
சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் என்பது சுயாதீனமான ஒரு ஊடக நிறுவனமாகும். ஒவ்வொரு ஜனநாயக நாட்டிலும் சுதந்திர ஊடகம் என்பது முக்கியமானது என பிரித்தானியா நம்புகிறது. ஊடக நிறுவனங்கள் பொருத்தமான, ஒழுக்க மற்றும் சட்டரீதியான தராதரங்களை பேணுவதை உறுதிப்படுத்துவதற்கான பொறிமுறையை பிரிட்டன் கொண்டுள்ளது.
ஆனால் ஊடகங்களின் உள்ளடக்கங்களை அரசாங்கம் ஒருபோதும் கட்டுப்படுத்துவதில்லை என பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் ஒருவர் கொழும்பிலுள்ள ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.
சுயாதீன ஒழுங்குபடுத்துனரான டெலிகொமியுனிகேசன் சுயாதீன பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு மற்றும் வழக்கமான அவதூறு தொடர்பான சட்டங்கள் என்பன ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் பிரித்தானிய பொறிமுறையில் அடங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.