Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

27 மார்ச் 2009

கீறல்கள் விழுந்த CDயினை பயனுள்ளதாக மாற்றுங்கள்॥

நப்கின் ஹோல்டர்

கீறல்கள் விழுந்த CDயினை பயனுள்ளதாக மாற்றுங்கள்॥
பழைய cdஇரண்டு, எம்।சீல் - ஒரு பக்கெட், வீட்டில் இருக்கும் ஏதாவது மரத்தில் ஆன கட்டை, பேப்ரிக் கலர், 3டி அவுட்லைனர், பெவிகால்
முதலில் எம்।சீலை நன்றாக மிக்ஸ் செய்து மரக்கட்டையில் கொஞ்சம் பெவிகால் தடவி அதன் மீது சிறிது எம்।சீலை வைக்கவும்.
அதன் மீது cdயினை வைக்கவும்। சிறிது நேரம் பிடித்துக்கொள்ளவும்.
எம்,சீல் சின்ன சின்ன ரோஜாப்பூக்கள் செய்யவும், இலைகளும் செய்யவும். அதனை பெவிகால் தடவி படத்தில் உள்ளது போல் ஓட்டவும் இதை போல் நிறைய பூக்கள், இலைகள், கொடி என்று செய்து ஓட்டவும்। குறைந்தது அரைமணிநேரம் காயவிடவும். பிறகு இலைகளுக்கு பச்சைகலர் கொடுக்கவும்। பச்சை, மஞ்சல் கலந்து கொடுத்தால் இலைகள் மிகவும் அழகாக இருக்கும். பிறகு பூக்களுக்கு சிகப்பு கலர் கொடுக்கவும்॥ அடி பகுதிக்கு கருப்பு கலரில் பெயிட் செய்து காயவிடவும் cdயின் மேல் பகுதியில் 3டி அவுட்லைன் வைத்து விருப்பமான டிசைன் வரையவும்।
காய்ந்த பின்பு டிஸ்யூ பேப்பரை வைக்கவும்॥
எந்த ஒரு பொருளையும் தூக்கி போடாமல் ஏதாவது ஒரு வகையில் பயன்படுத்தவும்

கூகிள் பட தேடலில் எப்படி நிறத்தில் தேடுவது

எல்லோரும் ஏதேனும் ஒரு படத்தை தேட வேண்டும் என்றால் பெரும்பாலும் கூகிள் பட தேடலில் தேடுவோம். கூகிள் பட தேடலில் எப்படி நிறத்தில் தேடுவது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

நீங்கள் ஒரு அழகிய சிவப்பு நிற (NOKIA) கைபேசியை வாங்கலாம் என்று முடிவேடுத்துள்ளீர்கள் ஆனால் அந்த (Model)லில் சிவப்பு நிற கைபேசி இருக்குமா என்று உங்களுக்கு தெரியவில்லை.

இப்போது கூகிள் பட தேடலில் சிவப்பு நிற (NOKIA) கைபேசியைன் (Model) பற்றி எளிதாக கண்டுபிடித்துவிடலாம்.

கூகிள் பட தேடலின் (URL)லில் கடைசியில் &imgcolor=red என்று சேர்த்தால் போதும்.

(எடு. கா)

http://images.google.com/images?q=Nokia&imgcolor=red

Search Images in Google with Colors

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அட்டவணை வெளியீடு

இந்தியாவில் நடப்பதாக இருந்த ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பாதுகாப்பு பிரச்சினை காரணமாக தென்ஆப்பிரிக்காவுக்கு மாற்றப்பட்டது. அங்கு அடுத்த மாதம் 18 ந் தேதி தொடங்கி மே மாதம் 24 ந்தேதி வரை போட்டி நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. 8 நகரங்களில் போட்டி நடத்தப்படுகிறது. மொத்தம் 59 போட்டிகள் நடைபெறுகின்றன. மே 22 மற்றும் 23 ந் தேதிகளில் அரை இறுதி போட்டிகளும் 24 ந்தேதி ஜோகன்ஸ் பர்க் நகரில் இறுதி போட்டியும் நடைபெறும். சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி டேர்டேவில்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ஐதராபாத் டெக்கான் சார்சர்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 8 அணிகள் போட்டியில் பங்கேற்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் 2 தடவை மோத வேண்டும். 14 போட்டிகளில் ஒவ்வொரு அணியும் ஆடும். இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதி போட்டிக்கு வரும். கேப்டவுன், ஜோகன்ஸ்பர்க், டர்பன், பிரிடோரியா, கிழக்கு லண்டன், கிம்பெர்லி, பிளோம்பான்டின், போர்ட் எலிசபெத் ஆகிய 8 நகரங்களில் போட்டி நடக்கும். இதில் இந்தியர்கள் அதிகம் வசிக்கும் டர்பன் நகரில் 16 போட்டிகள் நடத்தப்படுகின்றன. பிரிட்டோரியாவில் 12 போட்டிகளும், ஜோகன்ஸ்பர்க், கேப்டவுன் ஆகிய இடங்களில் தலா 8 போட்டிகளும் போர்ட் எலிசபெத், கிழக்கு லண்டன் ஆகிய இடங்களில் 4 போட்டிகளும், பிளோம்பான்டின், கிம்பெர்லி ஆகிய இடங்களில் தலா 2 போட்டிகளும் நடக்கின்றன. பெரும்பாலான நாட்களில் தினமும் 2 போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்திய நேரப்படி மாலை 4 மணிக்கு முதல் போட்டியும், இரவு 8 மணிக்கு 2 வது போட்டியும் நடக்கிறது. 18 ந்தேதி கேப்டவுன் நகரில் முதல் நாள் போட்டிகள் நடக்கிறது. இதில் 4 மணிக்கு நடக்கும் முதல் போட்டியில் ராஜஸ்தான் ராயல் அணியும், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும் மோதுகின்றன. அடுத்து 8 மணிக்கு நடக்கும் போடடியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மும்பை அணிகள் மோதுகின்றன.

25 மார்ச் 2009

கம்ப்யூட்டர்கள் பழசு கண்ணா பழசு...!

கணினிகளும் அதி வேகமாக முன்னேற்றம் பெற்று புது பொலிவுடன் நாள்தொறும் புது வடிவமைப்புடன் வந்து கொண்டுள்ளன. TFT மானிட்டர், வயர்லெஸ் மௌஸ், ப்ளூடூத் என்று பல முன்னேற்றங்கள். இந்நேரத்தில் இணையத்தில் பழையகால கணினிகளின் படங்களை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இதோ அவை உங்கள் பார்வைக்காக

சம்பளத்தை ஏற்றினார் சரண்யா!

வெண்ணிலா கபடி குழு ஹிட் ஆகி விட்டதால் டக்கென்று தனது சம்பளத்தை ஏற்றி விட்டாராம் க்யூட் நாயகி சரண்யா மோகன். இளம் மலையாள நடிகையான சரண்யா மோகன், தணுஷின் யாரடி நீ மோகினி படம் மூலம் ஹிட் ஆனவர். அதில் நயனதாராவின் தங்கையாக வந்து, தனுஷை டாவடிக்கும் பாத்திரத்தில் அசத்தினார்.
Saranya Mohan with Vishnu
இந்தப் படத்திற்குப் பின்னர் சரண்யாவைத் தேடி நிறைய பட வாய்ப்புகள். அதில் வெண்ணிலா கபடிக் குழுவில் தனி நாயகி வேடம். படம் சூப்பர் ஹிட் ஆகி விடவே சரண்யா ராசி நாயகிகள் வரிசையில் சேர்க்கப்பட்டு விட்டார். இதைப்ப பயன்படுத்தி தற்போது சம்பளத்தை ஏற்றி விட்டாராம் சரண்யா. தற்போது படத்திற்கு ரூ. 15 லட்சம் சம்பளம் கேட்கிறாராம். வெண்ணிலாவுக்கு முன்பு வரை அவரது சம்பளம் ஜஸ்ட் 3 லட்சம்தானாம். வெண்ணிலா ஹிட் ஆனதால்தான் இந்த சம்பள உயர்வாம். சமீபத்தில் நடந்த தயாரிப்பாளர் கவுன்சில் கூட்டத்தில், நடிகர் நடிகைகளின் சம்பளத்தைக் குறைக்க தீர்மானிக்கப்பட்டது. அதேபோல படச் செலவுகளையும் சுருக்கிக் கொள்ள தீர்மானிக்கப்பட்டது. பிலிம் ரோலை வேஸ்ட் ஆக்கக் கூடாது என்றும் கண்டிப்பாக கோரப்பட்டது. இதன் காரணமாக நயனதாரா, திரிஷா போன்ற பெரிய பெரிய நடிகைகள் எல்லாம் ரூ.30 லட்சம் வரை குறைத்துக் கொள்ள முன்வந்துள்ளனராம். இந்த நிலையில் நேற்று வந்த சரண்யா மோகன் சம்பளத்தை தடாலடியாக உயர்த்தியிருப்பது அவருக்கே வினையாகி விடலாம் என்கிறார் ஒரு தயாரிப்பாளர்.

23 மார்ச் 2009

ஐபிஎல் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த சச்சின் எதிர்ப்பு!

Sachin Tendulkar
மும்பை: ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளை வெளிநாட்டுக்குக் கொண்டு செல்லும் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முடிவு ஏமாற்றம் அளிக்கிறது என்று சச்சின் டெண்டுல்கர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவிலேயே இப்போட்டிகள் நடத்தப்பட வேண்டும் என்பதுதான் என்னைப் போன்ற வீரர்களின் கருத்து. அதுவே ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமையானது, என்றும் சச்சின் கூறியுள்ளார். இந்தியாவில் பொதுத் தேர்தல் நடைபெறுவதாலும், தீவிரவாத அச்சுறுத்தல் தலைதூக்கி இருப்பதாலும், கிரிக்கெட் போட்டிகளுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் போட்டிகளை சில காலம் தள்ளி வைக்குமாறு மத்திய அரசே கிரிக்கெட் வாரியத்தைக் கேட்டுக் கொண்டது. ஆனால் குறித்த நேரத்தில் போட்டிகளை நடத்தியே தீருவோம் என தீவிரமாக இருந்தது ஐபிஎல். இதனால், ஐபிஎல் போட்டிகளுக்கு முடிந்த வரை பாதுகாப்புத் தர முயற்சிப்போம் என்றும், ஆனால் முழுமையான பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியாத நிலை உள்ளதால் போட்டிகளை சிறிது காலம் தள்ளி வைப்பது நல்லது என்றும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்திருந்தார். இடையில் தனது போட்டி அட்டவணையை மாற்றியும் அறிவித்தது ஐபிஎல். ஆனால் ஐபிஎல் எதிர்பார்த்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து தர எந்த மாநில அரசும் முன்வரவில்லை. இதனால் போட்டிகளை வெளிநாடுகளுக்கு கொண்டு செல்வதாக ஐபிஎல் நேற்று அறிவித்தது. இது இந்தியர்கள் அனைவருக்கும் பெருத்த அதிர்ச்சியாகவும் ஏமாற்றமாகவும் மாறியுள்ளது. இந்திய கிரிக்கெட் அணி வீரர்களுக்கும் இந்த முடிவில் உடன்பாடில்லை என்றே தெரிகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் தலைவரும், முதல்நிலை வீரருமான சச்சின் டெண்டுல்கர், 'ஐபிஎல் போட்டிகளை வெளிநாட்டில் நடத்த முடிவெடுத்திருப்பது ஏமாற்றமளிக்கிறது. இந்தப் போட்டிகளை இந்தியாவில்தான் நடத்த வேண்டும். அதுவே நியாயமானதும்கூட. ஒவ்வொரு இந்தியருக்கும் அதுவே பெருமையளிக்கும். என்னைப் போன்ற வீரர்களின் கருத்தும் இதுவே,' என்று கூறியுள்ளார். இதேபோல முன்னாள் கேப்டன் கபில்தேவும் ஐபிஎல் போட்டிகளை இந்தியாவை விட்டு வெளியில் கொண்டு செல்வதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜேட்கூடியின் மரணம் சொல்லும் செய்தி..!

23-03-2009 என் இனிய வலைத்தமிழ் மக்களே..! 27 வயதான ஜேட் கூடி என்ற பெண் தனது இறப்பை எதிர்பார்த்து சில மாதங்களாகக் காத்திருந்து, இப்போது கர்த்தரின் காலடியை அடைந்துவிட்டார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்புவரையிலும் 'பிக் பிரதர்' என்கிற ரியலிட்டி ஷோவில் கலந்து கொள்ளாத வரையில் அவர் யாரென்று இந்தியர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இந்திய திரைப்பட நடிகை ஷில்பா ஷெட்டியுடன் அந்த ரியலிட்டி ஷோவில் பங்கேற்ற ஜேட்கூடி, ஷில்பாவை இனவெறியோடு திட்டியதால் ஷில்பா கண்ணீர் விட்டு அழுக.. அந்த அழுகையால் தாங்களும் அழுத லண்டன் மாநகர மக்கள் மொத்த ஓட்டையும் ஷில்பாவுக்கே குத்தி அவரை பரிசு மழையில் நனைய வைத்து அவரை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்கள். அப்போது நம்மால் கோபமாகப் பார்க்கப்பட்ட அதே ஜேட்கூடிதான் இப்போது நம்மால் பரிதாபகமாப் பார்க்கப்படுகிறார். 27 வயதுதான்.. 5 வயது மற்றும் 4 வயதான இரண்டு ஆண் குழந்தைகளுக்கு அம்மா.. பிள்ளைகளை வளர்க்க வேண்டிய பொறுப்பு இருக்கிறது. சம்பாதிக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. இந்த நேரத்தில்தான் புற்று நோய் அவரைத் தாக்கியிருக்கிறது. இந்தியாவில் கலர்ஸ் என்கிற சேனல் நடத்திய பிக் பாஸ் ரியலிட்டி ஷோவில் கலந்து கொள்ள வந்தவருக்கு மும்பையில் நல்ல முறையில் வரவேற்பு கிடைத்தது. நிச்சயம் இந்திய விஜயம் எனக்கொரு திருப்பத்தைத் தரும் என்று அப்போது சொன்னார். அந்தத் திருப்பம் அவருடைய வாழ்க்கையை முடிக்கிற திருப்பம் என்பதை அவரும், மீடியாக்களும் அறிந்திருக்கவில்லை. ரியலிட்டி ஷோவுக்காக இந்தியா வருவதற்கு முன்பாகவே அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது. அதனால் லண்டனிலேயே தகுந்த சிகிச்சையும், உடற்பரிசோதனையும் செய்துவிட்டுத்தான் விமானம் ஏறியிருக்கிறார். ரியலிட்டி ஷோவில் ஒரு நாள் ஷில்பாவுக்கு வந்த போன் கால் அவருடைய வாழ்க்கையின் முடிவுரையைச் சொன்னது.. அந்தக் காட்சியை நான் அப்போதே தொலைக்காட்சியில் பார்த்து பேச்சு மூச்சில்லாமல் போனேன். லண்டனில் அவர் செய்துவிட்டு வந்த உடற்பரிசோதனையின் முடிவுகளை அந்த மருத்துவர் தொலைபேசியில் ஜேட்கூடியிடம் சொல்கிறார், "உன்னைத் தாக்கியிருப்பது புற்று நோய். நீ இன்னும் கொஞ்ச நாள்தான் உசிரோட இருக்கப் போற.." - இந்த உண்மையை யாரால் தாங்கிக் கொள்ள முடியும்..? அதுவும் அம்மா என்கிற கடமையிருக்கிற ஒரு தாய்க்கு.. ஜேட்கூடி மருத்துவர் சொன்னதைக் கேட்டு கதறி அழுததையும், பின்பு வெளியே வந்து தனது சக போட்டியாளர்களிடம் இதைச் சொல்லி அழுவதையும் பார்த்தபோது பரிதாபமாக இருந்தது. என்னிடமே இப்போது இந்த வார்த்தையை மருத்துவர் சொன்னால் நான் என்ன ரியாக்ட் செய்வேன் என்பதை என்னால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. மும்பை வந்தபோது புன்சிரிப்போடும், உவகையோடும் வந்த ஜேட்கூடி நாடு திரும்பும்போது இருந்த வேதனையை மறைத்துக் கொண்டு சிரித்தபடியே போஸ் கொடுத்துவிட்டுத்தான் போனார். லண்டனில் இதன் பின்புதான் ஒரு பெரிய அலையே அடித்திருக்கிறது. அங்கிருந்த மீடியாக்கள் ஜேட்கூடியின் அன்றைய மெடிக்கல் ரிப்போர்ட் என்று தலைப்பிட்டே செய்திகளை மக்கள் மத்தியில் கொண்டு போயிருக்கிறது. இதன் விளைவு என்ன தெரியுமா? லண்டனில் இருக்கின்ற இளம் வயதுப் பெண்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஜேட்கூடிக்கு வந்திருந்த கர்ப்ப் பை புற்றுநோய்க்கான ஆரம்பக் கட்ட சோதனைகளை தங்களுக்குச் செய்து கொண்டார்களாம்.. இவர்களுடைய இந்த விழிப்புணர்வுக்குக் காரணம் ஜேட்கூடிதான்.. அந்த வகையில் அவர்கள் ஜேட்டுக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். நோயோடு போராடிக் கொண்டே சிரித்த முகத்தோடு தினந்தோறும் ஏதாவது ஒரு டிவியிலோ, பத்திரிகையிலோ பேட்டியளித்தவண்ணமே இருந்துள்ளார் ஜேட். அவர் இதன் மூலம் பணம் சம்பாதித்தார் என்றுகூட வைத்துக் கொள்ளுங்கள். பத்திரிகைகளும் அவரை வைத்து சம்பாதிக்கத்தானே செய்தன. அவரைப் பற்றியப் பரபரப்புச் செய்திகளை போட்டி போட்டுக் கொண்டு எழுதினார்களே.. சர்க்குலேஷனும், டிவி ரேட்டிங்கும் ஏறாமலா இருந்திருக்கும்.. மேலே சொன்னபடி குடும்பத்தார் சொல்லியும் கேட்காத இளசுகள் நேரில் பார்த்த ஒரு அனுபவம் தந்த பயத்துடன் மருத்துவமனைக்கு ஓடியிருக்கிறார்களே.. இது நல்ல விஷயம்தானே.. ஒன்றும் தவறில்லை. இந்த நேரத்திலும் அவர் தனக்குள் இருந்த காதலை மறைக்கவில்லை. வெளிப்படையாகச் சொன்னார். அவரைவிட ஆறு வயது குறைந்த Tweed என்கிற இளைஞருடனான அவரது காதல் கல்யாணம் வரைக்கும் சென்றது.. இருக்கப் போவது எத்தனை நாட்கள் என்பது தெரியாத நிலையிலும் தனது குழந்தைகளுக்கென்று ஒரு பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவும், தனது காதலை நிரூபிப்பிதற்காகவும் அவர் எடுத்த கல்யாண முடிவை வாழ்த்தியே ஆக வேண்டும். பிப்ரவரி 22-ம் தேதி தனது காதலரைக் கைப்பிடித்தார். நோயின் தாக்கத்தால் தலைமுடியினை இழந்து உடல் தளர்ந்து இருந்த நிலையிலும் அவருடைய உற்சாகம் மாறாத திருமண நடவடிக்கைகளையும், ஓய்வு இல்லாத பேட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகளையும் பார்த்தபோது ஆச்சரியம்தான் விளைகிறது. மரணத்தை இவ்வளவு இலகுவாக வரவேற்கிறாரே.. எளிதாகக் கையாளுகிறாரே என்று ஆச்சரியப்பட்டேன். அவருடைய முன்னாள் காதலரான Jeff Brazier மூலம் பிறந்த தனது 2 பையன்களுக்கும் இந்த மாதம் 7-ம் தேதிதான் கிறிஸ்துவ தேவாலயத்தில் பாப்டிஸம் செய்துவைத்துள்ளார். தாய்க்குரிய தனது கடமைகளை செவ்வனே செய்தே தீர வேண்டும் என்கிற அவரது கடமையுணர்ச்சியை நாம் பாராட்டியே ஆக வேண்டும். நோய் முற்றி படுத்த படுக்கையான பின்பு தான் மருத்துவமனையில் இறக்க விரும்பவில்லை என்று சொல்லி தனது இல்லத்திற்கு வந்து ஒரு அறையில் ஜன்னலோரமாக வானத்தைப் பார்த்தபடியே படுத்திருந்திருக்கிறார். இனிமேல் தன்னை தனது குடும்பத்தினர் தவிர வேறு யாரையும் சந்திக்க அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டுள்ளார். இது அத்தனை பேரும் நினைப்பதுதான். தான் நன்றாக இருக்கும்போது பார்த்து ரசித்தவர்கள், தான் துன்பப்படுவதைப் பார்த்து வருத்தப்பட்டுவிடக்கூடாது.. அந்தக் கோலம் அவர்கள் மனதில் நிற்கக்கூடாது என்றுதான் நினைப்பார்கள். அதனைத்தான் இவரும் செய்திருக்கிறார். இதனால் ஜேட் கூடியைப் பார்ப்பதற்காகவே லண்டன் சென்ற ஷில்பா ஷெட்டியால்கூட அவரைப் பார்க்க முடியாமல் போய்விட்டது. லண்டன் மீடியாக்கள் தினந்தோறும் அவரது உடல் நிலை பற்றிய செய்திகளை அப்டேட் செய்தபடியே இருந்துள்ளன. வீட்டு வாசலில் எந்நேரமும் மீடியாக்கள் நிறுத்தப்பட்டு அவரது மரணச் செய்தி எதிர்பார்க்கப்பட்டுள்ளது. கொஞ்சம் சிரிப்பு வந்தாலும், அதிகமான கோபம் வந்தாலும் இது போன்றவற்றை பிரபலப்படுத்தியே ஆக வேண்டும் என்றுதான் நானும் நினைக்கிறேன். அவர் சும்மா வெறுமனே வயோதிகத்தால் இறக்கவில்லை. கொஞ்சம், கொஞ்சமாக அவரைத் தாக்கிய நோய் அவரைக் கொன்று கொண்டிருக்கிறது. அந்த நோய் பற்றிய அறிவு இந்நேரம் அதைப் பற்றியே கவலைப்படாதவர்களைக்கூடச் சென்றடைந்திருக்கும்.. தனது குழந்தைகளைக்கூட தனது சாவைப் பார்த்துவிடக்கூடாது என்று அவர்களை கூட்டிச் சென்றுவிடச் சொல்லியிருக்கிறார். சாவரசனுடன் ஒரு நீண்ட போராட்டம் நடத்தி ஓய்ந்து போன ஜேட்கூடி, நேற்று நள்ளிரவு 3 மணி 14-வது நிமிடத்தில் தூக்கத்திலேயே இறந்து போயிருக்கிறார். இந்த நாளில் வேறொரு விசேஷமும் உண்டு. 'அம்மாக்கள் நாள்' என்று வரலாற்றில் தன்னைப் பெற்றெடுத்தத் தாய்க்குலங்களை நினைத்துப் பார்க்கும் ஒரு நாள்.. இன்றைக்கே இந்தத் தாயின் உயிர் போயிருக்கிறது.. பொருத்தமாகத்தான் உள்ளது.. இவருடைய வாழ்க்கைப் பாதையில் நிறைய கெட்ட சம்பவங்கள் நடந்திருக்கலாம்.. நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாத விஷயங்கள் இருந்திருக்கலாம்.. அதெல்லாம் இனிமேல் ஒருபோதும் நமக்குத் தேவையில்லை.. எந்தவொரு நோயும் நாடு, இனம், மொழி, ஜாதி, ஏழை, பணக்காரன் என்று பார்த்து வருவதில்லை.. வந்த பின்பு அது கொடுக்கும் துன்பத்தை அனுபவிப்பவர்களை பாவப்பட்ட மனிதர்கள் என்கிற ஒரேயொரு அமைப்பில்தான் சேர்க்க முடியுமே தவிர.. அவர்களுக்கு வேறு ஒரு அடையாளத்தை நம்மால் உருவாக்க முடியாது.. வலைப்பதிவர்களுக்கு நன்கு தெரியும்.. நமது சக வலைப்பதிவரான அனுராதா அம்மா எத்தனை துன்பங்களைத் தாங்கிக் கொண்டு, தான் பட்டத் துன்பங்களை பிறரும்படக்கூடாது என்பதற்காக, அதனை வெளிச்சம் போட்டுக் காட்டி எத்தனை, எத்தனையோ கஷ்டங்களுக்கு மத்தியிலும் தனது துன்பங்களை பதிவு செய்து வைத்தாரே.. மறக்க முடியுமா..? நான் என்னுடைய குடும்பத்தினரிடமும் அந்த நோயைப் பற்றிச் சொல்லி உடல் பரிசோதனை செய்யச் சொன்னேன்.. சிலர் செய்திருக்கிறார்கள். பலர் படித்துவிட்டு அழுதிருக்கிறார்கள். “பாதிதான் சரவணா படிச்சேன்.. படிக்க முடியல சரவணா..” என்று சில அக்காமார்கள் சொன்ன போது நெகிழ்ந்து போனேன்.. இது போன்ற விழிப்புணர்வுகள் நமக்கு மிக மிகத் தேவைகள்.. எவ்வளவுதான் புத்தகங்கள் அறிவைக் கொடுத்தாலும், அனுபவ அறிவைவிட மிகப் பெரிய அறிவு வேறில்லை. அனுபவப்பட்டவர்கள் சொல்லும்போதுதான் அந்த பிரச்சினையின் விஸ்வரூபம் மற்றவர்களுக்குப் புரிகிறது.. ஏற்றுக் கொள்கிறார்கள். தீர்க்க முயல்கிறார்கள். முதலில் அனுராதா அம்மா, இப்போது ஜேட்கூடி என்று சிலருக்கு வரக்கூடிய நோய்களைக்கூட தடுக்கும் தெய்வங்களாக மாறியிருக்கிறார்கள்.. நான் ஏன் இதை உருகி, உருகி எழுதுகிறேன் என்றால் இந்தக் கொடுமையை என் கண்ணார நேரில் கண்டவன் நான். எனது தாய் ஜேட்கூடிக்கு வந்த அதே கர்ப்பப் பை புற்றுநோயால்தான் துடிதுடித்து இறந்து போனார். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்கள் நான் எந்த வேலை, வெட்டிக்கும் போகாமல் அவர் பக்கத்திலேயே அமர்ந்து தாதி போல் வேலை செய்து அவருடைய துன்பங்களை பார்த்து, பார்த்து மனம் இறுகிப் போய்விட்டது. "முருகா சீக்கிரமா கூப்பிட்டுக்கக் கூடாதா..?" என்று நானும், எனது தாயும், முருகனை வேண்டாத நாளில்லை. அப்படியும் நேரம் வரவில்லை என்று சொல்லி கிட்டத்தட்ட ஒன்றரை வருடம் நாய் படாதபாடு படுத்திய பின்புதான் எனது தாயை அழைத்துக் கொண்டான். அந்த அனுபவத்தின் வாயிலாகத்தான் ஜேட்கூடியை நான் பெரிதும் பாராட்டுகிறேன். நோய் வந்ததை மறைத்து வைத்து சிகிச்சை பெற்றுக் கொள்ளாமல் வெளிப்படையாகச் சொல்லி மற்றவர்களுக்கும் தெரியப்படுத்தி அவர்களையும் தயார்படுத்திவிட்டு தனது குடும்பத்தினருக்கும் லட்சணக்கணக்கான மக்களின் அனுதாபத்தைப் பெற்றுக் கொடுத்துவிட்டு போய்ச் சேர்ந்திருக்கிறார் அந்த புண்ணியவதி.. அவருடைய ஆன்மா சாந்தியடையட்டும்..

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com