Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

09 செப்டம்பர் 2009

உற்சாக ஃப்ளாஷ்பேக்… சக நடிகர்களுக்கு கேக் ஊட்டிய ரஜினி!

ழைய நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதைப் போன்றதொரு உற்சாகமான, இனிமையான விஷயம் உலகில் வேறேதும் இருக்குமா…

superstar-party

இல்லையென்பதுதான் பெரும்பானயினரின் பதிலாக இருக்கும்.

பள்ளி நாட்களையும், கல்லூரி காலத்தையும் பழைய மாணவர்கள் தங்கள் பழைய தடங்களில் பாதம் பதித்து நடந்து பரவசப்படுவதைப் போல, தாங்கள் வெற்றியின் உச்சத்தில் இருந்த பழைய காலங்களை நினைத்துப் பார்க்க திரையுலக நட்சத்திரங்களுக்கும் சமீபத்தில் ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்பட்டது.

இந்த நிகழ்விலும் கதாநாயகன்… சாட்சாத் நமது சூப்பர் ஸ்டார்தான்.

பழைய நாட்களையும், பழகிய மனிதர்களையும் மதிப்பதில் அவருக்கு நிகர் அவரே அல்லவா… எனவே இந்த நிகழ்விலும் இந்த சூரியனைச் சுற்றியே மற்ற நட்சத்திரங்களின் கவனமும் அமைந்ததில் வியப்பில்லை அல்லவா!

விருந்து, பழைய நினைவுகளை பகிர்தல், உற்சாகமான நகைச்சுவை, கட்டி அணைத்து அன்பை வெளிப்படுத்துதல், குடும்பம் பற்றிய நலம் விசாரிப்பு என அந்த கலந்துரையாடல் உணர்வுபூர்வமாக இருந்தது. சென்னையில் உள்ள லிஸி ப்ரியத்ர்ஷன் வீட்டில் இதற்கு ஏற்பாடு செய்து இருந்தனர்.

நடிகைகள் சுஹாஸினியும் லிஸி ப்ரியதர்ஷனும் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இதை ஒரு சிறப்பு நிகழ்ச்சியாக ஜெயா டிவி ஒளிபரப்பவிருக்கிறது.

அக்காலத்தில் முன்னணி ஹீரோ, ஹீரோயின்களாக இருந்தவர்கள் தொலைபேசியில் அழைக்கப்பட்டிருந்தனர்.

பிரபு, மோகன், பிரதாப்போத்தன், கார்த்திக், சுமன், சுரேஷ், பானுசந்தர் முதலாவதாக வந்தனர். அம்பரீஷ் மனைவி நடிகை சுமலதாவுடனும், விஷ்ணுவர்த்தன் மனைவி பாரதியுடனும் கலந்து கொண்டனர். சுரேஷ் மொட்டை தலையில் அடையாளமே தெரியாமல் இருந்தார்.

old-memories

நடிகைகள் ராதிகா, நதியா, ரம்யாகிருஷ்ணன், ரேவதி, சுகாசினி, பூர்ணிமா, லிசி பிரியதர்ஷன், ஷோபனா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சிக்கு சிகரம் வைப்பது போல் சூப்பர் ஸ்டார் ரஜினி கலந்து கொண்டு விருந்தை கலகலப்பாக்கினார். ரஜினி வந்த கையோடு ‘கேக்’ கொண்டு வரப்பட்டது.

பழைய கதாநாயகர்கள், நாயகிகள் சூழ்ந்து நிற்க ரஜினி கேக் வெட்டினார். எல்லோரும் கைதட்டி மகிழ்ச்சி வெளிப்படுத்தினார்கள். பின்னர் ரஜினியே கைப்பட தன் நண்பர்கள், சக நட்சத்திரங்களுக்கு ‘கேக்’ ஊட்டினார்.

ரஜினி ஜோடியாக நடித்த நதியா, ராதா, ராதிகா, பூர்ணிமா போன்றோர் அவருடன் தனித்தனியாக நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர். பிறகு சுவையான உணவு பரிமாறப்பட்டது. சாப்பிட்டபடியே ஒருவருக்கொருவர் ஜோடியாக நடித்த பழைய மலரும் நினைவுகள் பற்றி பேசி அதில் மூழ்கினர்.

ஒரு சுவாரஸ்யமான ஆட்டோகிராபை புரட்டிப் பார்த்த சந்தோஷத்துடன் நட்சத்திரங்கள் கலைந்து சென்றனர்.

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com