Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

02 அக்டோபர் 2009

இறுதிப்பந்தில் அவுஸ். வெற்றி - சாம்பியன் திரோபியில் இருந்து வெளியேறுகிறது இந்தியா!

PDF Print E-mail

இறுதிப்பந்தில் அவுஸ்த்திரேலியா அடித்த அடி, ஐசிசி அரையிறுதிக்குள் நுழையும் இந்தியக்கனவை தகர்த்தெறிந்து, வீட்டுக்கு திருப்பிவிட்டது.நேற்றை பாகிஸ்த்தானுடனான போட்டியில் அவுஸ்திரேலியா தோற்றால் தான், இந்தியா அரையிறுதிக்குள் செல்ல கொஞ்சமாவது வாய்ப்பிருந்தது.

ஆனால், எப்போதும் இந்தியர்கள் மீது அவுஸ்த்திரேலியர்களுக்கு உள்ள இனவெறிப்பாசம், அதோடு எதிராக விளையாடிவர்கள் பாகிஸ்த்தானல்லவா! கடைசிப்பந்தில் வெள்ளையர்களை வெற்றிபெறச்செய்தும் விட்டனரோ.மேற்கிந்தியாவுடன் இலகுவெற்றி பெற்றும், போட்டிகளில் இருந்து வெளியேறுகிறது இந்தியா. பெற்ற ஆறுதல் வெற்றிக்காக மூன்று புள்ளிகள், கிடைத்தாலும், பாகிஸ்த்தானுடன் முதல் போட்டியில் தோல்வி, அடுத்த போட்டியில் மழையால் எந்த புள்ளிகளும் எடுக்க முடியாத நிலை, இவை அனைத்துமே, இந்தியாவிற்கு பாதகத்தை தான் ஏற்படுத்தியது.நேற்று நடைபெற்ற இரு போட்டிகளில் முதலில் ஆரம்பமான அவுஸ்த்திரேலியா - பாகிஸ்த்தான் இடையிலான போட்டி விறுவிறுப்புக்கு குறைவில்லை. இந்திய ரசிகர்களும் பார்த்துக்கொண்டுதான் இருந்திருப்பார்கள். பரம எதிரியாக இருந்தாலும், இந்த போட்டியில் பாகிஸ்த்தான் தான் வெற்ற வேண்டும் என பிரார்த்திக்க வேண்டிய துர்பாக்கிய நிலை இந்திய ரசிகர்களுக்கு. ஆனால் நான் தோற்றாலும் பரவாயில்லை. இந்தியா.... என நினைத்து விளையாடியதோ? பாகிஸ்த்தான்...! முதலில் துடுப்பெடுத்தாடியது பாகிஸ்த்தான். ஆரம்ப துடுப்பாட்டவீரர் கம்ரான் அக்மல் (44) விளாசினார். அடுத்தடுத்து வந்தவர்கள் அனைவரும் விறுவிறுவென ஆட்டமிழந்தனர். ஐந்தாவது விக்கெட்டுக்காக யூசப் (45), மிஸ்பா உல் ஹுக் ஜோடி (41) இணைய மீண்டும் ஆட்டம் சூடு பிடிக்கத்தொடங்கியது. இறுதியில் ஐம்பது ஓவர்கள் முடிவில் 205 ஓட்டங்களை குவித்தது பாகிஸ்த்தான்.பதிலுக்கு களமிறங்கிய அவுஸ்த்திரேலியாவினது ஆட்டமும் பிரகாசிக்க தவறியது. மைக் ஹஸ்ஸி மட்டும் 64 ஓட்டங்களை குவித்தார். 4 வது விக்கெட்டுக்கு பின்னர் களமிறங்கியவர்கள் வந்த வேகத்திலேயே பவிலியன் திரும், 45 வது ஓவரில் 8 விக்கெட்டுக்களை இழந்து 187 ரன்களை மட்டுமே பெற்றிருந்தது அவுஸ்த்திரேலியா! லீ, நதன் ஹௌவ்ரிட்ஸ் இருவரும் ஒவ்வொரு பந்துக்கும் நிதானமாக ரன்களை குவிக்கத்தொடங்கினர். இறுதிப்பந்தில் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில், வேகமான எடுக்கப்பட்ட ரன் அவுஸ்த்திரேலிய வெற்றியை உறுதி செய்தது.ஆட்டநாயகனாக மைக் ஹஸ்ஸி தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே பாகிஸ்த்தான் அரையிறுதிக்குள் நுழைந்திருந்த நிலையில், அவுஸ்த்திரேலியாவும் செல்கிறது தற்போது. மற்றைய போட்டியில் மேற்கிந்திய தீவுகள் 129 ஓட்டங்களையே குவித்திருக்க, இந்தியா பதிலுக்கு துடுப்பெடுத்தாடி இலகு வெற்றி பெற்றது. ஆனால் பயனில்லாமல் போனது. முதலாவது அரையிறுதிப்போட்டி, நாளை அவுஸ்த்திரேலிய இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலும், இரண்டாவது அரையிறுதிப்போட்டி, நாளை மறுதினம் நியூசிலாந்து பாகிஸ்த்தான் அணிகளுக்கு இடையிலும் நடைபெறுகிறது. இப்போட்டிகளில் வெற்றி பெறும் அணிகள் இறுதிப்போட்டிக்கு செல்கின்றன.

உங்கள் கருத்துக்கள்

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com