Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

10 ஜூலை 2009

'சானியாமேனியா': மேலும் ஒருவர் கைது-இன்று நிச்சயதார்த்தம்

ஹைதராபாத்: இந்திய டென்னிஸ் வீரங்கனை சானியா மிர்சாவின் நிச்சயதார்த்தம் நெருங்க நெருங்க சானியாமேனியாவில் சுற்றும் ரசிகர்கள் திருமணத்தை நிறுத்த வேண்டும் என அவரது வீட்டுக்கு படையெடுத்து வருகின்றனர். நேற்று காதல் கடிதங்களுடன் வந்த ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. திறமையும், அழகும் ஒருங்கே சேர்ந்திருந்ததால் இவருக்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் கிடைத்தனர். அவர்களில் பலருக்கும் கனவு கன்னியானார். அதில் சிலர் சானியாவை திருமணம் செய்ய வேண்டும் என்ற கனவில் சுற்றி வருகின்றனர். இந்நிலையில் அவருக்கும், ஹைதராபாத்தை சேர்ந்த ஷோரப் மிஸ்ரா என்பவருக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டு இன்று நிச்சயதார்த்தம் நடக்கிறது. இதையறிந்த கேரளாவை சேர்ந்த அஷ்ரப் என்ற வாலிபர் கடந்த 7ம் தேதி சானியாவுக்கு வீட்டு அவரை தான் காதலிப்பதாகவும் அவரது நிச்சயாதார்த்தத்தை நிறுத்த வேண்டும் என தகராறு செய்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். நேற்று இவரை போல் மீண்டும் ஒரு வாலிபர் சானியாவை காதலிப்பதாக கூறி உத்தர பிரதேசத்தில் இருந்து கிளம்பி வந்தார். அவரது பெயர் அஜய் சிங் யாதவ். அவர் இலக்கம் 9, பஞ்ச்ரா ஹில்ஸ் பகுதியில் இருக்கும் சானியாவின் வீட்டுக்குள் நுழைய முயன்றார். அவரை காவலில் இருந்த பாதுகாப்பு வீரர்கள் தடுத்து நிறுத்தினர். பின்னர் போலீசுக்கு தகவல் கொடுத்து அவரை கைது செய்தனர். விசாரணையில் அவர் உத்தர பிரதேச மாநிலமா எடாவா நகரை சேர்ந்தவர் என்றும், குர்கானில் இருக்கும் துரோணாச்சர்யா பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பிடெக் படிக்கிறார் என்பதும் தெரிய வந்தது. மேலும், அவரது பையில் இருந்த சானியாவுக்காக எழுதப்பட்டிருந்த காதல் கவிதை ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். இந்த இரண்டு சம்பவங்களையும் அடுத்து சானியாவின் வீடு மற்றும் இன்று நிச்சயதார்த்தம் நடக்கவிருக்கும் ஹோட்டல் தாஜ் கிருஷ்ணாவில் ஆகிய இடங்களில் பலத்த பாதுகாப்புக்கு போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.

பிளாக்கருக்கு இமெயிலில் இருந்து பதிவு போடும் முறை

இமெயிலில் இருந்து பதிவு போடுவது மிக இலகுவாக இருக்கும் இமெயிலில் இருந்து பிவுகள் போட நீங்கள் உங்கள் பிளாகர் கணக்கிற்கு போகத்தேவையில்லை படங்களை பெரிதாக பார்க்க படத்தின் மேல் கிளிக் செய்யவும்
பிளாக்கர் இணையத்தளத்திற்கு சென்று உங்கள் பயனர் பெயரையும் கடவுச்சிட்டையும் கொடுத்து உங்கள் பிளாக்கர் கணக்கை ஓப்பின் பண்ணி செட்டிங்கு போய் இமெயில் & மொபைல் என்பதை கிளிக் பண்ணியதும் கிழே உள்ள படம் போன்று தோன்றும்
மேலே உள்ள படத்தில் secretWords எனும் இடத்தில் உங்களுக்கு விருப்பமான பெயரை அதில் இடலாம் நீங்கள் இட்ட பெயரை ரகசியமாக பேணவேண்டும் இந்த ரகசியமான பெயரை உங்களுக்கு நம்பிக்கையானவரிடம் கொடுக்கலாம் நீங்கள் இட்ட பெயரை எந்நேரமும் மாற்றலாம்
நீங்கள் இமெயில் மூலம் பதிவுகள் இடும் போடும் பொழுது உங்கள் வலைப்பக்கத்தில் உடனடியாக பதிவு பதியப்படவேண்டும் என்று தெரிவு செய்து செவ் செட்டிங் என்பதை கிளிக் பண்ணினால் சரி
மொபைல் மூலம் பதிவிடும் முறை
மொபைல் மூலமும் உங்கள் பிளாக்கருக்கு பதிவு இடலாம் அமெரிக்காவில் பதிவு எழுதுபவர்கள் மட்டுமே பதிவு இடலாம்
மொபைல் மூலம் பதிவிட விரும்புவர்கள் முதலில் Add mobile deviceஎன்பதை கிளிக் பண்ணி அதில் தரும் நம்பருக்கு அந்த திரையில் காட்டும் ரகசியமான குறியிட்டை அந்த நம்பருக்கு SMS அனுப்பவும்

ஜாக்சன் இறுதிச் சடங்கு செலவு ரூ. 7 கோடி

லாஸ் ஏஞ்சல்ஸ்: பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் இறுதி சடங்கிற்கு சுமார் ரூ. 7 கோடி செலவானதாக லாஸ் ஏஞ்சல்ஸ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் 25ம் தேதி மரணமடைந்த மைக்கேல் ஜாக்சனின் இறுதி ஊர்வலம் நேற்று முன்தினம் நடந்தது. வாழும் போது பல சர்ச்சைகளை சந்தித்த ஜாக்சனின் மரணத்திலும் மர்மம் நீடிக்கிறது. இந்நிலையில் அவரது இறுதி சடங்கினால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர நிர்வாகம் பண கஷ்டத்தில் சிக்கியுள்ளது. இது நகர செய்தி தொடர்பாளர் சாரா ஹாமில்டன் கூறுகையில், ஜாக்சனின் இறுதிசடங்கு நிகழ்ச்சிக்கு சுமார் ரூ. 7 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் வீதிகளில் காவலிருந்த போலீசார், சுற்றுப்புற சுகாதாரம் உள்ளிட்ட பணிகளும் அடங்கும். இறுதி ஊர்வலத்துக்கான பாதுகாப்பில் 3 ஆயிரம் போலீசார் பயன்படுத்தப்பட்டனர். சுமார் ஆயிரம் போலீசார் திடீர் தேவைகளுக்கான உதவிகளை செய்ய கைவசம் வைக்கப்பட்டிருந்தனர். உலக பொருளாதார நெருக்கடி அமெரிக்காவை புரட்டு போட்டி வருகிறது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் ஏற்கனவே ரூ. 2 ஆயிரத்து 600 கோடி கடனில் ஓடி கொண்டிருக்கிறது. இதனால் ஜாக்சன் இறுதிசடங்கு செலவுகளுக்கு உதவுமாறு எங்களது வெப்சைட்டில் விளம்பரம் செய்தோம். இதுவரை ரூ. 8 லட்சம் கிடைத்துள்ளது. தொடர்ந்து பணம் வந்து கொண்டிருந்த நிலையில் அதிகம் பேர் எங்கள் இணையதளத்தை பார்த்த காரணத்தால் அது இணைய தொடர்பை இழந்துவிட்டது. நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு மேல் இருந்தே எங்களது இணையதளம் செயல்படவில்லை. நேற்று காலை வரை இது தான் நடந்தது என்றார். இந்நிலையில் அந்நகர அட்டார்னியின் செய்தி தொடர்பாளர் ஜான் பிராங்ளின் கூறுகையில், அடுத்த முறை இது போல் எதுவும் நடக்க கூடாது என அட்டார்னி விரும்புகிறார். ஒரு தனியார் செயலுக்கு நகர நிர்வாகம் பொறுப்பேற்று கொள்ள கூடாது. அதுவும் லாஸ் ஏஞ்சல்ஸ் போன்ற பொருளாதார நெருக்கடியால் திணறும் ஊர்களில் இது கடினமானது என்றார்.

பிரபுதேவா - நயன்தாரா கள்ளக்காதல்! - கட்டுரை

Nayantara tattooed Prabhu Deva’s name?

ப்படியொரு தலைப்பிட எந்தப் பத்திரிகைக்காவது துணிச்சல் உண்டா? ஜனக்கடலில் எங்கோ நீந்திக்கொண்டிருக்கும் திருமணமான ஒரு ஆணோ பெண்ணோ தப்பு செய்தால் மட்டும் அதை மிகவும் அநாகரிகமாக கள்ளக்காதலன் கைது, கள்ளக்காதலி கொலை என்றெல்லாம் தலைப்பிட துணிபவர்கள், மீடியா வெளிச்சத்தில் உள்ளவர்களைப் பற்றி குறிப்பிடும்போது மிகவும் நாசூக்காக, ‘பிரபுதேவா - நயன்தாரா காதல்’ என்பது போல் குறிப்பிடுவது ஏன்? ஏன் அவருக்கு மட்டும் குடும்பம், குட்டி இல்லையா? நயன்தாரா என்ன கல்யாணத்திற்காக மட்டுமே காத்திருப்பவரா?

prabu-nayantara.jpg

இவர்கள் செய்தால் நல்லக் காதல் மற்றவர்கள் செய்தால் கள்ளக் காதலா?

பொதுவாகவே பிரபல நடிகர், நடிகைகள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்களின் அந்தரங்க விஷயங்கள் எல்லாம் ஏன் கிசுகிசுக்கப்படுகின்றன. குறிப்பிட்டவர்கள் ஈடுபடும் தொழில் குறித்த செய்திகள் தரும் பிரபல்யத்தைவிட, பரபரப்பைவிட அதிகளவில் அவர்களுடைய அந்தரங்க சமாச்சாரங்கள் தருகின்றன.

உண்மையோ பொய்யோ, என்றாவது ஒருநாள் நடக்கப்போவதோ எதுவாக இருந்தாலும் தெரிந்தும் தெரியாமலும், அறிந்தும் அறியாமலும் உள்ள விஷயங்கள்தான் மனித மனதை அதிகம் தூண்டி ரசிக்க வைக்கின்றன.

வலிக்கிறது என்று சொல்வதைக் காட்டிலும் ஐயோ என்று கத்துவதில் உள்ள அர்த்தத்தைப் போல.

nayantara-hand.jpg

சரி நயனும் பிரபுதேவாவும் கள்ளக்காதல் செய்தாலும், நிஜக்காதல் செய்தாலும் நமக்கென்ன? அப்படி விட்டுவிட முடியுமா என்ன? ‘அட ச்சீ… என்னய்யா பத்திரிகை இது?’ என்று சொல்லிவிடுவார்களோ என்று அச்சம்.

சம்பந்தப்பட்டவர்கள் அடிக்கும் தம்பட்டத்தை விட மீடியாக்கள் அடிக்கும் இவர்கள் பற்றிய தம்பட்டம் அதிகம்.

அதைவிட கூத்து என்னவென்றால், நயன்தாரா பிரபுதேவாவின் பெயரை தன்னுடைய வலது கையில் பச்சை குத்தியிருக்கிறார் என்றும், இடதுகையில் பச்சை குத்தியிருக்கிறார் என்றும் செய்திகள் மாற்றி மாற்றி வருவது.

இன்னொரு செய்தியில் பிரபுதேவாவின் மனைவி ரமலத்திடம், கணவனை பிரிக்க மாட்டேன் என்று நயன்தாரா சத்தியம் செய்திருப்பதாகவும், மற்றொரு செய்தியில் பிரபுதேவா மீதான காதலுக்கு நயனின் பெற்றோர் எதிர்ப்பு என்று தெரிவிக்கப்படுகிறது.

உண்மையைச் சொல்லப்போனால் இந்த மாதிரி செய்திகள் கூறப்படுகிறது, சொல்லப்படுகிறது அல்லது நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகையில் என்கிற ரீதியில் தான் வருகின்றன. சினிமாவில் புலனாய்வு என்கிற சினிமா மீடியா இன்னும் முன்னேறவில்லை என்றுதான் சொல்லவேண்டும். நிருபர்களின் கணிப்புகளே பெரும்பாலும் கருத்துக்களாக பதியப்படுகின்றன.

75 சதவிகித செய்திகள் பிஆர்ஓக்களை நம்பியும், மேனேஜர்களை நம்பியுமே வெளியிடப்படுகின்றன. ஒரே வட்டாரத்தில் இருந்து அனுப்பப்படும் ஒரே செய்தி பல காதுகளை அடைந்து, அதற்கு வெவ்வேறு உருவங்கள் கொடுக்கப்படுகின்றன.

நயன்தாரா பிரபு தேவா பெயரை இடது கையில் பச்சைக் குத்திக் கொண்டார்(அது அவர் விருப்பம் என்பது வேறுவிஷயம்) என்பது லேட்டஸ்ட் செய்தி. சமீபத்தில் காட்சிப்படுத்தப்பட்ட ஆதவன் திரைப்படப் பாடல் ஒன்றில் நயன்தாராவின் இடது கையில் குத்தப்பட்டிருந்த Pரபு என்கிற பெயரை கிராபிக்ஸில் சுத்தப்படுத்தும் வேலை கூட நடப்பதாகத் தகவல்(என்ன செய்வது நாமும் இப்படி எழுத வேண்டியுள்ளது).

வெளியே தெரியும் உடல்பாகங்களில் பச்சைக் குத்திக்கொள்வது அக்கால காதல் பேஷன். சிலர் மார்பில், தொடையில், முதுகில்கூட குத்திக் கொள்வார்கள். ஆனால் பெரும்பாலோர் முட்டியில் இருந்து விரல்கள் தொடங்கும் கையின் ஏதாவது ஒரு பாகத்தில்தான் பச்சைக் குத்திக்கொள்வார்கள். அப்பத்தானே ‘இதோ பார், உனக்காக நான் உருகுகிறேன்’ என்று காதலன் காதலியிடம் காண்பித்துக்கொள்ள முடியும்.

இந்த பழைய ஷோ காட்டும் வித்தையை நவீன நடிகையான நயன்தாரா செய்திருப்பார் என்று நம்ப முடியவில்லை. நமக்குத் தெரிந்து அவருடைய ஒரு காதல் தோல்வியடைந்திருக்கிறது. அதில் நிறைய பாடம் கற்றுக்கொண்ட நயன்தாரா இப்படியொரு மிகவும் சாதாரண காரியத்தை செய்யமாட்டார்.

இன்னொன்று அவர் ஒரு நடிகை. உச்சி முதல் பாதம்வரை (அங்கங்கே மறைத்துதான்) பளபள வென்று திரையில் காட்டவேண்டிய நிலையில் இருப்பவர். அப்படிப்பட்டவர் எப்படி வெளிப்படையாக கையில் பச்சை குத்துவார்? அதுமட்டுமல்ல இந்த சினிமா காதல் என்பதெல்லாம் எப்போ வேண்டுமானாலும் புட்டுக்கும் என்ற நிலை இருக்கும்போது இப்படியெல்லாம் நயன்தாரா அதிகபட்ச ரிஸ்க் எடுப்பாரா என்ன?

ஓரு பெண்ணான நயன்தாராவே காதல் செய்யும் தொல்லை தாங்க முடியாமல், பிரபுதேவாவை மறக்க முடியாமல் அவர் பெயரை பச்சைக்குத்திக் கொண்டார் என்றால், நயன்தாராவுக்காக பிரபுதேவா என்ன செய்திருக்கிறார் என்பதையும் ஆராயலாமே.

நயன்தாராவின் பழைய புகைப்படங்களை காண்கையில், பல படங்களில் அவர் உடலில் ஏதாவது ஒரு இடத்தில் டாட்டு எனப்படும் பச்சையைக் குத்தியிருக்கிறார்.

சரி, அவர் பச்சை குத்தட்டும் அல்லது சிவப்பா குத்தட்டும் அதுவா மேட்டர் என்பதுதான் நம்ம மேட்டர். THANKS-கிருஷ்ணாசேகர்

லெப்டினென்ட் கர்னல் ஆக மோகன்லால் நியமனம்!

டெல்லி: கபில்தேவைத் தொடர்ந்து இப்போது மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லாலும், கெளரவ லெப்டினென்ட் கர்னல் ஆக நியமிக்கப்பட்டுள்ளார். ராணுவத்தின் கிளை என வர்ணிக்கப்படும் டெரிட்டோரியல் ஆர்மியிலும் மோகன்லால் சேருகிறார். இன்று டெல்லியில் நடைபெறும் நிகழ்ச்சியில் மோகன்லாலுக்கு கெளரவ லெப்டினென்ட் அந்தஸ்தை தரும் பதக்கத்தை அணிவித்தார் ராணுவ தலைமைத் தளபதி தீபக் கபூர். அப்போது பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.ஆண்டனியும் உடனிருந்தார். ஏற்கனவே சமீபத்தில் கிரிக்கெட் சூப்பர் ஸ்டார் கபில் தேவுக்கு இதே கெளரவம் வழங்கப்பட்டது நினைவிருக்கலாம். தற்போது மோகன்லாலுக்கு இந்த கெளவரம் அளிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மெட்ராஸ் ரெஜிமன்ட்டில் உள்ள 122வது இன்பேன்டரி பட்டாலியன் அல்லது கண்ணூர் டெரியர்ஸ் படையில் மோகன்லால் சேர்ந்து முறையாக 2 மாதங்கள் பயிற்சியும் பெறுவார். டெரிட்டோரியல் ஆர்மி என்பது மக்கள் முன்வந்து சேரும் படையாகும். இதில் இணைந்து, பகுதி நேர ராணுவ சேவையாற்றலாம். நாட்டில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் டெரிட்டோரியல் ஆர்மியில் இடம் பெற்றிருப்பவர்களுக்கு சேவையாற்ற அழைப்பு விடுக்கப்படும். அப்போது அவர்கள் கிட்டத்தட்ட முழு நேர ராணுவ சேவையாற்றுவார்கள். ராணுவத்தினருக்கு உதவியாக இவர்கள் அனுப்பி வைக்கப்படுவர். தற்போது டெரிட்டோரியல் ஆர்மியில், 42 இன்பேன்டரி பட்டாலியன்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

நமீதாவின் "இந்திர விழா"?

க்ஷய்குமார்,கரீனாகபூர்,பிரியங்கா சோப்ரா இவங்க நடிப்புல "AITRAAZ" ன்னு ஹிந்தியில வெளிவந்த படம் தான் தமிழ்ல "இந்திரவிழா"வா வந்திருக்கு. நமீதாவோட இந்திர விழான்னு இந்த பதிவுக்கு ஏன் பேர் வெச்சேன்னு இந்த படத்த பாத்தவங்களுக்கு கண்டிப்பா புரியும். ஏன்னா.., நமீதாவோட கவர்ச்சி இல்லேன்னா படமே இல்ல.அந்த அளவுக்கு கவர்ச்சியை அள்ளி தெளிச்சிருக்கிற படம். "டீன் டிவி" யில நிகழ்ச்சி தயாரிச்சி குடுக்குற வேலையில இருக்கும் ஸ்ரீகாந்த் தன்னோட ஒரு டூப்பு நிகழ்ச்சியில இந்த படத்துல அறிமுகமாகி இருக்குற மும்பை நாட்டுக்கட்டை ஹேமாமாலினியை அடிக்கடி சீட் பண்றாரு. அது அவரோட கல்யாணத்தையும் பாதிக்க வருத்தப்படுற ஸ்ரீகாந்த் நானே உன்ன கட்டிக்கிறேன்னு கல்யாணம் பண்ணிக்கிறாரு.(அதுசரி சரியான நாட்டுக்கட்டை கிடச்சா யார் தான் விடுவா...?) ஸ்ரீகாந்தோட திறமையை பாத்து கம்பெனியில புரோமொசன் கெடைக்குது. ஆனாலும் அது கம்பெனியோட நிர்வாகி நாசரோட பொண்டாட்டி நமீதாவோட (கூல்...கூல்..நீங்க நற நறன்னு பல்ல கடிக்கிறது புரியுது.) தலையீட்டால தடுக்கப்படுது. ஸ்ரீகாந்த் நல்ல புத்திசாலியாக இருந்தும் நமீதா ஏன் அவர வெறுக்குறாங்க?அதுக்கு காரணம் என்ன?ஸ்ரீகாந்துக்கும், நமீதாவுக்கும் என்ன தொடர்பு?இப்படி பல கேள்விக்கு படம் முழுக்க ரெட்டை அர்த்த வசனங்களை தாரளமா சேர்த்து குடும்பத்தோட உக்காந்து பாக்க முடியாத ஒரு நல்ல படமா தந்திருக்காங்க. ஹீரோ ஸ்ரீகாந்த், பாவம் உயிர் படத்திலேர்ந்து இவர் டம்மி பீஸாவே ஆயிட்டாரு.., அந்த படத்துல சங்கீதா இந்த படத்துல நமீதா (என்ன கொடும சரவணன்...) ஆனாலும் மனுஷன் ரொம்ப அமைதியான நடிப்ப கனகச்சிதமா குடுத்துருக்காரு. மும்பை அறிமுகம் ஹேமாமாலினி நமீதாவுக்கு தங்கச்சி மாதிரி சும்மா செமத்தியான ஜிம் பாடியை காட்டி படத்த பாக்குற ரசிகர்கள சுடேத்துறார், ஆனாலும் அம்மணிக்கு ரொம்ப சீன்ஸ் கெடையாது. இன்னொரு ஹீரோயின் நம்ம நமீதா.(உட்டா அவங்க அப்பாவ கூட மச்சான்னு கூப்புடுவாங்க போல...) படத்துல இவங்க நடிச்ச சீன்களை விட நீச்சல் குளத்துல குளிச்ச சீன்கள் தான் அதிகம்,அந்தளவுக்கு ஏகப்பட்ட குளியல் சீன்கள் (ரசிகர்களுக்கு செம கொண்டாட்டம் தான்.) படத்தோட கதையே இவங்கள சுத்திதான் வருது, ஸ்ரீகாந்துக்கு பொண்டாட்டியாவும், நாசருக்கு மூணாவது பொண்டாட்டியாவும் வர்றாங்க...(என்ன நமீதா மேடம் ரசிகர்கள் உங்களுக்கு கோவில் கட்ட பிளான் பண்ணிருக்காங்க.., ஆனா நீங்க இந்த மாதிரி கேரக்டர்ல எல்லாம் நடிக்கிறீங்களே...) நாசர் அவர இந்த மாதிரி கேரக்டர்ல பாக்குறது செமத்தியான காம(நெ)டி தான். இயக்குனர் கே.ராஜேஸ்வர், டெக்னிக்கலா படம் நல்லா பண்ணிருக்காரு..,காமம், பெண்ணின் காமவெறி, பெண்ணின் விரக தாபங்கள்,இப்படி தன்னோட காம ஆசைகளுக்காக எதுவரைக்கும் போகக்கூடிய ஒரு பெண்ணோட கதையை சொல்ல வந்தாலும் அதுக்காக படத்துல அநியாயத்துக்கு பச்சை பச்சையா... ரெட்டை அர்த்த வசனங்கள். அதை கொஞ்சம் இல்ல நெறையவே தவிர்த்திருக்கலாம். மியூசிக் புது ஆளு யதீஸ், பின்னணி, பாட்டு ரெண்டுமே ஓ.கே, ஆனா வசந்தமாளிகை "மது கிண்ணத்தை ஏந்துகிறேன்" பாட்ட இன்னும் பெட்டரா குடுத்திருக்கலாம். இந்த வருஷம் தமிழ்சினிமா யாரு முகத்துல முழிச்சதுன்னு தெரியல, தொடர் தோல்விகள்.அந்த லிஸ்ட்ல இந்த படமும் சேர்ந்திடக்கூடாதுங்கிறது நம்மளோட எண்ணம். ஆனா என்ன பன்றது நாம நினைக்கிறதெல்லாம் நடக்கவா? செய்யுது.

08 ஜூலை 2009

மம்மா மியா: சரத் மகள் அசத்தல் நடனம்!

சென்னையில் கடந்த இரு தினங்களாக நடந்த மம்மாமியா நடன நாடக நிகழ்ச்சியில் சரத்குமார் மகள் வரலட்சுமியின் நடனம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது. நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமாரின் மகள் வரலட்சுமியின் 'மம்மா மியா' நடன நிகழ்ச்சி, சென்னையில் கடந்த 2 நாட்கள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில், சரத்குமார், ராதிகா மற்றும் ராம்கி ஆகியோர் கலந்துகொண்டு நடனம் ஆடினார்கள். அமெரிக்க கலாசாரத்தை அடிப்படையாக கொண்ட 'மம்மா மியா' என்ற நடனத்தை முறைப்படி கற்று தேர்ந்தவர் வரலட்சுமி. ஒரு மகள் தன் தந்தையைத் தேடுவது போன்ற ஒரு நாடகத்தை நாட்டியமாக நேற்று அரங்கேற்றினார் வரலட்சுமி. இந்த நடன குழுவில், வரலட்சுமி உள்பட 50 பேர் நடனமாடினர். நடன நாட்டியத்தின் முதல் நிகழ்ச்சி, சென்னை மியூசிக் அகடமியில் 2 நாட்கள் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் அந்தரத்தில் பறந்தபடி வரலட்சுமி ஆடியபோது, அரங்கம் அதிர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் சரத்குமார், மனைவி ராதிகாவுடன் கலந்து கொண்டார். ராதிகாவின் தங்கை நிரோஷா, கணவர் ராம்கியுடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். நடன நிகழ்ச்சியின் முடிவில் சரத்குமார், ராதிகா, ராம்கி ஆகியோரும் மேடையில் நடனம் ஆடினர். இந்த நடன நாட்டியத்தை தொடர்ந்து நடத்த உள்ளார் வரலட்சுமி.

செக்ஸுக்கு நான் ரெடி - மினிஷா

செக்ஸ் பற்றி ரகசியமாக பேசியதெல்லாம் அந்தக் காலம். எனக்கு செக்ஸ் பெரிய விஷயமே இல்லை என்று படு பட்டவர்த்தனமாக பேசியுள்ளார் பாலிவுட் ஹாட் ஸ்டார் மினிஷா லம்பா. கைட்ஸ் படத்தில் நடித்து வரும் மினிஷா செக்ஸ் குறித்து விலாவாரியாக பேசியுள்ளதன் சுருக்கம்... கைட்ஸ் ஒரு ரொமான்டிக் படம். சமீப காலத்தில் இப்படி ஒரு ரொமான்டிக்கான படம வந்ததில்லை என்று கூறலாம். செக்ஸ் குறித்த பாலிவுட்டின் பார்வை விரைவில் மாறி விடும். எனக்கு 15 வயதாக இருக்கும்போது எனது அம்மாவிடம் செக்ஸ் குறித்து விரிவாக கேட்டறிந்தேன். ஒரு காதலன், காதலி அல்லது கணவன், மனைவியின் தனிமையான தருணங்களின்போது அழகு மிளிரும். அதை அப்படியேதான் சினிமாவில் காட்ட முடியும். அப்படி காட்டினால்தான் அது இயற்கையாக இருக்கும். யாராவது என்னிடம் செக்ஸ் குறித்துப் பேச முன்வந்தால் நான் தயக்கமே காட்ட மாட்டேன். அந்த சப்ஜெக்ட் குறித்து வெளிப்படையாக, விரிவாக பேச நான் தயார் என்கிறார் மினிஷா. கோலிவுட்டில் எல்லோரும் 'திரிஷா' காலத்தில் இருக்கிறோம். மினிஷாவோ, விட்டால் 'மினி ஷோ'வே நடத்திக் காட்டி விடுவார் போல..!

Floorball - Floor Hockey - Innebandy - சுவீடன் அனுபவங்கள்

ஸ்காண்டிநேவியா நாடுகளில் பிரபலமான இந்த ஃப்ளோர்ஹாக்கி ஆட்டம் அணிக்கு 6 பேர் வீதம் மொத்தம் 60 நிமிடங்களில் மூன்று இடைவெளிகளுடன் ஆடப்படுகிறது. குளிர்காலங்களில் ஐஸ் ஹாக்கிக்கு இணையாக உள்ளரங்குகளில் பெரிய ரசிகர் வட்டாரத்துடன் ரசிக்கப்படும் இந்த ஆட்டம் 70 களுக்குப்பின் புகழ் பெற ஆரம்பித்தது. இலகுவான மட்டைகளுடனும் துளைகள் நிறைந்த பந்துடன் ஆடப்படும் இந்த ஆட்டத்தில் பரபரப்பிற்கு பஞ்சம் கிடையாது. சிறு வயது முதல் நான் ஏதேனும் பெரிய அரங்கங்களில் விளையாட்டுப்போட்டிகளில் பங்கு பெற வேண்டும் அதில் வெற்றிக்கு நான் காரணமாக இருக்கவேண்டும் என யோசித்துப்பார்ப்பது உண்டு. சிறுவயதில் தெருக்களில் கிரிக்கெட் விளையாடியதுண்டு. எனது சகோதரர்களின் தயவால் ஒரு 10 பந்துகள் மட்டையடிக்க வாய்ப்புக்கிடைக்கும். உட்கார்ந்து கொண்டு ”லாலிபாப்” போல் அடிக்க ஏதுவாக சுழற்பந்து என்று சொல்லிக்கொண்டு பந்து வீசுவேன். அதன் பின் தியாகராசர் பொறியியற் கல்லூரிக்காலங்களில் வெள்ளொளிப்போட்டியில் ஆடியதுண்டு. அதன் பின் ஏழெட்டு வருடம் எந்த விளையாட்டிலும் கவனம் செலுத்த நேரமில்லாமல் போனது. சுவீடனுக்கு மேற்படிப்பு படிக்க வந்த பின் எனது சமூக வாழ்க்கையை அதிகரிக்க ஏதாவது விளையாடலாம் என எனதுக் கல்லூரியின் மாணவர்களுக்கான கலந்தாய்வாளரை அணுகிய போது அவர் ஃப்ளோர்பால் ஆட்டத்தில் நான் கோல்கீப்பராக இருக்க வாய்ப்பு உண்டு என எனது ஊரில் இருக்கும் ஃப்ளோர்பால் குழுமத்திற்கு அனுப்பினார். ஃப்ளோர்பால் ஆட்டத்தில் கோல்கீப்பராக இருப்பவர் நிற்க வேண்டியது இல்லை என்பதால் எனக்கும் அது வசதியாகப்போயிற்று. இலகுவான பிளாஸ்டிக் பந்து என்றாலும் கோல் கம்பங்களுக்குள் வேகமாக அடிக்கப்படும்போது காயங்களில் இருந்து தப்பிக்க கவசங்களும் வலிதாங்கும் உடைகளும் உண்டு.. மாற்றுத்திறன் உடையவர்களுக்காக மால்மோ என்ற நகரத்தில் நடைபெற்ற மால்மோ-ஓபன் என்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் ஃப்ளோர்பால் ஆட்டங்களில் எங்களது அணியும் பங்கு பெற்றது. தொடர்ந்து புதன்கிழமைகள் தோறும் நாங்கள் கடும்பயிற்சி எடுத்துக்கொண்டாலும் ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியைப்போல போகும் இடங்களிலெல்லாம் உள்ளூர் போட்டிகளிலும் நாங்கள் தர்மசாத்து வாங்குவோம். கடைசிவரை போராடுங்கள் தோல்விப்பற்றி கவலை வேண்டாம் என ஓவ்வொரு முறையும் எங்களது பயிற்சியாளர் சொல்லி அனுப்புவார். எதையெல்லாம் தவிர்த்தால் தோல்வி வித்தியாசம் குறையும் என்று சொல்லி அனுப்புவாரோ அந்த அடிப்படைத் தவறுகளைச் சரியாகச் செய்து 15-0, 19-1, 21-1 5-2 10-1 என சுற்று ஆட்டங்களில் படுதோல்வியைத் தழுவி எங்களது பயிற்சியாளர்கள் முன் அசடு வழிந்தோம். கோல்கீப்பர் சேம்-சைட் கோல் போட்ட பெருமையை லுண்ட் என்ற நகர அணியுடன் விளையாடும்போது நான் பெற்றேன். கோல்கீப்பர் பந்தை தடுத்தவுடன் இரு முனைகளிலும் இருக்கும் தனது அணி ஆட்டக்காரரிடம் 5 வினாடிகளுக்குள் எறிய வேண்டும். அவசரத்தில் கைத்தவறி கோல் கம்பங்களுக்குள் எறிந்து எதிர் அணியின் எண்ணிக்கையை 20 ல் இருந்து 21 ஆக்கினேன்.தொலைக்காட்சிப்பெட்டியின் முன்னால் அமர்ந்து கொண்டு கிரிக்கெட் போட்டிகளின் போது “டேய் அல்வா மாதிரி வந்த கேட்சை வுட்டாண்டா, இவனெல்லாம் டீம்ல வச்சுக்கிட்டு இருக்கிறதவிட தூக்கிடலாம்” என்று வர்ணனைக் கொடுத்தது எல்லாம் எளிதான தடுப்புகளை எல்லாம் கோட்டை விட்டபோது நினைவுக்கு வந்து சென்றது. மற்ற அணிகளுக்கு இடையிலானப்போட்டிகளை வேடிக்கைப் பார்த்து கொண்டிருந்தபோது மிகப்பெரும் வித்தியாசத்தில் வெற்றிப்பெற போகின்ற அணியின் கோல் கீப்பர் ஒரு கோலை தடுக்க முடியாமல் போனதால் மிகவருத்தம் அடைந்து தனது தலைக்கவசத்தை விட்டெறிந்தார். ஒரு கோலுக்கே அவர் தலைக்கவசத்தை வீசி எறியும்போது 50 கோலுக்கு மேல் விட்டு அரைசதம் அடித்த நான் எனது சக்கர நாற்காலியை அல்லவா விட்டெறிந்து இருக்க வேண்டும் என நினைத்துக்கொண்டேன். கடைசி இரண்டு இடங்களுக்கானப் போட்டியில் வெற்றி பெற்றால் 11 வது இடத்தையாவது பெறலாம் என கடைசி ஆட்டத்தில் வெல்ல கடும் பயிற்சி எடுத்துக்கொண்டு 6- 1 என்றக் கணக்கில் வெற்றி பெற்றோம். கிட்டத்தட்ட 10 க்கு மேற்பட்ட கோல்களைத் தடுத்து பயிற்சியாளரின் பாராட்டைப்பெற்ற போது கொஞ்சம் மனநிறைவாக இருந்தது. ஊருக்குத் திரும்பும்பொழுது பயிற்சியாளரிடம் நான் செய்த அடிப்படைத்தவறுகளினால் சில பல வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளாமல் படுதோல்வி அடைய நேரிட்டது என வருத்தமாகச் சொல்லிக்கொண்டிருந்த பொழுது “விளையாட்டுப்போட்டிகளின் முக்கிய நோக்கமே பங்கேற்பதில் தான் இருக்கின்றது, உன்னுடையப் பங்கேற்பு மற்றவர்களை உற்சாகப்படுத்தியது, அதுதான் நம் அணியின் வெற்றி” என்ற போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஸ்ருதிக்கு ராஜா தந்த ஆசி!

நான் சினிமாவில் இப்போதுதான் நடிக்க ஆரம்பித்துள்ளேன். என் நடிப்பு நன்றாக இருப்பதற்கு என் தந்தை காரணம். இசையில் நான் இந்த அளவு ஈடுபாடு காட்ட இளையராஜா காரணம் என்றார் நடிகை ஸ்ருதி கமல்ஹாசன். 'லக்' எனும் படத்தில் நடித்துள்ளார் நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதி. அவருக்கு ஜோடியாக அமீர்கானின் மருமகன் இம்ரான் கான் நடித்துள்ளார். 'லக்' படம் 24-ந்தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இப்படத்தில் ஸ்ருதி கமல் ஒரு பாடலும் பாடி உள்ளார். சமீபத்தில் இந்தப் படத்தின் பாடல்கள் மும்பையில் வெளியிடப்பட்டன. பாடல் வெளியீட்டுக்கு முன், அதை மேடையில் நடனமாக வெளிப்படுத்திய ல்ருதிக்கு பலத்த கைத்தட்டல்கள் பரிசாகக் கிடைத்தன. பின்னர் நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி: லக் படத்தின் கதை மிக வலுவானது. நான் மிகவும் கஷ்டப்பட்டு இந்தப் படத்தில் நடித்துள்ளேன். இப்படத்தை இயக்குனர் சோகம் ஷா பிரமாண்டமாக எடுத்துள்ளார். கதை நன்றாக இருப்பதால் படம் மிகப் பெரிய வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது. நான் சினிமாவில் நடிப்பதற்கு தந்தை கமல்ஹாஸன் அளித்த ஊக்கம்தான் காரணம். நான் ஒரு நடிகையாக உருவானதற்கு அவர்தான் காரணம். அவரது நடிப்பு திறமையை கண்டு நான் பல தடவை பிரமித்துப் போய் இருக்கிறேன். சிறு வயதில் நான் அபூர்வ சகோதரர்கள் படப்பிடிப்புக்கு சென்று அப்பா நடிப்பதை பார்த்தேன். அவர் குள்ளர் வேடத்தில் நடிப்பதை பார்த்த போது ஆச்சரியமாக இருந்தது. அவர் சிறந்த உழைப்பாளி. அவரிடம் இருந்துதான் நான் கடின உழைப்பு விடா முயற்சியை கற்று கொண்டேன். அவரது நடிப்பை யாரும் காப்பியடிக்க முடியாது. அவர் ஒரு காரியத்தில் இறங்கி விட்டால் அதை வெற்றிகரமாக முடிக்கும் வரை ஓயமாட்டார். நான் ஹே ராம் படத்தில் அப்பாவுக்கு காஸ்டியூம் டிசைனராக வேலை பார்த்தேன். ஆனால் அந்த படத்தை சில பத்திரிகைகள் மோசமாக விமர்சனம் செய்திருந்தன. அதைப் பார்த்த போது எனக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது. சிறு வயதில் நான் அப்பாவிடம் படங்களுக்கு பாடல் ஒலிப்பதிவு நடக்கும் ரிக்கார்டிங் தியேட்டருக்கு செல்ல வேண்டும் என்று அடம் பிடிப்பேன். அப்போது அவர் என்னை இளையராஜா சாரின் ரிக்கார்டிங் தியேட்டருக்கு அழைத்துச் சென்றார். அப்போது என்னைப் பார்த்த இளையராஜா, "இவள் எதிர்காலத்தில் மிகப்பெரிய பாடகியாக வருவாள்" என்று கூறினார். அதற்கு அப்பா, "எதை வைத்து ?" என்று கேட்டார். அதற்கு, "பெயரிலேயே ஸ்ருதி இருக்கிறதே... நான் சொல்கிறேன். இவள் ஒரு பெரிய பாடகிதான்", என்றார். இளையராஜாவின் அந்த பாராட்டை ஒரு போதும் மறக்க முடியாது. என் அப்பா இதுவரை என்னை ஒரு தடவை கூட திட்டியது இல்லை. அந்த அளவுக்கு நான் அவரிடம் நடந்து கொண்டதும் இல்லை. என் மீது அவர் முழு நம்பிக்கை வைத்துள்ளார். அவரது நம்பிக்கை வீண் போகாது," என்றார் ஸ்ருதி ஹாசன்.

வருங்கால தொழில்நுட்பம் 1 : சிலிக்கான் வேலி & ட்விட்டர்

வருடம் 1986...

மிழ்நாட்டு பள்ளிக் கல்வித் துறை முதல் முறையாக கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தை +1ல் அறிமுகப்படுத்துகிறது. திருநெல்வேலி மாவட்டம் மணப்பாடு கிராமத்தில் தமிழ் மீடியம் மட்டுமே உள்ள பள்ளியின் நிர்வாகம் ஆர்வத்துடன் கம்ப்யூட்டர் பாடம் ஆரம்பித்தது. எண்ணி ஏழு பேர் அந்தப் பிரிவில் சேர்ந்தோம் (திருச்செந்தூர் அருகிலிருக்கும் மணப்பாடு ஓர் அழகிய கடற்கரை கிராமம். மேலும், விவரங்கள் அறிய www.manavai.com).

அறிமுக வருடம் என்பதால் பாடப் புத்தகம் இல்லை. சொல்லித் தர ஆசிரியர் எவரும் உடனடி யாகக் கிடைக்கவில்லை. செட்டில் இருவர் மாணவியர் என்பதால், ஆசிரியர் இல்லாத வகுப்பு நேரங்கள்... இந்த நாட்களில் மொக்கை என்று அழைக்கப்படும் கடலை வறுத்தல்களில் கழிந்து போனது. 4 மாதங்களுக்குப் பின் சிக்கிய ஒரு ஆசிரியர் எலெக்ட்ரானிக்ஸில் டிப்ளமோ படித்தவர். ஒரே ஒரு பிரச்னை, எங்கள் பள்ளியில் கம்ப்யூட்டர் என்ற வஸ்துவே கிடையாது. தீவிர முயற்சிக்குப் பின், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை தூத்துக்குடியிலிருந்து Commodore என்ற கம்ப்யூட்டரும், அதை இணைக்கத் தேவையான கறுப்பு-வெள்ளை மானிட்டரும் வாடகைக்கு எடுத்துவரப்பட்டது. 82-ல் வெளியிடப்பட்ட Commodore அந்த நாட்களுக்கு ரொம்பவே அட்வான்ஸ்டு. அதில் அறை குறையாக எழுதி Commodoreயை XXXXXXXXXX என அலறவிட்டதும் பளிச்.

இதையெல்லாம்விட மனதில் அச்சாகப் பதிந்த விஷயம். கம்ப்யூட்டர் துறையில் தமிழ் வார்த்தைகள் எதுவும் பயன்படுத்தாத அந்த நாட்களில், 'CPU என்றால் சென்ட்ரல் பிராசஸிங் யூனிட். இது கம்ப்யூட்டரின் மைய செயல்பாட்டைக் கவனிக்கும். இதற்கு மெமரியும் தேவை' என டெக்னோ மணிப்பிரவாள நடையில் எழுதிய தேர்வு பதில்கள்!

22 வருடங்களுக்குப் பிறகு...

சென்ற மாதத்தில் மௌன்டன்வியூவில் இருக்கும் மைக்ரோசாஃப்ட் அலுவலகத்தில் 'மேகக் கணினியம்' (Cloud Computing) பற்றிய வட்ட மேசை விவாதத்தில் கலந்துகொண்டு திரும்பிக்கொண்டு இருந்தேன். 20 வருடங்களுக்கு முன் சுஜாதாவின் 'சிலிக்கான் சில்லு புரட்சி' தொடரைப் படிக்க வாரந்தோறும் காத்திருந்த நினைவலைகள் மனதில் மோதியபடி இருக்க, வடக்கு US 101 சாலை யில் சிலிக்கான் பள்ளத்தாக்கிலிருந்து சான்ஃபிரான்சிஸ்கோ செல்ல வேண்டும். ஒரு எக்ஸ்பிரஸ் அறிமுகம்....

சிலிக்கான் பள்ளத்தாக்கு அமைந்திருக்கும் கலிஃபோர்னியா மாநிலம், புது தொழில் முனை வோரை 100 வருடங்களுக்கும் மேல் ஈர்த்து வந்துள்ளது. 19-ம் நூற்றாண்டின் மத்தியில் ஆரம்பித்த தங்கத் தோண்டல் மோகம் ஆயிரக்கணக்கான மக்களை கலிஃபோர்னியா பக்கம் தள்ளிக்கொண்டு வந்தது. இவர்களின் தேவைகளுக்காகக் கட்டப்பட்டதுதான் சான்ஃபிரான்சிஸ்கோ. சிலிக்கான் பள்ளத்தாக்கு உருவானதும் மிகத் தற்செயலாக!

இங்கே இருக்கும் புகழ்பெற்ற ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்துக்கு 70-களின் தொடக்கத்தில் எக்கச்சக்க நிதி நெருக்கடி. அதைச் சமாளிக்கத் தனக்குச் சொந்தமான நிலங்களை சில டெக்னாலஜி கம்பெனிகளுக்கு நீண்ட காலக் குத்தகையில் கொடுத்தது. அடுத்த சில வருடங்களில், இன்டெல் சிலிக்கான்கொண்டு செய்த தனது முதல் மைக்ரோ பிராசஸரை வெளியிட, பிறந்தது சிலிக்கான் பள்ளத்தாக்கு.

ஆப்பிள், ஆரக்கிள், ஹெச்பி, சிஸ்கோ, யாகூ, கூகுள் எனக் கடந்த 40-க்கும் மேலான வருடங்களாகத் தொடர்ந்து தரமான நிறுவனங்களை உருவாக்கியபடி இருக்கும் சிலிக்கான் பள்ளத்தாக்கு சந்தேகமே இல்லாமல் சர்வதேசத் தொழில்நுட்பத் தலைநகரம். இன்று, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட ஹைடெக் நிறுவனங்கள்; 20 லட்சத்தைத் தொடும் பணியாளர்கள்; உலகம் முழுவதுமுள்ள இன்டர்நெட் டிராஃபிக்கின் நான்கில் ஒரு பகுதியை நுகர்வது சிலிக்கான் பள்ளத்தாக்கு தான்.

சினிமா கனவுகளுடன் கோடம்பாக்கம் வந்து சேரும் இளைஞர்களைப் போலவே, ஹைடெக் தொழில் கனவுகளுடன் சிலிக்கான் பள்ளத்தாக்கு வந்து சேரும் தொழில் முனைவோரை இங்கே ஸ்டார் பக்ஸ், பீட்ஸ் போன்ற காபி ஷாப்களில் பார்க்கலாம். இங்கு தொழிலைத் தொடங்குவதும் எளிதானதே. எங்காவது ஒரு கார் ஷெட் சின்ன வாடகையில் கிடைத்தால் போதும். கம்ப்யூட்டர் சகிதம் குடியேறி, நாளுக்கு 20 மணி நேரம் உழைத்து, அங்கேயே உறங்கி, உணவருந்தி, உழைத்துத் தமது கனவை நிறைவேற்றக் கடுமையாகப் போராடுவார்கள். வெற்றியடைந்தால், தொழில் முதலீட்டாளர்களிடம் பணம் பெற்று புது நிறுவனம் ஒன்றை நிறுவ வாய்ப்பு. தோல்வியடைந்தால், கவலை இல்லை... கஜினி போல மீண்டும் மீண்டும் முயலலாம். அல்லது செய்த முயற்சியையும் தோல்வி யையும் பெருமையாக ரெஸ்யூமில் சேர்த்து மற்ற ஒரு நிறுவனத்தில் சேரலாம்.

இன்று பிரமாண்டமாக வளர்ந்திருக்கும் ஆப்பிள் தொடங்கி கூகுள் வரை இந்தப் புள்ளிகளில் துவங்கி யவைதான். உதாரணத்துக்கு, ட்விட்டர் (Twitter -பற்றிய தகவல்கள் பெட்டிச் செய்தியாக). 2006-ல் தொடங்கப்பட்ட இந்த நுண்வலைப்பூ தளத்தைப் பயன்படுத்தி ஒவ்வொரு மணி நேரமும் லட்சக்கணக்கானோர் சுருக்க வலைப்பூ எழுதுகிறார்கள். இன்றைய நிலவரத்தில், ட்விட்டர் பணத்தைத் தண்ணீராகச் செலவிட்டபடியே இருக்கிறது. எப்போது, எப்படி லாபகரமாக மாறும் என்பது தெரியவில்லை. உலகப் பொருளாதாரமே மந்த நிலையில் முடங்கி நிற்கும் நிலையில், இது போன்ற நிறுவனம் என்றோ மூடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், தொழில் முதலீட்டாளர்களுக்கு அது பெரிய பொருட்டு இல்லை. காரணம், ட்விட்டர் என்பது ஷங்கர் படம் போல, ஒரு பிரமாண்ட ஐடியா. எப்படியும் அது வெற்றிபெற்றுவிடும் என்ற நம்பிக்கை.

'எல்லாம் ஓ.கே. ஆரம்பிக்கும்போது 'மேகக் கணினியம்' அப்படின்னு ஏதோ சொன்னியே, அது இன்னா?' என்ற கேள்வி எழுந்தால், உங்களது நினைவுத்திறனுக்குப் பாராட்டுக்கள்.

'கணினித் திறன் இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை இரண்டு மடங்காகியபடி செல்லும்!' - இன்டெல் நிறுவனரான ராஜர் மூர் 1965-ல் சொல்லியது இன்று வரை உண்மை. இணையம் நம் வாழ்வில் இடம் பிடித்த பிறகு, வலைதளங்களை இயக்கத் தேவையான கணினித் திறனை எளிதாகப் பெறுவது எப்படி என ரூம் போட்டு யோசிக்க வேண்டியிருந்தது. 'இணையம் என்பதே பல்லாயிரக்கணக்கான கம்ப்யூட்டர்களின் இணைப்புதானே... அதையே பயன்படுத்தி, தேவைப்படும் கணினித்திறனைப் பெற்றுக்கொண்டால் என்ன?' என்ற சிந்தனையின் வடிவாக்கம்தான் 'மேகக் கணினியம்'. இன்டெர்நெட்டுக்கு அமெரிக்காவில் இன்னொரு பெயர் – Cloud.

'இதனால் சாதாரண பப்ளிக்கான எனக்கென்ன பயன்?' என்று உங்களுக்குத் தோன்றலாம். மிகவும் பயன் இருக்கிறது. அதை அடுத்த க்ளிக்கில் பார்க் கலாம்!

'ஐ.டி. இண்டஸ்ட்ரியே விழுந்திருச்சே... அப்புறம் இன்னாத்துக்கு இதெல்லாம்?' என்கிறீர்களா... அதற்கும் இருக்கு ஒரு ஸ்வீட் ட்விஸ்ட்!

புறாவிடு தூதாகத் தொடங்கிய தகவல் தொடர்பு, கடிதம், தந்தி, ஃபேக்ஸ், இ-மெயில் என முன்னேறி, இப்போது சிட்டுக்குருவியில் வந்து நிற்கிறது. நறுக்கென்று 140 எழுத்துக்களில் 'இப்போது என்ன செய்கிறீர்கள்?' என்பதை ட்விட்டரில் தட்டினால், அதை ஆயிரக்கணக்கானவர்களுக்கு நொடிகளில் கொண்டுசேர்க்கும் இந்த இணைய தொழில்நுட்பத்தைச் சமீபத்தில் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தி வெற்றிகண்ட பிரபலம், பராக் ஒபாமா!

அமெரிக்கத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தமது துணை அதிபர் வேட்பாளரை அறிமுகப்படுத்துவது அங்கே மிகப் பெரிய மீடியா நிகழ்வாக இருக்கும். ஆனால், 'செனட்டர் ஜோ ஃபைடனை துணை அதிபர் வேட்பாளராக அறிவிக்கிறேன்!' என ட்விட்டிவிட்டு சில மணி நேரங்களுக்குப் பின்தான் மீடியாவுக்கே அறிவித்தார் ஒபாமா. (ஒபாமாவின் ட்விட்டர் முகவரி: )

அமெரிக்க அதிபருக்கு மட்டுமல்ல, அண்ணாச்சி ராதாகிருஷ்ணனுக்கும் ட்விட்டரால் பயன் உண்டு. காரணம், ட்விட்டரைத் தனிமனிதர்கள் மட்டுமன்றி நிறுவனங்களும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. தனக்குப் பிடித்த நிறுவனங்களின் ட்விட்டுகளின் தொடர்பாளராக (follower) தன்னைப் பதிவுசெய்துகொண்டால், அந் நிறுவனங்கள் வெளியிடும் செய்திகளை நொடிப்பொழுதில் தெரிந்துகொள்ள முடியும். உதாரணமாக, ராதாகிருஷ்ணனுக்கு திருநெல்வேலி இருட்டுக் கடை அல்வா மிகவும் பிடிக்கும். இருட்டுக் கடைக்காரர்கள் தங்களுக்கென ஒரு ட்விட்டர் முகவரி வைத்திருந்து, ராதாகிருஷ்ணன் அதில் பதிவு செய்துவைத்திருந்தால் சுடச்சுட அல்வா கடைக்கு வரும் நேரத்தை ராதாகிருஷ்ணன் தெரிந்துகொண்டு முதல் ஆளாகக் கடையில் நிற்கலாம். அன்றைய அல்வாவில் கொஞ்சம் இனிப்பு அதிகமாக இருப்பது போலத் தோன்றினால், அதை அவர் தனது ட்விட்டரில் எழுதலாம். உடனே சம்பந்தப்பட்டவர்கள் அதன் மூலம் உடனடி நடவடிக்கை எடுக்கலாம். லட்சக்கணக்கான மக்களின் நாடித்துடிப்பைத் துல்லியமாகக் கணிக்கும் திறனை இதுவரை வேறு எந்தத் தொழில்நுட்பமும் கொடுத்ததில்லை!

06 ஜூலை 2009

* Home * Videos * About * Contact Me Blog Search ˜”*°•TamilhackX•°*”˜ எளிய தமிழில் கணணி சம்பந்தமான கட்டுரைகள், மென்பொருள் தரவிறக்கம்,

Torrent ஆனது peer to peer முறையில் கோப்புக்களைப் பரிமாறும் ஓர் வழிமுறையாகும்.
இம் முறையில் கோப்புகளை தரவிறக்குவதற்க்கு பல மென்பொருட்கள் இருக்கின்றன. அதில் μTorrent ஆனது அனைவராலும் பாவிக்கப்படுகின்ற ஒரு இலவச மென்பொருளாகும்.
இம் மென்பொருளில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் μTorrent மென்பொருளை கூடிய வினைத்திறனுடன் பயன்படுத்த முடியும்.
அது சிறிது கடினமான வேலை என்பதால் μTorrent இன் வினைத்திறனைக் கூட்டக்கூடிய சில மென்பொருட்கள் உள்ளன. இதன் முலம் Download பண்ணும் வேகத்தினையும் upload பண்ணும் வேகத்தையும் அதிகரித்துக் கொள்ளலாம்
அவ்வாறான நான்கு மென்பொருட்கள் இங்கு தரப்பட்டுள்ளது அவற்றில் ஏதாவது ஒன்றை Install பண்ணி Accellerate என்ற Button click பண்ணுவதன் மூலம் μTorrent மென்பொருளின் தரவிறக்க வேகத்தை அதிகரித்துக் கொள்ளலாம்
µTorrent Acceleration Tool :Download here
µTorrent EZ Booster : Download here
µTorrent SpeedUp PRO : Download here
µTorrent Ultra Accelerator : Download here
இம் மென்பொருட்களைப் பயன்படுத்திப் பார்த்து விட்டு உங்கள் கருத்தைக் கூறவும். தேங்க்ஸ்- TAMILHACKS

ஓரினச் சேர்க்கை தீர்ப்புக்கு குஷ்பு வரவேற்பு!

18 வயதுக்கு மேற்பட்டவர்களின் ஓரினச் சேர்க்கை செக்ஸ் உறவு சட்டவிரோதமல்ல, தவறல்ல என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறியிருப்பது வரவேற்புக்குரியது என்று நடிகை குஷ்பு கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், இது ஒரு சிறப்பான தீர்ப்பு. முழு மனுடன் நான் மனமார வரவேற்கிறேன். தங்களது விருப்பப்படி மக்கள் வாழ இந்த தீர்ப்பு வகை செய்கிறது. சகிப்புத்தன்மை, எதையும் ஏற்றுக் கொள்ளும் தன்மையை இந்த தீர்ப்பு நாட்டில் வளர்க்கும். நம் நாட்டு மக்கள் பெரும்பாலும் மாற்றங்களை எளிதில் ஏற்க மாட்டார்கள். இருந்தாலும் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது. சென்னை மக்களும் இந்தத் தீர்ப்பை ஏற்பார்கள் என நம்புகிறேன் என்றார் அவர். ஏற்கனவே செக்ஸ் குறித்து கருத்து தெரிவித்து எக்கச்சக்க பிரச்சினையில் சிக்கிக் கொண்டவர் குஷ்பு. இந்த நிலையில் சென்னை மக்கள் மாற வேண்டும், இந்தத் தீர்ப்பை ஏற்க வேண்டும் என அவர் கூறியிருப்பதால் புதிதாக சர்ச்சை எழுமோ, என்னவோ தெரியவில்லை...

மைக்ரோசாப்டின் புதிய சமூக வலைப்பின்னல்

கூகிளின் மிகவும் பிரபலமான Orkut ஒரு சமூக வலைப்பின்னல் தளம் இதில் உங்கள் நண்பர்களுடன் துனுக்குகள் (Scraps), ஒளிபடங்கள் மற்றும் YoTube நிகழ்படங்களை பகிர்ந்து கொள்ளலாம்.

அதே போல் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய சமூக வலைப்பின்னல் (Social Network) தளத்தை தொடங்கியிருக்கிறது இதன் பெயர் “Windows Live Planet“.

Windows Live Planet

இந்த புதிய சமூக வலைப்பின்னலில் உங்கள் Hotmail அல்லது Live பயனர் கணக்கின் மூலமாக உள்ளே நுழைந்து புதிய நண்பர்கள் பட்டாளத்தை உருவாக்கிக் கொள்ளலாம், அரட்டை, துனுக்குள் என சகல வசதிகளுடன் வந்திருக்கிறது.

Windows Live Messenger in Windows Live Planet

இதில் முக்கியமான சிறப்பு Live Messenger சேவையை Windows Live Planetல் மைக்ரோசப்ட் நிறுவனம் உள் புகுத்தியுள்ளது, இதனால் உங்கள் நண்பர்களிடம் அல்லது குடும்பத்தினருடன் Live Messenger இல்லாம்லேயே எங்கும் அரட்டை அடிக்கலாம்.

புளோராவின் லிப் லாக்!

விசா மோசடி புகழ் புளோரா படு கவர்ச்சியாக நடித்து வருகிறார் உச்சகட்டம் படத்துக்காக. அமெரிக்கா செல்ல போலி ஆவணங்கள் மூலம் விசா பெற முயன்று கைதாகி சிறை சென்று பின்னர் மீண்டவர் புளோரா. இப்போது அவர் முழு நீள கவர்ச்சியில் உச்சகட்டம் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கு ஜோடி போட்டிருப்பவர் ஜெமினி. இது ஒரு திரில்லர் படம். படத்தில் புளோராவின் காட்சிகள் எல்லாம் கண்காட்சியாக இருக்குமாம். அந்த அளவுக்கு கிளாமரை வாரி இறைத்துள்ளாராம். குறிப்பாக ஜெமினியும், புளோராவும் ஒரு லிப்லாக் காட்சியிலும் களை கட்டியுள்ளனராம். சிங்கிள் முத்தக் காட்சிதான் என்றாலும் கிட்டத்தட்ட 10 டேக்குகள் வாங்கி விட்டாராம் ஜெமினி. தயங்கித் தயங்கி அவர் முத்தம் கொடுத்ததால் (நெசமாவா..???) காட்சி சிறப்பாக வரவில்லையாம். இதனால் கிட்டத்தட்ட 10 டேக் போன பின்னர்தான் முத்தம் ஓ.கே. ஆனதாம். புளோரா சைடிலிருந்து எந்தவிதத் தயக்கமும் இல்லையாம். ஜெமினிதான் சற்று பதட்டமாகி விட்டாராம். இந்தப் படத்தில் இன்னொரு நாயகியாக மிஸ் பெங்களூர் ஸ்வாதியும் இருக்கிறார். தகப்பன்சாமி படத்தைத் தயாரித்த கோபால்தான் இப்படத்தையும் தயாரிக்கிறார். இப்படத்தின் முக்கிய வில்லனாகவும் அவரே நடிக்கிறார்

உயிரைக் குடிக்குமா ரிமோட்?

நடந்தது என்ன..? இதோ அவரே விளக்கு-கிறார்... ''நான் எப்போதாவது ஒரு முறைதான் காரைப் பயன்படுத்துவேன். மற்ற நேரங்களில் என் வீட்டுக்கு அருகே உள்ள கோயில் முன்பு காரை நிறுத்திவைப்பேன். கடந்த மே 27-ம் தேதி காரில் வெளியே போய் வந்த நான், எப்போதும் போல காரை கோயிலுக்கு அருகே நிறுத்தி, ரிமோட் மூலம் லாக் செய்துவிட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். அதன் பிறகு எனக்குப் பல நாட்கள் கார் தேவைப்படவில்லை. கொஞ்ச நாட்களுக்குப் பிறகு, அதாவது ஜூன் இரண்டாம் தேதி வெளியே செல்வதற்காக காரை எடுக்கச் சென்-றேன். காரை நோக்கி நடக்கும்போதே, 'காருக்கு அருகே குடலைப் புரட்டும் துர்நாற்றம் எடுக்கிறது' என்று அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சொன்னார்கள். எலி ஏதாவது செத்துக் கிடக்கும் என்று நினைத்தபடி காரின் கதவைத் திறந்தேன்... காருக்குள்ளே நான் கண்ட காட்சி அதிர வைத்தது. பூட்டிய காருக்குள் நிர்வாணமாக ஒரு ஆண் பிணம் கிடந்ததைப் பார்த்து செய்வதறியாது திகைத்துவிட்டேன். அந்தப் பதற்றத்துடனேயே போலீஸ§க்கு போன் செய்தேன். போலீஸார் விசாரணை செய்தார்கள்... நடந்ததைச் சொன்னேன். காரின் உள்ளே இருந்த பிணம், அடையாளம் காண முடியாத அளவுக்குப் புழு பிடித்து சிதைந்து போய்விட்டது... இது எப்படி நிகழ்ந்தது என்றே புரியவில்லை!'' என்றார் பயம் அகலாமல். நாம் பெண்ணாடம் காவல் நிலைய ஆய்வாளர் கண்ணனிடம் இது பற்றிக் கேட்டோம். ''காரை நிறுத்தி விட்டுச் செல்லும்போது ரிமோட் கன்ட்ரோல் மூலம் காரை லாக் செய்திருக்கிறார். லாக் செய்வதாக நினைத்துக் கொண்டு அவர் அன்-லாக் பட்டனையேகூட அழுத்தி இருக்கக்கூடும். ரிமோட் கன்ட்ரோல் மூலம் காரை லாக் செய்யும்போது எழும் சப்தத்துக்கும், அன் - லாக் செய்யும்போது எழும் சப்தத்துக்கும் மெல்லிய வித்தியாசம் உண்டு. என்றாலும், இதைக் கவனமாகக் கேட்டால் மட்டுமே கண்டுபிடிக்க முடியும். அதுமட்டுமல்ல, முத்துக்குமாரசாமி கார் போன்று செக்யூரிட்டி சிஸ்டம் பொருத்தப்பட்ட கார்களை கள்ளச் சாவி போட்டுத் திறந்தால்கூட ஒரிஜினல் சாவி இல்லாமல் அதை ஐம்பது மீட்டருக்கு மேல் ஓட்டிக்கொண்டு போக முடியாது. இந்தக் காரணத்தினாலேயேகூட காரின் உரிமையாளரான முத்துக்குமாரசாமி அலட்சியமாக இருந்திருக்கலாம். இறந்து கிடந்தவரின் உடலைப் பரிசோதனை செய்ததில், வயிற்றில் கலப்படமான உணவு சாப்பிட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும், இறந்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்கலாம் என்ற சந்தேகம் இருக்கிறது. சம்பவத்தன்று, காரைத் திறந்து உள்ளே போயிருப்பார், உள்ளே சென்று கதவை மூடியதும் அது லாக் ஆகி இருக்கும். உள்ளே இருந்து கார் கதவைத் திறப்பது எப்படி என்று தெரியாததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு அவர் போராடி இறந்துள்ளார்'' என்றார் கண்ணன். மனிதக் கைகளில் ஆறாவது விரலாக நீண்டுவிட்டது ரிமோட். எலெக்ட்ரானிக் உபகரணங்களில் தவறே நிகழாது என கூற முடியாது. காரை ரிமோட் மூலம் லாக் செய்தவர், அனைத்துக் கதவுகளும் ஒழுங்காகப் பூட்டப்பட்டு இருக்கிறதா என்று காரின் கதவை இழுத்து ஒருமுறை சோதித்துப் பார்த்திருந்தால், ஒரு உயிர் பலியை தவிர்த்திருக்கக் கூடும்!

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com