Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

27 ஏப்ரல் 2009

Facebookஆல் வந்த வினை – உண்மைச் சம்பவம்

Facebook ஆனது Social network களில் முதலிடம் வகிக்கின்றது. இதனுடன் இருந்தால் நேரம் போவதே தெரியாது என்பதால் இதை அலுவலக நேரங்களில் அலுவலகத்தில் பயன்படுத்த பல கம்பனிகளில் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் வீட்டில், படுத்துக்கொண்டு தனது iphone இல் Facebook பாவித்ததற்காக வேலையை இழந்திருக்கிறார் ஒரு பெண்.
சுவிஸ் நாட்டைச் சேர்ந்த முனியம்மா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண் அண்மைக் காலமாக ஒற்றைத் தலைவலியால் (migraine) அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் தன்னால் கணிணியைப் பயன்படுத்த முடியாது எனக் கூறி, அலுவலகத்தில் தனது கணிணி வேலையிலிருந்து வேறு துறைக்கு மாறியதுடன், தனக்கு இருளான அறை வேண்டும் என்றும் கேட்டு வாங்கியிருக்கிறார்.
ஆனால் இவர் Facebook பாவிப்பதை மட்டும் நிறுத்தவே இல்லை. இதை அவதானித்து வந்த இவரது நிறுவனம் இவரை வேலையிலிருந்து நீக்கிவிட்டது. Facebook பயன்படுத்த ஒற்றைத்தலைவலியுடன் முடியுமானால் வேலை செய்ய ஏன் முடியாது எனவும் இது கேள்வி எழுப்பியுள்ளது.
இது எவ்வாறு சாத்தியமானது தெரியுமா? போலியான பெயரில் கணக்கு ஒன்றைத் தொடங்கிய இவர் வேலைபார்க்கும் நிறுவனம் தனது ஊழியர்களை நண்பர்களாக இணைத்துள்ளது. அதன் மூலமாக Facebookஇல் அவர்களது நடவடிக்கைகளை அவதானித்தும் வந்துள்ளது.
முன்ன பின்ன தெரியாதவங்களை Facebookல Friendஆ வச்சிருக்கிறவங்க பாத்துப் பத்திரமா இருங்கப்பா!
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com