Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

02 அக்டோபர் 2009

ஆண்ட்ரியா புகார்..செல்வராகவனை வெளியில் தள்ளிய நட்சத்திர ஓட்டல்!

ஆண்ட்ரியா கொடுத்த புகார் காரணமாக இயக்குநர் செல்வராகவனை 'கழுத்தைப் பிடித்து' வெளியில் தள்ளினர் சென்னையின் பிரபல நட்சத்திர ஹோட்டல் நிர்வாகிகள். இந்த பரபரப்புச் சம்பவம் செவ்வாய்க்கிழமை நடந்துள்ளது.
Andrea Jeremiah
மனைவி சோனியா அகர்வாலைப் பிரிந்து தனியே வசிக்கிறார் இயக்குநர் செல்வராகவன். நடிகை ஆண்ட்ரியா மீது இவர் கொண்ட மோகன்தான் இருவருக்கும் இடையே விவாகரத்து வரை மோதல் எழக் காரணம் என்று கூறப்படுகிறது. இந் நிலையில் ஆண்ட்ரியாவும் செல்வராகவனும் ஜோடியாக பல இடங்களில் சுற்றித் திரிவது ஊரறிந்த ரகசியமாகிவிட்டது. கடந்த செவ்வாய்க்கிழமையன்று செல்வராகவனும் ஆண்ட்ரியாவும் சென்னையின் அந்த பிரபல நட்சத்திர ஹோட்டலுக்குச் சென்றுள்ளனர். அங்கு டிஸ்கொத்தேயில் பங்கேற்று டான்ஸ் ஆட ஆண்ட்ரியா விரும்பியிருக்கிறார். ஆனால் டான்ஸ் ஆட வேண்டாம் என செல்வராகவன் தடுத்துவிட்டாராம். மனைவியா என்ன சொன்னதும் அதைக் கேட்டு நடக்க...! செல்வராகவன் பேச்சை சட்டை செய்யாமல் ஆண்ட்ரியா டிஸ்கொத்தே ஜோதியில் ஐக்கியம் ஆகியுள்ளார். இதனால் கோபம் அடைந்த செல்வராகவன், அவரை தடுத்து இழுத்துள்ளார். இதையடுத்து அங்கிருந்து வேகமாக கிளம்பிய ஆண்ட்ரியா ஹோட்டல் நிர்வாகியிடம் செல்வராகவன் மீது புகார் செய்தாராம். உடனே அங்கு வந்த ஹோட்டல் ஊழியர்கள் செல்வராகவனை வெளியே செல்லுமாறு கேட்டுள்ளனர். அதற்கு அவர் மறுக்கவே, பலவந்தமாக இழுத்துச் சென்று வெளியே விட்டுள்ளனர். இச்சம்பவம் ஹோட்டலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிக் கேட்டால் பதிலேதும் சொல்லாமல் போனைத் துண்டித்துக் கொண்டார் செல்வராகவன்.

இறுதிப்பந்தில் அவுஸ். வெற்றி - சாம்பியன் திரோபியில் இருந்து வெளியேறுகிறது இந்தியா!

PDF Print E-mail

இறுதிப்பந்தில் அவுஸ்த்திரேலியா அடித்த அடி, ஐசிசி அரையிறுதிக்குள் நுழையும் இந்தியக்கனவை தகர்த்தெறிந்து, வீட்டுக்கு திருப்பிவிட்டது.நேற்றை பாகிஸ்த்தானுடனான போட்டியில் அவுஸ்திரேலியா தோற்றால் தான், இந்தியா அரையிறுதிக்குள் செல்ல கொஞ்சமாவது வாய்ப்பிருந்தது.

ஆனால், எப்போதும் இந்தியர்கள் மீது அவுஸ்த்திரேலியர்களுக்கு உள்ள இனவெறிப்பாசம், அதோடு எதிராக விளையாடிவர்கள் பாகிஸ்த்தானல்லவா! கடைசிப்பந்தில் வெள்ளையர்களை வெற்றிபெறச்செய்தும் விட்டனரோ.மேற்கிந்தியாவுடன் இலகுவெற்றி பெற்றும், போட்டிகளில் இருந்து வெளியேறுகிறது இந்தியா. பெற்ற ஆறுதல் வெற்றிக்காக மூன்று புள்ளிகள், கிடைத்தாலும், பாகிஸ்த்தானுடன் முதல் போட்டியில் தோல்வி, அடுத்த போட்டியில் மழையால் எந்த புள்ளிகளும் எடுக்க முடியாத நிலை, இவை அனைத்துமே, இந்தியாவிற்கு பாதகத்தை தான் ஏற்படுத்தியது.நேற்று நடைபெற்ற இரு போட்டிகளில் முதலில் ஆரம்பமான அவுஸ்த்திரேலியா - பாகிஸ்த்தான் இடையிலான போட்டி விறுவிறுப்புக்கு குறைவில்லை. இந்திய ரசிகர்களும் பார்த்துக்கொண்டுதான் இருந்திருப்பார்கள். பரம எதிரியாக இருந்தாலும், இந்த போட்டியில் பாகிஸ்த்தான் தான் வெற்ற வேண்டும் என பிரார்த்திக்க வேண்டிய துர்பாக்கிய நிலை இந்திய ரசிகர்களுக்கு. ஆனால் நான் தோற்றாலும் பரவாயில்லை. இந்தியா.... என நினைத்து விளையாடியதோ? பாகிஸ்த்தான்...! முதலில் துடுப்பெடுத்தாடியது பாகிஸ்த்தான். ஆரம்ப துடுப்பாட்டவீரர் கம்ரான் அக்மல் (44) விளாசினார். அடுத்தடுத்து வந்தவர்கள் அனைவரும் விறுவிறுவென ஆட்டமிழந்தனர். ஐந்தாவது விக்கெட்டுக்காக யூசப் (45), மிஸ்பா உல் ஹுக் ஜோடி (41) இணைய மீண்டும் ஆட்டம் சூடு பிடிக்கத்தொடங்கியது. இறுதியில் ஐம்பது ஓவர்கள் முடிவில் 205 ஓட்டங்களை குவித்தது பாகிஸ்த்தான்.பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்த்திரேலியாவினது ஆட்டமும் பிரகாசிக்க தவறியது. மைக் ஹஸ்ஸி மட்டும் 64 ஓட்டங்களை குவித்தார். 4 வது விக்கெட்டுக்கு பின்னர் களமிறங்கியவர்கள் வந்த வேகத்திலேயே பவிலியன் திரும், 45 வது ஓவரில் 8 விக்கெட்டுக்களை இழந்து 187 ரன்களை மட்டுமே பெற்றிருந்தது அவுஸ்த்திரேலியா! லீ, நதன் ஹௌவ்ரிட்ஸ் இருவரும் ஒவ்வொரு பந்துக்கும் நிதானமாக ரன்களை குவிக்கத்தொடங்கினர். இறுதிப்பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், வேகமான எடுக்கப்பட்ட ரன் அவுஸ்த்திரேலிய வெற்றியை உறுதி செய்தது.ஆட்டநாயகனாக மைக் ஹஸ்ஸி தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே பாகிஸ்த்தான் அரையிறுதிக்குள் நுழைந்திருந்த நிலையில், அவுஸ்த்திரேலியாவும் செல்கிறது தற்போது. மற்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 129 ஓட்டங்களையே குவித்திருக்க, இந்தியா பதிலுக்கு துடுப்பெடுத்தாடி இலகு வெற்றி பெற்றது. ஆனால் பயனில்லாமல் போனது. முதலாவது அரையிறுதிப்போட்டி, நாளை அவுஸ்த்திரேலிய இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலும், இரண்டாவது அரையிறுதிப்போட்டி, நாளை மறுதினம் நியூசிலாந்து பாகிஸ்த்தான் அணிகளுக்கு இடையிலும் நடைபெறுகிறது. இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு செல்கின்றன.

உங்கள் கருத்துக்கள்

சினிமாவுக்கு நிலா குட்பை!

சினிமாவுக்கு குட்பை சொல்கிறார் நடிகை [^] நிலா. ஜெகன்மோகினிதான் தான் நடித்த கடைசி படம் என்றும் அவர் கூறியுள்ளார். அன்பே ஆருயிரே படத்தில் நடிக்க சிம்ரனின் கால்ஷீட் கிடைக்காததால், அதே பஞ்சாபிலிருந்து எஸ்.ஜே.சூர்யாவால் அழைத்து வரப்பட்டவர் நிலா. அந்தப் படம் [^] நன்றாக ஓடியது. ஆனால் நிலாவின் மார்க்கெட் மதிப்புதான் கூடவில்லை. அதன் பிறகு சில படங்களில் அவர் நடித்தும் கூட அவருக்கு நட்சத்திர அந்தஸ்தே வரவில்லை. இடையில் ஆர்யாவுடன் காதல், படப்பிடிப்பிலிருந்து ஓடல் என்று சர்ச்சைகளிலும் சிக்கினார். தெலுங்கிலும் நடித்துப் பார்த்தார். எதுவும் தேறவில்லை. தற்போது நமீதா [^] நடிக்கும் ஜெகன்மோகினியில் நடித்துள்ளார். இந்த நிலையில் திரைப்படங்களில் நடிப்பதற்கு முழுக்குப் போட்டு விட்டாராம் நிலா. அதற்குப் பதிலாக நியூயார்க்கில் தான் நடத்தி வரும் ஹோட்டல் தொழிலில் கவனம் செலுத்தப் போகிறாராம். அந்த ஹோட்டலின் டெல்லி கிளையை விரைவில் திறந்து முழு நேர தொழிலதிபராக மாறத் திட்டமிட்டுள்ளாராம்.
Nila
எனக்கு நடிப்பு பொருத்தமானதாக இல்லை. இந்த திரைத் துறைக்கும் நான் பொருத்தமானவளாக இல்லை. எனக்கு நடிப்பு போரடித்து விட்டது. ஒருபோதும் நான் பெரிய ஸ்டார் ஆக வேண்டும் என்று நினைத்ததே இல்லை. ஜெகன்மோகினியுடன் எனது நடிப்பை நிறுத்துகிறேன். இதற்கு மேலும் நடிக்க எனக்கு ஆர்வம் இல்லை. நியூயார்க்கில் உள்ள ஹோட்டலின் கிளையை டெல்லி [^]யில் திறக்கப் போகிறேன். அந்தத் தொழிலில் முழு கவனத்தையும் செலுத்தத் திட்டமிட்டுள்ளேன் என்று கூறியுள்ளார் நிலா.

திருட்டுப் பட்டத்தால் அழகிப் பட்டத்தைத் துறந்த சிங்கப்பூர் அழகி!

Miss Singapore has given up her crown

miss-singapore-2009.jpg திருட்டுப்பட்டம் கட்டிக்கொண்ட சிங்கப்பூர் அழகி தன்னுடைய அழகிப் பட்டத்தை துறந்தார்.

2009 ஆண்டுக்கான சிங்கப்பூர் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரிஸ் லோ. ஆடைகள் மற்றும் அணிகலன்கள் வாங்குவதற்காக கிரெடிட் கார்டுகளை திருடினார் என்று இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனால் இவருக்கு பொதுமக்களிடையே உண்டான எதிர்ப்பு காரணமாக, தன்னுடைய அழகிப் பட்டத்தை துறந்தார்.

சிங்கப்பூர் அழகி ரிஸ் லோ கடந்த வருடம் ஒரு மருத்துவமனையில் பணியாற்றியபோது மற்றவர்களின் கிரெடிட் கார்டுகளைத் திருடி தனக்குத் தேவையான ஆடைகள், அணிகலன்கள் உள்ளிட்டவற்றை வாங்கினார் என்று உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்திக்கட்டுரை வெளியிட்டது. கிரெடிட் கார்டுகளைத் திருடி அவர் வாங்கிய பொருட்களின் மதிப்பு சுமார் 3 லட்ச ரூபாய் என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையின் விளைவாக அழகிப் பட்டத்தைத் துறந்தார் ரிஸ் லோ.

சிங்கப்பூர் அழகிப் போட்டியை நடத்திய ERM World Marketing நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ரிஸ்லோ தனது அழகிப் பட்டத்தை துறந்ததை உறுதிப்படுத்தி இருக்கிறது. அத்துடன் டிசம்பர் மாதம் தென் ஆப்ரிக்காவில் நடைபெறவிருக்கும் உலக அழகிப் போட்டியில் பங்கெடுக்கும் வாய்ப்பையும் ரிஸ் லோ இழந்துவிட்டதாகவும் கூறியுள்ளது.

ரிஸ் லோ மீது திருட்டுப் பட்டம் மட்டுமல்லாது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. அவருடைய ஆங்கிலம் சகிக்கவில்லை என்றும், பிகினி என்ற சொல்லைக்கூட அவரால் சரியாக உச்சரிக்க இயலவில்லை என்றும், சிங்கப்பூரின் பாரம்பரியத்தை, கலாசாரத்தை பிரதிபலிக்கும் எந்த அம்சமும் அவரிடம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும்விதமாகத் தான் அவர் தனது அழகிப் பட்டத்தை துறந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

குஷ்பு குடும்பம் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்தது!

மலேசியாவில் குஷ்பு, அவருடைய கணவர் சுந்தர் சி. சென்ற படகு கவிழ்ந்ததால், நடுக்கடலில் ஒரு மணி நேரம் தவித்தார்களாம். சுந்தர் சி. நடிக்கும் ஒரு படத்தின் பாடல் காட்சி மலேசியாவில் படமாக்கப்பட்டு வந்தது. கணவர் சுந்தர் சி.யுடன் நடிகை குஷ்புவும், அவர்களின் 2 மகள்களும் மலேசியா சென்று இருந்தார்களாம். நேற்று, மலேசியாவில் இருந்து 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ரடாங் என்ற தீவில் படப்பிடிப்பு நடந்தது. சுந்தர் சி.யும், நடிகை சுருதியும் ஆடிப்பாடுவது போன்ற காட்சியை படமாக்கிக் கொண்டிருந்தனர். குஷ்புவும், அவருடைய மகள்களும் கடற்கரையில் அமர்ந்து படப்பிடிப்பை பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போது திடீரென்று பயங்கர புயல் காற்று வீச தொடங்கியது. அதைத் தொடர்ந்து மழை பெய்ய ஆரம்பித்தது. உடனே படப்பிடிப்பு குழுவினர் அவசர அவசரமாக படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு, காமிரா மற்றும் கருவிகளுடன் ஒரு பெரிய படகில் மலேசியா [^]வை நோக்கி புறப்பட்டார்கள். வழியில், மழை அதிகரித்து, காற்று மிக வேகமாக வீசியது. மலேசிய கடற்கரையை அடைய அரை கிலோ மீட்டர் தூரம் இருந்தபோது, எதிர்பாராதவிதமாக கவிழ்ந்தது. படகில் இருந்த குஷ்பு உள்பட அனைவரும் கடலில் விழுந்தார்கள். அந்த இடத்தில், அதிர்ஷ்டவசமாக ஆழம் குறைவாக இருந்தது. அத்துடன் அருகில் ஒரு பாலமும் இருந்தது. அனைவரும் பாலத்தில் ஏறி அமர்ந்துகொண்டார்கள். பின்னர் வேறு ஒரு படகு மூலம் கரையை வந்தடைந்தார்கள். Kushboo with Daughters படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் ஓட்டலுக்கு திரும்பிய பிறகுதான், கடலில் 'கொந்தளிப்பு' ஏற்பட்ட தகவல் தெரிந்ததாம். எல்லோரும் உயிர் தப்பியதை எண்ணி, ஒருவரையொருவர் கட்டித்தழுவிக் கொண்டார்களாம். இதனால் அன்றைய படப்பிடிப்பு [^] ரத்து [^] செய்யப்பட்டதாம். இதெல்லாம் குறிப்பிட்ட அந்தப் படத்தின் பிஆர்ஓ பரப்பி வரும் செய்தி. வழக்கம்போல இது பப்ளிசிட்டி செய்தி [^]யா... அல்லது நிஜமாகவே நடந்ததா என்பது கடவுளுக்கே வெளிச்சம்!

வர இருக்கும் மொபைல்கள்

திருவிழா காலம் தொடங்கிவிட்டது. புதிய ஆடைகளுடன் வீட்டு சாதனங்களையும் புதியதாய் மாற்றும் வழக்கம் நம்மிடையே எப்போதும் உண்டு. மொபைல் போன்களைப் பொறுத்தவரை புதியதாய் என்ன வர இருக்கின்றன என்று அனைவரும் அறியும் வண்ணம், மொபைல் போன் நிறுவனங்கள் அறிவிப்பதில்லை. இருப்பினும் மற்ற நாடுகளில் அண்மையில் அறிமுகமான போன்கள், உலக அளவிலான கண்காட்சி மற்றும் கருத்தரங்குகளில் காட்சிக்கு வைக்கப்பட்ட போன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சில போன்களை நாம் நிச்சயமாக இங்கு விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். இவற்றின் சரியான விலை விற்பனைக்கு வருகையில் தெரியவரும்.

1.நோக்கியா என் 900:
வர இருப்பதில் முதல் இடத்தைப் பெறுவது நோக்கியா என் 900 ஆகும். இது என் 800 போனின் தொடர்ச்சி என யாரும் எண்ண வேண்டாம். இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் ஓப்பன் சோர்ஸ் அடிப்படையிலான மேமோ(Maemo) ஆகும். இதன் பிரவுசர் ARMCortexA8 மிக வேகமாக இயங்கும் திறன் கொண்ட புதிய பிரவுசர். இதில் தரப்படும்OpenGL ES 2.0 கிராபிக்ஸ் அக்ஸிலரேஷன், இந்த போனில் கிடைக்கும் காட்சிகளை முற்றிலும் புதிய அனுபவமாக்கிக் காட்டும். இதன் திரை 3.5 அங்குல டச் ஸ்கிரீன் திரை. ஸ்லைடாகி வரும் குவெர்ட்டி கீ போர்டு தரப்படுகிறது. 3ஜி போனாகக் கிடைக்கும் இதில் எட்ஜ் மற்றும் ஜி.பி.ஆர்.எஸ். ஆகிய தொழில் நுட்பங்கள் இணைந்து நெட்வொர்க் இணைப்பை எளிதாக்குகின்றன. Maemo பிரவுசர் மொஸில்லா தொழில் நுட்பத்தினால் இயக்கப்படுவது. அடோப் பிளாஷ் 9.4 தொகுப்பின் சப்போர்ட் தரப்படுகிறது. இதன் ஸ்டோரேஜ் 32 ஜிபி; இதனை 48 ஜிபி வரை நீட்டிக்கலாம். 3.5 மிமீ இயர்போன், ஹேண்ட்ஸ் பிரீ சாக்கெட், கார்ல் ஸெய்ஸ் ஆப்டிக்ஸ் மற்றும் டெஸ்ஸார் லென்ஸ் கொண்ட 5 மெகா பிக்ஸெல் ஆட்டோ போகஸ் கேமரா, டூயல் எல்.இ.டி. பிளாஷ் இணைந்து தரப்படுகிறது. எப்.எம் ரேடியோ மற்றும் ட்ரான்ஸ்மீட்டர் தரப்படுகிறது. இதன் விலை மார்க்கட்டிற்கு போன் வந்த பின்னரே தெரியும்.
2. எல்.ஜி. பி.எல். 40 சாக்லேட்:
எல்ஜி நிறுவனத்தின் சாக்லேட் மொபைல் போன் வரிசையில், அண்மையில் வெளியான மாடல் பி.எல். 40ஆகும். தன் வழக்கமான எஸ் கிளாஸ் யூசர் இன்டர்பேஸிலிருந்து சற்று விலகி மல்ட்டி டச் திறனுடன் இந்த போனை எல்ஜி வடிவமைத்துள்ளது. இந்த ஸ்லிம்மான, ஆனால் சற்று உயரமான, போனில் 4.01 அங்குல டச் ஸ்கிரீன் உள்ளது. இதன் வைட் ஸ்கிரீன் ரெசல்யூசன் 345 x 800 பிக்ஸெல்களாகும். இது ஒரு 3ஜி போன். நெட்வொர்க் இணைப்பிற்கு எட்ஜ் மற்றும் ஜிபிஆர் எஸ் தொழில் நுட்பம் தரப்பட்டுள்ளது. வை–பி நெட் இணைப்பு, A2DP இணைந்த புளுடூத் 2.1, யு.எஸ்.பி. 2, ஏ–ஜிபிஎஸ் சப்போர்ட் கொண்ட ஜி.பி.எஸ்., 1 ஜிபி ஸ்டோரேஜ், இயர்போன், ஹேண்ட்ஸ் பிரீ சாக்கெட், 5 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட ஆட்டோ போகஸ் கேமரா, இருவகை வீடியோ பார்மட் சப்போர்ட், எப்.எம். ரேடியோ மற்றும் ட்ரான்ஸ்மீட்டர், டோல்பி மொபைல் சவுண்ட் இஞ்சின் ஆகிய வசதிகள் தரப்பட்டுள்ளன. இதன் விலையும் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
3. சோனி எரிக்சன் எக்ஸ்பீரியா எக்ஸ் 2.
இந்த வரிசையில் வந்த முந்தைய போன்களைக் காட்டிலும் இது சற்று மேம்பாடு கொண்ட போன். ஸ்லிம்மாகவும் பார்ப்பதற்கு நளினமாகவும் இதன் தோற்றம் உள்ளது. இதன் கருப்பு நிறம் இதனை மிக அழகாகக் காட்டுகிறது. தரப்படும் குவெர்ட்டி கீ போர்டும் இணைந்து அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது விண்டோஸ் மொபைல் 6.5 ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் வெளிவரும். வழக்கமான வசதிகளுடன் குறிப்பிட்டுச் சொல்லும்படியான வசதிகள் பின்வருமாறு:
போனில் 3.2 அங்குல டச் ஸ்கிரீன் உள்ளது. இதன் ரெசல்யூசன் 400 x 800 பிக்ஸெல்களாகும். ஸ்லைடாகி வரும் குவெர்ட்டி கீ போர்டு, ஆப்டிகல் ட்ரேக் பேட், வை–பி நெட் இணைப்பு, 3ஜி திறனுடன் எட்ஜ் மற்றும் ஜிபிஆர் எஸ் சப்போர்ட், A2DP இணைந்த புளுடூத் 2.1, யு.எஸ்.பி. 2, ஏ–ஜிபிஎஸ் சப்போர்ட் கொண்ட ஜி.பி.எஸ்., இயர்போன், ஹேண்ட்ஸ்பிரீ சாக்கெட், 8 மெகா பிக்ஸெல் திறன் மற்றும் எல்.இ.டி. பிளாஷ் கொண்ட ஆட்டோ போகஸ் கேமரா, வீடியோ சப்போர்ட், மைக்ரோ எஸ்.டி. கார்ட் போர்ட் ஆகியவை தரப்பட்டுள்ளன.
4. சாம்சங் கார்பி (Samsung Corby):
மிகச் சிறிய அழகான மொபைல் போன். மத்திய நிலையில் ரூ.10,000க்குள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் போன். டச் ஸ்கிரீன் கொண்டது.இதன் வண்ணங்களைப் பார்க்கையில் பெண்கள் விரும்பும் தன்மை இதற்கு உள்ளது எனலாம். அல்லது சாம்சங் மகளிரை மனதில் வைத்து இதனை வடிவமைத்தது எனலாம். இதில் 2.8 அங்குல டச் ஸ்கிரீன், 240 x 320 பிக்ஸெல் ரெசல்யூசன் கொண்ட திரை,எட்ஜ் மற்றும் ஜிபிஆர் எஸ் சப்போர்ட், A2DP இணைந்த புளுடூத் 2.1, யு.எஸ்.பி. 2, மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட், 2 மெகா பிக்ஸெல் கேமரா மற்றும் எப்.எம். ரேடியோ தரப்படுகின்றன.
5. எச்.டி.சி. டாட்டூ ((HTC Tattoo) :
ஆண்ட்ராய்ட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் உள்ள மொபைல் போன்களில் இன்னும் எச்.டி.சி. நிறுவனப் போன்களே முன்னணியில் உள்ளன. மாதம் ஒரு மாடலை இந்நிறுவனம் வெளியிடுகிறது. இதன் பேனலை நம் விருப்பப்படி மாற்றிக் கொண்டு பயன்படுத்தலாம் என்பதால் இந்த பெயர் தரப்பட்டுள்ளது. மேலும் இதனாலேயே இளைஞர்கள் இதனை விரும்பலாம்.
மேலும் ஒரு புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்ட குறைந்த விலை போனாக இது இருப்பதால், புதிய முயற்சிகளை மேற்கொள்ள விரும்புபவர்களும் இதனைப் பயன்படுத்த எண்ணுவார்கள். இதில் 2.8 அங்குல டச் ஸ்கிரீன், 240 x 320 பிக்ஸெல் ரெசல்யூசன் கொண்ட திரை,3ஜி சப்போர்ட், எட்ஜ் மற்றும் ஜிபிஆர் எஸ் சப்போர்ட், வை–பி இணைப்பு, A2DP இணைந்த புளுடூத் 2.1, யு.எஸ்.பி. 2, மைக்ரோ எஸ்.டி. கார்ட் சப்போர்ட்,ஏ–ஜிபிஎஸ் சப்போர்ட் கொண்ட ஜி.பி.எஸ்., 3 மெகா பிக்ஸெல் கேமரா மற்றும் எப்.எம். ரேடியோ தரப்படுகின்றன. விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. இன்னும் பல மொபைல் போன்கள் விழாக் காலத்தினை ஒட்டி வெளியிடப்படலாம். மேலே கூறப் பட்டவை உறுதியாகத் தெரிந்த நிறுவனப் போன்களாகும்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com