Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

16 ஏப்ரல் 2009

3வது முறையாக மாரடைப்பு - மருத்துவமனையில் மணிரத்தினம் அனுமதி

இந்தியாவின் முன்னணி இயக்குநரான மணிரத்னம் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 3வது முறையாக அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதால் ஆபத்தான கட்டத்தில் அவர் இருப்பதாக கூறப்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மணிரத்தினம் அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழ் சினிமாவை மேம்பட்ட நிலைக்கு உயர்த்தியவர்களில் ஒருவராகக் கருதப்படும் இயக்குநர் மணிரத்னம், இப்போது ராவண் எனும் புதிய படத்தை இயக்கி வருகிறார். விக்ரம் - அபிஷேக் பச்சன் மற்றும் ஐஸ்வர்யா ராய் நடித்து வரும் இந்தப் படம் கிட்டத்தட்ட முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் நேற்று இரவு மணிரத்னத்துக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை உடனடியாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அவரது மீடியா மேனேஜர் நிகில் முருகனிடம் தொடர்பு கொண்டோம். மணிரத்னம் இப்போது தீவிர சிகிச்சையில் உள்ளார் என்றும், தற்போது நிலைமை சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறுவதாகவும் நிகில் தெரிவித்தார். 3வது முறை.. மணிரத்னத்துக்கு இதற்கு முன்பு 2 முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. முதலில் ஆய்த எழுத்து படப்பிடிப்பின்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதன் பிறகு ஓய்வு எடுத்து வந்த மணிரத்னம், சற்று இடைவெளி கொடுத்து குரு படத்தைத் தொடங்கினார். குரு படத்தின் ஷூட்டிங்குக்காக கொல்கத்தா சென்றிருந்தபோது அவருக்கு மீண்டும் மாரடைப்பு வந்தது. இந்த நிலையில் இப்போது ராவண் படத்தை இயக்கும் போது மீண்டும் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இச்செய்தி மணிரத்னம் மற்றும் சினிமா ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. மணிரத்னம் நலம்பெற்று வந்து நல்ல சினிமாக்கள் தர பிரார்த்திப்போம்!

நடிகைகளின் ஆடையும் போலி கலாச்சாரவாதிகளும்!

நடிகைகள் அளவிற்கு அவர்கள் அணியும் ஆடைகளும் சர்ச்சைக்குள்ளாகி வருகின்றன. சரியாகச் சொல்வதென்றால், ஆடையை முன்னுறுத்தி சர்ச்சைக்குள்ளான நடிகைகளே அதிகம்.
ஆடைகள் என்று வரும்போது, திரையில் அவர்கள் அணிந்துவரும் ஆடைகளை விட, நிஜத்தில் அவர்கள் அணியும் ஆடைகளே பிரச்சனையின் ஊற்றுக்கண்ணாக இருந்து வருகிறது.
பொது நிகழ்ச்சியில் மினி ஸ்கர்ட்டில் வந்ததற்காக நமிதா, ஸ்ரேயா தொடங்கி மல்லிகா ஷெராவாத் வரை பலர் சர்ச்சைக்குள்ளாயினர். சிலர் மீது கலாச்சார மீறல் வழக்கும் தொடரப்பட்டது. மேலோட்டமான பார்வையில் இது இயல்பான நிகழ்வாகத் தோன்றும். ஆனால், ஆடை குறித்த நமது சமூகப் பார்வை, அதன் பின்னுள்ள அரசியல் சிக்கலானது. நடிகைகள் பொது நிகழ்ச்சிகளில் அணிந்துவரும் உடை சிக்கனமாக, ஆபாசமாக தமிழ் கலாச்சாரத்துக்கு எதிராக இருக்கிறது என்பது பொதுவான குற்றச்சாட்டு. இதனை முன்வைப்பவர்கள் இரு வகையினர். முதல் வகையினர் நடிகைகளின் உடைகளில் மட்டும் கவனம் குவிப்பவர்கள் அல்லர். உலகமயமாக்கல் மற்றும் நுகர்வு கலாச்சாரத்தால் தமிழர்களின் அடைளாயங்கள், நடைமுறைகள், பழக்க வழக்கங்கள் இன்னபிற அழிந்து வருவதில் நிஜமான கவலை கொண்டவர்கள். நடிகைகளின் ஆடை குறைப்பு இவர்களின் கலாச்சார மீட்பு அரசியலின் ஒரு பகுதி. இரண்டாம் வகையினர், அழிந்துவரும் தமிழர் அடையாளங்கள் குறித்து எந்த கவலையும், புரிதலும் இல்லாதவர்கள். விளம்பரம் ஒன்றே இவர்களின் இலக்கு. நடிகைகளை விமர்சிப்பதன் மூலம் கிடைக்கும் விளம்பர வெளிச்சத்தில் உயிர் வளர்க்கும் கலாச்சார போலிகள் இவர்கள். திரையில் நடிகைகளின் அரைகுறை நிர்வாணத்தை ரசித்துக் கொண்டே, பொது இடங்களில் அவர்களின் கால்வாசி நிர்வாணத்துக்கு முதலைக் கண்ணீர் வடிப்பவர். தங்களை தமிழ் கலாச்சார காவலர்களாக காட்டிக் கொண்வதே இவர்களின் ஒரே நோக்கம். துரதிர்ஷ்டம் என்னவென்றால், இரண்டாம் வகையினரின் கூறுகள் இந்த சமூகத்தின் ஒவ்வொரு மனிதனின் தோலிலும் மறைந்து கிடக்கிறது. இந்த ஆணாதிக்க கூறுகள் பெண்களிடத்தும் காணக்கிடப்பதை துரதிர்ஷ்டம் அன்றி வேறென்ன சொல்ல! சிவாஜி படவிழாவில் குட்டைப் பாவாடை (ஸ்க்ரிட்) அணிந்து வந்த ஸ்ரேயா, கால்மேல் கால்போட்டு அமர, பார்வையாளர் பகுதியிலிருந்து பெரும் கூச்சல் கிளம்பியது. முதல்வர், சூப்பர் ஸ்டார் போன்றவர்களின் முன்னால் ஒரு நடிகை கால் மேல் கால் போட்டு அமர்வதா? ஸ்ரேயாவின் சின்ன உடையை இயக்குனர் ஷங்கர் கண்டித்ததாக மறுநாள் பத்திரிக்கைகள் எழுதின. என்ன வேடிக்கை! ஸ்ரேயா என்ற நடிகைக்கு ஜாக்கெட் கூட தராமல், உள்ளாடையுடன் ஒரு பாடல் முழுக்க ஆடவிட்டவர் ஷங்கர். அதைவிட நாகரிகமான உடையில்தான் விழாவுக்கு வந்திருந்தார் ஸ்ரேயா. பிறகு ஏன் கண்டிப்பு? இதற்கு இரண்டு காரணங்கள் கூறமுடியும். நடிகை என்பவள் கேளிக்கை பொருள். திரையில் அவள் எந்தவிதமான ஆடையும் அணியலாம், ஆடிப்பாடலாம், ஆண்களை மகிழ்விக்கலாம். திரையைவிட்டு வெளிவரும் போது அவள் பெண். இரண்டாவது காரணம் வியாபாரம். ஸ்ரேயா அரைகுறை உடையில் திரைப்படத்தில் தோன்றினால் நாலு பேர் பார்க்க வருவாக்ரள், கல்லாவில் காசு நிறையும். அதே அரைகுறை உடையில் பொது நிகழ்ச்சியில் தோன்றில் 'ரசிகன்' இலவசமாகவே பார்த்து ரசிப்பான். இலவசமாக கிடைக்கும்போது அவன் ஏன் காசு கொடுத்து திரையரங்குக்கு வரவேண்டும். இவர்கள் படத்தை பார்க்க வேண்டும்! ஆக, என்னுடைய படத்தில் நான் சொல்லும் காட்சியில் நான் சொல்லும் உடையில் நடிப்பதே உன் வேலை. பொது இடங்களில் ஆச்சாரமாகவே வரவேண்டும். நடிகைகள் அணிந்துவரும் உடைக்கும் இதுபோன்ற கலை வியாபாரிகளும், நுகர்வு (விளம்பர) உலகின் வணிக நோக்கமே காரணம். மல்லிகா ஷெராவாத்துக்கு ஒரு விளம்பரத்தில் நடிக்க மூன்று கோடி கொட்டி கொடுத்ததும், நமிதா முன்னணி நடிகைகளின் படங்களில் எல்லாம் நடிப்பதற்கும் அவர்கள் திறமையா காரணம்? கவர்ச்சியான உடம்பு. அந்த உடம்பே காரணம்! உடலே உனக்கு மூலதனம் என மல்லிகா ஷெராவத்துக்கும், நமிதாவுக்கும், இன்னபிற நடிகைகளுக்கும் கற்றுக் கொடுத்தது நாம் மேலே பார்த்த வியாபாரிகளும், நுகர்வு கலாச்சாரமும்தான். நடிகைகளின் உடைகள் குறித்து கவலைப்படும், வழக்கு தொடரும் கலாச்சாரவாதிகள் உண்மையில் போர் தொடுக்க வேண்டியது இந்த வியாபாரிகளுக்கு எதிராகத்தான். என்ன செய்வது... அதற்கான திராணி இந்த போலி கலாச்சாரவாதிகளுக்கு இல்லாததோடு, அவர்களின் நோக்கமும் அதுவல்ல என்பதுதான் நம்முன் உள்ள மிகப்பெரிய பிரச்சனை!

பிளாக்கர் டெம்பிளேட் - Lifestyle

Templates எப்படி பிளாகரில் இணைப்பது என்று பார்ப்போம்.....! 1. Download your favorite Blogger XML template to your computer. If the template is contained in a zip file, ensure you have extracted the XML template. 2. Log in to your Blogger dashboard and go to Template> Edit HTML 3. Ensure you back up your old template in case you decide to use it again. To do this, click on the "download full template" link and save the file to your hard drive. 4. Look for the section near the top where you can browse for your XML template: 5. Enter the location of your template and press "upload". 6. The HTML of your new template will now appear in the box below. You can preview your template or simply save to start using it! [Download]

கமல் படத்தில் ஏ.ஆர்.ரஹ்மான்

கமல், அசின் நடிக்கும் 19 ஸ்டெப்ஸ் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். அவருடன் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஒருவரும் பணிபுரிவதாக தகவல். ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தே மாதரம் ஆல்பத்தை இயக்கியவர் பரத்பாலா. இவர் 19 ஸ்டெப்ஸ் என்ற படத்தை இயக்குகிறார். சரித்திர காலத்து கதை இந்த 19 ஸ்டெப்ஸ். இந்தப் படத்தில் கேரளாவைச் சேர்ந்த குறுநில மன்னரின் மகளாக நடிக்கிறார் அசின். இவருக்கு களரி சண்டை கற்றுக் கொடுக்கும் ஆசானாக கமல். கமலிடம் களரி படிக்கும் ஜப்பானைச் சேர்ந்த இளைஞனுக்கும் அசினுக்கும் காதல். இந்தப் படததை ஜப்பான் மொழியிலும் வெளியிட திட்டமிட்டுள்ளார் பரத்பாலா. காரணம், ஜப்பான் இளைஞராக இந்தப் படத்தில் நடிப்பவர் பிரபல ஜப்பானிய நடிகர் தடானாபோ அசானா. 19 ஸ்டெப்ஸில் ஜப்பான் பாணி இசையும் பயன்படுத்தப்படுகிறது. அதற்காக ஜப்பானின் புகழ்பெற்ற இசையமைப்பாளர் ஜொய் ஹிசய்ஜி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். கமலின் மர்மயோகி படத்துக்கு ரஹ்மான் இசையமைப்பதாக இருந்தது. அந்தப் படம் தற்காலிகமாக கைவிடப்பட்டது அவரது ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தது. 19 ஸ்டெப்ஸ் அந்த ஏமாற்றத்தை ஓரளவு குறைத்துள்ளது.

13 ஏப்ரல் 2009

'பேவாட்ச்' பமீலாவுக்கு நான்காவது திருமணம்

'பேவாட்ச்' தொடர் புகழ் பமீலா ஆண்டர்சன் விரைவில் நான்காவது திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்.கனடாவில் பிறந்த நடிகை பமீலா ஆண்டர்சன் துவக்கத்தில் ஹாலிவுட்டில் தான் நடித்தார் என்றாலும் அவருக்கு பேரும் புகழும் பெற்று தந்தது 1992ல் வெளிவந்த 'பேவாட்ச்' டிவி தொடர் தான்.இதை தொடர்ந்து ஹாலிவுட்டிலும் வெற்றிகள் குவி்ந்தன. ஆனால், சினமா வாழ்க்கைக்கு நேர் மாறாக இவரது திருமண வாழ்க்கை தொடர்ந்து தோல்வியை சந்தித்து. ஒரு முறை, இரு முறை அல்ல மூன்று முறை திருமணம் செய்து கொண்டு பின்னர் விவகாரத்து பெற்றார்.இவரது முதல் கணவர் பிரபல டிரம்ஸ் இசைக்கலைஞர் மோட்லே டாமி லீ. இவர்களுக்கு பிரான்டன் (12), டைலன் (11) என இரண்டு குழந்தகள் பிறந்த நிலையில் அவரை விவாகரத்து செய்தார். இவரை தொடர்ந்து ராப் பாடகர் கிட் ராக் மற்றும் சமூக சேவகர் ரிக் சாலமன் ஆகியோர் மணந்து பின்னர் விவகாரத்து பெற்றார்.தற்போது 41 வயதான நிலையில் பமீலா நான்காவது திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளிவந்தன.
இந்த ரகசியத்தை முதலில் கசியவிட்டவர், பமீலாவின் உடை தயாரிப்பளரும், பிரபல பேஷன் டிசைனரான ரிச்சி ரிச் தான். மியாமியில் நடந்த பார்ட்டி ஒன்றில் பங்கேற்ற ரிச்சி சக விருந்துனர்களிடம் பமீலாவுக்கு தான் புதிய திருமண உடைகளை டிசைன் செய்து வருவதை போட்டு உடைத்துள்ளார். பமீலா ஆழ்கடல் நீச்சல்வீரரான ஜேமி பட்கெட் என்பவருடன் டேட்டிங் செய்து வருவதை அடுத்து அவரை தான் திருமணம் செய்ய போகிறார் என கூறியுள்ளார். இது குறித்து பமீலா கூறுகையில், எனது இரண்டு மகன்களுக்கு ஜேமியை மிகவும் பிடித்துவிட்டது. அதனால் தான் இந்த திருமண ஏற்பாடு என்றார்.

கோலிவுட் துணை நடிகை கடத்தல்?

சினிமா படப்பிடிப்புக்கு சென்ற துணை நடிகை மாயமானார். அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுவதால் தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை வளசரவாக்கத்தைச் சேர்ந்த காமாட்சியின் மகள் பூஜா என்ற யோகேஸ்வரி (21). சினிமா துணை நடிகையான இவர் தெனாவட்டு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.மேலும் கல்கி, மகள் உட்பட பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வருகிறார்.கடந்த 30ம் தேதி தனக்கு சினிமா படப்பிடிப்பு உள்ளது என்றும், வர இரண்டு நாட்கள் ஆகும் என்றும் கூறிவிட்டு வீட்டை விட்டு சென்றுள்ளார்.ஆனால், வீடு திரும்பாததால் இவரது தாயார் காமாட்சி செல்போனில் அவரை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால், அது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.இதையடு்த்து காமாட்சி தனது மகளின் நண்பர்கள், படப்பிடிப்புக் குழு ஆகியோரிடம் விசாரித்தும் பலனில்லை.இதற்கிடையே, பூஜாவிடமிருந்து அவரது தாயக்கு போன் வந்துது. அதில் பேசிய பூஜா, தன்னை சிலர் பிடித்து வைத்து இருப்பதாகக் கூறிவிட்டு விவரம் சொல்வதற்குள் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது.இதையடுத்து வளசரவாக்கம் போலீசில் கமாட்சி புகார் செய்தார்.பூஜாவுக்கு சினிமா பட வாய்ப்பு வாங்கித் தரும் ஏஜெண்டிடம் போலீசார் விசாரணை நடத்தியபோது, நான் பூஜாவை எங்கும் அழைத்துச் செல்லவில்லை என்று கூறிவிட்டார். அதே நேரத்தில் பூஜா தங்கள் வீட்டிற்கு வந்ததாகவும், பகல் முழுவதும் இருந்துவிட்டு மாலையில் சென்று விட்டதாக ஏஜெண்டின் மனைவி போலீசாரிடம் கூறியுள்ளார்.பூஜா கடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுவதால் தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடக்கிறது

கணினிக்கான இலவசஆன்டி வைரஸ்களில் எது சிறந்தது?

காசு கொடுத்து வாங்க முடியாதவர்கள் தங்கள் கணினியில் பல நிறுவனங்கள் வழங்கும் "இலவச ஆன்டிவைரஸ்" தொகுப்புகளை உபயோகிப்பார்கள் .ALWIL(avast! home edition) GRISOFT(avg free edition),BID DEFENDER,AVIRA( anti vire personal) CLAMWIN உட்பட பல நிறுவனங்கள் "இலவச ஆன்டி வைரஸ்" தொகுப்புகளை தந்து வருகிறது.இந்த "ஆன்டி வைரஸ்"களில் எது சிறந்தது?.என்று உங்களுக்கே ஒரு குழப்பம் வரும், அல்லது வந்திருக்கலாம். பல கணினி சம்பந்தமான நிறுவனங்கள் "AVG" நிறுவனம் வழங்கும் இலவச " ஆன்டி வைரஸ் சாப்ட்வேர்" தொகுப்பை தான் சிறந்தது என்று நமக்கு பரிந்துரைக்கின்றன.
ஆனால் நான் உபயோகித்து பார்த்த வகையில் "AVIRA" நிறுவனம் வழங்கும் "இலவச ஆன்டி வைரஸ் தொகுப்பு" தான் மிகச்சிறந்தது என்று சொல்ல முடியும்.ஐந்துமுறை "AVG" நிறுவனம் வழங்கிய "இலவச ஆன்டி வைரஸ்" தொகுப்பை பயன்படுத்தி பார்த்தேன்.அதன் செயல்பாடுகள் பெரிய அளவில் இல்லை. "www.katz.cd,www.seriels.ws" போன்ற தளங்களில் நாம் எதாவது டவுன்லோட் செய்தால் கூடவே வைரஸ்களும் சேர்ந்து வந்துவிடும். அவைகளை நீக்குவதற்கான வேலைகளை "AVG" தொகுப்பு சரியாக செய்வதில்லை, அந்த இணைய தளத்திற்கு செல்லும் முன்னால் எச்சரிக்கை மட்டுமே செய்கிறது. வைரஸ்களை நீக்குவதில் "AVG" ஆன்டி வைரஸ் சிறப்பாக செயல்படுவதில்லை . ஆனால் "AVIRA" வழங்கும் இலவச தொகுப்பு மிகச்சிறப்பாக வேலை செய்கிறது. அதை நமது கணினியில் வைத்துகொண்டால் நாம் காசு கொடுத்து தனியாக ஒரு "ANDIVAIRAS" தொகுப்பை வாங்கவேண்டிய அவசியம் இருக்காது ."ILEGAL WEBSITE" களிலும் , "USB PEN DRIVE " களிலும், "CD,DVD" களிலும் "AVIRA" வழங்கும் இலவச ஆன்டிவைரஸின் செயல்பாடுகள் மிகச்சிறப்பாக உள்ளது.அந்த ஆன்டிவைரஸை http://www.free-av.com என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.நீங்களும் பயன்படுத்தி பார்த்துவிட்டு உங்கள் அனுபவங்களை சொல்லுங்கள்.

அழகிகளுடன் ரஹ்மான் .....!

ஆஸ்கர் நாயகன் யார் என்றால் அது ஏ.ஆர்.ரஹ்மான் தான் என்று நிரூபித்துவிட்ட இசைப்புயல் அடுத்து POP உலகிற்குள்ளும் நுழைந்துவிட்டார். Pussicat Dolls அழகிகளுடன் ரஹ்மான் Jai ho என்று பாடியிருக்கிறார். இது ரிமிக்ஸ் வெர்சன் என்றாலும் ரஹ்மானின் அடுத்த கட்ட உயர்வுக்கு இது உறுதுணையாக இருக்கும்!!Pussicat Dolls ஏற்கனவே Stick with you, Don't cha, போன்ற பெரிய ஹிட் பாடல்களைக் கொடுத்த அழகிகளின் குழு!!
அவர்களுக்கு ஏற்கனவே இந்தியா மேல் ஒரு கண்... பத்தாகுறைக்கு இசைப்புயலின் தொடர் அவார்ட்கள்.. இப்போ இந்த பாடல்தான் ஹாட்...... இப்பாடலில் நிகோல் இந்தியப் பெண்மணியைப் போல பொட்டு வைத்துக் கொண்டு வருவது குதூகலமாக இருக்கிறது. மிகவும் அழகாக இருக்கிறார்... கீழே ஒரு லுக் விடுங்களேன்...இசைப்புயல் விரைவில் Grammy அவார்டுகளை வெல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்!!!Pussycat Dolls இன் முன்னணி பாடகியான Nicole Scherzinger உடன் நம் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானும் இணைந்து பாடும் ரிமிக்ஸ் பாடல் Jai ho (You Are My Destiny)யூ ட்யூபில்...
இந்த பாடலை இலவசமாக டவுன்லோடு செய்யவேண்டுமா? இங்கே..

11 ஏப்ரல் 2009

கமலின் அடுத்த படம் உன்னைப் போல் ஒருவன்!

கமலின் அடுத்த படமான தலைவன் இருக்கின்றான், பெயர் மாற்றப்பட்டு விட்டது. இப்போது 'உன்னைப் போல் ஒருவன்' எனப் பெயர் சூட்டியுள்ளார் கமல்ஹாஸன். இந்த அறிவிப்பை நேற்று முறைப்படி வெளியிட்டார் கமல். இநதியில் பெரும் வெற்றி பெற்ற எ வெட்னஸ்டே படத்தின் ரீமேக்தான் இந்தப் படம். கமலுடன் முதல்முறையாக மலையாள முன்னணி நடிகர் மோகன்லால் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று ஹைதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் துவங்கியது. இந்தப் படத்தின் தெலுங்குப் பதிப்பில் மோகன்லாலுக்குப் பதில் வெங்கடேஷ் நடிக்கிறார். இந்திப் பட இயக்குநர் சக்ரி இயக்குகிறார். கமல்ஹாஸனின் சொந்தப் பட நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனலும், யுடிவியும் இணைந்து தயாரிக்கும் படம் இது. இந்தப் படத்துக்காக ஒரு நிமிடம் ஓடக்கூடிய டிரைலர் ஒன்றையும் கமல் தயாரித்துள்ளார். பிரபல எழுத்தாளர் த.ஜெயகாந்தன் ஏற்கெனவே உன்னைப் போல் ஒருவன் எனும் திரைப்படத்தை இயக்கி, பெரும் வெற்றி கண்டார். தமிழ் திரைப்பட வரலாற்றில் இன்றும் ஒரு மைல் கல்லாகத் திகழ்கிறது ஜெயகாந்தனின் அந்தப் படம். அந்த சாதனையை கமலும் செய்ய வாழ்த்துவோம்!!

கந்தசாமி குழுவுடன் திருப்போரூர் மக்கள் மோதல்!

திருப்போரூர் அருகே கந்தசாமி படப்பிடிப்பு நடைபெற்றபோது, உள்ளூர் மக்களுக்கும், கந்தசாமி குழுவுக்கும் வாய்த் தகராறு ஏற்பட்டு படப்பிடிப்பு சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. கலைப்புலி தாணு தயாரிப்பில், சுசி கணேசன் இயங்கும் பிரமாண்ட படம் கந்தசாமி. விக்ரம் ஸ்ரேயா நடிக்கும் இந்தப் படத்தின் அசத்தல் ட்ரைலர்கள் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டன. இதனால் படத்துக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கோடையின் மிகப் பெரிய விருந்தாக வரவிருக்கும் கந்தசாமியின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. ஆனால் சில காமெடி காட்சிகளை மட்டும் எடுக்க வேண்டி இருந்ததால், சென்னையை அடுத்த திருப்போரூரில் கடந்த 3 நாட்களாக அந்தக் காட்சிகளை எடுத்து வருகிறார்கள். நேற்று மாலை இந்தப் படத்தின் சில காட்சிகள், அந்த ஊரின் முக்கியப் பிரமுகர் வீட்டின் வாசலில் நடைபெற்றுக் கண்டிருந்தது. அப்போது வீட்டு உரிமையாளர் வெளியூர் போயிருந்தாராம். உடன் தனது குழந்தைகளையும் கூட்டிப் போயிருக்கிறார். வீடு திரும்பும்போது, முதலில் குழந்தைகளை மட்டும் வீட்டுக்கு அனுப்பியுள்ளார். ஆனால் அவர்களை அந்தப் பக்கம் விடமறுத்து இழுத்துத் தள்ளியுள்ளனர் படப்பிடிப்புக்கு காவலாக நிறுத்தப்பட்ட செக்யூரிட்டி ஆட்கள். அப்போது ஒரு காமெடி காட்சி படமாகிக் கொண்டிருந்ததாம். தகவல் தெரிந்ததும் கடுப்பான வீட்டு உரிமையாளர் அந்த செக்யூரிட்டிகளுடன் கடுமையான வாய்த் தகராறில் இறங்க, அவருக்கு ஆதரவாக ஊர் பொதுமக்களும் சேர்ந்து கொள்ள பெரும் பிரச்சினையாகிவிட்டது. படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டது. பின்னர் இயக்குநர் சுசிகணேசனும் மன்சூர் அலிகானும் வடிவேலுவும் அந்த வீட்டு உரிமையாளர் மற்றும் பொதுமக்களிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டனர். அதன் பிறகுதான் மீண்டும் படம் பிடிக்கவே அனுமதித்தார்களாம்.

10 ஏப்ரல் 2009

இதுவரை பார்க்காத ரஜினி…! - எந்திரன் பற்றி மனம் திறக்கும் ஷங்கர்!

ருப்பது கோடம்பாக்கமாக இருந்தாலும், ஹாலிவுட் தரத்தில் சிந்தித்து அசத்தல் பொழுதுபோக்குப் படங்களைத் தருவதில் கில்லாடி எனப் பெயரெடுத்தவர் இயக்குநர் ஷங்கர்.

இவர் காண்பதெல்லாம் காஸ்ட்லி கனவுகள்… உயர்ந்த எண்ணங்கள், அதைவிட உயர்வான பட்ஜெட், எப்போதும் ரசிகனை மகிழ்வித்துக் கொண்டே இருக்கும் நேர்த்தியான, ரசனை மிகுந்த பொழுதுபோக்கு, அர்த்தமுள்ள நகைச்சுவை என தமிழ் சினிமாவுக்கு ஒரு புதிய ரசனையை அறிமுகப்படுத்திய பெருமை ஷங்கருக்கு உண்டு.

சூப்பர் ஸ்டார் ரஜினியை வைத்து சிவாஜி என்ற பிரம்மாண்டத்தைத் தந்த ஷங்கர், மீண்டும் அதே ‘ஸ்டைல் சாம்ராட்டு’டன் இணைந்து எந்திரன் - தி ரோபோ படத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். ஹாலிவுட் படங்களை மிஞ்சும் தொழில்நுட்பம், இந்தியாவின் படைப்புத் திறனை உலகுக்குப் பறைசாற்றும் முனைப்புடனும் ஷங்கர் உருவாக்கும் இந்த ரோபோ பற்றித்தான் இன்று சினிமா உலகம் முழுக்கப் பேச்சு.

சிவாஜி திரைப்படம் உருவாகி, ரிலீசுக்கு சில மாதங்களுக்கு முன்புதான் பரபரப்பாக செய்திகளில் உலாவர ஆரம்பித்தது. ஆனால் ரோபோ என்ற பெயர் அறிவிக்கப்பட்ட கணத்திலிருந்தே மீடியா முழுக்க அது பற்றிய செய்திகளே ஆக்கிரமித்து நிற்கின்றன.

தனது படங்களைப் பற்றிய ரகசியங்களைக் காப்பதில் ஷங்கருக்கு இணை அவர்தான். யாரும் எதிர்பாராத நேரத்தில் ஆரம்பித்து, எதிர்பாராத நேரத்தில் முடித்துவிட்டுத் திரும்புவது அவரது வழக்கம்.

ஹைதராபாத் ஸ்டுடியோவில் பிரமாண்ட அரங்கில் ஷூட்டிங் நடந்துகொண்டிருக்கிறது என யாராவது அரைவேக்காட்டுத்தனமாக பிட் போட்டுக் கொண்டிருக்கும்போதே, ஷங்கர் ஹாய்யாக தனது சென்னை வீட்டில் நீச்சல் குளத்தில் மேயும் மீன்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருப்பார். அதுதான் ஷங்கர்.

எந்திரன் குறித்து அவர் இதுவரை யாருடமும் வெளிப்படையாகப் பேசியதில்லை. ஆனால் முதல்முறையாக ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ அவரது சிறப்புப் பேட்டியை வெளியிட்டுள்ளது. அதன் சில பகுதிகளை மட்டும் இங்கே தமிழில் தருகிறோம்.

சூப்பர் ஸ்டாரைப் போலவே யாரும் எதிர்பாராததைச் செய்ய வேண்டும் என்ற உணர்வு மிக்கவும். இல்லாவிட்டால் மீண்டும் மீண்டும் ஷங்கருடன் இணைந்து படம் பண்ண வேண்டும் என ரஜினி வெளிப்படையாகச் சொல்வாரா!

எந்திரன் - என்ன நிலை இப்போது?

இதுவரை மூன்று பாடல் காட்சிகளைப் படமாக்கி முடித்திருக்கிறார்கள். அவற்றில் இரண்டு பெருவில். மற்றொன்று பிரபுதேவா நடன அமைப்பில், ஹைதராபாத் பிலிம் சிட்டியில். முக்கியமான காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டன. இன்னும் ரோபோ சம்பந்தமான காட்சிகள் எடுக்க வேண்டியுள்ளதாம்.

படம், அதை தான் உருவாக்கும் விதம் குறித்து இப்படிக் கூறுகிறார் ஷங்கர்:

“என் படங்கள் ரசிகர்களுக்குப் பெரும் விருந்தாக அமைய வேண்டும் என விரும்புகிறேன். அதனால் ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்து உருவாக்குகிறோம். சரியான முன் தயாரிப்பு இல்லாமல் ஒரு சின்ன காட்சியைக் கூட நாங்கள் எடுப்பதில்லை. எந்த சமரசமும் இல்லாமல், மிகுந்த கவனத்தோடுதான் நான் எல்லா படங்களையும் உருவாக்குகிறேன். ஆனால் எந்திரனுக்கு அதையெல்லாம் விட 10 மடங்கு கூடுதல் கவனம் செலுத்துகிறோம்.

சரியான முறையில், உரிய தரத்தில் கொடுத்தால் தமிழில் ஃபேண்டஸி கதைகள் ரசிகர்களின் வரவேற்பைப் பெறும்.

எந்திரனில் அனிமேட்ரானிக்ஸ் எனும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பல காட்சிகளை எடுத்து வருகிறோம். தமிழ் சினிமாவுக்கு இது மிகவும் புதுசு. எலக்ட்ரானிக்ஸ், ரோபோ டெக்னாலஜியைப் பயன்படுத்தி, பொம்மைகளையும் உயிருள்ள மனிதர்களைப் போலவே நடமாட வைக்கும் இந்த முயற்சிக்கு தமிழில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

பாடல்களை அழகழகாக, விதம் விதமாகப் படமாக்க எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனால் அதற்காக எல்லாப் பாடல்களுக்கும் வெளிநாட்டுக்குப் போகும் ஆளல்ல நான். என் மற்ற படங்களில்கூட ஒரு சில பாடல்களுக்கு மட்டுமே வெளிநாடு. மற்றபடி எல்லாமே உள்நாடுதான்.

முதல்வனில் மிகப்பெரிய ஹிட் ‘உப்புக் கருவாடு…’ அதை இங்கேதான் எடுத்தேன். சிவாஜியில் கலக்கிய ‘அதிரடிக்காரன்…’ உள்ளூரில், அதுவும் தலைநகர் சென்னையில் எடுக்கப்பட்ட பாடல்தான்.

எந்திரனில் மிக அற்புதமான, விஞ்ஞான அடிப்படியிலான செட்களை உருவாக்கியுள்ளோம். முழுக்க முழுக்க எதிர்காலத்தில் உலகில் என்னென்ன மாறுதல்கள் வரும் என்பதைக் கணித்து உருவாக்கப்பட்ட செட்கள் அவை. மிகச் சிறப்பாக வந்துள்ளன.

இந்தப் படத்தில் மிகப் பெரிய ஆச்சரியங்கள் காத்திருக்கின்றன. ஒவ்வொரு பாடல் அட்டகாசமாக எழுதப்பட்டு, அருமையாக மெட்டமைக்கப்பட்டுள்ளன…”

சரி… சூப்பர் ஸ்டார் பற்றி கூறுங்கள்…

சிவாஜிக்குப் பிறகு மீண்டும் ரஜினி சாருடன் பணியாற்றுவது மிக மிக மகிழ்ச்சியான ஒரு அனுபவம். அவருடன் பணியாற்றத் துவங்கிய பிறகுதான் அவர் எத்தனை பவர்ஃபுல் மனிதர், எத்தனை எளிமையானவர் என்பதைப் புரிந்து கொண்டேன். அவர் மிகப்பெரிய உயரத்திலிருக்கிறார். மிகச் சிறந்த மனிதர்களுடன் தொடர்பில் உள்ளார், ஆனாலும் அவர் காட்டும் பணிவு யாரையும் வியக்கச் செய்யும். அவருடன் பணியாற்றுபவர்களுக்கும் இந்தப் பணிவு வரும் என்பதே உண்மை.

இந்தப்படத்துக்கு ஐஸ்வர்யா ராய்தான் கதாநாயகி என்று முன்பே முடிவு செய்துவிட்டோம். கதைக்குத் தேவையான அனைத்து சிறப்பம்சங்களும் கொண்ட அற்புதமான டிகை அவர்.

எந்திரனில் தனி காமெடி ட்ராக் கிடையாது. கதையிலேயே தேவையான நகைச்சுவை உள்ளது. கருணாஸும் சந்தானமும்தான் காமெடி பகுதியை செய்கிறார்கள். இயல்பான நடிகர்கள்.

இந்தப் படத்தின் மொத்த சிறப்பு பற்றி?

சிவாஜியில் ஸ்டைல் ஸாங் பாத்திருப்பீங்க. இந்தப் படத்தில் அதை விட பலமடங்கு புதுமையான பாடல் இருக்கு. ரஜினி சார் பிரமிக்க வச்சிருக்கார். அந்தப் பாடலுக்கு நடனம் அமைத்த பிரபு தேவாவே, ‘நான் இதுவரை இப்படி ஒரு கடினமான மூவ்மெண்டை அமைத்ததில்லை’ என்று என்னிடம் சொல்லும் அளவுக்கு பிரமாதமான, வித்தியாசமான ரஜினியையும், அவரது ஸ்டைல் நடனத்தையும் பார்க்கப் போகிறீர்கள்! என்கிறார் ஷங்கர்.

வாவ்… பல்ஸை எகிற வைக்கிறீங்க ஷங்கர் சார்!

-வினோ

என்வழி ஸ்பெஷல்

ஷங்கர் பேட்டி ஆதாரம்: டைம்ஸ் ஆப் இந்தியா

விண்டோஸ் 1.0 முதல் விண்டோஸ் 7 வரை - அனைத்தும் ஒரே இடத்தில்

Microsoft Windows Screen shots - Windows 1.0 to Se7en

Windows 1.0
Windows 2.0
Windows 3.0
Windows 3.11
Windows 95
Windows 98
Windows 2000
Windows Millennium
Windows XP
Windows Vista
Windows 7 - Se7en
Must See - Amazing Video of 101 Photoshop Tips

07 ஏப்ரல் 2009

சிம்ரன் குளித்ததைப் பார்த்தவர் யார்

நிச்சயம் நீங்கள் எதிர்ப்பார்த்து வரும் சுவாரசியம் இங்கு கிடைக்காது நேரத்தை விரயஞ் செய்ய விரும்பாதோர் ஏதாவது உருப்படியாகச் செய்யலாம். நம்மவர் திரைப்படத்தில் ஒரு காட்சி வகுப்பறைக்கு வரும் கமல் பாடத்தை துவங்காமல் ஒரு சினிமா பாடலின் முதல் வரியை பாடுவார். உடனே மாணவர்கள் எல்லாம் அடுத்த வரியைப் பாடும் போது இது சினிமாவில் உங்களுக்கு பிடித்த ஊடகத்தில் வந்ததால் ஞாபகம் வைத்துள்ளீர்கள். அதுபோல உங்களுக்கு பிடித்தாற் போல் கற்பித்தல் என் கடமை என்று சொல்வார். இப்படித்தான் மாணவர்களுக்கு science ஐ எப்படி இலகுவாக கொடுக்கலாம் என யோசித்த போது ஏலவே நடைமுறையில் உள்ள சில நுட்பங்கள் ஞாபகம் வந்தது. படித்து பாருங்கள் உங்களுக்கு தெரிந்து ஏதும் இருந்தால் பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் பயன் படுத்திக் கொள்கிறேன். 9 கோள்களையும் (இப்போது எட்டு) ஞாபகம் வைக்க ஒரு எளிய முறை My very educated mother just show us nine planets இதில் ஒவ்வொரு சொல்லினதும் முதலெளுத்தைப் பார்த்தால் M- Mercury, V-Venus, E-Earth, M-Mars, J-Jupiter, S-Saturn, U- Uranus, N-Neptune, P-Pluto ஆவர்த்தன அட்டவணை எல்லோருக்கும் தெரியும் அதை மனனம் செய்ய மாணவர் மத்தியில் புழங்கும் ஒரு வார்த்தை விளையாட்டு முதல் இருபது மூலகங்களை(elements) மனனம் செய்ய பயன்படுகிறது. Hello hero little Baby bens car number O five Neeyum Naanum MGR Alla Sivaji Pathmini Saroja குளித்ததை Aru kanaala கண்டது H- Hydrogen, H-helium, L-lithium, B-Boron, Be- Beryllium, C-carbon, F-Florin, Ne-Neon, Na- Sodium( Natrium) ,Mg-Magnesium , Al- Aluminium, Si- Silicon, P-phosphorus, S-sulphur, கு-குளோரின், Ar-Argon, K- potassium, க- கல்சியம் சிவாஜி, MGR, பத்மினி, சரோஜா எனப் பெயர்களை பார்த்தால் இது ரொம்பப் பழசு போல் தெரிகிறது. சிவாஜி குளிப்பதில் அத்தனை சுவாரசியம் இல்லாததால் அதை சிம்ரன் என மாற்றலாம் என நினைக்கிறேன். (அப்பாடா தலைப்பையும் பதிவையும் தொடர்பு படுத்தியாச்சு) இன்னுமொன்று தடையி(resistor) ஒன்றினது தடைப் பெறுமானத்தைக் காண அதிலுள்ள நிற வளையங்களைப் பயன் படுத்த வேண்டும். அந்நிற வளையங்களுக்கு உரிய பெறுமானத்தை பின்வரும் முறையில் ஞாபகம் கொள்ளலாம். B.B. ROY of Great Britain had a Very Good Wife இங்கு முதலாவது B க்கு 0 என ஆரம்பித்து தொடர்ச்சியாக அதன் பெறுமானங்கள் கூடி wife இல் வரும் w க்கு 9 என முடியும். குறித்த பெறுமானத்துக்குரிய வளையத்தின் நிறம் அதற்குரிய எழுத்தினால் காட்டப்பட்டுள்ளது. ஒளிக்கதிர் ஐதான ஊடகத்திலிருந்து அடர்ந்த ஊடகத்தை நோக்கிப் போகையில் செவ்வனை நோக்கி முறியும் என்பதை " ஐயோ அடிக்காதே நோகுது" என ஞாபகம் கொள்ளலாம். வானவில்லின் ஏழு நிறங்களுடன் தொடர்புப் பட்ட VIBGYOR அனைவரும் அறிந்தது. தமிழில் இப்படியும் சொல்லலாம் " ஊத்தைக் கந்தையா நீ பச்சை மரத்தடியில் செக்கச் சிவப்பாய்" முதல் எழுத்துக்களை கவனியுங்கள். மூலகங்களின் தாக்க வீதம் கூடிச் செல்லும் ஒழுங்கை காணும் முறை 1950 களின் இலங்கை அரசியல் நிலவரத்தை மையமாகக் கொண்டது. " பொன்னார் பிளான் வெறும் பாதகச் செயல் ஐயா ஈழத் தமிழர் இலங்கை நாட்டில் அல்லலுறும் மக்கள் சோகத்தால் கண்ணீரைப் பொழிந்தனர்" முதல் எழுத்துகளின் படி மூலகங்களாவன பொன்,பிளாட்டினம்,வெள்ளி,பாதரசம்,செப்பு,ஐதரசன்,Pb,இரும்பு,நாகம்,அலுமினியம்,மக்னீசியம்,சோடியம்,கல்சியம்,பொட்டாசியம் இது முற்றிலும் சரியானதாக இப்போது தோன்றவில்லை ஆனால் சில மாற்றங்களுடன் பயன்படுத்தலாம். நேரத்தை தின்றிருந்தால் மன்னியுங்கள் எதற்கும் திட்டியேனும் ஒரு பின்னூட்டமும் தமிழ்மணம் தமிழிஷ் இல் வோட்டும் போட்டுடுங்க.

இணையத்தில் உலவும்போது கேடு விளைவிக்கும் தளங்களைக் கண்டறிய

இணையத் தளங்களில் உலா (surfing) வரும்போது எவையெல்லாம் நல்ல தளங்கள், எவை கேடு விளைவிப்பவை என்பதை நாம் அறியோம். ஏதேனும் தெரிந்திராத, அறிந்திராத (unknown) தளத்தைப் பார்வையிடும்போது எப்போதுமே ஒரு பாதுகாப்பில்லாத தன்மையை உணர்ந்திருப்போம். ஆயிரக்கணக்கான இணைய தளங்கள் நமது பார்வைக்கு நல்ல தளங்களாகத் தெரிகின்றன. ஆனாலும் அவற்றின் உள்ளே குறும்புசெய்யும் விசமத்தனமான, கேடு விளைக்கக் கூடிய நிரல்களை எழுதிப் பொதிந்திருப்பார்கள். சட்டத்தில் உள்ள ஓட்டைகளை குற்றம் செய்வபவர்கள் சாதகமாகப் பயன்படுத்துவார்கள். அதே போல உலவியின் நிரலில் உள்ள பிழைகளை அறிந்திருப்பவர்கள் (hackers), அதனை அவர்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்தி அதற்கேற்ற எதிர்நிரல் (malicious code) ஒன்றை எழுதி அதை இணையத் தளத்தில் கோர்த்திருப்பார்கள். அந்த குறிப்பிட்ட சில தளங்களில் நாம் உலா வரும் வேலையில், அவை நமது கணினியில் பாதகம் விளைவிக்கக் கூடிய செயல்களைச் செய்ய ஆரம்பிக்கும். ஏதேனும் குற்றச் செயல்களில் அந்த நிரல்கள் ஈடுபட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் அதன் செயல்பாடுகளை நாம் அறியோம். நம்மிடம் நல்ல வைரசு எதிர்ப்புத் தொகுப்பான் (anti virusl) இருந்திருக்கும். நாமும் அதை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டே இருப்போம். எனினும் சில நேரங்களில் அதுவும் கையை விரித்துவிடும். உலாவரும்போது பாதுகாப்புத் தன்மையை (security) அதிகரிப்பதற்காகவே சிறப்புக் கருவிகள் (tools) சிலவற்றை இங்கே காண்போம். மிகப் பயங்கரமான தளங்களை நாம் உலவ முயற்சித்தால் இந்தக் கருவிகள் நமக்கு எச்சரிக்கை விடுத்து இப்போது தளத்தைப் பார்வையிடலாகாது - அதில் கேடுவிளைவிக்கக் கூடிய ஆபத்து உள்ளது என சிவப்பு அறிக்கை (red alert) விடும். நல்ல தளங்கள் எவை? கெட்ட தளங்கள் எவை - என்பதை இதன் மூலம் எளிதாக அறிந்திடலாம். நம்பகமான உலாவலுக்கு இவற்றை நாளும் பயன்படுத்தலாம். உலவியில் தள முகவரியைத் தட்டி Enter அழுத்திய உடனேயே எச்சரிக்கை செய்திடும் கருவிகள் இவை. இந்தக் கருவிகள் பற்றிய மேலதிக விபரங்களை கீழ்க்கண்ட சுட்டிகளை அழுத்தித் தெரிந்துகொள்ளவும்.
McAfee Site Advisor LinkScanner Online Norton Safe Web Anti-malware tool by Google Web Of Trust தொடர்புடைய சுட்டி : WOT (Web Of Truest) பற்றி மேலதிக தகவல்களுக்கு இந்த Firefox உலவியின் பாதுக்காப்புத்தன்மையை மேலும் அதிகரிக்க பதிவைக் காண்க.

11 பேரை ஏமாற்றி மணந்த பெங்களூர் அழகி

பணத்துக்கு ஆசைப்பட்டு அடுத்தடுத்து 11 பேரை மணந்து கோடிக்கணக்கில் நகை, பணத்தை சுருட்டிய பெங்களூர் அழகியை போலீசார் கைது செய்தனர். இந்த நூதன மோசடி பற்றிய விவரம் வருமாறு- பெயர் கவுசர் பேகம். வயது 26. பார்ப்பதற்கு சினிமா நட்சத்திரம் போல அழகாக இருப்பார். இவருக்கு உம்மே கவுசர், கவுசர் சல்மா என்ற புனை பெயர்களும் உண்டு. பெங்களூர் எச்.பி.ஆர். லே அவுட் 2-வது பிளாக்கில் பெற்றோருடன் வசித்து வருகிறார். இவர் தனது 16 வயதிலேயே கல்யாண மோசடியை ஆரம்பித்து விட்டார். இதற்கு அவருடைய பெற்றோரும் உடந்தையாக இருந்தனர். கவுசர் பேகத்துக்கு மும்பை ஐதராபாத் போன்ற முக்கிய நகரங்களில் ஏஜெண்டுகள் இருக்கிறார்கள். அவர்களிடம் கவுசரின் போட்டோக்கள் அடங்கிய ஆல்பம் இருக்கும். அந்த படங்களில் பெற்றோருடன் சேர்ந்து கவுசர் அடக்க ஒடுக்கமாக கல்லூரி மாணவி போல போஸ் கொடுத்து இருப்பார். திருமணத்துக்கு பெண் பார்த்துக்கொண்டு இருக்கும் தொழில் அதிபர்களை கவுசரின் ஏஜெண்டுகள் சந்தித்து, ``இந்த பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள்''. வசதி குறைவுதான் என்றாலும் உங்களுக்கு பிடித்து இருந்தால் பேசி முடிக்கலாம் என்று சொல்வார்கள். கவுசரின் போட்டோவை பார்த்தவுடனேயே மயங்கி போய்விடும் தொழில் அதிபர்கள் கவுசரின் ஏஜெண்டுகள் விரிக்கும் வலையில் எளிதில் விழுந்து விடுவார்கள். ``பணம் என்னய்யா பணம் இப்படிப்பட்ட அழகியைத்தான் தேடிக்கொண்டிருந்தேன் உடனே பேசி முடி'' என்று உடனே பச்சைக்கொடி காட்டுவார்கள். அடுத்த சில நாட்களில் திருமண விழா அமர்க்களமாக நடந்து முடியும். புதிய கணவருடன் கவுசர் தேனிலவுக்கு செல்வார். நாட்கள் இன்பமாக கழியும். கவுசரின் அன்பில் உருகிப்போகும் கணவர், பணத்தை தண்ணீராக செலவழித்து நகைகள், விலை உயர்ந்த துணிகள் என்று கேட்டதையெல்லாம் வாங்கிக்குவிப்பார். மனைவியை நடமாடும் நகைக்கடையாக மாற்றுவார். ஒரு நாள் காட்சி மாறும். கணவர் ஆபீசுக்கு சென்று இருக்கும் நேரத்தில் நகைகள் மற்றும் வீட்டில் இருக்கும் ரொக்கப்பணத்தை ஒட்டுமொத்தமாக சுருட்டிக்கொண்டு கவுசர் அம்மா வீட்டுக்கு ஓடி விடுவார். அதோடு இந்த நாடகம் முடிந்து விடாது. மேலும் படிக்க வருண் காந்தியை ரோலர் ஏற்றி கொன்றிருப்பேன் லாலு பிரசாத் ஆவேசப் பேச்சு சென்னையில் ஒரே வாரத்தில் 2 பேரை மணந்த புரட்சி பெண்

05 ஏப்ரல் 2009

எதுவும் வேணாம்; தனிமைதான் வேண்டும்!-ரஹ்மான

ஆஸ்கர் வென்றதற்கு பாராட்டுவிழா, புதுப்படங்களுக்கு தேதி என்று யாராவது தேடி வந்தால் இப்போது ரஹ்மான் கூறுவது கிட்டத்தட்ட இந்த வார்த்தைகளைத்தான்! கூட்டம், விழாக்கள், நெருக்கடி... ஆரம்பத்திலிருந்தே இவையெல்லாம் ரஹ்மானுக்கு ஏக அலர்ஜி. ஏதாவது விழாவில் அவரைப் பேசச் சொன்னாலும்கூட, எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று கூறிவிட்டு வந்துவிடும் கூச்சசுபாவி!
AR Rahman
ஏகப்பட்ட விருதுகளை அள்ளிக் குவித்தாலும், ரஹ்மான் எப்போதும் தனிமை விரும்பியாகவே இருந்தார். தனது இசையமைப்பைக் கூட தனிமையில் இரவில் வைத்துக் கொள்வதுதான் அவரது ஸ்டைல். ஆனால் கிடைத்தற்கரிய ஆஸ்கர் விருதுகள் அதுவும் ஒன்றுக்கு இரண்டாக கிடைத்ததும், தன் மீது விழுந்த புகழ் வெளிச்சம் அவரைத் திக்குமுக்காட வைத்துவிட்டது. திரும்பிய பக்கமெல்லாம் கொண்டாட்டங்கள்... விழாக்கள்... விருதுகள். இவையெல்லாம் அவரது இசைப் பணியை வெகுவாகவே பாதித்துவிட்டன. கூடவே அவரைப் பற்றி வருகிற விமர்சனங்கள், கமெண்ட் என்ற பெயரில் அவரை விமர்சித்து வரும் கருத்துக்களை போன்றவை அமைதி நாயகனான அவரையும் கோபம் கொள்ள வைத்துள்ளன. இப்போது, இந்தியா முழுக்க சுற்றிவிட்டு சென்னைக்கு திரும்பிவிட்ட ரஹ்மான், தன்னைச் சந்திக்க வருபவர்களிடம் சுருக்கமாக ஒரு 'ஹலோ' சொல்லிவிட்டு வேலையை கவனிக்கப் போய்விடுகிறார். அதையும் மீறி விழா, பாராட்டு என யாராவது வற்புறுத்தினால்... 'அய்யோ... ஆளைவிடுங்க. நான் கொஞ்ச நாள் தனியா இருக்க விரும்புகிறேன்!', என்று ஒரு கும்பிடு போட்டு அனுப்பி வைக்கிறாராம்!

திருட்டுத்தனமாக வெளியாகிய விண்டோஸ் 7...?

இன்று இணையத்தில் ஆங்கில பிளாக்குகளை படித்துக்கொண்டிருந்த போது ஒரு வித்தியாசமான பதிவு கண்ணில் பட்டது. விண்டோஸ் 7 இன் 7068 x86(32-bit) டோரன்ட் தளங்களில் கிடைப்பதாக படங்களுடன் வெளியிட்டிருந்தனர். இந்த செய்தி இந்த தளத்திலிருந்து எடுக்கப்பட்டது.

Here are some details from the x86 iso:

File Name : 7068.0.090321-1322_x86fre_client_en-us_Retail_Ultimate-GRC1CULFRE_EN_DVD.iso Size : 2.53GB MD5: 9dbc20dc21e09f926c530799918215a0 SHA1: fd1f67a2727fe6aaf1c141ff34ae9af77a24a172 CRC32 : 26312514

And here is a little info about some of the changes:

- Overall performance improvement with some re-work of the kernel (most likely to remove some diagnostic branches) in preparation for RC. - Notepad.ini on startup (not really a bug) - Fixed WEI assessment code, more accurate - A newer build of IE8 optimized for 7068 - Memory management has been optimized a little - Added and replaced numerous drivers (which solves a lot of issues) - Fixed some Windows Update issues - Fixed some network discovery and wireless issues - Fixed some AERO issues - Improvements to Windows Media Center and media management - Changed the TCP half open limit from 10 to 120 - Improved support for external storage devices (ie. thumbs, NAS, etc.) - Improved startup and shutdown times - Added support for MP4 files and standard codecs - Enhanced printer support - Fixed some issues when doing an update from earlier builds and Vista - Fixed some dual display ichchuyes

Windows 7 Build 7068 x86 File Name : 7068.0.090321-1322_x86fre_client_en-us_Retail_Ultimate-GRC1CULFRE_EN_DVD.iso Size : 2.53GB MD5: 9dbc20dc21e09f926c530799918215a0 SHA1: fd1f67a2727fe6aaf1c141ff34ae9af77a24a172 CRC32 : 26312514 Download Windows 7 x86 build 7068

Windows 7 Build 7068 x64 File name : 7068.0.090321-1322_x64fre_client_en-us_Retail_Ultimate-GRC1CULXFRER_EN_DVD.iso Size : 3.23 GB Download Windows 7 x64 build 7068
File name : 7057.0.090305-2000_x86fre_client_en-us_Retail_Ultimate-GB1CULFRER_EN_DVD File size : 2.51 GB MD5 2a3863afe3453d1be642201fd3260ab2 CRC E34E099B CRC E34E099B SHA1 0f32dfe92d544f4690ab91c02b59dba665d4ca0f SHA1 0f32dfe92d544f4690ab91c02b59dba665d4ca0f Download : Windows 7 Build 7057

உங்களது தட்டச்சு வேகத்தை அளவிடுவது எப்படி?

பல ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் தனியாக தட்டச்சு நிலையங்கள் (Type writing institutes) இருந்தன. அவற்றில் பல்வேறு காரணங்களுக்காக (!) ஆண்களும், பெண்களும் கூட்டம் கூட்டமாக அலை மோதுவர். மோகன் நடித்த 'விதி' படத்தில் அவர் தட்டச்சு பயில்வதற்காக, மனோரமா நடத்தி வந்த தட்டச்சுப்பயிலகத்தில் சேர்ந்து அடித்த லூட்டியை எல்லோரும் அறிவோம். ஆனால் இப்போது வீட்டுக்கு வீடு கணினி மயமாகி விட்டது. அதனால் நாம் கணினியிலேயே தட்டச்சுப் பயிலலாம். உங்களது தட்டெழுதும் வேகத்தை உடனடியாக அறிவதற்காக ஒரு இணையத்தளம் உள்ளது. தள முகவரி : http://speedtest.10-fast-fingers.com/ அந்தத் தளத்தில் திரையில் தெரியும் வரிகளை அதன் கீழ் உள்ள text box ல் type செய்ய வேண்டும். சரியாக ஒரு நிமிடம் முடிந்தவுடன் அறிக்கை(result) வெளிவரும். அதில் நிமிடத்தில் எத்தனை வார்த்தைகளை தட்டும் வல்லமை பெற்றுள்ளீர்கள் என அறியலாம். எனக்கு 60 வார்த்தைகள் / நிமிடம் இருப்பதாக அந்தத் தளத்தின் அறிக்கை முடிவு காண்பித்தது. அதைத்தான் நீங்கள் கீழே காண்கிறீர்கள். 60 words சிறு குறிப்பு : உங்களது தட்டெழுதும் வேகத்தை அதிகரிக்கவோ / புதிதாகத் தட்டெழுத்துப் பயிலவோ இந்த மென்பொருளைத் தரவிறக்கி கணினியில் நிறுவிப் பயன்படுத்தவும். ஒளிக்களஞ்சியம் : கணினியில் தொடர்ந்தாற்போல் வேலை செய்வபர்களுக்கு வரும் ஒரு புதிய நோய் குறித்த காணொளி. நோயின் பெயர் carpal tunnel syndrome

03 ஏப்ரல் 2009

பாசம் வச்ச பச்சக்கிளிதான்....

டி.ராஜேந்தர் பார்ப்பதற்குதான் அன்னாசி மாதிரி! பிழிந்தால் நவரசம் என்பதை முன்பே சொல்லியிருந்தேன். அதுதான் இவ்வளவு கொடூரத்திற்கிடையேயும் நண்பர்களை தக்க வைத்திருக்கிறது இப்போதும்!
சுமார் பதினைந்து வருடங்களுக்கு முன் இவரோடு பார்த்தவர்களை இப்போதும் பார்க்கிறேன். குடந்தை ராஜப்பா, கருணாநிதி, மதி, மற்றும் சிலரின் பெயர்கள் மறந்துவிட்டது. ராஜேந்தரை சுற்றி சுற்றியே வருபவர்கள் இவர்கள். உயிருள்ளவரை உஷா காலத்திலிருந்தே அவரது உற்ற நண்பர்கள். அல்லது தொண்டர்கள். அல்லது கவுரவமான வேலைக்காரர்கள்! இவர்களுக்கு என்ன செய்திருக்கிறார் டி.ஆர்? கொஞ்சம் அக்கறையோடு கேட்டுப்பார்த்தால் உதட்டை பிதுக்குவார்கள். ஆனாலும், இவர்களின் சந்தோஷமும் துக்கமும் டி.ராஜேந்தர்தான். இவர்களையும், ராஜேந்தரையும் இறுக்கமாக முடுக்கி வைத்திருக்கிற ஸ்பானர் எது? அவர் கொடுக்கிற சின்ன சின்ன அன்புதான்! (நன்றாக கவனிக்கவும், அன்புதானே தவிர அன்பளிப்பு அல்ல) அப்போதுதான் தனியார் தொலைக்காட்சிகள் உருவாகி வந்த நேரம். தனது படங்களின் தொலைக்காட்சி உரிமையை எந்த டி.வி க்கும் வழங்கியிருக்கவில்லை இவர். அதனால் வாரத்திற்கு ஒருமுறை இவரது அலுவலகத்தில் அடுக்கப்பட்டிருக்கும் ஏதாவது இரண்டு படப்பெட்டிகளாவது தியேட்டர்களுக்கு போகும். அந்த பெட்டிகள் திரும்பி வரும்போது கூடவே கலெக்ஷனும் வரும். எல்லா செலவுகளும் போக குறைந்தது பத்தாயிரமோ இருபதாயிரமோ தருவார்கள். திருமதி. உஷா இருந்தால் "அவங்ககிட்டே கொடுங்க" என்று அந்தப்பக்கம் கை நீட்டி விடுவார். அவர் இல்லையென்றால், அந்த பணத்தை அப்படியே இவர்களுக்கு (இன்னும் சிலரும் அப்போது கூட இருந்தார்கள்) பிரித்துக் கொடுத்துவிடுவார். "யேய், அக்கா வர்றதுக்குள்ளே வந்து வாங்கிக்கோங்கப்பா" என்று இவர் அவசரம் காட்டுவது ஆச்சர்யமாக இருக்கும்! இன்றைய நிலையில் இந்த வருமானத்திற்கும் வாய்ப்புகள் இருக்கப் போவதில்லை. ஆனாலும் தொட்டு தொடர்கிறது இவர்களின் பாச பந்தம்! செங்கல்பட்டிலிருந்து தினமும் உஷா அலுவலகத்திற்கு வந்து கொண்டிருந்தார் லே-அவுட் ஆர்ட்டிஸ்ட் முருகன். உஷா இதழுக்கு இயக்குனர் ஒருவர் ஆவேச பேட்டியளித்திருந்தார். 'அர்ஜுன் ஒரு வளர்த்த கடா' -இதுதான் அந்த கட்டுரையின் தலைப்பு. நம்ம முருகன் அதை எப்படி எழுதியிருந்தார் தெரியுமா? 'அர்ஜுன் வளர்த்த, ஒரு கடா!' யாரும் கவனிக்காமல் அப்படியே பிரசுரமானது. கட்டுரையை வாசித்த வாசகர்கள் ஒரு இடத்திலும், அர்ஜுன் கடா வளர்த்தார் என்ற விபரமே வரவில்லையே என்று மண்டையை பிய்த்துக் கொண்டிருப்பார்கள். அப்படி சுதந்திரமாக செயல்படக் கூடியவர் முருகன். இந்த விஷயத்தை அறிந்த பிறகும், "பரவாயில்லைப்பா... ஒரு வார்த்தையை மாத்தி போட்டுட்டான்(?) விடுங்க" என்று மன்னித்துவிட்டார் டி.ஆர். இந்த முருகனுக்கு டி.ஆர்.அன்பு காட்டிய விஷயத்தைதான் இப்போது சொல்லப்போகிறேன். இவர் திமுக வில் எம்.எல்.ஏ வாக இருந்த நேரம் அது. செங்கல்பட்டில் ஒரு பொதுக்கூட்டத்திற்கு அழைத்திருந்தார்கள் டி.ராஜேந்தரை. வழக்கமாக மாலை நேரத்தில் ரயில் பிடித்து செங்கல்பட்டு போய் இறங்கும் முருகன் அன்று, "அண்ணே... ஒங்களோட வேன்ல வந்து இறங்கிக்கிறேன்" என்று கூறியிருந்தார். "அதுக்கென்னடா சரி" என்று கூறிவிட்டார் இவரும். இவரது பிரச்சார வேனில் மேற்படி கோஷ்டிகள் ஏறிக்கொள்ள வண்டி கிளம்பியது. பயணத்தின்போது முருகனிடம், வீடு எங்கேயிருக்கு? செங்கல்பட்டிலிருந்து வீட்டுக்கு போக எவ்வளவு து£ரம்? எப்படி போவே? என்றெல்லாம் விசாரித்தபடியே சென்றார் டி.ஆர். வேன் செங்கல்பட்டை அடைந்தபோது இவருக்காக காத்திருந்த தொண்டர்கள் பெருத்த கோஷத்தை எழுப்பினார்கள். கூச்சல்களுக்கிடையே இவரிடம் சொல்லிவிட்டு போக கூட அவகாசம் இல்லாமல் கதவை திறந்து கொண்டு கீழே இறங்கிவிட்டார் முருகன். ஆனால் முருகன் இறங்கும்போது பஸ்சில் போக சொல்லி இருபது ரூபாயை அவரது கையில் கொடுக்க வேண்டும் என்று நினைத்திருந்த ராஜேந்தர் இந்த அமர்க்களத்தில் கொஞ்சம் தாமதிக்க, அதற்குள் சில அடி து£ரம் போய்விட்டார் முருகன். வெளியே வாழ்க கூச்சல் கேட்டுக் கொண்டிருக்க, வேனின் ஜன்னல் இடுக்கு வழியாக ஒரு இருபது ரூபாய் தாளை நீட்டியபடி, "யேய்... முருகா. இந்தா பணம். பஸ்சிலே போ. நடந்து போகாதே" என்று ஓங்கிக் குரல் கொடுத்துக்கொண்டிருந்தார் டி.ஆர். பிறகு அந்த கூட்டத்தில் முண்டியடித்து பணத்தை வாங்கிக் கொண்டார் முருகன். இப்போது சொந்த ஊரில் கவுன்சிலராக இருக்கிறார் நம்ம முருகன். சென்னைக்கு ஏதாவது வேலையாக வந்தால் கூட, "அண்ணனை ஒரு எட்டு பார்த்திட்டு போகலாம்னு வந்தேன்" என்று நமக்கும் ஒரு போன் அடிப்பார்.

ஜீமெயில் இப்போ 5 வயசு பாப்பா!

இலவச ஈ-மெயில் சர்வீஸில், 10 MB-க்கே வழி இல்லாதபோது, (எக்ஸ்ட்ரா space வேணுமா! ரெண்டு, மூனு ஈமெயில் ஐடி ஓபன் பண்ணிக்கோ என்ற அட்வைசுக்கு நடுவில்) எடுத்த எடுப்பிலேயே, 1 GB இடம் கொடுத்து நம்ம எல்லாரையும் அலற வைத்த ஜீமெயில், 5 வயதை பூர்த்தி செய்துள்ளது. அந்த சமயத்தில் ஒவ்வொரு கிளிக்குக்கும், முழு பக்கத்தையும் லோட் செய்த ஈமெயில் சர்வீஸுகளுக்கு நடுவில், முன்னோடியாக AJAX தொழில்நுட்பத்தை பயன்படுத்தி முழு பக்கத்தையும் லோட் செய்யாமல், தேவையான இடத்தை மட்டும் நொடியில் அப்டேட் செய்யும் சித்து விளையாட்டு செய்து, மக்களை வளைத்துப் போட்டது. invite-டோட வந்தாதான் ஜீமெயில் ஐடி என்று கறாரா சொல்லி, உன்கிட்டே ஜீமெயில் invite இருக்கான்னு, invite இருக்கான்னு பார்க்கிரவன் ஒருத்தனைகூட விடாமல் நம்மளை கேட்க வைத்து, இலவச word of mouth ஜெனரேட் செய்த மார்கெடிங் ராஜதந்திரம். புதுசா கொண்டு வந்த வசதியின் பிரமிப்பு அடங்குவதற்கும், Gmail Labs-ல் இருந்து அடுக்கடுக்காக வசதிகள் அறிமுகம். Spam-ஆ! கிலோ எவ்வளவு என்று கேட்கக்கூடிய அளவிற்கு திறமையாக செயல்படும் ஸ்பாம் ஃபில்டர். இப்படி எவ்வளவோ சொல்லிக்கொண்டு போகலாம். ஒரே ஒரு குறை சொல்லலாம்னா, அது ஜீமெயில் இன்னும் beta-வில்தான் இருக்கு. கூடிய சீக்கிரம் வயசுக்கு வந்துடும்னு நம்புவோம்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com