Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

10 செப்டம்பர் 2009

போலோ உலகக் கோப்பையில் ரஹ்மான் இசை நிகழ்ச்சி!

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள உலகக் கோப்பை போலோ போட்டியின் தொடக்க விழாவில் இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை வழங்கவுள்ளார். அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் அடுத்த ஆண்டு ஜூன் 11 மற்றும் 12 ஆகிய இரு நாட்கள் போலோ உலகக் கோப்பைப் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் முதல் முறையாக இந்தியாவும் பங்கேற்கிறது. இந்தியாவிலிருந்து நான்கு பேர் கொண்ட குழு இப்போட்டியில் கலந்து கொள்கிறது.
AR Rahman
இந்தியா [^] கலந்து கொள்ளும் போட்டி வாஷி்ங்டனில் உள்ள நேஷனல் மால் பூங்காவில் நடைபெறும். போட்டித் தொடக்க விழாவில் இசை [^]ப் புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சி நடைபெறுகிறது. பிரபல பாப் குழுவான புஸ்ஸிகேட் டால் குழுவினருடன் இணைந்து ரஹ்மான் நிகழ்ச்சியை வழங்குகிறார்.

நோக்கியாவின் புதிய 'சீரிஸ்' வகை மொபைல் போன்கள்?

மொபைல் சந்தையில் பெருகி வரும் கடும் போட்டியை சமாளிக்க பல நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு சந்தையில் புதிய புதிய மாடல் மொபைல் போன்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் நோக்கியா நிறுவனம் ஏற்கனவே பல சீரிஸ் வகை பெயர்களில் புதிய புதிய போன் களை நமக்கு தந்துள்ளது. அதில் 'ஈ - சீரிஸ்' மற்றும்' என்- சீரிஸ்' வகை மொபைல் போன்கள் குறிப்பிடத்தக்கவை. இதில் 'ஈ - சீரிஸ்' வகை மொபைல் போன்கள் பிசினஸ் வகை போன்களாகும் இந்த வகை போன்கள் நமது அலுவலக வேலைகளை எளிமையாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்பட்டது. 'என்- சீரிஸ்' வகை போன்கள் ஒரு மல்டிமீடியா வகையை சேர்ந்தவைகளாகும். இந்த வகை போன்களில் இல்லாத டிஜிட்டல் வசதிகளே கிடையாது.கேமரா,மொபைல்,ரேடியோ,மொபைல் டிவி,மியூசிக்,கேம்ஸ் என்று எல்லா வசதிகளும் உள்ளதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நோக்கியா நிறுவனம் விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தப்போகும் சீரிஸ் வகை தான் X - SERIES (எக்ஸ் - சீரிஸ்) இந்த வகை சீரிஸ்களில் தற்போது இரண்டு போன்களை நோக்கியா அறிமுகப்படுத்தப் போகிறது.அதில் ஓன்று ஜாவா வகை சேர்ந்தது, மற்றொன்று சிம்பியன் 5th version touch ஸ்க்ரீன் வகையை சார்ந்ததாகும். இந்த வகை சீரிஸ் போன்களின் வடிவமைப்பு புதுமையாகவும்,பார்ப்பவர்களின் கவனத்தை ஈர்ப்பதாவும் உள்ளது.கிட்டத்தட்ட 'என்- சீரிஸ்' வகை போன் களில் உள்ள எல்லா டிஜிட்டல் வசதிகளும் இதில் உள்ளது.அதையும் தாண்டி இதன் நினைவகமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. பார்த்தவுடன் வாங்க தூண்டும் வகையில் உள்ள இந்தவகை போன்கள் அடுத்த மாதம் சந்தையில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

கிரிக்கெட்-சில சுவையான தகவல்கள், ஆய்வுகள்: பாகம்-1

என்னடா இவன் அடிக்கடி கிரிக்கெட் பதிவுகளை எழுதுகிறானே என்று நினைக்கக் கூடாது. நான் இந்த விளையாட்டில் ஒரு பைத்தியம். 1996ல் பிடித்த இந்தப் பைத்தியம், 2005ல் உச்சக்கட்டத்தை எட்டி, இப்போது கொஞ்சம் சமநிலை அடைந்திருக்கிறது. நான் அணு அணுவாக ரசிக்கும் இந்த விளையாட்டின் புள்ளி விபரம் சார்ந்த சில ஆய்வுகளை www.cricinfo.com அடிக்கடி வெளிவிடும். அவற்றில் சிலவற்றைத் தமிழ்ப்படுத்தித் தரலாம் என்று நினைக்கிறேன்.
விக்கெட் எடுப்பதில் விண்ணன் யார்?
இதைத் தீர்மானிப்பதில் ஒரு கருதுகோளை நான் எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதாவது இந்த ஆய்வில் நான் பார்க்கும் எல்லாப் பந்து வீச்சாளர்களுமே ஆகக்குறைந்தது 200 விக்கெட்டுகளையாவது வீழ்த்தி இருக்கவேண்டும். ஏனெனில், ஒன்றரை வருடக் கிரிக்கெட் வாழ்வில் யாரையும் தீர்மானிக்க முடியாது. (உதாரணம்: இர்ஃபான் பதான், ஷோயப் அக்தர்). ஆகையால் இந்த 200 விக்கட் எடுத்தவர்களில் விக்கெட் எடுப்பதில் விண்ணன் யார் என்று ஆராய்வோம். இந்தப் பதிவை நான் இடும் இந்தக் கணத்தில் (09.09.09 மாலை 7:25) 30 பேர் 200 விக்கெட்டுகளுக்குமேல் வீழ்த்தி, சாதனை படைத்துள்ளார்கள். அதிகபட்சமாக முரளிதரன் 332 போட்டிகளில் 511 விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார். ஒரு நாள் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை முரளியும், வசீம் அக்ரமும் மட்டும் கடந்திருக்கிறார்கள். 400 விக்கெட்டுகளுக்கு மேல் சமிந்த வாஸ் மற்றும் வக்கார் யூனுசும், 300 விக்கெட்டுகளுக்கு மேல் ஷோன் பொலொக், கிளென் மக்ராத், அனில் கும்ப்ளே, ஜவகல் ஸ்ரீநாத், சனத் ஜயசூரிய, ப்ரெட் லீ ஆகியோர் கடந்திருக்கிறார்கள். 20 பேர் 200 க்கும் 300 க்கும் இடையில் இருக்கிறார்கள். இவர்களில் விக்கெட் எடுப்பதில் விண்ணன் யார் என்பதை Strike Rate எனப்படும் ஒரு விக்கெட் எடுப்பதிற்கு எத்தனை பந்துகள் எடுத்துக் கொள்கிறார்கள் என்பதில் இருந்து மட்டுமே கணித்தால் முதல் 10 இடங்களில் இருப்பது யார் தெரியுமா? (குறிப்பு: ஆகக்குறைந்தது 200 விக்கெட்டுகள் என்பதை ஞாபகத்தில் கொள்க)
  1. ப்ரெட் லீ (அவுஸ்திரேலியா)*: 29. 2 (பந்துகளுக்கு ஒரு விக்கெட், 308 விக்கெட்டுகள், 22.98 Average, 4.71 Economy Rate)
  2. சக்லெய்ன் முஷ்தாக் (பாகிஸ்தான்): 30.4 (288, 21.78, 4.29)
  3. ஷோயப் அக்தர் (பாகிஸ்தான்)*: 30. 4 (223, 23.86, 4.69)
  4. வக்கார் யூனுஸ் (பாகிஸ்தான்): 30.5 (416, 23.84, 4.68)
  5. அலன் டொனால்ட் (தென்னாபிரிக்கா): 31.4 (272, 21.78, 4.15)
  6. மக்காயா என்ரினி (தென்னாபிரிக்கா)*: 32.6 (266, 24.65, 4.53)
  7. அஜித் அகார்கர் (இந்தியா)*: 32.9 (288, 27.85, 5.07)
  8. கிளென் மக்ராத் (அவுஸ்திரேலியா): 34.0 (381, 22.02, 3.81)
  9. முரளிதரன் (இலங்கை)*: 35.0 (511, 22.77, 3.90)
  10. ஸாஹீர் கான் (இந்தியா)*: 35.9 (225, 29.18, 4.86)
இவர்களில் லீ மட்டுமே ஒரு போட்டியில் அதிகளவாக வீசக்கூடிய 60 பந்துகளில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்துகிறார் என்பதைக் கவனிக்க வேண்டும். முரளி, மெக்ராத் போன்ற ஜாம்பவான்களைவிட அகார்கர், என்ரினி போன்றோர் முன்னிலையில் இருக்கிறார்கள். வசீம் அக்ரம், சமிந்த வாஸ், ஷோன் பொலொக், கும்ப்ளே, ஸ்ரீநாத், ஷேன் வோர்ன் போன்ற இன்னபிற ஜாம்பவான்கள் இந்த முதல் பத்துப் பேரில் இல்லை. எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் ஒரு போட்டி இரு போட்டிகள், ஒரு வருஷம் இரண்டு வருஷம் மட்டும் விளையாடிய இளம் வீரர்களையும் சேர்த்து ஒரு முதல் 10 பட்டியல் தயாரித்தால், அதில் ப்ரெட் லீ தவிர வேறு யாருமே இடம்பெற மாட்டார்கள். அந்தப் பட்டியல் இதோ
  1. அஜந்த மெண்டிஸ் (இலங்கை)*: 21.8 (66, 14.48, 3.98)
  2. ரயான் ரென் டொஸ்காட்டே (நெதர்லாந்து)*: 25.8 (44, 20.86, 4.84)
  3. ஷேன் பொண்ட் (நியூசிலாந்து)*: 27.3 (128, 19.21, 4.20)
  4. ஷோன் ரெய்ற் (அவுஸ்திரேலியா)*: 28.4 (38, 25.28, 5.33)
  5. அன்ரனி கிரே (மேற்கிந்தியத் தீவுகள்): 28.8 (44, 18.97, 3.94)
  6. ப்ரெட் லீ (அவுஸ்திரேலியா)*: 29.2 (308, 22.98, 4.71)
  7. ஜெஃப் அலொட் (நியூசிலாந்து): 29.3 (52, 23.21, 4.73)
  8. லென் பாஸ்கோ (அவுஸ்திரேலியா): 29.5 (53, 20.11, 4.07)
  9. நவீத்-உல்-ஹசன் (பாகிஸ்தான்)*: 29.8 (100, 27.61, 5.54)
  10. மிச்செல் ஜோன்சன் (அவுஸ்திரேலியா)*: 29.9 (93, 24.11, 4.83)
* தற்போதும் களத்தில் இருக்கிறார்கள். எண்ணிக்கை மாறலாம். ஆக, இப்போதைய நிலவரப்படி, 200 விக்கெட்டுகளுக்கு மேல் கைப்பற்றி தன்னுடைய திறமையை நீண்ட காலம் நிரூபித்தவர்களில் விக்கெட் வீழ்த்துவதில் விண்ணன் என்று ப்ரெட் லீயைச் சொல்லலாமா??

09 செப்டம்பர் 2009

bIT bIT IT செய்திகள்

"Freemium" கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? அது வேறு ஒன்றும் இல்லீங்க. Free + Premium = Freemium. இந்த புதிய வார்த்தை Web 2.0 கம்பெனிகளின் தாரக மந்திரமாக திகழ்ந்து வருகிறது. அடிப்படை வசதிகளை இலவசமாகவும், மற்ற சிறப்பு/அதிக/விரும்பத்தக்க வசதிகளுக்கு கட்டணம் நிர்ணயித்தும் நடத்தப்படும் ஒரு Business Model-தான் இந்த Freemium. இதற்கு பல உதாரணங்களை காட்டலாம். எளிதான ஒன்று இதோ. Box.net வலைத் தளத்தில் 1 GB வரை இலவசமாக ஃபைல்களை சேமித்து வைத்துக் கொள்ளலாம். 1 GB-க்கு மேல் இடம் தேவை என்றால் பணம் கொடுக்க வேண்டும். நண்பர்களோடு அரட்டை அடிக்கும்போது “அது Freemium வெப்சைட்டுன்னு சொன்னாங்களே! ” என்று ஒரு பிட்டு போட்டு அவங்களை குழப்பி, கொஞ்ச நேரம் ரசிக்கலாம். அதுதான் என் ஸ்டைல். ஓபெரா (Opera ) இலவச இணைய உலாவியின் Version 10 வெளியாகி உள்ளது. Extension எதுவும் தேவைப்படாத அளவுக்கு நிறைய வசதிகளை உலாவியிலேயே (Browser) சேர்த்து இருக்கிறார்கள். Visual Tabs வசதியை கொண்டு வந்து இருக்கிறார்கள். இது விண்டோஸ், மேக், லினக்ஸ் மற்றும் பல இயங்குதளங்களுக்கும் (Operating Systems) கிடைக்கிறது. டவுன்லோட் சுட்டி. ஆகஸ்ட் 2009-ல் எடுத்த கணக்குப்படி இணைய உலாவிகளின் (Web Browser) பங்குச் சந்தை விகிதம் ஓபெரா சுமார் 2% கூகிள் குரோம் சுமார் 3 % ஆப்பிள் சஃபாரி சுமார் 4 % மொஸில்லா ஃபயர்ஃபாக்ஸ் சுமார் 24% மைக்ரோசாஃப்ட் இன்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் சுமார் 67% கூகிள் குரோம் உலாவியை வெளியிட்டு ஒரு வருடம் ஆகிவிட்டது. ஒரே வருஷத்தில் வெர்ஷன் 3-க்கு தூக்கிகிட்டு போயிட்டாங்க. மற்றபடி என்னத்த சொல்ல? லினக்ஸ், மேக் (Apple Mac) வெர்ஷன் இன்னும் வரவில்லை. ஃபயர்ஃபாக்ஸில் இருக்கும் Add-on/Extension வசதி இன்னும் இதில் வரவில்லை. ஃபயர்ஃபாக்சுக்கு இணையாக வரவே ரொம்ப நாளாகும் போல இருக்கிறது.
அமிதாப் பச்சனுக்கு Big B-ன்னு செல்லப்பேர். அப்போ நம்ம கூகிளுக்கு என்ன செல்லப்பேர் வைக்கலாம். Big G.

உற்சாக ஃப்ளாஷ்பேக்… சக நடிகர்களுக்கு கேக் ஊட்டிய ரஜினி!

ழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதைப் போன்றதொரு உற்சாகமான, இனிமையான விஷயம் உலகில் வேறேதும் இருக்குமா…

superstar-party

இல்லையென்பதுதான் பெரும்பானயினரின் பதிலாக இருக்கும்.

பள்ளி நாட்களையும், கல்லூரி காலத்தையும் பழைய மாணவர்கள் தங்கள் பழைய தடங்களில் பாதம் பதித்து நடந்து பரவசப்படுவதைப் போல, தாங்கள் வெற்றியின் உச்சத்தில் இருந்த பழைய காலங்களை நினைத்துப் பார்க்க திரையுலக நட்சத்திரங்களுக்கும் சமீபத்தில் ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது.

இந்த நிகழ்விலும் கதாநாயகன்… சாட்சாத் நமது சூப்பர் ஸ்டார்தான்.

பழைய நாட்களையும், பழகிய மனிதர்களையும் மதிப்பதில் அவருக்கு நிகர் அவரே அல்லவா… எனவே இந்த நிகழ்விலும் இந்த சூரியனைச் சுற்றியே மற்ற நட்சத்திரங்களின் கவனமும் அமைந்ததில் வியப்பில்லை அல்லவா!

விருந்து, பழைய நினைவுகளை பகிர்தல், உற்சாகமான நகைச்சுவை, கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்துதல், குடும்பம் பற்றிய நலம் விசாரிப்பு என அந்த கலந்துரையாடல் உணர்வுபூர்வமாக இருந்தது. சென்னையில் உள்ள லிஸி ப்ரியத்ர்ஷன் வீட்டில் இதற்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.

நடிகைகள் சுஹாஸினியும் லிஸி ப்ரியதர்ஷனும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதை ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக ஜெயா டிவி ஒளிபரப்பவிருக்கிறது.

அக்காலத்தில் முன்னணி ஹீரோ, ஹீரோயின்களாக இருந்தவர்கள் தொலைபேசியில் அழைக்கப்பட்டிருந்தனர்.

பிரபு, மோகன், பிரதாப்போத்தன், கார்த்திக், சுமன், சுரேஷ், பானுசந்தர் முதலாவதாக வந்தனர். அம்பரீஷ் மனைவி நடிகை சுமலதாவுடனும், விஷ்ணுவர்த்தன் மனைவி பாரதியுடனும் கலந்து கொண்டனர். சுரேஷ் மொட்டை தலையில் அடையாளமே தெரியாமல் இருந்தார்.

old-memories

நடிகைகள் ராதிகா, நதியா, ரம்யாகிருஷ்ணன், ரேவதி, சுகாசினி, பூர்ணிமா, லிசி பிரியதர்ஷன், ஷோபனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு சிகரம் வைப்பது போல் சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்து கொண்டு விருந்தை கலகலப்பாக்கினார். ரஜினி வந்த கையோடு ‘கேக்’ கொண்டு வரப்பட்டது.

பழைய கதாநாயகர்கள், நாயகிகள் சூழ்ந்து நிற்க ரஜினி கேக் வெட்டினார். எல்லோரும் கைதட்டி மகிழ்ச்சி வெளிப்படுத்தினார்கள். பின்னர் ரஜினியே கைப்பட தன் நண்பர்கள், சக நட்சத்திரங்களுக்கு ‘கேக்’ ஊட்டினார்.

ரஜினி ஜோடியாக நடித்த நதியா, ராதா, ராதிகா, பூர்ணிமா போன்றோர் அவருடன் தனித்தனியாக நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர். பிறகு சுவையான உணவு பரிமாறப்பட்டது. சாப்பிட்டபடியே ஒருவருக்கொருவர் ஜோடியாக நடித்த பழைய மலரும் நினைவுகள் பற்றி பேசி அதில் மூழ்கினர்.

ஒரு சுவாரஸ்யமான ஆட்டோகிராபை புரட்டிப் பார்த்த சந்தோஷத்துடன் நட்சத்திரங்கள் கலைந்து சென்றனர்.

12 வேடம்- கின்னஸில் பிரியங்கா!

வாட்ஸ் யுவர் ராசி என்ற புதிய படத்தில் 12 வேடங்களில் நடிக்கும் பிரியங்கா சோப்ரா, இதற்காக கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பிடிக்கவுள்ளார். காமினே படத்தில் நடித்ததற்காக சிறந்த விமர்சனங்களைப் பெற்றார் பிரியங்கா. இந்த நிலையில் அடுத்து வாட்ஸ் யுவர் ராசி படத்தில் 12 வேடம் பூணுகிறார். விரைவில் இது கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம் பெறப் போகிறதாம்.
Priyanka
இந்த சாதனை குறித்து பிரியங்கா சோப்ரா கூறுகையில், இதை நான் எதிர்பார்த்துக் கொண்டுள்ளேன். கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் எனது பெயரும் இடம் பெற சற்று நாட்களாகும். எனது பெயரும் பரிந்துரையில் உள்ளதாக அறிகிறேன். கின்னஸ் அதிகாரிகள் எனது படத்தைப் பார்வையிடுவார்கல். அதன் பின்னர்தான் அது சாதனையா என்பதை அவர்கள் முறைப்படி அறிவிப்பார்கள். படம் [^] ரிலீஸாவதற்கு முன்பு அந்த அறிவிப்பு வெளியாகும் என நினைக்கிறேன். அந்த நாளுக்காக பதட்டத்துடன் காத்திருக்கிறேன். அப்படி நடந்தால், நாளைக்கு நான் பாட்டியாகும்போது எனது பேரப்பிள்ளைகளை உட்கார்த்தி வைத்து இந்த சாதனையை கதை கதையாக சொல்லி மகிழ எனக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறி சிரிக்கிறார் பிரியங்கா. தொடர்ந்து பிரியங்கா கூறுகையில், நான் பரேலியைச் சேர்ந்த சாதாரண ராணுவ குடும்பத்தைச் சேர்ந்த பெண் [^]. மிஸ் வேர்ல்ட் பட்டம் வென்றபோது நானும் சரி, எனது குடும்பத்தினரும் சரி அதை எதிர்பார்க்கவில்லை. எல்லாமே எனக்கு எதிர்பாராமல்தான் நடந்து வருகிறது என்றார் பிரியங்கா.

ஈ-மெயில் சேவையில் முதலிடத்தில் யாஹூ

lankasri.comஇமெயில் சேவை வழங்குவதில் எந்த தளம் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது என்பதில் சரியான போட்டி நிலவி வருகிறது. அண்மையில் காம் ஸ்கோர் என்ற நிறுவனம் எடுத்த கணக்கின்படி கூகுள் இந்த இமெயில் ஏணியில் நான்காவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது. சென்ற மாதம் இதன் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 3 கோடியே 70 லட்சம். ஏ.ஓ.எல். நிறுவனம் 10 லட்சம் குறைவாகக் கொண்டு நான்காவது இடத்திற்குச் சென்றது. சரி, முதல் இடத்தில் உள்ளது யார்? சர்ச் இஞ்சின் பயன்பாட்டினைப் பொறுத்த வரை யாஹூவின் இடத்தைக் கூகுள் பெற்றிருக்கலாம். ஆனால் இமெயில் வாடிக்கையாளர் எண்ணிக்கையில் யாஹூ தொடர்ந்து ஏறத்தாழ 10 கோடியே 40 லட்சம் பேருடன் முதல் இடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் விண்டோஸ் லைவ் ஹாட் மெயில் உள்ளது. இதனைப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 4 கோடியே 70 லட்சம். இந்த விஷயத்தில் யாஹூ முதல் இடத்தைப் பெற்றிருந்தாலும், வேகமாகப் பெருகி வரும் இமெயில் தளம் என்ற வகையில் கூகுள் முதல் இடத்தைப் பிடித்துள்ளது. சென்ற ஆண்டு மட்டும் இதன் வாடிக்கையாளர் எண்ணிக்கை 46% உயர்ந்துள்ளது. இதனோடு ஒப்பிடுகையில் யாஹூவின் வளர்ச்சி 22% மட்டுமே. புதிய வசதிகளைத் தொடர்ந்து தருவதில் கூகுள் நிறுவனமே முன்னணியில் உள்ளது. இப்படியே போனால் கூகுள் இந்த பிரிவில் முதல் இடத்தைப் பெறுவது மிக எளிதான ஒன்றாக மாறிவிடும். யாஹூ தன் இடத்தைத் தக்கவைக்க கூகுளைப் போல ஏதேனும் புதுமையான வசதிகளைத் தந்து கொண்டே இருக்க வேண்டும்.

கூகுளிற்கு வயது பதினொன்று...!!!

lankasri.comசெப்டம்பர் 7ல் கூகுள் தன் பதினோராவது ஆண்டை முடித்து 12 ஆவது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளது. 1998ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ம் திகதி கூகுல் தனது முதலாவது பிறந்த நாளை கொண்டாடியது. கூகுள் எர்த் மற்றும் மேப்ஸ் மூலம் ஆகாயத்தில் அடி எடுத்து வைத்து தகவல் தொழில் நுட்ப உலகில் இன்று இன்னும் உயர உயரச் செல்லும் இந்நிறுவனத்தின் வளர்ச்சி இளைய தலைமுறை எப்படி உழைக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக் காட்டாய் விளங்குகிறது. இதனுடைய வளர்ச்சியைக் காணலாம். 1995 லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் (Larry Page and Sergey Brin) ஸ்டான் போர்டு பல்கலைக் கழகத்தில் சந்தித்து கலந்தாய்வு செய்கின்றனர். 1996 பேஜ் மற்றும் பெரின் பேக்ரப் என்னும் சர்ச் இஞ்சினை வடிவமைக்கின் றனர். இணைய தள லிங்க்குகளை இது ஆய்வு செய்து தகவல்களைத் தெரிவிக் கிறது. இதன் பின் கூகுள் முதல் பதிப்பு ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தின் வெப்சைட்டில் வெளியிடப்படுகிறது. 1997 கூகுள். காம் பதிவு செய்யப்படுகிறது. சன் நிறுவனத்தை நிறுவியவர்களில் ஒருவரான ஆண்டி (Andy Bechtolsheim ) கூகுள் நிறுவனத்தில் ஒரு லட்சம் டாலர் முதலீடு செய்கிறார். கூகுள் கார் ஷெட் ஒன்றில் தன் முதல் பணி மையத்தை அமைக்கிறது. அடுத்த செப்டம்பர் 7ல், அதன் முதல் பிறந்த நாளில், கூகுள் அறிந்தேற்பு பெறுகிறது. 1999 கூகுள் நிறுவனம் தொழிலில் வர்த்தக ரீதியாக புது முயற்சி செய்பவர்களுக்கான முதலீடு 2 கோடியே 50 லட்சம் டாலர் பெறுகிறது. 8 ஊழியர்களுடன் முழுமையான ஓர் அலுவலகத்தினை மவுண்ட்டன் வியூ என்ற இடத்தில் அமைக்கிறது. 2000 குகூள் முதன் முதலாக அட் வேர்ட்ஸ் என்னும் விளம்பரப் பிரிவினை அமைக்கிறது. யாஹூ கூகுள் சர்ச் இஞ்சினைத் தன் தேடல் சாதனமாக அமைத்துக் கொள்கிறது. பத்து மொழிகளில் கூகுள் வெளிவருகிறது. உலகின் மிகப் பெரிய வேகமான தேடல் சாதனமாக கூகுள் இடம் பிடிக்கிறது. 2001 கூகுள் நிறுவனத்தின் தலைவராக எரிக் ஸ்மித் ஆகிறார். பேஜ் மற்றும் பிரின் தயாரிப்பு மற்றும் தொழில் நுட்பம் ஆகிய இருபிரிவுகளுக்கு ஒவ்வொருவரும் தலைவராகின்றனர். கூகுள் தேஜா. காம் நிறுவனத்திலிருந்து 1995 ஆண்டிலிருந்து வெளியான 50 கோடி தகவல்களைப் பெறுகிறது. 2002 கூகுள் லேப்ஸ், கூகுள் நியூஸ் (4000 செய்தி தொடர்பு களுடன்) மற்றும் ப்ரூகுள் (Froogle) தொடங்கப்பட்டன. அமெரிக்க இணைய தள நிறுவனமான ஏ.ஓ.எல். (AOL) குகூள் தேடு தளத்தைப் பயன் படுத்த ஒப்புக் கொள்கிறது. 2003 அமெரிக்காவில் இயங்கும் டயலக்ட் சொசைட்டி (வட்டார மொழி குறித்து ஆய்வு மேற்கொள்ளும் நிறுவனம்) 2002 ஆன் ஆண்டில் அதிகம் பயன் படுத்தப்பட்ட சொல் “கூகுள்” எனக் கண்டு அறிவிக்கிறது. பிளாக்குகளின் காரணகர்த்தாவான பைரா லேப்ஸ் (Blogger) நிறுவனத்தை கூகுள் பெறுகிறது. 2004 மூலதன நிதி திரட்ட பங்கு ஒன்று 85 டாலர் என்ற விலையில் பங்குகளை கூகுள் வெளியிட்டது. இமெயில் சேவை ஜிமெயில் என்ற பெயரில் தொடங்கப்பட்டது. இத்துடன் டெஸ்க் டாப் சர்ச் வசதியும் அறிமுகப்படுத்தப்பட்டது. பைகாஸா நிறுவனம் வாங்கப்பட்டது. அதன் தேடல் தொகுப்பு அட்டவணையில் உள்ள 600 கோடி ஐட்டங்கள் கூகுள் சர்ச் இஞ்சினுக்கு இணைந்தன. 2005 கூகுள் எர்த், கூகுள் டாக், கூகுள் பேஸ் மற்றும் கூகுள் பிளாக் சர்ச் ஆகியவை தொடங்கப்பட்டன. கூகுள் ரீடர் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ். ஃபீட் ரீடர் அறிமுகமானது. கூகுள் அனலிட்டிக்ஸ் என்ற இணைய தள ஆய்வு சாதனமும் அறிமுகப்படுத்தப்பட்டது. 2006 யு–ட்யூப் நிறுவனம் கையகப்படுத்தப் பட்டது. காலண்டர், ஜிமெயில் மொபைல் மற்றும் கூகுள் பைனான்ஸ் ஆகியவை உருவாகி வெளியாயின. கூகுள் செக்அவுட் வர்த்தக நோக்கில் தரப்பட்டது. ஒரு சில பயனாளி களுக்கென கூகுள் பேஜ் கிரியேட்டர் வடிவமைக் கப்பட்டு தரப்பட்டது. ஒரு சில பிரச்சினை களுக்குப் பின் சீனாவில் கூகுள் நுழைந்தது. 2007 டபுள் கிளிக் என்னும் விளம்பர நிறுவனத்தை கூகுள் வாங்கியது. ஜைக்கு என்னும் சோசியல் மொபைல் நிறுவனத்தினயும் பெற்றது. 2008 கூகுள் பிரவுசர் குரோம் வெளியானது. வெளியான ஒரே நாளில் உலகின் மொத்த பிரவுசர் பயன்பாட்டில் 1 % மக்களிடம் சென்றது. தொடர்ந்து இந்த எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. விக்கிபீடியாவிற்கு இணையாக கூகுள் நால் (Google Knol) வெளியானது. 2009 கூகிள் தனது ஆப்பரேட்டிங் சிஸ்டத்துக்கான ( Google Chrome OS ) அறிவிப்பை வெளியிட்டது. மைக்கரோ சாப்டின் பிங்க் தேடுபொறிக்கு போட்டியாக கூகிள் Google squared எனும் தேடுபொறியை அறிமுகப்படுத்தியது. மைக்ரோசாப்ட் / கூகுள் யார் பெரியவர்? தகவல் தொழில் நுட்ப உலகில் எதாவது நடந்தால் உடனே அது மைக்ரோசாப்ட் நிறுவனத்துடனான மோதலாகத்தான் இருக்கிறது. கூகுள் நிறுவனம் தொடங்கி 11 ஆண்டுகள் தான் முடிந்துள்ளது. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த 31 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. மனிதனின் சிந்தனைப் போக்கையே மாற்றி அமைத்த நிறுவனம் மைக்ரோசாப்ட். எம்.எஸ்.டாஸ், எம்.எஸ். ஆபீஸ், விண்டோஸ், ஹாட்மெயில், விசுவல் ஸ்டுடியோ, மைக்ரோ சாப்ட் டெவலப்பர் நெட்வொர்க், டாட் நெட் பிரேம் ஒர்க், விண்டோஸ் மொபைல், பலராலும் இன்று விளையாடப்படும் கேம்ஸ், (Age of Empires, Halo, Microsoft Flight Simulator) எம்.எஸ்.என். லைவ் மெசஞ்சர், விஸ்டா தொழில் நுட்பம் என கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் உலகை மனித வாழ்க்கையுடன் இரண்டறக் கலந்த நிலைக்குக் கொண்டு வந்தது மைக்ரோசாப்ட் தான். இருப்பினும் சர்ச் இஞ்சின் என்பதனைத் தன் கையில் எடுத்து அதில் எவரெஸ்ட்டைத் தொட் டது குகூள்தான். அதனையே கம்ப்யூட்டரின் அடிப்படையாக அமைக்கத் தொடர்ந்து பாடு படும் குகூளின் திட்டம் ஒரு நாள் வெல்லலாம். அன்று மைக்ரோசாப்ட் கம்ப்யூட்டரின் நிலையையே மாற்றலாம். பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

30 ஆகஸ்ட் 2009

விஜய் காங்.கில் சேர்ந்தால் படங்களைப் புறக்கணிப்போம்: கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம்

நடிகர் விஜய் காங்கிரசில் சேர முடிவு செய்தால், அவரது படங்களை புலம்பெயர் தமிழர்கள் முழுமூச்சாக புறக்கணிப்போம் என கனடாவிலுள்ள தமிழ் படைப்பாளிகள் கழகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக அக் கழகம் விடுத்துள்ள அறிக்கை: தமிழ் நாட்டின் முன்னனி நடிகர் விஜய், விஜயகாந்த் [^], சரத்குமார் [^], கார்த்திக் [^] பாணியில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கப் போவதாக முன்னர் செய்திகள் [^] வந்தன. இப்போது அவர் இந்திய காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக செய்திகள் வருகின்றன. காங்கிரஸ் கட்சியில் சேரும் பட்சத்தில் அவருக்கு மேலவை உறுப்பினர் பதவியும் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. அரசியலில் யாரும் பங்கு கொள்ளலாம். நடிகர்களும் குடிமக்கள் என்பதால் அவர்களுக்கும் அரசியலில் பங்கு கொள்ள முழு உரிமை உண்டு. அது மக்களாட்சி முறைமைக்கு மிகவும் நல்லது. ஆனால் நடிகர் விஜய் காங்கிரசில் சேர முன் வந்தாலோ, அப்படியொரு முடிவு எடுத்தால் அதனைத் தமிழர்கள், குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்கள் வரவேற்க மாட்டார்கள் என்பதோடு அதனை முழு மூச்சாக எதிர்ப்பார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லி வைக்க விரும்புகிறோம். இந்தியா வழங்கிய ராணுவ உதவிகள்... மத்தியில் பதவியில் இருக்கும் இந்திய காங்கிரஸ் திமுக கட்சிகளது ஆட்சியின் போதுதான் தமிழீழத்தில் வரலாறு காண முடியாத இனப்படுகொலை அரங்கேறியது. இந்தியாதான் போர் ஆயுதங்கள், ராடர்கள், புலனாய்வு, உளவு, நிதி, பயிற்சி என்று எல்லாவற்றையும் இலங்கை அரசுக்கு கொடுத்து உதவியது. இதனை இந்தியா அவ்வப்போது மறுத்து வந்தாலும் அண்மையில் இந்திய பாதுகாப்பு துணை அமைச்சர் பல்லம் ராஜு இலங்கையின் தற்காப்புக்கு ஹெலிகாப்டர்கள், ரோந்து கப்பல்கள், டாங்கிகள் உட்பட ஆயுதங்களை வழங்கியதாகக் கூறியுள்ளார். சென்னை ஆவடியில் உள்ள கனரக வாகனங்கள் தொழிற்சாலையில் ஆகஸ்ட் 24, 2009 (திங்கட்கிழமை) 'பீஷ்மா' ரக டாங்கிகளை ராணுவத்திடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பல்லம் ராஜு இக் கருத்தினைத் தெரிவித்துள்ளார். இந்த ஆயுததளவாடங்களை இரு நாடுகளிடையே ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தங்கள் அடிப்படையில்தான் வழங்கினோம் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னர் 2007 ஜூன் மாதத்தில் புதுடில்லியில் நடைபெற்ற முப்படைத் தளபதிகள் மாநாட்டில் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே. அந்தோனி, புலிகளை அழிக்க சிங்கள பவுத்த இனவெறி பிடித்த இலங்கை அரசு கேட்கும் அனைத்து விதமான உதவிகளையும் வழங்குவோம் எனப் பகிரங்கமாக அறிவித்திருந்தார். இந்திய பாதுகாப்பு அமைச்சர் இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நியயப்படுத்துவதற்கு விடுதலைப் புலிகளின் விமானப் படை இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் சொன்னார். இந்த மாதம் 3 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள பலாலி வான்படைத் தள ஓடுபாதையை விரிவாக்குவதற்கு இந்தியா மேலும் ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய்க்கான காசோலையை இந்தியத் தூதுவர் அலோக் பிரசாத் பாதுகாப்பு அமைச்சக செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் வழங்கியிருக்கிறார். இந்தியா இலங்கை இருதரப்பு உறவுகளையும் ஆழப்படுத்துவதற்கும் உறுதிப்படுத்துவதற்குமான செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக இந்தத் திட்டத்துக்கு இந்தியா உதவி வழங்கியுள்ளதாக இந்திய பாதுகாப்பு [^] அமைச்சு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே தமிழின அழிப்புத்தான் இந்திய தேசிய காங்கிரஸ் -திமுக கட்சிகளின் குறிக்கோள் என்பது தெள்ளத் தெளிவாகியுள்ளது. தமிழர்களை அழிக்க நினைக்கும் ராகுல் இந்தப் பின்னணியில் நடிகர் விஜய் தமிழினப் படுகொலைகளை அரங்கேற்றிய சோனியா காந்தியோடும் ஈழத் தமிழர்களைப் பற்றி அவதூறாகப் பேசி வரும் ராகுல் காந்தியோடும் கைகோர்க்க எத்தனிப்பது அவர் தமிழீழத் தமிழர்களுக்குச் செய்யக் கூடிய அதிக பட்ச இரண்டகம் என நாம் கருதுகிறோம். அதனைப் புலம்பெயர் தமிழர்கள் வெறுமனே வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள்.
Vijay
எனவே நடிகர் விஜய் நடித்த அல்லது நடித்து வெளிவர இருக்கும் படங்களைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் உலகளாவிய அளவில் இறங்குவோம் என்பதை முன் கூட்டியே அவருக்கும் சம்பந்தப்பட்ட படத் தயாரிப்பாளர்களுக்கும் சொல்லி வைக்கிறோம் என்றும் கூறப்பட்டுள்ளது.

சென்னை நகரில் கந்தசாமியின் ஒரு வார வசூல் சாதனை!

சென்னை நகரில் ஒரே வாரத்தில் ரூ.1,73,43,778 லட்சம் வசூல் செய்துள்ளது விக்ரம் நடித்து வெளியாகியுள்ள கந்தசாமி. தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு வசூல் சாதனை என படத்தின் சென்னை [^] நகர விநியோகஸ்தர் அபிராமி ராமநாதன் கூறியுள்ளார்.
Vikram and Shreya
இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை: 21.08.2009 முதல் 27.08.2009 வரை ஏழு நாட்களில் கந்தசாமியின் மொத்த வசூல் ரூபாய் 1,73,43,778. தமிழ் சினிமா [^] வரலாற்றிலேயே முதன் முறையாக 18 திரையரங்கங்களில் ஒரு தமிழ் [^]ப்படம் திரையிடப்பட்டிருக்கிறது. அனாத்து திரையரங்குகளின் வசூல் விவரம் திரையரங்கத்தின் பெயர் மொத்த வசூல் அபிராமி காம்ப்ளக்ஸ் 27,18,184.00 (33790 ரசிகர்கள்) சத்யம் [^] காம்ப்ளக்ஸ் 43,17,072.00 (44899) ஆல்பர்ட் காம்ப்ளக்ஸ் 12,77,317.00 (21659) ஐநாக்ஸ் காம்ப்ளக்ஸ் 14,58,045.00 (14258) ஐடிரிம்ஸ் காம்ப்ளக்ஸ் 9,23,463.00 (13947) கமலா தியேட்டர் 11,76,679.00 (15697) மகாராணி தியேட்டர் 8,60,161.00 (19859) மெலோடி தியேட்டர் 6,82,536.00 (13944) சங்கம் தியேட்டர் 15,64,458.00 (21707) சாந்தி காம்ப்ளக்ஸ் 8,28,214.00 (16646) உதயம் காம்ப்ளக்ஸ் 15,37,649.00 (31641) மொத்தம்............... 1,73,43,778.00 2,48,047 இந்த ஏழு நாட்களில் படம் [^] பார்த்தவர்கள் மொத்தம் இரண்டு லட்சத்து நாற்பத்து எட்டாயிரத்து நாற்பத்து ஏழு பேர். இது ஒரு மிகப்பெரிய சாதனையாகும், என்று குறிப்பிட்டுள்ளார்.

கோப்புகளை மறைப்பது எப்படி?

எந்த ஒரு மென்பொருளையும் நிறுவாமலேயே உங்கள் கணினியில் உங்களது கோப்புகளை யாரும் அறியாமல் மறைத்து வைக்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? கீழே தரப்பட்டுள்ள வாக்கியங்களை எழுத்துபலகையைத்( Notepad ) திறந்து அதில் சேமிக்கவும். அந்த வாக்கியங்களில் இருக்கும் "type your password here" என்ற வார்த்தைகளை நீக்கி விட்டு உங்களுக்குத் தேவையான கடவுச்சொல்லை வழங்குங்கள் (மேற்கோள்கள் இன்றி தரவும்). இதை எந்தக்காரணம் கொண்டும் மறக்க வேண்டாம். அந்த கோப்பை ஏதாவது ஒரு பெயர் கொடுத்து *.bat கோப்பாக சேமிக்கவும். உதாரணமாக hide.bat என கோப்பின் பெயரைக்கொடுத்து சேமிக்கவும். ---------------------------------------------------------- cls @ECHO OFF title Folder Locker if EXIST "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" goto UNLOCK if NOT EXIST Locker goto MDLOCKER :CONFIRM echo Are you sure u want to Lock the folder(Y/N) set/p "cho=>" if %cho%==Y goto LOCK if %cho%==y goto LOCK if %cho%==n goto END if %cho%==N goto END echo Invalid choice. goto CONFIRM :LOCK ren Locker "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" attrib +h +s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" echo Folder locked goto End :UNLOCK echo Enter password to Unlock folder set/p "pass=>" if NOT %pass%=="type your password here" goto FAIL attrib -h -s "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" ren "Control Panel.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}" Locker echo Folder Unlocked successfully goto End :FAIL echo Invalid password goto end :MDLOCKER md Locker echo Locker created successfully goto End :End ------------------------------------------------------------- நீங்கள் சேமித்த hide.bat கோப்பை இரண்டு முறை சொடுக்கினால் Locker என்ற ஃபோல்டர் உங்கள் கண்களுக்குத் தென்படும். நீங்கள் மறைக்க விரும்பும் கோப்புகள் எல்லாவற்றையும் அந்த ஃபோல்டருக்குள் சேமியுங்கள். இப்போது மீண்டும் hide.bat கோப்பினை இரண்டு முறை சொடுக்குங்கள். 'கோப்பினைப் பூட்டிவிடவா' என செய்தி வரும் MSDOS செய்திப்பெட்டியில் y என தட்டச்சு செய்தால் Locker மறைந்து விடும். மறைந்த Locker-ஐ காண விரும்பினால் மீண்டும் hide.bat என்ற கோப்பை இரண்டு முறை சொடுக்குங்கள். கடவுச்சொல்லைத் தரும்படி கேட்கும் செய்திப்பெட்டியில் உங்கள் கடவுச்சொல்லை தாருங்கள். Locker உங்கள் கணனி திரையில் வரும். குறிப்பு: கூடுதல் பாதுகாப்பு தேவை என கருதினால் hide.bat கோப்பினை வேறொரு இடத்தில் பத்திரமாக வைத்துக்கொள்ளுங்கள். அல்லது வேறொரு வட்டில் சேமித்துக்கொண்டு, இந்தக்கோப்பை நீக்கி விடுங்கள்.

எம்எல்ஏ போட்ட நிபந்தனை... அதிர்ச்சியில் மந்த்ரா!

'பணம் வேண்டுமா... என்னோடும் நண்பர்களோடும் சில இரவுகள் தங்க வேண்டும். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்..' -நடிகை மந்த்ராவிடம் ஆந்திர எம்எல்ஏ ஒருவர் போட்ட இந்த படு பச்சையான டீல்தான் இப்போது டோலிவுட் முழுக்க பரபரப்புப் பேச்சாக உள்ளது. தமிழில் மந்த்ரா என்ற பெயரில் சில படங்களில் நடித்து பின் தெலுங்கில் படு பிஸியான நடிகையாக இருந்தவர் ராசி. அருண் விஜய்யுடன் பிரியம், அஜீத்துடன் ரெட்டை ஜடை வயசு, பிரபுவுடன் தேடினேன் வந்தது, கார்த்திக்குடன் கண்ணன் வருவான் போன்ற படங்களில் நடித்தவர் இவர். தொன்னூறுகளில் இவர் தெலுங்கின் முன்னணி நாயகியாகத் திகழ்ந்தார். தெலுங்கு காமிராமேன் ஒருவரை காதலித்து திருமணம் செய்தார். அதைத் தொடர்ந்து சொந்தப் படம் எடுத்தார். நடித்து சம்பாதித்த பணத்தையெல்லாம் அந்தப் படத்தில் போட்டார். கடனுக்கும் சிலரிடம் பணம் வாங்கியிருந்தார். ஆனால் அந்தபடம் தோல்வி அடைந்து மந்த்ராவை பெரும் கடனாளியாக்கியது. மேற்கொண்டு கதாநாயகியாக நடிக்க வயதும் உடலும் இடம் தரவில்லை. மீண்டும் திரைப்படம் தயாரித்து விட்ட பணத்தைப் பிடித்துவிடலாம் என சிலர் ஆசைக் காட்டவே, தன்னிடமிருந்து இன்னொரு கதையைப் படமாக்க முயன்று, பணத்துக்காக அலைந்தார். ஆனால் தெரிந்தவர்கள் யாரும் பணம் தர முன்வரவில்லை. இந்நிலையில் திரைப்பட தயாரிப்பாளர்களுக்கு கடன் தரும் ஆந்திர எம்.எல்.ஏ. ஒருவரிடம் கேட்க முடிவு செய்து, அவர் வீட்டுக்குப் போனாராம் மந்த்ரா.
Manthra
பணம் தர உடனே ஒப்புக் கொண்ட எம்எல்ஏ, அதற்கு பிரதியுபகாரமாக, தன்னுடன் ஒரு வாரம் தங்க வேண்டும் என நிபந்தனை விதித்தாராம். அதோடு துபாயில் இருந்து வரும் தனது நண்பருடனும் சில இரவுகள் தங்க வேண்டும் என்றாராம். இதற்கு உடன்பட மறுத்த மந்த்ரா, தனது நெருங்கிய நண்பர்களிடம் இந்த அவலத்தைச் சொல்லிப் புலம்பிக் கொண்டுள்ளாராம். இந்த சூழலில் படம் தயாரிக்கத்தான் வேண்டுமா... அல்லது கிடைக்கிற அக்கா, அம்மா அண்ணி வேடங்களில் நடித்து கடனை அடைக்கலாமா என யோசித்து வருகிறாராம் மந்த்ரா.

லலிதா குமாரிக்கும், குழந்தைகளுக்கும் பிரகாஷ்ராஜ் எந்த உதவியும் செய்வதில்லை: டிஸ்கோ சாந்தி

லலிதா குமாரிக்கு பிரகாஷ்ராஜ் எந்த பண உதவியும் செய்வதில்லை என லலிதா குமாரியின் அக்கா டிஸ்கோ சாந்தி கூறியுள்ளார்.

நடிகர் பிரகாஷ்ராஜ், நடிகை டிஸ்கோ சாந்தியின் தங்கை லலிதகுமாரியை 15 வருடங்களுக்கு முன்பு காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள்.

இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பிரகாஷ்ராஜூக்கும், லலிதாகுமாரிக்கும் இடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. லலிதகுமாரி 2 குழந்தைகளுடன் சென்னை அடையாறில் வசித்து வருகிறார். பிரகாஷ்ராஜ், நீலாங்கரையில் வசிக்கிறார். நீண்ட நாள் பிரிந்து வாழ்ந்த பிரகாஷ் ராஜ் சென்னை குடும்ப நல கோர்ட்டில் மனைவி லலிதா குமாரியிடம் இருந்து விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தார்.

பிரகாஷ் ராஜ் மனுவை விசாரணை செய்த நீதிமன்றம் பிரகாஷ் ராஜும், லலிதா குமாரியும் குடும்ப நல கவுன்சிலிங்கில் கலந்து கொண்டு பிரச்சனைக்கு தீர்வு காணுமாறு அறிவுறுத்தியிருத்தியிருந்தது. இதற்கிடையில் லலிதா குமாரி கணவர் பிரகாஷ் ராஜுடன் சேர்த்து வைக்குமாறு தொடர்ந்த மனுவும் நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் லலிதா குமாரி கணவர் பிரகாஷ் ராஜை பிரிந்து வாழ சம்மதம் தெரிவித்து சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை புதிய மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கணவர் பிரகாஷ் ராஜுடம் இருந்து மாதம் ரூ.2 லட்சம் ஜீவனாம்சமாக அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கு விசாரணை விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரகாஷ்ராஜ் லலிதகுமாரி விவாகரத்து பற்றி டிஸ்கோ சாந்தி கூறியதாவது,

என் தங்கை லலிதகுமாரியை பிரகாஷ்ராஜ் காதலித்து திருமணம் செய்துகொண்டார். வடபழனியில் உள்ள முருகன் கோவிலில்தான் திருமணம் நடந்தது.

ஆரம்பத்தில் ஒழுங்காக குடும்பம் நடத்தி வந்த பிரகாஷ்ராஜ், நாளடைவில் மாற ஆரம்பித்தார். அவருக்கும், என் தங்கைக்கும் பிரச்சினை ஏற்பட்டபோது, இருவரும் சேர்ந்து வாழவேண்டும் என்று புத்திமதி சொன்னேன். பிரகாஷ்ராஜ் ஏற்றுக்கொள்ளவில்லை.

இரண்டு பேரும் தனித்தனியே பிரிந்து வாழ்கிறார்கள். என் தங்கை 2 குழந்தைகளை வைத்துக்கொண்டு கஷ்டப்படுகிறாள். அவளுக்கு பிரகாஷ்ராஜ் எந்த பண உதவியும் செய்வதில்லை. குடிக்கிற தண்ணீர் சப்ளை செய்வதை கூட நிறுத்தி விட்டார்.

கடந்த ஒன்றரை வருடங்களாக நான் மாதந்தோறும் ரூ.50 ஆயிரம், என் தங்கை குடும்பத்துக்கு அனுப்பி வருகிறேன். என் தங்கையின் மூத்த மகள் பூஜா, சமீபத்தில் பூப்படைந்தாள். அவளுக்கு நகைகள் செய்து போட்டு நான்தான் சடங்கு நிகழ்ச்சியை நடத்தினேன்.

பெற்ற மகளின் பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சிக்கு கூட பிரகாஷ்ராஜ் வந்து வாழ்த்தவில்லை. அவர் யார் யாருக்கோ செலவு செய்கிறார். குழந்தைகளுக்கு உடைகள் கூட வாங்கி தருவதில்லை. இரண்டாவது மகளின் பிறந்தநாளுக்கு நான்தான் உடை வாங்கி கொடுத்தேன்.

எனக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். மகள் கிடையாது. என் தங்கை மகள்களைத்தான் சொந்த மகள்களாக நினைக்கிறேன் என்றார்.

கேமரா இல்லாமலேயே உங்களை நீங்கள் போட்டோ எடுக்க

உங்களுக்கு ஒரு அதிசயமான விஷயம்.கேமரா இல்லாமலேயே உங்களை நீங்கள் போட்டோ எடுக்க முடியும்.இந்த அற்புதமான தொழில்நுட்பத்தை இப்போது பார்க்கலாம். போட்டோ எடுக்கும் முன்னர் உங்கள் முகத்தை கம்ப்யூட்டர் மானிட்டர் பார்த்தவன்னமாக வைத்துக் கொள்ளுங்கள்.அடுத்தது முக்கியமான ஒன்று மறக்காமல் சிரித்தவாறே கீழே உள்ள கேமரா பட்டனை அமுத்துங்கள். அழுத்திய ஒரு சில வினாடிகளில் உங்கள் போட்டோவை ஸ்க்ரீனில்பார்க்கலாம்.

சரி ரெடியா அழுத்துங்க கேமராவை

பார்த்துட்டு ஒட்டு போட மறக்காதீங்க.

Google - புத்தகங்களும் இனி இலவசம் ...

http://books.google.com மூலம் புத்தககங்களை தேட,படிக்க மற்றும் வாங்கும் வசதியை இலவசமாக வழங்கி வந்த கூகுள், இனி புத்தகங்களும் இலவசமாக கொடுக்க போகின்றது. இப்புத்தகங்களை Public Domain மூலம் இலவசமாக தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.நீங்கள் PDF அல்லது EPUB Format-ல் தரவிறக்கலாம். உதாரணமாக William Shakespeare-இன் படைப்பான Hamlet இலவசமாக கொடுக்கின்றது.தரவிறக்க இங்கே சொடுக்குங்கள். மேலும் 10 லட்சம் புத்தகங்கள் படிக்கவும்,தரவிறக்கவும் காத்திருக்கின்றன உங்களுக்காக ... விரையுங்கள் Google Books

28 ஆகஸ்ட் 2009

ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி?

உங்கள் கணினியை வேறு எவருக்கேனும் விற்பனை செய்யும் போது கணினியில் உள்ள கோப்புகளை சுத்தமாக அழித்து விட்டு கொடுப்பீர்கள். அழிக்கும் போது Shift + Delete பயன்படுத்தினால் சுத்தமாக அழிந்துவிடும் என்று நினைத்து அழிப்பார்கள். ஆனால் இப்போது மீட்டு எடுக்கும் மென்பொருள்கள் கொண்டு (Recovery Software ) அழித்த கோப்புகளை திருடி அடுத்தவரின் அந்தரங்கத்தை மேய்வதில் நிறைய பேருக்கு விருப்பம். அதனால் கோப்புகளை அழிக்கும் போது அல்லது ஹார்ட் டிஸ்கை Format செய்ய வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த இரண்டு மென்பொருள்கள் உதவும். இந்த மென்பொருள்களை கொண்டு அழிக்கும் போது மறுபடியும் கோப்புகள் கிடைக்காதவாறு துடைத்து விடும். 1.Eraser தரவிறக்கச்சுட்டி : http://sourceforge.net/projects/eraser/files/Eraser/Eraser-5.8.7_setup.exe/download 2.Kill Disk தரவிறக்கச்சுட்டி : http://www.killdisk.com/ நன்றி வணக்கம் ! தொடர்புடைய பதிவு : அழித்த கோப்புகளை மீட்டெடுக்க இலவச மென்பொருள்கள்

ரவியுடன் நடிக்க மறுத்த நடிகை!

ஜெயம் ரவியுடன் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்துவிட்டாராம் பானு. தாமிரபரணியில் அறிமுகமாகி, சமீபத்தில் வெளியான அழகர் மலையில் நடித்தவர் பானு. மலையாள நடிகையான இவருக்கு ஜெயம் ரவியின் புதிய படமான தில்லாலங்கிடியில் நடிக்கும் வாய்ப்பு வந்ததாம்.
Bhanu
ஆனால் அதை வேண்டாம் என்று கூறிவிட்டாராம். காரணம்? "எனக்கு கொஞ்சம்கூட பிடிக்காத, பொருத்தமில்லாத வேடம் அது. அதை எப்படி செய்வது? எக்கச்சக்கமாக கிளாமர் காட்ட வேண்டியிருக்கும் என்றார்கள். நான் குடும்பப்பாங்கான வேடங்களில் மட்டுமே நடிக்க விரும்புகிறேன். அதனால் அந்த வேடத்தை மறுத்துவிட்டேன். இப்போதைக்கு வேறு தமிழ்ப் படங்கள் எதையும் நான் ஒப்புக் கொள்ளவில்லை. ஆனால் மலையாளத்தில் நிறைய வாய்ப்புகள் நான் விரும்பியபடி அமைவதால் அங்கு தொடர்ந்து நடிக்கிறேன்!", என்கிறார் பானு.

விரைவில் வெளியாகிறது ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் சாப்‌ட்வேர்

ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டம் சாப்ட்வேர்' ஸ்நோ லெபர்ட் 'வருகிற வெள்ளிக் கிழமையன்று விற்பனைக்கு வருகிறது. ஆப்பிஸ் ஆன்லைன் ஸ்டொர்ஸ் இதற்கான ஆர்டர்களை ஆன்லைனில் எடுக்க துவங்கியுள்ளது. மேக் ஓ.எஸண., எக்ஸ் வெர்சன் (10.6) ஆப்பிள் ரீட்டெய்ல் ஸ்டோர்களிலும் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டமை செப்டம்பர் மாதத்தில் தான் அறிமுகப்படுத்துவோம் என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது ஆகஸ்ட் இறுதியிலேயே இதை வெளியிடுகிறது. மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது அடுத்த வெர்சன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் 7ஐ அக்டோபர் அல்லது நவம்பர் மாதத்தில் ‌வெளியிடுகிறது. இதற்கு முன்னர் ஆப்பிள் தனது ஆப்பரேட்டிங் சிஸ்டமை வெளியிட்டுள்ளது. ஆப்பிளின் புதிய வெர்சன் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இ- மெயிலிங், காலண்டர் மற்றும் தொடர்புகள் குறித்த தகவல் ஸ்டோரேஜ் ஆகியவற்றிற்கு பேருதவியாக இருக்கும் ‌என கூறப்படுகிறது. ஆப்பிளின் இந்தி புதிய வெர்சன் ஸ்நோ லெபர்ட் இதற்கு முந்தைய வெர்சனை விட பாதி அளவு தான். இதை இன்ஸ்டால் செய்ய 1 கிகாபைட் ரேம் ஸ்‌டோரேஜ் கெபாசிட்டி தான் தேவைப்படுமாம்.

"விருப்பப்படி" -ஒரு முழுமையான தமிழ் மென்பொருள்

தமிழ் எழுத்துருக்கள், விசைப்பலகைகள் சார்ந்த அனைத்து சிக்கல்களுக்கும், தடைகளுக்கும் முழுமையானத் தீர்வாக வெளிவந்திருக்கிறது. தமிழ் மொழியில் ஏறத்தாழ 100 க்கும் மேற்பட்ட எழுத்துருக்குடும்பங்களும், பத்திற்கும் மேற்பட்ட விசைப்பலகை வகைகளும் உள்ளன. இதனால் ஒரு எழுத்துருவில் தட்டச்சு செய்தோர் மற்ற எழுத்துருவில் அத்தகவலை பார்க்க முடியாமல், தட்டச்சு செய்ய முடியாமல் உள்ளனர். இதே போல் ஒரு விசைப்பலகையில் பழகியோர் அந்த விசைப்பலகை துணை செய்யாத மற்ற எழுத்துருக்களில் தட்டச்சு செய்ய முடியாத நிலை உள்ளது. 'விருப்பப்படி' மென் பொருளானது மேற்கூறிய சிக்கல்களை எளிதாக தீர்த்து வைக்கிறது. அதாவது ஒரு தகவல் எந்த எழுத்துருவில் உருவாக்கப்பட்டிருந்தாலும், எந்த விசைப்பலகை முறையை பயன்படுத்தி உருவாக்கப் பட்டிருந்தாலும், ஒருவர் அதே எழுத்துருவில் அவர் அறிந்த விசைப்பலகை முறையை கொண்டு 'தட்டச்சு' செய்ய முடியும். அதாவது எந்த விசைப் பலகை முறையை கொண்டும் எந்த எழுத்துருவிலும் தட்டச்சு செய்யவோ அல்லது ஏற்கனவே தட்டச்சு செய்ததை 'தட்டச்சு' செய்யவோ முடியும். இம்மென்பொருளை பயன்படுத்தி பெரும்பாலான மென்பொருள்களில்(MS Office,Corel draw,Pagemaker..) தட்டச்சு செய்ய முடியும். இந்த பயன்பாடு விருப்பபடி மென்பொருளின் முதன்மையான வசதியாக கூறப்பட்டாலும் மேலும் பல மேம்பட்ட வசதிகளை கொண்டுள்ளது. கீழ்காண்பது விருப்பப்படி மென் பொருளின் விசைப் பலகை மற்றும் எழுத்துருக் குடும்பம் தேர்வு செய்யும் முறை ..

குறிப்பாக" தன்னியக்க திருத்தம் "( Autocorrect ) எனும் வசதி எல்லா மென்பொருள்களிலும் இயங்குவதாக உருவாக்கப்பட்டுள்ளது. இவை தமிழ் தட்டச்சு செய்யும் போது ஏற்படும் பிழைகளை தவிர்க்க உதவுகிறது. அடுத்ததாக "Font Sampler" எனப்படும் எழுத்துருக்களை குழுக்களாக காட்டும் வசதி உள்ளது. இவ்வசதியினால் ஏராளமாக எழுத்துருக்களை வைத்துக் கொண்டு பயன்படுத்த முடியாமல் இருக்கும் பல பயனாளர்கள் பெரிதும் பயன் பெறுவர். சிறப்பம்சமாக தமிழ் - ஆங்கிலம் அகராதியை கொண்டுள்ளது. இதில் ஏறத்தாழ 60000 ஆங்கில வார்த்தைகளுக்கு 1,50,000 தமிழ் பொருள்களை கொண்டுள்ளது. மேலும் ஒரு எழுத்துருவிலிருந்து மற்றொரு எழுத்துருவிற்கு மாற்றித் தரும் ஒரு கருவியையும் இம்மென்பொருளில் இணைத்துள்ளார்கள். இதன் மூலம் எந்த தகவலையும் எளிதாக எந்த எழுத்துருவிலிருந்தும் எந்த எழுத்துருவிற்கும் ஒரு தகவலை மாற்றிக் கொள்ள முடியும். ஒருங்குறி மூலமாகவும் மாற்றிக் கொள்ள முடியும். மேலும் சிறப்பம்சங்களாக முகவரி புத்தகம் மற்றும் மின்னஞ்சல் சேவையையும் விருப்பப்படி கொண்டுள்ளது. தமிழ் மொழியைப் பொறுத்தவரை கணினியில் அதன் அடுத்தக் கட்ட இலக்குகளை அடைவதில் தடையாக இருந்தவை எழுத்துருச்சிக்கல்கள், விசைப்பலகையில் உள்ள குழப்பங்கள் ஆகியவை ஆகும். இவற்றை முழுமையாக தீர்த்து வைக்கும் விதமாக "விருப்பப்படி" மென் பொருள் வெளிவந்துள்ளது. மேலும் சொல் திருத்தி போன்ற கருவிகளுக்கு அடிப்படையான " தன்னியக்க திருத்தம் "(Auto Correct) வசதியுடன் வெளிவந்துள்ளது சிறப்பான ஒன்றாகும். உண்மையில், 'எந்த எழுத்துருவிலும், எந்த விசைப்பலகையிலும்' என்ற நிலை ஒரு கனவு போலத்தான் இருந்து வந்திருக்கிறது இதுவரை. ஆனால் விருப்பப்படி இக்கனவை நிறைவேற்றி உள்ளது. மேலும் இதுவரையில் வெளிவந்திருக்கும் ஏராளமான எழுத்துருக்களில் எதில் தட்டச்சு செய்யப்பட்ட தகவல்களையும் எளிதாக நாம் விரும்பிய எழுத்துருவிலோ அல்லது ஒருங்குறியிலோ மாற்றம் செய்து கொள்ள முடிவது மிகவும் அரிய ஒரு வசதியாகும். தற்போது அதிக அளவில் பயன்படுத்தபடுகின்ற மொழிமாற்றும் ( transliteration )விசைமுறையை பயன்படுத்தியும் கூட எல்லாவகை எழுத்துருக்களிலும், ஒருங்குறியிலும் தட்டச்சு செய்ய முடியும் என்றவாறு உருவாக்கியுள்ளது மிகவும் சிறப்பானதொரு முன்னேற்றமாகும். இம்மென் பொருளின் பயன்பாட்டு எல்லைகள் உண்மையில் கணக்கிட முடியாததாகும். இதுவரை வந்துள்ள பெரும்பாலான மென்பொருள் கருவிகளின் பயன்பாடுகள் அனைத்தையும் "விருப்பப்படி" மென்பொருள் ஒன்றிலேயே கொண்டுள்ளது. "விருப்பப்படி" மென்பொருளை ஒரு வார்த்தையில் விவரிக்க வேண்டுமெனில் ஒரு முழுமையான தமிழ் மென்பொருள் என்று கூறலாம்.

மேலதிக தகவல்களுக்கு: http://auw.sarma.co.in/Info/flasha/index.htm

எங்கிருந்தாலும் நல்லா இருக்கட்டும்! - சோனியா அகர்வால்

பொதுவாக காதலியைப் பிரிந்த காதலர்கள் அல்லது மனைவியைப் பிரிந்த கணவர்கள்தான் 'எங்கிருந்தாலும் வாழ்க' என்ற வாசகத்தைப் பயன்படுத்துவார்கள். இப்போது நிலைமை உல்டாவாகிவிட்டது. பெண்களும் இந்த வார்த்தயைப் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர். மிக சமீபத்தில் கிட்டத்தட்ட இந்த வாசகத்தைப் பயன்படுத்தியிருப்பவர் சோனியா அகர்வால். செல்வராகவனைத் திருமணம் செய்து கொண்டு இப்போது பரஸ்பர விருப்பத்தின் பேரில் விவாகரத்துக்கும் விண்ணப்பித்துள்ள சோனியா அகர்வால், தங்கள் மண முறிவுக்கான காரணங்களை லேசுபாசாக மீடியாவில் சொல்ல ஆரம்பித்துவிட்டார். சமீபத்தில் ஆங்கில நாளிதள் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: எங்கள் திருமண வாழ்க்கை சந்தோஷமாகத்தான் ஆரம்பித்தது. ஆனால் நாளாக ஆக செல்வா மாறிவிட்டார். எங்களுக்குள் கடுமையான கருத்து வேறுபாடுகள் தோன்றிவிட்டன. பின்னர்தான், என்ன காரணம் என்பதை இருவரும் புரிந்து கொண்டோம். ஒன்றாக வாழ்ந்தது போதும், கணவன் - மனைவியாக இருந்த போதும்கூட நாங்கள் அதிகம் பேசிக் கொண்டதில்லை. இறுதி நாட்களில் வெறுமையும் வெறுப்பும் ஆக்கிரமிக்கும் முன் பிரிந்துவிட்டோம். இப்போது நிம்மதியாகத்தான் உள்ளது. மனதுக்குள் எந்த வருத்தமும் இல்லை, திருமணம் செய்து கொள்ளாமலேயே இருந்திருக்கலாமே என்ற நினைப்பத் தவிர!
Sonia Agarwal
அதற்காக செல்வராகவனை நான் வெறுக்கவில்லை. செல்வராகவனை இப்போது நண்பராப்க பார்க்கிறேன். எப்போதாவது தொலைபேசியில் பேசிக்கொள்கிறோம். எதிர்காலத்தில் அவர் நன்றாக இருக்க வேண்டும்... எங்கிருந்தாலும், எப்படிப்பட்ட சூழலில் இருந்தாலும் என்று வாழ்த்துகிறேன், என்று அவர் கூறியுள்ளார். இந்தப் பேட்டியிலும் அவர் ஆண்ட்ரியா பற்றி பேச மறுப்புத் தெரிவித்திருந்தார்.

நிர்வாணமாக வேலை செய்யும் அலிசியா!

வீட்டில் இருக்கும்போதும், தோட்ட வேலையில் ஈடுபடும்போதும் நிர்வாணமாகத்தான் இருப்பேன். அதுதான் எனக்குப் பிடித்துள்ளது என்கிறார் அமெரிக்க நடிகை [^] அலிசியா சில்வர்ஸ்டோன். அலிசியாவுக்கு இப்போது 32 வயதாகிறது. ஹெல்த் என்ற இதழுக்கு இவர் அளித்துள்ள பேட்டியில், எனக்கு நி்ர்வாணம் மிகப் பிடிக்கும். குறிப்பாக பணி செய்யும்போது நிர்வாணமாக இருக்கவே விரும்புவேன். வீட்டில் ஓய்வாக இருக்கும்போதும், தோட்ட வேலையில் ஈடுபடும்போதும் நிர்வாணமாகத்தான் இருப்பேன். இன்று நேற்றில்லை சிறு வயதாக இருந்தபோதே இப்படித்தான் இருந்து வருகிறேன். வெளியில் வெயிலில் சென்று விட்டுத் திரும்பினால் முதலில் எனது உடைகளை கழற்றித் தூர எரிந்து விட்டு சுதந்திரமாகி விடுவேன். பின்னர் நீச்சல் குளத்தில் குதித்து மணிக்கணக்கில் நீச்சலடித்தபடி இருப்பேன். நீச்சல் குளத்திலும் கூட நான் எப்போதுமே நிர்வாணம்தான்.
Alicia Silverstone
நடிகர் உட்டி ஹேரல்சனும் ஒரு நிர்வாணப் பிரியர். அவருடன்தான் நான் அதிக நேரத்தை செலவிடுவேன். நான் நிர்வாணமாக இருப்பதை அவர் ஒருபோதும் வித்தியாசமாக பார்த்ததில்லை என்கிறார் அலிசியா. ரொம்பப் புதுசா இருக்கே...!

விதவிதமாய்-வித்தியாசமாய் ரிங்டோன்கள்

சிலர் செல்போனில் விதவிதமாக ரிங்டோன்கள் - மெசேஜ்
டோன்கள் வைத்திருப்பார்கள். அவர்களுக்காகவே இநத
தளம் உள்ளது. இதில் 3,18,538 -க்கும் மேற்பட்ட ரிங்
டோன்கள் வெவ்வேறு கேட்டகிரியில்(Categories) உள்ளது.
புகழ்பெற்ற பாடல்கள்,செந்தில் கவுண்டமணி காமெடிகள்,
வடிவேலு காமெடிகள்,குழந்தைகளின் சிரிப்புகள்,குழந்தையின்
அழுகுரல்கள்,நகைச்சுவையான இசைதொகுப்புகள் என
நமக்குவேண்டிய கேட்டகிரியை(Categories) தேர்வுசெய்து
வேண்டியதை -விரும்பியதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த தளம் செல்ல முதலில் இங்கு கிளிக் செய்யவும்.
உங்களுக்கு இந்த விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள பிளே பட்டனை கிளிக் செய்து பாடலை முதலில்
முன்னோட்டம கேளுங்கள். உங்களுக்கு பாடல்- காமெடி வசனம்
-ரிங் டோன் -பிடித்திருந்தால் இதன் கீழ் உள்ள Get Ringtone கிளிக்
செய்யுங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள PC DOWNLOAD கிளிக் செய்யுங்கள். உங்களுக்கு
கீழ்கண்ட விண்டோ ஓன்று ஓப்பன் ஆகும்.
இதன் கீழ் புறத்தில் உள்ள Start Download கிளிக் செய்யுங்கள்.
உங்களுக்கு நீங்கள் ரிங்டோனை எந்த டிரைவில் சேமிக்க
போகின்றிர்களோ அந்த டிரைவை தேர்ந்தேடுங்கள். பிறகு
சேமியுங்கள்.
இப்போது உங்கள் விருப்பபாடல் உங்கள் கணிணியில்
இருக்கும். அதிலிருந்து நீங்கள் உங்கள் மொபைலுக்கு
டேட்டா கேபிள் மூலம் மாற்றிக்கொள்ளலாம்.
பதிவை பாருங்கள்.பிடித்திருந்தால் மறக்காமல்
ஓட்டுப்போடுங்கள்.

THANKS

சோனியா முன்னிலையில் காங்கிரஸில் சேருகிறார் விஜய்!

சென்னை: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல் காந்தி ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் சேருகிறார் நடிகர் விஜய். இதுகுறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்றும் இது காங்கிரஸ் மற்றும் விஜய் இருவருக்கும் பலம் சேர்ப்பதாக அமையும் என்றும் காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Vijay
நடிகர் விஜய் சமீபத்தில்தான் மக்கள் இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார். இந்த இயக்கம் சார்பில் தமிழகம் [^] முழுக்க கம்ப்யூட்டர் கல்வி மையங்கள், இலவச திருமண மண்டபங்கள் என தனது நெட்வொர்க்கை பலப்படுத்தி வருகிறார். மேலும் ஒரு அரசியல் கட்சிக்கே இல்லாத அளவு ஒவ்வொரு மாவட்டத் தலைநகரிலும் சொந்த கட்டடங்களை ஏற்படுத்தி அதில் மக்கள் இயக்கத்தை இயங்க வைக்கும் முயற்சியில் உள்ளார். இந்த கட்டடங்கள் ஒரு பக்கம் திருமணக் கூடங்களாகவும், இன்னொரு பக்கம் அவரது மக்கள் [^] இயக்க அலுவலகங்களாகவும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய்யின் இந்த நெட்வொர்க்கை அப்படியே காங்கிரஸ் கட்சிக்கு, அதுவும் அவர் ஒரு கட்சியின் தலைவராக மாறும் முன்னரே இழுத்துப் போட்டுவிட வேண்டும் என விரும்பிய ராகுல் காந்தி, டெல்லிக்கு வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தியுள்ளார். இந்தப் பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நடந்தது என விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகரன் கூறியுள்ளார். அதாவது தன்னை இளைஞர் காங்கிரஸ் தலைவராக நியமிக்க வேண்டும் என விஜய் கேட்டுக் கொண்டதாகவும், அதற்கு ராகுல் காந்தியும் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தனிக்கட்சி தொடங்கிய விஜய்காந்த், சரத்குமார் எல்லோருமே இன்றைக்கு முழு வெற்றி பெற முடியாமல் ததிங்கினதோம் போடுவதால், வேண்டாம் விஷப்பரீட்சை என்ற தனது நலம் விரும்பிகளின் ஆலோசனையின் பேரிலேயே இந்த முடிவுக்கு வந்துள்ளாராம் விஜய். மேலும் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளில், காங்கிரசில் மட்டுமே நடிகர்கள் யாரும் இல்லை என்பதால், அதில் இணைய அவர் முடிவெடுத்துள்ளாராம். ராகுல் காந்தியிடம் தனது விருப்பத்தைச் சொன்ன விஜய், விரைவில் சோனியா காந்தி [^] முன்னிலையில் முறைப்படி காங்கிரஸ் கட்சியில் இணைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளாராம். இதுகுறித்து விஜய் தரப்பில் விசாரித்த போது, இன்னும் சில தினங்கள் பொறுத்திருந்து பாருங்கள் என்பதே பதிலாக வந்தது.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com