Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

03 ஏப்ரல் 2009

பாசம் வச்ச பச்சக்கிளிதான்....

டி.ராஜேந்தர் பார்ப்பதற்குதான் அன்னாசி மாதிரி! பிழிந்தால் நவரசம் என்பதை முன்பே சொல்லியிருந்தேன். அதுதான் இவ்வளவு கொடூரத்திற்கிடையேயும் நண்பர்களை தக்க வைத்திருக்கிறது இப்போதும்!
சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன் இவரோடு பார்த்தவர்களை இப்போதும் பார்க்கிறேன். குடந்தை ராஜப்பா, கருணாநிதி, மதி, மற்றும் சிலரின் பெயர்கள் மறந்துவிட்டது. ராஜேந்தரை சுற்றி சுற்றியே வருபவர்கள் இவர்கள். உயிருள்ளவரை உஷா காலத்திலிருந்தே அவரது உற்ற நண்பர்கள். அல்லது தொண்டர்கள். அல்லது கவுரவமான வேலைக்காரர்கள்! இவர்களுக்கு என்ன செய்திருக்கிறார் டி.ஆர்? கொஞ்சம் அக்கறையோடு கேட்டுப்பார்த்தால் உதட்டை பிதுக்குவார்கள். ஆனாலும், இவர்களின் சந்தோஷமும் துக்கமும் டி.ராஜேந்தர்தான். இவர்களையும், ராஜேந்தரையும் இறுக்கமாக முடுக்கி வைத்திருக்கிற ஸ்பானர் எது? அவர் கொடுக்கிற சின்ன சின்ன அன்புதான்! (நன்றாக கவனிக்கவும், அன்புதானே தவிர அன்பளிப்பு அல்ல) அப்போதுதான் தனியார் தொலைக்காட்சிகள் உருவாகி வந்த நேரம். தனது படங்களின் தொலைக்காட்சி உரிமையை எந்த டி.வி க்கும் வழங்கியிருக்கவில்லை இவர். அதனால் வாரத்திற்கு ஒருமுறை இவரது அலுவலகத்தில் அடுக்கப்பட்டிருக்கும் ஏதாவது இரண்டு படப்பெட்டிகளாவது தியேட்டர்களுக்கு போகும். அந்த பெட்டிகள் திரும்பி வரும்போது கூடவே கலெக்ஷனும் வரும். எல்லா செலவுகளும் போக குறைந்தது பத்தாயிரமோ இருபதாயிரமோ தருவார்கள். திருமதி. உஷா இருந்தால் "அவங்ககிட்டே கொடுங்க" என்று அந்தப்பக்கம் கை நீட்டி விடுவார். அவர் இல்லையென்றால், அந்த பணத்தை அப்படியே இவர்களுக்கு (இன்னும் சிலரும் அப்போது கூட இருந்தார்கள்) பிரித்துக் கொடுத்துவிடுவார். "யேய், அக்கா வர்றதுக்குள்ளே வந்து வாங்கிக்கோங்கப்பா" என்று இவர் அவசரம் காட்டுவது ஆச்சர்யமாக இருக்கும்! இன்றைய நிலையில் இந்த வருமானத்திற்கும் வாய்ப்புகள் இருக்கப் போவதில்லை. ஆனாலும் தொட்டு தொடர்கிறது இவர்களின் பாச பந்தம்! செங்கல்பட்டிலிருந்து தினமும் உஷா அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தார் லே-அவுட் ஆர்ட்டிஸ்ட் முருகன். உஷா இதழுக்கு இயக்குனர் ஒருவர் ஆவேச பேட்டியளித்திருந்தார். 'அர்ஜுன் ஒரு வளர்த்த கடா' -இதுதான் அந்த கட்டுரையின் தலைப்பு. நம்ம முருகன் அதை எப்படி எழுதியிருந்தார் தெரியுமா? 'அர்ஜுன் வளர்த்த, ஒரு கடா!' யாரும் கவனிக்காமல் அப்படியே பிரசுரமானது. கட்டுரையை வாசித்த வாசகர்கள் ஒரு இடத்திலும், அர்ஜுன் கடா வளர்த்தார் என்ற விபரமே வரவில்லையே என்று மண்டையை பிய்த்துக் கொண்டிருப்பார்கள். அப்படி சுதந்திரமாக செயல்படக் கூடியவர் முருகன். இந்த விஷயத்தை அறிந்த பிறகும், "பரவாயில்லைப்பா... ஒரு வார்த்தையை மாத்தி போட்டுட்டான்(?) விடுங்க" என்று மன்னித்துவிட்டார் டி.ஆர். இந்த முருகனுக்கு டி.ஆர்.அன்பு காட்டிய விஷயத்தைதான் இப்போது சொல்லப்போகிறேன். இவர் திமுக வில் எம்.எல்.ஏ வாக இருந்த நேரம் அது. செங்கல்பட்டில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு அழைத்திருந்தார்கள் டி.ராஜேந்தரை. வழக்கமாக மாலை நேரத்தில் ரயில் பிடித்து செங்கல்பட்டு போய் இறங்கும் முருகன் அன்று, "அண்ணே... ஒங்களோட வேன்ல வந்து இறங்கிக்கிறேன்" என்று கூறியிருந்தார். "அதுக்கென்னடா சரி" என்று கூறிவிட்டார் இவரும். இவரது பிரச்சார வேனில் மேற்படி கோஷ்டிகள் ஏறிக்கொள்ள வண்டி கிளம்பியது. பயணத்தின்போது முருகனிடம், வீடு எங்கேயிருக்கு? செங்கல்பட்டிலிருந்து வீட்டுக்கு போக எவ்வளவு து£ரம்? எப்படி போவே? என்றெல்லாம் விசாரித்தபடியே சென்றார் டி.ஆர். வேன் செங்கல்பட்டை அடைந்தபோது இவருக்காக காத்திருந்த தொண்டர்கள் பெருத்த கோஷத்தை எழுப்பினார்கள். கூச்சல்களுக்கிடையே இவரிடம் சொல்லிவிட்டு போக கூட அவகாசம் இல்லாமல் கதவை திறந்து கொண்டு கீழே இறங்கிவிட்டார் முருகன். ஆனால் முருகன் இறங்கும்போது பஸ்சில் போக சொல்லி இருபது ரூபாயை அவரது கையில் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்த ராஜேந்தர் இந்த அமர்க்களத்தில் கொஞ்சம் தாமதிக்க, அதற்குள் சில அடி து£ரம் போய்விட்டார் முருகன். வெளியே வாழ்க கூச்சல் கேட்டுக் கொண்டிருக்க, வேனின் ஜன்னல் இடுக்கு வழியாக ஒரு இருபது ரூபாய் தாளை நீட்டியபடி, "யேய்... முருகா. இந்தா பணம். பஸ்சிலே போ. நடந்து போகாதே" என்று ஓங்கிக் குரல் கொடுத்துக்கொண்டிருந்தார் டி.ஆர். பிறகு அந்த கூட்டத்தில் முண்டியடித்து பணத்தை வாங்கிக் கொண்டார் முருகன். இப்போது சொந்த ஊரில் கவுன்சிலராக இருக்கிறார் நம்ம முருகன். சென்னைக்கு ஏதாவது வேலையாக வந்தால் கூட, "அண்ணனை ஒரு எட்டு பார்த்திட்டு போகலாம்னு வந்தேன்" என்று நமக்கும் ஒரு போன் அடிப்பார்.

ஜீமெயில் இப்போ 5 வயசு பாப்பா!

இலவச ஈ-மெயில் சர்வீஸில், 10 MB-க்கே வழி இல்லாதபோது, (எக்ஸ்ட்ரா space வேணுமா! ரெண்டு, மூனு ஈமெயில் ஐடி ஓபன் பண்ணிக்கோ என்ற அட்வைசுக்கு நடுவில்) எடுத்த எடுப்பிலேயே, 1 GB இடம் கொடுத்து நம்ம எல்லாரையும் அலற வைத்த ஜீமெயில், 5 வயதை பூர்த்தி செய்துள்ளது. அந்த சமயத்தில் ஒவ்வொரு கிளிக்குக்கும், முழு பக்கத்தையும் லோட் செய்த ஈமெயில் சர்வீஸுகளுக்கு நடுவில், முன்னோடியாக AJAX தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முழு பக்கத்தையும் லோட் செய்யாமல், தேவையான இடத்தை மட்டும் நொடியில் அப்டேட் செய்யும் சித்து விளையாட்டு செய்து, மக்களை வளைத்துப் போட்டது. invite-டோட வந்தாதான் ஜீமெயில் ஐடி என்று கறாரா சொல்லி, உன்கிட்டே ஜீமெயில் invite இருக்கான்னு, invite இருக்கான்னு பார்க்கிரவன் ஒருத்தனைகூட விடாமல் நம்மளை கேட்க வைத்து, இலவச word of mouth ஜெனரேட் செய்த மார்கெடிங் ராஜதந்திரம். புதுசா கொண்டு வந்த வசதியின் பிரமிப்பு அடங்குவதற்கும், Gmail Labs-ல் இருந்து அடுக்கடுக்காக வசதிகள் அறிமுகம். Spam-ஆ! கிலோ எவ்வளவு என்று கேட்கக்கூடிய அளவிற்கு திறமையாக செயல்படும் ஸ்பாம் ஃபில்டர். இப்படி எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம். ஒரே ஒரு குறை சொல்லலாம்னா, அது ஜீமெயில் இன்னும் beta-வில்தான் இருக்கு. கூடிய சீக்கிரம் வயசுக்கு வந்துடும்னு நம்புவோம்.

02 ஏப்ரல் 2009

ஈ-மெயில் இணைப்பை (Attach File) இலகுவாக தரவேற்றுவது எப்படி..?

மெயில்களில் பைல்களை அட்டாச் செய்கையில் அனைத்து பிரவுசர்களும் இமெயில் கிளையண்ட் புரோகிராம்களும் பிரவுஸ் செய்து பின் க்ஸ்புளோரர் போல விண்டோவினைத் திறந்து பைல்களைக் காட்டி அதிலிருந்து அட்டாச் செய்திட வேண்டிய பைல்களை ஒவ்வொன்றா இணைக்கச் செய்கின்றன.
இந்த சுற்று வேலைகளுக்குப் பதிலாக பைல் இருக்கும் டைரக்டரியைத் திறந்து பைலை அப்படியே அட்டாச் விண்டோவில் இழுத்துப் போடும் வசதியை ஜிமெயிலில் மேற்கொள்ளலாம். இந்த வசதியை பயர்பாக்ஸ் பிரவுசர் மூலம் மட்டுமே நிறைவேற்ற முடியும். ஏனென்றால் இந்த வசதியைத் தருவது ஒரு பயர்பாக்ஸ் ஆட் ஆன் தொகுப்பாகும். நீங்கள் பிரவுஸ் செய்வதற்கு பயர்பாக்ஸ் பிரவுசரையும் மெயில் அனுப்ப ஜிமெயிலையும் பயன்படுத்துபவராக இருந்தால் இதனைப் படியுங்கள். இங்கு பயர்பாக்ஸ் ஆட் ஆன் தொகுப்பு ஒன்றைக் காண இருக்கிறீர்கள். இதன் பெயர் "dragdropupload" இதன் மூலம் ஜிமெயில் பயன்பாட்டில் புதிய அனுபவம் ஒன்றை நீங்கள் பெறலாம். வழக்கமாக இமெயில் ஒன்றுடன் பைலை அட்டாச் செய்திட "Attach a file"கிளிக் செய்து பின் அந்த பைல் உள்ள டைரக்டரியில் அத்தனை பைல்களையும் பார்த்து நீங்கள் இணைக்க வேண்டிய பைலைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்கிறீர்கள் இல்லையா? அதற்குப் பதிலாக இந்த ஆட் ஆன் தொகுப்பை இறக்கிப் பதிந்து கொண்டால் எத்தனை பைல்களை வேண்டுமானாலும் இறக்கி அட்டாச் விண்டோவில் இழுத்துப் போட்டுவிட்டு பின்னர் செய்தியைத் தயார் செய்து அனுப்பலாம். இந்த ஆட் ஆன் தொகுப்பை addons.mozilla.org என்ற முகவரியில் உள்ள தளத்தில் பெறலாம்.

ஷில்பா ஷெட்டியின் 5 மில்லியன் பவுண்ட்ஸ் லண்டன் மாளிகை

லண்டனின் பிரபல வாரப் பத்திரிகை ஹலோ வுக்காக தனது 5 மில்லியன் பவுண்ட்ஸ் லண்டன் மாளிகையின் கதவுகளை திறந்து விட்டிருக்கிறார் ஷில்பா ஷெட்டி

shilpa-shetty-as-she-opens-doors-of-her-5m-mansion-2

தனது காதல் கணவர் ராஜ் குன்ராவுடன் சேர்ந்து வாழ போகும் வீட்டில் எடுத்த புகைபடங்க்களை இங்கே தருகின்றோம். ஏற்கனவே திருமணமாகி விவாகரத்துப் பெற்ற ராஜ் குன்ரா ஒரு பெரும் கோடிஸ்வரர் ஆவார்

ஏழு படுக்கை அறைகளை கொண்ட இந்த மாளிகை வேர்ப்ரிட்ச் ஸரே என்ற இடத்தில் உள்ளது

01 ஏப்ரல் 2009

பத்மஸ்ரீ விழா-அமர்சிங்கை ஓரம் கட்டிய ஐஸ்வர்யா

டெல்லி: குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த பத்ம விருதுகள் விழாவில் கலந்து கொண்ட ஐஸ்வர்யா ராய் அத்தனை பேரின் கவனத்தையும் ஈர்த்தார். அவருடன் வந்த அமர்சிங்கை ஓரம் கட்டிய பத்திரிக்கையாளர்கள் ஐஸ்வர்யா ராயை சுற்றிச் சூழ்ந்ததால், அமர்சிங் வெறுத்துப் போய் ஓரமாக நகர்ந்து போய் விட்டார்.
குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று பத்ம விருது வழங்கும் விழா நடந்தது. இதில் கலந்து கொண்டு பத்மஸ்ரீ விருதைப் பெற வந்திருந்தார் ஐஸ்வர்யா ராய். அவருடன் மாமனார் அமிதாப் பச்சனும் வந்திருந்தார். வழக்கம் போல 'கொடுக்கு' அமர்சிங்கும் கூடவே வந்திருந்தார்.
பிங்க் நிற சேலையில் படு அழகாக வந்திருந்தார் ஐஸ்வர்யா ராய். அவரைப் பார்த்ததும் அங்கிருந்த அத்தனை பேரின் கண்களும் ஐஸ் மீதே இருந்தன.ஐஸ்வர்யாவைப் பார்த்ததும் டிவி கேமராக்களும், புகைப்படக்காரர்களின் கேமராக்களும் அவர் பக்கம் திரும்பி, படம் எடுத்துத் தள்ளின. விருது விழாவின் ஒரு பகுதியாக அருகில் இருந்த மண்டப அரங்கில் தேநீர் விருந்து நடந்தது.
அந்த விருந்துக்காக வந்த வழியில் ஐஸ்வர்யாவை ஆட்டோகிராப் கேட்பவர்களும், கேமராமேன்களும், புகைப்படக்காரர்களும் சூழ்ந்து கொண்டனர்.கையில் கிடைத்ததை எல்லாம் காட்டி கையெழுத்து போடுமாறு கேட்டுக் கொண்டனர். அப்போது அங்கு அமிதாப் பச்சனும், கூடவே அமர்சிங்கும் வந்தனர். ஆனால் அவர்களை யாரும் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.ஐஸ்வர்யாவுக்கு அருகில் வந்து கூட்டத்தை ஒழுங்கு படுத்த முயற்சித்தார் அமர்சிங். ஆனால் நெக்கியடித்த கூட்டத்தால் அவர் ஓரமாக தள்ளப்பட்டார்.போடுகிற டிவியில் எல்லாம் தனது முகமே காட்டப்பட்டு வரும் நிலையில் ஐஸ்வர்யா பக்கம் அத்தனை பேரும் திரும்பி விட்டதைப் பார்த்து வெறுத்துப் போனார் அமர்சிங்.
நான் இங்கே என்ன செய்கிறேன் என்று தெரியவில்லை என்று புலம்பியபடியே வேறு பக்கமாக நகர்ந்து போனார் அமர்சிங்.ஒரு வழியாக கூட்டத்தை விட்டு தப்பித்த ஐஸ்வர்யா அங்கிருந்து நகர்ந்து சென்றார். அவருக்குப் பின்னாலேயே அமிதாப் பச்சனும், அமர்சிங்கும் சென்றனர்.இங்கு மட்டும்தான் அமர்சிங்கால் அரசியல் செய்யவே முடியாது என்று குறும்புக்கார கேமராமேன் ஒருவர் காமென்ட் அடித்ததைக் கேட்க முடிந்தது. அமர்சிங்குக்கும் கூட அது கேட்டிருக்கலாம்.முன்னதாக, அணு சக்தி கமிஷன் தலைவர் அனில் ககோத்கருக்கு பத்மபவிபூஷண் விருதும், 62 பேருக்கு பத்மஸ்ரீவிருதையும் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் வழங்கினார்.குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி, பிரதமர் மன்மோகன்சிங், மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

நீங்கள் யார்...? முட்டாளா, புத்திசாலியா, கெட்டிக்காரரா?

ஏப்ரல் -1… தங்களை புத்திசாலிகளாக நினைத்துக் கொண்டிருக்கும் முட்டாள்கள் எல்லாம் உண்மையான புத்திசாலிகளை(அன்று ஒரு நாள் மட்டும்) முட்டாள்கள் ஆக்கி மகிழும் தினம்(இது எப்படி இருக்கு?). நேரடியாகச் சொல்லவேண்டுமானால், இதை முட்டாள்கள் தினம் என்று சொல்வதைக் காட்டிலும், மற்றவர்களை முட்டாள்களாக்கி மகிழ்ச்சியடைபவர்களின் தினம் என்று சொல்லலாம். இங்கே யார் முட்டாள்கள்? யார் புத்திசாலிகள்? ஏமாற்றுபவர் புத்திசாலி! ஏமாறுபவர் முட்டாள்! அப்போ தானும் ஏமாறாமல் மற்றவர்களையும் ஏமாற்றாமல் இருப்பவர் முட்டாளா, புத்திசாலியா? அப்படி பார்த்தால் புத்திசாலிகள் பல நேரங்களில் முட்டாள்களே. முட்டாள்கள் பல நேரங்களில் புத்திசாலிகளே. முட்டாள்களாக அடிக்கடி சித்திரிக்கப்படுபவர்கள் அப்பாவிகளாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், எல்லா அப்பாவிகளும் முட்டாள்கள் இல்லை. தங்கள் வேலையில், தங்கள் செயலில் அதிகபட்ச புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தி நல்ல பெயர் எடுக்கும் இவர்கள், மற்ற விஷயங்களில் அதிக அக்கறைக் காட்டாமல் முழி பிதுங்குவதால் அப்பாவிகளாகவும், முட்டாள் என்ற அடைமொழியோடு உலவி வருகிறார்கள். புத்திசாலிகளில் நூற்றுக்கு 50 சதவிகிதம் பேர் நல்ல நடிகர்கள். அவர்களுக்கு புத்திசாலிகளாக நடிக்க நன்றாக வரும். (அதுவும் திறமைதானே என்கிறீர்களா?) ஒரு விஷயம் தெரியுமா நல்ல புத்திசாலி முட்டாள் போன்றே தோற்றம் தருகிறார்.அதனால் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும். சரி, புத்திசாலிகள் வேறு கெட்டிக்காரர்கள் வேறா? இது முட்டையா கோழியா போன்ற சிக்கலான பிரச்னை. புத்திசாலிகள் தங்கள் வேலையில், தாங்கள் சார்ந்த இடத்தில் திறமையுடையவர்களாக காட்சி அளிக்கிறார்கள். இவர்களில் இருந்து வேறுபட்டு தன்னுடையத் திறமையை வெளியுலகிற்கு காட்ட வேண்டும் என்ற விருப்பத்துடன், அதில் தனக்கும் ஆதாயம் தேடிக் கொள்கிறான் பாருங்கள் அவனை கெட்டிக்காரன் என்று வைத்துக் கொள்ளலாம். இதற்கு அரசியல்வாதிகள் நல்ல உதாரணம். இவர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்களோ இல்லையோ கெட்டிக்காரர்களாக இருக்கிறார்கள். இப்படியும் சொல்லலாம் காரியத்தில் கண்ணாய் இருந்து, எப்போதும் அதை தனக்குச் சாதகமாகவே ஆக்குபவர்கள் கெட்டிக்காரர்கள். இவ்விஷயத்தில் புத்திசாலிகளுக்கு அவ்வளவு கெட்டிக்காரத்தனம் போதாது. இங்கு திறமை என்பது அடிப்பட்டு நேரத்தை, காலத்தை, மனிதனைப் பயன்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பவாதத்திற்கு அரியணை ஏறும் அரிய வாய்ப்பு எளிதாகக் கிடைக்கிறது. புத்திசாலிதனத்திற்கு கெட்டிக்காரத்தனத்திற்கும் நம் திரைத்துறையில் இருநதே உதாரணம் தரலாம். ரஜினியும் கமலும் சமகாலத்தவர்களாக இருந்தாலும், ரஜினிக்கு எங்கும், எப்போதும் முதலிடமும், கமலுக்கு அடுத்த இடமும் ஏன் தரப்படுகிறது. நிச்சயமாகச் சொல்லலாம் திரைத்துறை திறமையைப் பொறுத்தவரையில் ரஜினி, கமலை விட புத்திசாலி இல்லை. கமல் திரைத்துறையில் கொடிகட்டி பறக்கவும், நட்சத்திரமாக மின்னவும் அதற்குத் தேவையான விஷயங்களைத் தேடித்தேடி அறிந்து சேர்த்துக் கொண்டவர். கலைஞர் குறிப்பிட்டபடி தன்னை கலைஞானியாக காட்டிக்கொள்ள முயல்பவர். ரஜினி அப்படியா? இல்லவே இல்லை. அவர் அளவுக்கு அறிந்ததையே போதும் என்று நினைத்தவர். அதையே முதலீடாக ஆக்கி வெற்றி பெற்று முதலிடத்தைப் பெற்றவர். அவரிடம் புத்திசாலித்தனத்தைவிட தன்னம்பிக்கையும், மக்களிடம் இருந்து தன்னை வேறுபடுத்திக்காட்டிக்கொள்ளாத தன்மையும் இருந்தது. கமல் படங்களில் அதிக புத்திசாலித்தனம் இருக்கும். இது பல நேரம் நம்மை குழப்பிவிடும்.ரஜினியின் எந்தப் படமாவது புரியவில்லை என புகார் வந்ததுண்டா? நன்றாக இல்லை என்று வேண்டுமானால் விமர்சனம் வந்திருக்கலாம். இருந்தாலும் அந்தப் படத்தையும் அவருடைய ரசிகர்கள் ஓட்டுவார்கள். அந்த அளவுக்கு அவர் ரசிகர் நெஞ்சில் ஒட்டியவர்.ரஜினியைப் போலவே ரஜினி ரசிகர்கள் சரியா? கமலைப்போலவே கமல் ரசிகர்கள். ஒப்புக்கொள்ள முடியாத விஷயங்கள் இருந்தால் தங்கள் தலைவர் படமானாலும் ஒதுக்கி ஓரம் கட்டிவிடுவார்கள். ரஜினியைப் போன்ற சாதாரணமானவர்கள் நிறைந்த நாடு இது. இது ரஜினியின் முதலிடத்திற்கு காரணம்.கமலைப் போல அதிகம் சிந்திப்பவர்கள் குறைவாக உள்ள நாடு இது. அதே சமயம், அவருடையத் திறமையை யாரும் மொத்தமாக ஒதுக்கிவிடாமல் இரண்டாம் இடத்தை அவருக்கு ஒதுக்கித் தந்திருக்கிறார்கள். அவரவர் இடத்தை தக்கவைத்துக்கொள்ள இருவருமே போராட வேண்டும் என்பதுதான் மக்கள் மறைமுகமாக சுட்டிக்காட்டுகம் சங்கதி. ஆக, கமல் புத்திசாலியாகவும் இருக்கிறார். சில நேரம் கெட்டிக்காரராகவும் இருக்கிறார். ரஜினியோ எப்போதுமே கெட்டிக்காரராகவே இருக்கிறார். தன்னிடம் உள்ள திறமையை அறியாதவன், தன்னுடைய திறமையைத் தக்கசமயத்தில் வெளிப்படுத்தாதவன் முட்டாள். தன்னுடையத் திறமையை அறிந்தவன், மேலும் தேவையானத் திறமைகளை வளர்த்துக் கொள்பவன், அதை தன்னால் முடிந்த அளவுக்கு வெளிப்படுத்தி வெல்பவன் புத்திசாலி. அட, திறமையே இல்லாவிட்டாலும் ஏதோ திறமை தனக்குள் ஒளிந்திருப்பதுபோல பாவனை காட்டியாவது உச்சத்தை எட்டுபவன் கெட்டிக்காரன். நீங்கள் யார் முட்டாளா, புத்திசாலியா, கெட்டிக்காரரா?

கூகிள் மெயில் இனி தமிழ் மெயில்?

எப்போதுமே அனைத்திலும் புதுமையை முதலாவதாய் அறிமுகப்படுத்தும் கூகிள் நிறுவனம் தற்போது தமிழ் உட்பட சில இந்திய மொழிகளில் மெயில் அனுப்பும் புதிய வசதியை அறிமுகபடுத்தியுள்ளது.தமிழ் தவிர ஹிந்தி, மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு போன்ற மொழிகளிலும் இந்த சேவையை பயன்படுத்தலாம்.
இதனை enable செய்ய கீழ்கண்டவற்றை பின்பற்ற வேண்டும்.- ஜிமெயில் அக்கௌண்ட்டில் login செய்தவுடன் "settings" என்பதனை தெரிவு செய்ய வேண்டும்.- அதில் "gmail display language" என்பதில் "தமிழ்" என்பதை செலக்ட் செய்ய வேண்டும்.- பின் "save changes" எனும் ஆப்ஷனை கிளிக் செய்தால் அனைத்து settings சும் save ஆகி விடும்.பின் "அஞ்சல் எழுது" எனும் ஆப்ஷனை செலக்ட் செய்தல் கீழ்க்கண்ட கம்போசெர் திரை ஓபன் ஆகும்.
அதில் நீங்கள் எதை வேண்டுமானாலும் "தங்க்லீஷ்" என கொச்சையாக அழைக்கப்படும் (அதாவது vanakkam for வணக்கம்) மொழியில் டைப் செய்து நண்பர்களுக்கு அனுப்பலாம்.
இந்த வசதியானது கிராமத்தில் இருக்கும் ஆங்கிலம் தெரியாத நண்பர்களுக்கு ஒரு வரப்ப்ரசாதமாகும். நம் கருத்துக்களை நமது தாய் மொழியில் அனுப்பினால் அவர்கள் எளிதாக புரிந்து கொள்வார்கள். முதலில் மெயில் தமிழில் மெயில் அடிக்க கஷ்டப்பட்டாலும் பிறகு பழகிக்கொள்வர்.{நாம் கற்றுக்கொள்ளவில்லையா?}

31 மார்ச் 2009

கூகிள் இன் புதிய லோகோ தொடர்பான பதிவினை பார்க்கவேண்டுமா இங்கேசொடுக்கவும் .Google இன் வித விதமான Logo கள்...

புது மண தம்பதியர்களுக்கு மட்டும்

இந்த பதிவு புது மன தம்பதியர்களுக்கு மட்டும் ... ( அப்போ கல்யாண பசங்க பொண்ணுங்க .. கல்யாணம் ஆகி சில வருஷம் ஆன தம்பதிகள் எங்களுக்கு இல்லையா .... உள்ள வந்துடிங்க :-) படிச்சி பாருங்க... உங்க நண்பர்கள் கிட்ட பகிரிந்து கொள்ளுங்கள் ) முன்று நாள் லீவ் விட்டாங்க என்று திருச்சி போலாம் என்று வியாழன் நைட் பெங்களூர் KPN மடிவால ஆபீஸ் கிட்ட வெயிட் பண்ணிட்டு இருந்தேன் ... ரெண்டு லவ் குருவிகள் (love birds) புதுசா கல்யாணம் செஞ்ச குருவிங்க ... ஓர ஓட்டல் ஒரசல் எங்க நாடு ரோட்ல ( உனக்கு ஏன்டா காண்டு என்று கேட்பது தெரியுது ) ஓர மொக்கை கட்டி புடி என்று தங்களோட அன்பை எப்படியா வெளிப்படுத்துவது .. நான் ரொம்ப நல்லவன் நவுந்துடேன் ( நம்ப மடிங்க என்ன செய்ய ) ஆனா நிறைய பேரு ஆஆஆஆஆ வாய போலந்து பாத்துக்கிட்டு இருந்தாங்க... மக்களே நீங்க புதுசா கல்யாணம் பண்ணது தெரியுது .. அதுக்காக உங்கள் அன்பை கை புடிச்சிட்டு போறது தப்பு இல்லை.... இப்படி நடு ரோட்ல எப்படியா இப்படி... (எப்படி நம்ம ஒரு குட்சி ஐஸ் வாங்கிட்டு அத வாங்க முடியாதவன் இன்னொரு சின்ன பையன் கிட்ட காட்டி காட்டி சாப்பிட்டா எப்படி கோபம் வரும் :-) இப்படி எனக்கு இல்லை பல பேருக்கு கோபம் ) தம்பி இது என்ன வெளிநாடா ? வெளிநாட்டவர்கள் கூட இந்தியா வந்து நடு ரோட்டில் இப்படி நடந்து கிட்டு நான் பார்த்து இல்லை ... ரொம்ப சந்தோஷமான தருணம் ... ரொம்ப நாட்களுக்கு அப்பரும் பாக்கிற முதல் முறை ஒரு தழுவல் அவசியம் ... ஒரு முத்தம் கூட நல்லா இருக்கும் அது தப்பு இல்லை ... இன்னொரு முக்கியமான விஷயம் இது மாதிரி உண்மையான அன்பை அதாவது சந்தோசமாக இருக்கும் பொது ஒரு அன்பாக பிடிப்பது .. கொடுப்பது பார்பவர்களுக்கு தப்பா தெரியாது காரணம் அந்த அன்பு நம்மளையும் வந்து சேரும் அதுக்கு பதிலா ஒட்டல் ஒரசல் பின்னல் பிணைதல் ஒரு வித அருவருப்பை கொடுக்கும் உடம்பு சுகம் இல்லாத மனைவி ... அவன் மேல ஒரு தலை சாய்த்து கை பிடித்து துங்கும் பொது ஒரு குழந்தை போல அழகாய் இருக்கும் அது நம்மக்கு தப்பாக தெரியாது .. நம்ம அமீர் படத்துல சூரியா சொல்லுவாரே அந்த டயலாக் தான் நியாபகம் வந்தது டிப்ஸ்
  1. கல்யாணம் அனா முதல் இருபது நாட்கள் அல்லது முதல் மாசத்துக்குள் தேன் நிலவு செல்லுங்கள். ( வேலை வேலை என்று தள்ளி போட வேண்டாம் அது ஒரு கல்லூரி பருவ நினைவுகளை போல நல்ல நினைவுகளை தரும் உங்கள் அன்பை மேலும் பலப்படும் நல்லா புரிதல் கொடுக்கும் )
  2. சில பேரு கும்பல பிசினிக் போல கிளம்புவாங்க .. அப்படி ஏதும் காமெடி பண்ணாதிங்க ..
  3. உங்க நண்பர்களை ஒரு தேன் நிலவு டூர் பாக்கேஜ கிபிட்ட கொடுக்க சொல்லுங்க ( எங்க பிரிஎண்ட்ஸ் எல்லாரும் அப்படி தான் கொடுத்தோம் )
  4. இருவரும் ஒரு குழந்தையை போல் இருங்க ..
  5. அப்போ அப்போ சண்டை வரணும் வந்த தான் அழகு (அதுக்கு வேணும்னே நம்ம WWF wrestler மாதிரி சண்டை போட்டு காமெடி பண்ணாதிங்க )ஆனா சண்டை வந்த உடனே சமாதனம் அயுடனும் ... சும்மா ஈகோ வச்சிக்கிட்டு நீ பெருசா நான் பெருசா நான் யாரு தெரியுமுல ( நீ யார இருந்தா தான் என்ன ? அம்பானியா இருந்தாலும் மகனே நீ காமப்றோமிஸ் அகனும் இல்லை என்றால் ஆப்பு தான்) ஈகோவோட இருந்து வாழ்க்கைய காலி பண்ணிடாதிங்க
  6. இது உங்க குடும்பம் உங்க மனைவி ... சோ உங்க அன்பை எப்படி வேணும் நாளும் நாலு செவுதுக்குள்ள அதுவும் உங்க வீட்டு குள்ள காட்டுங்க ..
  7. தினம் ஒரு ஐ லவ் யு சொல்லுங்க.... (ஆனா ஒரே பொண்ணுக்கிட்ட சொல்லுங்க அதாங்க உங்க மனைவிக்கிட்ட மட்டும் சொல்லுங்க)
  8. தினம் ஒரு முத்தம் மினிமம் ( அதுக்கு மேல அவன் அவன் சாமர்த்தியம் )
  9. உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷியத்தை கூட நகைச்சுவையை சொல்லணும்.எடுத்துக்காட்டு சொல்லியே அகனும் நிறைய தட்திகளுக்கு புரியாது ஹி ஹி ... அன்றைக்கு உங்க மனைவி சாம்பார் வச்சி ரொம்ப மோசமா இருக்கும். சாப்பிடும் பொது சூப்பர் என்று சொல்லி முழசா சாப்டுறது பயங்கர முட்டாள் தனம் ஹி ஹி. சாப்பிடும் பொது உனக்கு ஒரு வாய் ஊட்டி விடனும் இங்க வா என்று சொல்லி உட்டி பாருங்க எவ்வளவு சூப்பர் சாம்பார் என்று அவர்களே தெரியும் ... அப்படியும் தெரியனால் உங்க விதி அவ்வளவு தான்
  10. அடிக்கடி ஒரு குழந்தையை போல் கொஞ்சுங்க ...
  11. கல்யாணத்துக்கு முன்னாடி நிறய பேசுவோம் அப்புறம் கண்டுக்க மாட்டோம் என்று ஒரு புகார் வரும் முன்னாடியே .. உனக்கு நம்ம எதிர்காலத்துக்கு நிறைய உழைக்கிறேன் என்று பிட் போடுங்க ...
  12. முன்னாடி மட்டும் போன்ல பேச டைம் கெடச்சுது எப்போ அதே ஆபீஸ் அதே வேலை ஆனா டைம் கெடைக்காது என்று சொல்வது எப்படி நினையம் என்று கேள்வி வரும் ... அதுக்கு முன்னாடி நீ எங்கோ இருந்தாய் உன்னிடம் பேசாமல் இருக்கா முடியாது ... ஆனா எப்போ நீ என்னுள் இருக்காய் .. என்னோடு இருக்காய் ... வேணும் நான் எனோட கண்ணா உத்து பாரு என்று கண்ணா கட்டுங்க .. நீங்க சொல்றது பொய் என்று அவர்களுக்கே தெரிஞ்சாலும் அதை ரசிப்பார்கள்
  13. நிறையா அவங்க பேசுறத கேளுங்க ... அப்பரும் நீங்க பேசுங்க ...
  14. ரொம்ப சுதந்திரம் கொடுங்க .. எத பத்தி வேண்டுமானாலும் அவங்க உங்க கிட்ட சொல்லும்படி வைத்துக் கொள்ளுங்கள்
  15. சந்தேகம் வேண்டாம் ... நம்பிக்கை தான் மிக பெரிய சொத்து நீங்களே உங்க மனைவி புருசன நம்பாமல் யாரு தான் நம்புவாங்க
  16. அந்த நம்பிக்கைக்கு உரியவர நடந்துக்கோங்க
  17. நிறையா விட்டுகொடுங்க ..
  18. உங்க அம்மா அப்பா உங்க பார்ட்நர் கவனிக்கணும் என்றால் உங்க மாமனார் மாமியார் அப்பா அம்மா மாதிரி பாத்துக்கோங்க ... அப்போ அப்போ ஒரு டிரஸ் எடுத்து கொடுப்பது ஒரு நலம் விசாரிப்பது என்று இருந்தால் .. சூப்பர்
  19. எதையும் நகைச்சுவையை சொல்லுங்க ... சீரியஸ் மேட்டர் கூட எப்படி சொன்ன அடையும் ( அதுக்கு உங்க அப்பாக்கு நெஞ்சு வலியமே என்று காமெடியை சொல்லி அடிவாங்கினால் நான் பொறுப்பல்ல )
  20. நீ தான் இந்த உலகத்திலயே அழகு :-) என்று சொலுங்க ( அது மிக பெரிய பொய் என்றாலும் ரசிப்பார்கள் )
  21. மத்தவங்க முன்னாடி உங்க மனைவியை வீட்டு கொடுக்கதிங்க ..
  22. அப்போ அப்போ ஹெல்ப் பன்னுங்க
  23. அப்போ அப்போ ஒரு அச்சிரயம் கொடுங்க ... ( கிபிட் பிலோவேர்ஸ் ...)
  24. முக்கியமான தினங்களை மறந்து காமெடி பண்ணிடாதிங்க ..
  25. கல்யாணத்துக்கு முன்னாடி உங்க மனவியோ புருஷன எப்படி இருந்து இருந்தாலும் பரவா இல்லை எத்துனை பாய் பிரிஎண்ட்ஸ் கேர்ள் பிரெண்ட்ஸ் இருந்து இருந்தாலும் ஓகே ஆனா அதுக்கு அப்புறம் ஏமாத்தக்கூடாது உனக்கு நான் .. எனக்கு நீ என்று தெளிவா இருங்க ( எப்படி இருந்தா பயம் இல்லை யாரும் ஒன்னு பண்ண முடியாது டிரன்ப்பறேன்சி வேணும் )..
நான் காலேஜ் படிக்கும் போதும் சரி ஸ்கூல் படிக்கும் போதும் சரி என்னோட தம்பி விஜய்கிட்ட எல்லாம் சொல்லிடுவேன் பிட் அடிச்சி மாட்டினாலும் .. பிகுரே பார்த்து சைட் அடிச்சாலும் ... எவனாச்சும் போட்டு கொடுக்க வருவான் டேய் விஜய் உங்க அண்ணன் ஒரு பொண்ண சைட் அடிக்கிறான் அதுக்கு எனோட தம்பி .. அந்த பொண்ணு பேரு இதுதானே .. என்று சொல்லி வந்தவனுக்கு முக்கு ஒடஞ்சு போய்டும் ... என இது மாதிரி பல பேரு குடும்பத்த கெடுக்க என்று வருவாங்க ... முக்கியமா சொந்தம் பந்தம் .. அதுக்கு நீங்க டிரன்ச்பறேண்ட இருந்தா எனக்கு தெரியும், இடாத காலி செய் என்று சொல்லலாம் பாரு :-) ( எவனும் பிளாக் மெயில் பண்ண முடியாது ) இப்போதிக்கு இது போதும் அப்புறம் பார்ப்போம் :-) சந்தோசமா சக்கரையை போல் இனிக்கடும் உங்கள் வாழ்க்கை - சுரேஷ் கடைசி பாயிண்ட் புதுசா கல்யாணம் ஆனவர்களுக்கு இந்த பதிவை மெயில் அல்லது பார்வர்ட் செய்யுங்க

எனக்கு 34 குழந்தைகள்: நடிகை பிரீத்தி ஜிந்தா பேட்டி

இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா 34 அனாதை குழந்தைகளை தத்தெடுத்துள்ளார். ரிஷிகேஷிப் உள்ள மிராக்கிள் அனாதை ஆசிரமத்தில் இருந்து இக்குழந்தைகளை அவர் தத்து எடுத்துள்ளார். இது பற்றி பிரீத்தி ஜிந்தா, ’’நான் தத்தெடுத்துள்ள 34 குழந்தைகளும் அனாதைகள் அல்ல. என் குழந்தைகள். அவர்களை என் சொந்தங்களாக்கி கொண்டதில் சந்தோஷமடைகிறேன்.

அவர்களுக்காக நான் இருக்கிறேன் என்ற மகிழ்ச்சியையும் ஒவ்வொருவர் முகத்திலும் பார்த்தேன். தினமும் அவர்களோடு டெலிபோனில் பேசி நலம் விசாரிக்கிறேன். ஆண்டுக்கு இரண்டு தடவை நேரில் போய் பார்த்து பேசுகிறேன்.

அந்த ஆசிரமத்துக்கு சென்றபோது சில அதிர்ச்சி தகவல்களை கேள்விப்பட்டேன். பெண் குழந்தைகளை கருவில் அழிப்பது, அரசு தொட்டிலில் போடுவது போன்ற தகவல்களை என்னிடம் சொன்னார்கள். பெண் சிசுக்களை கருவில் அழிப்பது கொடூரம். அரசு தொட்டிலில் பெண் குழந்தைகளை போடுவதும் கொடூரமானது. இது போன்ற சமூக அவலங்கள் மாறவேண்டும். நான் தத்தெடுத்த 34 குழந்தைகளுக்கும் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வேன். அவர்கள் எவ்வளவு வேண்டுமானாலும் படிக்கலாம். அதற்கான செலவுகள் முழுவதையும் ஏற்பேன்’’ என்று தெரிவித்தார்.

தமிழ் வலை தளங்களில் கூகுளின் பொது விளம்பரங்களை நிறுத்துவது எப்படி

பதிவுலகத்தில் உள்ளவர்களுக்கு கூகிள் ஆட்சென்ஸ் பற்றி நன்றாகவே தெரிந்திருக்கும்.பலரும் தங்கள் வலைத்தளங்களில் ஆட்சென்ஸை இணைத்துள்ளனர். ஆனால் தமிழ் வலைத்தளங்களில் உள்ள பெரும் பிரச்சனை என்னவென்றால் 99% தமிழ்தளங்களில் பொது விளம்பரங்களே தோன்றுகிறது. இதன் மூலம் நமக்கு ஒரு ரூபாய் கூட உபயோகமில்லை இதனைத்தவிர்ப்பது எப்படி?google psa adds in tamil blogs

1- முதலில் நீங்கள் அட்சென்சை எவ்வாறு இன்னைத்துள்ளீர்கள் என்பதைப் பார்க்கவேண்டும்.how to remove psa adds in tamil websites

2- நீங்கள் அட்சென்சை நேரடியாக உங்கள் bloger மூலம் ( blogspot->layout->add widget->adsense) பதிந்திருந்தீர்கள் என்றால் அது தவறான முறை அதனை நீக்கி விடவும்.Google adsensehas become a very popular tool for making money from your site by showing advertisements. But sometimes you see psa adds

3- இப்போது adsense தளத்திற்கு நேரடியாக நுளையுங்கள் .(நீங்கள் இதுவரை அட்சென்சில் சேரவில்லை என்றால் உங்கள் வலைத்தளத்தின் username மற்றும் password உடன் இணைந்துகொள்ளுங்கள்.)

4- இங்கு சென்று adsense setup இற்கு சென்று adsense for content என்ற மெனுவை சொடுக்குங்கள். உங்களுக்கு தேவையான விளம்பரத்தின் அளவு மற்றும் நிறங்களைத் தேர்ந்தெடுங்கள். channel என்ற பகுதியில் உங்கள் வலைத்தளத்தின் முகவரியை இடுங்கள். Although most of the times the ads show immediately, at times it takes upto 48-72 hours for google to assess the content of newly created webpage

5- ஏறக்குறைய முடிந்துவிட்டது இப்போது இருக்கும் பகுதியில் (படத்தைப் பார்த்து தெரிந்து கொள்ளவும்) அதில் Show public service ads எனும் option நீக்கி Show non-Google ads from another URL எனும் option தேர்வு செய்து அங்கே உங்கள் மற்ற வலைத்தளத்தின் முகவரியை இட்டு விடுங்கள். இல்லையெனில் ஏதாவது ஒரு படத்தை html code ஆக இணைத்து விடுங்கள். அவ்வளவு தான் இப்போது continue option தேர்வு செய்து அது தரும் ஆட்சென்ஸ் code உங்கள் வலைத்தளத்தில் இணைத்துவிடுங்கள் ஆரம்பத்தில் நீங்கள் இணைத்த படங்களே விளம்பரமாகத் தோன்றும். அனால் சில நாட்களிலேயே (உங்கள் ஹிட்சை பொறுத்து ) உங்கள் தளத்தில் google adsense விளம்பரம் தோன்ற ஆரம்பித்துவிடும். அட்சென்ஸ் தெரியாத ரகசியங்கள் எனும் நூலை எழிதி வருகிறேன் tamil.com தளம் இயங்க ஆரம்பித்தவுடன் இந்நூலை வெளியிடுகிறேன். இது பற்றி மேலும் ஏதாவது சந்தேகங்கள் இருந்தால் கீழே பின்னூட்டத்தில் கேட்கவும்.

29 மார்ச் 2009

அண்மையில் நடந்த

Sidney Slayden’s Fashion Show. (சிட்னி ஸ்லேடன் பேஷன் ஷோ)

பார்வையிட இங்கே சொடுக்கவும் .

இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்துடன் காதலில் சார்மி?

Charmi
இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்துடன், சார்மி தீவிர காதலில் விழுந்துள்ளதாக டோலிவுட்டில் குசுகுசுவென பேசிக் கொள்கிறார்கள். நடிகைகள் குறித்த கிசுகிசுக்கள் சகஜமானது. இதில் பல புருடாக்களாக இருக்கும், சில உண்மையாக இருக்கும். சில வதந்திகளுக்கு முடிவே இருக்காமல் நீண்டு கொண்டே இருக்கும். உண்மை என்ன என்றே தெரியாது. இந்த வகையில், சார்மி குறித்து புது வதந்தி ஒன்று உலா வர ஆரம்பித்துள்ளது. அவருக்கும், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத்துக்கும் இடையே காதல் என்பதுதான் அந்த வதந்தி. இருவருக்கும் காதல் தீ பற்றி, முற்றி, கொழுந்து விட்டு எரிகிறதாம். ஈருடல், ஓருயிராகி விட்டனராம். விரைவில் கல்யாணத்தில் போய் இது முடியும் என்று அந்த வதந்தி கூறுகிறது. இது உண்மையா அல்லது உண்மையிலேயே வதந்தியா என்பதை சம்பந்தப்பட்ட இருவரும்தான் உறுதிப்படுத்த முடியும். ஆனால் இருவருமே இதுகுறித்து எதுவும் பேசாமல் மெளனம் சாதிக்கின்றனர். கொஞ்ச காலத்திற்கு முன்பு நடிகை மம்தா மோகன்தாஸையும், தேவி ஸ்ரீபிரசாத்தையும் இணைந்து செய்திகள் கசிந்தன. காரணம், தேவி ஸ்ரீபிரசாத்தின் இசையில் மம்தா பாடியதுதான். வில்லு படத்தில் கூட மம்தா ஒரு பாடலுக்கு பாடியிருந்தார். இந்த நிலையில் சார்மியுடன், தேவி ஸ்ரீபிரசாத்தை இணைத்து புது செய்தி கிளம்பியுள்ளதால், எது உண்மை என்று தெரியவில்லை.

கிரிக்கெட்-தென் ஆப்பிரிக்காவில் லஷ்மி ராய்!

Lakshmi Roy
கிரிக்கெட் பைத்தியமாகி (டோணி பைத்தியம் இல்லையாம்) விட்ட லஷ்மி ராய், ஐபிஎல் 2வது சீசன் போட்டிகளைப் பார்க்க தென் ஆப்பிரிக்காவுக்குப் போகப் போறாராம். சென்னையில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின்போது டோணி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வமற்ற சியர் லீடராக கலக்கினார் லஷ்மி ராய். அவருக்கும், டோணிக்கும் இடையே டீல் ஏற்பட்டு விட்டதாக கூட செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் ஐபிஎல் 2வது சீசன் போட்டிகளை தென் ஆப்பிரிக்காவுக்கு மாற்றி விட்டதால் சோகமாகியுள்ளார் லஷ்மி ராய். இருந்தாலும் சில போட்டிகளைப் பார்க்க தென் ஆப்பிரிக்காவுக்குப் போகப் போகிறாராம் லஷ்மி. நான் அவனில்லை படத்தின் 2ம் பாகத்தில் நடிக்கவிருக்கும் லஷ்மி ராய், அதற்கான போட்டோ ஷூட்டுக்காக சென்னை வந்திருந்தார். அப்போது அவரிடம், டோணியிடமிருந்து ஏதாவது சிறப்பு அழைப்பு வந்ததா மேடம் என்று கேட்டபோது, அய்யா, அப்படியெல்லாம் பேசாதீங்கள். நாங்க ரெண்டு பேரும் நல்ல நண்பர்கள். வேறு எதுவும் இல்லை. இருவருமே எல்லையைத் தாண்டியதில்லை. இந்த மீடியாக்கள் ரொம்ப மோசம். அவர்கள்தான் என்னையும், டோணியையும் இணைத்து வைத்துப் பேசி வருகின்றனர். அதை பலமுறை நான் தெளிவாக்கி விட்டேன். எனக்கு விளையாட்டு மீது ஆரவம் உண்டு. அதிலும் ஐபிஎல் போட்டிகளுக்குப் பிறகு கிரிக்கெட் பைத்தியமாகி விட்டேன். ஐபிஎல் வரும் வரை நான் எந்த ஸ்டேடியத்திற்கும் போய் போட்டிகளைப் பார்த்ததே இல்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் போட்டிகளைப் பார்க்க வர வேண்டும் என போட்டி அமைப்பாளர்கள் கேட்டுக் கொண்டதால்தான் வந்தேன். ஆனால் அதை தேவையில்லாமல் மீடியாக்கள் பெரிதாக்கி விட்டன என்று அலுத்துக் கொண்டார் லஷ்மி ராய். சரி உங்களது ஜோடியை முடிவு செய்து விட்டீர்களா என்று கேட்டபோது, நான் விதியை நம்புபவள். எனது லைப் பார்ட்னர் யார் என்பது எனக்குத் தெரியாது என்றார் விச்ராந்தியாக. தற்போது தமிழில் நான்கு படங்கள் இருக்கிறதாம் லஷ்மி ராய்க்கு. அதில் சிம்புதேவனின் எரும்புக் கோட்டையில் முரட்டு சிங்கம் படமும் ஒன்று. இதில் கெளபாய் டைப் வேடத்தில் வருகிறாராம். இரண்டு மலையாளப் படங்களும் இருக்கிறதாம்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com