29 ஜூலை 2011
ஒரே நேரத்தில் மூன்று உலவிகளை பயன்படுத்துவதற்கு
இணையதளங்களை வலம் வருவதற்கு அனைவராலும் பயன்படுத்தப்படுவது உலவிகள் மட்டுமே ஆகும். இதற்கு மாற்றாக எதுவும் இல்லை.
எனினும் இணைய பயன்பாட்டு அப்ளிகேஷன்கள் ஒரு சில உண்டு. இவையும் உலவிகளில் வடிவிலேயே தான் இருக்கும்.
இவை இரண்டுக்கும் அதிக வித்தியாசம் ஒன்றும் பெரிதாக இல்லாவிட்டாலும் ஒருசில வசதிகள் இதுபோன்ற அப்ளிகேஷன்களில் உண்டு.
அந்த வகையில் Multibrowser என்னும் மென்பொருள் வாயிலாக ஒரே நேரத்தில் மூன்று உலவிகளில் பணியாற்ற முடியும். அவை இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 7.0, 8.0, 9.0, நெருப்புநரி உலவி மற்றும் கூகுள் குரோம் உலவி போன்றவை ஆகும்.
இந்த மென்பொருளை இணையத்தின் உதவியுடன் பதிவிறக்கி கணணியில் நிறுவிக்கொள்ளவும். பின் இந்த அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும்.
இதில் இருக்கும் அட்ரஸ்பாரில் இணையதள முகவரியினை உள்ளிடவும். பின் என்டர் கீயினை அழுத்தவும். தற்போது நீங்கள் குறிப்பிட்ட வலைத்தளத்தினை காணமுடியும்.
பின் நீங்கள் உலவிகளை தேர்வு செய்து அதற்கிடையேயுள்ள மாற்றத்தினை காண முடியும். மேலும் மூன்று உலவிகளிலும் நீங்கள் குறிப்பிட்ட வலைப்பக்கத்தினை ஒரே இடத்தில் காண முடியும்.
அமெரிக்க கடன்சுமை உச்ச வரம்பு: எதிர்க்கட்சியினரை சமாதானப்படுத்த மக்களுக்கு ஒபாமா வேண்டுகோள்
அமெரிக்காவின் கடன் சுமை வரம்பை உயர்த்த ஒபாமா தலைமையிலான ஜனநாயகக் கட்சி அரசு முடிவெடுத்தது. ஆனால் இதற்கு எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கடந்த ஒருவாரகாலமாக குடியரசுக் கட்சி எம்.பி.க்களை சமாதானப்படுத்த ஒபாமா அரசு எடுத்த நடவடிக்கை தோல்வியையே தழுவியது. இதையடுத்துதான் குடியரசுக் கட்சி எம்.பி.க்களை சமாதானப்படுத்த நாட்டு மக்களின் உதவியை நாடியுள்ளார் அதிபர் ஒபாமா. இதுதொடர்பாக அதிபர் ஒபாமா திங்கள்கிழமை தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு நிகழ்த்திய உரை வருமாறு: அமெரிக்காவுக்கு தேசிய அளவில் மட்டுமல்ல சர்வதேச அளவிலும் நிறைய பொறுப்புகளும், கடமைகளும் உள்ளன. எந்த ஒரு சூழலிலும் இவற்றை நிறைவேற்ற வேண்டிய கட்டாய நிலையில் நாடு உள்ளது. நாடு இதுவரை எப்பொழுதும் சந்தித்திராத நிதி சிக்கலை சந்தித்துள்ளது. இருப்பினும் இதனால் நாம் மனம் தளர்ந்திடக்கூடாது. நாட்டின் நலன் கருதியும், நிதி சிக்கலுக்கு தீர்வு காணும் நோக்கிலும் சில நிதி சீர்த்திருத்தங்களை அரசு செய்து வருகிறது. இவற்றில் ஒன்று தான் கடன்சுமை வரம்பை உயர்த்தும் அரசின் முடிவு. ஆனால் அரசின் இந்த முடிவுக்கு குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இதுதொடர்பான மசோதா நிறைவேறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. சிக்கல் நீடிப்பதால் நிதி திரட்டுவதில் பிரச்னை எழுந்துள்ளது. இதனால் அனைத்துவிதமான சமூக, பொருளாதாரத் திட்டங்கள் முடங்கிக் கிடக்கின்றன. நாட்டின் இப்போதைய நிதிச் சூழலில் கடன்சுமை வரம்பை உயர்த்தாமல் எதுவுமே செய்ய முடியாது. இதுகுறித்து குடியரசுக் கட்சி எம்.பி.க்களுக்கு புரிய வைக்க எவ்வளவோ முயற்சி செய்தும் அவர்கள் புரிந்து கொள்ள மறுக்கின்றனர். கடன்சுமை வரம்பு உயர்வு கூடாது, அதுதொடர்பான மசோதாவை எதிர்ப்போம் என்பதில் உடும்புப்பிடியாக உள்ளனர். நாடு மோசமான நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்நிலை தொடர்ந்தால் சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்குகூட நிதியை ஒதுக்க இயலாது. இதுபோன்ற நிலையால் அந்நிய முதலீட்டாளர்கள்கூட அமெரிக்காவில் முதலீடு செய்ய யோசிக்கும் நிலை ஏற்படலாம். அப்படி ஒரு நிலைவந்தால் அது மோசமான விளைவை ஏற்படுத்தும். இதையெல்லாம் குடியரசுக் கட்சி எம்.பி.க்களுக்கு நீங்கள்தான் புரிய வைக்க வேண்டும். அவர்கள் பிடிவாதத்தை தளர்த்திக் கொள்ள நெருக்குதல் அளிக்க வேண்டும். நாட்டின் நலனை கருத்தில் கொண்டு நீங்கள் இதைச் செய்ய வேண்டும். இதை உங்களால் செய்ய இயலும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றார் அதிபர் ஒபாமா. |
நான்கு வருடங்களுக்கு முன் காணாமல் போன குழந்தை இந்தியாவில் கண்டுபிடிப்பு
லண்டனை சேர்ந்த கதே-ஜெர்ரி தம்பதியின் பெண் குழந்தை மெடலீன் மெக்கான். குழந்தையின் 4வது பிறந்த நாளை கொண்டாட அனைவரும் கடந்த 2007ம் ஆண்டு மே மாதம் போர்ச்சுகலில் உள்ள பிரயா டா லஸ் பகுதிக்கு சுற்றுலா சென்றனர். அங்கு மெடலீன் திடீரென காணாமல் போனாள். அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தனியார் புலனாய்வு நிறுவனத்தின் உதவியை நாடினர். அவர்கள் தொடர்ந்து குழந்தையை தேடி வந்தனர். இதற்கிடையில் காஷ்மீரில் உள்ள லே பகுதிக்கு பிரிட்டனை சேர்ந்த சிலர் சமீபத்தில் சுற்றுலா சென்றனர். அப்போது மெடலீன் போலவே ஒரு குழந்தையை பார்த்து ஆச்சரியம் அடைந்தனர். அவர்களில் ஒரு பெண் தைரியமாக லே பொலிசில் தெரிவித்திருக்கிறார். இப்போது அந்த குழந்தைக்கு 8 வயதிருக்கும். லே பொலிசுடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறோம் என்று தனியார் புலனாய்வு ஏஜென்சியினர் கூறுகின்றனர். பிரான்சை சேர்ந்த பெண்ணும், பெல்ஜியத்தை சேர்ந்த அவரது கணவரிடம் அந்த குழந்தை இருக்கிறது. இந்த குழந்தை எங்களுடையதுÕ என்று இருவரும் கூறுவதால் சர்ச்சை எழுந்துள்ளது. இதுகுறித்து லே பொலிசார் கூறுகையில்,"குழந்தையை டி.என்.ஏ பரிசோதனை செய்து பார்த்தால் தான் உண்மை தெரியவரும். இந்த பிரச்சனை குறித்து பிரிட்டன் பொலிசாருடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறோம்" என்றனர். குழந்தை மெடலீன் காணாமல் போனது எப்படி? என்பது குறித்து சமீபத்தில் தான் அவளது பெற்றோர் புத்தகம் ஒன்று வெளியிட்டிருந்தனர். கடத்தப்பட்ட குழந்தையை கண்டுபிடிக்க ஸ்காட்லாந்து பொலிசாருக்கு பிரிட்டன் பிரதமர் டேவிட் கமரூன் உத்தரவிட்டுள்ளார். |
இலவச மென்பொருட்கள் தரவிறக்க சிறந்த 10 இணைய தளங்கள்
நமக்கு இணையத்தில் பல எண்ணற்ற தளங்கள் பல ஆயிரக்கணக்கான இலவச மென்பொருட்களை வழங்கி கொண்டு உள்ளன. இலவச மென்பொருட்களை தறவிரக்குவதில் என்ன பிரச்சினை என்றால் சில தளங்கள் இந்த மென்பொருட்களோடு சேர்த்து சில வைரஸ்களை நம் கணினியில் புகுத்தி விடுகின்றன. ஆகையால் ஒரு சில தளங்களே இலவச மென்பொருட்களை தரவிறக்க பாதுகாப்பானதாக உள்ளது. அந்த வரிசையில் கீழே 10 இலவச மென்பொருட்களை தரவிறக்கம் செய்ய கூடிய தளங்களை கொடுத்துள்ளேன்.

















