Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

06 ஆகஸ்ட் 2011

வடிவேலு போட்ட குண்டு : விழிபிதுங்கும் சிங்கமுத்து!!

நிலமோசடியில் தனக்கு பங்கு இல்லையென்றும்; சிங்கமுத்துதான் மோசடிக்கு காரணம் என்றும் மறைமுகமாக பேசத் தொடங்கியிருக்கிறார் நடிகர் வடிவேலு. இதனால் எங்கே தன்னை மாட்டி விட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில் விழிபிதுங்கி நிற்கிறார் சிங்கமுத்து. நடிகர் வடிவேலு மீது சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ராஜேஷ்தாசிடம் ஓய்வு பெற்ற வங்கி உதவி பொது மேலாளரான அசோக் நகரைச் சேர்ந்த பழனியப்பன் சமீபத்தில் நிலமோசடி புகார் அளித்தது நினைவிருக்கலாம்.

இந்த புகாருக்கு பதில் அளித்த வடிவேலு, தான் எந்தத் தவறுமே செய்யவில்லை என்று கூறியதுடன், சிங்கமுத்து மீது மறைமுகமாக குற்றம் சாட்டி வருகிறார். வடிவேலுவின் குற்றச்சாட்டுக்கு சிங்கமுத்து சூடான பதில் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், வடிவேலுவும் நானும் சண்டை இல்லாமல் ஒற்றுமையாக இருந்தபோது எனது மேற்பார்வையில் நிறைய நிலங்களை வாங்கினார். இப்படி வாங்கும் நிலங்களை நேரடியாக அவரது பெயரில் பத்திரப்பதிவு செய்ய மாட்டார்.

வருமான வரி சிக்கல் வரும் என்பதால் என் பெயரிலும், வேண்டியவர்கள் பெயரிலும் பவர் வாங்கி வைத்துக் கொள்வார். பிறகு எங்களை அழைத்து அவர் குறிப்பிடும் நபர் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொள்வார். இது போல் வாங்கிய இடங்களில் இதுவும் ஒன்று. அதில் இப்படி வில்லங்கம் இருப்பது எனக்கு தெரியாது. அவர் தான் அந்த நில உரிமையாளர் வீட்டுக்கு தினமும் சென்று பேசி குறைந்த விலைக்கு வாங்கினார். இதில் எனக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்த வழக்கில் என்னை பலிகடா ஆக்க வடிவேலு முயற்சிக்கிறார். அவர் மீதான குற்றங்களை ஆதாரத்துடன் வெளியிடுவேன், என்று கூறியுள்ளார்.

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com