Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

31 மார்ச் 2009

புது மண தம்பதியர்களுக்கு மட்டும்

இந்த பதிவு புது மன தம்பதியர்களுக்கு மட்டும் ... ( அப்போ கல்யாண பசங்க பொண்ணுங்க .. கல்யாணம் ஆகி சில வருஷம் ஆன தம்பதிகள் எங்களுக்கு இல்லையா .... உள்ள வந்துடிங்க :-) படிச்சி பாருங்க... உங்க நண்பர்கள் கிட்ட பகிரிந்து கொள்ளுங்கள் ) முன்று நாள் லீவ் விட்டாங்க என்று திருச்சி போலாம் என்று வியாழன் நைட் பெங்களூர் KPN மடிவால ஆபீஸ் கிட்ட வெயிட் பண்ணிட்டு இருந்தேன் ... ரெண்டு லவ் குருவிகள் (love birds) புதுசா கல்யாணம் செஞ்ச குருவிங்க ... ஓர ஓட்டல் ஒரசல் எங்க நாடு ரோட்ல ( உனக்கு ஏன்டா காண்டு என்று கேட்பது தெரியுது ) ஓர மொக்கை கட்டி புடி என்று தங்களோட அன்பை எப்படியா வெளிப்படுத்துவது .. நான் ரொம்ப நல்லவன் நவுந்துடேன் ( நம்ப மடிங்க என்ன செய்ய ) ஆனா நிறைய பேரு ஆஆஆஆஆ வாய போலந்து பாத்துக்கிட்டு இருந்தாங்க... மக்களே நீங்க புதுசா கல்யாணம் பண்ணது தெரியுது .. அதுக்காக உங்கள் அன்பை கை புடிச்சிட்டு போறது தப்பு இல்லை.... இப்படி நடு ரோட்ல எப்படியா இப்படி... (எப்படி நம்ம ஒரு குட்சி ஐஸ் வாங்கிட்டு அத வாங்க முடியாதவன் இன்னொரு சின்ன பையன் கிட்ட காட்டி காட்டி சாப்பிட்டா எப்படி கோபம் வரும் :-) இப்படி எனக்கு இல்லை பல பேருக்கு கோபம் ) தம்பி இது என்ன வெளிநாடா ? வெளிநாட்டவர்கள் கூட இந்தியா வந்து நடு ரோட்டில் இப்படி நடந்து கிட்டு நான் பார்த்து இல்லை ... ரொம்ப சந்தோஷமான தருணம் ... ரொம்ப நாட்களுக்கு அப்பரும் பாக்கிற முதல் முறை ஒரு தழுவல் அவசியம் ... ஒரு முத்தம் கூட நல்லா இருக்கும் அது தப்பு இல்லை ... இன்னொரு முக்கியமான விஷயம் இது மாதிரி உண்மையான அன்பை அதாவது சந்தோசமாக இருக்கும் பொது ஒரு அன்பாக பிடிப்பது .. கொடுப்பது பார்பவர்களுக்கு தப்பா தெரியாது காரணம் அந்த அன்பு நம்மளையும் வந்து சேரும் அதுக்கு பதிலா ஒட்டல் ஒரசல் பின்னல் பிணைதல் ஒரு வித அருவருப்பை கொடுக்கும் உடம்பு சுகம் இல்லாத மனைவி ... அவன் மேல ஒரு தலை சாய்த்து கை பிடித்து துங்கும் பொது ஒரு குழந்தை போல அழகாய் இருக்கும் அது நம்மக்கு தப்பாக தெரியாது .. நம்ம அமீர் படத்துல சூரியா சொல்லுவாரே அந்த டயலாக் தான் நியாபகம் வந்தது டிப்ஸ்
  1. கல்யாணம் அனா முதல் இருபது நாட்கள் அல்லது முதல் மாசத்துக்குள் தேன் நிலவு செல்லுங்கள். ( வேலை வேலை என்று தள்ளி போட வேண்டாம் அது ஒரு கல்லூரி பருவ நினைவுகளை போல நல்ல நினைவுகளை தரும் உங்கள் அன்பை மேலும் பலப்படும் நல்லா புரிதல் கொடுக்கும் )
  2. சில பேரு கும்பல பிசினிக் போல கிளம்புவாங்க .. அப்படி ஏதும் காமெடி பண்ணாதிங்க ..
  3. உங்க நண்பர்களை ஒரு தேன் நிலவு டூர் பாக்கேஜ கிபிட்ட கொடுக்க சொல்லுங்க ( எங்க பிரிஎண்ட்ஸ் எல்லாரும் அப்படி தான் கொடுத்தோம் )
  4. இருவரும் ஒரு குழந்தையை போல் இருங்க ..
  5. அப்போ அப்போ சண்டை வரணும் வந்த தான் அழகு (அதுக்கு வேணும்னே நம்ம WWF wrestler மாதிரி சண்டை போட்டு காமெடி பண்ணாதிங்க )ஆனா சண்டை வந்த உடனே சமாதனம் அயுடனும் ... சும்மா ஈகோ வச்சிக்கிட்டு நீ பெருசா நான் பெருசா நான் யாரு தெரியுமுல ( நீ யார இருந்தா தான் என்ன ? அம்பானியா இருந்தாலும் மகனே நீ காமப்றோமிஸ் அகனும் இல்லை என்றால் ஆப்பு தான்) ஈகோவோட இருந்து வாழ்க்கைய காலி பண்ணிடாதிங்க
  6. இது உங்க குடும்பம் உங்க மனைவி ... சோ உங்க அன்பை எப்படி வேணும் நாளும் நாலு செவுதுக்குள்ள அதுவும் உங்க வீட்டு குள்ள காட்டுங்க ..
  7. தினம் ஒரு ஐ லவ் யு சொல்லுங்க.... (ஆனா ஒரே பொண்ணுக்கிட்ட சொல்லுங்க அதாங்க உங்க மனைவிக்கிட்ட மட்டும் சொல்லுங்க)
  8. தினம் ஒரு முத்தம் மினிமம் ( அதுக்கு மேல அவன் அவன் சாமர்த்தியம் )
  9. உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷியத்தை கூட நகைச்சுவையை சொல்லணும்.எடுத்துக்காட்டு சொல்லியே அகனும் நிறைய தட்திகளுக்கு புரியாது ஹி ஹி ... அன்றைக்கு உங்க மனைவி சாம்பார் வச்சி ரொம்ப மோசமா இருக்கும். சாப்பிடும் பொது சூப்பர் என்று சொல்லி முழசா சாப்டுறது பயங்கர முட்டாள் தனம் ஹி ஹி. சாப்பிடும் பொது உனக்கு ஒரு வாய் ஊட்டி விடனும் இங்க வா என்று சொல்லி உட்டி பாருங்க எவ்வளவு சூப்பர் சாம்பார் என்று அவர்களே தெரியும் ... அப்படியும் தெரியனால் உங்க விதி அவ்வளவு தான்
  10. அடிக்கடி ஒரு குழந்தையை போல் கொஞ்சுங்க ...
  11. கல்யாணத்துக்கு முன்னாடி நிறய பேசுவோம் அப்புறம் கண்டுக்க மாட்டோம் என்று ஒரு புகார் வரும் முன்னாடியே .. உனக்கு நம்ம எதிர்காலத்துக்கு நிறைய உழைக்கிறேன் என்று பிட் போடுங்க ...
  12. முன்னாடி மட்டும் போன்ல பேச டைம் கெடச்சுது எப்போ அதே ஆபீஸ் அதே வேலை ஆனா டைம் கெடைக்காது என்று சொல்வது எப்படி நினையம் என்று கேள்வி வரும் ... அதுக்கு முன்னாடி நீ எங்கோ இருந்தாய் உன்னிடம் பேசாமல் இருக்கா முடியாது ... ஆனா எப்போ நீ என்னுள் இருக்காய் .. என்னோடு இருக்காய் ... வேணும் நான் எனோட கண்ணா உத்து பாரு என்று கண்ணா கட்டுங்க .. நீங்க சொல்றது பொய் என்று அவர்களுக்கே தெரிஞ்சாலும் அதை ரசிப்பார்கள்
  13. நிறையா அவங்க பேசுறத கேளுங்க ... அப்பரும் நீங்க பேசுங்க ...
  14. ரொம்ப சுதந்திரம் கொடுங்க .. எத பத்தி வேண்டுமானாலும் அவங்க உங்க கிட்ட சொல்லும்படி வைத்துக் கொள்ளுங்கள்
  15. சந்தேகம் வேண்டாம் ... நம்பிக்கை தான் மிக பெரிய சொத்து நீங்களே உங்க மனைவி புருசன நம்பாமல் யாரு தான் நம்புவாங்க
  16. அந்த நம்பிக்கைக்கு உரியவர நடந்துக்கோங்க
  17. நிறையா விட்டுகொடுங்க ..
  18. உங்க அம்மா அப்பா உங்க பார்ட்நர் கவனிக்கணும் என்றால் உங்க மாமனார் மாமியார் அப்பா அம்மா மாதிரி பாத்துக்கோங்க ... அப்போ அப்போ ஒரு டிரஸ் எடுத்து கொடுப்பது ஒரு நலம் விசாரிப்பது என்று இருந்தால் .. சூப்பர்
  19. எதையும் நகைச்சுவையை சொல்லுங்க ... சீரியஸ் மேட்டர் கூட எப்படி சொன்ன அடையும் ( அதுக்கு உங்க அப்பாக்கு நெஞ்சு வலியமே என்று காமெடியை சொல்லி அடிவாங்கினால் நான் பொறுப்பல்ல )
  20. நீ தான் இந்த உலகத்திலயே அழகு :-) என்று சொலுங்க ( அது மிக பெரிய பொய் என்றாலும் ரசிப்பார்கள் )
  21. மத்தவங்க முன்னாடி உங்க மனைவியை வீட்டு கொடுக்கதிங்க ..
  22. அப்போ அப்போ ஹெல்ப் பன்னுங்க
  23. அப்போ அப்போ ஒரு அச்சிரயம் கொடுங்க ... ( கிபிட் பிலோவேர்ஸ் ...)
  24. முக்கியமான தினங்களை மறந்து காமெடி பண்ணிடாதிங்க ..
  25. கல்யாணத்துக்கு முன்னாடி உங்க மனவியோ புருஷன எப்படி இருந்து இருந்தாலும் பரவா இல்லை எத்துனை பாய் பிரிஎண்ட்ஸ் கேர்ள் பிரெண்ட்ஸ் இருந்து இருந்தாலும் ஓகே ஆனா அதுக்கு அப்புறம் ஏமாத்தக்கூடாது உனக்கு நான் .. எனக்கு நீ என்று தெளிவா இருங்க ( எப்படி இருந்தா பயம் இல்லை யாரும் ஒன்னு பண்ண முடியாது டிரன்ப்பறேன்சி வேணும் )..
நான் காலேஜ் படிக்கும் போதும் சரி ஸ்கூல் படிக்கும் போதும் சரி என்னோட தம்பி விஜய்கிட்ட எல்லாம் சொல்லிடுவேன் பிட் அடிச்சி மாட்டினாலும் .. பிகுரே பார்த்து சைட் அடிச்சாலும் ... எவனாச்சும் போட்டு கொடுக்க வருவான் டேய் விஜய் உங்க அண்ணன் ஒரு பொண்ண சைட் அடிக்கிறான் அதுக்கு எனோட தம்பி .. அந்த பொண்ணு பேரு இதுதானே .. என்று சொல்லி வந்தவனுக்கு முக்கு ஒடஞ்சு போய்டும் ... என இது மாதிரி பல பேரு குடும்பத்த கெடுக்க என்று வருவாங்க ... முக்கியமா சொந்தம் பந்தம் .. அதுக்கு நீங்க டிரன்ச்பறேண்ட இருந்தா எனக்கு தெரியும், இடாத காலி செய் என்று சொல்லலாம் பாரு :-) ( எவனும் பிளாக் மெயில் பண்ண முடியாது ) இப்போதிக்கு இது போதும் அப்புறம் பார்ப்போம் :-) சந்தோசமா சக்கரையை போல் இனிக்கடும் உங்கள் வாழ்க்கை - சுரேஷ் கடைசி பாயிண்ட் புதுசா கல்யாணம் ஆனவர்களுக்கு இந்த பதிவை மெயில் அல்லது பார்வர்ட் செய்யுங்க
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com