கமலுடன் முதல்முறையாக மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் துவங்கியது.
இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பில் மோகன்லாலுக்குப் பதில் வெங்கடேஷ் நடிக்கிறார். இந்திப் பட இயக்குநர் சக்ரி இயக்குகிறார்.
கமல்ஹாஸனின் சொந்தப் பட நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனலும், யுடிவியும்  இணைந்து தயாரிக்கும் படம் இது.
இந்தப் படத்துக்காக ஒரு நிமிடம் ஓடக்கூடிய டிரைலர் ஒன்றையும் கமல் தயாரித்துள்ளார்.
பிரபல எழுத்தாளர் த.ஜெயகாந்தன் ஏற்கெனவே உன்னைப் போல் ஒருவன் எனும் திரைப்படத்தை இயக்கி, பெரும் வெற்றி கண்டார். தமிழ் திரைப்பட வரலாற்றில் இன்றும் ஒரு மைல் கல்லாகத் திகழ்கிறது ஜெயகாந்தனின் அந்தப் படம்.
அந்த சாதனையை கமலும் செய்ய வாழ்த்துவோம்!!
11 ஏப்ரல் 2009
கமலின் அடுத்த படம் உன்னைப் போல் ஒருவன்!
கமலுடன் முதல்முறையாக மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் துவங்கியது.
இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பில் மோகன்லாலுக்குப் பதில் வெங்கடேஷ் நடிக்கிறார். இந்திப் பட இயக்குநர் சக்ரி இயக்குகிறார்.
கமல்ஹாஸனின் சொந்தப் பட நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனலும், யுடிவியும்  இணைந்து தயாரிக்கும் படம் இது.
இந்தப் படத்துக்காக ஒரு நிமிடம் ஓடக்கூடிய டிரைலர் ஒன்றையும் கமல் தயாரித்துள்ளார்.
பிரபல எழுத்தாளர் த.ஜெயகாந்தன் ஏற்கெனவே உன்னைப் போல் ஒருவன் எனும் திரைப்படத்தை இயக்கி, பெரும் வெற்றி கண்டார். தமிழ் திரைப்பட வரலாற்றில் இன்றும் ஒரு மைல் கல்லாகத் திகழ்கிறது ஜெயகாந்தனின் அந்தப் படம்.
அந்த சாதனையை கமலும் செய்ய வாழ்த்துவோம்!!
கந்தசாமி குழுவுடன் திருப்போரூர் மக்கள் மோதல்!
இந்த கோடையின் மிகப் பெரிய விருந்தாக வரவிருக்கும் கந்தசாமியின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஆனால் சில காமெடி காட்சிகளை மட்டும் எடுக்க வேண்டி இருந்ததால், சென்னையை அடுத்த திருப்போரூரில் கடந்த 3 நாட்களாக அந்தக் காட்சிகளை எடுத்து வருகிறார்கள்.
நேற்று மாலை இந்தப் படத்தின் சில காட்சிகள், அந்த ஊரின் முக்கியப் பிரமுகர் வீட்டின் வாசலில் நடைபெற்றுக் கண்டிருந்தது.
அப்போது வீட்டு உரிமையாளர் வெளியூர் போயிருந்தாராம். உடன் தனது குழந்தைகளையும் கூட்டிப் போயிருக்கிறார். வீடு திரும்பும்போது, முதலில் குழந்தைகளை மட்டும் வீட்டுக்கு அனுப்பியுள்ளார். ஆனால் அவர்களை அந்தப் பக்கம் விடமறுத்து இழுத்துத் தள்ளியுள்ளனர் படப்பிடிப்புக்கு காவலாக நிறுத்தப்பட்ட செக்யூரிட்டி ஆட்கள். அப்போது ஒரு காமெடி காட்சி படமாகிக் கொண்டிருந்ததாம்.
தகவல் தெரிந்ததும் கடுப்பான வீட்டு உரிமையாளர் அந்த செக்யூரிட்டிகளுடன் கடுமையான வாய்த் தகராறில் இறங்க, அவருக்கு ஆதரவாக ஊர் பொதுமக்களும் சேர்ந்து கொள்ள பெரும் பிரச்சினையாகிவிட்டது. படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது.
பின்னர் இயக்குநர் சுசிகணேசனும் மன்சூர் அலிகானும் வடிவேலுவும் அந்த வீட்டு உரிமையாளர் மற்றும் பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர். அதன் பிறகுதான் மீண்டும் படம் பிடிக்கவே அனுமதித்தார்களாம்.
10 ஏப்ரல் 2009
இதுவரை பார்க்காத ரஜினி…! - எந்திரன் பற்றி மனம் திறக்கும் ஷங்கர்!
இருப்பது கோடம்பாக்கமாக இருந்தாலும், ஹாலிவுட் தரத்தில் சிந்தித்து அசத்தல் பொழுதுபோக்குப் படங்களைத் தருவதில் கில்லாடி எனப் பெயரெடுத்தவர் இயக்குநர் ஷங்கர்.
இவர் காண்பதெல்லாம் காஸ்ட்லி கனவுகள்… உயர்ந்த எண்ணங்கள், அதைவிட உயர்வான  பட்ஜெட், எப்போதும் ரசிகனை மகிழ்வித்துக் கொண்டே இருக்கும் நேர்த்தியான, ரசனை  மிகுந்த பொழுதுபோக்கு, அர்த்தமுள்ள நகைச்சுவை என தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய  ரசனையை அறிமுகப்படுத்திய பெருமை ஷங்கருக்கு உண்டு. 
சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து சிவாஜி என்ற பிரம்மாண்டத்தைத் தந்த ஷங்கர், மீண்டும் அதே ‘ஸ்டைல் சாம்ராட்டு’டன் இணைந்து எந்திரன் - தி ரோபோ படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். ஹாலிவுட் படங்களை மிஞ்சும் தொழில்நுட்பம், இந்தியாவின் படைப்புத் திறனை உலகுக்குப் பறைசாற்றும் முனைப்புடனும் ஷங்கர் உருவாக்கும் இந்த ரோபோ பற்றித்தான் இன்று சினிமா உலகம் முழுக்கப் பேச்சு.
சிவாஜி திரைப்படம் உருவாகி, ரிலீசுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் பரபரப்பாக செய்திகளில் உலாவர ஆரம்பித்தது. ஆனால் ரோபோ என்ற பெயர் அறிவிக்கப்பட்ட கணத்திலிருந்தே மீடியா முழுக்க அது பற்றிய செய்திகளே ஆக்கிரமித்து நிற்கின்றன.
தனது படங்களைப் பற்றிய ரகசியங்களைக் காப்பதில் ஷங்கருக்கு இணை அவர்தான். யாரும் எதிர்பாராத நேரத்தில் ஆரம்பித்து, எதிர்பாராத நேரத்தில் முடித்துவிட்டுத் திரும்புவது அவரது வழக்கம்.
ஹைதராபாத் ஸ்டுடியோவில் பிரமாண்ட அரங்கில் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கிறது என யாராவது அரைவேக்காட்டுத்தனமாக பிட் போட்டுக் கொண்டிருக்கும்போதே, ஷங்கர் ஹாய்யாக தனது சென்னை வீட்டில் நீச்சல் குளத்தில் மேயும் மீன்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பார். அதுதான் ஷங்கர்.
எந்திரன் குறித்து அவர் இதுவரை யாருடமும் வெளிப்படையாகப் பேசியதில்லை. ஆனால் முதல்முறையாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ அவரது சிறப்புப் பேட்டியை வெளியிட்டுள்ளது. அதன் சில பகுதிகளை மட்டும் இங்கே தமிழில் தருகிறோம்.
சூப்பர் ஸ்டாரைப் போலவே யாரும் எதிர்பாராததைச் செய்ய வேண்டும் என்ற உணர்வு மிக்கவும். இல்லாவிட்டால் மீண்டும் மீண்டும் ஷங்கருடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என ரஜினி வெளிப்படையாகச் சொல்வாரா!
எந்திரன் - என்ன நிலை இப்போது?
இதுவரை மூன்று பாடல் காட்சிகளைப் படமாக்கி முடித்திருக்கிறார்கள். அவற்றில் இரண்டு பெருவில். மற்றொன்று பிரபுதேவா நடன அமைப்பில், ஹைதராபாத் பிலிம் சிட்டியில். முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இன்னும் ரோபோ சம்பந்தமான காட்சிகள் எடுக்க வேண்டியுள்ளதாம்.
படம், அதை தான் உருவாக்கும் விதம் குறித்து இப்படிக் கூறுகிறார் ஷங்கர்:
“என் படங்கள் ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக அமைய வேண்டும் என விரும்புகிறேன். அதனால் ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து உருவாக்குகிறோம். சரியான முன் தயாரிப்பு இல்லாமல் ஒரு சின்ன காட்சியைக் கூட நாங்கள் எடுப்பதில்லை. எந்த சமரசமும் இல்லாமல், மிகுந்த கவனத்தோடுதான் நான் எல்லா படங்களையும் உருவாக்குகிறேன். ஆனால் எந்திரனுக்கு அதையெல்லாம் விட 10 மடங்கு கூடுதல் கவனம் செலுத்துகிறோம்.
சரியான முறையில், உரிய தரத்தில் கொடுத்தால் தமிழில் ஃபேண்டஸி கதைகள் ரசிகர்களின் வரவேற்பைப் பெறும்.
எந்திரனில் அனிமேட்ரானிக்ஸ் எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல காட்சிகளை எடுத்து வருகிறோம். தமிழ் சினிமாவுக்கு இது மிகவும் புதுசு. எலக்ட்ரானிக்ஸ், ரோபோ டெக்னாலஜியைப் பயன்படுத்தி, பொம்மைகளையும் உயிருள்ள மனிதர்களைப் போலவே நடமாட வைக்கும் இந்த முயற்சிக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.
பாடல்களை அழகழகாக, விதம் விதமாகப் படமாக்க எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அதற்காக எல்லாப் பாடல்களுக்கும் வெளிநாட்டுக்குப் போகும் ஆளல்ல நான். என் மற்ற படங்களில்கூட ஒரு சில பாடல்களுக்கு மட்டுமே வெளிநாடு. மற்றபடி எல்லாமே உள்நாடுதான்.
முதல்வனில் மிகப்பெரிய ஹிட் ‘உப்புக் கருவாடு…’ அதை இங்கேதான் எடுத்தேன். சிவாஜியில் கலக்கிய ‘அதிரடிக்காரன்…’ உள்ளூரில், அதுவும் தலைநகர் சென்னையில் எடுக்கப்பட்ட பாடல்தான்.
எந்திரனில் மிக அற்புதமான, விஞ்ஞான அடிப்படியிலான செட்களை உருவாக்கியுள்ளோம். முழுக்க முழுக்க எதிர்காலத்தில் உலகில் என்னென்ன மாறுதல்கள் வரும் என்பதைக் கணித்து உருவாக்கப்பட்ட செட்கள் அவை. மிகச் சிறப்பாக வந்துள்ளன.
இந்தப் படத்தில் மிகப் பெரிய ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. ஒவ்வொரு பாடல் அட்டகாசமாக எழுதப்பட்டு, அருமையாக மெட்டமைக்கப்பட்டுள்ளன…”
சரி… சூப்பர் ஸ்டார் பற்றி கூறுங்கள்…
சிவாஜிக்குப் பிறகு மீண்டும் ரஜினி சாருடன் பணியாற்றுவது மிக மிக மகிழ்ச்சியான ஒரு அனுபவம். அவருடன் பணியாற்றத் துவங்கிய பிறகுதான் அவர் எத்தனை பவர்ஃபுல் மனிதர், எத்தனை எளிமையானவர் என்பதைப் புரிந்து கொண்டேன். அவர் மிகப்பெரிய உயரத்திலிருக்கிறார். மிகச் சிறந்த மனிதர்களுடன் தொடர்பில் உள்ளார், ஆனாலும் அவர் காட்டும் பணிவு யாரையும் வியக்கச் செய்யும். அவருடன் பணியாற்றுபவர்களுக்கும் இந்தப் பணிவு வரும் என்பதே உண்மை.
இந்தப்படத்துக்கு ஐஸ்வர்யா ராய்தான் கதாநாயகி என்று முன்பே முடிவு செய்துவிட்டோம். கதைக்குத் தேவையான அனைத்து சிறப்பம்சங்களும் கொண்ட அற்புதமான டிகை அவர்.
எந்திரனில் தனி காமெடி ட்ராக் கிடையாது. கதையிலேயே தேவையான நகைச்சுவை உள்ளது. கருணாஸும் சந்தானமும்தான் காமெடி பகுதியை செய்கிறார்கள். இயல்பான நடிகர்கள்.
இந்தப் படத்தின் மொத்த சிறப்பு பற்றி?
சிவாஜியில் ஸ்டைல் ஸாங் பாத்திருப்பீங்க. இந்தப் படத்தில் அதை விட பலமடங்கு புதுமையான பாடல் இருக்கு. ரஜினி சார் பிரமிக்க வச்சிருக்கார். அந்தப் பாடலுக்கு நடனம் அமைத்த பிரபு தேவாவே, ‘நான் இதுவரை இப்படி ஒரு கடினமான மூவ்மெண்டை அமைத்ததில்லை’ என்று என்னிடம் சொல்லும் அளவுக்கு பிரமாதமான, வித்தியாசமான ரஜினியையும், அவரது ஸ்டைல் நடனத்தையும் பார்க்கப் போகிறீர்கள்! என்கிறார் ஷங்கர்.
வாவ்… பல்ஸை எகிற வைக்கிறீங்க ஷங்கர் சார்!
-வினோ
என்வழி ஸ்பெஷல்
ஷங்கர் பேட்டி ஆதாரம்: டைம்ஸ் ஆப் இந்தியா
விண்டோஸ் 1.0 முதல் விண்டோஸ் 7 வரை - அனைத்தும் ஒரே இடத்தில்
Microsoft Windows Screen shots - Windows 1.0 to Se7en
Must See - Amazing Video of 101 Photoshop Tips   07 ஏப்ரல் 2009
சிம்ரன் குளித்ததைப் பார்த்தவர் யார்
நிச்சயம் நீங்கள் எதிர்ப்பார்த்து வரும் சுவாரசியம் இங்கு கிடைக்காது நேரத்தை விரயஞ் செய்ய விரும்பாதோர் ஏதாவது உருப்படியாகச் செய்யலாம்.
நம்மவர் திரைப்படத்தில் ஒரு காட்சி வகுப்பறைக்கு வரும் கமல் பாடத்தை துவங்காமல் ஒரு சினிமா பாடலின் முதல் வரியை பாடுவார். உடனே மாணவர்கள் எல்லாம் அடுத்த வரியைப் பாடும் போது இது சினிமாவில் உங்களுக்கு பிடித்த ஊடகத்தில் வந்ததால் ஞாபகம் வைத்துள்ளீர்கள். அதுபோல உங்களுக்கு பிடித்தாற் போல் கற்பித்தல் என் கடமை என்று சொல்வார்.
இப்படித்தான் மாணவர்களுக்கு science ஐ எப்படி இலகுவாக கொடுக்கலாம் என யோசித்த போது ஏலவே நடைமுறையில் உள்ள சில நுட்பங்கள் ஞாபகம் வந்தது. படித்து பாருங்கள் உங்களுக்கு தெரிந்து ஏதும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் பயன் படுத்திக் கொள்கிறேன்.
9 கோள்களையும் (இப்போது எட்டு) ஞாபகம் வைக்க ஒரு எளிய முறை
My very educated mother just show us nine planets இதில் ஒவ்வொரு சொல்லினதும் முதலெளுத்தைப் பார்த்தால்
M- Mercury, V-Venus, E-Earth, M-Mars, J-Jupiter, S-Saturn, U- Uranus, N-Neptune, P-Pluto
ஆவர்த்தன அட்டவணை எல்லோருக்கும் தெரியும் அதை மனனம் செய்ய மாணவர் மத்தியில் புழங்கும் ஒரு வார்த்தை விளையாட்டு
முதல் இருபது மூலகங்களை(elements) மனனம் செய்ய பயன்படுகிறது.
Hello hero little Baby bens car number O five Neeyum Naanum MGR Alla Sivaji Pathmini Saroja குளித்ததை Aru kanaala கண்டது
H- Hydrogen, H-helium, L-lithium, B-Boron, Be- Beryllium, C-carbon, F-Florin, Ne-Neon, Na- Sodium( Natrium) ,Mg-Magnesium , Al- Aluminium, Si- Silicon, P-phosphorus, S-sulphur, கு-குளோரின், Ar-Argon, K- potassium, க- கல்சியம்
சிவாஜி, MGR, பத்மினி, சரோஜா எனப் பெயர்களை பார்த்தால் இது ரொம்பப் பழசு போல் தெரிகிறது. சிவாஜி குளிப்பதில் அத்தனை சுவாரசியம் இல்லாததால் அதை சிம்ரன் என மாற்றலாம் என நினைக்கிறேன். (அப்பாடா தலைப்பையும் பதிவையும் தொடர்பு படுத்தியாச்சு)
இன்னுமொன்று தடையி(resistor) ஒன்றினது தடைப் பெறுமானத்தைக் காண அதிலுள்ள நிற வளையங்களைப் பயன் படுத்த வேண்டும். அந்நிற வளையங்களுக்கு உரிய பெறுமானத்தை பின்வரும் முறையில் ஞாபகம் கொள்ளலாம்.
B.B. ROY of Great Britain had a Very Good Wife
இங்கு முதலாவது B க்கு 0 என ஆரம்பித்து தொடர்ச்சியாக அதன் பெறுமானங்கள் கூடி wife இல் வரும் w க்கு 9 என முடியும். குறித்த பெறுமானத்துக்குரிய வளையத்தின் நிறம் அதற்குரிய எழுத்தினால் காட்டப்பட்டுள்ளது.
ஒளிக்கதிர் ஐதான ஊடகத்திலிருந்து அடர்ந்த ஊடகத்தை நோக்கிப் போகையில் செவ்வனை நோக்கி முறியும் என்பதை " ஐயோ அடிக்காதே நோகுது" என ஞாபகம் கொள்ளலாம்.
வானவில்லின் ஏழு நிறங்களுடன் தொடர்புப் பட்ட VIBGYOR அனைவரும் அறிந்தது. தமிழில் இப்படியும் சொல்லலாம் " ஊத்தைக் கந்தையா நீ பச்சை மரத்தடியில் செக்கச் சிவப்பாய்" முதல் எழுத்துக்களை கவனியுங்கள்.
மூலகங்களின் தாக்க வீதம் கூடிச் செல்லும் ஒழுங்கை காணும் முறை 1950 களின் இலங்கை அரசியல் நிலவரத்தை மையமாகக் கொண்டது.
" பொன்னார் பிளான் வெறும் பாதகச் செயல் ஐயா ஈழத் தமிழர் இலங்கை நாட்டில் அல்லலுறும் மக்கள் சோகத்தால் கண்ணீரைப் பொழிந்தனர்"
முதல் எழுத்துகளின்  படி
மூலகங்களாவன பொன்,பிளாட்டினம்,வெள்ளி,பாதரசம்,செப்பு,ஐதரசன்,Pb,இரும்பு,நாகம்,அலுமினியம்,மக்னீசியம்,சோடியம்,கல்சியம்,பொட்டாசியம்
இது முற்றிலும் சரியானதாக இப்போது தோன்றவில்லை ஆனால் சில மாற்றங்களுடன் பயன்படுத்தலாம்.
நேரத்தை தின்றிருந்தால் மன்னியுங்கள்
எதற்கும் திட்டியேனும் ஒரு பின்னூட்டமும் தமிழ்மணம் தமிழிஷ் இல் வோட்டும் போட்டுடுங்க.
இணையத்தில் உலவும்போது கேடு விளைவிக்கும் தளங்களைக் கண்டறிய
சட்டத்தில் உள்ள ஓட்டைகளை குற்றம் செய்வபவர்கள் சாதகமாகப் பயன்படுத்துவார்கள். அதே போல உலவியின் நிரலில் உள்ள பிழைகளை அறிந்திருப்பவர்கள் (hackers), அதனை அவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அதற்கேற்ற எதிர்நிரல் (malicious code) ஒன்றை எழுதி அதை இணையத் தளத்தில் கோர்த்திருப்பார்கள்.
அந்த குறிப்பிட்ட சில தளங்களில் நாம் உலா வரும் வேலையில், அவை நமது கணினியில் பாதகம் விளைவிக்கக் கூடிய செயல்களைச் செய்ய ஆரம்பிக்கும். ஏதேனும் குற்றச் செயல்களில் அந்த நிரல்கள் ஈடுபட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் அதன் செயல்பாடுகளை நாம் அறியோம்.
நம்மிடம் நல்ல வைரசு எதிர்ப்புத் தொகுப்பான் (anti virusl) இருந்திருக்கும். நாமும் அதை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டே இருப்போம். எனினும் சில நேரங்களில் அதுவும் கையை விரித்துவிடும்.
உலாவரும்போது பாதுகாப்புத் தன்மையை (security) அதிகரிப்பதற்காகவே சிறப்புக் கருவிகள் (tools) சிலவற்றை இங்கே காண்போம்.
மிகப் பயங்கரமான தளங்களை நாம் உலவ முயற்சித்தால் இந்தக் கருவிகள் நமக்கு எச்சரிக்கை விடுத்து இப்போது தளத்தைப் பார்வையிடலாகாது - அதில் கேடுவிளைவிக்கக் கூடிய ஆபத்து உள்ளது என சிவப்பு அறிக்கை (red alert) விடும்.
நல்ல தளங்கள் எவை? கெட்ட தளங்கள் எவை - என்பதை இதன் மூலம் எளிதாக அறிந்திடலாம்.
நம்பகமான உலாவலுக்கு இவற்றை நாளும் பயன்படுத்தலாம்.
உலவியில் தள முகவரியைத் தட்டி Enter அழுத்திய உடனேயே எச்சரிக்கை செய்திடும் கருவிகள் இவை.
இந்தக் கருவிகள் பற்றிய மேலதிக விபரங்களை கீழ்க்கண்ட சுட்டிகளை அழுத்தித் தெரிந்துகொள்ளவும்.
11 பேரை ஏமாற்றி மணந்த பெங்களூர் அழகி
பணத்துக்கு ஆசைப்பட்டு அடுத்தடுத்து 11 பேரை மணந்து  கோடிக்கணக்கில் நகை, பணத்தை சுருட்டிய பெங்களூர் அழகியை போலீசார் கைது  செய்தனர்.
இந்த நூதன மோசடி பற்றிய விவரம் வருமாறு-
பெயர் கவுசர்  பேகம். வயது 26. பார்ப்பதற்கு சினிமா நட்சத்திரம் போல அழகாக இருப்பார். இவருக்கு  உம்மே கவுசர், கவுசர் சல்மா என்ற புனை பெயர்களும் உண்டு. பெங்களூர் எச்.பி.ஆர். லே  அவுட் 2-வது பிளாக்கில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் தனது 16 வயதிலேயே  கல்யாண மோசடியை ஆரம்பித்து விட்டார். இதற்கு அவருடைய பெற்றோரும் உடந்தையாக  இருந்தனர்.
கவுசர் பேகத்துக்கு மும்பை ஐதராபாத் போன்ற முக்கிய நகரங்களில்  ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். அவர்களிடம் கவுசரின் போட்டோக்கள் அடங்கிய ஆல்பம்  இருக்கும். அந்த படங்களில் பெற்றோருடன் சேர்ந்து கவுசர் அடக்க ஒடுக்கமாக கல்லூரி  மாணவி போல போஸ் கொடுத்து இருப்பார். திருமணத்துக்கு பெண் பார்த்துக்கொண்டு  இருக்கும் தொழில் அதிபர்களை கவுசரின் ஏஜெண்டுகள் சந்தித்து, ``இந்த பெண்ணுக்கு  மாப்பிள்ளை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்''. வசதி குறைவுதான் என்றாலும்  உங்களுக்கு பிடித்து இருந்தால் பேசி முடிக்கலாம் என்று  சொல்வார்கள்.
கவுசரின் போட்டோவை பார்த்தவுடனேயே மயங்கி போய்விடும் தொழில்  அதிபர்கள் கவுசரின் ஏஜெண்டுகள் விரிக்கும் வலையில் எளிதில் விழுந்து விடுவார்கள்.  ``பணம் என்னய்யா பணம் இப்படிப்பட்ட அழகியைத்தான் தேடிக்கொண்டிருந்தேன் உடனே பேசி  முடி'' என்று உடனே பச்சைக்கொடி காட்டுவார்கள். அடுத்த சில நாட்களில் திருமண விழா  அமர்க்களமாக நடந்து முடியும்.
புதிய கணவருடன் கவுசர் தேனிலவுக்கு செல்வார்.  நாட்கள் இன்பமாக கழியும். கவுசரின் அன்பில் உருகிப்போகும் கணவர், பணத்தை தண்ணீராக  செலவழித்து நகைகள், விலை உயர்ந்த துணிகள் என்று கேட்டதையெல்லாம்  வாங்கிக்குவிப்பார். மனைவியை நடமாடும் நகைக்கடையாக மாற்றுவார்.
ஒரு நாள்  காட்சி மாறும். கணவர் ஆபீசுக்கு சென்று இருக்கும் நேரத்தில் நகைகள் மற்றும்  வீட்டில் இருக்கும் ரொக்கப்பணத்தை ஒட்டுமொத்தமாக சுருட்டிக்கொண்டு கவுசர் அம்மா  வீட்டுக்கு ஓடி விடுவார். அதோடு இந்த நாடகம் முடிந்து விடாது. மேலும் படிக்க 
வருண் காந்தியை ரோலர் ஏற்றி கொன்றிருப்பேன் லாலு பிரசாத் ஆவேசப்  பேச்சு 
சென்னையில் ஒரே வாரத்தில் 2 பேரை மணந்த புரட்சி பெண் 05 ஏப்ரல் 2009
எதுவும் வேணாம்; தனிமைதான் வேண்டும்!-ரஹ்மான
 திருட்டுத்தனமாக வெளியாகிய விண்டோஸ் 7...?

Here are some details from the x86 iso:
File Name : 7068.0.090321-1322_x86fre_client_en-us_Retail_Ultimate-GRC1CULFRE_EN_DVD.iso
Size : 2.53GB
MD5: 9dbc20dc21e09f926c530799918215a0
SHA1: fd1f67a2727fe6aaf1c141ff34ae9af77a24a172
CRC32 : 26312514
And here is a little info about some of the changes:
- Overall performance improvement with some re-work of the kernel (most likely to remove some diagnostic branches) in preparation for RC.
- Notepad.ini on startup (not really a bug)
- Fixed WEI assessment code, more accurate
- A newer build of IE8 optimized for 7068
- Memory management has been optimized a little
- Added and replaced numerous drivers (which solves a lot of issues)
- Fixed some Windows Update issues
- Fixed some network discovery and wireless issues
- Fixed some AERO issues
- Improvements to Windows Media Center and media management
- Changed the TCP half open limit from 10 to 120
- Improved support for external storage devices (ie. thumbs, NAS, etc.)
- Improved startup and shutdown times
- Added support for MP4 files and standard codecs
- Enhanced printer support
- Fixed some issues when doing an update from earlier builds and Vista
- Fixed some dual display ichchuyes
Windows 7 Build 7068 x86 File Name : 7068.0.090321-1322_x86fre_client_en-us_Retail_Ultimate-GRC1CULFRE_EN_DVD.iso Size : 2.53GB MD5: 9dbc20dc21e09f926c530799918215a0 SHA1: fd1f67a2727fe6aaf1c141ff34ae9af77a24a172 CRC32 : 26312514 Download Windows 7 x86 build 7068

File name : 7057.0.090305-2000_x86fre_client_en-us_Retail_Ultimate-GB1CULFRER_EN_DVD
File size : 2.51 GB
MD5 2a3863afe3453d1be642201fd3260ab2
CRC E34E099B CRC E34E099B
SHA1 0f32dfe92d544f4690ab91c02b59dba665d4ca0f SHA1 0f32dfe92d544f4690ab91c02b59dba665d4ca0f
Download : Windows 7 Build 7057
உங்களது தட்டச்சு வேகத்தை அளவிடுவது எப்படி?
பல ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தனியாக தட்டச்சு நிலையங்கள் (Type writing institutes) இருந்தன. அவற்றில் பல்வேறு காரணங்களுக்காக (!) ஆண்களும், பெண்களும் கூட்டம் கூட்டமாக அலை மோதுவர்.
மோகன் நடித்த 'விதி' படத்தில் அவர் தட்டச்சு பயில்வதற்காக, மனோரமா நடத்தி வந்த தட்டச்சுப்பயிலகத்தில் சேர்ந்து அடித்த லூட்டியை எல்லோரும் அறிவோம்.
ஆனால் இப்போது வீட்டுக்கு வீடு கணினி மயமாகி விட்டது. அதனால் நாம் கணினியிலேயே தட்டச்சுப் பயிலலாம்.
உங்களது தட்டெழுதும் வேகத்தை உடனடியாக அறிவதற்காக ஒரு இணையத்தளம் உள்ளது.
தள முகவரி : http://speedtest.10-fast-fingers.com/
அந்தத் தளத்தில் திரையில் தெரியும் வரிகளை அதன் கீழ் உள்ள text box ல் type செய்ய வேண்டும். சரியாக ஒரு நிமிடம் முடிந்தவுடன் அறிக்கை(result) வெளிவரும். அதில் நிமிடத்தில் எத்தனை வார்த்தைகளை தட்டும் வல்லமை பெற்றுள்ளீர்கள் என அறியலாம்.
எனக்கு 60 வார்த்தைகள் / நிமிடம் இருப்பதாக அந்தத் தளத்தின் அறிக்கை முடிவு காண்பித்தது. அதைத்தான் நீங்கள் கீழே காண்கிறீர்கள்.
60 words
சிறு குறிப்பு : 
உங்களது தட்டெழுதும் வேகத்தை அதிகரிக்கவோ / புதிதாகத் தட்டெழுத்துப் பயிலவோ இந்த மென்பொருளைத் தரவிறக்கி கணினியில் நிறுவிப் பயன்படுத்தவும்.
ஒளிக்களஞ்சியம் : 
கணினியில் தொடர்ந்தாற்போல் வேலை செய்வபர்களுக்கு வரும் ஒரு புதிய நோய் குறித்த காணொளி. நோயின் பெயர் carpal tunnel syndrome


