





![]() | ||
|
நம்மில் பலர் அழகிய படங்களை டெஸ்க்டாப் வால்பேப்பர்களாக கணினியில் வைத்து கொள்வர்.ஒவ்வொரு முறையும் நாமே அவற்றை மாற்றாமல் வால்பாபா(Wallpapa)என்னும் மென்பொருள்(விண்டோஸ் மட்டும்)நமது கணினியின் வால்பேப்பர்களை மேலாண்மை செய்கிறது.நம்மிடம் உள்ள அழகிய படங்களை ஒரு போல்டர் இல் சேமித்து இந்த மென்பொருள் மூலம் அனைத்தையும் தேர்ந்தெடுத்தால் நாம் விரும்பிய கால அளவுகளில் வால்பாபா மென்பொருள் வால்பேப்பர்களை மாற்றும்.
இந்த மென்பொருளை கணினியில் நிறுவிய பிறகு,மேலே உள்ள "ADD" என்னும் பொத்தானை சொடுக்கி ஏற்கனவே வால்பேப்பர்களை சேமித்து வைத்துள்ள போல்டரை தேர்ந்தெடுக்கவும்.இந்த மென்பொருளை தரவிறக்க http://www.phoeniixz.net/software.html தளத்திற்கு செல்லவும்
தன் ஆஸ்தான இயக்குனர் லோகிததாஸ் சமீபத்தில் மாரடைப்பால்
காலமான அதிர்ச்சியில் இருக்கும் மீரா ஜாஸ்மினுக்கு, அதற்கு முன்பே காதலர் மாண்டலின் ராஜூவுடனான பிரிவு சோகத்தை தந்து கொண்டிருந்தது.
இந்நிலையில் நடிகை அம்பிகாவின் மறைமுகமான மகள்தான் மீரா என மீடியாக்கள் ஒரு குண்டு தூக்கி போட்டுள்ளது. இதை கேட்ட மீரா, அப்படி என்றால் இப்போது உள்ள பெற்றோருக்கு தத்து பிள்ளையா நான் என கேட்டு அதிர்ச்சியில் உறைந்துள்ளாராம்.
விஷூவல் கம்யூனிகேஷன்ஸ் படித்துவிட்டு அர்ஜூன்கிட்ட இரண்டு படங்களில் உதவி இயக்குநராக இருந்த விஷால் செல்லமே’ன்னு ஹீரோவாகிவிட்டார்.
இவர் தனது படங்களின், கதையில் ஆரம்பித்து காஷ்ட்யூம் வரைக்கும் அனைத்து விசயங்களிலும் மூக்கை மட்டுமல்ல தலையையும் நுழைப்பது வழக்கம்.
செல்வராகவன் இயக்கத்தில் நடிப்பதாக முடிவெடுத்து விட்டபிறகு அவருடன் ஓட்டலில் சந்தித்து படம் குறித்து பேசியிருக்கிறார். இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்தவர் இப்படத்தை தயாரிப்பதாக இருந்த தெலுங்கு தயாரிப்பாளர்.
படம் பற்றிய பேச்சில் விஷால் கதை விசயத்தில் முதலில் மூக்கை நுழைத்து மெல்ல மெல்ல தலையை நுழைத்தாராம். கடுப்பான செல்வா, கதையைப்பற்றி உனக்கென்ன தெரியும்?வாயை மூடு...என்று எகிறியிருக்கிறார்.
சும்மா விடுவாரா ஹீரோ, நீ மொதல்ல வாயை மூடு... என்று பதிலுக்கு எகிறினாராம்.
எக்குதப்பா மாட்டிக்கிட்டோமேன்னு புலம்பினாலும் சட்டுன்னு அந்த இடத்தை விட்டு எகிறிட்டாராம் புரடியூசர்.தமிழ்மகன்