நேற்று மாலை இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகர் சங்கத் தேர்தல் அதிகாரியான பிரறைசூடன்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும்.
2009-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரைக்கான தேர்தல், ஜுலை 12-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
1952-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 25-வது தேர்தல் இது. இந்த தேர்தலில், தலைவர் பதவிக்கு சரத்குமார், துணைத் தலைவர்கள் பதவிக்கு விஜயகுமார், மனோரமா, பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவி, பொருளாளர் பதவிக்கு வாகை சந்திரசேகர் ஆகியோர் மீண்டும் போட்டியிடுவதற்காக, வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்கள்.
ஆனால் இவர்களை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், சரத்குமார் 21 ஜூன் 2009
3வது முறையாக நடிகர் சங்கத் தலைவரானார் சரத்குமார்
நேற்று மாலை இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் நடிகர் சங்கத் தேர்தல் அதிகாரியான பிரறைசூடன்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும்.
2009-ம் ஆண்டு முதல் 2012-ம் ஆண்டு வரைக்கான தேர்தல், ஜுலை 12-ந் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.
1952-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 25-வது தேர்தல் இது. இந்த தேர்தலில், தலைவர் பதவிக்கு சரத்குமார், துணைத் தலைவர்கள் பதவிக்கு விஜயகுமார், மனோரமா, பொதுச்செயலாளர் பதவிக்கு ராதாரவி, பொருளாளர் பதவிக்கு வாகை சந்திரசேகர் ஆகியோர் மீண்டும் போட்டியிடுவதற்காக, வேட்பு மனுக்களை தாக்கல் செய்தார்கள்.
ஆனால் இவர்களை எதிர்த்து யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யாததால், சரத்குமார் விஜய் அவார்ட்ஸ்- ஒரு பார்வை
கண்ணுக்குக் கடுப்பு
கௌதமி, கமல் மகள்கள் ஸ்ருதி, அக்ஷரா, கௌதமி மகள் சுப்புலட்சுமி. (இதுல கௌதமிக்கு சிறந்த ஆடை வடிவமைப்பாளர்னு விருது வேற). வெங்கட் பிரபு- பிரேம்ஜி அமரன் சகோதரர்களின் Slogan எழுதிய T-Shirts. அதிலும் I think he is a Gay என்ற வாசகம் பொறித்த சட்டையோடு வந்த பிரேம்ஜி கடுப்புகளைக் கிளப்பினார். நீங்க எடுக்கிற படம் ஜாலியா இருக்கலாம் வெங்கட். ஆனா எங்க எப்படி நடக்கணும்னு சிலது இருக்கு. ஓவர் ஃபிலிம் உடம்புக்காகாது பாஸூ.
மேலும் படங்கள் பார்க்க இங்கே கிளிக்குங்கள்.
நல்லாருந்தது
- போன வருடத்தின் சிறந்த Entertainer விருது பெற்ற தனுஷின் பேச்சு, நாகேஷ், ஆர். சி. சக்தி, அனந்து பற்றிய கமலின் பேச்சு, 'அஞ்சாதே' படத்தில் குருவியாக நடித்த 'பாம்' ரமேஷின் எளிமையும் அப்பாவித்தனமும் கலந்த பேச்சு.
- மேடையின் பின்புறத்திலிருந்த பெரிய திரை.
- தன் வழமையான உற்சாகதோடு தேவா, லெஸ்லி சகிதம் ஹரிஹரன் பாடிய 'மோதி விளையாடு' பாடல்.
- ருக்மணி டான்ஸ்.
- 'சத்யம் சினிமாஸ்'சுக்கு கொடுக்கப்பட்ட கௌரவம். (இவங்கதான் சினிமா நல்லா ஓட தியேட்டர் தேவைன்னு முதன் முதலாகக் கண்டு பிடிச்சிருக்காங்க)
- ஹாரிஸ் ஜெயராஜ்- கௌதம் மேனன் காட்சிகள். மற்றும் ஹாரிஸின் சிம்பிளான பேச்சு. அவர் ஜேம்ஸ் வசந்தனின் ‘கண்கள் இரண்டால்' பற்றி சொன்ன வரிகள்
- கோபிநாத். கோபி.. நீங்க 'நீயா நானா ' நிகழ்ச்சி பண்ணலை. பள்ளிக்கூடப் பசங்களை வாத்தியார் கேள்வி கேட்பது போல் அதட்டிக் கேள்விகேட்கிறார் இல்லை புகழ்கிறேன் பேர்வழி என்று வழிந்துக கொண்டே................ இருக்கிறார். இவருக்கு யூகி சேது எவ்வளவோ தேவலை. (அந்த Best Wishes, வாஆஆஆஆஅவ், கூ.........ல் மூணையும் விட்டு வெளிய வாங்க கோபி. அப்புறம் உங்ககிட்ட கொஞ்சம் சரக்கிருக்கு என்று எங்களுக்கு தெரியும். அதுக்காக அதிமேதாவித்தனமான கேள்விகள் எல்லாம் ஒரு விருது மேடையில் ஓவர். ஹாரிஸ்-கௌதம் எபிசோடில் ரொம்ப எல்லை மீறிட்டார்.
- கமலைப் புகழ்கிறோம் பேர்வழி என்று எல்லாரும் புகழ்ந்து கொண்டே........ இருந்தார்கள். திகட்டுகிறது.
- அப்புறம் கமல், சூர்யா, சிவகுமார் குடும்பம், பாலசந்தர், மனோரமா சம்பந்தப் பட்ட தருணங்கள் எல்லாம் ஏதோ விக்ரமன் படம் பார்க்கும் உணர்வு. விருது மேடையை நட்சத்திரங்கள் நாடக மேடையாகக் கற்பனை பண்ணிவிட்டார்கள் போல். ஒரே கண்ணீர் மயம்... அடப் போங்கப்பா.
- 'செவாலியேர் சிவாஜி' விருதை வாங்க ரஹ்மான் வராதது.
- டான்ஸில நம்ம அடிச்சுக்க முடியாது என்று சொன்னார் கோபி. ஆனா கிட்டத்தட்ட எல்லா டான்ஸுமே சுமார்தான். அதுவும் அந்த தோனிய வச்சுப் பேர் பாத்திச்சே ஒரு பொண்ணு... அத இனிமே ஆடக்கூடக் கூப்பிடாதீங்க ஆமா.
மெய் சொல்லப் போறேன்
3 ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை - ஆகஸ்டில் ஏலம்
இந்த அலைவரிசை வசதி இருந்தால் போதும், செல்போனில் அதிவேக இண்டர்நெட், வீடியோஸ் மற்றும் சில மதிப்பு கூட்டு சேவைகளைப் பெறலாம்.
இப்போதைக்கு மத்திய அரசின் எம்.டி.என்.எல்., பி.எஸ்.என்.எல். நிறுவனங்களுடன், 6 தனியார் நிறுவனங்களுக்கு இந்த சேவையை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த ஒதுக்கீட்டிற்கான குறைந்தபட்ச ஏலத்தொகையை ரூ.2 ஆயிரத்து 20 கோடியாக நிர்ணயம் செய்ய தொலைத் தொடர்புத்துறை விரும்பியது. ஆனால், நிதி அமைச்சகம் இந்த தொகையை ரூ.4 ஆயிரத்து 40 கோடியாக உயர்த்துமாறு அறிவுறுத்தியது.
இதனைத தொடர்ந்து மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி மற்றும் தகவல் தொடர்பு அமைச்சர் ஆ ராசா ஆகியோர் சந்தித்துப் பேசினர். பிரதமர் மன்மோகன்சிங் முன்னிலையில், இந்தப் பேச்சுக்கள் நடந்தன. இறுதியில் ஒருமித்த கருத்துக்கு வந்தனர்.
அதன்படி, குறைந்த பட்ச ஏலத்தொகையை ரூ.4 ஆயிரத்து 40 கோடியாக நிர்ணயம் செய்ய ஒப்புக் கொண்டது மத்திய தகவல் தொடர்புத் துறை. ஆகஸ்டு மாத மத்தியில் ஏலம் நடைபெறும். இந்த ஏல விற்பனை மூலம் மத்திய அரசுக்கு ரூ.32 ஆயிரத்து 320 கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஏலப் போட்டியில், அரசுத் துறையின் இரு நிறுவனங்கள் தவிர, பார்தி ஏர்டெல், வோடபோன், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன், டாடாஸ் மற்றும் சில தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
வயர்லெஸ் பிராடுபேண்ட் எனப்படும் வி மேக்ஸ் சேவையையும் ஏலத்தில் விட முடிவு செய்துள்ளது தொலைத் தொடர்பு அமைச்சகம். இதற்கு ஆரம்பத்தில் குறைந்தபட்ச ஏலத் தொகையாக ரூ.1010 கோடி நிர்ணயிக்கப்பட்டது. இப்போது அது ரூ.2020கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
மே. இந்தியத் தீவுகளை வீழ்த்தி இறுதிப் போட்டியில் நுழைந்தது இலங்கை
முதல் அரை இறுதிப் போட்டியில், பாகிஸ்தான் வெற்றி பெற்ற நிலையில் நேற்று 2வது அரை இறுதிப் போட்டி நடந்தது. இதில், இலங்கையும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியும் மோதின.
மிகச் சிறப்பாக ஆடிய இலங்கை அணி பேட்டிங்கிலும், பந்து வீச்சிலும், மேற்கு இந்தியத் தீவுகள் அணியை மிரட்டி விட்டது. இதன் மூலம் 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.
முதலில் பேட் செய்த இலங்கை அணியின் திலகரத்னே தில்ஷான் அதிரடியாக ஆடி 96 ரன்களைக் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இடையில் சில விக்கெட்கள் மடமடவென்று சரிந்தபோதும் கூட தில்ஷான் நங்கூரமிட்டது போல நின்று விட்டதால் அணியின் ரன் குவிப்பு பாதிக்கப்படவில்லை.
இறுதியில், 5 விக்கெட்களை இழந்து 158 ரன்களை எடுத்தது இலங்கை.
இதையடுத்து மேற்கு இந்தியத் தீவுகள் அணி ஆட வந்தது. ஆனால் சந்தித்த முதல் ஓவரிலேயே 3 விக்கெட்களை அடுத்தடுத்து பறி கொடுத்து அதிர்ச்சிக்குள்ளானது மேற்கு இந்தியத் தீவுகள் அணி.
இலங்கை பந்து வீச்சாளர் ஏஞ்செலோ மாத்யூஸ் முதல் ஓவரிலேயே முத்திரை பதித்தார். சேவியர் மார்ஷல், லென்டில் சிம்மன்ஸ், பிரேவோ ஆகியோர் ஒவ்வொரு பந்து வித்தியாசத்தில் வீழ்ந்ததால், மேற்கு இந்தியத் தீவுகள் நிலை குலைந்தது.
அதன் பின்னர் அந்த அணி எழுந்திருக்கவே இல்லை. கேப்டன் கெய்ல் நிலைமையைப் புரிந்து அதிரடியாக ஆடினார். ஆனால் அவருக்குத் துணையாக ஒரு வீரரும் நிலைக்கவில்லை. கெய்ல் 50 பந்துளில் 63 ரன்களைக் குவித்தார்.
தனி ஒருவராக கிணறு தோண்டியதால் மேற்கு இந்தியத் தீவுகள் அணியால் கரை சேர முடியாமல், 17.4 ஓவர்களிலேயே 101 ரன்களுடன் சுருண்டு போனது அந்த அணி.
மாத்யூஸ் 3 விக்கெட்களையும், முரளீதரன் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இறுதிப் போட்டியில் பாக்.குடன் மோதல் உங்கள் வலைத்தளத்தை விளம்பரப்படுத்த ஒரு இலவச இணையத்தளம்
நமது வலைத்தளங்களை விளம்பரப்படுத்த பலரும் பல்வேறு விதமாக முயற்சிப்போம். இன்னும் சில பேர் அதிக பச்சமாக கூகிள் அட்வோர்ட்ஸ் மூலம் கூட பணம் கட்டி விளம்பர படுத்துவார்கள் .
(அட்க்ரிட்வோர்க்) என்ற இந்த இணைய தளம்- இணையதளங்கள்,பதிவு தளங்கள் போன்றவற்றை இலவசமாக விளம்பரப்படுத்தும் வசதியை கொண்டுள்ளது .
நமது பதிவு தளங்களை விளமப்ரபடுத்த முதலில் அதில் உறுப்பினர் ஆகவேண்டும் .பின்பு நமது தளத்தின் முகவரியை அங்கு பதித்து பின்பு அவர்கள் தரும் (html code) ஐ நமது தளத்தில் ஏற்றி கொள்ள வேண்டும் அவ்வளவுதான் .
எப்படி நமது தளங்கள் விளம்பரம் ஆகும் என்று கேட்குறீர்களா?.அட்க்ரிட்வோர்க் தளத்தில் பல்லாயிரம் இணைதளங்கள் உறுப்பினராக உள்ளன . அதன் மூலம் நமது தளங்கள் அவர்களுடைய தளத்தில் விளம்பரபடுத்தப்படும்.அதற்க்கு பதிலாக மற்ற தளங்களின் விளம்பரம் நமது தளத்தில் வெளியிடப்படும்.
நமது தளத்தை பற்றிய விளம்பரம் எத்தனை முறை மற்ற தளத்தில் வெளியிட பட்டுள்ளது என்றும் விரிவாக இந்த அட்க்ரிட்வோர்க் இணையதளத்தில் பார்த்துக்கொள்ளலாம் .மேலும் எவ்வளவு பேர் நமது தளத்தின் முகவரியை கிளிக் செய்து உள்ளனர் என்றும் பார்த்து கொள்ளலாம்.
19 ஜூன் 2009
நடிகை ஸ்ரீதேவி திருமணம் முடிந்தது - ரஜினி, கமல் நேரில் வாழ்த்து
புதுமணத் தம்பதிகளை ஆசீர்வதித்த ரஜினி, அவர்களுக்கு தனது பரிசுப் பொருட்களையும் வழங்கினார்.
அதேபோல நடிகர் கமல்ஹாசனும் நேரில் வந்து மணமக்களை வாழ்த்தி ஆசிர்வதித்தார்.
நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார் இகோர் ஃபியோடோரோவிச் ஸ்ட்ராவின்ஸ்கி
இசையால் வசமாகா இதயமெது என்பார்கள் இல்லையா..? குறிப்பிட்ட காலப்பகுதியில், இவ்வுலகின் இசையுள்ளங்கள் பலவற்றைத் தன் இனிய இசைக்கோலங்களால் கட்டிப்போட்ட, உலகம் போற்றும் ஒரு மாபெரும் இசைக்கலைஞன் பிறந்தது இன்றைய நாளில். இதனைக் கெளரவிக்கும் வகையிலேயே கூகிள் இணையத்தளம் தன்னுடைய குறியீட்டு இலட்சினையை (logo) இன்று வெளியிட்டிருக்கிறது.
பத்தொன்பதாம்நூற்றாண்டில் பிறந்து, இருபதாம்நூற்றாண்டில் மறைந்த இசைக்கலைஞனதான் இகோர் ஃபியோடோரோவிச் ஸ்ட்ராவின்ஸ்கி (Igor Fyodorovich Stravinsky).
1882ம் ஆண்டு, ஜுன் 17ந் திகதி, ரஷ்யாவில் பிறந்த இகோர் ஃபியோடோரோவிச் ஸ்ட்ராவின்ஸ்கி சிறந்தவொரு இசையமைப்பாளர் .
சென்ற நூற்றாண்டான 20 ஆம் நூற்றாண்டில், உலகில் மிகச் செல்வாக்குச் செலுத்திய இசையமைப்பாளராகக் கருதுகிறார்கள். 20 ஆம் நூற்றாண்டின் செல்வாக்கு மிக்க முதல் நூறு மனிதர்களுள் ஒருவாராக 'Time' சஞ்சிகை தெரிவு செய்து கெளரவித்திருக்கிறது. இசையமைப்பாளர் , பியானோக் கலைஞர், நிகழ்ச்சி இயக்குனர், என முப்பரிமானப் புகழ்மிமக்கவர் எனப்புகழப்படுமிவர், 1910ல் ஒரு பலே நடன நிகழ்ச்சிக்கு இசையமைத்ததன் மூலம் முதலில் உலகின் கவனத்தை ஈர்த்தார்.
பின்னர் தொடச்சியாக "வசந்தத்தின் சடங்கு" ("The Rite of Spring") என்னும் நடன நிகழ்ச்சிக்காக அவர் வடிவமைத்த இசையமைப்பு, இசையமைப்புத் துறையில் ஒரு புரட்சியாக அமைந்ததாகச் சொல்லப்படுகிறது. இதுவே அவரை இசைப் புரட்சியாளர் என அடையாளப்படுத்தியது.பின்னால் வந்த பல இசையமைப்பாளர்களின் ஆதர்சமாக விளங்கிய இகோர் ஸ்ட்ராவின்ஸ்கி, 1971ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6ந்திகதி, தனது எண்பத்தியொன்பதாவது வயதில் மறைந்தார்.
அவரது இசைக்கோப்பு ஒன்றை பின்னாளில் மற்றுமொரு புகழ்மிகு கலைஞர் இசையமைத்த பதிவினைக் கீழே கேட்கலாம்.
அப்ரிதி அதிரடி ஆட்டத்தால் சுருண்டது தெ. ஆ. - இறுதிப் போட்டியில் பாக்.
இதில் வலுவான தென் ஆப்பிரிக்காவும், சற்று பலவீனமானது என்று கருதப்பட்ட பாகிஸ்தானும் மோதின. ஆனால் யாரும் எதிர்பாராத வகையில் பாகிஸ்தான் படு கலக்கலாக ஆடி தென் ஆப்பிரிக்காவை துரத்தி விட்டது.
ஷாஹித் அப்ரிதி பேட்டிங்கிலும், பவுலிங்கிலும் ஜொலித்ததால் பாகிஸ்தான் எளிதாக வெல்ல முடிந்தது.
முதலில், பேட்டிங்கில் 34 பந்துகளில் 51 ரன்களைக் குவித்த அபிர்தி, பின்னர் பந்து வீச்சின்போது, 16 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்களை சாய்த்து தான் ஒரு அட்டகாசமான ஆல் ரவுண்டர் என்பதை நிரூபித்தார்.
முன்னதாக முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 4 விக்கெட் இழப்புக்கு 149 ரன்கள் எடுத்தது.
கம்ரன் அக்மல் 23 ரன்களும், சோயப் மாலிக் 34, யூனிஸ்கான் 24 எடுத்தனர்.
பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்காவால், பாகிஸ்தான் பந்து வீச்சை சமாளிக்க முடியாததால், 5 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
கேப்டன் ஸ்மித் வெறும் 10 ரன்களுடன் அவுட் ஆனார். ஆனால் ஆல் ரவுண்டர் கல்லிஸ் சிறப்பாக ஆடி 64 ரன்களைக் குவித்தார். இவர் மட்டுமே தென் ஆப்பிரிக்க அணியில் பெரிய ஸ்கோரை எட்டியவர்.
டுமினி தன் பங்குக்கு 44 ரன்களைச் சேர்த்தார். மற்றவர்கள் அனைவரும் சொற்ப ரன்களி்ல நடையைக் கட்டினர். இதனால் 142 ரன்களில் ஆட்டத்தை இழந்தது தென் ஆப்பிரிக்கா.
இதன் மூலம் 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது பாகிஸ்தான். ஆட்ட நாயகனாக அப்ரிதி தேர்வு செய்யப்பட்டார்.
இறுதிப் போட்டிக்கு தொடர்ந்து 2வது முறையாக முன்னேறியுள்ளது பாக்.
கடந்த முறை அது இந்தியாவை இறுதிப் போட்டியில் சந்தித்து தோல்வியைத் தழுவியது. இந்த நிலையில் 2வது முறையாக முன்னேறியுள்ள பாக். நிச்சயம் கோப்பையைக் கைப்பற்ற கடுமையாக போராடும் என்பதில் சந்தேகம் இல்லை.
சுருக்கமான ஸ்கோர்..
பாக்.
கம்ரன் அக்மல் - 23, அப்ரிதி -51, சோயப் மாலிக் - 34, யூனிஸ்கான் -24 (149-4).
தென் ஆப்பிரிக்கா
கல்லிஸ் - 64, டுமினி -44, ஸ்மித் - 10.
இன்று இலங்கை - வெஸ்ட் இன்டீஸ் மோதல் உங்கள் கணினிக்கான சிறந்த "ஆண்டி வைரஸ்" எது?
நம் கணினியில் பயன்படுத்தும் ஆண்டி வைரஸ்களை ஆய்வு செய்து தரவரிசை கொடுத்துவரும் "www.av-comparatives" நிறுவனம் சமீபத்தில் தனது ஆய்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.அதில் ஆண்டி வைரஸ் மென்பொருட்களை தயாரிக்கும் 16 நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன.
அதன் முடிவின்படிசிறந்த வேலை செய்யும் ஆண்டி வைரஸாக GDATA முதலிடத்திலும் AVIRA இரண்டாவது இடத்திலும் McAfee மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இவைகள் எல்லாமே காசுகொடுத்து வாங்கி பயன்படுத்தும் ஆண்டி வைரஸ்களின் தரவரிசை என்பது குறிப்பிடத்தக்கது.
தர விபரங்களை "பி.டி.எப்" பார்மட்டில் தரவிறக்கம் செய்து தெரிந்து கொள்ள கீழே உள்ள "லிங்கை" கிளிக் செய்யுங்கள்.
தேங்க்ஸ்-தமிழ்மணம்
ஐஸ்லாந்தில் நயனதாரா!
கஜினிக்குப் பின்னர் நயனதாராவுடன், சூர்யா இணைவது இதுவே முதல் முறையாகும்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பாடலுக்காக ஐஸ்லாந்து போய் திரும்பியுள்ளது ஆதவன் படக்குழு. ஐஸ்லாந்தில் படமாக்கப்பட்ட முதல் தமிழ்ப் பாடல் என்ற பெருமையும் இந்தப் படத்துக்குக் கிடைத்துள்ளது.
காரணம், இதுவரை எந்தத் தமிழ்ப் படக் குழுவும் ஐஸ்லாந்துக்குப் போனதே இல்லையாம்.
தாமரை எழுதிய ஏனோ ஏனோ பனித்துளி என்று தொடங்கும் அந்தப் பாடலுக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். இந்தப் பாடலுக்கு ஆடிப் பாடத்தான் சூர்யா, நயனதாரா ஐஸ்லாந்து போனார்களாம்.
இன்னொரு பாடலை டார்ஜிலிங்கில் வைத்து ஷூட் செய்தனராம்.
16 ஜூன் 2009
டோணிக்கு செய்த தவறுகள் என்ன?-ரசிகர்கள் குமுறல்
வெறும் 3 ரன்களில் சூப்பர் எட்டு ஆட்டத்தில் இங்கிலாந்திடம் தோல்வியைத் தழுவியது இந்தியா. நடப்புச் சாம்பியனான இந்தியா இந்த முறை, அரை இறுதிக்குக் கூட முன்னேற முடியாமல் முடங்கிப் போனது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இந்த ஏமாற்றத்தை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. கேப்டன் டோணியின் சில தவறான முடிவுகளால்தான் தோல்வி அடைய நேரிட்டதாக ரசிகர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் கருதுகின்றனர்.
டோணி மூன்று தவறுகளை செய்ததாக ரசிகர்கள் கருதுகிறார்கள்.
அது -
1. பவுன்சர்களை சந்திக்கவே பயந்த ரவீந்திர ஜடேஜாவை 4வது வீரராக இறக்கியது மாபெரும் தவறு. அவருக்குப் பதில் யூசுப் பதானையோ அல்லது யுவராஜ் சிங்கையோ இறக்கியிருந்தால் ஆட்டத்தின் போக்கு வேறு விதமாக இருந்திருக்கும்.
2. சிறப்பாக பந்து வீசி வந்த ஆர்.பி.சிங்கையும், அனுபவம் வாய்ந்த ஜாகிர்கானையும் தொடர்ந்து பந்து வீசச் செய்யாமல், இஷாந்த் சர்மாவை கூப்பிட்டது 2வது தவறு. சிங்கும், கானும் பந்து வீசியிருந்தால் இங்கிலாந்தின் ரன் குவிப்பைக் கட்டுப்படுத்தியிருக்கலாம்.
3. முக்கியமான கட்டத்தில், கையில் ஐந்து விக்கெட்கள் இருந்த நிலையிலும் அடித்து ஆடாமல் சிங்கிள் சிங்கிள் ரன்னாக டோணி எடுத்ததை ரசிகர்கள் படு கோபத்துடன் விமர்சிக்கின்றனர்.
இதை கருத்தைத்தான் பல்வேறு கிரிக்கெட் நிபுணர்களும் கூறியுள்ளனர். டோணியின் தவறுகள்தான் ஆட்டத்தின் போக்கை குளறுபடியாக காரணம் என்கிறார்கள் அவர்கள்.
இந்த நிலையில், டோணிக்கு எதிராக ஆங்காங்கே ரசிகர்கள் போராட்டத்தில் குதித்தனர்.
அவரது சொந்த ஊரான ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில், ரசிகர்கள் டோணிக்கு எதிராக கோஷமிட்டு அவரது கொடும்பாவியை எரித்தனர்.
இதேபோல உ.பியிலும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடந்தன.
போராட்டத்தைத் தொடர்ந்து ராஞ்சியில் உள்ள டோணியின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களும் சிச்சுவேசன் சாங்ஸ்சும்!
- செமிஸ்டர் ஆரம்பத்தில்..
- பரீட்சைக்கு ஒரு மாதத்திற்கு முன்..
- பரீட்சைக்கு ஒரு வாரம் முன்..
- பரீட்சைக்கு சில மணி நேரங்களே இருக்கையில்..
- பரீட்சையின் போது…
- பரீட்சைப் புள்ளிகள் அறிவிக்கப்பட..
- இறுதியில்..
Task Manager -இன் பயன்பாடுகள்.
டிப்ஸ்:-
தற்சமயம் உபயோகிக்காத அப்ளிகேஷன்களை மினிமைஸ் செய்வதன் மூலம் மெமெரி உபயோகத்தை கணிசமான அளவில் குறைக்க முடியும்.
Options menu -வில் Hide when minimized கிளிக் செய்து மினிமைஸ் செய்துவிட்டால், டாஸ்க் மேனேஜர் ஒரு சிறிய பச்சை நிற ஐகானாக உங்கள்
சிஸ்டம் ட்ரேயில் தெரியும். அதில் கர்சரை கொண்டுபோனால் சிபியு உபயோக சதவீதத்தை அறிந்து கொள்ளலாம்.
ஸ்டைல்! ஸ்டைலஸ்டைல்...!
அரசியல் பிரவேசம் - முடிவை ஒத்தி வைக்கிறார் விஜய்?
உண்மையில் விஜய்யின் தந்தை சந்திசேகரன்தான் விஜய்யை எப்படியாவது அரசியலுக்குள் இழுத்து வந்து விட வேண்டும் என்ற வேகத்தில் இருக்கிறாராம்.
இதற்காக இரு வாரங்களுக்கு முன் ரசிகர் மன்ற நிர்வாகிகளைக் கூட்டி ஆலோசனையும் நடத்தினர்.
ஆனால் இந்த முடிவிலிருந்து இப்போது திடீரென விஜய் பின்வாங்கியுள்ளதாக செய்திகள் 14 ஜூன் 2009
PC 2 Phone for Free - Evaphone
We do not need to download any special software from the internet to
use this service. We can directly make calls using our favourite browser. Mic, Headset is the essential equipments needed to make calls. That site has all the details about free calls.
Check it out there : http://www.evaphone.com/
















