Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

23 பிப்ரவரி 2009

ஆஸ்கார் விருதை இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன்: ஏ.ஆர்.ரகுமான்

ஸ்லம்டாக் மில்லினர் படத்துக்காக சிறந்த இசை மற்றும் சிறந்த பாடல் என இரண்டு விருதுகளை பெற்ற பின்னர், விழா மேடையில் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழில் பேசினார்.

அப்போது பெருமிதம் பொங்க அவர் கூறியதாவது: நான் இங்கு வருவதற்கு முன் மிகுந்த அச்சத்தோடும், மகிழ்ச்சியோடும் இருந்தேன். ஏதோ திருமணத்திற்கு வருவது போல இருந்தது. இந்த விருதுக்கு காரணம் என் அம்மாவின் ஆசீர்வாதம். அவருக்கும், விருது வழங்கிய அகாடமிக்கும் எனது நன்றிகள்.

எனது இசைக் கலைஞர்கள், இந்த படத்தில் பணியாற்றியவர்கள் அனைவருக்கும் நன்றி. என் வாழ்நாள் முழுவதும் எனக்கு அன்பு செலுத்தவும், பகைத்து கொள்ளவும் வாய்ப்புகள் கிடைத்தன. நான் அன்பையே தேர்வு செய்தேன்.

கடவுள் நம்மோடு இருக்கையில் எல்லாம் கிடைக்கும். இந்த விருதை என் தாயகமான இந்தியாவுக்கு அர்ப்பணிக்கிறேன் என்றார்.

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com