Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

05 மே 2009

கணிணியில் இலவச டைரி

கணிணியில் இலவச டைரி

நாம் கணிணியில் புக்மார்க் குறித்து வைப்போம்.

சில நாள் கழித்து அது எதனுடைய புக்மார்க்-

அதனால் என்ன பயன் என மீண்டும் அந்த

புக்மார்க்கை நீங்கள் இணையத்தில் சென்றே

அறிந்து கொள்ள முடியும். உங்கள் நண்பர்

நீங்கள் குறித்துவைத்துள்ள புக்மார்க்கின்

இணைய முகவரி(URL) கேட்கின்றார். அந்த

சமயம் உங்கள் கணிணியில் இணைய இணைப்பு

துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பாது என்ன

செய்வீர்கள். அந்த மாதிரியான சமயங்களில்

இந்த கணிணி டைரி நமக்கு உதவுகின்றது.

நாம் நமது கணிணியிலேயே குறிப்புகளை

-இணைய முகவரிகளைநமது விருப்பமான

புக் மார்க்குகளை -சாப்ட்வேர் களின்

சீரியல் எண்களை எழுதிவைக்க இந்த டைரியை

பயன்படுத்தலாம். இணைய இணைப்பு

இல்லாத சமயங்களிலும் நாம் இந்த புக் மார்க்கை

பயன் படுத்தலாம்.முதலில் நமது கணிணியில்

இந்த டைரியை எப்படி வெளியே எடுத்துவரலாம்

என பார்க்கலாம்.முதலில் நீங்கள் டெக்ஸ்டாப்பின்

வெற்றிடத்தில் மவுஸால் கிளிக் செய்யுங்கள்.

உங்களுக்கு இந்தமாதிரி ஒப்பன் ஆகும்.

அதில் உள்ள New என்கிறஇடத்தில் உங்கள் மவுஸின்

கர்சரை எடுத்துச்சென்றால் உங்களுக்கு

இந்த சரளம் ஓப்பன் ஆகும்.

அதில் உள்ள Text Document –

மவுஸால் கிளிக் செய்யுங்கள். உங்களுக்கான

Text Document ஆனது ஓப்பன் ஆகி

டெக்ஸ்டாப்பில் அமர்ந்துவிடும். பின் அதை

ரைட் கிளிக் செய்து Rename-ல்

உங்கள் விருப்பமான பெயரை தட்டச்சு

செய்யுங்கள்.நீங்கள் சூட்டிய பெயருடன்

Text Document காட்சியளிக்கும். இதை

ஓப்பன்செய்யுங்கள். உங்களுக்கு இந்த

சாரளம் ஓப்பன் ஆகும்.

சரி அதில் அன்றைய

தேதியை எப்படி எடுத்து வருவது. நீங்கள்

உங்கள் Key-Board –ல் F5 அழுத்துங்கள்.

உங்கள் Text Document –ல் அன்றைய தேதி

வந்துவிடும். நீங்கள் உங்கள் புக் மார்க்

இணைய முகவரியை அதில் பேஸ்ட்

செய்யுங்கள்.அத்துடன் அந்த இணையத்தை

பற்றியும் குறிப்புகளை யும் ஆங்கிலத்தில்

அல்லது தமிழில் தட்டச்சு செய்துவிடுங்கள்.

உங்கள் இணைய இணைப்பு இல்லாத

சமயங்களிலும் நீங்கள் சுலபமாக உங்கள்

புக்மார்க்கை யும்குறிப்புகளையும்

பார்க்கலாம். ஒருமுறை பயன்படுத்திப்

பாருங்கள். மறக்காமல் வாக்களியுங்கள்.

வாழ்க வளமுடன்,

வேலன்.

இலவச டைரியை இதுவரையில்
புரட்டியவர்கள் web counter

வலைப் பூவில் உதிரிப் பூக்கள்.

எந்த மாதிரியான சந்தர்பங்களில் நாம் நமது

கம் யூட்டரை Format செய்யவேண்டும்?

1.விண் டாஸ் ஆபரேட்டிங் சிஸ்டத்தில்

பைல்கள் கரப்ட்(Corrupt) ஆகும் சமயம்.

2.தவறுதலாக விண்டா பைல்களை நாம்

அழிந்து விடும் சமயம்.

3.சாப்ட்வேர்களை முறையாக Uninstall

செய்யாமல் அதனால் பிழை ஏற்பட்டிருந்தால்.

4.சிஸ்டம் ரீ-ஸ்டார் செய்தும் கணிணி செயல்

படாத சமயம்.

5. வைரஸ்ஸால் பாதிக்கப்பட்டு எந்த விதமான

ஆன்டிவைரஸாலும் அதை நீக்க முடியாத சமயம்.

6.நமது கணிணியில் ஸ்பைவேர் தாக்கிய சமயம்.

7.Registry-ல் பிழை ஏற்பட்டு இருக்கும் சமயம்.

8. வழக்கத்திற்கு மாறாக கணிணி மிகவும்

மெதுவாக செயல்படும் சமயம்.

மேற்கண்ட 8 பிழைகள் உங்கள் கணிணியில்

ஏற்பட்டால் நீங்கள் தயங்காமல் கணிணியை

Format செய்யலாம்.

(பின்குறிப்பு:- இணைய இணைப்பில் ஏற்பட்ட

பழுது காரணமாகவும்-எனது சகோதரியின்

துணைவர் அகால மரணம் காரணமாகவும்

இடையில் என்னால் பதிவிட முடியவில்லை.

தவிர ஆங்கில பாடம் தொடர்ந்து ஞாயிற்றுக்

கிழமைகளில் வெளியிட வேண்டும் என்ற

காரணத்தால் இணைய இணைப்பு இல்லாத

போதும் தன்னுடைய இணைய இணைப்பு மூலம்

ஆங்கில் பாடத்தின் பதிவுகளை பதிவிட

உதவி செய்த நண்பர்

ஆனந்த்துக்கு இந்த பதிவின் மூலம்

நன்றியை தெரிவித்துக்

கொள்கின்றேன்.

நன்றி....)

அப்படியா பழகினாரு சிம்பு....?

சிம்புவை பற்றி அதிகம் சொல்ல தேவையில்லை! ஏன்னா, 'எத்திசையும் இன்பமுற' அவரது புகழ் ஒலிப்பதால், துபாய் மேட்டரை மட்டும் சொல்லிவிட்டு 'ஜுட்' விடுவது உத்தமம்! "டேய் மச்சி, டேய் மாமூ"ன்னுதான் ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கிட்டாங்க. "இவ்ளோ து£ரம் திக் பிரண்ட்ஸா இருக்காங்களே, அத்தனை பேரும் ஒரு படத்திலே நடிக்கிறேன்னு சம்மதிச்சு ஒருநாள் டேட்ஸ் கொடுத்தா கூட போதும். நான் கோடீஸ்வரன்"னாரு கூட வந்த ஒருத்தர். "வென்னீரை குடிச்சமா, விரதத்தை முடிச்சமான்னு இல்லாம இதென்ன வெட்டிப்பேச்சு? ஆடப் போறது அவங்க வேலை. கூடப் போறது நம்ம வேலை. இதுல எதுக்கு புரட்யூசர் கனவு காண்றீங்க. இந்த குரூப் இப்படியே சந்தோசமா திரும்பி வந்தா, தெரு முனை பிள்ளையாருக்கு சிதறு தேங்காயே ஒடைக்கலாம். வேணும்னா பாருங்க" என்றேன் என் ஞான திருஷ்டிய நம்பி! சென்னையிலேர்ந்து புறப்படுற கடைசி நிமிஷம் வரைக்கும் அருண் விஜய்க்கு விசா கிடைக்கலே. அதனால் அவரை அடுத்த பிளைட்ல வரச்சொல்லிட்டு எங்களை ஏத்தினாங்க நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள். மறுநாள் காலை துபாய் வந்த அருண் விஜய்க்கு விசா ஏற்பாடு செஞ்சு வெளியே கொண்டு வருவதில் தொடர் சிக்கல். அதனால விமான நிலையத்திற்குள்ளேயே உட்கார வச்சு, வெளியே விசாவுக்கு துரிதப்படுத்திக்கிட்டு இருந்தாங்க. காலையிலிருந்து குளிக்காம, சாப்பிடாம கடும் கோபத்திலிருந்தாரு அருண். ஒருவழியா அவரை வெளியே கொண்டு வர இரவு எட்டாயிருச்சு. அப்படியே மறுநாள் கிரிக்கெட் கிரவுண்டுக்கு போயாச்சு எல்லாரும். ஆட்டம் துவங்கியது. சினிமாவிலேதான் பறப்பதும், பாயறதும்! நிஜத்தில் ஒரு பந்தை அடிப்பதற்குள் டவுசராகிப் போனார்கள் நம்ம ஸ்டார்கள். சென்னையிலே தோற்றுப் போன வெறியிலே நல்லாவே பிராக்டீஸ் பண்ணிட்டு வந்திருந்தாங்க தெலுங்கு நடிகருங்க. ஒவ்வொரு பந்தும், ஸ்கார்பியோ வேகத்திலே பறக்க, தடுக்கவும் முடியாம, பிடிக்கவும் முடியாம ஒவ்வொருத்தர் மூக்கும் கோவத்தில் கிரிக்கெட் பால் கலருக்கு போயிருச்சு. இந்த கேப்லதான் சாத்தான் சட்னு நுழைச்சிருப்பான் போல. ஒரு கேட்சை விட்டுட்டாரு அருண் விஜய். பக்கத்திலே நின்ன சிம்பு, "ங்கோ..." ன்னு அவரை பார்த்து கோவப்பட, அடுத்த சில மணி நேரத்தில் அதற்கான பலனை அத்தனை பேருமே அறுவடை செஞ்சோம். மேட்சில் படுதோல்வி. இடையில் ஒருமுறை ட்ரிங்க்ஸ் பிரேக்கில் கேப்டன் அப்பாஸ் (தலைவா கோவிச்சுக்காதீங்க. இவரு ஒரு நாள் முதல்வர் மாதிரி 'ஒருநாள் கேப்டன்') சரியா விளையாடலேன்னு எல்லாரையும் தாறுமாறா திட்ட, "நானே போனாப் போவுதுன்னு வந்திருக்கேன். இந்த திட்ற வேலையெல்லாம் எங்கிட்ட வேணாம்"னு எகிறினார் சிம்பு. அதை தொடர்ந்துதான் இந்த ங்கோ... சமாச்சாரம். தோற்றுப்போன ஆத்திரத்தில் உள்ளே வந்த சிம்புவை ஜன்னல் ஓரமாக நின்ற ரசிகர் ஒருத்தரு, "தலைவா... இப்பிடி தமிழன் மானத்தையே வாங்கிட்டீங்களே"ன்னாரு. அவ்வளவுதான், "டேய்... ங்கொ----ள... யாருகிட்டே? புட்றா அவனை"ன்னு விரட்டினாரு சிம்பு. அதற்குள்ளே ரசிகன் எஸ்கேப். ரசிகன் ஓடினாலும், அவன் வேலையை இப்போ அருண் விஜய் எடுத்துகிட்டாரு. சிம்புவிடம் வந்து, "டேய், என்னடா சொன்ன என்னைய பார்த்து? யாரை பார்த்து ங்கே... ங்கற? அடிச்சு மூஞ்சை பேத்துருவேன்"னு கையை து£க்கிக் கொண்டு பாய, "டேய் ஆம்பிளையா இருந்தா கைய வச்சு பாருடா"ன்னு துள்ள ஆரம்பிச்சாரு சிம்பு. வார்த்தை தடித்தது. விலக்க வேண்டிய நடிகருங்க என்ன காரணத்தாலோ சற்று பின்வாங்கினாங்க. நல்லவேளையாக ஸ்ரீகாந்த் ஓடிவந்து "மாப்ளே, ஏண்டா இப்படி சண்டை போடுறீங்க? விடுங்கடா"ன்னு கெஞ்ச ஆரம்பிச்சாரு. இப்போ இன்னும் வேகமாக ரெண்டு பேரும் எகிற, எல்லாரும் சேர்ந்து ஒருவழியா புடிச்சு அமுக்கினாங்க இரண்டு பேரையும். அப்போதான் சிம்பு அந்த தன்னம்பிக்கை ஸ்லோகத்தை எடுத்துவிட்டாரு. "டேய், நான் ஒரு சூப்பர் ஸ்டாருங்கறதையும் மறந்து உங்களோட ஆட வந்தேன்ல. என் புத்திய..." என்று ஆவேசப்பட்டார். "போடாங்... சினிமாங்கிறது யாரை வேணும்னாலும் மேலே து£க்கும். கீழே இறக்கும். நானும் மேலே வருவேண்டா. இப்பிடியே இருப்பேன்னு பார்க்காதே"ன்னு எகிற ஆரம்பிச்சாரு அருண். இடையிலே தடால்னு குறுக்கே விழுந்த ஆர்யா, "டேய் மச்சான் விடுங்கடா"ன்னு கெஞ்ச, "இல்லடா. நான் ஒரு சூப்பர் ஸ்டாருன்னு நினைச்சாடா உங்க கூடெல்லாம் பழகுறேன்? எவ்வளவு எளிமையா பாகுபாடு பார்க்காம பழகுறேன். அவன் அப்படி சொல்றானே"ன்னாரு மறுபடியும். ஒருவழியா அழுகையும் ஆத்திரமுமா அங்கிருந்து வேன்லே ரூமுக்கு கிளம்பினாங்க நம்ம ஸ்டார்ஸ். வண்டி போயிட்டு இருக்கும்போதே விஷால் அருணிடமும், ஆர்யா சிம்புவிடமும் சமாதானம் பேசினாங்க. அவங்க ரெண்டு பேரோட நோக்கமும் ஹோட்டலுக்கு போறதுக்குள்ளே இவங்களை சமாதானப்படுத்திடனும். முதலில் "விடுங்கடா..."ன்னு ஒதுங்கிப் போன ரெண்டு பேரும் கை குலுக்க சம்மதிச்சாங்க. "என்னை மன்னிச்சிருடா மாப்ளே. நான்தான் தப்பா பேசிட்டேன்"னாரு சிம்பு. "சரி, விட்றா. நான் கூட அவ்வளவு கோவப்பட்டு ஒன்னை அடிக்க வந்திருக்க கூடாது"ன்னாரு அருண் விஜய். சண்டை முடிஞ்சுதுன்னு எல்லாரும் நிம்மதியாக சிரிக்க ஆரம்பிச்சோம். வண்டி போய் கொண்டிருக்க திடீர்னு அருணிடம், "மாப்ளே... என்னைக்காவது நான் சூப்பர் ஸ்டாரு, நீ சாதாரண நடிகன்னு நினைச்சு பழகியிருக்கேனா?"ன்னு மறுபடியும் ஆரம்பிச்சாரு சிம்பு. "டேய் ஆரம்பிச்சுட்டாண்டா"ன்னு ஆர்யா, பரத் ரெண்டு பேரும் சத்தம் போட்டு சிரிக்க ஆரம்பிக்க, கூடவே சிம்புவும் அருணும் சிரிச்சாங்களே பார்க்கலாம்! அதுக்கு முன்னாடி அப்பிடி ஒரு சண்டை அங்கே நடந்திச்சு...?

02 மே 2009

உலகின் முதலாவது இணையத்தளம்

உலகின் முதலாவது இணையத்தளம் தோன்றி நேற்றோடு பதினாறு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. 1993ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் திகதி உலகின் மிகப்பெரிய பௌதிக ஆய்வுகூடமான CERN இலேயே இந்த உலகின் முதலாவது இணையப்பக்கம் தோற்றம் பெற்றது.
இதுதான் அந்த இணையப் பக்கம்
இருபது ஆண்டுகளுக்கு முன் ஒரு மார்ச் மாதத்தில் கணினி விற்பனரான Tim Berners-Lee என்பவரது முயற்சியில் இதற்கான முயற்சிகள் ஆரம்பமானது. ஒரு கிறிஸ்மஸ் தினத்தில் அதன் முதற்கட்ட வெற்றியாக ஒரு Web server உடனான முதலாவது தொடர்பாடல் மேற்கொள்ளப்பட்டது. அதன் அடுத்தடுத்த வளற்சிகளால் 1993 ஏப்ரல் இறுதியில் உதயமானது உலகின் முதலாவது இணையப்பக்கம். அது இன்னமும் W3C யில் பாதுகாக்கப்பட்டுள்ளது. இங்கே போய் அதைப் பார்த்து ஒரு ஹேப்பி பர்த்டே சொல்லிட்டு வாங்களேன்.
டிஸ்கி 1:- இப் பதிவை நேற்றே இடவேண்டும் என்று நினைத்திருந்தாலும் நேரம் கிடைக்காத காரணத்தால்(ஆமா பெரிய கலெக்டர் உத்தியோகம்) இட முடியவில்லை.
டிஸ்கி 2:- கூகில் ஆண்டவரின் புண்ணியத்தில் எனது Adsence கணக்கு அப்ரூவ் ஆகிவிட்டது. ஆனால் அதில் பொதுசேவை விளம்பரங்கள் மட்டுமே தெரிகின்றன. விளம்பரங்கள் தெரியச் செய்வது எப்படி என யாருக்காவது தெரிந்தால் பின்னூட்டத்தில் அல்லது மின்னஞ்சலினூடு (subankanb@gmail.com) தெரியப்படுத்தி என்னையும் ஒரு சில லட்சங்கள் இல்லாவிட்டாலும் சில ஆயிரங்கள், அட சில நூறுக்களாவது சம்பாதிக்க வையுங்களேன்.

பிரஷாந்த் - கிரகலட்சுமி திருமணம் செல்லாது: குடும்ப கோர்ட் அதிரடி தீர்ப்பு

சென்னை: வேணு பிரசாத்தை முதல் திருமணம் செய்ததை மறைத்து பிரஷாந்த்தை கிரகலட்சுமி திருமணம் செய்து கொண்டது உறுதியாகியுள்ளது. எனவே பிரஷாந்த் - கிரகலட்சுமி திருமணம் செல்லாது. திருமணமே செல்லாது என்பதால் குழந்தைக்கு பிரஷாந்த் உரிமை கோர முடியாது என சென்னை குடும்ப நல நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. நடிகர் பிரஷாந்த்துக்கும், சென்னையைச் சேர்ந்த கிரகலட்சுமிக்கும் இடையே திருமணம் நடந்தது. இருவருக்கும் குழந்தையும் பிறந்தது. குழந்தை பெற தாய் வீட்டுக்குச் சென்ற கிரகலட்சுமி பிரஷாந்த் வீட்டுக்குத் திரும்ப மறுத்ததால் குடும்ப நல நீதிமன்றத்தை அணுகினார் பிரஷாந்த். மனைவியை தன்னுடன் சேர்த்து வைக்கக் கோரி அவர் மனு செய்தார். இதுதொடர்பா விசாரணை நடந்து கொண்டிருந்த நிலையில் திடீர் திருப்பமாக, தனது மனைவிக்கு ஏற்கனவே வேணு பிரசாத் என்பவருடன் திருமணம் நடந்து விட்டதாகவும், அதை மறைத்து தன்னை திருமணம் செய்து கொண்டுள்ளார் என்றும் கூறி புதிய மனுவைத் தாக்கல் செய்தார் பிரஷாந்த். முதல் திருமணத்தை மறைத்ததோடு, அவரை விவாகரத்து செய்யாமலும் உள்ளார் கிரகலட்சுமி. எனவே எனக்கும், அவருக்கும் இடையே நடந்த திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டும், கிரகலட்சுமியிடம் உள்ள குழந்தையை என்னிடம் ஒப்படைக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார் பிரஷாந்த். இந்த வழக்கு விசாரணை முடிந்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டது. நீதிபதி அளித்த தீர்ப்பில்... வேணு பிரசாத்தை கிரகலட்சுமி திருமணம் செய்து கொண்டது ஆதாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதை மறைத்து பிரஷாந்த்தை கிரகலட்சுமி திருமணம் செய்து கொண்டுள்ளார் என்பதும் நிரூபணமாகியுள்ளது. எனவே பிரஷாந்த் - கிரகலட்சுமி திருமணம் செல்லாது. திருமணமே செல்லாது என்று ஆகி விட்டதால் குழந்தைக்கு பிரஷாந்த் உரிமை கோர முடியாது. குழந்தை கிரகலட்சுமியிடமே வசிக்கும். திருமணம் செல்லாது என்று ஆகி விட்டதால் கிரகலட்சுமியின் விவாகரத்து கோரும் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த நிலையில் கிரகலட்சுமியிடமிருந்து விவாகரத்து கோரி வேணு பிரசாத் தாக்கல் செய்த மனு இன்னும் குடும்ப நல நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தமிழன் என்பது ஒரு தகுதியில்லை! - கமல்ஹாசன்

மிழன் என்பது ஒரு தகுதியோ ஏணியோ அல்ல…அது ஜஸ்ட் ஒரு அடையாளம்தான். திறமை மட்டுமே பேசும். அடையாளம் திறமையோடு ஒட்டிக் கொண்டு வந்துவிடும், என்கிறார் நடிகர் கமல்ஹாசன்.

தனது அடுத்த வெளியீடான உன்னைப்போல் ஒருவன் படத்தை யுடிவி நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறார் கமல். மலையாளத்தின் முன்னணி நடிகர் மோகன்லாலுடன் முதல்முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார் கமல். kamal1

இந்தப் படத்தின் முறையான அறிமுக விழாவை வெள்ளிக்கிழமை நடத்திய கமல், படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள் இயக்குநர் சக்ரி, எழுத்தாளர் ஈரா முருகன் (திரைக்கதை - வசனம்), கவிஞர் மனுஷ்யபுத்திரன் (பாடலாசிரியர்) ஆகியோரை அறிமுகப்படுத்தினார்.

பின்னர் கமல் பேசியதாவது:

இந்தப் படத்தின் கதை ‘எ வெட்னஸ்டே’ என்ற இந்திப் படத்தினுடையதுதான். ஆனால் நல்ல கதையை எங்கிருந்து வேண்டுமானாலும் பெறலாம். அதற்கு மொழி கிடையாது.

இப்படத்தில் வசனகர்த்தாவாக இரா.முருகன், பாடல் ஆசிரியராக மனுஷ்யபுத்திரன் ஆகிய இரு இலக்கியவாதிகளை அறிமுகம் செய்கிறேன்.

இந்தப் படத்தின் இயக்குநர் சக்ரி, நான் நடித்த சலங்கை ஒலியில், தப்புத்தப்பாக போட்டோ எடுக்கும் ஒரு சிறுவனாக நடித்தார். பின்னர் ஹாலிவுட்டில் போய் சரியாக படமெடுப்பது எப்படி என்று கற்றுக் கொண்டு வந்துவிட்டார் போலும்… என் படத்துக்கே இயக்குநர் ஆகியுள்ளார்.

எழுத்தாளர் ஜெயகாந்தனின் படத் தலைப்புதான் இது. அந்த மேதைக்கு என்னால் செலுத்த முடிந்த மரியாதையாக இநதப் படம் இருக்கட்டும் என்றுதான் இந்தத் தலைப்பைச் சூட்டினோம். தலைவன் இருக்கின்றான் என்ற டைட்டிலும் எங்களிடம்தான் உள்ளது. அப்பெயரில் வேறு படம் எடுப்போம்.

ஈழத் தமிழர் நிலை வருத்தம் அளிக்கிறது. அங்கு அமைதி ஏற்பட வேண்டும். திரையுலகம் அதற்கு என்ன செய்துவிட முடியும்… இது பேசிக்கொண்டிருக்கும் விஷயமல்ல. செயலில் இறங்கி உடனடியாத நிறுத்த வேண்டிய விஷயம். அதற்கான முயற்சிகளை யார் செய்ய வேண்டுமோ அவர்கள் செய்து கொண்டு இருக்கிறார்கள். நல்ல தீர்வு வரும்.

ஈழத்தமிழர் வாழ்க்கையை படமாக எடுக்க ஆசைதான். ஆனால் அதற்கான தைரியம்தான் இல்லை. ஏன் தைரியம் இல்லை என்பதை நிருபர்களாகிய நீங்கள் உங்களுக்குள்ளேயே கேட்டுப் பாருங்கள்.

நான் தமிழன்தான். ஆனால் தமிழன் என்பது எனக்கு எந்த விதத்திலும் உதவவில்லை. தமிழன் என்பது ஒரு அடையாளம். உயர்ந்த நிலையை அடைவதற்கான தகுதியல்ல. தமிழனுக்கு மட்டுமல்ல… வேறு இனத்துக்கும்கூட அது பொருந்தும் என்றே நம்புகிறேன். திறமை இருந்து அந்தத் துறையில் ஒருவர் பளிச்சிட்டால், அடையாளம் கூடவே ஒட்டிக் கொள்ளும். நான் இதை எந்த மேடையிலும் சொல்வேன்.

இந்தக் கதையில் நடிக்க இரு பெரிய நட்சத்திரங்கள் எதற்கு என்று கேட்பதற்கு என்னிடம் பதில் இல்லை. காரணம், முதலில் நாங்கள் நடிகர்கள். உங்களால் நட்சத்திரங்களாக்கப்பட்டவர்கள். நட்சத்திரமானது எங்கள் தப்பா… நட்சத்திரங்கள் ஆகிவிட்டதால் நல்ல கதைகளைத் தேர்வு செய்து நடிக்கக் கூடாதா?

பொன்விழா படமா?

நான் திரையுலகுக்கு நடிக்க வந்தது ஆகஸ்ட் 12, 1959-ல். இது என்னுடைய திரை வாழ்க்கையின் 50 வது வருடம். உன்னைப்போல் ஒருவன் படத்தில் நானும் மோகன்லாலும் சேர்ந்து வரும் காட்சிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. வரும் மே மாதத்துக்குள் முழுமையாக முடிந்துவிடும்.

ஜூலையில் வெளியிடும் திட்டம் உள்ளது. ஆனால் நண்பர்களும், ரசிகர்களும் இந்தப் படத்தை என்னுடைய பொன்விழாப் படமாக வெளியிட விரும்புகிறார்கள். எனவே ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியிடவும் ஒரு எண்ணம் உள்ளது… பார்க்கலாம்.

ஸ்ருதி ஏன்?

ஸ்ருதியின் இசையில் எனக்கு மிகுந்த நம்பிக்கை ஏற்பட்ட பிறகுதான் அவரை இசையமைப்பாளராக இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்தோம். மகள் என்ற பாசத்தில் அல்ல. மூன்று பாடல்கள். மூன்றுமே சிறப்பாக வந்துள்ளன, என்றார் கமல்.

மோகன்லால் பெருமிதம்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தமிழ்ப்படம் நடிக்கிறார் மோகன்லால். அவர் கடைசியாகத் தோன்றிய தமிழ்ப்படம் பாப்கார்ன். அதற்குப் பிறகு அரண் என்ற படத்தில் அவர் நடித்தார். ஆனால் அது முழுமையான தமிழ்ப் படமல்ல.

பத்திரிகையாளர் சந்திப்புக்கு சென்னை வந்திருந்த மோகன்லால், பேசியதாவது:

கமல்ஹாசனின் தீவிர ரசிகன் நான். இப்போது அவருடன் இணைந்து படம் செய்வது மிகப் பெரிய கவுரமாகக் கருதுகிறேன். அவருடன் இருக்கும்போது நிறைய கற்றுக் கொள்ள முடியும்.

நல்ல கதைகள் மொழிகளைத் தாண்டியவை, இந்தப் படம் கேரளாவில் தமிழ் படமாகவே ரிலீசாகிறது.

உண்மையைச் சொல்ல வேண்டுமானால், தமிழ்ப் படங்களை மலையாளிகள் மிகவும் விரும்பிப் பார்ப்பார்கள். தமிழ்ப் படங்களில் உள்ள உணர்வுகள் அவர்களுக்கு நன்கு புரியும். அடிப்படையில் இரு மொழிகளும் ஒன்றுதான், என்றார்.

தெலுங்கில் இந்தப் படத்துக்கு ஈநாடு எனப் பெயர் சூட்டியுள்ளனர்.

பழிக்குப் பழி... காமெடிகளின் வில்லத்தனம்!

பிஎஸ் வீரப்பாவை மிஞ்சும் அளவுக்கு சத்தமாகச் சிரிக்கிறாராம் வடிவேலு... காரணம் படிக்காதவனில் தன் வேடத்தைப் பிடித்த விவேக்கை கந்தசாமியில் பழி வாங்கிவிட்டதற்காக! இதென்ன கூத்து... தனுஷ் நடித்த படிக்காதவன் படத்தில் முதலில் நடிப்பதாக இருந்தவர் வடிவேலுதான். ஆனால் இயக்குநர் சுராஜ் மற்றும் ஹீரோ தனுஷுடன் ஏற்பட்ட மோதலால் முறுக்கிக் கொண்டு போனார் வடிவேலு. சரி... யாராவது வந்து சமாதானம் செய்தால் நடிக்கலாம் என்ற நினைப்பிலிருந்த வடிவேலுவை, விவேக் மூலம் அவமானப்படுத்தினர். வடிவேலு செய்திருக்க வேண்டிய அந்த உதார் ரவுடி கேரக்டரை விவேக் செய்து பெயர் தட்டிக் கொண்டார். இப்போது வடிவேலுவின் முறை... விக்ரம் நடிப்பில் பிரமாண்டமாய் உருவாகியுள்ள கலைப்புலி தாணுவின் கந்தசாமியில் முதலில் நடிப்பதாக இருந்தவர் விவேக். ஆனால் கடைசி நேரத்தில் நிஜமான இம்சை அரசனாய் விவேக் மாறிவிட, படத்தின் மெயின் பகுதிகளைப் படமாக்கிய பிறகு, விவேக் நீக்கப்பட்டதாக அறிவித்தார் இயக்குநர் சுசி கணேசன். அவருக்குப் பதில் வடிவேலுவை ஒப்பந்தம் செய்தார்கள். வெறும் 5 நாட்களில் அட்டகாசமான காமெடிக் காட்சிகளை தனியாகப் படமாக்கிவிட்டார்களாம். 'நாங்கள் நினைத்துப் பார்க்காத புதிய பரிமாணத்தில் பின்னியிருக்கிறார் வடிவேலு...' என்று பாராட்டித் தள்ளுகிறார்கள் தாணுவும், சுசியும். படிக்காதவன் காயத்துக்கு கந்தசாமியில் மருந்து கிடைத்த சந்தோஷத்தில், 'விட்ருவோமா... நாங்களும் மதுரைதான்' என்று காலரைத் தூக்குகிறார் வடிவேலு!

ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணி 9 ரன் வித்தியாசத்தில் வெற்றி

lankasri.comகொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 139 ரன்கள் எடுத்து தோல்வியைத் தழுவியது. முதல் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. இன்றைய ஆட்டத்தில், சச்சின் தெண்டுல்கர் 34 ரன்களும் ஹர்பஜன் சிங் 6 ரன்களும் எடுத்தனர். டூமினி 52 ரன்களுடனும் ஜாகீர்கான் 2 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில், ஹோட்கே 78 ரன்கள் எடுத்து அணியின் ரன்குவிப்புக்கு பலம் சேர்த்தார். எனினும், 20 ஓவர்களின் முடிவில் அந்த அணி 139 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 9 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி தோல்வியடைந்தது.

இந்தியில் முக்கால் நிர்வாணம்; தெலுங்கில் முழு நிர்வாணம்!!

தாம்தூம்' புகழ் இந்தி நடிகை கங்கணா ரணவத் ஒரு தெலுங்குப் படத்தில் முழு நிர்வாணமாக நடிக்கிறார். இதற்காக அவருக்கு பெரும் தொகை சம்பளமாகத் தரப்பட்டுள்ளது. தமிழில் ஜெயம் ரவி ஜோடியாக தாம்தூமில் நடித்த கங்கணா, இந்தியில் முன்னணி நடிகைகளில் ஒருவர். முன்பு ராஸ் என்ற இந்திப் படத்தில் கிட்டத்தட்ட முக்கால் நிர்வாணமாக நடித்து பெரும் பரபரப்பேற்படுத்திய கங்கணா, இப்போது தெலுங்கில் முதல்முறையாக ஒரு படம் நடிக்கிறார். பிரபல இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கும் இந்தப் படத்தில், ஒரு காட்சியில் கட்டாயம் முழு நிர்வாணமாக நடிக்க வேண்டியுள்ளதாம். இந்த கண்டினுக்கு ஒப்புக் கொண்ட கங்கணா, அதற்கு பெரும் தொகையை சம்பளமாகக் கேட்க மறுபேச்சுப் பேசாமல் கொடுத்துவிட்டார் பூரி. இந்த நிர்வாணக் காட்சியில் துணை நடிகைகளையோ, வேறு மாடல்களையோ பயன்படுத்தப் போவதில்லையாம். முழுக்க முழுக்க கங்கணாதான், பிறந்த மேனியாகத் தோன்றப் போகிறாராம். சென்சார்னு ஒண்ணு இருக்கிறதே தெரியாதா...?! "தெரியும் தெரியும்... ஆனால் எப்படி எடுத்தா அவங்களால காட்சியை வெட்ட முடியாதோ, அப்படி எடுக்கப் போறோம்", என்கிறார் பூரி ஜெகன்னாத். ஒரு முடிவோடதான் கிளம்பறாங்க போல!

29 ஏப்ரல் 2009

நைட் ரைடர்ஸ் வெல்லும் வரை தென்னாப்ரிக்கா வர மாட்டேன்!- ஷாரூக் சபதம்

தனது நைட் ரைடர்ஸ் அணி மோசமாக விளையாடுவதால் நொந்து போன ஷாரூக்கான் இந்தியாவுக்கு வந்துவிட்டார். அந்த அணி ஒழுங்காக விளையாடாத வரை தென் ஆப்ரிக்காவுக்கே திரும்பமாட்டேன் என்றும் அவர் சபதமெடுத்துள்ளார். கொல்கத்தாவின் நைட் ரைடர்ஸ் அணிக்கு ஷாரூக்கான் உரிமையாளராக உள்ளார். தென்னாப்பிரிக்காவில் நடக்கும் ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா ரைடர்ஸ் அணியும் விளையாடி வருகிறது. இதுவரை நடந்த 5 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே அந்த அணி வென்றுள்ளது. மேலும் அந்த அணியிலிருந்து கங்குலி நீக்கப்பட்டதால் நிறைய சர்ச்சைகளையும் சந்தித்து வருகிறது. இதனால் வெறுத்துப் போன ஷாரூக்கான் தென் ஆப்ரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வந்துவிட்டார். எனது அணி தொடர்ந்து தோற்று வருவதைப் பார்க்க முடியவில்லை. அடுத்து அவர்கள் ஜெயித்தால் மட்டுமே தென் ஆப்ரிக்கா வருவேன் என்று கூறியுள்ளார் கிங் கான்! விரைவில் அப்படி ஒரு சூழலை தனது அணி உண்டாக்கித் தருவார்கள் என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சீரியலுக்கு வருவாரா மாளவிகா?

சினிமாவை விட்டு சற்று விலகியிருக்கும் மாளவிகாவை சீரியலில் நடிக்க கூப்பிட்டுக் கொண்டிருக்கிறார்களாம். அவர்தான் வேண்டாமே என்று தயங்கி வருகிறாராம். திருமணமாகி மும்பையில் செட்டிலாகி விட்ட மாளவிகா இப்போது ஒரு ஆண் குழந்தைக்கு அம்மா. இதனால் நடிப்புக்கு சற்று இடைவெளி விட்டுள்ளார். மகனை கவனிக்க அவருக்கு நேரமே போதவில்லையாம். இந்த நிலையில் சும்மாதானே இருக்கிறீர்கள், டிவி சீரியல்களில்நடிக்கலாமே என்று சிலர் தூது விட்டுள்ளனர். ஆனால் மாளவிகா அவற்றை ஏற்கும் மூடில் இல்லையாம். பையனைக் கவனிக்கவே நேரம் போதவில்லை. பிறகு எப்படி நடிக்க முடியும். அதிலும் டிவி சீரியல் என்றால் வருடக்கணக்கில் இழுப்பார்கள். கண்டிப்பாக தொடர்ந்து நடிக்க முடியாது என்கிறார் மாளவிகா. திருமணமான பின்னர் அவர் நடித்துள்ள ஒரே படம் கார்த்திகை. விரைவில் அப்படம் திரைக்கு வருகிறது. அதற்குக் கிடைக்கும் வரவேற்பைப் பார்த்து விட்டு, தனக்கு நேரம் கிடைக்கும்போது நடிக்கும் வகையிலான திரைப்பட வாய்ப்புகளை மட்டும் ஏற்கும் மூடில் இருக்கிறாரம் மாளவிகா

ரசிகர்களை கவராத புதுப் படங்கள்!

இந்தக் கோடையின் முதல் வரவாக நான்கு படங்களை வெளியிட்டனர் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள். இந்த நான்கு படங்களுமே 'ஊற்றிக் கொண்டது' தான் தமிழ் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மரியாதை, எங்க ராசி நல்ல ராசி, குரு என் ஆளு, குங்குமப் பூவும் கொஞ்சு புறாவும் என நான்கு படங்கள் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீசாகின. முதல்நாளே இந்தப் படங்களுக்கான ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் படுமோசமாக இருந்ததாக கருத்து தெரிவித்தார் வினியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி ஜி சேகரன். சமீபத்தில் நடந்த குயிலு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய சேகரன், தமிழ்ப் படங்களின் வர்த்தகம், ரசிகர்களிடம் அவற்றுக்கான வரவேற்பு படுமோசமாக உள்ளதாகத் தெரிவித்தார். "எல்லாப் படங்களும் நன்றாக ஒட வேண்டும். அதற்கு சரியான திட்டமிடல் வேண்டும். அதேபோல திட்டமிட்டு ரிலீஸ் செய்ய வேண்டும். சரியான திட்டமிடல் இல்லாமல் இந்த வெள்ளிக்கிழமை ரிலீஸான மரியாதை, குங்குமப்பூவே கொஞ்சும்புறாவே, எங்கராசி நல்ல ராசி மற்றும் குரு என் ஆளு ஆகிய நான்கு படங்களுமே மக்களின் வரவேற்பைப் பெறத் தவறிவிட்டன. அதிலும் மரியாதை தவிர மற்ற படங்களுக்கு திரையரங்குகளில் இரட்டை இலக்கத்தைக் கூட தாண்டாத அளவுக்குத்தான் கூட்டம். மரியாதை படத்துக்கும் சொல்லிக் கொள்கிறமாதிரி இல்லை. நான் இந்தப் படங்களின் தரம் குறித்துப் பேசவில்லை. குறைந்தபட்சம் இவற்றை சரியான நேரத்தில் வெளியிட்டிருந்தால் சில தினங்களாவது ஓடியிருக்கும்... அதே நேரம் பல வாரங்களுக்கு முன் வெளியான அயன் திரைப்படம் இன்னும் அரங்கு நிறைந்த கூட்டத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது. இயக்குநர்கள் இதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்றார்.

மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 சர்வீஸ் பேக் 2 வெளியீடு

மைக்ரோசாப்ட்டின் இயங்குதளங்கள் (Operating System) அடுத்து அதன் ஆபீஸ் தொகுப்பு பிரபலமானது. இதில் முக்கிய பதிப்பாக ஆபீஸ் 2007 வெளி வந்தது. இந்தனை மேம்படுத்தும் வகையில் Service Pack குகளை மைக்ரோசாப்ட் வெளியிட்டு வருகிறது. மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 மென்பொருள் தொகுப்பிற்கான Service Pack 2 வெளியிடப்பட்டுள்ளது. இந்த தொகுப்பினை நிறுவுவதன் மூலம் பெறக்கூடிய குறிப்படத்தக்க சிறப்பம்சங்கள் : ஓபன் ஆபீஸ் (Open Office) மூலம் உருவாக்கப்பட்ட கோப்புகளை இனிமேல் மைக்ரோசாப்ட் ஆபீஸ் மூலம் திறக்க / மாறுதல் செய்ய / சேமிக்க முடியும். வேறெந்த மென்பொருளின் உதவியின்றி இனி நீங்கள் மைக்ரோசாப்ட் ஆபீஸ் கோப்புகளை PDF வடிவில் சேமிக்க முடியும். மற்றும் பல பிழைகளும் நீக்கப்பட்டுள்ளன. புதிய மாற்றங்கள் பற்றி இந்த லின்க்கில் மேலும் அறிந்து கொள்ள முடியும். நீங்கள் மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2007 உபயோகிப்பாளராக இருந்தால் Service Pack 2 தரவிறக்க இந்த லிங்க்கை கிளிக்செய்யவும் . இது மைக்ரோசாப்ட் தரவிறக்க தளத்திற்கு கொண்டு செல்லும். கோப்பின் பெயர் : office2007sp2-kb953195-fullfile-en-us.exe கோப்பு அளவு : 290 MB.

தொழிலாளர்கள் கையில் அமெரிக்க கார் கம்பெனி?

கிரைசிலர் கார் கம்பெனி சில காலமாகவே அதிக நட்டத்தில் இயங்கி கொண்டுள்ளது. அமெரிக்க அரசின் நிதி உதவி இல்லாமல் அதை இயக்க முடியாது என்ற நிலை இருந்தது. அதற்கு முக்கிய காரணம் கார் விற்பனை சரிவு, மார்கெட்டுக்கு தேவையான காரை உற்பத்தி செய்யாமை,கடன் மற்றும் தொழிலாளர்களின் சம்பளம் மற்றும் வேலை செய்யும் மற்றும் பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் மருத்துவ காப்பீடு செலவு என்று கூறபட்டது. இந்நிலையில் ஒபாமாவின் உத்திரவு பேரில் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்ற வளர்ச்சி திட்டத்தை கம்பெனி தயாரித்தது. அமெரிக்க அரசும் முறையான திட்டங்கள் இல்லாமல் பணத்தை மேன் மேலும் கொடுக்க விருப்பம் இல்லை என்று தெரிவித்து விட்டது. அதன் அடிப்படையில் புதிய திட்டம் வடிவமைக்க படுகிறது. இத்திட்டத்தின் முன்வரைவு இன்னும் வெளி வர இல்லை என்றாலும் அது பற்றிய செய்திகள் அனைத்து அமெரிக்க பத்திரிக்கைகளும் வெளியிட்டுள்ளது. அதன் படி தொழிற் சங்கத்துக்கு 55% சதவித பங்கு வழங்க படும் என்று தெரிகிறது. இதனால் தொழ்ற்சங்கத்துக்கு கம்பெனியின் முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கிடைக்கும். ஆனால் இதற்கு அவர்கள் கொடுக்கும் விலையும் அதிகம்.இதன் மூலம் தொழிலாளர்களுக்கு கிடைக்க இருந்த மருத்துவ காப்பீடு மிக அதிக அளவில் குறைய வாய்ப்புள்ளது.அதே சமயம் இம்முடிவை தொழிலாளர்கள் யூனியன் ஒத்து கொள்ளாவிட்டால் அக்கம்பெனி ஒட்டு மொத்தமாக மூட படலாம். அதனால் இழப்பு மிக அதிகம் இருக்கும்.தற்போதைய திட்டத்தின் மூலம் கம்பெனி காப்பாற்ற பட்டால் பிற்கலத்தில் அதனால் கிடைக்கும் லாபம் கொண்டு தொழிலாளிகள் பயன் பெற வாய்ப்புள்ளது. இத்திட்டதினால் இழப்பு தொழிலளர்களுக்கு மட்டும் இல்லை. அக்கம்பெனிக்கு கடன் கொடுத்த வங்கி மற்றும் அக்கம்பெனியின் தற்போதயைய முதலீட்டளர்கள் அனைவரும் பெரும் இழப்பை சந்திக்க வேண்டும். மருத்துவ காப்பீடு செலவு என்பது கார் கம்பெனிகளுக்கு மட்டும் முக்கிய பிரச்சனை இல்லை. அமெரிக்க அரசுக்கே இது ஒரு பெரிய பிரச்சனையாக வளர்ந்து வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் இப்பிரச்சனை தற்போதைய நிதி நெருக்கடி போன்று பெரிய நெருக்கடியை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம்.

SWINE FLU பரவுகிறது ! கவனம்.

அமெரிக்கா,சீனா,இந்தோனேசியா போன்ற நாடுகளில் அதிகமான நோய்த்தொற்றுகள் காணப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
Swine Influenza அல்லது Swine Flu என்று பொதுவாக அழைக்கப்படும்.
இது Influenza எனும் நோயையே குறிப்பிடும்.
Influenza (பொதுவாக Flu) என்பது Orthomyxoviridae எனும் குடும்பத்திலுள்ள RNA வைரஸ்களால் பரப்பப்படும் தொற்றுநோயாகும்.
இது பொதுவாக பறவைகள் மற்றும் முலையூட்டிகளை பாதிக்கும்.
Swine என்பது பன்றியைக் குறிக்கும்.
இந்த Swine Flu ஆனது வளர்ப்பின பன்றிகளிடமிருந்து Swine Influenza Virusஆல் (SIV) கடத்தப்படுகிறது.
Swine Influenza Virus (SIV)
Swine Flu ஆனது பொதுவாக வளர்ப்பின பன்றிகளிடம் தொற்றும் நோயாகும்.
மனிதனுக்கு பரவுவது மிகவும் அரிதானது.
வளர்ப்பின பன்றிகளோடு மிகவும் அதிகமாக வேலை செய்வோருக்கு இந்த நோய் தாக்கும் சந்தர்ப்பம் அதிகம் உள்ளது.
எனினும் இந்த நோய்க்கான வைரஸ் ஒரு மனிதனிலிருந்து இன்னொரு மனிதனுக்கு கடத்தப்படுவது மிகவும் அரிதானது.
மனிதனுக்கு பரவியுள்ள இந்த நோய்க்கான வைரஸின் உடற்கட்டமைப்பில் உள்ள சில புரதங்கள் வழமையாக பன்றிக்கு நோயைத் தோற்றுவிக்கும் வைரஸின் உடற்கட்டமைப்போடு ஒத்துப் போகின்றனவாம்...
நோய் பரவியுள்ள நாடுகளில் மக்கள் பாதுகாப்புக்காக முகமூடி அணிந்து கொண்டு செல்கின்றனர்...
மனிதனுக்கு இந்த நோய் பரவியுள்ளதற்கான அறிகுறிகள் பின்வருவனவாகும்...
வழமையாக Influenzaக்கான அறிகுறிகள் தான்.
காய்ச்சல், உடல் குளிர்தல், தொண்டை அடைப்பு, தசைகளில் வலி, கடுமையான தலைவலி, இருமல், உடல் வலுக்குறைவு மற்றும் அசாதாரண உடல் நிலைமைகள்.
இந்த அறிகுறிகள் யாருக்காவது காணப்படின் உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்வதே நல்லது...

27 ஏப்ரல் 2009

இணையம் மூலம் பணம் சம்பாதிக்க சில ஆலோசனைகள் 1

முதலில் பொதுவான தமிழ் / பிறமொழி இணையத்தளமிருப்பின் அதன் மூலம் என்னென்ன செய்யலாமென பார்க்கலாம்.

எல்லாவிதமான விடயங்களையும் உங்கள் பதிவில் / வெப்பில் கவர் பண்ணுபவரா நீங்கள் ? உங்களுக்கு கூகிளிக் ஆட்சீன்ஸ்தான் முதல் தெரிவாகவிருக்கட்டும். மற்றயது Banner Ad போன்றவற்றையும் முயற்சிக்கலாம். பொதுவாக பதிவுகளில்Pay per clicks / Immpressions எல்லாம் பயன்படாது. மாதத்திற்கு இவ்வளவென விளம்பரப்படுத்தும் சேவைகளைத்தான் நம்பவேண்டும். அதுதான் அதிகமான வருவாயை தரும். தமிழில் இதுபோன்றதொரு தளம் இருக்கிறதாவென தெரியவில்லை. இல்லாவிட்டால் புதிதாக உருவாக்கலாம். தேவையான மென்பொருள் வசதியை என்னால் தர முடியும். ஆனால் பிரபலமாக வெகு நாளாகும். விகடன், தட்ஸ்தமிழ், தமிழிஷ், தமிழ்மணம் போன்ற பிரபலமாகவுள்ள தமிழ் இணையத்தளங்கள் இச்சேவையை செய்ய முன்வந்தால் மிக உச்ச பயன் கிடைக்கும். ஏனெனில் விளம்பரதாரர்களும் நம்பிக்கையுடன் விளம்பரம்தர ஒத்துழைப்பார்கள்.

——————————————————————————

இத்தளம் எப்படி செயல்படுத்தப்பட வேண்டும்?

விளம்பரம் வெளியிட விரும்புவோர் தங்கள் தளம் பற்றிய விபரங்களை தரவேண்டும். அத்தள Hits விடயங்கள் automatic script / Tamilish or smiler Tamil web sites- votes அடிப்படையிலே திரட்டப்படும். ( Alexa / Google page rank போன்றவை இங்க உதவாது. ) இவர்கள் எந்த வகை வியாபார விளம்பரங்கள் தங்கள் தளங்களில் வெளியிடலாமென தெரிவிக்க வேண்டும். மற்றும் எதிர்பார்க்கும் கட்டணத்தையும் தெரிவிக்கவேண்டும். இவையாவும் டேட்டாபேசில் ஒருமுகப்படுத்தப்பட்டு சேமிக்கப்படும்.

விளம்பரதாரர் தங்கள் விளம்பரங்கள் எந்த வகையான தளங்களில் வரவேண்டுமென நிர்ணயம் செய்து தங்கள் எதிர்பார்க்கும் அல்லது செலுத்தக்கூடிய உச்ச கட்டணத்தையும் தெரிவிப்பர்.

நமது Script ஆனது இவர்கள் இருவருக்கும் இணைந்தாற்போல வரும் விளம்பரதாரரையும் வெளியீட்டாளர்களையும் பட்டியல் போட்டு நொடியில் தந்துவிடும். பின்னர் இருவருக்கும் பிடித்திருந்தால் விளம்பரம் வெளியிடலாம். தரகாக இயைத்தளத்திற்கு ஒரு விகித அடிப்படையிலோ அல்லது fixed rate ஆகவோ பணம் செலுத்த இந்த தளத்திற்கும் வருமானம் பெருகும்.

அடுத்து 3ம் தரப்பாக இணையத்திற்கு சம்பந்தமில்லாதவர்களாகவிருப்பவருக்கும் இவ்விணையம் மூலம் வருமானமீட்டலாம். அதாவது உங்களின் ஏரியாவிலுள்ள வியாபா நிலையங்களிலிருந்து விளம்பரங்களை பெற்றுக்கொடுப்பதன் மூலம் இடைத்தரகாக ஒரு வருமானத்தையும் பெறலாம். ஆக 4 தரப்பினருக்கும் வருமானம் கிடைக்கும்.

சாதாரண Banner ad management script இனை சிறிது மேம்படுத்துவதன் மூலம் இவ்வசதிகள் கொண்ட ஒரு இணையத்தளமிருப்பின் வருமானம் பெருகும். ஆங்கில தளங்களுக்கு இவ்வாறெரு தளம் முற்றாக வடிவமைத்துக்கொடுத்திருக்கிறேன். இதைப்பற்றி வேறு தகவல் தேவைப்படின் தொடர்பு கொள்ளவும். ( தெழில் காரணமாக என்னால் Script தரமுடியாது. என் பிழைப்பே இதுதான். ஆனால் என்னாலான யோசனைகளை தயங்காமல் தருவேன் )

——————————————————————————————

அடுத்து Google Adsense களை நம்பி ஆங்கிலத்தளங்களை வைத்திருக்கிறீர்களா?

உங்களின் தளம் கண்டிப்பாக ஏதாவதொரு குறித்த விடயத்ததை மட்டுமே விவாதிப்பதாகவோ வெளியிடுவதாகவோ இருக்கட்டும்.

அதாவது Google Adsense ல் Finance, Economics, debt, Loan போன்ற key words வரும் விடயங்களை உள்ளடக்கிய தளங்களில் வெளியிடப்படும் adsense ஆட்களை யாராவது கிளிக்கினால் இதற்கு அதிக பணம் தருவார்கள். ஏனெனில் இந்த கீ வேர்ட்ஸ்சுக்கு இருக்கும் மவுசு அப்படி. ஆக நீங்களும் இது சம்பந்தமான பதிவுகளை இட்டு அதை விளம்பரப்படுத்தி ஹிட் சேர்த்தீர்களெனில் உங்கள் வெப்பிலிருந்து வரும் கிளிக்ககளுக்கு அதிக பணம் கிடைக்கும். 1st year படிக்கும்போது Adsense அறிமுகம் கிடைத்தது(2005/2006 ). அப்போது 4 பதிவுகளை ஆரம்பித்தேன். 3 மாதத்திற்குப்பின்னர் ஒரு மாதத்திற்கு $80-100 வரை கிடைத்தது. 4 வாரங்களுக்கொருதரம் செக் வரும். பின்னர் இந்த சில்லரை வேலையை விட்டுவிட்டு Software development ஆரம்பித்துவிட்டேன். இன்றுவரை நன்றாக நடக்கிறது. விரைவில் 3வருட நிறைவு வர இருக்கிறது:) .

பல ஐடியாக்களை நீண்ட நாட்களாகவே பதிவிடும் எண்ணம் இருந்தது. இன்றுதா கொஞ்சமாவது தட்டச்சு செய்திருக்கிறேன். எனது அறிவுக்கெட்டிய சில சில்லறை யோசனைகளைத்தான் சொல்லப்போகிறேன். உபயோகப்படுத்தலாமென நினைத்தால் விடாமுயற்சியாக முயன்றுபாருங்கள். யாருக்கும் ஐடியா சொல்லும் வயதில் நான் இல்லை. தவறாக நினைக்காமல் இருந்தால் சரிதான். இந்த ஐடியாக்கள் படிக்கும்பொது இருந்தது. இப்போது இல்லை. உங்களுக்கு ஏதாவது பொறி தட்டினால் தாமதிக்காமல் செயல்படுத்திவிடுங்கள். ( அதுதான் எல்லாவற்றிற்கும் மிக முக்கியம்.)

பின்னர், குறிப்பிட்ட விடயங்களை மட்டும் எழுதும் பதிவர்களுக்காக சில ஐடியாக்களை தருகிறேன். நீங்கள் திட்டாமல் ஆதரித்தால் மட்டும்.

Facebookஆல் வந்த வினை – உண்மைச் சம்பவம்

Facebook ஆனது Social network களில் முதலிடம் வகிக்கின்றது. இதனுடன் இருந்தால் நேரம் போவதே தெரியாது என்பதால் இதை அலுவலக நேரங்களில் அலுவலகத்தில் பயன்படுத்த பல கம்பனிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வீட்டில், படுத்துக்கொண்டு தனது iphone இல் Facebook பாவித்ததற்காக வேலையை இழந்திருக்கிறார் ஒரு பெண்.
சுவிஸ் நாட்டைச் சேர்ந்த முனியம்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் அண்மைக் காலமாக ஒற்றைத் தலைவலியால் (migraine) அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் தன்னால் கணிணியைப் பயன்படுத்த முடியாது எனக் கூறி, அலுவலகத்தில் தனது கணிணி வேலையிலிருந்து வேறு துறைக்கு மாறியதுடன், தனக்கு இருளான அறை வேண்டும் என்றும் கேட்டு வாங்கியிருக்கிறார்.
ஆனால் இவர் Facebook பாவிப்பதை மட்டும் நிறுத்தவே இல்லை. இதை அவதானித்து வந்த இவரது நிறுவனம் இவரை வேலையிலிருந்து நீக்கிவிட்டது. Facebook பயன்படுத்த ஒற்றைத்தலைவலியுடன் முடியுமானால் வேலை செய்ய ஏன் முடியாது எனவும் இது கேள்வி எழுப்பியுள்ளது.
இது எவ்வாறு சாத்தியமானது தெரியுமா? போலியான பெயரில் கணக்கு ஒன்றைத் தொடங்கிய இவர் வேலைபார்க்கும் நிறுவனம் தனது ஊழியர்களை நண்பர்களாக இணைத்துள்ளது. அதன் மூலமாக Facebookஇல் அவர்களது நடவடிக்கைகளை அவதானித்தும் வந்துள்ளது.
முன்ன பின்ன தெரியாதவங்களை Facebookல Friendஆ வச்சிருக்கிறவங்க பாத்துப் பத்திரமா இருங்கப்பா!

பாவாடை தாவணியில் ஸ்ரேயா! தமிழகத்தில் குட்டி ஃபீவர்?

குட்டிய எப்போ காட்டுவீங்க? மித்ரன் ஜவகரிடம் கேட்டால், இப்போதுதான் பாலிஷ் போட்டுகிட்டு இருக்கோம். சீக்கிரம்... என்கிறார். நாம் சொன்ன குட்டியில் நடிப்பவர்கள் தனுஷ்-ஸ்ரேயா ஜோடி! யாரடி நீ மோகினியில் நயன்தாராவுக்கு பாவாடை தாவணி கொடுத்து தமிழ்நாட்டையே நயன்தாரா காய்ச்சலுக்கு உள்ளாக்கிய மித்ரன் ஆர் ஜவகர், இப்போது குட்டி படத்தில் பிஸியாகிவிட்டார். இந்த முறை இவர் கிளப்பப் போவது ஸ்ரேயா ஃபீவர். "ஒரு பொண்ணுக்கு ஆயிரம் டிரஸ் கொடுங்க. பாவடை தாவணிக்கு இருக்கிற அழகே தனி. குட்டியிலும் பாவாடை தாவணியிலேதான் வர்றாங்க ஸ்ரேயா" என்றார். ஆனால் தாவணிதான் அப்படியே தொடர்கிறதே தவிர, படத்திற்கு முக்கியமான இசையில் ஒரு பெரிய மாற்றம். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜாவை விட்டு விட்டு தேவி ஸ்ரீ பிரசாத்துடன் கை குலுக்குகிறார் ஜவகர். தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் படம் தயாரிக்க நினைக்கும் தயாரிப்பாளர்களாகட்டும், இயக்குனர்கள் ஆகட்டும், முதலில் டிக் பண்ணுவது தேவி ஸ்ரீ பிரசாத்தைதான். இரண்டு மொழி டேஸ்ட்டையும் ருசிக்கிற ஆள் அவர். இந்த முறை எனக்கு பிடிச்ச மாதிரியும் இல்லாம, அவருக்கு பிடிச்ச மாதிரியும் இல்லாம ரசிகர்களுக்கு பிடிச்ச மாதிரி ட்யூன் போட்டிருக்காரு. கேட்கதானே போறீங்க என்றார் பெரிய எதிர்பார்ப்புடன். ஒவ்வாரு படத்தையும் மாமனாரிடம் காட்டி, அவரது பாராட்டுதல்களுக்காக காத்திருக்கும் தனுஷ், இந்த முறையும் ரொம்ப ஆர்வமாக இருக்கிறார். மாமனார் ரஜினி குட்டியை பார்த்து குட்டுவாரா? தட்டிக் கொடுப்பாரா? இன்னும் சில மாதங்களில் தெரியும்.

ஆஸ்பத்திரியில் அனுமதி தந்தை உதவியில்லாமல் அவதிப்படுகிறேன் - அசின்

அசின் சினிமா கால்ஷீட் விஷயங்களை கவனித்து கொள்பவர் அவரது தந்தை ஜோசப் தொட்டும்சல். தமிழில் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி” யில் அறிமுகமானபோது ஜோசப்பும் கேரளாவில் தொழில் வியாபாரங்களை பிறரிடம் ஒப்படைத்து விட்டு சென்னை வந்து விட்டார். படப்பிடிப்பில் அசின் கூடவே செல்வார். நட்சத்திர ஓட்டல்களில் தங்கும்போதும் பக்கத்திலேயே ரூம் போட்டு கவனமாய் மகளை கண்காணிப்பார். இவர் அனுமதி இல்லாமல் அசினை எவரும் சந்தித்து விட முடியாது. அசின் செல்போனும் ஜோசப் கையில்தான் இருக்கும். அசினுடனேயே சதா ஒட்டிக்கொண்டு திரிவதால் ஜோசப் மீது ஹீரோக்கள், இயக்குனர்களுக்கு வெறுப்பு உண்டு. இந்தி “கஜினி” மூலம் வடஇந்தியாவில் பிரபலமானதால் இந்தி கதாநாயகர்கள் அசினுடன் ஜோடி சேர மொய்க்கின்றனர். ஆனால் யாரையும் கிட்டே நெருங்க விடாமல் தானே புதுப்படங்கள் பற்றி பேசி தீர்க்கிறார். மொத்த வேலையையும் தந்தையிடம் ஒப்படைத்து நடிப்பில் மட்டும் கவனம் செலுத்திய அசினுக்கு தற்போது தந்தை ஜோசப் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளதால் சங்கடங்கள் ஏற்பட்டுள்ளன. ஆஸ்பத்திரியில் படுக்கையிலேயே இருக்கிறார். ஜோசப்புக்கு குளுக்கோஸ் ஏற்றப்படுகிறது. தாய் கேரளாவில் இருந்து வந்து அசினுக்கு துணையாக தங்கி இருக்கிறார். தந்தை உதவி இல்லாமல் தவிப்பது பற்றி அசின் சொல்கிறார். எனக்கு எல்லாமே அப்பாதான். சினிமா கால்ஷீட்களை அவர்தான் கவனித்து கொண்டார். என் கூடவே எப்போதும் இருப்பார். தந்தைக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால் நான் சிரமத்துக்கு ஆளாகியுள்ளேன். அவர் இல்லாமல் எந்த புதுபடத்தையும் ஒப்புக்கொள்ளவில்லை. கேரளாவுக்கு போய் பாராளுமன்ற தேர்தலில் ஓட்டுப்போட முடிவு செய்து இருந்தேன். அதுவும் முடியாமல் போய்விட்டது. சினிமாவுக்கு வந்து முதல் தடவையாக தந்தை இல்லாமல் தனியாக பெங்களூர் சென்று வந்தேன். வித்தியாசமான அனுபவமாக இருந்தது. மும்பை திரும்பியதுமே ஆஸ்பத்திரிக்கு ஓடோடி போய் தந்தையை பார்த்தேன். தந்தை உதவி இல்லாமல் என் வேலைகள், பாதிக்கப்பட்டு உள்ளன. என் சம்பந்தப்பட்ட விஷயங்களை யார் துணையுமின்றி நானே கவனித்துக் கொள்ள பழகி வருகிறேன். இவ்வாறு அசின் கூறினார்.

படித்ததில் பிடித்தது : செக்ஸ் பிரச்னையை போக்குமா? யோகா

பல நூற்றான்டுகளுக்கு முன்பே இந்திய அளவில் காமசுகத்தை{பாலியல் இன்பத்தை} வெளிப்படுத்தும் வகையில் பல விசையங்கள் உண்டு அதில் ஒன்று தான் காமசூத்திரா.கோவில்,அரன்மனை,சில பொது இடங்கள் இவைகளில் எல்லாம் அந்த காலத்திலேயே காமசுகத்தை விவரிக்க கூடிய சிற்பங்கள் பல உண்டு. மேலை நாடுகளில் எல்லாம் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்புவரை செக்ஸ் என்றால் அசிங்காமான விசையம் என்ற கலாச்சாரம் தான் இருந்து.அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் கூட.பெண்கள் எல்லாம் இன்று போல் சகஜமாக உடல் வேளிப்படுத்தும் உடை அணிய முடியாது. காமத்தை வெளிப்படையாக கொண்டாடும் ஆற்றல் மனிதர்கள் அளவுக்கு எந்த மிருகத்துக்கும் இல்லை.இது இன்று மேலை நாடுகள் ஒற்றுக்கொள்ளும் விசையம். ஆணால் தமிழ்{பத்திரிகைகள், சினிமா}இவைகள் தான் காதலையும், காமத்தையும் வெளிப்படையாக கொன்டாடுவது மிருகத்தனம் போல் லாஜிக் இல்லாத டையலாக்குகள் பேசும். "நொடிபொழுதில் சூடாகி, சூடேற்றி, அணைந்தும் விட்டாய் தீக்குச்சி போல ஆனால் நீ சூடேற்றிய கனல், சூடார நேரம் ஆகும் என்பதை ஏன் அறியாமல் போனாய்! இது உன் குற்றமா? அவள் குற்றமா? இல்லை படைத்தவன் குற்றமா? அல்லது எல்லாம் மாயையா? " 64 வகை இன்பங்களை முழுமையாக அநுபவித்து, ஒரு நல்ல முழு
குழந்தையைப் பெறுவதற்காக என எடுத்துக் கொள்ளலாமே? அவசர அவசரமாக முதல் இரவிலேயே பெண்களுக்கு காமம் புரிவதற்க்குல், அவர்களின் காமம் முழுமைப் பெருவதற்க்குள், காம குமிழை போட்டுடைத்து, முன்றே மாதங்களில் குழந்தை பேற்றை எட்டியவர்களின் லிஸ்ட் மிகப் பெரியது. அவர்களைப் பார்த்து எள்ளி நகையாடவில்லையானாலும், வெறுத்து வருத்தப்பட்டது உண்மை. யோக கலை என்பது ஒரு சர்வ ரோக நிவாரணி, அதை ஒழுங்காக கடை பிடிக்கும் பட்ஷத்தில். நாடிசுத்தி,மூச்சு பயிற்சி,பிரணயாமம் இத்துடன் யோகாவையும் முறையாக கடைபிடித்து வருபவர்களுக்கு பல தலைமுறைகளுக்கு எந்த பிர்ச்சினையும் வராது. இதில் பெண்ணை வலது புறத்தில் படுக்க வைத்து, சூரிய கலையில் மூச்சுக்காற்று ஓடும் போது கூடினால் ஆண் குழந்தை பிறக்கும் என்றும். இதை அப்படியே உல்ட்டாவாக செய்தால் பெண்குழந்தை பிறக்கும் என்றும் கூறுவார்கள். யோககலை என்பது 108 நாடிகளையும் கன்ட்ரோல் செய்து ரத்த ஓட்டத்தை சுத்தப்படுத்தும் ஒரு அதி அற்புதமான விஷயம். ஒரு சரியான குருவிடம் கற்றுக்கொண்டு செய்வது உசிதம். "அறியாமைதான் இங்கு பேரின்பம் பெண்ணே... காதல் வகுப்பில் மாணவன் தான் பண்டிதனே" - வைரமுத்து (அந்நியன் படத்தில்) " சொல்லி தெரிவதில்லை மன்மத கலை" - பழமொழி - இது சரியா ? என்னை பொருத்தவரை இருவருக்குமே அறியாமை என்பது ஓ.கே . தேடல் துவங்கியதே என பாடிக் கொண்டே மற்றதை பாக்கலாம். பெண்ணும்க்கு தெரியாவிட்டாலும் கூட ஓ.கே. ஆனால் நான் இன்னும் திருப்தியடையவில்லை என்றே சொல்ல பயப்படும் நம் பெண்களிடையே, ஆண் அறியாமையிலும், பெண்ணும் எல்லாம் அறிந்து சொல்லத் தயங்குவதாயும் இருந்தால் பொழப்பு கிழிஞ்சுடும். வாஷிங்டன் : செக்ஸ் விஷயத்தில் அதிருப்தியுடன் உள்ள ஆண்களும்,
பெண்களும் இப்போது யோகா செய்ய ஆரம்பித்து விட்டனர்; அமெரிக்காவில் லேட்டஸ்ட் மவுசு இது! இந்தியாவில், பதஞ்சலி முனிவரால் தோற்றுவிக்கப்பட்ட யோகக் கலை, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பிரபலமான பின்னரே, சமீப காலமாக இந்தியாவில் பிரபலமாக உள்ளது. இன்னும் பலருக்கு யோகா, இந்தியாவில் பிறந்தது என்றும், பதஞ்சலி முனிவர் தான் அதை உருவாக்கினார் என்பதும் கூட தெரியாது. அமெரிக்கா கண்டுபிடித்தது போலத்தான் சொல்வர். மேலும், யோகாவை, பல மதத்தினரும் உரிமை கொண்டாடி, அவர்கள் தனியாக பெயர் வைத்தும் யோகாவை பிரபலப்படுத்தி வருகின்றனர். அமெரிக்காவில், ஆயிரக்கணக்கான நிறுவனங்கள், யோகாவை வியாபாரமாக்கி கோடிகோடியாக அள்ளி வருகின்றன. அமெரிக்க மக்களுக்கு பிட்சா மோகமும், வார இறுதி ஜாலியும் கூட இப்போது குறைந்து வருகிறது. வாழ்க்கையில் எல்லா திருப்தியும் கிடைக்கவும், உடல் ஆரோக்கியத்துக் கும்
யோகா முக்கியமான அபூர்வ கலை என்று உணர ஆரம்பித்துவிட்டனர். இதை பயிற்சி பெற ஆயிரக்கணக்கில் செலவழிக் கின்றனர். யோகா பற்றி நிபுணர்கள் ஆராய்ச்சிகளையும் செய்து வருகின்றனர். அதில் சமீபத்தில் மேற்கொள்ளப் பட்ட ஆராய்ச்சியில்,"செக்ஸ் பலத்தை யோகா பயிற்சி தருகிறது; யோகா செய்தால் ஆண், பெண்களுக்கு உள்ள செக்ஸ் குறைபாடு நீங்கி விடும்' என்று கண்டுபிடித்துள்ளனர். பிரிட்டீஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லோரி ப்ரோட்டோ, தெற்கு கலிபோர்னியா செக்ஸ் ஆராய்ச்சி மையத்தலைவர் மைக்கேல் கிரிச்மென் ஆகியோர் இது குறித்து கூறுகையில்,"செக்ஸ் மீதான ஆர்வத்தை
பெண்களுக்கு தூண்டவும், நீடித்த செக்சை ஆண்களால் தருவதற்கான பலத்தையும் யோகா அளிக்கிறது. தினமும் ஒரு மணி நேரம் யோகா செய்து வந்தால் போதும்; செக்ஸ் பலம் கிடைக்கும்' என்று கூறியுள்ளனர். கலிபோர்னியாவில் இருந்து வெளிவரும் "செக்ஸ் ஜர்னல்' என்ற இதழில் வெளிவந்த கட்டுரையில்,"68 இந்தியர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப் பட்டதில், அவர்களுக்கு செக்ஸ் பலம் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து, மேற்கத்தியர்களும் யோகாவை பின்பற்ற ஆரம்பித்துவிட்டனர்' என்று எழுதப்பட்டுள்ளது. மேன்ஹாட்டன் மாகாணத்தில் உள்ள யோகா ஆராய்ச்சி மையத்தில், யோகா பயிற்சியில் பலரும் பங்கேற்று வருகின்றனர். அவர்களை வைத்தும் செக்ஸ் தொடர்பான ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. "யோகாவில் உள்ள நன்மைகள் இப்போது தான் தெரிய ஆரம்பித் துள்ளன. உடல், மன ஆரோக்கியத்துக்கு இது அருமையான பயிற்சி. வாழ்க்கையில் ஒவ்வொருவரும் இதை செய்துவர வேண்டும்' என்று ஆராய்ச்சி நடத்திய மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். கலவியின்பம் தான் ஒரு ஆணையும்,பெண்ணையும் இல்வாழ்க்கையில் இணைத்து வைக்கிறது. சம்சார படகிலேறி, சதிராடும் வாழ்க்கை நீரில், திண்டாடும் மானிடர்கள் அவ்வப்போது இளைப்பாறிக்கொள்ளும் இடமே சிற்றின்பக்கூடம்.ஆண்டவனால் மனித குலத்துக்கு வழங்கப்பட்ட ஒரு அற்புதமான விஷயம் தான் தாம்பத்யம். ஆணின் குறியும்,பெண்ணின் யோனியும் இணைந்தது தான் சிவலிங்க தத்துவம் அல்லது சிவ சக்தி தத்துவம். செக்ஸை யோக வடிவில் பயிலும்போது அங்கே சக்தி இழப்புக்கு இடமில்லை. இருப்பினும் காம சூத்திரத்தின் எல்லா நிலைகளையும் ஒருவன் ஏக காலத்தில் அனுபவித்திட முடியாது. அதற்கு தேக பலம் அவசியம். முழு ஆரோக்கியமான ஆணும்,பெண்ணுமே இதை நடைமுறை படுத்த இயலும் இடைவெளி விட்டு. தற்கால தாம்பத்ய உறவு அரை மணிக்கு மேல் நீடித்தால் அது பெரிய விஷயம். 64 கலைகளையும் கடந்து விட்டேன் இனி எனக்கு மோகமில்லை என்று யாராலும் சொல்லமுடியாது. ஏனென்றால் 'அழுக்கு தீர குளித்தவனும் கிடையாது - ஆசை தீர அனுபவித்தவனும் கிடையாது".
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com