உயிர், தனம்படங்களில் கதாநாயகியாக நடித்த நடிகை சங்கீதாவுக்கும் பாடகர் க்ரிஷுக்கும் இடையே சில மாதங்களாக காதல் இருந்து வந்தது. இவர்களின் காதலை க்ரிஷின் பெற்றோர்கள் எதிர்த்தனர். எதிர்ப்பை மீறி இருவரும் திருமணம் செய்துக்கொள்ள முடிவுசெய்தனர்.
அதன் படி இன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் சந்நிதானத்தில் காலை 8.00 மணியளவில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்து முறைப்படி அய்யர் தாலி எடுத்து தர மணமகன் க்ரிஸ் மனமகள் சங்கீதா கழுத்தில் தாலி கட்டினார்.
நடிகர்கள், நடிகைகள்பலர்திருமணத்திற்க்குவருகைபுரிந்திருந்ததால்போலிஸ்பாதுகாப்புஅதிகமாகபோடப்பட்டிருந்தது.
இதில் திரைபிரபலங்களான இயக்குநர் கங்கைஅமரன், தரணி, பாலா, நடிகர்கள் சின்னிஜெயந்த், ஜீவா, பாண்டியராஜன் அவரது மகன்கள், மனைவி, நடிகைகள் ஸ்ரீப்ரியா, ஸ்ரீதேவி, மும்தாஜ், ரகசியா, லஷ்மிராய், மகேஸ்வரி, ஜெயஸ்ரீ மற்றும் டி.வி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, டான்ஸர் ராம்ஜி, பாஸ்கி மற்றும் பெரியதிரை, சின்னதிரை பிரபலங்கள் கலந்து கொண்டு திருமண தம்பதிகளை வாழ்த்தினர்.
500க்கும் அதிகமான பொதுமக்கள் இத்திருமணத்தை காண கோயிலில் கூடியிருந்தனர். திருமணம் முடிந்து வெளியே வந்தவர்களை பொதுமக்கள் கூடிநின்று வாழ்த்துச்சொல்லி கை கொடுத்தனர். இன்முகத்தோடு திருமண தம்பதிகள் அதை ஏற்றுக்கொண்டனர்.