Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

23 பிப்ரவரி 2009

ஏ.ஆர்.ரகுமானுக்கு இரண்டு விருதுகள்.. ஆஸ்கார் மேடையில் தமிழ் மொழியில் பேசிய ரஹ்மான்

ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக ஏ.ஆர்.ரகுமானுக்கு இரண்டு விருதுகள் கிடைத்துள்ளன. உலக அளவில் திரைப்படத் துறையினருக்கான உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் இன்று காலை அறிவிக்கப்டடது. பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆஸ்கார் விருதை வென்றார். ஆஸ்கார் விருதை பெறும் முதல் தமிழர் என்ற பெருமையை பெற்றார். முன்னதாக, பிரபல இயக்குனர் சத்ய ஜித்ரேக்கு வாழ்நாள் சாதனையாளர் என்ற பெயரில் ஆஸ்கார் விருது வழங்கப்பட்டு இருக்கிறது.

ஸ்லம்டாக் மில்லியனர் படத்துகக்கு சிறந்த இசைக்காகவும், சிறந்த பாடலுக்காகவும் விருது அளிக்கப்பட்டுள்ளது.இங்கு தனது விருது பெற்ற பின் இறுதியில்தமிழ் மொழியில்பேசியரஹ்மான்"எல்லாப் புகழும் இறைவனுக்கே "என்று கூறி ஆஸ்கார் மேடையில் தமிழ் மொழி பேசி உலக தமிழர்களின் பேரன்பையும் பெற்றுள்ளார் ..........ஆஸ்கார் மேடையில் ஒலித்த முதல் தமிழ் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும்.

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com