Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

30 ஜூலை 2011

கூகிள் +1 பட்டன் - புதிய வேகம், புதிய வசதி

இணையம் என்னும் ஆடுகளத்தில் ஒருவரையொருவர் முந்த பல்வேறு முயற்சிகளை கையாளுகின்றனர். அதன்படி, பேஸ்புக்கின் Like பட்டனுக்கு கிடைத்த பெரும் வரவேற்பைக் கண்ட கூகிள் நிறுவனம், சமீபத்தில் +1 பட்டனை அறிமுகப்படுத்தியது. ஆனால் அது Load ஆக அதிக நேரம் எடுத்துக் கொண்டது. பொதுவாக ஒரு இணைய பக்கம் Load ஆகும் போது, அதிலுள்ள Java Script, Html போன்ற நிரல்கள் ஒவ்வொன்றாக தான் Load ஆகும். அதில் ஏதாவது ஒரு நிரல் Load ஆக நேரம் எடுத்துக் கொண்டால், அது முடியும் வரை மற்ற நிரல்கள் Load ஆகாது. அதனால் தான் சமீபத்தில் தமிழ்மணம் ஓட்டு பட்டையின் நிரலில் பிரச்சனை ஏற்பட்ட பொழுது, நமது வலைப்பக்கங்கள் Load ஆக அதிக நேரமானது. இதே பிரச்சனை தான் கூகிள் ப்ளஸ் ஒன் பட்டனிலும் ஏற்பட்டது. தற்போது அதனை சரி செய்துள்ளது கூகுள். எப்படியென்றால், கூகிள் +1 பட்டன் லோட் ஆகும் அதே சமயத்தில், மற்ற நிரல்களும் லோட் ஆகும். இதனால் நமது பக்கம் லோட் ஆவதில் தாமதம் ஆகாது. புதிய கூகிள் +1 Button-ஐ நிறுவ: 1. முதலில் Blogger Dashboard => Template => Backup/Restore Template பக்கத்திற்கு சென்று, Download Full Template என்பதை க்ளிக் செய்து உங்கள் டெம்ப்ளேட்டை Backup எடுத்துக் கொள்ளுங்கள். 2. பிறகு Edit Template என்பதை க்ளிக் செய்து, Expand Widget Templates என்ற இடத்தில் Check செய்துக் கொள்ளுங்கள். 3. பிறகு
என்ற Code-ஐ தேடி அதற்கு பின்னால், பின்வரும் Code-ஐ Paste செய்யவும்.
4. பிறகு Save Template என்பதை க்ளிக் செய்யவும். பழைய Code-ஐ நிறுவியுள்ளவர்கள் செய்ய வேண்டியது: 1. Edit Template பக்கத்திற்கு சென்று

ஊடகங்களை பிரித்தானிய அரசாங்கம் கட்டுப்படுத்துவதில்லை - கொழும்பு பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம்

பொறுப்பற்ற காணொளியை ஒளிபரப்பிய சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்ச கூறியமை தொடர்பாக கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் ஊடகங்களின் உள்ளடக்கங்களை பிரித்தானிய அரசாங்கம் கட்டுப்படுத்துவதில்லை என தெரிவித்துள்ளது.

சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் என்பது சுயாதீனமான ஒரு ஊடக நிறுவனமாகும். ஒவ்வொரு ஜனநாயக நாட்டிலும் சுதந்திர ஊடகம் என்பது முக்கியமானது என பிரித்தானியா நம்புகிறது. ஊடக நிறுவனங்கள் பொருத்தமான, ஒழுக்க மற்றும் சட்டரீதியான தராதரங்களை பேணுவதை உறுதிப்படுத்துவதற்கான பொறிமுறையை பிரிட்டன் கொண்டுள்ளது.

ஆனால் ஊடகங்களின் உள்ளடக்கங்களை அரசாங்கம் ஒருபோதும் கட்டுப்படுத்துவதில்லை என பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் ஒருவர் கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.

சுயாதீன ஒழுங்குபடுத்துனரான டெலிகொமியுனிகேசன் சுயாதீன பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு மற்றும் வழக்கமான அவதூறு தொடர்பான சட்டங்கள் என்பன ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் பிரித்தானிய பொறிமுறையில் அடங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையிடம் சரணாகதியடையப் போகும் திமுக!

மீண்டும் வசந்த காற்றாய்
நம்பிக்கை ரேகைகள்
தமிழர்
மேனியெங்கும்
தழுவத் தொடங்கியிருக்கிறது,
இலவசமாய் எது கொடுப்பினும்
வாங்கி விட்டு
தன் இயல்புதனை உணர்த்துவான்
தமிழன் எனும் யதார்த்தம்
’ஐயாவின் ஆட்சி-
அம்மாவின் வருகை மூலம்
தூக்கி வீசப்படுகையில்
கண்டு தெளிந்தது தமிழகம்- ஆனாலும்
இலவசங்கள் கொடுத்தால்
வாடிய பயிர்கள் எல்லாம்
தம்மை வாழ வைக்கும் என
வாசல் வந்து
கரங் குவித்து
தம் கையில் நிறைந்திருந்த
செங்குருதி மணம் கழுவப்படாமல்
வெற்றிலையில் சுண்ணாம்பிட்டு;
பிச்சையிடுகின்றோம்- எம்
நன்றி கடன் மறவாதேம்
என வந்தவர்க்கு,
தக்க நேரத்தில் தமிழன்
தன் நிலையினை மீண்டும்
நிரூபித்துள்ளான்!
ஆடி மாதம்
வாடிப் போன
தமிழன் வரலாறு
இரு சேதிகள் வாயிலாக
இந் நாளில்
புதுப்பிக்கப்பட்டிருக்கிறது,
ஜெயலிதாவின் பக்கமிருந்து
மெல்லிய அசைவொன்று
எம் மீதான
சுவாசத்திற்கு வேண்டிய
ஒட்சிசனாய் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது,
கருணாநிதி வடிவில்
களையப்பட்ட
தமிழ்த் தாயின் துகில்
மெது மெதுவாக
இன உணர்வெனும் வெளியீடு கொண்டு
போர்த்தப்படுகிறது- தன் நிலை
உணர்ந்து கொள்ளும்
காலம் இது வென கலைஞர்
கண்டு தெளிந்து விட்டதாய்
நாளாந்தம் மாறும் காட்சிகள்
கட்டியம் கூறுகின்றன!
தான் வளர்த்த
கடாக்கள்- தமிழ்ப் பாலூற்றி
சீவப்பட்ட கொம்புகளோடு
சொத்துக்கள் எனும்
மானத்தை சூறையாடி
பங்கு போட்டு
திமுக வை
திக்குமுக்காட செய்கையில்
வேறு வழியின்றி
முன் வினைப் பயனை
உணர்ந்து தள்ளாடும் வயதினிலும்
தத்தளிக்கிறார் தாத்தா!
அம்மாவின் கரங்கள்
ஈழ மக்கள் நோக்கி
காலச் சுழற்சியின்
சந்தர்ப்ப பிறழ்வுகளால்
மேலும் வீரியமாய்
சில வேளை நீளலாம்!
அந் நேரம் தான் செய்த
தவறுகளை நினைத்து
கண்ணீர் வடிப்பாரா கலைஞர்- இல்லை
மகிந்தவுடன் கரங்கோர்த்து
ஈழ மக்கள் விடிவிற்காய்
புது கூட்டணி தொடங்குவாரா?
தூர நோக்கு அரசியலில்
கலைஞரின் தந்திரங்கள்
வியப்பினைத் தருவதால்.
இலங்கையிடம்
கரங் குவித்து
சரணாகதியடைந்தாலும்
ஆச்சரியப்பட ஏதுமில்லைத் தானே!

அவசியம் தெரிந்து கொள்ளவேண்டிய APPLE "I-PHONE தகவல்

சென்ற வாரத்தில் தேடல் இயந்திர நிறுவனமான யாஹூ, பயனீட்டாளர்களின் தேடல் விவரங்களைப் பல மாதங்களுக்குச் சேகரித்துவைக்கும் என்ற தகவல்,பிரைவசி வல்லுநர்களைக் கவலைக்குள்ளாக்கியது. இந்த வாரத்தில், அலைபேசி உலகின் இரண்டு முக்கியப் பிதாமகர்களின் மீது பிரைவசி பற்றிய படு பயங்கர குற்றச்சாட்டு. ஆப்பிளின் ஐ-போன் அல்லது கூகுளின் ஆண்ட்ராயிட் மூலம் இயங்கும் அலைபேசி. இதில் ஏதாவது ஒன்றைப் பயன்படுத்துபவராக இருந்தால், இந்த வாரத்தில் இவை இரண்டைப் பற்றியும் வெளிவந்த பிரைவசி அமளி தெரிந்திருக்கும் வாய்ப்பு அதிகம்.தெரியாதவர்களுக்கு, முதலில் சில அடிப்படைகள்...
அலைபேசி என்பது தொலைபேசியாக மட்டுமே பயன்பட்ட காலம் ஒன்று உண்டு. யாருடனாவது பேச வேண்டுமானால், தொலைபேசி இருக்கும் இடத்துக்கு நீங்கள் போக வேண்டும் என்பது தேவை இல்லாமல், நீங்கள் செல்லும் இடமெல்லாம் 'செல்’உங்களுடன் வந்தது. இது மக்கள் தொடர்பில் மிகப் பெரியமாற்றத்தைக் கொண்டுவந்தது.சத்தத்தைப் பரிமாறிக்கொள்ளும் இந்த ஊடகத்தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி எழுத்துக்களையும் எளிதாக அனுப்பலாம் என்ற சாத்தியக்கூறு வந்ததும், குறுஞ்செய்தி என்ற தொழில்நுட்பம் பிரபலமானது. இதைத் தொடர்ந்து வந்த ஸ்மார்ட் போன் வகையறா,இந்தத் தொழில்நுட்பத்தின் பரிணாம வளர்ச்சி என்றே சொல்லலாம். இது அலைபேசியைக் கணினிக்கு நிகரான தாக மாற்றியது.தொலைத்தொடர்புக்கு மட்டுமல்லாமல்,மென்பொருள்கூறுகளைப் பதிந்துகொண்டு பயன்படுத்த முடிகிறது. புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து,சில நொடிகளுக்குள் அதைச் சமூக வலைதளங்களில் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ள முடிகிறது. எல்லாவற்றுக்கும் மேல், இடம் சார்ந்த சேவைக் கூறுகளின் (Location Services) உதவியால், நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்களோ,அந்த இடம் சம்பந்தமான தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும், பகிர்ந்துகொள்ளவும் முடிகிறது. இதற்கு ஓர் எளிய உதாரணம்: கூகுள் மேப்ஸ் ( maps.google.com) போன்ற வழிகாட்டுச் சேவைகள். உதாரணத்துக்கு: மதுரை-சென்னைக்குப் போய்வந்தபடியே இருக்கும் கார்த்திக் நாகராஜனை எடுத்துக்கொள்ளலாம்.எப்போதும் நவீன அலைபேசிகளைப் பயன்படுத்தும் கார்த்திக், சென்னையில் குறிப்பிட்ட ஓர் இடத்துக்குச் செல்வதற்காகத் தனது ஸ்மார்ட் போனில், வழிகாட்டு சேவை ஒன்றுக்குச் சென்று, செல்ல வேண்டிய இடத்தைக் கொடுக்க, அவருக்குத் தெளிவான பயணப் பாதையைக் காட்டுகிறது. அவர் அந்தப் பாதையில் செல்லும் போது அவர் எங்கே இருக்கிறார் என்பதையும் காட்டுகிறது.
இது எப்படிச் சாத்தியம்?
ஸ்மார்ட் போன்களில் இருக்கும் GPS (Global Positioning System) எனப்படும் இடம்காணும் தொழில்நுட்பம்தான் இதற்கு அடிப்படை. செயற்கைக்கோள்களில் இருந்து அனுப்பப்படும் சிக்னலை ஆதாரமாகக்கொண்டு, உங்களது அலைபேசி எந்த இடத்தில் இருக்கிறது என்பதைத் துல்லியமாகத் தெரிந்துகொண்டு, அதன் அடிப்படையில் நீங்கள் செல்ல வேண்டிய பாதையை உங்களுக்குச் சொல்ல முடிகிறது.
இந்தத் தொடரைத் தொடர்ந்து படிப்பவர்களுக்கு இடம் சார்ந்த சேவைகளைப்பற்றி அவ்வப்போது எழுதியது நினைவிருக்கலாம். Foursquare, Gowalla, Loopt போன்ற அலைபேசி மென்பொருள் நிறுவனங்களின் வெற்றியைப் பார்த்துவிட்டு, ஃபேஸ்புக் Facebook Places (http://www.facebook.places/) என்ற பெயரிலும், கூகுள் லேட்டிடூயுட் (http://www.google.com/mobile/latitude ) என்ற பெயரிலும் இடம் சார்ந்த சேவைகளை வெளியிட்டன. இந்தச் சேவைகளின் அடிப்படைத் தேவை நிறிஷி வசதி கொண்ட ஸ்மார்ட் போன்!
பிரச்னைக்கு வருகிறேன்.
பீட் வார்டன், ஆலஸ்டெய்ர் ஆலன் என்ற இரண்டு ஆராய்ச்சியாளர்கள் ஐ-போன் சாதனத்தின் குறிப்பிட்ட கோப்பு ஒன்றில்,தகவல்கள் சேகரிக்கப்படுவதையும் ஐ-போன் எப்போதெல்லாம் கணினியுடன் இணைக்கப்படுகிறதோ,அப்போதெல்லாம் இந்தக் கோப்பு கணினியில் இருக்கும் ஆப்பிளின் iTunes மென்பொருளுக்குள் சேமிக்கப்படுவதையும் பார்த்து, இந்தக் கோப்பில் என்னதான் இருக்கிறது என்பதைத் தோண்டித் துருவிப் பார்க்க, கிடைத்த தகவல் திகைப்பூட்டியது. ஐ-போன் பயனீட்டாளர் சென்ற இடங்களின் GPS தகவல்கள் அந்தக் கோப்பில் பதிவு செய்யப்படுவதைச் சென்ற வாரம் நடந்த டெக் மாநாடு ஒன்றில் தெரிவிக்க, டெக் உலகின் கவனத்தை ஈர்த்தது இந்தப் பிரச்னை. (அவர்களது பேச்சைக் கேட்க, இந்த உரலிக்குச் செல்லவும்http://www.youtube.com/watch?v=GynEFV4hsA0&feature=player_embedded). உங்கள் கணினியில் இருக்கும் ஆப்பிளின் iTunes மென்பொருளில் உள்ள தகவல்கள் ஆப்பிளால் நுகர முடிகிற சாத்தியக் கூறு இருப்பதால், பயனீட்டாளர்களை அவர்களுக்குத் தெரியா மல் வேவு பார்க்கத்தான் இது பயன்படப்போகிறது என்ற பயத்தை பிரைவசி காவலர்கள் கிளப்ப, உடல் நலக் குறைவால் விடுமுறையில் இருக்கும் ஸ்டீவ் ஜாப்ஸே அலுவலகம் வந்துமீடியா வுக்குச் சமாதானம் சொல்ல வேண்டிய நிலை.''நாங்கள் அப்படியெல்லாம் எந்தத் தீய நோக்கத்துடனும் இதைச் செய்ய வில்லை. செயற்கைக்கோள்களில் இருந்து வரும் சிக்னலை மட்டுமே எடுத்து இடம் சார்ந்த சேவைக்குப் பயன்படுத்தினால், அதிக நேரம் எடுக்கிறது. அதனால், ஐ-போன் செல்லும் இடங்களில் உள்ள இணைய இணைப்புகள் ( WiFi ) போன்றவற்றின் தகவல்களைச் சேகரித்து, இந்தக் கோப்பில் சேர்த்தோம். இதை ஆப்பிளின் உபயோகத்துக்காக எடுக்கும்போது, பயனீட்டாளர்பற்றிய விவரங்கள் அதில் இருக்காது. எனவே, பிரைவசி விதிகளை மீறினோம் என்று சொல்வது தவறு!'' என்று நீளமான விளக்கம் கொடுத்தாலும், டெக் உலகின் டென்ஷன் முழுவதும் குறைந்ததாகத் தெரியவில்லை.(ஆப்பிளின்நீண்ட விளக்கத்தைத் தெரிந்துகொள்ள,இந்த உரலியைச் சொடுக்கவும் http://finance.yahoo.com/news/Apple-QA-on-Location-bw-3919607983.html?x=0)
ஆப்பிள் செய்தி வெளியானவுடன்,உடனடிக் கேள்வி எழுந்தது கூகுள் பற்றி! கூகுளின் ஆண்ட்ராயிட் மொபைல் இயக்க மென்பொருள் இடம் சார்ந்த சேவைகளைக் கொடுக்க, இது போலவே பயனீட்டாளர்கள் சென்ற இடங் களை எல்லாம் சேமிக்கிறதா? ''ஆம், நாங்கள் இதைச் சேமிக்கிறோம். ஆனால், ஆப்பிள்போல் அல்லாது, பயனீட்டாளரிடம் வெளிப்படையாக அனுமதி பெற்றே (!) இதைச் செய்கிறோம். அது மட்டுமல்லாமல், ஆப்பிள் iTunes போல கணினியில் இந்தக் கோப்பைச் சேமித்து எடுத்துக்கொள்வது இல்லை!'' என்று,' அவன்தான் என்னைவிட மோசம்’ என்ற ரீதியில் பதில் அளித்திருக்கிறது கூகுள்!
நன்றி - விகடன்

'யோஹன்' விஜய்+கௌதம் - ஒரு கலக்கல் கூட்டணி!

மிகச்சமீப காலமாக ஒரு நம்பிக்கையைக் கொடுக்கிறார் விஜய். மணிரத்னம், ஷங்கர் என்று பெரிய இயக்குனர்கள் பார்வை அவர்மேல்! இந்த லிஸ்டில் இயக்குனர் முருகதாசும் விரைவில் இணைவார் என்கிறார்கள்! சமீபத்தில் கேள்விப்பட்ட கலக்கல் நியூஸ் கௌதம் மேனன் படத்தில் விஜய் என்பதுதான்!
கௌதம் - அஜித் இணைவதாக பேசப்பட்டபோது அது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது...இப்போது அதே கதையில் விஜய் நடிப்பதாகவும், அவருக்காக திரைக்கதையில் கௌதம் சில மாற்றங்களைச் செய்ய முன்வந்தபோதும் விஜய் மறுத்து, அஜித்துக்கு எழுதப்பட்டதை மாற்றாமல் அப்படியே நடிக்க முன்வந்ததாகவும் செய்திகள்!
நிச்சயம் இது ஒரு அசத்தல் படமாக இருக்கும் என நம்புகிறேன்! விஜய் தொடர்ந்தும் இதே வழியில் சென்றால் அனைவருக்கும் மகிழ்ச்சியே! ரஜினிக்குப் பிறகு குழந்தைகளை அதிகம் கவர்ந்தது விஜய்தான்! -இதை யாரும் மறுக்கமுடியாது.
எல்லாவிதமான திறமைகளும் இருந்தாலும் என்போன்றவர்களை விஜய் படங்களிலிருந்து விலகி ஓடவைப்பவை அவரின் பாழாய்ப்போன 'பஞ்ச்' டயலாக்குகளும், கொடூரமான வெட்டி சவடால் பேச்சுக்களும்தான்! அதுவும் வில்லனின் கோட்டைக்கே சென்று வெட்டி சவடால் பேச்சுப் பேச, அதை வில்லனின் அடியாளுங்க கைகட்டி சுவாரஸ்யமா கேட்டுக் கொண்டிருப்பதும், திருமலை தொடங்கி தொடரும் கொடுமை!
இவையில்லாமல் ஒரு விஜய்படம் என்பதே ஒரு நல்ல தொடக்கம்! இனி விஜய் இந்த பேரரசு, தரணி பிரபுதேவா வகையறாக்களை கிட்ட அண்டவிடாமல் இருந்தால் நல்லாயிருக்கும் என்று தோன்றுகிறது!
அதைவிட முக்கியம்! விஜய்க்கு எதிரியே அவர் அப்பா எஸ்.ஏ.சி தான்! அவர்தான் பதிவர்களை விடவும் அதிகமாக விஜய்யை வைத்துக் கலாய்ப்பவர், காமெடி பண்ணுபவர்! முதல்ல அந்தாளை தூர வச்சாலே விஜய்க்கு வெற்றி தான்!விஜய்யை அரசியலுக்கு இழுத்து ஒரு வழி பண்ணுவதாக இருக்கிறார் அது மக்களையா விஜயையா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்!
கௌதம்மேனனின் படங்கள் (நடுநிசி நாய்கள் பார்க்கவில்லை!) என்னதான் அவர்மீது விமர்சனங்கள் இருந்தாலும் - அதுவும் நடுநிசி நாய்கள் படத்தினால்தான் ஏற்பட்டது - அவற்றின் ஸ்டைலிஷான மேக்கிங்கால் எனக்குப் பிடித்திருந்தன! அதிலும் எனக்கு 'காக்க காக்க' தான் மிகப்பிடித்தது! 'மாஸ்டர் பீஸ்' என்று தோன்றுகிறது!

29 ஜூலை 2011

ஒரே நேரத்தில் மூன்று உலவிகளை பயன்படுத்துவதற்கு

இணையதளங்களை வலம் வருவதற்கு அனைவராலும் பயன்படுத்தப்படுவது உலவிகள் மட்டுமே ஆகும். இதற்கு மாற்றாக எதுவும் இல்லை.

எனினும் இணைய பயன்பாட்டு அப்ளிகேஷன்கள் ஒரு சில உண்டு. இவையும் உலவிகளில் வடிவிலேயே தான் இருக்கும்.

இவை இரண்டுக்கும் அதிக வித்தியாசம் ஒன்றும் பெரிதாக இல்லாவிட்டாலும் ஒருசில வசதிகள் இதுபோன்ற அப்ளிகேஷன்களில் உண்டு.

அந்த வகையில் Multibrowser என்னும் மென்பொருள் வாயிலாக ஒரே நேரத்தில் மூன்று உலவிகளில் பணியாற்ற முடியும். அவை இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.0, 8.0, 9.0, நெருப்புநரி உலவி மற்றும் கூகுள் குரோம் உலவி போன்றவை ஆகும்.

இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.

இதில் இருக்கும் அட்ரஸ்பாரில் இணையதள முகவரியினை உள்ளிடவும். பின் என்டர் கீயினை அழுத்தவும். தற்போது நீங்கள் குறிப்பிட்ட வலைத்தளத்தினை காணமுடியும்.

பின் நீங்கள் உலவிகளை தேர்வு செய்து அதற்கிடையேயுள்ள மாற்றத்தினை காண முடியும். மேலும் மூன்று உலவிகளிலும் நீங்கள் குறிப்பிட்ட வலைப்பக்கத்தினை ஒரே இடத்தில் காண முடியும்.

அமெரிக்க கடன்சுமை உச்ச வரம்பு: எதிர்க்கட்சியினரை சமாதானப்படுத்த மக்களுக்கு ஒபாமா வேண்டுகோள்

நாட்டின் கடன்சுமை வரம்பை உயர்த்தும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் குடியரசுக் கட்சி எம்.பி.க்களை சமாதானப்படுத்துங்கள் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா தமது நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்காவின் கடன் சுமை வரம்பை உயர்த்த ஒபாமா தலைமையிலான ஜனநாயகக் கட்சி அரசு முடிவெடுத்தது. ஆனால் இதற்கு எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கடந்த ஒருவாரகாலமாக குடியரசுக் கட்சி எம்.பி.க்களை சமாதானப்படுத்த ஒபாமா அரசு எடுத்த நடவடிக்கை தோல்வியையே தழுவியது. இதையடுத்துதான் குடியரசுக் கட்சி எம்.பி.க்களை சமாதானப்படுத்த நாட்டு மக்களின் உதவியை நாடியுள்ளார் அதிபர் ஒபாமா.

இதுதொடர்பாக அதிபர் ஒபாமா திங்கள்கிழமை தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரை வருமாறு: அமெரிக்காவுக்கு தேசிய அளவில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் நிறைய பொறுப்புகளும், கடமைகளும் உள்ளன.

எந்த ஒரு சூழலிலும் இவற்றை நிறைவேற்ற வேண்டிய கட்டாய நிலையில் நாடு உள்ளது. நாடு இதுவரை எப்பொழுதும் சந்தித்திராத நிதி சிக்கலை சந்தித்துள்ளது. இருப்பினும் இதனால் நாம் மனம் தளர்ந்திடக்கூடாது.

நாட்டின் நலன் கருதியும், நிதி சிக்கலுக்கு தீர்வு காணும் நோக்கிலும் சில நிதி சீர்த்திருத்தங்களை அரசு செய்து வருகிறது. இவற்றில் ஒன்று தான் கடன்சுமை வரம்பை உயர்த்தும் அரசின் முடிவு. ஆனால் அரசின் இந்த முடிவுக்கு குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இதனால் இதுதொடர்பான மசோதா நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிக்கல் நீடிப்பதால் நிதி திரட்டுவதில் பிரச்னை எழுந்துள்ளது. இதனால் அனைத்துவிதமான சமூக, பொருளாதாரத் திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன. நாட்டின் இப்போதைய நிதிச் சூழலில் கடன்சுமை வரம்பை உயர்த்தாமல் எதுவுமே செய்ய முடியாது.

இதுகுறித்து குடியரசுக் கட்சி எம்.பி.க்களுக்கு புரிய வைக்க எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். கடன்சுமை வரம்பு உயர்வு கூடாது, அதுதொடர்பான மசோதாவை எதிர்ப்போம் என்பதில் உடும்புப்பிடியாக உள்ளனர்.

நாடு மோசமான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்குகூட நிதியை ஒதுக்க இயலாது. இதுபோன்ற நிலையால் அந்நிய முதலீட்டாளர்கள்கூட அமெரிக்காவில் முதலீடு செய்ய யோசிக்கும் நிலை ஏற்படலாம்.

அப்படி ஒரு நிலைவந்தால் அது மோசமான விளைவை ஏற்படுத்தும். இதையெல்லாம் குடியரசுக் கட்சி எம்.பி.க்களுக்கு நீங்கள்தான் புரிய வைக்க வேண்டும். அவர்கள் பிடிவாதத்தை தளர்த்திக் கொள்ள நெருக்குதல் அளிக்க வேண்டும்.

நாட்டின் நலனை கருத்தில் கொண்டு நீங்கள் இதைச் செய்ய வேண்டும். இதை உங்களால் செய்ய இயலும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார் அதிபர் ஒபாமா.

நான்கு வருடங்களுக்கு முன் காணாமல் போன குழந்தை இந்தியாவில் கண்டுபிடிப்பு

போர்ச்சுகலில் கடந்த 2007ம் ஆண்டு கடத்தப்பட்ட 4 வயது பெண் குழந்தை இந்தியாவின் காஷ்மீரில் வளர்வது தெரியவந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

லண்டனை சேர்ந்த கதே-ஜெர்ரி தம்பதியின் பெண் குழந்தை மெடலீன் மெக்கான். குழந்தையின் 4வது பிறந்த நாளை கொண்டாட அனைவரும் கடந்த 2007ம் ஆண்டு மே மாதம் போர்ச்சுகலில் உள்ள பிரயா டா லஸ் பகுதிக்கு சுற்றுலா சென்றனர்.

அங்கு மெடலீன் திடீரென காணாமல் போனாள். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தனியார் புலனாய்வு நிறுவனத்தின் உதவியை நாடினர். அவர்கள் தொடர்ந்து குழந்தையை தேடி வந்தனர்.

இதற்கிடையில் காஷ்மீரில் உள்ள லே பகுதிக்கு பிரிட்டனை சேர்ந்த சிலர் சமீபத்தில் சுற்றுலா சென்றனர். அப்போது மெடலீன் போலவே ஒரு குழந்தையை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர்.

அவர்களில் ஒரு பெண் தைரியமாக லே பொலிசில் தெரிவித்திருக்கிறார். இப்போது அந்த குழந்தைக்கு 8 வயதிருக்கும். லே பொலிசுடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறோம் என்று தனியார் புலனாய்வு ஏஜென்சியினர் கூறுகின்றனர்.

பிரான்சை சேர்ந்த பெண்ணும், பெல்ஜியத்தை சேர்ந்த அவரது கணவரிடம் அந்த குழந்தை இருக்கிறது. இந்த குழந்தை எங்களுடையதுÕ என்று இருவரும் கூறுவதால் சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து லே பொலிசார் கூறுகையில்,"குழந்தையை டி.என்.ஏ பரிசோதனை செய்து பார்த்தால் தான் உண்மை தெரியவரும். இந்த பிரச்சனை குறித்து பிரிட்டன் பொலிசாருடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறோம்" என்றனர்.

குழந்தை மெடலீன் காணாமல் போனது எப்படி? என்பது குறித்து சமீபத்தில் தான் அவளது பெற்றோர் புத்தகம் ஒன்று வெளியிட்டிருந்தனர். கடத்தப்பட்ட குழந்தையை கண்டுபிடிக்க ஸ்காட்லாந்து பொலிசாருக்கு பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் உத்தரவிட்டுள்ளார்.

இலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்

நமக்கு இணையத்தில் பல எண்ணற்ற தளங்கள் பல ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்களை வழங்கி கொண்டு உள்ளன. இலவச மென்பொருட்களை தறவிரக்குவதில் என்ன பிரச்சினை என்றால் சில தளங்கள் இந்த மென்பொருட்களோடு சேர்த்து சில வைரஸ்களை நம் கணினியில் புகுத்தி விடுகின்றன. ஆகையால் ஒரு சில தளங்களே இலவச மென்பொருட்களை தரவிறக்க பாதுகாப்பானதாக உள்ளது. அந்த வரிசையில் கீழே 10 இலவச மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய கூடிய தளங்களை கொடுத்துள்ளேன்.
10. DOWNLOAD 3000 - RANK 4201
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.download3000.com/
9. SOFT32- RANK 3909
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.soft32.com/
8. DOWNLOAD ATOZ- RANK 2508
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://www.downloadatoz.com/
7. DL 4 ALL- RANK 1404
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://www.dl4all.com.
6. FREE DOWNLOAD CENTER- RANK 1256
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும் http://www.freedownloadscenter.com/
5. ZDNET - RANK 1224
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளத்தில் WINDOWS,MAC,LINUX, I PHONE போன்ற இயங்கு தளங்களுக்கு மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://downloads.zdnet.com/
4. FILE HIPPO - RANK 688
இந்த தளத்தில் பல இலவச மென்பொருட்கள் சுலபமாக தரவிறக்க முடிகிறது. இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.filehippo.com/
3. SOFTPEDIA - RANK 348
பல எண்ணற்ற மென்பொருட்களை உள்ளடக்கியது. ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று விளங்குகிறது.
இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும். http://www.softpedia.com/
2. BROTHER SOFT - RANK 300
எண்ணிலடங்கா மென்பொருட்களை உள்ளடக்கியது தினம் தினம் புது புது இலவச மென்பொருட்களை போட்டி போட்டு வெளியிட்டு கொண்டுள்ளன. இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://www.brothersoft.com/
1. CNET - RANK 159
முதலிடத்தை பிடித்ததில் இருந்தே நம் அனைவருக்கும் விளங்கி விட்டது இத் தளத்தின் அருமை. சென்று பாருங்கள் இங்கு கிடைக்காதது எதுவுமே இல்லை.இந்த தளம் செல்ல இந்த லிங்கில் செல்லவும்.http://download.cnet.com
இந்த பட்டியலை நான் அலெக்ஸா ரேங்க் வைத்து வரிசை படுத்தி உள்ளேன். ஏதேனும் தளத்தை விட்டு இருந்தால் தெரிவிக்கவும்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com