Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

25 பிப்ரவரி 2009

நடிகை மதுமிதாவுக்கு மார்ச் 1ஆம் தேதி திருமணம்

நடிகை மதுமிதா, தெலுங்கு கதாநாயகன் சிவபாலாஜியின் காதல் திருமணம் மார்ச் 1 ம் தேதி ஐதராபாத்தில் நடக்கிறது.

பார்த்திபன் ஜோடியாக ‘குடைக்குள் மழை’ படத்தில் அறிமுகமானவர், மதுமிதா. ஐதராபாத்தை சேர்ந்தவர். தொடர்ந்து ‘அமுதே’, ‘இங்கிலீஷ்காரன்’, ‘நாளை’ உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது அமீர் ஜோடியாக ‘யோகி’, ‘சொல்ல சொல்ல இனிக்கும்’ படங்களில் நடித்து வருகிறார்.

தெலுங்கில் ‘ஆர்யா’, ‘சங்கராந்தி’, ‘அன்னாவரம்’, ‘சந்தமாமா’ ஆகிய படங்களில் சிவபாலாஜி நடித்துள்ளார். இவர் தொழிலதிபரும் கூட. தமிழில் சத்யராஜ் நடித்த ‘இங்கிலீஷ்காரன்’ படத்தில் இரண்டாவது ஹீரோவாக அவர் நடித்தபோது, அப்படத்தில் ஜோடியாக நடித்த மதுமிதாவுடன் நட்பு ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மலர்ந்தது. பிறகு இருவரும் தங்கள் பெற்றோரிடம் காதல் விஷயத்தைச் சொல்லி, அவர்களின் சம்மதத்தைப் பெற்றனர்.

இதையடுத்து மதுமிதா, சிவபாலாஜியின் நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடந்தது. இதில் இயக்குனர்கள் அமீர், சுப்ரமணியம் சிவா உள்பட தமிழ், தெலுங்கு நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர். இப்போது மதுமிதா, சிவபாலாஜியின் திருமண தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது. மார்ச் 1 மஙிதேதி அவர்கள் திருமணம் ஐதராபாத்தில் நடைபெறுகிறது.

எம்.பி.ஏ படித்து வரும் மதுமிதா, திருமணத்துக்குப் பின் நடிப்புக்கு முழுக்குப் போட மாட்டேன். நல்ல வாய்ப்புகள் வந்தால் தொடர்ந்து நடிப்பேன் என்று கூறியுள்ளார்.

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com