர்ஜி ஒரு விஷயத்தை மறந்து விட்டார். பைனலில் விளையாடிய 11 பேரில் மனோஜ் திவாரி, லட்சுமி ரத்தன் சுக்லா மட்டுமே மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள். கேப்டன் காம்பிர்(டில்லி), பிஸ்லா(அரியானா), காலிஸ்(தென் ஆப்ரிக்கா), யூசுப் பதான்(குஜராத்), சாகிப் அல் ஹசன்(வங்கதேசம்), ரஜத் பாட்யா(டில்லி), அப்துல்லா(உ.பி.,), நரைன்(வெ.இண்டீஸ்), பிரட் லீ(ஆஸி.,) ஆகிய மற்ற 9 வீரர்கள் கோல்கட்டாவுக்கு தொடர்பு இல்லாதவர்கள். 
தவறான முன்னுதாரணம்
ஐ.பி.எல்., என்பது பி.சி.சி.ஐ., என்ற தனியார் அமைப்பு நடத்தும் போட்டி. இதில் மாநிலத்துக்கு எவ்வித தொடர்பும் இல்லை. இதற்கு முன் ராஜஸ்தான், சென்னை அணிகள் கோப்பை வென்ற போது, இது போன்று ஆடம்பர விழா நடத்தப்படவில்லை. தற்போது மம்தா தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விட்டார்.

29 மே 2012

சிறுத்தை இயக்குநருக்கு போக்குக் காட்டும் அஜித் _


  எனக்கும் ஒரு காலம் வரும். வந்த பின்னே வாங்க என்று அழகான அஜித்தைப் பார்த்து சவால் விடுத்தாராம், ஒரு வெற்றிப்பட இயக்குநர்.

சிறுத்தை என்ற படத்தை இயக்கி தமிழ் சினிமாவையே ஒரு கலக்குக் கலக்கியவர் இயக்குநர் சிவா. அந்தப் படத்தின் வெற்றியின் பின்னர் சில முக்கிய நடிகர்கள் கால்ஷீ ட் என்னிடம் உண்டு, கதை உள்ளதா என்று சிவாவுக்கு அழைப்பு விடுத்தார்களாம்.

அந்த வகையில் அஜித்தும் ஒருவராம். அதற்கு சிவா தெலுங்கில் ஒரு படம் நடித்துக்கொண்டு இருக்கின்றேன், முடித்துவிட்டு வந்து கதையைக் கூறுகின்றேன் என்றாராம். ஆனால் இவர் பெரும் செலவில் இயக்கிய தெலுங்குப் படம் சில்லறையின் அளவைக்கூட தாண்ட முடியாதுள்ளது என்கிறதாம் ஆந்திரா ரிப்போட்.

இதைத் தொடர்ந்து தமிழகத்திற்கு வந்த சிவா, அஜித் காரியாலயத்திற்கு தொலைபேசியில் தொடர்புகொள்ள "நீங்கள் தொடர்பு கொண்ட நபர் தற்சமயம் சுதாகரிப்பில் இருப்பதால் நான்கு வருடங்களின் பின்னர் தொடர்பு கொள்ளவும்" என்கிறதாம் எதிர்முனை

உங்களின் வலைப்பூ வைரசினால் பாதிக்கப்பட்டுள்ளதா என கண்டறிய-how to find your blog affected by viruses?


தொழில் நுட்ப வளர்ச்சியில் எங்கோ போய்கொண்டிருக்கும் உலகத்தில் பல்வேறு பயன்களும் புதிய தொழில்நுட்பங்களும் நமக்கு கிடைத்தாலும் இதற்க்கு எதிர்மறையான பிரச்சினைகளையும் நாம் தினமும் சந்திக்க வேண்டி உள்ளது. இதில் முக்கியமான பிரச்சினை வைரஸ் மற்றும் மால்வேர்கள் எனப்படும் தீங்கிழைக்கும் மென்பொருட்கள். இந்த வைரஸ் பிரச்சினை இணையதளங்களுக்கும் ஆபத்தை உண்டாக்குகின்றன. வைரஸ்களை பரப்பவே இணையத்தில் பல இணைய தளங்கள் உள்ளன. வைரஸ் பாதித்த தளங்களில் இருந்து ஏதேனும் விட்ஜெட்டையோ அல்லது அந்த தளத்தின் லிங்கோ உங்களின் பிளாக்கில் கொடுத்து இருந்தால் உங்களுடைய தளத்திற்கும் அந்த வைரஸ் பரவிவிடும். இந்த வைரசினால் பெரிய தளங்கள் கூட பாதிப்பை அடைந்து இருக்கின்றனர்.

ஆகவே உங்களுடைய வலைப்பூவிலோ அல்லது இணையதளத்திலோ வைரஸ், மால்வேர்ஸ் மற்றும் தீங்கிழைக்கும் நிரலிகள் உள்ளதா என எப்படி சோதிப்பது என பார்க்க கீழே உள்ள வழிமுறையை பயன்படுத்தவும். 

  • இதற்க்கு முதலில் கீழே கொடுத்துள்ள லிங்கில் சென்று அந்த குறிப்பிட்ட தளத்தை ஓபன் செய்து கொள்ளுங்கள். 
  • உங்களுக்கு கீழே உள்ளதை போல விண்டோ வரும். அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கட்டத்தில் உங்களின் வலைப்பூ அல்லது இணையதள முகவரியை கொடுக்கவும். 
  • முகவரியை கொடுத்த பின்னர் அருகில் உள்ள Scan Now என்ற பட்டனை அழுத்தினால் உங்களின் வலைப்பூவை Scan செய்ய ஆரம்பிக்கும். 
  • சில வினாடிகளில் உங்கள் வலைப்பூ அல்லது இணையதளம் முழுவதும் பரிசோதிக்கப்பட்டு இறுதி முடிவு உங்களுக்கு காட்டும். 
  • மற்றும் எந்தெந்த தளங்களில் உங்கள் வலைப்பூவை சோதனை செய்தது என்ற தகவலையும் தரும். 
  • இந்த முறையில் உங்களுடைய தளத்தை சோதித்து உங்களின் பிளாக்கை பாதுக்காப்பாக வைத்துக்கொள்ளுங்கள். 
இந்த தளத்திற்கு செல்ல - URLVoid

Shortcut Icon இல் உள்ள அம்புக்குறியை நீக்குவதற்கு...

நமது கணணியின் முன் திரையில் உள்ள மென்பொருட்களுக்கான Shortcut Icon இல் அம்புக்குறி ஒன்று இருப்பதை யாவரும் அறிந்திருப்பீர்கள். இது சிலருக்கு வேண்டப்படாத ஒன்றாகக் கூட சிலவேளைகளில் அமையலாம். இது நீக்கப்பட்டால் நன்றாயிருக்குமென கூட சிலர் எண்ணியிருக்கலாம்.
எனவே அவ் அம்புக்குறி இருப்பதை விரும்பாதவர்களுக்காய் இப்பதிவு அமையுமென எதிர்பார்க்கின்றேன்.

இதற்கு முதலில் START இல் சென்று அங்கு தேடல் பகுதியில் “regedit”  எனக்கொடுத்து திறந்துகொள்ளவும். அல்லது START இல் சென்று RUN என்பதை கிளிக்செய்து “regedit” எனக்கொடுத்து திறந்துகொள்ளவும்.

பின்னர் இதிலே கீழ்காட்டிய ஒழுங்கில் சென்று “Explorer”” என்பதை அடையவும்.

 HKEY_CURRENT_USER\Software\ Microsoft\Windows\ CurrentVersion\Explorer


இப்போ மேலுள்ள படத்தில் காட்டியவாறு வலப்பக்கத்தில் உள்ள link என்பதை Right-Click செய்து Modify என்பதைக் கொடுத்து திறந்துகொள்ளவும். இப்போ விண்டோ ஒன்று திறக்கும் அதிலே கீழ் காட்டியவாறு இலக்கத்தை மாற்றியபின் OK பண்ணவும்.


இப்போ Shortcut Iconஇல் உள்ள அம்புக்குறியானது நீக்கப்பட்டுவிடும்.

IPL-2012ல் பிடித்த வீரர்கள்-IV (Chris Gayle)



2012 ற்கான ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக செயற்பட்ட & செயற்பட்டு வரும் வீரர்களை பற்றிய பார்வையையும் அவர்கள் தமது அணிகளுக்காக செய்த சிறப்பான செயற்பாடுகளையும் அலசலாக தருகிறது இத்தொடர் பதிவு.

இதனை IPL-2012ல் பிடித்த வீரர்கள் எனும் என்ற அறிமுகத்துடன் தனது  பொட்டலம் வலைப்பதிவில் தொடர் பதிவாக எழுதி வருகின்றார் G.CARTHIGAN.  இப்பதிவை மீளவும் பயன்படுத்த அனுமதித்தமைக்கு அவருக்கு நன்றி தெரிவித்து, அவருடைய பார்வையிலேயே இத் தொடர் பதிவை தொடர்ந்து தருகிறோம். முதலாவது பகுதி இங்கே.4தமிழ்மீடியா குழுமம்
சிலபேரை கிறிக்கெற்றில பிடிக்குமா பிடிக்காதோ என்று தெரியாம இருக்கும் அப்பிடி ஒரு வகையறாதான் இந்த கிறிஸ்கெயில். ஒரு foot movement Styleஆன பற்றிங் என்றில்லாமல் பற்றை அந்தரத்தில் பிடித்தபடி இவர் முழங்கும் முழக்கங்கள் இவரின்மேல் பிடிப்பும் அதே போல் ஒரு ஈவிரங்கமின்றி சாத்துறாரே என்று ஒருவித வெறுப்பும் எழ காரணமாக இருக்கிறார் Jamaicaவின் பயங்கர மனிதர். 
 
 
இலங்கையில் ஒரு கொஞ்சக்காலமா கிறீஸ் மனிதர்கள் என்று பயங்கர பீதி கிழப்பப்பட்டதல்லவா. அந்த கிறீஸ் மனிதன் எப்பிடியிருப்பான் எண்டதுக்கு உதாரணமா இவரின்ர உருவத்த சொல்லலாம். கறுத்த உயரமான ஆக்ரோசமான உடல்வாகு நட்டுவக்காலிகள் தலையை சுத்தி இருக்கிறமாதிரி தலையிழுப்பு. 
 
வழமைமாதிரி இவரப்பற்றி நீட்டி முழங்கி எழுத தேவையில்லை மேல போட்ட படமே எல்லாத்தையும் சொல்கிறது. இவர் பற்றோட Groundக்க நிக்கிற வரை bowling teamக்கு தொடர்ச்சியா வயித்த கலக்கியபடிதான். IVவது பாகத்தில இன்னொரு வீரரை பற்றிதான் எழுத வெளிக்கிட்டனான். இப்ப கொஞ்ச நேரத்துக்கு முதல்லதான் Chris Gayle டெல்லியில 13sixersஓட 62bowlல 128அடிச்சு ஒரு பட்டாசு கடையில நெருப்பு போட்ட உணர்வை தந்திருந்தார். அதுக்கு பிறகுதான் இவர முதல்ல போட யோசனை வந்திச்சு!
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com