Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

05 ஜூன் 2010

இணையத்தை (INTERNET) வேகமாகவும் எளிதாகவும் பயன்படுத்த உதவும் (SHORTCUTS) குறுக்குவழிகள்.

இது போன்ற குறுக்கு வழிகள் தெரியாமல் இணையத்தை முதலில் பயன்படுத்தும் போது நான் மிகவும் சிரமபட்டிருக்கிறேன். ஆகையால் எனக்கு தெரிந்த சில இன்டர்நெட் shortcuts பற்றி இங்கு தெரிவித்துள்ளேன். S hortcuts to Work Fast in Internet Explorer Alt + A = Open the Favorites drop-down menu Alt + D = Select the current Address bar text Alt + F = Open the File drop-down menu Alt + H = Open the Help drop-down menu Alt + T = Open the Tool drop-down menu Alt + V = Open the View drop-down menu Alt + F4 = Close Internet Explorer Alt + Home = Open the Home page Alt + Right Arrow = Move forward Alt + Left Arrow = Move back Ctrl + B = Organize Favorites Ctrl + C = Copy Ctrl + E = Open the Search bar Ctrl + F = Find Ctrl + H = Open the History bar Ctrl + I = Open the Favorites bar Ctrl + L = Open a new Web page, document or folder Ctrl + N = Open a new window Ctrl + O = Open a new Web page, document or folder Ctrl + P = Print the active frame or current page Ctrl + R = Refresh Ctrl + S = Save Ctrl + V = Paste Ctrl + W = Close the window Ctrl + Enterr = Add "www." To the beginning and ".com" to the end of the text in the Address bar Tab = Move through the Address bar, Links bar, and the items on the Web page Esc = Stop downloading a page Shift + F10 = Display a shortcut menu for a link Shift + Tab = Move back through the Address bar, Links bar, and the items on the Web page F1 = Open Internet Explorer Help Keystroke Function F4 = Expand the Address bar to display recently entered addresses F5 = refres F11 =Switch between full-screen and regular view of the browser windows இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறேன்.... நன்றி.
தமிழ்மணம் பரிந்துரை

ரம்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து சொன்னால் பரிசு

உள்ளத்தை அள்ளித்தா படம் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரம்பா. இவர் தனது பிறந்த தினத்தை, இன்று (5ம்தேதி) கொண்டாடுகிறார். ரம்பாவுக்கும் கனடா நாட்டை சேர்ந்த தொழில் அதிபர் இந்திரனுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது. இந்திரனின் மேஜிக்உட் நிறுவனத்தின் விளம்பர தூதராக ஒப்பந்தமான ரம்பாவை பார்த்ததும் இந்திரனுக்கு பிடித்து விட்டது. இதையடுத்து பெற்றோர் சம்மதத்துடன் இந்திரன் - ரம்பா திருமணம் திருப்பதியில் கோலாகலமாக நடந்தது. திருமணம் முடிந்த கையோடு நடிகை ரம்பா கணவருடன் கனடாவுக்கு சென்று விட்டார்.

2182rambha

இப்போது தனது பிறந்த நாளை பெற்றோர், சகோதரர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடுவதற்காக சென்னை வந்துள்ளார். எப்போதுமே வித்தியாசத்தை விரும்பும் ரம்பா, பிறந்த நாள் கொண்டாட்டத்தையொட்டி தினமலர் டாட் காமுடன் இணைந்து ஒரு வாழ்த்து போட்டியை அறிவித்திருக்கிறார். பிறந்த நாள் வாழ்த்து சொல்லும் வாசகர்களில் தனக்கு பிடித்தமாக, அழகான வாழ்த்து கூறும் வாசகர்களுக்கு பரிசு வழங்கப் போகிறார். ‘பிறந்த நாள் வாழ்த்து’ போட்டியில் பங்கேற்கும் வாசகர்களில் வித்தியாசமான வாழ்த்து அனுப்பும் 5 பேரை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு ரம்பா பரிசு வழங்குவார்.

ரம்பாவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்பும் வாசகர்கள் தங்களது வாழ்த்துக்களை இங்கேயே பதிவு செய்யலாம். வெற்றி பெறும் வாசகர்களுக்கு இ-மெயில் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்

தமிழர் பிரச்சினை தீரும் வரை இலங்கைக்கு அவமானம் தொடரும்! – சிங்கள எம்பி ரோஸி

கொழும்பு: வதை முகாம்களில் உள்ள தமிழ் மக்களை மீளக்குடியேற்றி, நியாயமான அரசியல் தீர்வை வழங்காவிட்டால் சர்வதேசத்தின் முன் தொடர்ந்து தலைகுனிவுக்குள்ளாவதை இலங்கை தவிர்க்க முடியாது. ஐஃபா விழாவில் நடந்துள்ள அவமானம் தொடரும் என்று இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் சிங்கள பெண் எம்பி ரோஸி சேனநாயக்க கூறியுள்ளார்.

மேலும் அமிதாப் பச்சன் இல்லாத ஐஃபா விழா, மணமகன் இல்லாத திருமணத்துக்குச் சமமாகிவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் பங்கேற்ற ரோஸி கூறியதாவது:

போரினால் பாதிக்கப்பட்டு இடம் பெயர்ந்து வாழும் மக்களை மீளக்குடியேற்றி விட்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே வெளிநாட்டு ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து வருகிறார். இது அப்பட்டமான பொய்.

உண்மையில், மூன்றில் இரண்டு பெரும்பான்மையான மக்கள் இன்றும் அகதி முகாம்களில் எதுவிதமான வசதிகளுமின்றி வாழ்கின்றனர். மக்களை மீளக் குடியேற்றியதாக அரசாங்கம் கூறுகின்றது. ஆனால் அம் மக்கள் இன்றும் தகரக் கொட்டகைகளில் மிருகங்களைப் போல் வாழ்கின்றனர்.

உண்ண உணவில்லை, வாழ்வதற்கு வழியில்லாது, தொழில் இல்லாது பிள்ளைகளுக்கு கல்வி இல்லாது, அடிப்படை வசதிகளின்றி பரிதாபமான நிலையில் உள்ளனர்.

மறுபுறம் யுத்தம் முடிந்து ஒரு வருடம் கழிந்தபோதும் இதுவரையில் தமிழ் மக்களுக்கு வழங்கப்போகும் அரசியல் தீர்வு என்னவென்பதை மகிந்த அரசாங்கம் முன்வைக்கவில்லை.

இந்த சூழலில் சர்வதேச ரீதியாக புகழ்பெற்ற ஐஃபா திரைப்பட விழா இலங்கையில் நடைபெறுகிறது. இது இலங்கைக்கு கௌரவம்தான்.

ஆனால் தமிழ் மக்களுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கைகளால் தென்னிந்தியா உட்பட சர்வதேச நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் இவ் விழாவில் நடிகர்கள் கலந்து கொள்ளக்கூடாது என கடும் ஆர்ப்பாட்டங்களை நடத்தினார்கள்.

இதன் மூலம் இலங்கைக்கு களங்கமும் அவமானமும் ஏற்பட்டுள்ளது. இதற்கான முழுப்பொறுப்பும் மகிந்த அரசாங்கத்தையே சேரும்.

ஐஃபா சினிமா விழாவின் தூதுவரும் ஏற்பாட்டாளருமான அமிர்தாப்பச்சன், அபிஷேக் பச்சன், உலகப் புகழ் பெற்ற நடிகை ஐஸ்வர்யா ராய் உட்பட தென்னிந்திய புகழ் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த், இயக்குநர் மணிரத்னம் போன்ற முக்கிய பிரமுகர்கள், புகழ் பெற்றவர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளாமல் புறக்கணித்துள்ளனர். இலங்கை அரசாங்கம் சார்பில் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டும் அதை வாங்கவே மறுத்திருக்கிறார் ரஜினிகாந்த்.

தென்னிந்தியாவிலும் சர்வதேச ரீதியிலும் இலங்கை அரசுக்கு எதிராக எழுந்துள்ள எதிர்ப்பு நிலைதான் இதற்குக் காரணம்.

இதன் மூலம் தமிழ் மக்களுக்கு இலங்கை எந்த நியாயத்தையும் வழங்கவில்லையென்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

யுத்தத்தில் வெற்றி பெற்று பயங்கரவாதத்தை ஒழித்து ஒரு வருடம் கழிந்த போதும் இனப் பிரச்சினைக்கு தீர்வை அரசாங்கம் வழங்கவில்லை.

வெறுமனே அரசியலமைப்பு திருத்தம், ஆசியாவில் ஆச்சர்யமிக்க நாடாக மாற்றுவோம் என அரசு தரப்புில் வாய் கிழிய கூறித் திரிகிறார்களே தவிர தமிழ் மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கலை வழங்குவதற்கான அறிகுறியே இல்லை.

இப்படியொரு சூழலில் இந்தியாவிலும் உலகிலும் அரசாங்கத்திற்கு எதிராக கிளர்ச்சிகள் தொடர்ந்த வண்ணமே இருக்கும். இலங்கைக்கு அவமானங்களும் தொடரவே செய்யும்.

ஐஃபா சினிமா விழா என்பது உலகப் புகழ் பெற்றது. ஆசியாவின் ஆஸ்கர் என வர்ணிக்கப்படுவது. சர்வதேச திரைத்துறையில் மூன்றில் இரண்டு பங்குடன் பெரும் ஜாம்பவானாகத் திகழும் இந்திய திரைத்துறை வேறு நாடுகளில் இதனை நடத்துவது அந்த நாட்டுக்கு கௌரவத்தையும் புகழையும் பெற்றுக் கொடுக்கும்.

ஆனால் இலங்கை அரசாங்கத்தின் பிழையான செயற்பாடுகளால் கௌரவத்துக்குப் பதில் அவமானமே மிஞ்சியுள்ளது.

அரசாங்கம் தமிழ் மக்களுக்கு சம அந்தஸ்து, அதிகாரப் பரவலாக்கல், இனத்துவ கௌரவத்தை வழங்கும் அரசியல் தீர்வை உடனே அறிவிக்க வேண்டும். அதைவிடுத்து தமிழ் மக்களை ஓரம் கட்டும் நடவடிக்கைகளை தொடர்ந்தால் உலக நாடுகளிலிருந்து நாம் தனிமைப்படுத்தப்படுவோம்,” என்றார்.

ரோஸி சேனநாயக்க, 1985-ம் ஆண்டு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்றவர், மலேசியாவில் இலங்கைத் தூதராக 2002 முதல் 2004 வரை பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஹாலிவுட்டில் ‘வடிவமைக்கப்படும்’ எந்திரன்! – ஒரு எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்

ரஜினியை திரையில் ரசித்தவர், இப்போது அவர் படத்துக்கே சவுண்ட் டிஸைனராகிறார்! – ஒரு எக்ஸ்க்ளூசிவ் ரிப்போர்ட்

வுண்ட் டிசைனிங் எனப்படும் ஒலி வடிவமைப்பு இன்றைக்கு படங்களில் முக்கிய அம்சமாகப் பார்க்கப்படுகிறது.

ஹாலிவுட்டில் ரொம்ப வருடங்களுக்கு முன்பே இந்த தொழில்நுட்பம் அறிமுகமாகிவிட்டது. இப்போது பாலிவுட்டிலும் சவுண்ட் டிஸைனிங் இல்லாத படங்கள் இல்லை என்ற நிலை. ஆனால் கோலிவுட்டில், சவுண்ட் டிசைனிங் பற்றிய உணர்வு பெரும்பாலானோருக்கு இல்லை. தமிழில் பக்கா சவுண்ட் டிசைனிங்குடன் வெளியான முதல் படம் அச்சமுண்டு அச்சமுண்டு. செய்தவர் குணால் ராஜன். இவர் வசிப்பது இங்கல்ல… அமெரிக்காவில்!

ஜஸ்ட் 25 வயதில் ஹாலிவுட்டின் முன்னணி சவுண்ட் டிசைனராகக் கலக்குகிறார் (செல்லுமிடமெல்லாம் சிறப்பு சேர்ப்பது தமிழனின் பலமாச்சே…).

புதுச்சேரியைச் சேர்ந்தவர் குணால் ராஜன். அமெரிக்காவில் 20 வயதில் செட்டிலானவர், அடுத்த சில ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட படங்கள், பத்துக்கும் மேற்பட்ட குறும்படங்கள், விளம்பரப் படங்கள் மற்றும் இணையதள படத் தொடர்கள் (அமெரிக்காவில் லேட்டஸ்ட் ட்ரெண்ட் இந்த வெப் சீரிஸ்தான்!) என பெரிய சாதனையைச் செய்துள்ளார்.

ஜான் எம் சூ இயக்கிய ஸ்டெப் அப் 1-2-3 எனும் புகழ்பெற்ற பட சீரிஸுக்கு குணால்தான் சவுண்ட் டிசைனர். அடுத்து இதே இயக்குநரின் எல்டிஎக்ஸ் படத்திலும் குணால் பணிபுரிகிறார். சமீபத்தில்தான் வெப்சீரிஸ் ஒன்றுக்கு சவுண்ட் டிசைன் செய்ததற்காக ஹாலிவுட்டில் புகழ் மிக்க ஸ்டீரிமி அவார்டு வாங்கியிருக்கிறார் குணால்.

தமிழில் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் பணியாற்றியுள்ளார் குணால். இந்தப் படம்தான் சவுண்ட் டிசைனிங் செய்யப்பட்ட முதல் தமிழ்ப் படம். ஸ்லம்டாக் மில்லியனேர், ப்ளூ படங்களில் ரசூல் பூக்குட்டியுடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.

இவருக்கு லேட்டஸ்டாகக் கிடைத்துள்ள அஸைன்மெண்ட், சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கும் ஷங்கரின் ‘எந்திரன்’ சவுண்ட் டிஸைனிங்!

விஷயம் கசிந்ததும், லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள குணால் ராஜனுடன், இயக்குநர் லேகா ரத்னகுமார் அலுவலகத்திலிருந்து, தொலைபேசியில் பேசினோம்.

அவர் கூறுகையில், “தியேட்டர்ல படம் பாக்குறது எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்போதெல்லாம், தியேட்டரில் ஒலியலைகள் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கம் பிரிந்து செல்லும் ஜாலத்தை பிரமிப்பாகக் கேட்டுக் கொண்டிருப்பேன்.

எனக்கு அந்த டெக்னிக்கை முழுசாக தெரிந்து கொள்ள ஆசை வந்தது. ப்ளஸ்டூ முடித்ததும் ஆடியோ சவுண்ட் பற்றிய கோர்ஸை தேர்ந்தெடுத்தேன். சிங்கப்பூரில்தான் படித்தேன். அமெரிக்காவில் சவுண்ட் டிசைனிங் கோர்ஸ் முடித்தேன். இப்போது இந்த நிலையில் இருக்கிறேன். சொந்தமாக ஸ்டுடியோவும் இருக்கிறது. பல ஸ்டுடியோக்களுக்காகவும் பணியாற்றுகிறேன்..” என்றவரிடம், எந்திரன் வாய்ப்பு குறித்து கேட்டோம்.

“எந்திரனுக்கு ரஸூல் பூக்குட்டிதான் சவுண்ட் டிசைன் பண்ணுகிறார். அவரது மும்பை ஸ்டுடியோவில் 40 சதவிகித பணிகளும், இங்கே என்னுடைய ஸ்டுடியோவில் வைத்து 40 சதவிகித பணிகளும் நடக்கின்றன. எந்திரன் ஒரு பிரமாண்ட பொழுதுபோக்குப் படம். அதற்கு சவுண்ட் டிசைனிங் மிக முக்கியம். நிச்சயம் மைல்கல்லாக இருக்கும். படத்தின் மிக சிக்கலான சில காட்சிகளை இங்கு வைத்துதான் சவுண்ட் டிசைன் செய்கிறோம்” என்றார்.

எந்திரன் படக் காட்சிகளைப் பார்த்துவிட்டீர்களா என்றால், ஒரு கணம் அமைதி காத்தவர், “சில காட்சிகளைப் பார்த்தேன். ஆனால் எதையும் நான் வெளியில் சொல்ல முடியாது. ஒரு ட்ரெயின் ஃபைட், மிரட்டலான க்ளைமாக்ஸ் போன்றவற்றைப் பார்த்தபிறகுதான் அந்தப் படத்தின் ரேஞ்ச் தெரிந்தது. தமிழில் இதுபோல ஒரு படம் பார்த்ததில்லை. இது முதல்தரமான ஒரு ஹாலிவுட் படம் என்ற உணர்வுடன்தான் பணியாற்றப் போகிறேன்…”, என்கிறார்.

என்னதான் சிறப்பாக சவுண்ட் டிசைன் செய்தாலும், அதை துல்லியமாக ஒலிக்கத் தேவையான வசதிகளைக் கொண்டதாக திரையரங்குகள் இருக்க வேண்டுமல்லவா…?

இந்தக் கேள்வியை முன் வைத்ததும், “மிகவும் கவலைக்குரிய உண்மை அது,” என்றவர், “இன்றைய சூழலில் 10 சதவிகித திரையரங்குகள் கூட துல்லியமான சவுண்ட் சிஸ்டத்துடன் இல்லாததால், படத்தை அனுபவிக்க முடியாமல் போகிறது. இதனை சரி செய்ய வேண்டும். அச்சமுண்டு அச்சமுண்டு படத்துக்கு 7 பாயிண்டுகளில் ஒலிப்பதிவு செய்தோம். ஆனால் இங்குள்ள தியேட்டர்களில் 4 பாயிண்டுகள் கூட கேட்கவில்லை…” என்றார்.

சுவாரஸ்யமான விஷயம்: குணால் ஒரு தீவிர ரஜினி ரசிகர்!

“அதெப்படிங்க இல்லாம இருக்க முடியும்… தமிழ்நாட்டு இளைஞன் ஒருத்தன் ரஜினிக்கு ரசிகனா இல்லாம இருந்தாத்தான் அது நியூஸ். எத்தனை பெரிய லெவல்ல இருந்தாலும், ரஜினி படம்னா, ரசிகர்களுள் ஒருத்தனா மாறிடுவேன். அவர் படத்தை செமஜாலியா பார்த்து ரசிச்ச நான், இப்போ அவர் படத்துக்கே சவுண்ட் டிசைன் பண்றேன். சந்தோஷமா இருக்கு…” என்றார் ஒரு ரசிகனுக்கே உரிய குதூகலத்துடன்…!

நன்றிஎன்வழி

04 ஜூன் 2010

"ஹலால் செக்ஸ்" - முதலாளித்துவத்தின் முஸ்லிம் முகம்

சில மாதங்களுக்கு முன்னர் நெதர்லாந்து ஊடகங்களில் பரபரப்பாக ஒரு விஷயம் பேசப்பட்டது. உலகின் முதலாவது "Online இஸ்லாமிய செக்ஸ் கடை", இன்டர்நெட்டில் திறக்கப்பட்டுள்ளது. நிறுவனர் நெதர்லாந்தில் வாழும் மரோக்கோ வம்சாவழி முஸ்லிம். நிறுவனர் தான் இது குறித்து ஒரு இமாமிடம் ஆலோசனை கேட்டதாகவும், அதற்கு அவர் " இதிலே இஸ்லாமுக்கு மாறான எந்த அம்சமும் இல்லை." திருப்தி தெரிவித்ததாகவும் கூறினார். அவர் மேலும் கூறும் பொழுது: "நான் கூட மத நம்பிக்கையுள்ள முஸ்லிம் தான். எனது (ஹலால்) செக்ஸ் கடையில் ஆபாசப் படங்கள் இருக்காது. திருமணமான தம்பதிகளுக்கு தேவையான தாம்பத்திய வாழ்வை திருப்தி செய்யும் பொருட்களையே விற்கிறேன்." என்றார். இதிலே கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், பாலியல் வக்கிரங்களை சந்தைப் படுத்தும் சாதாரண மேற்கத்திய செக்ஸ் கடையைப் போல இதனைக் கருத முடியாது. இருப்பினும் நெதர்லாந்து ஊடகங்கள், இதை ஏதோ இஸ்லாமிய மதத்தினரிடையே ஏற்பட்டுள்ள கலாச்சாரப் புரட்சி என்பதைப் போல சித்தரித்திருந்தன. பாலியல் கேளிக்கைப் பொருட்களை விற்கும் செக்ஸ் கடைகள், முதலாளித்துவம் கோலோச்சும் சர்வதேச நகரங்களில் சாதாரணமாக காணப்படும். மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகள், ஆசியாவில் இந்து /பௌத்த/கிறிஸ்தவ பழமைவாதம் பேணும் நாடுகள், ஆகிய இடங்களில் மட்டும் இவை காணப்படுவதில்லை. தனி மனிதனின் பலவீனத்தை பயன்படுத்தி லட்சக்கணக்கான பணம் சம்பாதிக்கலாம் என்ற சூத்திரம் முதலாளித்துவத்தின் அடிப்படை. அதன் பிரகாரம் எதோ ஒரு வகையில் செக்ஸ் வியாபாரத்தை உலகம் முழுவதும் பரப்பி வருகின்றது. "இன்டர்நெட்" என்ற மகத்தான கண்டுபிடிப்பு அதற்கு உதவுகின்றது. ஏதாவது நாடு அதை தடை செய்யும் பட்சத்தில், "தனி மனித சுதந்திரத்தை தடுக்கிறார்கள்" என்று அந்த நாடு மீது குற்றம் சாட்ட முடியும். மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகளில் பகிரங்கமாக செக்ஸ் கேளிக்கைப் பொருட்கள் விற்கும் கடைகள் இல்லாமல் இருக்கலாம். ஆனால் அங்கெல்லாம் அவை கிடைப்பதில்லை எனக் கூற முடியாது. அமெரிக்காவில், ஐரோப்பாவில் இருக்கும் உறவினர்கள், நண்பர்கள் ரகசியமாக கொண்டு வந்து சேர்க்கிறார்கள். அல்லது சில சட்டவிரோத வியாபாரிகள் கடத்திக் கொண்டு வந்து விற்கிறார்கள். தனி மனித பாலியல் இச்சைகளை மூடி மறைத்துக் கொண்டு, வெளியே ஒழுக்கசீலர்களாக காட்டிக் கொள்ளும் சமூகங்கள் முஸ்லிம்கள் மத்தியில் மட்டுமல்ல, இந்துக்கள்,பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் என்று எல்லா மதங்களிலும் இருக்கின்றன. இத்தகைய பழமைவாத சமூகங்களை உடைக்கும் பணியில் முதலாளித்துவம் ஈடுபட்டு வருகின்றது. அதற்கு "கலாச்சார மோதல்", "அல்கைதா அபாயம்", "மத அடிப்படைவாதத்தை அடக்குதல்" என்றெல்லாம் தத்துவ விளக்கம் அளிக்கப்படுகின்றது. கம்யூனிசத்திடம் இருந்து விடுதலையான ரஷ்யா முதல், இஸ்லாமிய அடிப்படைவாதத்திடம் இருந்து விடுதலையான ஆப்கானிஸ்தான் வரை பரவி வரும் சமூகச் சீரழிவுகளுக்கு தனி மனித சுதந்திரம் என்று பெயர் சூட்டப்படுகின்றது. இத்தகைய "விடுவிக்கப் பட்ட பகுதிகளில்" பாலியல் தொழில் அமர்க்களமாக நடக்கின்றது. பருவ வயதை எட்டாத சிறுவர்கள் கூட குடும்ப வறுமையைப் போக்க பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர். சமுதாய சீர்குலைவுக்கு காரணமான வறுமையை முதலில் ஒழிக்க வேண்டும் என்று யாரும் கேட்டு விடக் கூடாது. அதனால் "கம்யூனிசமும், இஸ்லாமும் தனி மனித சுதந்திரங்களை அடக்கி வைத்திருந்தார்கள்." என்று நாமும் விளக்கம் கூறக் கற்றுக் கொள்ள வேண்டும். மேற்குலக பல்கலைக்கழகங்கள் இதை "கலாச்சாரங்களின் மோதல்" என்று வரைவிலக்கணம் கொடுக்கின்றன. தாலிபானும், அல்கைதாவும் அதையே "ஐரோப்பிய சீரழிவுக் கலாச்சாரத்திற்கு எதிரான மத நம்பிக்கையாளர்களின் போராட்டம்" என்று திருப்பிப் போடுகிறார்கள். யாழ்ப்பாண தமிழர்களிடையே கலாச்சார சீர்குலைவு காணப்பட்டால், அதனை "தமிழர்கள் மீதான சிங்களவர்களின் சதி" என்பார்கள் தமிழ் தேசியவாதிகள். தென்னிலங்கை கடற்கரைகளில் வெள்ளையின உல்லாச பயணிகளின் காமவெறிக்கு இரையாகும் (சிங்கள) சிறுவர்கள் பற்றி இவர்கள் அறிந்திருக்க மாட்டார்கள். மதவாதிகள், தேசியவாதிகள் எல்லோரும் இதனை கலாச்சாரம் சம்பந்தப்பட்ட பிரச்சினையாக மட்டும் பார்க்கின்றார்கள். இவர்களுக்கிடையிலான அடிப்படைப் பிரச்சினை ஒன்று தான். சமூக சீரழிவுகளுக்கு காரணம், முதலாளித்துவ பொருளாதாரம் என்பதை நம்ப முடிவதில்லை. மேற்கத்திய முதலாளிகள் முஸ்லிம் வாடிக்கையாளர்களைக் கவருவதற்காக "ஹலால்" பொருட்களை சந்தைப் படுத்துகிறார்கள். இத்தனை காலமும் ஐரோப்பிய நாடுகளில் வாழும் பல்வேறு முஸ்லிம் சமூகங்களை சேர்ந்த வர்த்தகர்கள், "ஹலால் சந்தையில்" ஏகபோக ஆதிக்கம் செலுத்தினார்கள். "இவ்வளவு காலமும் மில்லியன் யூரோ வருமானம் வரும் ஹலால் சந்தையை கவனிக்காமல் விட்டு விட்டோமே" என்று அங்கலாய்க்கிறார்கள் ஐரோப்பிய முதலாளிகள். நெதர்லாந்தின் மிகப் பெரிய சூபர் மார்க்கட் நிறுவனம் (Albertheijn) தனது கடைகளில் ஹலால் முத்திரை இடப்பட்ட பொருட்களை விற்பனை செய்கின்றது. இந்த ஹலால் வியாபாரத்தில் புதிய வரவு "சைக்கிள் கம்பனி". நெதர்லாந்து ஒரு சைக்கிள்களின் நாடு என அழைக்கலாம். ஐரோப்பாவில் இந்த நாட்டில் தான் சைக்கிள் பாவனையாளர்கள் அதிகம். ஆனால் புதிதாக வரும் வெளிநாட்டு குடிவரவாளர்கள் சைக்கிள் பாவிப்பது குறைவு. அவர்கள் அநேகமாக கார், அல்லது மோட்டார் சைக்கிளையே நாடுகின்றனர். வெளிநாட்டு குடிவரவாளர்கள் என்றால் முஸ்லிம்கள் என்று கருதிக் கொள்வது பொதுப்புத்தியில் உறைந்து விட்டது. அதனால் சைக்கிள் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் முஸ்லிம்களுக்கேற்ற "ஹலால் சைக்கிள்" தயாரிக்கின்றன. அதற்கு அவர்கள் கூறும் காரணம், " இஸ்லாமிய மத நம்பிக்கையின் பிரகாரம் பெண்கள் சைக்கிள் ஓடுவது விரும்பத்தக்கதல்ல என்று எமது ஆய்வின் முடிவில் கண்டறிந்திருக்கிறோம்." என்பது தான். இறைதூதர் முகமது நபி வாழ்ந்த காலத்தில் சைக்கிள் இருந்ததாக நாம் அறியவில்லை. பெண்கள் சைக்கிள் ஓடக் கூடாது என்ற சமூகக் கட்டுப்பாடு, பெருமளவு சைவத் தமிழர்கள் வாழும் யாழ் குடாநாட்டிலும் இருந்துள்ளது. (கடந்த 30 வருடங்களில் தான் இந்தக் கட்டுப்பாடுகள் கைவிடப்பட்டன.) முஸ்லிம்கள் சைக்கிளை விரும்பாததற்கு மதக் கட்டுப்பாடு தான் காரணம் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த செய்தியை அறிவித்த நெதர்லாந்து தொலைக்காட்சி நிகழ்ச்சியிலேயே மேலதிக விளக்கமும் கிடைக்கிறது. காரில் வீதிவலம் வருவது, வயதுக்கு வராவிட்டால் ஸ்கூட்டரில் ஸ்டன்ட் காட்டுவது, என்பது இளைய தலைமுறையின் நாகரீக மோகம். முஸ்லிம் இளைஞர்களும் உலகை ஆட்டிப்படைக்கும் நுகர்பொருள் கலாச்சாரத்தின் அடிமைகள் தான். இந்தியா போன்ற ஏழை நாடுகளில் கூட "டூவீலரில்" போவது மத்திய தர வர்க்க "ஸ்டேடஸ்". சைக்கிளில் போனால் சமூகத் தாழ்வாக கருதிக் கொள்வார்கள். ஐரோப்பிய வாழ் முஸ்லிம்கள் அப்படிப்பட்ட சமூகப் பின்னணியைக் கொண்டவர்கள் தாம். ஜாலியாக காரில் பறக்கும் நாகரீக இளைஞர்களிடம் "வாகனங்கள் வெளிவிடும் கரியமில வாயுவினால் சுற்றுச் சூழல் மாசடைவது" பற்றி போதிக்க முடியாது. சொன்னாலும் கேட்க மாட்டார்கள். மத நம்பிக்கையாளர்களை விட பண நம்பிக்கையாளர்கள் பெருகி வரும் காலம் இது. முதலாளித்துவ கலாச்சாரம் இன்று அனைத்து மதங்களையும் பின்னுக்கு தள்ளி விட்டது. ஒவ்வொரு நாட்டிலும் பெரும் கலாச்சாரமும், அதற்குள் துணைக் கலாச்சாரங்களும் இருப்பதாக வணிகத்துறை பாடநூல்கள் ஏற்றுக்கொள்கின்றன. துணைக் கலாச்சாரங்களின் "தேவைகளை" பூர்த்தி செய்வதற்காக மூலதனம் ஹலால் சந்தையைக் கைப்பற்ற துடிக்கின்றது. அது முஸ்லிம்களின் வழிபாட்டு ஸ்தலங்களையும் விட்டு வைக்கவில்லை. சவூதி அரேபியா உலகம் முழுவதும் மசூதி கட்டிக் கொடுக்கும் "ரியல் எஸ்டேட்" வியாபாரத்தில் இறங்கி இருப்பது இரகசியமல்ல. மேற்கு ஐரோப்பிய நாடுகளில் சவூதி அரேபியாவின் மூலதனம் பாய்வதைத் தடுப்பதற்காக, அரசாங்கமே மசூதி கட்ட நிதி வழங்குகின்றது. சவூதியின் (கடும்போக்கு) "வஹாபிஸ" இஸ்லாமுக்கு போட்டியாக, (தாராளவாத) "ஐரோப்பிய" இஸ்லாம் உருவாக்கப்படுகின்றது. சபாஷ்! சரியான போட்டி!!
நன்றி :தமிழ்மணம் பரிந்துரை ________________________________________ உசாத்துணை : Online Islamic sex-shop opens for business "ஹலால் சைக்கிள்" பற்றி நெதர்லாந்து தொலைக்காட்சி செய்தி அறிக்கை

ஆணுக்கும் பெண்ணுக்கும் என்ன வித்தியாசம்?

புத்திசாலிதனத்தில் ஆணுக்கும்,பெண்ணுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் மூளையின் அமைப்பில் சின்ன,சின்ன வித்தியாசங்கள் உண்டு.பெண்களின் மூளையில் உள்ள செல்களை விட ஆண்களின் மூளையில் உள்ள செல்களின் எண்ணிக்கை நான்கு சதவீதம் அதிகம்.
அதனால்,மூளையின் எடையும் ஒரு 100 கிராம் அதிகம்.( அதாவது ஆண்களுக்கு தலைக்கனம் அதிகம்) பெண்களின் மூளையில் செல்களின் எண்ணிக்கை குறைவு என்றாலும்,செல்களுக்கிடையே உள்ள இணைப்பு அதிகம். அதாவது, பெண்கள் குறைந்த அளவு செல்களை வைத்துகொண்டு விரைவாக வேலை செய்கிறார்கள்.
மூளையில் லிம்பிக் சிஸ்டம் என்றொரு அமைப்பு இருக்கிறது.இதுதான் நமது பலவித உணர்ச்சிகளைக் கையாள்கிறது. இது,ஆண்களைவிடப் பெண்களுக்கு சற்று பெரிதாக இருக்கும். இதன் விளைவாக மற்றவர்கள் மீது அக்கறை செலுத்துவது,உணர்வு ரீதியான பிணைப்பை ஏற்படுத்திகொள்வது,ஆகியவற்றில் ஆண்களை விட பெண்கள் மேலானவர்கள்.
இதனால்தான் குழந்தைகளைக் கவனிப்பது,வீட்டைப் பராமரிப்பது, போன்ற விசயங்களைப் பெண்கள் சிறப்பாகக் கையாள்கிறார்கள்.உலகத்தின் எந்தக் கலாச்சாரமாக இருந்தாலும் இதுதான் நியதி. மூளையின் இடப்பக்கம் ,கணக்குப் போடுவது, தர்க்க ரீதியான சிந்தனைகள் இதற்கு பொறுப்பு.
மூளையின் வலப்பக்கம் மொழியாற்றல், பேச்சுத்திறன் இதற்கு பொறுப்பு. இடப்பக்க மூளையையும் வலப்பக்க மூளையையும் கோர்பஸ் கோலோசம் (corpus colosum) என்ற ஒரு " சாலை " இணைக்கிறது. ஆண்களைவிடப் பெண்களின் மூளையில் இந்த சாலை பெரியது. அதன் காரணமாகப் பெண்களின் மூளையில் தகவல் பரிமாற்றங்கள் மிக வேகமாக நடக்கின்றன.
இதனால் பெண்கள், மூளையின் இரண்டு பக்கங்களையும் அதிகமாக பயன்படுத்துகிறார்கள். மொழியை கற்றுகொள்வதில் ஆரம்பித்து, உள்ளுளணர்வு என்று எல்லாவற்றிலும் அவர்களுக்கு திறன் சற்று கூடுதல். ஆண்கள் கணக்குப் போடுவதில் கில்லாடிகள்.
நன்றி:
புதிய தலைமுறை.

எதிர்காலத்தில் அனுப்ப வேண்டிய எல்லா வகையான செய்திகளையும் இப்போதே அனுப்பலாம் .

நம் நண்பருக்கு பிறந்த நாள் என்று வைத்துக்கொள்வோம் சரியாக என்றைக்கு வாழ்த்து செய்தி அவருக்கு கிடைக்க வேண்டும் என்றும் வாழ்த்துச்செய்தி மட்டுமல்ல எல்லாவகையான செய்திகளையும் டிவிட்டர் , எஸ்எம்எஸ் மற்றும் இமெயில் மூலம் இப்போதே அனுப்பலாம் எப்படி என்பதைப்பற்றி தான் இந்த பதிவு.

படம் 1

வருகின்ற ஜூலை மாதம் நாம் வாழ்த்து செய்தி அனுப்பவேண்டும் என்றால் இப்போதே அந்த வாழ்த்து செய்தியை அனுப்பலாம் அந்த வாழ்த்துச்செய்தி நாம் குறிப்பிட்ட தேதியில் யாருக்கு செல்ல வேண்டுமோ அந்த தேதியில் அவர் பெறுவார்கள். நாளை என்ற ஒன்று நிச்சயம் இல்லாத இந்த வாழ்க்கையில் நாம் யாருக்கு வேண்டுமானாலும் எந்த செய்தி வேண்டுமானலும் இப்போதே அனுப்பலாம்.

இணையதள முகவரி : http://www.futuremessage.org

படம் 2

படம் 3

இந்த இணையதளத்திற்க்கு சென்று படம் 1-ல் இருப்பது என்ன செய்தி அனுப்ப வேண்டுமோ அதை தட்டச்சு செய்துகொள்ளவும் அடுத்து Date என்பதை அழுத்தி படம் 2 இல் இருப்பது போல் எந்த தேதியில் செய்தி கிடைக்க வேண்டும் என்பதையும் தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து Text Message என்பதை சொடுக்கி படம் 3-ல் இருப்பது போல் வாழ்த்து பெறுபவரின் போன் நம்பரை கொடுக்கவும்.

படம் 4

அடுத்து Twitter Accout என்பதை சொடுக்கி படம் 4 -ல் இருப்பது போல் நம் டிவிட்டரின் முகவரியையும் கடவுச்சொல்லையும் கொடுக்கவும்.

படம் 5

அடுத்து Email Information என்பதை சொடுக்கி படம் 5-ல் உள்ளது போல் பெறுபவரின் இமெயில் முகவரியை கொடுத்து ” Send Message to the Future ” என்ற பொத்தானை அழுத்தி நம் நாளைய செய்தியை இப்போதே அனுப்பலாம்.

நன்றி :வின்மணி

02 ஜூன் 2010

ஐபேட் போட்டியாக சீனா அறிமுகப்படுத்த இருக்கும் ஐபெட் சிறப்பு வீடியோவுடன்

ஆப்பிள் நிறுவனத்தின் ஐபேட் வளர்ச்சி உலக நாடுகளை எல்லாம் வியப்பில் ஆழ்த்தி இருக்கும் செய்தி நமக்கு தெரிந்த ஒன்று தான் இப்போது ஐபேட்-க்கு போட்டியாக சீனா புதிதாக ஐபெட் ஒன்றை அறிமுகப்படுத்த இருக்கிறது இதைப்ப்ற்றிய சிறப்பு பதிவு.

மடிக்கணினிகளின் விற்பனையை பின்னுக்கு தள்ளி தற்போது முதலிடம் பிடித்து வரும் ஐபேட் போலவே இப்போது புதிதாக ஐபெட் என்ற ஒன்றை சீன தொழில் நுட்ப வல்லுனர்கள் உருவாக்கியுள்ளனர். ஐபேட் -ல் என்ன வெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் இந்த ஐபெட்-லும் பயன்படுத்தலாம். பயன்படுத்துவதற்க்கு எளிது மட்டுமல்ல விளையாட்டு வீரர்கள் பயன்படுத்தும் வண்ணம் எளிதில் உடையாதவாறு இதன் மேல்பாகம் வடிமமைக்கப்பட்டுள்ளது. இதிலும் ஆண்டிராய்டு அப்ளிகேசன் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. 128 MB RAM , 16 GB சேமிக்கும் வசதியுடன் வெளிவந்துள்ளது. இதன் விலை $105 டாலர் தான். இது எப்படி வேலை செய்கிறது என்பதைப் பற்றிய சிறப்பு வீடியோவையும் இத்துடன் இணைதுள்ளோம்.

ஆவணங்களை பாதுகாத்துக்கொள்ளவென ஒரு இலவச மென்பொருள்

பொது இடங்களிலோ அல்லது வீடுகளிலோ உங்கள் கணனியில் முக்கியமான ஆவணங்களை நீங்கள் கோப்புறைகளில்(Folders) இட்டு பாதுகாத்துக்கொள்ளும்போது மற்றவர்கள் உங்கள் ஆவணங்களை பார்வையிடாமல் பாதுகாப்பாக வைத்துகொள்ளவென பல மென்பொருட்கள் மற்றும் பலவழிகள் உள்ளன. அவ்வாறான வழிகளில் இதுவும் ஒன்று. கோப்புறைகளை(Folders) பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவென இலவச மென்பொருள் பற்றிய ஒரு பதிவுதான் இது. FileSecrets எனப்படும் இந்த மென்பொருளானது கோப்புறைகளை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவுகின்றது. மற்றவர் உங்கள் கோப்புறைகளை திறக்க முடியாதபடியும் கடவுச்சொல் வழங்கியும் மறைத்தும் பாதுகாப்பாக கோப்புறைகளை வைத்திருக்க முடியும். கணனியில் FileSecrets எனப்படும் இந்த மென்பொருளை முதலில் நிறுவிக்கொள்ளுங்கள் பின்னர் நிறுவிய மென்பொருளை திறந்து file or folder என்ற இடத்தில் நீங்கள் பாதுகாக்க வேண்டிய மென்பொருளை browse என்பதில் அழுத்தி (Click) தெரிவுசெய்துகொள்ளுங்கள். பின்னர் Action என்ற இடத்தில் எந்த வகையில் உங்கள் கோப்புறைகளை பாதுகாக்க போகிறீர்கள் என்பதை தெரிவு செய்துகொள்ளுங்கள். பின்னர் add என்பதை அழுத்தி பாதுகாக்க வேண்டிய கோப்புறையை இணைத்துக்கொள்ளுங்கள்.
பாதுகாத்த கோப்புறைகளை திறந்துகொள்ளும்போது நீங்கள் வழங்கிய Action க்கு ஏற்ப பின்வரும் எச்சரிக்கைகளை அது காண்பிக்கும். 1.Deny Access to File or Folder :
2.Deny Modify to File or Folder:
3.Password Protection :
மென்பொருளை தரவிறக்க இணையச்சுட்டி: FileSecrets http://www.pogisys.com/downloads/FileSecretsSetup.exe நன்றி :-தமிழ்மணம் பரிந்துரை

வெப்ஸ்டீரிமிங்கை பதிவிறக்கம் செய்வது எப்படி?

இங்கே கிளிக் செய்யவும்.

இன்று பல இணையங்களில் வீடியோ காட்சிகளை கண்டு மகிழ்கின்றோம் ஆனால் நமக்கு அப்போது தோன்ருவது இந்த வீடியோ காட்சிகளை அப்படியே பதிவிறக்கம் செய்யும் வசதி கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே என்று நினைப்போம் அல்லவா? சான்றாக youtube, dailymotion போன்ற தளங்களில் வீடியோ காட்சிகளை பார்க்க்கும் வசதியை மட்டுமே அளித்திருப்பார்கள் இது போன்ற தருனங்களில் நீங்கள் பயர்பாக்ஸ் தொகுப்பை உபயோகப்படுத்தினால் பதிவிறக்கம் சாத்தியமே….கீழ்கண்ட வீடியோ தொகுப்பை பார்க்கவும்…

01 ஜூன் 2010

பட்டய கிளப்பும் சிங்கம்

இது விமர்சனம் அல்ல என்னோட பார்வை இப்பெல்லாம் படம் வெளிவந்து இரண்டு நாள் கழித்து பதிவிட்டாலே என்னங்க ரொம்ப தாமதமா பதிவு போடுறீங்க என்று சொல்றாங்க! ஒரே குஷ்டமப்பா முதல்லையே சொல்லிடுறேன் காட்சிக்கு காட்சி லாஜிக் பார்க்கிற மக்களுக்கான படமல்ல இது. அதற்காக ரொம்ப மட்டமாகவும் இல்லை. நான் கூட சூர்யா ட்ரைலரில் செய்த அலப்பரையை பார்த்து படம் மொக்கையாக இருக்கப்போகிறது என்று நினைத்தேன் ஆனால் படம் பட்டாசாக இருக்கிறது. கண்டிப்பாக சிங்கம் வெற்றிப்படம் தான் சந்தேகமே இல்லை.
சூர்யா நிஜமாகவே காவல்துறை அதிகாரியாக அசத்தி இருக்கிறார். மிடுக்கிலும் சரி உடல் மொழியிலும் சரி பின்னி பெடலேடுத்து இருக்கிறார். அவருக்கு வேகம் நன்றாக பொருந்தியுள்ளது. அடிதடி எல்லாம் மிகைப்படுத்தப்பட்டது என்று தெரிந்தாலும் ஏற்றுக்கொள்ளும்படி அவரது உடல்வாகு உள்ளது.
அனுஷ்கா ….யப்பா! அருந்ததி படத்திற்கு பிறகு இப்ப தான் பார்க்கிறேன். என் இதயம் பாடலில் எனக்கு (மட்டுமல்ல பலருக்கும்) நெஞ்சு வலி வரவைத்து விடுவார் போல இதயம் பலகீனமானவர்கள் (ஆண்கள்) என் இதயம் பாடல் பார்க்க வேண்டாம் என்று பரிந்துரைக்கிறேன் LOL அநியாயத்திற்கு உயரமாக இருக்கிறார், எப்படியும் ஆறடி இருப்பார் போல உள்ளது. நம்ம சூர்யா வேற ஏற்கனவே உயரம் குறைவு. ரொம்பத்தான் சிரமப்பட்டு இருக்காரு. ஒரு கடற்கரை காட்சியில் இருவரும் நிற்கும் போது பாவம் அனுஷ்கா நிற்கும் இடத்தில் மணலை கொஞ்சம் தோண்டி நிற்கவைத்து இருக்கிறார்கள், அவரும் அந்த இடத்தை விட்டு நகராமல் வசனம் பேசி நடித்து இருக்கிறார். என்ன கொடுமை சார்! பிரகாஷ்ராஜ் வழக்கம் போல மிரட்டுகிறார் நடிப்பில். கையெழுத்து போட காவல்நிலையம் வந்து சூர்யாவிடம் தகராறு செய்ய, அதற்கு அவரது ஊர்க்காரர்கள் செய்யும் கலாட்டாவிற்கு இவர் அதிர்ந்து கொடுக்கும் முகபாவனைகள் கலக்கல். ஏன்டா! சென்னைல நான் எப்படிப்பட்ட ஆளு! என்னை இங்க இப்படி சப்பை ரவுடி மாதிரி ஆக்கிட்டீங்களேடான்னு! என்று எண்ணும்படி அவர் கடுப்பில் பார்ப்பது ரகளையாக இருக்கும் சூர்யாவிற்கு சென்னையில் பிரகாஸ்ராஜ் தனது ஆட்களை வைத்து அவருக்கு குடைச்சல் கொடுத்து காமெடி பீஸ் மாதிரி ஆக்கி அவர் அதை பார்த்து ரசித்து சிரிப்பது கலக்கலா இருக்கும். அதிலும் ஒரு கும்பல் கொலைகொலையா முந்தரிக்கா பாடலை பாடி செம வெறுப்பேத்தி விடும் ஆனால் அதற்கு சூர்யா அதே ஸ்டைலில் நொறுக்கி எடுப்பது சரவெடி! அந்த இடத்தில் பின்னணி இசை தூள் கிளப்புது. விவேக் காமெடி செய்ய ரொம்ப கஷ்டப்படுகிறார் போல! இரட்டை அர்த்த வசனங்கள் முகம் சுழிக்க வைக்கிறது, யாருப்பா இவருக்கெல்லாம் பத்ம ஸ்ரீ கொடுத்து மானத்தை வாங்குறது! இவருக்கு ஆபாச ஸ்ரீ என்று தான் பட்டம் கொடுக்கணும். எரிமலை எப்படி பொறுக்கும் என்ற பழைய பாடலை பின்னணியில் அடிக்கடி ஒலிக்க விட்டு கடுப்படிக்கிறார்கள். ஒரு சில காட்சிகளில் சிரிப்பை வரவழைக்கிறார் மறுப்பதற்கில்லை. விவேக்கிற்கு வயசாகி விட்டது முகத்தை பார்த்தாலே தெரிகிறது… இதற்கு அவரது (இரட்டை அர்த்த) பாணியிலே ஒரு கமெண்ட் அடிக்க முடியும்……. சரி! அவர் மாதிரி எதுக்கு நாமளும். இயக்குனர் ஹரியின் பலமே திரைக்கதை தான் உடன் சில புத்திசாலிதனமான காட்சிகள் இவையே படத்தின் விறுவிறுப்பை கூட்டுகிறது. அதை இந்தப்படத்திலும் செவ்வனே செய்து இருக்கிறார். அடிக்கடி காட்சிகளை Fast forward செய்வதும் படத்தை வேகமாக்க ஓரளவு உதவி புரிந்து இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை அதற்குண்டான காட்சிகளும் அமைவதால். இவரோட தமிழ் படத்தை (பிரசாந்த் நடித்தது) இதுவரை பார்க்காமல் இருந்தால் பாருங்கள் ரொம்ப நன்றாக இருக்கும்.
சிங்கம் பாடல் பலர் நன்றாக இல்லை என்று கூறினார்கள் ஆனால் எனக்கு ரொம்ப பிடித்து இருக்கிறது. இதற்காகவே பாடலை iPod ல் பலமுறை கேட்ட பிறகே பாடல் பற்றி எழுதினேன். காரணம் அயன் படம் விமர்சனம் எழுதும் போது பாடல் சுமார் என்று எழுதி இருந்தேன் பின்னர் பலமுறை கேட்ட பிறகு அனைத்து பாடல்களுமே நன்றாக இருந்தது. சிங்கம் படத்தின் பாடல்களில் வெரைட்டி இல்லை ஆனால் கண்டிப்பாக ஹிட் ஆகும். பொழுது போகணும் என்று நினைப்பவர்கள் தாராளமாக படத்திற்கு செல்லலாம்… என்னய்யா! சிங்கம்…. என்னய்யா! பில்டப் என்று லாஜிக் பார்க்கும் பெருமக்கள் எட்டியே பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
கொசுறு 1 சிங்கையில் 9 திரையரங்கில் சிங்கம் படத்தை வெளியிட்டு இருந்தார்கள். எனக்கு தெரிந்து அதிகளவில் வெளியிடப்பட்ட தமிழ் திரைப்படம் இதுவாகத்தான் இருக்கும். சிங்கையில் சூர்யாவிற்கு தற்போது ரசிகர்கள் அதிகம் ஆகி விட்டார்கள். இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் பலர் தங்கள் விருப்ப நடிகராக சூர்யாவை கூறுவதை கேட்க முடிகிறது.

கொசுறு 2 இது என்னுடைய 300 வது இடுகை. ஒவ்வொருமுறையும் வரலாறை கூறுவது வெட்டி வேலையாக தெரிவதால் (எனக்கு வரலாறு முக்கியம் இல்லை அமைச்சரே! ) இந்தமுறை நன்றி கூறுவதோடு முடித்து விடுகிறேன். எனக்கு பின்னூட்டம் அளித்து ஊக்கம் அளிக்கும் நண்பர்களுக்கும், ரீடரில் மட்டுமே படித்துக்கொண்டு என் தளத்திற்கு எட்டியே பார்க்காத நண்பர்களுக்கும் Google Friend Connect ல் பின் தொடரும் நண்பர்களுக்கும் மின்னஞ்சலில் பின்தொடரும் நண்பர்களுக்கும் இந்தசமயத்தில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

31 மே 2010

உங்கள் கணினியை சுத்தப்படுத்த சில வழிகள்:-

அனைவருக்கும் தங்களது கணினியை மிக வேகமாக்க ஆசை. இருப்பினும்அவர்கள் கணினியில் தேவை இல்லாமென்பொருள்கள்,கோப்புகள்,நிரல்கள் என நிரப்பி தள்ளுவார்கள். கடைசியில் என் கணினி மிக மிக மெதுவாக வேலை செய்கிறது என்று குறை கூறுவார்கள்.சரி இதனையெல்லாம் கழற்றி கணினியை சுத்தம் செய்யலாம் என்று பார்ப்பார்கள் இறுதியில் அதுவும் செய்ய முடியாமல் தவிப்பார்கள். அவ்வாறு தவிப்பவர்கள் இந்த பதிவை படியுங்கள்:)
Revo Uninstaller:- விண்டோசில் ஏற்கனவே Add/Remove program வசதி இருந்தும் சில நிரல்களை (program) நம்மால் முழுமையாக அகற்ற இயலாது. அந்நிலையில் இது போன்ற மென்பொருளை பயன்படுத்தவும். இந்த மென்பொருள் கழற்ற (uninstall) இயலாத மென்பொருள்கள்,நிரல்கள் ஆகியவற்றை எல்லாம் கழற்றி விடும்.அதனை தரவிறக்கம் செய்ய இங்கு செல்லவும்:-http://www.revouninstaller.com/
மீண்டும் நிறுவி கழற்றும் முறை (Reinstall to Uninstall):-சில நேரங்களில் சில மென்பொருள்களை/நிரல்களை சரியாக கழற்ற இயலாது.அதற்கு காரணம் நிரல்களில் ஏற்பட்டுள்ள சிதைவு (corrupt). அதனால் நாம் அந்த மென்பொருள்/நிரலை திரும்ப நிறுவி (reinstall) கழற்ற முயல்வோம் ஆனால் அது "உன் கணினியை விட்டு போக மாட்டேன்" என்று அடம்பிடிக்கும்.அப்போது இது போன்ற முறையை கையாளவும். முதலில் உங்களது கணினியை மறுதொடக்கம் (restart) செய்யுங்கள். பிறகு F8 விசையை (key) அழுத்திக் கொண்டே இருங்கள். அழுத்திய உடன் ஒரு திரை (screen) தோன்றும் அதில் Safe mode என்பதை சொடுக்கி பிறகு கழற்றி பாருங்கள்!
Rgistry cleaner:-"
தம்பி நீ சொன்ன இரெண்டுமே செய்து விட்டோம் ஆனா போவமாட்டங்குதே!" என்று கவலைப்படுவோர் இந்த மென்பொருளை பயன்படுத்துங்கள்Ccleaner:- http://www.piriform.com/ccleanerAuslogics:- http://www.auslogics.com/en/இந்த இரெண்டும் நேரடியாக Program கோப்பில் (file) இருக்கின்ற கோப்பகத்தை (directory) அழித்துவிடும்.
தேவை இல்லாத கோப்புகளை அழித்தல்:-
என்ன உங்கள் தட்டு (hard disk) ஊசிப்போன வடை,பஜ்ஜி எல்லாம் வைத்திருக்கிறதா (அதாவது தேவையில்லாத cookies,temporary files, program installers, cookies, cached data, file fragments... ஆகியவற்றை எல்லாம் வைத்திருக்கிறதா:) அதனை அழிக்க மேலே உள்ள ccleaner மென்பொருளையே பயன்படுத்துங்கள்.
கணினியை பாதுகாப்பாக சுத்தப்படுத்த:-
நாம் எப்பொழுதும் கணினியை சுத்தப்படுத்தும் போது அதனை ஒரு தற்காப்பிற்காக சேகரிக்க மறந்துவிட்டு அனைத்தும் அழித்து விடுவோம். பிறகு அய்யய்யோ அனைத்தும் அழிந்து விட்டதே என கவலைப்படுவோம்:( கவலைபடாதீர் மக்களே அதற்கும் கைவசம் மென்பொருள் இருக்கிறது. இந்த மென்பொருள் பாதுகாப்பாக அனைத்தையும் ஒரு தற்காப்பிற்காக சேகரித்த (நீங்கள் குறிப்பிட்டது மட்டும்) பின்பு தான் அழிக்கும்.அதனால் இழந்ததை நீங்கள் எப்பொழுது வேண்டுமானால் மீட்டிக் கொள்ளலாம்.
Comodo system cleaner:- http://system-cleaner.comodo.com/
பெரிய கோப்புகளை அழித்தல்:-
நம் கணினியில் அதிகமாக மென்பொருள்கள் இருக்கிறதோ இல்லையோ! ஆனால் கண்டிப்பாக புதிதாக வெளிவந்த படங்கள்,விளையாட்டுக்கள்,ஒளித்தோற்றம்,பாட்டு ஆகியவையெல்லாம் நிரம்பி வழியும். அதனை எல்லாம் அழிக்க இந்த மென்பொருளை பயன்படுத்துங்கள்:- http://freshney.org/xinorbis/இந்த மென்பொருள் உங்கள் தட்டை (hard disk) பரிசோதித்து (scan) எது அதிக அளவில் வைத்து இருக்கிறீர் எது குறைவாக வைத்து இருக்கிறீர் என்று அனைத்தையும் வரைபடம் (graph) போட்டு காண்பிக்கும்.இதனால் எந்த நிரல்,படம்... அதிகமாக இருக்கிறதோ அதனை நீங்கள் கண்டறிந்து அழித்துக் கொள்ளலாம்.இதோடு இந்த பதிவு முடிந்து விட்டது. இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தால் கருத்துரை இடவும்.ஓர் அறிவிப்பு இந்த பதிவு நானாக எழுதவில்லை என் அண்ணன் கூறி எழுதியது. அதனால் இந்த சின்ன பையனுக்கு இவ்வளவு அறிவா என்றெல்லாம் நினைக்க வேண்டாம் மக்களே:) button="hori"; submit_url ="http://cp-in.blogspot.com/2010/04/blog-post_28.html" Download As PDF
நன்றி -சின்னப்பையன்

இந்திய அணிக்கு ஸ்பான்சர்: தக்கவைத்துக்கொண்டது சஹார

இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்சராக சஹாரா நிறுவனம் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. வரும் 2013 ஆம் ஆண்டுவரை இந்திய கிரிக்கெட் அணிக்கு ஸ்பான்சர் வழங்கும் நிறுவனங்களைத் தேர்ந்தெடுக்கும் ஏலம் மும்பையில் நடைபெற்றது. இந்த ஏலத்தில் தற்போதைய ஸ்பான்சரான சஹாரா நிறுவனமும், பார்தி ஏர் டெல் நிறுவனமும் கலந்துகொண்டன. பலத்த போட்டிக்கிடையே பார்தி ஏர் டெல்லை பின்னுக்குத் தள்ளி, இந்திய அணிக்கு ஸ்பான்சர் செய்யும் வாய்ப்பை மீண்டும் பெற்றது சஹாரா நிறுவனம். ஏலத்தில் வெற்றி பெற்ற சஹாரா நிறுவனம் இந்திய அணிக்கு வரும் 2013 ஆம் ஆண்டுவரை ஸ்பான்சர் அளிக்கும். இதற்காக போட்டி ஒன்றுக்கு ரூ.3.3 கோடி ரூபாயை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியத்துக்கு சஹாரா நிறுவனம் அளிக்கும். -சிவாஜி டிவி

கற்றது களவு - திரைப்பார்வை..!!!

ஏம்ப்பா... இந்த டக்ளஸ் பய கூட சேர்ந்து "கற்றது களவு" படம் பார்க்க போனியே? யாரு படம்? எப்படிப்பா இருந்துச்சு? சும்மா பந்தயக்குதிரை கணக்கா வேகமா ஆரம்பிக்கிற படம் கொஞ்சம் கொஞ்சமா நொண்டியடிக்க ஆரம்பிச்சு, வெற்றிக்கோட்டை தொடுறதுக்கு முன்னாடியே சொங்கிப் போய் விழுந்தா எப்படி இருக்கும்? "கற்றது களவு" பார்த்தப்போ அப்படித்தான் இருந்துச்சு."அலிபாபா"வுக்குப் பிறகு இயக்குனர் விஷ்ணுவர்தனோட தம்பி கிருஷ்ணா ஹீரோவா நடிச்சு இருக்கிற படம். அவங்கப்பா சேகர்தான் தயாரிப்பாளர். (வேற யாரும் எடுக்க மாட்டேனுட்டானுங்களோ?)
அது சரி.. படத்தோட கதை இன்னாபா? ஒரு ஊருல.. சரி சரி... ஹீரோ கிருஷ்ணா மாணவர்களுக்கான ஒரு வங்கி பத்தின நல்ல திட்டத்தோட அமைச்சரை சந்திக்கிறாரு. ஆனா அவர ஏமாத்தி எல்லாப் பேரையும் அமைச்சரு தட்டிக்கிட்டு போயிடுறாரு. தன்ன ஏமாத்துன இந்த சமுதாயத்த தான் ஏமாத்தி சம்பாதிக்க முடிவு பண்றாரு ஹீரோ. அவருக்கு துணையா நாயகி விஜயலட்சுமி வராங்க. சின்ன சின்ன தப்புகளத் தாண்டி, ஒரு தாட்டிக்கு, இவங்க கைல மத்திய அமைச்சர் பத்தின ஒரு வீடியோ கிடைக்குது. அதனால மத்திய அமைச்சரு இவங்கள கொல்ல ஆளு அனுப்புறாரு. நல்ல போலீசான ஒருத்தர் இவங்கள காப்பாத்துறாரு. வில்லன் கிட்ட இருந்து தப்பிச்சு கடைசில இவங்க திருந்தி வந்தாங்களான்னு சொல்றதுதான்ப்பா படத்தோட கதை...
இந்த நடிக மக்கள் எல்லாம் எப்புடி நடிச்சு இருக்காக? கிருஷ்ணா நல்லா நடிச்சு இருக்குறாப்ல.. ஆளும் பாக்குறதுக்கு ஆரம்ப கால எஸ்.ஜே.சூர்யா மாதிரி இருக்குறாப்டி.. டான்ஸ் எல்லாம் எதோ தினுசு தினுசா பறந்து பறந்து ஆடுறாரு.. பேசுறதுதான் மணிரத்னம் படம் மாதிரி புரியாமப் பேசுறாரு.. விசயலட்சுமி தான் கதாநாயகி.. குச்சி கணக்கா இருக்கு.. என்னமோ நடிக்குது.. பெரிசா வேலை ஒண்ணும் இல்ல.. நல்ல போலீசா கெத்தா நடிச்சு இருக்கிறது நம்ம சம்பத் தான்.. மனுஷன் மெரட்டி இருக்காரு.. டான்ஸ் மாஸ்டர் கல்யாண்தான் படத்தோட காமெடி பீஸ்.. ஏதோ பெரிசா பண்ணப்போற மாதிரி பில்டப் கொடுத்து கடைசில சப்பையா போறாரு.. கஞ்சா கருப்பு லொள்ளு சபா டீமோட வந்து மொக்க போட்டு மனுஷன கொலையாக் கொல்றாரு.. எதுக்குன்னே தெரியாம முமைத்கான் ஒரு பாட்டுக்கு ஆடுது... அது போக சந்தானபாரதி, மறைந்த நடிகர் நம்ம ஹனீபா, சின்னி ஜெயந்த் எல்லாம் வந்து போறாங்கப்பா..
மீஜிக், போட்டோ புடிச்சதெல்லாம் நல்லா இருக்கா?
தலைமகன்னு சரத்தோட நூறாவது படத்துக்கு இசை அமைச்ச புண்ணியவான் பால்.ஜே தான் இந்தப் படத்துக்கும்.. இன்னுமா இந்த மனுஷன ஊரு நம்புது? தம்மு அடிக்காதவன் கூட பாட்டு வந்தா வெளில தலைதெறிக்க ஓடுறான்.. ஒரு பாட்ட கூட வெளங்கல.. அதுலயும் "கற்றது களவு"ன்னு ஒரு ராப் பாட்டு வேற.. தமிழ்தானான்னு சந்தேகம்.. முடியலைடா சாமி.. பின்னணி இசை போட்டிருக்கிற சபேஷ்-முரளி கொஞ்சம் நல்லா பண்ணி இருக்காங்க.. இந்தப் படத்துக்கு எல்லாம் நீரவ் ஷா தன்னோட உழைப்பை வீணடிக்கனுமா? மொதப்பாதி கொஞ்ச நேரத்துக்கு அவரும் கேமராவத் தூக்கிட்டு லொங்கு லொங்குன்னு சுத்துறாரு.. பார்ஸ்ட் சீன்.. ஒரு சேஸ்.. அட்டகாசம்.. அதுக்கு அப்புறம் அவரும் ஓஞ்சு போயி அக்கடான்னு உக்கார்ந்துட்டார் போல.. ரெண்டாம் பாதில பாதிபடத்துக்கு மேல வெறும் இருட்டுத்தான்..
கடைசியா இயக்கத்த பத்தி சொல்லுப்பா? பாலாஜி தேவி பிரசாத்... இவருதான்ப்பா இயக்குனரு.. இவரோட பெரிய கொழப்பமே.. இத சீரியஸ் த்ரில்லர் படமா எடுக்குறதா இல்ல காமெடி படமா எடுக்குறதான்னுதான் நினைக்கிறேன்.. ஹீரோவும் ஹீரோயினியும் கல்யாணம் பண்ணிக்கிற மொத செஸ்ல எல்லோரும் மிருந்து உக்காருறோம்.. அவங்களக் காப்பாத்துனது ஒரு போலிஸ் ஆபிசரான்னு ஆச்சரியப்படுற நேரத்துல.. அடுத்து வர காட்சி எல்லாம் புஸ்ஸ்ஸ்... அதுவும் ஹீரோ எப்படி எல்லோரையும் ஏமாத்தி சம்பாதிக்கிறாருன்னு காட்டுறாங்க பாரு.. கவுண்டமணி மாதிரி நம்ம காதுல வாழைப்பூவையே கூடை கூடையா சொருகுறாங்க.. அது சரி.. காசு குடுத்து போற நம்மள சொல்லணும்.. ரெண்டாம் பாதில போடுறாரு பாரு ஒரு பிளேடு.. போகுது போகுது போய்க்கிட்டே இருக்கு ஜில்லட்டு கணக்கா.. அம்மாம்பெரிசு பிளேடு.. நல்ல கதைக்கான பிளாட்ட திரைக்கதைல கலக்குறேன் மகனேன்னு மொத்தமா காலி பண்ணிட்டாரு.. அம்புட்டுத்தா...
படத்தப் பத்தி ஒரு வார்த்தை.. ஒரே ஒரு வார்த்தைல சொல்லு பார்ப்போம்.. நன்றி :-கார்த்திகைப் பாண்டியன்

வீடியோக்களை ஒன்றாக சேர்க்க

சில வீடியோக்கள் இருக்கும். அதை ஒன்றாக சேர்த்துப்பார்க்க விரும்புவோம்.இன்றைய பதிவில் வீடியோக்களை எப்படி ஓன்றாக சேர்ப்பது என பார்க்கலாம். இதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும். 3 எம்.பி. கொள்ளளவு கொண்டஇது டிரையல்விஷன் ஆகும்.இதை டவுண்லோடு செய்து ஒப்பன் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் ADD என்பதில் நீங்கள் சேர்க்க விரும்பும் பைல்களை தேர்வு செய்யவும்.உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள பைல்களை விரும்பியவாறு மேலே கீழே மாற்றி வைக்கலாம்.கடைசியாக Join கிளிக் செய்யவும்.கீழே உள்ள விண்டோ தோன்றும்.
சில நொடிகளில் இணைப்பு வேலை முடிந்துவிடும். விருப்பபட்டால் சேர்த்த வீடியோ வை காணலாம்.
பயன்படுத்திப்பாருங்கள். கருத்தினை கூறுங்கள். நன்றி -வேலன் பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக்

டிவி பார்ப்பதை விட்டதால் சாதித்தேன் என்கிறார் ஜாஸ்மின்

ஏகஇறைவனின் திருப்பெயரால்...நடுத்தர குடும்பத்தில் பிறந்து மாநகராட்சி பள்ளியில் படித்து முதலிடம் பிடித்த ஜாஸ்மின்டி.வி. பார்ப்பதை விட்டதால் சாதித்தேன் என்கிறார்
பணம் இருந்தால்தான் படிக்க முடியும். தனியார் பள்ளியில் படித்தால்தான் நிறைய மதிப்பெண்கள் வாங்க முடியும் என்று ஒரு மாயை தமிழ்நாட்டில் உள்ளது.அந்த மாயத்தோற்றத்தை இன்று உடைத்தெறிந்து இருக்கிறார் நெல்லை மாணவி ஜாஸ்மின்.படிப்பில் முதன்மை பெறுவதற்கு, ஆர்வமும், விடா முயற்சியும் இருந்தாலே போதும் என்று ஜாஸ்மின் எடுத்துக்காட்டி உள்ளார்.
இவை மட்டுமின்றி தமிழக கல்வி வரலாற்றில் இன்னொரு அசாத்திய சாதனையையும் ஜாஸ்மின் புரிந்துள்ளார். மாநகராட்சிப்பள்ளி என்றாலே, கல்வித்தரம் இருக்காது என்று இளக்காரமாக நினைக்கும் மனோபாவம் உள்ளது. அதற்கு ஜாஸ்மின் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.நெல்லை டவுணில் உள்ள மாநகராட்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவி ஜாஸ்மின் 495 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ள நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ஜாஸ்மினின் தந்தை சேக் தாவூத் ஊர் ஊராக சென்று ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். அவரது தாய் நூர்ஜஹான்.மாணவி ஜாஸ்மினுக்கு இம்ரான் என்ற அண்ணனும், இர்பான் என்ற தம்பியும் உள்ளனர். இவர்களில் இம்ரான் கூலி வேலை செய்து வருகிறார். இர்பான் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.ஜாஸ்மினின் தந்தை ஷேக் தாவூத் மிகவும் கஷ்டப்பட்டே குடும்பத்தை காப்பாற்றி வருகிறார். இருந்த போதிலும் தனது குழந்தைகள் படிப்புக்கு தேவையான வசதிகளை செய்து கொடுத்தார். ஜாஸ்மின் சிறுவயதிலிருந்தே மிகவும் ஆர்வமாக படித்து வருகிறார்.அவரது ஆர்வத்தை அறிந்து கொண்ட ஷேக் தாவூத்தனது மகளை அதிக செலவு செய்து தனியார் பள்ளியில் படிக்க வைக்க வசதி இல்லாத காரணத்தால் நெல்லை டவுணில் செயல்பட்டு வரும் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். தனது குடும்ப நிலையை உணர்ந்த மாணவி ஜாஸ்மின் சிறந்த முறையில் படித்து அனைத்து வகுப்பிலும் முதல் மாணவியாக திகழ்ந்து வந்தார்.மாணவி ஜாஸ்மின் முதல் வகுப்பிலிருந்து தற்போது வரை நெல்லை டவுண் கல்லணை மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியிலேயே படித்து வந்தார். அந்த பள்ளியில் மொத்தம் 3,450 மாணவிகள் படித்து வருகின்றனர்.இங்கு படிக்கும் அனைத்து மாணவிகளும் ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த பள்ளி தொடங்கியது முதல் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளது. மாநகராட்சி பள்ளி என்றாலும் நெல்லையில் உள்ள சிறந்த பள்ளிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.மாநில அளவில் முதல் இடம் பிடித்தது குறித்து மாணவி ஜாஸ்மின் கூறியதாவது:-மாநில அளவில் சாதனை படைக்க கடினமாக படித்தேன். 498 மதிப்பெண்கள் பெறுவேன் என எதிர் பார்த்தேன். சமூக அறிவியலில் 2 மதிப்பெண்கள் குறைந்து விட்டதால் அதனை பெற முடியவில்லை.பெரிய பள்ளியில் படித்தால்தான் சாதிக்க முடியும் என்றனர். ஆனால் எங்கள் பள்ளி சாதனை படைத்துள்ளது. இந்த சாதனை கடவுளின் கிருபையால் நடந்தது. ஆசிரியர்கள் சிறந்த முறையில் பயிற்சி அளித்து எனக்கு ஊக்கமளித்தார்கள். மற்ற பள்ளிகளை போல எங்கள் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கும் போதே 10-ம் வகுப்பு பாடங்களை தொடங்குவது கிடையாது. தினமும் காலையிலும், மாலையிலும் படிப்பேன். அன்றைய பாடங்களை அன்றே தவறாமல் படித்து விடுவேன். இரவு 1 மணி வரை படிப்பேன்.10-ம் வகுப்புக்கு வந்த பிறகு டி.வி பார்க்க மாட்டேன். எனது குடும்பம் நடுத்தர குடும்பம். தற்போதும் வாடகை வீட்டில்தான் வசித்து வருகிறோம். கம்ப்யூட்டர் என்ஜினீயரிங் படிக்க ஆசைபடுகிறேன். அதன் பிறகு ஐ.ஏ.எஸ் முடித்து கலெக்டராகி மக்களுக்கு சேவை செய்வேன்.இவ்வாறு அவர் கூறினார்.மாணவி ஜாஸ்மின் குறித்து அவர் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் நடராஜன் கூறியதாவது:-எங்கள் பள்ளி தொடர்ந்து பல சாதனைகள் படைத்து வருகிறது. இந்த முறை மாநில அளவில் முதலிடத்தை பிடித்தது மிகவும் மகிழ்ச்சி. இதற்கு எங்கள் பள்ளி ஆசிரியர்களின் கடின உழைப்பே முக்கிய காரணம். மாணவி ஜாஸ்மின் மிகவும் அமைதியானவர். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த அவர் மிகவும் கவனமாக படிப்பார். இதனால் வகுப்பில் முதல் மாணவியாக திகழ்ந்து வந்தார்.கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி தேர்வில் எங்களது பள்ளி நகராட்சி, மாநகராட்சி பள்ளிகளில் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்தது. எங்கள் பள்ளி தொடங்கி 60 ஆண்டுகள் ஆகிறது. எனக்கு முன்பிருந்த தலைமை ஆசிரியர்கள், ஆசிரியைகள் கடுமையான அடித்தளம் இட்டு சென்றதால் எங்கள் பள்ளி சாதித்து வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.மாணவி ஜாஸ்மினின் தந்தை ஷேக்தாவூத் கூறியதாவது:-நான் கடந்த 17 ஆண்டுகளாக ஜவுளி வியாபாரம் செய்து வருகிறேன். எனது மகள் ஜாஸ்மின் எல்.கே.ஜி.யில் இருந்தே நன்கு படிப்பாள். முதலாம் வகுப்பில் இருந்து கல்லணை மகளிர் மேல் நிலைப்பள்ளியில் படித்து வருகிறாள். மற்ற பள்ளிகளை விட இந்த பள்ளியில் சிறந்த முறையில் மாணவிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.நான் பெரிய அளவில் படிக்காததால் எனது குழந்தைகளை நன்கு படிக்க வைத்து அவர்களை சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் படிக்க வைத்து வருகிறேன். அதற்கு ஏற்றாற்போல் மகள் ஜாஸ்மின் சிறப்பாக படித்து வருகிறாள். அவள் தொடக்கத்திலிருந்தே படிப்பில் மிகவும் ஆர்வம் காட்டியதால் அவள் படிப்புக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படாத வகையில் சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்தோம்.தினமும் பள்ளி முடிந்து மாலையில் வீடு வந்தவுடனே படிக்க ஆரம்பித்துவிடுவாள். அதிகமாக டி.வி. பார்க்க மாட்டாள். பத்தாம் வகுப்பிற்கு வந்ததும் டி.வி. பார்க்கும் பழக்கத்தை விட்டு விட்டாள். டியூஷனுக்கு எங்கும் செல்லவில்லை. அன்றைய பாடங்களை அன்றே படித்து வந்ததால் சாதனை படைத்துள்ளார். அவளது விருப்பப்படி படிக்க வைப்பேன்.இவ்வாறு அவர் கஊர்றினார்
நன்றி
ஆசியா உமர்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com