Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

14 மார்ச் 2009

சன்ஸில்க் மிஸ் செளத் இந்தியா-தீபிகா!

சன்ஸில்க் மிஸ் செளத் இந்தியா 2009 போட்டிகள் சென்னையில் நடந்து. இதில் பெங்களூரைச் சேர்ந்த தீபிகாவுக்கு மகுடம் சூட்டப்பட்டது. 2002ம் ஆண்டு முதல் வெற்றிகரமாக நடந்து வரும் அழகிப் போட்டி இந்த மிஸ் செளத் இந்தியா. இந்த ஆண்டுக்கான போட்டி சென்னை நந்தம்பாக்கம் டிரேட் சென்டரில் நடந்தது.
திரையுலகைச் சேர்ந்த ரகுமான், ரியாஸ்கான், இயக்குனர் மாதேஷ், சன்ஸில்க் ஜாவேத் ஆகியோர் நடுவர்களாக அமரந்திருந்தனர். இசையமைப்பாளர் விஜய் ஆன்டனி, தேவயானி, ஷெரீன், சாந்தனு, அசோக், சிபிராஜ் உள்ளிட்ட திரையுலகப் பிரமுகர்களும் இதில் கலந்து கொண்டனர்.இறுதிப் போட்டிக்கு தென்னிந்தியாவின் 4 மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான அழகிகளிலிருந்து தலா 4 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு அறிமுகச் சுற்று, தகுதி சுற்று மற்றும் கேள்வி பதில் சுற்று ஆகிய மூன்று சுற்றுகளில் போட்டிகள் வைக்கப்பட்டு அதன் அடிப்படையில் மிஸ் தமிழ்நாடாக அனுஷாவும், மிஸ் ஆந்திராவாகவும் ஸ்வேதாவும், மிஸ் கேரளாவாக அகான்ஷாவும் மிஸ் கர்நாடகாவாக ஜாஸ்மினும் தேர்வு செய்யப்பட்டனர்.பின்னர் மிஸ் செளத் இந்தியாவாக பெங்களூரைச் சேர்ந்த தீபிகா தேர்வு செய்யப்பட்டார்.
இரண்டாவது இடத்தை ஜாஸ்மினும், மூன்றாவது இடத்தை விஜயவாடாவைச் சேர்ந்த சௌமியாவும் பிடித்தனர்.இவர்களுக்கு நடிகை ரம்யா கிருஷ்ணன் கிரீடம் சூட்டினார்.இந்த அழகிப் போட்டியை தொடர்ந்து 9 ஆண்டுகளாக நடத்தி வருகிறது மாயா ஈவன்ட்ஸ் நிறுவனம். நிகழ்ச்சிகளை விஜய் ஆதிராஜ் தொகுத்து வழங்கினார்.

13 மார்ச் 2009

டுவென்டி-20 உலக கோப்பை: கேப்டன் சங்ககரா

இலங்கை கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜெயவர்ததனே விலகியதை அடுத்து டுவென்டி-20 உலக கோப்பை தொடருக்கான புதிய கேப்டனாக சங்ககரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை கேப்டனாக முத்தையா முரளிதரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சமீபத்தில் இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரு நாள் தொடரை 4-1 என வென்று அசத்தியது. சொந்த மண்ணில் அடைந்த படுதோல்விக்கு பொறுப்பேற்று இலங்கை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜெயவர்த்தனே அறிவித்தார்.பாகிஸ்தான் தொடருக்கு பின் புதிய கேப்டன் நியமிக்கப்படுவார் என இலங்கை கிரிக்கெட் வாரியம் தெரிவித்தது. இந்நிலையி்ல் இலங்கை வீரர்கள் லாகூரில் தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ஆளானார்கள். இதையடுத்து தொடர் ரத்து செய்யப்பட்டது.
இந்த அதிர்ச்சியில் இருந்து இலங்கை வீரர்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருகின்றனர்.இந்நிலையில் வரும் ஜூன் 5ம் தேதி துவங்கவிருக்கும் உலக கோப்பை டுவென்டி-20 தொடருக்கான இலங்கை அணியின் கேப்டனாக சங்ககரா தேர்வு செய்யப்பட்டுள்ளார். துணை கேப்டனாக முரளிதரன் அறிவிக்கப்பட்டுள்ளார்.கடின சுற்றில் இலங்கை...டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் இலங்கை சி பிரிவில், ஆஸ்திரேலியா மற்றம் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுடன் இடம்பிடித்துள்ளது. மற்ற இரண்டு அணிகளும் சிறப்பாக விளையாட கூடியவை என்பதால் புதிய கேப்டன் சங்ககராவுக்கு முதல் தொடரே சவாலானதாக இருக்கும்.
இத்தொடருக்கான உத்தேச இலங்கை வீரர்கள் பட்டியலும் நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஜெயசூர்யா, ஜெயவர்த்தனே, தில்ஷன், சமிந்தா வாஸ், மெண்டிஸ் உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.டுவென்டி-20 உலக கோப்பை தொடரில் இந்திய அணி ஏ பிரிவில் வங்கதேசம் மற்றும் அயர்லாந்து அணிகளுடன் இடம்பெற்றுள்ளது.

நயன்தாராவுடன் மோதலா?-தமன்னா

கோடம்பாக்கத்தின் இன்றைய ஹாட் 'ஒல்லிக்குச்சு உடம்புக்காரி' தமன்னாதான். கேடி படத்தில் அறிமுகமாகி, அந்தத் தோல்வியில் காணாமல் போய், சின்ன இடைவெளிக்குப் பின் கல்லூரி மூலம் புதிய வாழ்க்கை பெற்றார்.தனுஷ் ஜோடியாக அவர் நடித்த படிக்காதவன் சுமாரான படமாக இருந்தாலும், கமர்ஷியலாக ஓடிவிட்டதில் தமன்னா மீது ராசி முத்திரை விழுந்துவிட, அடுத்தடுத்து வெயிட்டான படங்களில் நடிக்கிறார் அம்மணி.அடுத்தடுத்து அவர் நடித்துள்ள அயன், ஆனந்தத் தாண்டவம் என இரு பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீசுக்குக் காத்திருக்கின்றன. சமீபத்தில் இரு புதிய படங்களில் நடிக்க கையெழுத்திட்டுள்ளார் தமன்னா.அதில் ஒன்று லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் பையா. பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்தப் படத்தில் முதலில் நயன்தாரா நடிக்கவிருந்தததும், பின்னர் சம்பள விவகாரத்தில் ஒத்து வராமல் அவர் விலகியதால் அந்த ரோலில் தமன்னா ஒப்பந்தமானதும் ரசிக மகா ஜனங்களுக்குத் தெரிந்ததே. நயன்தாராவுக்குப் பதில் ஒப்பந்தமானதெல்லாம சரிதான். நயன்தாராவுக்கு இணையான கவர்ச்சி (!) காட்டி நடிப்பாரா தமன்னா என்ற ஒரு சந்தேகம்.நேற்று ஒரு படத்தின் பூஜைக்கு வந்திருந்த தமன்னாவிடம் நயனதாராவுக்கு போட்டியாக கவர்ச்சியி்ல் குதிப்பீர்களா என்று நிருபர்கள் கேட்க, அதற்கு தமன்னா சொன்ன பதில்: பையா படத்தில் நயன்தாராவுக்கு பதில் நான் ஒப்பந்தமானது ஒரு சின்ன விஷயம். நயன்தாரா சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்கவில்லை. அவருக்கு பதில் வேறு யாராவது ஒரு நடிகை அந்த படத்தில் நடித்தே ஆகவேண்டும். அதற்காக என்னை தேர்வு செய்தார்கள்.மேலும் பையா படத்தின் கதையும் எனக்குப் பிடித்து இருந்தது. நான் கேட்ட சம்பளத்தை தயாரிப்பாளர் கொடுத்தார். அதனால் அந்த படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறேன். ஒரு படத்தில் நடிக்க இதைவிட வேறென்ன வேண்டும்? .இதனால் எனக்கும் நயன்தாராவுக்கும் பிரச்சனை என்பது அர்த்தமில்லாதது. மேலும் நான் அதிக சம்பளம் கேட்பதாகக் குற்றம் சாட்டுகிறார்கள். இதில் ஆதாரம் ஏதுமில்லை. என் வேலைக்கு ஏற்ற சம்பளம் கேட்கிறேன். இதில் என்ன தவறு இருக்கிறது? .தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னி என என்னைக் குறிப்பிடுவதில் சந்தோஷம்தான். ஆனால் என்னைப் பொறுத்தவரை நான் ஒரு சாதாரணப் பெண். நான் ஜோடி சேரும் புதிய கதாநாயகன் இப்போது பரத்-தான். அவருடைய உடற்கட்டு எனக்குப் பிடித்துள்ளது. அவருக்குப் பொருத்தமான ஜோடியாக இருப்பேன் என நம்புகிறேன்.குண்டு, ஓல்லி என்ற அளவைத் தாண்டி நான் ரசிகர்கள் மனதில் நிலைப் பெற்றுவிட்டது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். சூர்யா, கார்த்தி ஆகிய இருவருடனும் ஜோடியாக நடிக்கிறேன். சூர்யா, ஜென்டில்மேன். ரொம்ப எளிமையானவர். கார்த்தி, ஜாலியானவர் என்றார் தமன்னா.

12 மார்ச் 2009

விரும்பிய software ஐ potable ஆக மாற்றுவது எப்படி ?

சில நிறுவனங்களில் அல்லது Browsing center களில் எமக்கு தேவையான Software ஐ Install பண்ணி இருக்க மாட்டார்கள் எம்மையும் Install பண்ண விட மாட்டார்கள். அவ்வாறான இடம்களில் தான் potable software கைகொடுக்கும். ஆனால் எமக்கு தேவையான Potable software எங்கு தேடியும் கிடைக்காவிட்டால் !!!!! அதற்குத்தான் ஒரு software ஐ potable ஆக மாற்ற எமக்கு தெரிந்திருந்தால் எவ்வளவு வசதி ஒரு software எப்படி potable ஆக மாற்றுவது என்று பார்ப்போம்.
தேவையான மென்பொருட்கள்
1. Universal Extractor Download Here
2. WinRar Download Here
இவ்விரு Software களையும் install பண்ணிய பின்
Potable ஆக மாற்ற விரும்பிய software இன் setup file மேல் mouse pointer ஐ வைத்து Right click செய்து அதில் uniExtract to subdir கிளிக் செய்யவும்.
அது தானாக extract ஆகி அந்த setup ப்ரோக்ராம் இன் பெயரில் புது folder உருவாக்கி இருக்கும்.
அந்த folder இன் உள் அனேகமாக {app} என்ற folder இருக்கும் அல்லது extract பண்ணி வந்த folder ஏதாவது ஒன்றில் potable ஆக மாற்ற விரும்பிய software இன் .exe file இருக்கும்
அந்த folder இல் உள்ள அனைத்து file களையும் select செய்து எதாவது ஒரு File இன் மேல் mouse இ வைத்து right click செய்து Add to Archive இ கிளிக் செய்யவும்.
அதில் Archive name என்ற இடத்தில் software இன் பெயரையும் Compression method இல் Best என்பதையும் Create SFX archive என்பதையும் Select செய்யவும்.
Advanced tab இல் SFX option என்ற பட்டன் click செய்யவும்.
அதில் Run after extraction அந்த Folder இல் காணப்படும் .exe file இன் பெயரை டைப் செய்யவும் (folder இல் காணப்படும் .exe file லை rename செய்து பெயரை copy செய்து paste செய்தல் நன்று )
modes என்ற tab இல் உள்ள hide all ஐ உம் Overright all files ஐயும் Select செய்யவும்.பின் Text and icon என்ற tab இல்Load SFX icon from the file இல் நீங்கள் potable software இக்கு கொடுக்க விரும்பும் icon file select செய்து ok பட்டன் click செய்து வெளியேறவும் தானாகவே உங்கள் கோப்பை சுருக்கி potable software ஆக மாற்றித்தரும் முயற்சி செய்து பார்த்து விட்டு உங்கள் கருத்தை எனக்கு அனுப்புங்கள்

11 மார்ச் 2009

பார்வதியின் புலம்பல்!

உலக அழகிப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற என்னை வரவேற்காதது மட்டுமல்ல, போனில் வாழ்த்தக் கூட ஆளில்லையே, என்ற அழாத குறையாக குமுறுகிறார் பார்வதி ஓமணக்குட்டன். மிஸ் இந்தியா அழகியும், உலக அழகி போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்டு 2-வது இடத்தை பிடித்தவருமான பார்வதி ஓமனகுட்டனின் சொந்த ஊர் கேரளா. ஆனால் அவர் படித்து வளர்ந்தது எல்லாம் மும்பையில்தான். இந்த நிலையில் கேரள, மாரட்டிய அரசுகள் தன்னை அங்கீகரிக்கவில்லை என பார்வதி ஓமனகுட்டன் புகார் கூறியுள்ளார். இதுதொடர்பாக திருவனந்தபுரத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: உலக அழகிப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றும் கேரள அரசு என்னை அங்கீகரிக்கவில்லை. வேறு யாராவது உலக அழகி போட்டியில் கலந்து கொண்டு விட்டு ஊர் திரும்பினால் அதை முக்கிய சம்பவமாக கருதி திருவிழா போல கொண்டாடியிருப்பார்கள். ஆனால் நான் ஊர் திரும்பிய பின்னரும் கூட கேரள அரசு சார்பில் யாரும் என்னிடம் போனில் கூட வாழ்த்து தெரிவிக்கவில்லை. அது போலத்தான் நான் வளர்ந்த மாநிலமான மராட்டிய அரசும் என்னை புறக்கணித்துவிட்டது. ஒருவேளை நான் மும்பையில் பிறந்திருந்தால் என்னை அங்கீகரித்திருப்பார்களோ என்னவோ... பொதுவாக அரசுகள் கிரிக்கெட் வீரர்களுக்கும், சினிமா கலைஞர்களுக்கும் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றன. எங்களைப் போன்ற சாதனையாளர்களைக் கண்டு கொள்வதில்லை, என்றார் பார்வதி. அழகிகளை இப்படி அழவைப்பது அழகா...?

10 மார்ச் 2009

விபச்சாரம்: மாளவிகா மேனேஜர் கைது

துணை நடிகைகளை விபச்சாரத்தில் ஈடுபடுத்தியதாக நடிகை மாளவிகாவின் மேனேஜர் முனுசாமியை சென்னை மாநகர போலீசார் கைது செய்தனர். சென்னையில் விபசார தொழிலில் ஈடுபடுவோரைப் பிடிக்கும் நடவடிக்கைகளை கமிஷனர் ராதாகிருஷ்ணன் தீவிரப்படுத்தியுள்ளார். துணை கமிஷனர் விஜயகுமார், உதவி கமிஷனர் பைசர் சாலி ஆகியோரது மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செல்லப்பா தலைமையிலான விபச்சார தடுப்பு போலீசார் அடிக்கடி விடுதிகள் மற்றும் திரைப்படத் துறையினர் அதிகமாகத் தங்கும் தனி கெஸ்ட் ஹவுஸ்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தி.நகரில் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் துணை நடிகை ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபடுவதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. 19 மாடிகளை கொண்ட அந்த நட்சத்திர ஓட்டலில் 14வது மாடியில் உள்ள ஒரு அறையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது அங்கு 25 வயது இளம் பெண்ணுடன் தங்கியிருந்த முனுசாமி (51) என்பவரை கைது செய்தனர். இவருடன் தங்கியிருந்த பெண்ணின் பெயர் விசாலாட்சி என்ற ஜூலி (26). டிவி நடிகையான இவர் அரசி உள்பட பல தொடர்களில் நடித்து வருகிறார். அரசி தொடரில் அரவாணி வேடத்தில் வரும் பப்லுவின் தங்கையாக இவர் நடித்துள்ளதாக போலீசார் கூறினர். மேலும் காமெடி பஜார், கோகிலா ஆகிய தொடர்களிலும் நடித்துள்ளார். புரோக்கர் முனுசாமி, ஜூலியை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதற்காக ஹோட்டலில் தங்க வைத்திருப்பது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இருவரையும் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள விபச்சார தடுப்பு பிரிவு போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்ற போலீசார் புரோக்கர் முனுசாமியை கைது செய்தனர். கைதான முனுசாமியின் சொந்த ஊர் திருச்சி. கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு வில்லிவாக்கத்தில் குடியேறிய இவர் தயாரிப்பாளர் ஒருவரிடம் அலுவலக உதவியாளராக சேர்ந்துள்ளார். பின்னர் ரோசாப்பூ ரவிக்கைக்காரி படத்தில் நடித்த நடிகை தீபாவிடம் உதவியாளராகப் பணி புரிந்துள்ளார். நடிகைகள் சிம்ரன், மாளவிகா ஆகியோரிடம் மானேஜராக பணி புரிந்தவர் இந்த முனுசாமி என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சுந்தர் சி.நடிக்கும் முரட்டுக்காளை படத்தில் நடித்து வரும் சிந்து துலானியிடம் உதவியாளராக இருந்துள்ளார். கடந்த பல ஆண்டுகளாக துணை நடிகைகளை இவர் விபசாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளதை போலீசாரிடம் முனுசாமி ஒப்புக் கொண்டு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

ஆடி-யின் 'க்யூ 5' சொகுசு கார் இந்தியாவில் அறிமுகம்

ஜெர்மனியின் சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, அதன் புது மாடல் ' க்யூ 5 ' காரை வரும் ஜூன் மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்கிறது. சர்வதேச அளவில் கார் சந்தை சரிவில் இருந்தாலும், ஆடி நிறுவனம் அதன் நவீன மாடல் காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய முன் வந்துள்ளது. இந்த அழகிய ஜெர்மனி காரின் சில படங்கள் ! Image Image Image

அனுஷ்காதான் இப்போ டாப்!

கோடம்பாக்கத்தின் இன்றைய ஹாட் அனுஷ்காதான். ஆந்திராவிலிருந்து வந்தாலும் அம்மணி இயல்பில் மிளகாய் அல்ல... ஜிலுஜிலு ஐஸ்க்ரீம். கவர்ச்சி என்று சொல்லி வாய்மூடும் முன்பே கையில் பிகினியோடு நிற்கும் புரட்சி நடிகையான அனுஷ்காவைதான் விஜய் தொடங்கி ஜேகே ரித்தீஷ் வரை கேட்கிறார்கள், ஜோடியாக. அதிலும் வேட்டாக்காரன் படத்தில் ஒப்பந்தமான பிறகு, தனுஷ், சிம்பு, விஷாலே என இவரது கால்ஷீட்டுக்காகக் காத்திருக்கும் ஹீரோக்கள் பெயர்களை எழுதினால் ஒரு தனி பட்டியலே தேறும். கோடம்பாக்கத்தில் ஒரு சின்ன இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் அவரது இலக்கு என்ன? வேற என்ன.. கைநிறைய நல்ல படம், பை நிறைய பணம்... இதுக்கு வஞ்சனையில்லாம நடிச்சுக் கொடுப்பேன். நிச்சயம் யாரும் குறை சொல்லாத அளவுக்கு நல்ல நடிகையா நிலைப்பேன். அந்த நம்பிக்கை வந்த பிறகுதான் பல தெலுங்குப் பட வாய்ப்புக்களைக் கூட உதறிவிட்டு கோடம்பாக்கத்துக்கு குடி வந்திருக்கிறேன், என்கிறார் அனுஷ்கா. கவலைப்படாதீங்க... அக்கட தேசத்தில விட்டதை வட்டியும் முதலுமா இங்க பிடிச்சிடலாம்...!!

09 மார்ச் 2009

தமிழ் திரை உலகின் இசையமைப்பாளர் + பாடலாசிரியர் கூட்டணிகள் -ஒரு அலசல்

தமிழ் சினிமா உருவாகி 75 வருட காலம் ஆகிறது. உலகில் நவீன விடயங்கள் வர வர தமிழ் சினிமாவும் நவீனமயப்படுத்தப்பட்டு வருகிறது. இது இசைத்துறைக்கும் பொருந்தும் , ஒரு திரைப்படம் வெற்றி பெறுவதற்கு அத்திரைப்படத்தின் இசை முக்கியமானதாகும். ஒரு திகில் திரைப்படத்துக்கு பின்னணி இசை எவ்வளவு முக்கியமானதோ , பாடல்களுக்கும் முக்கியமானதாகும்.
முன்பொரு கால கட்டத்தில், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் + கண்ணதாசன் என்ற கூட்டணி தமிழ் திரையிசை உலகை ஆக்கிரமித்து ஆட்சி செய்துகொண்டிருந்தது. இந்த கூட்டணி தொட்டதெல்லாம் துலங்கியது. இந்த கூட்டணியின் இசையலை ஓயும் கட்டத்தில் , புதிய கூட்டணியாக உருவெடுத்ததுதான் இளைய ராஜா + வைரமுத்து கூட்டணி.இந்த கூட்டணியின் இணைப்பும் ஒரு புதிய பரிணாமத்தை தமிழ் திரை உலகில் ஏற்படுத்தியது. எண்பதுகளின் ஆரம்பத்தில் வெளிவந்த பல தமிழ்த் திரைப்படங்கள் வெற்றிகரமாக ஓடுவதற்கு இவர்களின் கூட்டமைப்பில் வெளிவந்த பாடல்கள் மட்டுமே காரணமாக இருந்த ஒரு கால கட்டமும் இருந்தது. இன்றும் பல உதடுகள் முணுமுணுக்கும் மனது மறக்காத பல பாடல்கள் இளையராஜா + வைரமுத்து கூட்டணியில் வெளிவந்தவைதான்.
அலைகள் ஓய்வதில்லை, நினைவெல்லாம் நித்யா , கால் ஓவியம்,முதல் மரியாதை என்று வெற்றித் திரைப்படங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இதற்கிடையில் வைரமுத்து , இளையராஜாவுக்கு இடையில் ஏற்பட்ட சிறிய பிளவு பெரிதாக்கப்பட , தமிழ் திரையிசை உலகின் பொற்கால கூட்டணி உடைந்து போனது.
அதன் பின்னர் வந்த 10, 15 ஆண்டுகளுக்கு இளையராஜா இசையமைத்த திரைப்பட பாடல்களில் பாடல் வரிகளை விட இசையே அதிகமாக பேசப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 90 களில் உருவான மற்றொரு இசை கூட்டணி மீண்டும் ஒரு புத்தெழிச்சியையும்புத்துணர்ச்சியையும் தமிழ் திரை உலகில் கொண்டு வந்தது .இந்த இருவர்கூட்டணியில் முதல் பாடலே தேசிய விருதைப் பெற்றுக் கொண்டதோடுஇன்னும் பல தேசிய விருதுகளையும் அள்ளிக் கொண்ட வைரமுத்து + ரஹ்மான்கூட்டணிதான் அது. தமிழ் திரை உலகை எல்லைகள் தாண்டி கொண்ண்டு சென்றபெருமையும் இந்த கூட்டணிக்கு உண்டென்றால் அது மிகையல்ல.
எனினும் அதிக திரைப்படங்கள் வெளிவரும் மும்முரமும் வித்தியாசமானரசனைகளை ரசிகர்களும் தயாரிப்பாளர்களும் ஏன் இசையமைப்பாளர்களுமேவிரும்பிய காரணமும் புதிய பல பாடலாசிரியர்களை தமிழ் திரையுலகில்காணுவதற்கு காரணமாக அமைந்தது.அத்துடன் புதுமை விரும்பிகளான பலஇயக்குநர்கள் அறிமுகப்படுத்திய பல புதிய இசையமைப்பாளர்கள் தங்கள்அலைவரிசைக்கு ஒத்துப் போகக்கூடிய தங்கள் எண்ணக் கருத்துக்களைசுருக்கமான நவீனத்துவமான தமிழில் கொண்டுவரக்கூடிய காத்திரமானபடைப்பாளிகளை தேடிப்பிடிக்க ஆரம்பித்தனர் . இவர்களில் வித்தியாசாகர் , யுவன்சங்கர்ராஜா , ஹரிஸ் ஜெயராஜ் போன்றோர் தங்கள் இசைகளைநவீனத்துவப் படுத்தியது மட்டுமல்லாமல் , அது ரசிகர்களை ஈர்த்து எடுப்பதற்குமிக முக்கியமான பாலமாக தரமான நவீனத்துவப் பாணியில் அமைந்த பாடல்வரிகளை பயன்படுத்திக்கொண்டனர்.அது வெற்றியும் கண்டது. இதில் ஆச்சரியமான விடயம் என்னவென்றால் இந்த 3 முன்னணிஇசையமைப்பாளர்களுமே தங்களது ஆஸ்தான கவிஞர்களாக வெவ்வேபட்டஇளம் கலைஞர்களை பயன்படுத்தி வெற்றிக்கான பாதையை வழிவகுத்துக்கொண்டனர். இதில் பா.விஜய் , யுகபாரதி ,கபிலன் , அறிவுமதி என்று ஒருபரந்துபட்ட கவிஞர் பட்டாளத்தை அறிமுகப்படுத்தியும் பிரபல்யப்படுத்தியும் தனது தனி முத்திரையை பதித்தார் இசையமைப்பாளர் வித்தியாசாகர். யுவன்சங்கர்ராஜா, முத்துக்குமாரை தன் நவீனத்துவ இசைவடிவங்களுடன்நேர்த்தியான முறையில் கையாண்டு பாராட்டுக்களை வென்றெடுத்ததோடு, மிககுறுகிய காலத்தில் காத்திரமான பாடல்களை வழங்க்கியுமிருந்தார். ஹரிஸ் ஜெயராஜ் + தாமரை கூட்டணி இன்னுமொரு வெற்றிக் கூட்டணி "மின்னலே" திரைப்படத்திலிருந்து 'அயன் ' வரை தொடர்ந்தும்வெற்றிகரமான ஜனரஞ்சகமான , அதே நேரத்தில் தரமான பாடல்களை இவர்களின் இணைப்பில் கேட்டு ரசித்துக் கொண்டிருக்கிறோம். இந்த கூட்டணிகளில் உயர்ந்த ரசனை மட்டத்திலும் அதேவேளை ஜனரஞ்சக தரத்திலும் மிகுந்த பாடல்களை தரும் கூட்டணிகள் ஜெயித்துக்கொண்டுதான் இருக்கின்றன. முன்னைய பொற்கால கூட்டணிகளை இந்த கூட்டணிகள் நிகர்க்கும் காலம் வெகு தொலைவில் இல்லையென்பதை நாம் துணிந்துசொல்லலாம். '

சனா..தனக்குத் தானே!

சனா கான் ஏகத்துக்கும் நல்ல பிள்ளையாக இருக்கிறாராம். தயாரிப்பாளர்கள் சொல்லிச் சொல்லி சிலாகிக்கிறார்கள். மும்பையிலிருந்து சிலம்பாட்டம் வழியாக வந்தவர் சனா கான். வந்தது முதல் தமிழ் தயாரிப்பாளர்களின் செல்லப் பிள்ளையாகி விட்டார். சனா கானை புக் செய்ய தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். இத்தனை ஆர்வத்துக்கு முக்கிய காரணம், சனாகானின் பழக்க வழக்கம்தான். அதாவது யாருக்கும் எந்தத் தொந்தரவும் கொடுக்காமல் படு சமத்தாக இருக்கிறாராம் சனா கான். தேவையி்ல்லாமல் செலவு வைப்பதில்லை. தனக்கென தனியாக ஒரு மேக்கப்மேனைக் கூட சனா வைத்துக் கொள்ளவில்லையாம். தனக்குத் தானே மேக்கப் போட்டுக் கொள்கிறாராம். இப்படி தேவையில்லாத செலவுகளை முடிந்த வரை குறைத்துக் கொள்கிறாராம் சனா. ஷூட்டிங்குக்குப் போகிற இடங்களில் கிடைக்கும் வசதிக்குள் இருந்து கொள்ள பழகிக் கொள்கிறாராம். சனாகான் இப்படியே தொடர்ந்து இருப்பாரா அல்லது முன்னணிக்கு வந்த பின்னர் மாறிப் போய் விடுவாரா என்ற பேச்சும் கோலிவுட்டில் ரவுண்டு வந்து கொண்டிருக்கிறது.

08 மார்ச் 2009

சென்னை நட்சத்திர கிரிக்கெட்: சென்னை அணி வெற்றி!

சென்னையில் நடந்த நட்சத்திர கிரிக்கெட் போட்டியில் சென்னை வாரியர்ஸ் அணி நடிகர் விக்ராந்த் சதத்தின் உதவியுடன் வெற்றி பெற்றது.தமிழ் நடிகர்களும், தெலுங்கு நடிகர்களும் பங்கேற்ற நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று நடந்தது. தமிழ் நடிகர்கள் அடங்கிய அணிக்கு சென்னை வாரியர்ஸ் என்றும், தெலுங்கு நடிகர்கள் அடங்கிய அணிக்கு ஆந்திரா கிங்ஸ் என்றும் பெயர் சூட்டப்பட்டிருந்தது. போட்டியைக் காண ஏராளமா ரசிகர்கள் வந்திருந்தனர்.
போட்டியை கவிஞர் கனிமொழி எம்.பி. தொடங்கி வைத்தார். டாஸ் வென்ற சென்னை வாரியர்ஸ் அணியின் கேப்டன் ரமணா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்படி நடிகர் விக்ராந்தும், ஜித்தன் ரமேசும் சென்னை வாரியர்ஸ் அணி தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினார்கள்.விக்ராந்தின் ஆட்டம், ஒரு கைதேர்ந்த பேட்ஸ்மேனின் ஆட்டம் போல் மிகவும் அருமையாக இருந்தது. 2-வது ஓவரிலேயே 2 சிக்சர்களை பறக்க விட்டு ரசிகர்களை குஷிப்படுத்தினார்.அட்டகாச சதம்ரமேஷ் 2 ரன்களில் வெளியேற, அடுத்து அவரது சகோதரர் நடிகர் ஜீவா வந்தார். ஜீவாவும், விக்ராந்தும் நேர்த்தியாக ஆடினார்கள். அவ்வப்போது பவுண்டரியும், சிக்சரும் அடித்து அரங்கை கலகலக்க வைத்தனர். மைதானத்தின் ஒரு பகுதியில், நடன கலைஞர்கள் ஆடிப்பாடி உற்சாகப்படுத்திக் கொண்டே இருந்தனர்.விக்ராந்த்-ஜீவா ஜோடியைப் பிரிக்க முடியாமல் டாக்டர் ராஜசேகர் தலைமையிலான ஆந்திர கிங்ஸ் அணியினர் தடுமாறினர்.
கிரிக்கெட் ஹீரோவாக மின்னிய நடிகர் விக்ராந்த் 59 பந்துகளில் 100 ரன்கள் குவித்தார். பின்னர் மற்ற வீரர்களுக்கும் வாய்ப்பு அளிக்கும் வகையில் அவர் சதத்துடன் ஓய்வு பெற்றார். இதேபோல் ஜீவாவும் 69 ரன்களில் (49 பந்து) விலகி விட்டார்.இதன் பின்னர் பரத், ஜே.கே.ரித்தீஷ், நடிகர் ஆர்யா, சாந்தனு ஆகியோர் பேட்டிங் செய்தனர். பின்னர் அவர்களும் அடுத்தவர்களுக்கு வழிவிட்டனர்.2 ஓவர்கள் எஞ்சி இருக்கும் போது ஆட வந்தார் நடிகர் சிம்பு. வந்த வேகத்தில் ஒரு பவுண்டரியும், அதைத் தொடர்ந்து ஒரு சிக்சரும் அடித்தார். சிக்சர் அடித்ததும் சதம் கண்டது போல், ரசிகர்களை நோக்கி பேட்டை காண்பித்து ஆரவாரம் செய்தார். ஆனால் அடுத்த பநந்திலேயே க்ளீன் போல்டாகி வெளியேறினார்!சென்னை வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 26 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 233 ரன்கள் குவித்தது.
சென்னை வாரியர்ஸ் வெற்றிதொடர்ந்து ஆடிய ஆந்திரா கிங்சும் நல்ல தொடக்கம் கண்டது. குறிப்பாக தமிழ் நடிகர்கள் அதிகமான உதிரிகளை வாரி இறைத்தனர். ஸ்ரீகாந்த் முதல் ஓவரிலேயே 7 வைடுகளை போட்டார். இதனால் 5 ஓவர்களிலேயே அந்த அணி 50 ரன்களைக் கடந்தது.ஆனால் தொடக்க ஆட்டக்காரர்கள் வீழ்ந்ததும், ஆந்திராவின் ஸ்கோர் சரிய தொடங்கியது.இதனால் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சென்னை வாரியர்ஸ் அணி 'கிளினிக் ஆல் கிளியர்' நட்சத்திர கிரிக்கெட் கோப்பையை கைப்பற்றியது.
சென்னை அணி தரப்பில் ஆர்யா 3 விக்கெட்டுகளும், பரத், விஷ்ணு தலா 2 விக்கெட்டுகளும், விக்ராந்த், ரமேஷ் தலா ஒரு விக்கெட்டும் சாய்த்தனர்.ஆட்டநாயகன் விக்ராந்த்சதம் அடித்தது மட்டுமில்லாமல், பந்து வீச்சு பீல்டிங்கிலும் அபாரமாக செயல்பட்டு ஆல்-ரவுண்டராக ஜொலித்த நடிகர் விக்ராந்த் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு மோட்டார் சைக்கிள் மற்றும் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. மேலும் அதிக சிக்சர் (6),பவுண்டரி (4),அடித்ததற்காக தலா ரூ.5 ஆயிரம் ரொக்கப்பரிசையும் தட்டிச் சென்றார்.இலங்கைத் தமிழர் நிவாரண நிதிக்கு வழங்கினர்!
வெற்றி பெற்ற அணிக்கு அமைச்சர் பெரியகருப்பன் பரிசுக்கோப்பையை வழங்கினார். வெற்றி பெற்ற அணிக்கு ரூ.50 ஆயிரமும், தோல்வி அடைந்த அணிக்கு ரூ.25 ஆயிரமும் ரொக்கப்பரிசும் வழங்கப்பட்டது.இந்த தொகையை இலங்கை தமிழர்களுக்காக, முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்குவதாக இரண்டு அணிகளின் கேப்டன்களும் அறிவித்தனர். இதைத்தொடர்ந்து அமைச்சரிடம் இதற்கான காசோலையை அவர்கள் அளித்தனர்.
போட்டியின் வர்ணனையாளராக நடிகர் சின்னிஜெயந்த், அப்துல் ஜாபர், சின்னத்திரை தொகுப்பாளர் மகேஷ்வரி ஆகியோர் இருந்தனர்.நடிகைகள் காயத்ரி ஜெயராம், கஸ்தூரி, சரண்யா, தெலுங்கு நடிகர் ராஜசேகரின் மனைவி ஜீவிதா, நடிகர்கள் விஜய்பாபு, ஸ்ரீமன், நகைச்சுவை நடிகர் சிவநாராயணமூர்த்தி உள்ளிட்டோரும் போட்டியை நேரில் பார்த்து ரசித்தனர்.

ரஜினி-ஐஸ்வர்யாராய்: எந்திரன் பாட்டு

ரஜினியின் எந்திரன் படப் பிடிப்பு இரு மாதங்கள் வேலூர், சென்னை, பழைய மகாபலிபுரம் சாலை போன்ற பகுதிகளில் நடந்தது.
விஞ்ஞானி கெட்டப்பில் வரும் ரஜினி, ஆய்வு கூடத்தில் ரோபோவை உருவாக்கும் காட்சிகள், சர்வதேச விஞ்ஞானிகள் மாநாட்டில் அதை அறிமுகம் செய்யும் காட்சிகள் போன்றவை எடுக்கப்பட்டன. வெளிநாட்டில் ஒரு பாடல் காட்சியும் படமாக்கப்பட்டது. ஓரிரு வார இடைவெளிக்குப் பின் மீண்டும் படப்பிடிப்பு ஏற்பாடுகள் நடக்கின்றன.
ஐதராபாத்தில் பிரமாண்ட பாடல் காட்சியொன்றை படமாக்கப்பட உள்ளது.
முதல்வன் படத்தில் இடம் பெறும் முதல்வனே வனே வனேவனே வனே முதல்வனே' என்ற பாடல் சாயலில் இது எடுக்கப்படுகிறது. 1000 துணை நடிகர்கள்-நடிகைகள் இதில் ஆடுகின்றனர். அவர்களுடன் சேர்ந்து ரஜினியும் ஐஸ்வர்யாராயும் நடனம் ஆடுகிறார்கள். துணை நடிகர்கள் ரோபோ காஸ்ட்யூம் அணிந்து இதில் ஆடுகின்றனர். இதற்கான பாடல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் மதுஸ்ரீ பாட பதிவு செய்யப்பட்டது.
இயக்குநர் ஷங்கர் பாடல்காட்சிகளில் அக்கறை காட்டுவார். பாட்டும், டான்சும் தனித்துவமாய் இருக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துவார். அன்னியன் படத்தில் `ரண்டக்க ரண்டக்க' பாடல் மற்றும் சிவாஜியில் `வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி' பாடல் சாயலில் இந்த எந்திரன் பாட்டு உருவாகிறது.
இப்பாட்டுக்காக கூடுதல் செலவு செய்யப்படுகிறது. பாடல் காட்சி படமாக்கப்படும் இடத்தை இயக்குனர் ஷங்கர் ஐதராபாத்துக்கு நேரில் சென்று பார்வையிட்டார்.
இந்த பாடலை கவர்ச்சியாக எடுக்க ஷங்கர் திட்டமிட்டுள்ளார். ஐஸ்வர்யாராய்க்கு அதற்கேற்ற மாதிரி ஆடைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com