Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

04 செப்டம்பர் 2012

இந்திய ரசிகர்களைக் கவருமா புதிய கார்போன் ஸ்மார்ட்போன்?


Karbonn A18 Price India
இந்திய நிறுவனமான கார்போன், தனது மலிவு விலை மொபைல்கள் மூலம் இந்திய ரசிகர்களை கிறங்கடித்து வருகிறது. இந்த நிலையில் சமீபத்தில் ஸ்மார்ட் எ18 என்ற ஒரு புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனை கார்போன் இந்திய சந்தையில் களமிறக்கி இருக்கிறது. 2 சிம் வசதி கொண்ட இந்த போன் ரூ.12,990க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த எ18 போனை பிலிப்கார்ட் ஆன்லைனில் ரூ.9,790க்கு வாங்கலாம். இந்த புதிய கார்போன் போன் எக்கச்சக்க தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது. குறிப்பாக ஆன்ட்ராய்டு இயங்கு தளம் இந்த போனுக்கு வலிமையைத் தருகிறது.
இதன் 4.3 இன்ச் கப்பாசிட்டவ் திரை மிகத் தெளிவாக இருக்கிறது. மேலும் இந்த போன் 1ஜிஹெர்ட்ஸ் ப்ராசஸர் மற்றும் 512எம்பி ரேம் கொண்டிருப்பதால் இந்த போன் மிக வேகமாக இயங்கும் என்று நம்பலாம்.
மேலும் இந்த கேமரா 5எம்பி பின்பக்க கேமரா மற்றும் 1.3எம்பி முகப்புக் கேமரா, 2.55ஜிபி சேமிப்பு, மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் மற்றும் 7.5 மணி நேர இயங்கு நேரம் போன்ற சிறப்பு வசதிகளைக் கொண்டிருக்கிறது. அதோடு இணைப்பு வசதிகளுக்காக இந்த போன் 3ஜி, யுஎஸ்பி, வைபை மற்றும் ப்ளூடூத் போன்ற வசதிகளையும் இந்த போனில் பார்க்கலாம்.
இந்த கார்போன் போன் மைக்ரோமேக்ஸ் சூப்பர் போன் எ90க்கு போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. போட்டியில் வெல்வது யார் என்பது போகப் போகத்தான் தெரியும்.

நெக்சஸ் 7 டேப்லெட்டின் 3ஜி வெர்சனை களமிறக்குவதில் தீவிரம் காட்டும் ஆசஸ்


Google Nexus 7 Tablet
கடந்த ஜூன் மாதம் ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் இயங்கக்கூடிய நெக்சஸ் 7 என்ற புதிய டேப்லெட்டை கூகுள் அறிமுகம் செய்து வைத்தது. இந்த டேப்லெட்டிற்கு உலக முழுவதிலுமிருந்து சூப்பரான வரவேற்பு கிடைத்திருக்கிறது.
அதனைத் தொடர்ந்து இந்த டேப்லெட்டின் 3ஜி வெர்சன் வரும் 6 வாரத்தில் வந்துவிடும் என்று தெரிகிறது. அதற்காக ஆசஸ் நிறுவனம் இந்த நெக்சஸின் 3ஜி வெர்சனைக் களமிறக்க மிகத் தீவிரமாக உழைத்து வருகிறது.
ஐபேட் மினி மற்றும் அமேசானின் கின்டில் பயர் டேப்லெட்டுக்கு பலத்த போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்த நெக்சஸ் 7 டேப்லெட் உலக அளவில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்த நெக்சஸ் 7 டேப்லெட் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் இயங்குகிறது. மேலும் இந்த டேப்லெட் டேக்ரா 3 க்வாட் கோர் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. அதோடு இந்த டேப்லெட் 1ஜிபி ரேமைக் கொண்டிருக்கிறது.
இந்த டேப்லெட்டின் 8ஜிபி வெர்சன் 199 அமெரிக்க டாலர்களுக்கும், 16ஜிபி வெர்சன் 249 அமெரிக்க டாலர்களுக்கும் விற்கப்படுகிறது

தொடத் தொட மலர்வது பூ மட்டுமல்ல! பெண்ணும்தான்!!


ஸ்பரிசம் என்பது படுக்கை அறையில் முக்கிய அம்சம். ஒவ்வொரு செல்லும் மலரும் வகையில் தொடுவதற்கு கலைநயமும், கற்பனை வளமும் தேவை. கண்களால் தீண்டுதல், கைகளால் தீண்டுதல், இறகு, கர்ச்சிப், பூக்களால் தீண்டுதல் என பலவித தீண்டல்கள் இருக்கின்றன. தீண்ட தீண்ட தீயாய் எரியும், பின்னர் கூடலுக்கான தேடல் தொடங்கும் என்கின்றனர் கவிஞர்கள். எந்த விதமான தீண்டல்களை பெண்கள் விரும்புகின்றனர் என்று பெரிய பட்டியலே இருக்கிறது. நிபுணர்களும், அனுபவசாலிகளும் கூறியுள்ளதை படியுங்களேன்.

படுக்கை அறையில் எடுத்தோமா, கவிழ்த்தோமா என்று இருப்பதை யாரும் விரும்புவதில்லை. மெதுவாய் ஒரு பார்வை. இன்றைக்கு ஏதாவது ஸ்பெசலா இருக்குமா என்பதை பார்வையின் மூலமே கேட்டு தெரிந்து கொள்ளலாமாம். எதிர் தரப்பில் இருந்து கிரீன் சிக்னல் வந்து விட்டால் போதும் அப்புறம் உடனே அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்து விடவேண்டாம் மூடு மாறிவிடும். மெதுவாய் முன்னேறுங்கள்.

The Importance Foreplay Especially For Women
வேலை பார்த்து டயர்டா இருக்கா கை, கால் பிடிச்சு விடட்டா, மசாஜ் செய்யவா என்று தொடங்குங்களேன். ஒரு சிலருக்கு கைகளால் தொடுவது கிளர்ச்சியைத் தரும் சிலருக்கு சில பொருட்களைக் கொண்டு தொடுவது அதீத கிளர்ச்சியை கொடுக்கும்.காட்டன் கர்ச்சிப் கொண்டு உங்கள் துணையின் மேனியில் மெதுவாய் தீண்டுங்களேன். சிலிர்ப்பாய் ஒரு அனுபவம் ஏற்படும். அதுவும் முதுகுப் பிரதேசம் முன் விளையாட்டுக்கு ஏற்ற இடம். அந்த இடத்தில் கர்ச்சிப் வைத்து போடும் கோலம் அதிக கிளர்ச்சியை தருமாம்.
மயிலிறகு அல்லது மென்மையான பறவையின் ஒற்றை இறகினைக் கொண்டு நெற்றியில் தொடங்குங்கள். இந்த விளையாட்டு ஆண், பெண் இருவருக்குமே விருப்பமானது. நெற்றியில் ஒற்றை இறகைக் கொண்டு தீண்டும் இன்பத்திற்கு நிகர் வேறு எதுவும் கிடையாது என்கின்றனர் அனுபவசாலிகள். ஒவ்வொரு பகுதியாய் தொட தொட உணர்ச்சியின் வேகமும் கூடுமாம்.
திராட்சைப் பழம் சாப்பிட மட்டுமல்ல விளையாட்டுக்கு ஏற்றது. அதுவும் ப்ரிட்ஜில் வைத்த திராட்சை என்றால் இன்னும் சுவாரஸ்யம் அதிகம். உடலில் ஒவ்வொரு பகுதியிலும் ஜில் என்ற உணர்வு ஏற்பட்டு கிளர்ச்சியை அதிகரிக்கும்.
பூக்களால் தீண்டுவது ரொமான்ஸ் உணர்வை அதிகரிக்கும். அதுவும் ஒற்றை ரோஜாப்பூ ஒவ்வொரு இடமாய் தொட தொட அந்த இடத்தில் ஒவ்வொரு செல்லும் மலருமாம்.
சாக்லேட், ஐஸ்கிரீம் பிடிக்காத பெண்கள் இருக்கமாட்டார்கள். அவர்களுக்கு ஏற்ற விளையாட்டு இது. உடலின் மிக விருப்பமான இடங்களில் ஐஸ்கிரீம் அல்லது சாக்லேட் கிரீமினை பூசுங்கள். கைகளால் அல்ல சிறிய குச்சியை வைத்து மெதுவாய் கோலமிடுங்கள் உற்சாகம் அதிகரிக்கும். பின்னர் அந்த கிரீமினை மெதுவாய் சுவையுங்கள். செம டெஸ்ட் என்று நீங்களே சொல்லும் அளவிற்கு உணர்ச்சிக்குவியலாய் மாறிப்போவார் உங்கள் துணை.
இதுபோன்ற தீண்டல் விளையாட்டு சிலருக்கு பிடிக்கும், சிலருக்கு பிடிக்காது. யாருக்கு எந்த விதமான விளையாட்டு பிடிக்குமோ அதை கேட்டு அதில் கற்பனையையும், கலை நயத்தையும் புகுத்துங்கள். அப்புறம் என்ன உங்களுக்கான நேரம் பொன்னான நேரமாகும் என்கின்றனர் நிபுணர்கள்.

விராத் கோஹ்லியும் அஸ்வினும் அபாரமாக ஆடியதால் வெற்றி கிடைத்தது: கேப்டன் டோணி பாராட்டு


பெங்களூர்: நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா வெற்றி பெற விராத் கோஹ்லியின் பேட்டிங்கும், சுழல்பந்துவீச்சாளர் அஸ்வினின் பந்துவீச்சும் முக்கிய காரணமாக இருந்ததாக இந்திய கேப்டன் டோணி தெரிவித்துள்ளார்.

Virat Kohli Ashwin Showed Excellent Game
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. இதில் 2 போட்டிகளிலும் இந்திய வெற்றி பெற்று, டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஹைதராபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய சுழல்பந்துவீச்சாளர் அஸ்வின் சிறப்பாக பந்துவீசி 12 விக்கெட்களை வீழ்த்தினார். அதேபோல பெங்களூரில் நேற்று முடிவடைந்த 2வது டெஸ்ட் போட்டியில் மொத்தம் 6 விக்கெட்களை வீழ்த்தினார்.
நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பேட்டிங் செய்த விராத் கோஹ்லி, 1 சதம் மற்றும் 1 அரைசதம் அடித்தார். இதன்மூலம் இந்திய அணியின் வெற்றி எளிதானது.
இந்த நிலையில் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற்ற நிலையில், இந்திய அணியின் வெற்றிக்கு விராத் கோஹ்லி மற்றும் அஸ்வினின் ஆட்டம் முக்கிய காரணமாக இருந்ததாக இந்திய கேப்டன் டோணி தெரிவித்துள்ளார்.


இது குறித்து அவர் கூறியதாவது,
விராத் கோஹ்லி சிறப்பாக பேட்டிங் செய்தார். கிரிக்கெட் போட்டியில் நெருக்கடியை தவிர்க்க இரு வழிமுறைகள் உள்ளன. போட்டியில் உள்ள சாவலை எதிர்த்து போராடுவது ஒரு முறை. போட்டியில் இருந்து விடுவித்து கொள்வது இன்னொரு முறை. இதில் நெருக்கடியான சூழ்நிலையில் எதிர்த்து போராடிய விராத் கோஹ்லி சிறப்பாக பேட்டிங் செய்தார்.
அதேபோல பந்துவீச்சில் அஸ்வினும், ஓஜாவும் இணைந்து செயல்பட்டனர். இந்த ஜோடிக்கு வேகப்பந்துவீச்சாளர்களான ஜாகிர்கான் மற்றும் உமேஷ் யாதவ்வும் தகுந்த ஒத்துழைப்பு அளித்தனர். ஆடுகளத்தில் நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் நிலைத்து நின்று ஆட முயன்றனர். ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள் விரைவாக விக்கெட்களை வீழ்த்தினர். முக்கியமாக இந்திய சுழல்பந்துவீச்சு சிறப்பாக இருந்தது என்றார்.

இளவரசி கேட் மிடில்டனிடம் கை குலுக்க மறுத்த ஈரான் பாராலிம்பிக் வீரர்!


லண்டன்: லண்டன் பாராலிம்பிக் போட்டியின்போது வட்டு எறிதல் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற ஈரான் வீரர் மெஹராத் கரம் ஜடே, பதக்கத்தைக் கொடுத்த இளவரசி கேட் மிடில்டனிடம் கை குலுக்க மறுத்தார். தங்களது நாட்டுக் கலாச்சாரப்படி அறிமுகம் இல்லாத பெண்ணைத் தொடக் கூடாது என்பதால் இவ்வாறு கை குலுக்க மறுத்ததாக பின்னர் ஈரானியர்கள் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
 Iranian Athlete Refuses Shake Duchess Of Cambridge


அதேசமயம், ஈரானிய வீரர்கள் கை குலுக்க மாட்டார்கள், எனவே அதை எதிர்பார்க்க வேண்டாம் என்று முன்கூட்டியே போட்டி அமைப்பாளர்கள் கேட் மிடில்டனுக்கு அறிவுறுத்தியிருந்ததால் அவர் ஏமாற்றமடையவில்லையாம்.

லண்டனில் தற்போது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. அதில் ஆடவர் வட்டு எறிதல் போட்டியில் இங்கிலாந்து வீரர் அலெட் டேவிஸ் தங்கத்தையும், ஈரான் வீரர் மெஹராத் வெள்ளியையும், சீன வீரர் லெஷாங் வாங் வெண்கலத்தையும் வென்றனர்.

பதக்கங்களை இளவரசர் வில்லியமின் மனைவியான கேட் மிடில்டன் வழங்கினார். முதலில் வெண்கலப் பதக்கத்தைக் கொடுத்த அவர் சீன வீரருடன் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தார். அடுத்து ஈரான் வீரரிடம் வந்தார். அப்போது கேட் மிடில்டனுக்கு ஈரான் வீரர் மெஹராத் கை குலுக்கவில்லை. மாறாக கைகளைத் தட்டியபடி நின்றார். மேலும் கைகளை தனது மார்புக்கு அருகே வைத்தபடி, இளவரசிக்கு மரியாதை செலுத்தும் வகையில் லேசாக குணிந்தபடி நின்றார். இதையடுத்து அவருக்கு வெள்ளிப் பதக்கத்தை சிரித்தபடி அணிவித்தார் கேட்.

ஈரான் கலாச்சாரப்படி அறிமுகம் இல்லாத ஆணும், பெண்ணும் உடல் ரீதியாக தொட்டுக் கொல்லக் கூடாது என்பதால், கேட் மிடில்டனுக்கு மெஹராத் கை குலுக்கவில்லையாம். மேலும் இந்த பழக்க வழக்கம் குறித்து ஏற்கனவே கேட் மிடில்டனுக்கு கூறப்பட்டிருந்ததால் அவரும் கை கொடுக்கவில்லை.

மெஹராத் மட்டுமல்ல, போட்டிகளில் கலந்து கொண்டுள்ள பிற இஸ்லாமிய வீரர்களும் கூட தங்களுக்குப் பரிசு வழங்குவது பெண்களாக இருக்கும்பட்சத்தில் அவர்களிடம் கை குலுக்குவதில்லை. அதேபோல வெளியிடங்களிலும் கூட பெண்களிடம் சற்று டிஸ்டன்ஸ் பின்பற்றுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com