Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

20 செப்டம்பர் 2012

உண்மையாக இருங்களேன் பெண்களை கவரலாம்!


பெண்களின் மனதை புரிந்து கொள்ள இயலாது. அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை ஞானிகளால் கூட அறிந்து கொள்ள முடியாது என்கின்றனர். எத்தனையோ கவிஞர்களும், அறிஞர்களும் கூட பெண்களின் மனதை கவர முடியாமல் தோற்றுத்தான் போயிருக்கின்றனர்.
ஆண்களின் எண்ணங்களுக்கு நேர் மாறாக சிந்தித்து அவர்களை சுத்தலில் விடுவது பெண்களின் வாடிக்கை. பகீரதப் பிரயத்தனம் செய்தாலும் பெண்களைக் கவர முடியவில்லையே என்று தவிப்பவர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களுக்காகவே சில ஆலோசனைகளை வழங்கியுள்ளனர் அனுபவசாலிகள் படியுங்களேன்.
How Win Woman S Heart
பாதுகாப்பு உணர்வு
பெண்கள் விரும்புவது பாதுகாப்பு உணர்வைதான், தந்தை, கணவர், மகன், என எந்த ஆணாக இருந்தாலும் தனக்கு பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்று நினைப்பார்கள். அதேபோல தோள் சாயும் போது தோழனாகவும், மடி சாயும் போது தாயுமானவனாகவும் இருக்கும் ஆண்களுக்கு மட்டுமே பெண்களின் மனதில் இடமுண்டு.
தோற்றத்தில் மாற்றம்
பெண்களை சந்திக்கும் போது தோற்றத்தில் கவனம் தேவை. முதன் முதலில் உங்களைப் பற்றிய ஒரு எண்ணத்தை உருவாக்குவது அந்த தோற்றம்தான். பெண்களின் மனதைக் கவர ஸ்மார்ட் லுக் அவசியம் என்கின்றனர் அனுபவசாலிகள். அதற்காக மிகைப்படுத்தப்பட்ட அலங்காரமோ, செயல்பாடுகளோ தேவையில்லை. சுத்தமாக இருங்கள். அத்தகைய ஆண்களைத்தான் பெண்களுக்கு மிகவும் பிடிக்கும்.
குணத்தால் கவருங்கள்
பணமும், விலை உயர்ந்த பரிசுப்பொருட்களும் கொடுத்தால் பெண்களை எளிதில் கவர்ந்து விடலாம் என்று அநேக ஆண்கள் தவறாய் கணக்கு போடுகின்றனர். நீங்கள் பணத்தினால் பெண்களை கவர முயலும் பட்சத்தில் உங்களை விட உங்கள் பணத்தின் மீது தான் பெண்களின் கவனம் இருக்கும். ஆகவே உண்மையான புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி பெண்களின் அபிப்ராயத்தை பெற முயற்சி செய்வதே சிறந்த வழி.
அடிக்கடி விசாரியுங்களேன்
எப்பொழுதாவது பேசுவதைவிட அடிக்கடி விசாரியுங்கள். தனிப்பட்ட முறையிலோ, குடும்ப ரீதியாகவோ பேச்சு இருக்கட்டும். அடிக்கடி அவர்களுக்காக நேரத்தை செலவிடுங்கள். பெண்களுக்கு உணர்வு ரீதியான செயல்பாடுகள் பிடிக்கும். அதை சரியாக புரிந்து கொண்டு செயல்படும் ஆண்களுக்கு பெண்களின் மனதில் எப்போதும் இடமுண்டு.
சரியாக கணியுங்கள்
நாம் விரும்பும் பெண்ணுக்கு என்ன பிடிக்கும்? என்ன பிடிக்காது என்று சரியாக கணியுங்கள். இதை சரியாக தெரிந்து வைத்துக்கொண்டால் சொதப்பல்கள் இருக்காது. பிடித்த உணவு, பிடித்த நிறம், பிடித்தவைகளை சரியாக செய்தால் பிடிக்காதவைகள் ஏதாவது ஒரு சில செய்ய நேரிட்டாலும் அது கணக்கில் எடுத்துக்கொள்ளப்படாது.
கவனியுங்களேன்
ஆண்கள் கவனிக்கவேண்டும் என்பதற்காகவே நடை, உடை, பாவனைகளை தினம் தினம் புதிது புதிதாக மாற்றிக்கொள்கின்றனர் பெண்கள். அதை சரியாக கவனித்து அவர்களை பாராட்டுங்களேன். இந்த உடை உங்களுக்கு சரியா இருக்கு. இந்த ஹேர் ஸ்டைல் உன்னோட அழகை அதிகரிக்கிறது என்று சும்மா சொல்லி வையுங்களேன். அதற்காகவே கூடுதலாக அலங்கரித்துக் கொண்டு வருகிறார்கள் என்றால் அவரின் மனதில் நீங்கள் இடம் பிடித்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.
ஜென்டில்மேன் பேச்சு
எதையும் வெளிப்படையாக பேசுங்கள். மனதில் கல்மிஷம் இல்லாத பேச்சும், கண்களுக்கு நேராக அதை தெரிவிக்கும் லாவகமும் கொண்ட ஆண்களை அதிகம் பிடிக்கிறதாம். எப்பொழுதும் ஜென்டில் மேன் செயல்பாடுகளுடன் நடந்து கொள்ளும் ஆண்களால்தான் எளிதில் பெண்களின் இதயத்தை கவரமுடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
சுயத்தை இழக்காதீர்கள்
பெண்களைக் கவருவதற்காக எத்தனையோ ஆண்கள் தங்களின் சுயத்தை இழந்து அநேக வேடங்களை போடுகின்றனர்.ஆனால் இந்த நடிப்பினை பெண்கள் எளிதில் இனம் கண்டு கொள்வதால் அநேக ஆண்களின் முயற்சி தோல்வியிலேயே முடிகிறது. உண்மையாக இருந்தால் மட்டுமே பெண்களை எளிதில் கவரமுடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
பெண்களை கவர வேண்டும் என்பதற்காக எதையும் மிகைப்படுத்தி பேசாதீர்கள். நிறைய படித்து விசய ஞானத்தோடு பேசுங்கள். உலக நடப்புகளை அப்டேட் செய்து கொள்ளுங்கள். இதுபோன்ற செயல்பாடுகளால் மட்டுமே பெண்களின் மனதை கவர முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
முயற்சி செய்து பாருங்களேன்

நீடித்த இன்பத்திற்கு என்ன செய்யலாம்?


நிறைய பேருக்கு இந்தக் கவலை இருக்கும். படுக்கை அறையில் என்னால் நீண்ட நேரம் இன்பம் அனுபவிக்க முடியவில்லை, மனைவியை நீண்ட நேரம் திருப்திப்படுத்த முடியவில்லை, என்னால் முடியவில்லையே என்று பலரும் வருந்திக் கொள்வார்கள் - உள்ளுக்குள். கவலைய விடுங்க, உங்க கிட்டேயே இதற்கான வைத்தியம் இருக்கு. அதைப் பார்ப்போம் வாருங்கள்...
உச்சகட்டம் எனப்படும் கிளைமேக்ஸை அடைவதற்கு முன்பே சில தந்திரங்களை நாம் பயன்படுத்தினால் நீடித்த இன்பத்தை எளிதில் அடைய முடியும். இதற்காக மருத்துவர்களிடமோ, வயகாரா போன்ற மருந்துகளிடமோ நாம் தஞ்சம் புகத் தேவையில்லை.

3 Ways Last Longer Bed

நிறுத்துங்கள் - தொடருங்கள் - நிறுத்துங்கள்
இது ஒரு டெக்னிக். அதாவது உறவை ஆரம்பித்து மும்முரமாக போய்க் கொண்டிருக்கும்போது விந்தனு வெளியேறப் போவது போல தோன்றும்போது ஆண்குறியை வெளியே எடுத்து விடுங்கள். சில விநாடிகள் ஓய்வெடுங்கள். அதாவது 5 முதல் 10 விநாடிகள் வரை. இப்போது சற்று வேகம் குறைந்திருக்கும். பிறகு மீண்டும் உறவைத் தொடருங்கள். இப்படியே சில நிமிடங்கள் வரை செய்து வாருங்கள். இதன் மூலம் உங்களுக்கும் நீண்ட நேரம் உறவில் இருந்தது போல இருக்கும். உங்களது துணைக்கும் தேவையான இன்பம் கிடைக்கும்.
ஆண்களை விட பெண்களுக்கே உச்சகட்டம் வர நேரமாகும். எனவே இப்படி நிறுத்தி நிறுத்தி உறவு கொள்ளும்போது உங்களை விட உங்களது மனைவிக்குத்தான் நிறைய இன்பம் கிடைக்கும்.
பிசைந்து கொடுங்கள்...
அடுத்து இன்னொரு டெக்னிக் இருக்கு. அதாவது உறவின்போது உச்சகட்டம் வரும் போல தெரியும்போது ஆண்குறியை வெளியே எடுத்து விடுங்கள். பின்னர் ஆண்குறியின் பின்னால் உள்ள டியூப் போன்ற பகுதியை மெதுவாகப் பிடித்து பிசைந்து கொடுங்கள். அப்படிச் செய்யும்போது உணர்வு மட்டுப்படும், விந்தனு வெளியேறுவதை சற்றே தடுத்து நிறுத்தலாம். உணர்வு வெகுவாக குறைந்ததும் மறுபடியும் உறவைத் தொடருங்கள்.
உணர்ச்சிகளைத் தூண்டாத ஆணுறை...
இதேபோல இன்னும் ஒரு எளிமையான விஷயம், ஆணுறை. அதாவது சில ஆணுறைகள் உணர்ச்சிகளை அவ்வளவு சீக்கிரம் தூண்டுவதில்லை. அப்படிப்பட்ட ஆணுறைகளைப் பயன்படுத்திக் கொண்டு உறவில் ஈடுபடும்போது நீண்ட நேரம் ஈடுபட வாய்ப்பு கிடைக்கும்.
இந்த வகை ஆணுறைகளில் பென்சோகெய்ன் என்ற லூப்ரிகன்ட் பயன்படுத்தப்படுகிறது. இதனால் நீண்ட நேரம் உறவில் ஈடுபட்டாலும் கூட உணர்வுகள் உச்சகட்டத்தை அடைய சற்று அவகாசம் பிடிக்கும். நீண்ட நேர இன்பத்தை விரும்புவோருக்கு இந்த வகை ஆணுறைகள்தான் சரிப்பட்டு வரும்.
அதேசமயம், இப்படிப்பட்ட ஆணுறைகளை அணிவதற்கு முன்பு தலைகீழாக மாற்றி போட்டு விடாதீர்கள். பிறகு தவறாகப் போய், நீடித்த இன்பத்திற்குப் பதில், சுருக்கமாக முடிந்து போய் கசப்பாகி விடக் கூடும்.
இதுபோல நிறைய இருக்கிறது... அனுபவத்தின் மூலம் அறிந்து இன்பத்தை நுகருங்கள்...!

'சூப்பர் மாடல்' படத்துக்காக 'சூப்பர்' போஸ் கொடுத்த வீணா மாலிக்!


ரவி அலவாத் என்பவர் தயாரிக்க நவீன் பத்ரா இயக்கும் படம்தான் இந்த சூப்பர் மாடல். இப்படத்துக்காக வீணா கொடுத்துள்ள கவர்ச்சிகரமான புகைப்படக் குவியலை ரிலீஸ் செய்துள்ளனர்.

இப்படத்துக்காக வீணா கொடுத்துள்ள போஸ் அனைத்துமே ஏடாகூட கவர்ச்சியில் உள்ளன. உடல் பாகங்களை புட்டுப் புட்டு வைத்துள்ளார் இப்படங்களில் வீணா.
Veena Malik Raunchy Photoshoot Supermodel Movie

இதுகுறித்து அவர் கூறுகையில், என்னை ஒரு சூப்பர் மாடலாக உணர வைத்துள்ளது இந்த போட்டோஷூட். எனது கவர்ச்சிகரமான உடலை வெளிப்படுத்த இது உதவியுள்ளது. இந்தப் படங்களைப் பார்த்தால் ஆண்களுக்கு பொறி பறக்கும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார்.

இப்படம் குறித்து பத்ரா கூறுகையில், சூப்பர் மாடல் படத்தை நான் தீர்மானித்தவுடனேயே எனது நினைவுக்கு வந்தவர் வீண்தான். அவர்தான் இதற்குப் பொருத்தமானவர். சரியான உடல் வாகு அவருக்கே உண்டு. கடுமையாகவும் உழைக்கிறார், முகம் சுளிக்காமல் ஒத்துழைக்கிறார் என்று புகழாரம் பாடுகிறார்.

இந்தப் படத்தில் அவருடன் ஜோடி போடுபவர் அஷ்மித் படேல் ஆவார்.

ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்குக்கு செம நட்டமாம்!



ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க்க்கு கடும் இழப்பு- போர்ப்ஸ் பட்டியலில் 36 வது இடத்துக்குப் போனார்!
நியூயார்க்: சமூக வலைதளமான ஃபேஸ்புக்கின் நிறுவனர் மார்க் ஜூக்கபெர்க்குக்கு கடும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதுடன் போர்ப்ஸ் பட்டியலில் இருந்தும் சரிந்துவிட்டார்.


கடந்த மே மாதம் ஃபேஸ்புக் நிறுவனம் பங்குச் சந்தைக்குள் நுழைந்தது. ஆனால் அதன் பின்னர் அந்நிறுவனத்துக்கு செம இறங்குமுகம்தான்! தற்போது ஃபேஸ்புக் நிறுவனத்தின் 1 பங்கு மதிப்பு 12 டாலர் என்ற அளவில்தான் இருக்கிறது. மொத்தம் 4.9 பில்லியன் டாலர் அளவுக்கு ஜூக்கர்பெர்க்குக்கு இழப்பு ஏற்பட்டிருக்கிறதாம்!

Mark Zuckerberg Loses 4 9bn A Year Facebook Plummet

போர்ப்ஸ் பத்திரிகையில் பணக்கார அமெரிக்கர்கள் பட்டியலில் 14வது இடத்தில் இருந்த ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் இப்போது 34வது இடத்துக்குப் போய்விட்டார்!


ஜூலை மாதத்தில் ஃபேஸ்புக் நிறுவனம் 96 மில்லியன் டாலர் இழப்பை சந்திக்க நேர்ந்ததால் பங்கு மதிப்புகள் கடுமையாக வீழ்ச்சியடைந்துவிட்டன என்று சொல்லப்படுகிறது. ஃபேஸ்புக் நிறுவனம் பங்குச் சந்தையில் நுழைந்த பிறகு முதன் முறையாக கருத்து தெரிவித்த ஜூக்கர்பெக். செல்போன் பயன்பாடுகளில் தமது நிறுவனம் கூடுதல் கவனம் செலுத்தாமல் 2 ஆண்டுகளை வீணடித்துவிட்டது என்று கூறியிருந்தார்

17 செப்டம்பர் 2012

பலான மேட்டர் கட்டுரைகளை அதிகம் படிச்சா பெண்களுக்கு ஆபத்தாம் - ஆய்வில் தகவல்


பிரபல இதழ்களில் வெளியாகும் பாலியல் கட்டுரைகளை படிக்கும் பெண்களுக்கு அவர்களின் சொந்த வாழ்வில் செக்ஸ் செயல்பாடுகளில் தன்னம்பிக்கை அதிகரிக்கிறது என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் செய்திகளை வெளியிடும் ஊடகங்கள் இளம் பெண்களின் வாழ்வில் எவ்விதம் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் காஸ்மோபாலிடன் இதழ்களில் உள்ள பாலியல் கட்டுரைகளை படிக்கும் பெண்களுக்கு செக்ஸ் உணர்வுகள் அதிகரிக்கின்றன. மேலும் இளம் பெண்கள் அவற்றை படிப்பதன் மூலம் திருமணத்திற்கு முந்தைய உறவில் ஈடுபடும் வாய்ப்பு அதிகம் என்று தெரியவந்துள்ளது.
ஆராய்ச்சியாளர்கள் Janna L. Kim and L. Monique Ward ஆகியோர் இந்த ஆய்வினை மேற்கொண்டனர். 150 கல்லூரி மாணவிகள் இந்த ஆய்வில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்களை சரி பாதியாக பிரித்து ஒரு பிரிவினருக்கு பொழுது போக்கு அம்சங்கள் கட்டுரைகள் அடங்கிய இதழ்களும், மற்றொரு பிரிவினருக்கு பாலியல் கட்டுரைகள் அடங்கிய புத்தகமும் படிக்கக் கொடுக்கப்பட்டது.
Sex Related Magazine Articles Endanger

அவர்களிடம் பல்வேறு கேள்விகள் கேட்டப்பட்டன. இதில் பாலியல் தொடர்பான கட்டுரைகளை படித்த பெண்களுக்கு பாலியல் உணர்வுகள் அதிகம் ஏற்பட்டது தெரியவந்தது. பொழுது போக்கு அம்சங்கள் நிறைந்த கட்டுரைகளை படிப்பவர்களுக்கு இது தொடர்பான உணர்வுகள் ஏற்பட வாய்ப்பே இல்லை என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். பெண்களின் பாலியல் உணர்வுகளை பாதிப்பை ஏற்படுத்துவதில் ஊடகங்கள் முக்கயி பங்கு வகிக்கின்றன என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு முடிவு சமீபத்தில் வெளியான உளவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

இஸ்லாம், நபிகளுக்கு எதிரான படம் என்று கூறாமல் ஏமாற்றி விட்டனர்: நடிகை சின்டி


வாஷிங்டன்: இஸ்லாம் மதத்தையும், முகம்மது நபியையும் மட்டமாக சித்தரிக்கும் அமெரிக்கத் திரைப்படத்தில் தன்னை ஏமாற்றி நடிக்க வைத்து விட்டனர் என்று நடிகை சின்டி லீ கார்சியா தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலிய-அமெரிக்கரான கலிபோர்னியாவைச் சேர்ந்த சாம் பேசிலி என்பவரும், குரானை எரித்து சர்ச்சைக்குள்ளான புளோரிடாவைச் சேர்ந்த பாதிரியார் டெர்ரி ஜோன்ஸ் என்பவரும் சேர்ந்து ''Innocence of Muslims'' என்ற படத்தைத் தயாரித்துள்ளனர்.
அதன் சில பகுதிகளை யூ டியூப்பில் வெளியிட்டனர். இந்தப் படத்துக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

I Was Deceived Innocence Muslims Actress Cindy

இந்தப் படம் குறித்து சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வரும் நிலையில் எகிப்திலும், லிபியாவிலும் உள்ள அமெரிக்க தூதரகங்கள் தாக்கப்பட்டன. அதிலும் லிபியாவில் நடந்த தாக்குதலில் அந்நாட்டுக்கான அமெரிக்க தூதர் உள்பட 4 பேர் கொல்லப்பட்டனர். இந்நிலையில் ஏமன், கெய்ரோ, வங்கதேசம், ஈரான், மொராக்கோ, சூடான், டுனிசியா உள்ளிட்ட 9 நாடுகளுக்கு கலவரம் பரவியுள்ளது.



இதற்கிடையே அந்த சர்ச்சைக்குரிய படத்தில் நடித்த நடிகை சின்டி லீ கார்சியா இயக்குனர் தன்னை ஏமாற்றி நடிக்க வைத்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், ஒரு ஏஜென்சி மூலமாகத் தான் இந்த படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால் இது இஸ்லாத்தை, முகம்மது நபியை இழிவுபடுத்தும் படம் என்று எனக்குத் தெரியாது. இயக்குனர் உண்மையைச் சொல்லாமல் ஏமாற்றிவிட்டார். பாலைவன வீரர்கள் என்ற தலைப்பில் தான் என்னிடம் திரைக்கதையைக் கொடுத்தனர். 2,000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தவற்றை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்படும் படம் என்றும், எகிப்து பற்றிய கதை தான், இதற்கும் மதத்திற்கும் சம்பந்தம் இல்லை என்றும் தெரிவித்தனர்.


படத்தில் முகம்மது நபி குறித்தும், கடவுள் குறித்தும் நான் பேசாத வசனங்களை எல்லாம் சேர்த்துள்ளனர்.
மேலும் படத்தை எடுக்கையில் முகம்மத் என்ற பெயரே வரவில்லை "மாஸ்டர் ஜார்ஜ்" என்று தான் கூறினர் என்றும், இறுதியில் வெளியிடப்பட்டதில் முகம்மத் என்ற பெயரை சேர்த்துள்ளனர்.
இதுவரை நான்கு பேர் கொல்லப்படவும் உலகளவில் பல நாடுகளில் கலவரங்களுக்கும் காரணமாகவும் இருந்த படத்தில் நடித்துள்ளேன் என்று நினைக்கையி்ல் வருத்தமாக உள்ளது என்று கூறியுள்ளார்.


முன்னதாக ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்த சின்டியிடம் டைரக்டர் தனது பெயர் சாம் பெசிலி என்றும், தான் ஒரு எகிப்தியர் என்றும் அறிமுகம் செய்து கொண்டுள்ளார். ஆனால் உண்மையில் அவர் பெயர் நகௌலா பெசிலி. அவர் கலிபோர்னியாவில் வசித்து வருகிறார்.


இந் நிலையில் சாம் மீது வழக்கு தொடர சின்டி முடிவு செய்துள்ளார்.
சின்டி தவிர அந்த படத்தில் பணியாற்றிய 80 பேரும் சேர்ந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தாங்கள் ஏமாற்றப்பட்டு்ள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மன் தூதரகத்துக்கு தீ வைப்பு:
இந்நிலையில் இந்த படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சூடானின் கார்டூம் நகரி்ல் உள்ள ஜெர்மன் தூதரகத்திற்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். மேலும் அந்த தூதரகத்திற்கு அருகில் உள்ள இங்கிலாந்து தூதரகத்திற்கு வெளியேயும் போராட்டம் நடத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் முடிந்து குழந்தையும் பெற்ற பின் ஹனிமூன் போன செல்வராகவன் - கீதாஞ்சலி!

திருமணம் முடிந்து குழந்தை பெற்று பெயரும் வைத்த பிறகுதான் ஹனிமூன் செல்ல நேரமே கிடைத்ததாம் இயக்குநர் செல்வராகவன் - கீதாஞ்சலி தம்பதிகளுக்கு.
சோனியா அகர்வாலுடன் விவாகரத்து ஏற்பட்ட பிறகு, செல்வராகவன் காதலித்து கைப்பிடித்த பெண் கீதாஞ்சலி.
திருமணம் முடிந்த கையோடு தனது இரண்டாம் உலகம் படத்தில் மூழ்கிவிட்டார் செல்வராகவன், இந்தப் படத்துக்காக ஜார்ஜியாவிலெல்லாம் ஷூட்டிங் நடத்தினார்.

Selva Geetanjali S Honeymoon Trip
இப்படி பிஸியாக ஓடிக் கொண்டிருந்ததால் ஹனிமூனே போகவில்லையாம் இருவரும். இதற்கிடையே கீதாஞ்சலிக்கு குழந்தையும் பிறந்துவிட்டது. அதற்கு லீலாவதி என பெயர் சூட்டியுள்ளனர்.
ஜார்ஜியாவில் நீண்ட நாள் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு திரும்பிய செல்வராகவன், "இப்ப போகலாம் ஹனிமூன்... இடத்தை மட்டும் நீ செலக்ட் பண்ணு' என்று கூற, ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரை தேர்வு செய்தாராம் கீதாஞ்சலி.
அப்புறமென்ன... ஜாலியாக ஒரு ட்ரிப் அடித்து, உதய்பூரின் பிரபல தாஜ் லேக் பேலஸில் தங்கியிருந்துவிட்டு உற்சாகமாகத் திரும்பியுள்ளனர்.
இதுகுறித்து கீதாஞ்சலி கூறுகையில், "2010-ல் திருமணமாச்சு எங்களுக்கு. ஹனி மூன் போக 2 வருஷம் ஆகிடுச்சி. செல்வாதான் ஒரு பிரேக் வேணும்னு இப்போ போகலாம்னு சொன்னார். பரந்து விரிந்த ஏரிக்கு நடுவில் உள்ள அந்த அரண்மனை ஹோட்டலில் தங்கியிருந்ததே புது அனுபவமாக இருந்தது," என்றார்.
"தாஜ் பேலஸ் ஹோட்டலில் கிடைத்த உபசரிப்பும், இனிய அனுபவமும் நம்ப முடியாத அளவுக்கு இருந்தது. வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம் இது," என ட்விட்டரில் கூறியுள்ளார் செல்வராகவன்

நாயுடன் வாக்கிங் போனபோது கவர்ச்சியை சமாளிக்க முடியாமல் தடுமாறிய கோகோ!


நியூயார்க்: ராப் பாடகர் ஐஸ் டியின் மனைவியும், நடிகையும், மாடல் அழகியும், பெரும் மார்பகங்களைக் கொண்டவருமான கோகோ ஆஸ்டின், நியூயார்க்கில் தனது இரு நாய்களுடன் வாக்கிங் போனபோது அவரது கவர்ச்சியான உடை அவருக்கு பெரும் சிரமத்தைக் கொடுத்து விட்டது. அவரது மார்பகங்கள் இரண்டையும் அப்பட்டமாக காட்டும் வகையில் உடை அமைந்ததால் நாயைப் பிடிப்பதா, உடையைச் சரி செய்வதா என்று பெரும் குழப்பத்தில் மூழ்கிப் போனாராம் கோகோ.
coco struggles contain her cleavage
அமெரிக்க ராப் பாடகர் ஐஸ் டி. இவரது மனைவிதான் கோகோ. இவர் ஒரு மாடல் அழகி, நடிகை. நியூயார்க்கில், இவர் தனது இரு நாய்களுடன் வாக்கிங் போனபோது பெரும் சிரமத்தை சந்தித்து விட்டாராம். எல்லாத்துக்கும் காரணம் இவர் போட்டிருந்த கவர்ச்சிகரமான மேக்ஸிதான்.
தனது பெருத்த மார்புகளுக்காக பிரபலமானவர் இந்த கோகோ. தனது மார்புகளை கவர்ச்சிகரமான முறையில் வெளிக்காட்டுவதற்கு சற்றும் தயங்காதவரும் கூட. அடிக்கடி கவர்ச்சிகரமான முறையில் வெளியில் வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் நியூயார்க்கில் தனது இரு நாய்களுடன் அவர் வாக்கிங் கிளம்பினார். சாதாரணமாக போனாலே அவரை பலரும் பார்ப்பார்கள். இந்த நிலையில் படு கவர்ச்சிகரமான மேக்ஸி டிரஸ்ஸில் அவர் நாய்களுடன் போனதைப் பார்த்து சாலையே ஸ்தம்பித்துப் போனது. காரணம், அவரது இரு மார்புகளும் டிரஸ்ஸை விட்டு எந்த நொடியிலும் வெளியே வந்து விடுவது போல இருந்ததுதான்.
இதை கோகோவும் உணர்ந்தார். ஆனால் இரு நாய்களும் அவரது கையை விட்டு திமிறிக் கொண்டு ஓடுவது போல போனதால், அவரால் நாயையும் விட முடியவில்லை, அதேசமயம், தனது உடையையும் சரி செய்ய முடியாத நிலை. நாய் ஒருபக்கம் இழுக்கிறது, உடை பக்கம் முறுக்குகிறது.. இதனால் ரொம்பவே தவித்துத்தான் போய் விட்டார் கோகோ. இருந்தாலும் தனது கவர்ச்சியை அவர் கடைசி வரை தடுக்கவே இல்லை
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com