Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

19 மே 2009

சிறந்த இலவச ஆண்டி வைரஸ் தொகுப்புகள்

வைரஸ்களைத் தடுத்து நிறுத்தி அழித்திடும் தொகுப்புகள் இன்று கம்ப்யூட்டர் பயன்பாட்டில் கட்டாயத் தேவையாய் ஆகிவிட்டன. ஆப்பரேட்டிங் சிஸ்டமும் பிரவுசர் தொகுப்பும் எத்தனை பாதுகாப்பாய் அமைக்கப்பட்டாலும் வைரஸ்களும் ஸ்பைவேர்களும் நாளுக்கு நாள் பெருகி கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு சவாலாய் உள்ளன. எனவே தான் ஆண்டி வைரஸ்கள் பயன்படுத்தப்படுவது மட்டுமல்ல அவை அப்டேட் செய்யப்பட வேண்டும் . சைமாண்டெக், மேக் அபி, இசெட் மற்றும் மைக்ரோசாப்ட் உட்பட ப நிறுவனங்கள் ஆண்டி வைரஸ் தொகுப்புகளை தயாரித்து வழங்குகின்றன. இவற்றில் சில அனைத்து வகை பாதுகாப்பையும் தருவதாக விளம்பரப்படுத்துகின்றன. ஆனால் தொடக்க கட்டணம் ரூ.4,000 லிருந்து ரூ. 7,000 வரை உள்ளன. இதனால் தான் பலரும் இலவச தொகுப்புகளை நாடுகின்றனர். இணையத்தில் பல தொகுப்புகள் இலவசமாகக் கிடைக்கின்றன. இதில் என்ன வேடிக்கை என்றால் இலவசமாக ஆண்டி வைரஸ் தொகுப்பு தருகிறேன் என்று சொல்லி பல தளங்கள் வைரஸ்களையும் கம்ப்யூட்டர் செயல்பாட்டை முடக்கும் புரோகிராம்களையும் அனுப்பி கெடுதல் விளைவிக்கின்றன. இருப்பினும் சில ஆண்டி வைரஸ் புரோகிராம்கள் முற்றிலும் இலவசமாகவே பாதுகாப்பினைத் தருகின்றன. அவற்றில் சில பற்றிய குறிப்புகள்... ஆண்டிவைரஸ் 1 1. பெயர்: Avast! 4 Home EditIon 2. நிறுவனம் : ALWIL Software 3. பைல் அளவு: 26309 கேபி 4. கட்டணம் : இலவசம் 5. இயக்கத்தொகுப்பு : விண்டோஸ் 6.இணைய தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும் இந்நிறுவனம் பல ஆண்டுகளாக இலவச ஆண்டி வைரஸ் தொகுப்புகளை வழங்கி வருகிறது. பல நிறுவனங்கள் இதன் தொகுப்புகளை மாடலாகக் கொண்டு இதே போல இலவச புரோகிராம்களை வழங்கி வருகின்றன. 4 ஹோம் எடிசன் என்பது அண்மைக் காலத்திய பதிப்பாகும். இதில் ஒரு இன்ஸ்டண்ட் மெசேஜ் ஸ்கேனர், இமெயில் ஸ்கேனர், வைரஸ்களிடமிருந்து பாதுகாக்கும் வளையம் மற்றும் அனைத்து பைல்களையும் ஸ்கேன் செய்திடும் ஸ்கேனர் தரப்பட்டுள்ளது. இந்த தொகுப்பு அவ்வப்போது உருவாகி வரும் வைரஸ்களுக்கு எதிராகத் தன்னை வளப்படுத்தி எதிர்த்து தொடர்ந்து பாதுகாப்பு வழங்குகிறது. இதனுடைய ஸ்கேனிங் செய்திடும் வேகமும் கூடுதலாகவே உள்ளது. இந்த சாப்ட்வேர் தொகுப்பினை முதலில் ஓர் ஆண்டிற்கு இலவசமாகப் பதிந்து பெற்றுக் கொள்ளலாம். வெகு எளிதாகப் பதிந்து பெறும் வசதி தரப்பட்டுள்ளது. ஆண்டிவைரஸ் 2 1. பெயர்: Avast! AVG Antivirus 8 Free Edition 2. நிறுவனம் : Grisoft Inc 3. பைல் அளவு: 47924 கே.பி 4. கட்டணம் : இலவசம் 5. இயக்கத்தொகுப்பு : விண்டோஸ் 6.இணைய தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும் பல ஆண்டுகளாகக் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களிடையே மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இலவச ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பு இது. ஒரு சில அலுவலகங்களில் பணம் கட்டி வேறு ஆண்டி வைரஸ் தொகுப்பு வாங்கினாலும் கம்ப்யூட்டரை இயக்குபவர்கள் தங்களுக்கு இதுதான் வேண்டும் என்று ஏ.வி.ஜி. ஆண்டி வைரஸ் தொகுப்பைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த தொகுப்பைப் பயன்படுத்துகையில் ஓரளவிற்கே சிஸ்டம் தரும் மெமரியைப் பயன்படுத்துவதால் பிரச்னை எதுவும் இதன் இயக்கத்தால் ஏற்படுவதில்லை. பைல்களை ஸ்கேன் செய்வதில் இந்த தொகுப்பு காட்டும் வேகம் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இலவசமாகவே இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது இதன் சிறந்த அம்சம். அதைப் போல இதன் அப்டேட்டுகளும் என்றைக்கும் இலவசமே. ஆண்டிவைரஸ் 3 1. பெயர்: Avira Anti Personal Edition 2. நிறுவனம் : Avira GmbH 3. பைல் அளவு: 24462 kb 4. கட்டணம் : இலவசம் 5. இயக்கத்தொகுப்பு : விண்டோஸ் இந்த தொகுப்பிற்கும் பல ரசிகர்கள் உள்ளனர். அவாஸ்ட் தொகுப்பு போல பல வகைகளில் இது வைரஸ் தொகுப்பிற்கு எதிரான பாதுகாப்பினை வழங்கி வருகிறது. பயன் படுத்துவோரை வழி நடத்த இந்த தொகுப்பு தரும் டயலாக் பாக்ஸ்கள் குறிப்பிடத் தக்கவையாகும். பைல்களை மிக வேகமாக ஸ்கேன் செய்கிறது. ஆனால் அடிக்கடி வரும் பாப் அப் விண்டோக்கள் சில சமயம் எரிச்சலைத் தருகின்றன. முழுவதும் என்றும் இலவசமாய் இயங்கும் தொகுப்பு இது. இணையத்தில் இன்னும் பல சிறந்த ஆண்டி வைரஸ் தொகுப்புகள் உள்ளன. வரும் காலத்திலும் நிறைய கிடைக்கலாம். ஆனாலும் எச்சரிக்கையுடன் புதிய தொகுப்புகளை டவுண்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். எனவே தான் சோதிக்கப்பட்டு பலரால் பயன்படுத்தப்படும் பாதுகாப்பான மூன்று தொகுப்புகள் குறித்த விளக்கம் மேலே தரப்பட்டுள்ளது.

"கடவுள் இருக்கின்றது"

எச்சரிக்கை : கொஞ்சம் நீளமான பதிவு. ரொம்ப இல்லாட்டாலும் கொஞ்சம் டெக்னிகலான விஷயங்கள் உண்டு. ஆற அமரப் படிங்க. தலைப்பே ஒருமாதிரியா இருக்கா? இருக்கட்டும்... இருக்கட்டும்... கடவுள்னு ஒருத்தர் இருக்காரா இல்லையா? கடவுள் அஃறிணையா உயர்திணையா? இல்லை உயர்ந்ததிணையா? ஆத்திகனோ நாத்திகனோ, கல்லுக்குள்ள தேரை மாதிரி மனசோட அடி ஆழத்துல இந்தக் கேள்வி நிச்சயம் இருக்கும். ஆன்மீக மார்க்கத்துல கடவுளை "விளக்க" அநேக வழிகள் இருக்கு. ஆனா பொதுவா எல்லா வழிகளுமே intangible or subtle or vague. Concrete-ஆ இதுதான் இதுன்னு எளிமையாச் சொல்ல முடியல - அல்லது சொல்வது convincing-ஆ இல்லை. ஆனா விஞ்ஞானத்துக்கு இந்த அசௌகரியமே கிடையாது. எதையாவது செஞ்சு நிரூபிக்க முடிஞ்சா சரி ; இல்லேன்னா ஒத்துக்கவே ஒத்துக்காது. பூமி தட்டையானது, பூமிதான் மத்தியில; மத்த கிரகங்கள் அதைச் சுத்தி வருதுங்கறதுல இருந்து பலப் பல மதம் சார்ந்த, கடவுள் சார்ந்த நம்பிக்கைகளை தகர்த்து 'இதுதான் உண்மை'ன்னு அறுதியிட்டுச் சொன்னது விஞ்ஞானம். ஆனா விஞ்ஞானமும் மெய்ஞானமும் ஒண்ணுக்கொண்ணு எதிர்ப்பு மாதிரி தோணினாலும், உண்மைல ரெண்டுமே complimenting each other. இருக்கட்டுமே... எனக்கு என்ன ஆச்சு? எதுக்கு இந்த பீடிகை எல்லாம்? சொல்றேன். நேற்று முன் தினம் இன்னொரு ஓய்வுக்கான வாய்ப்பு கிடைச்சதுனால சட்டுனு "செர்ன்" போகணும்னு முடிவு பண்ணி கிளம்பிட்டேன். என்னோட ட்ரீம் லிஸ்ட்ல இருந்த இடம். CERN - European Centre for Nuclear Reasearch. இப்பதான் கொஞ்ச நாளா பார்வையாளர்களுக்கு திறந்துருக்காங்க. இது 20க்கும் மேற்பட்ட உலக நாடுகளோட நிதி உதவியோட ஆரம்பிக்கப்பட்ட நிறுவனம். போன செப்டம்பர்ல பேப்பர்ல படிச்சுருக்கலாம்..."ஏதோ டெஸ்ட் பண்றாங்களாம்... கொஞ்சம் ஏமாந்தாலும் உலகமே அழிஞ்சுரும்னு சொல்றாங்கடா மாப்ள... அடுத்த மாசம் கல்யாணத்த வெச்சுக்கிட்டு இதெல்லாம் நமக்குத் தேவையா?"னு எங்கயாவது டயலாக் கேட்டிருக்கலாம்... அந்த முக்கியமான சோதனையை நடத்தியது CERN. இந்த பரிசோதனைக்காக 5 இடங்கள்ல சோதனைக்கூடங்கள் இருக்கு. அதுல நாலு ஃப்ரான்சுக்குள்ள. ஒண்ணு ஜெனீவாவுக்கு பக்கத்துல ஸ்விஸ்-ஃப்ரான்ஸ் பார்டர்ல இருக்கற "மெய்ரின்"ங்கற கிராமத்துல இருக்கு. அங்கதான் நான் போனேன். ஜெனீவால இருந்து டவுன் பஸ் போகுது. 25 நிமிஷத்துல போயிடலாம்.
அப்பிடி இங்க என்னதான் சோதனை பண்றாங்க? அதுக்கு முன்னால கொஞ்சம் சயன்ஸ் ரிவைஸ் பண்ண வேண்டியிருக்கும். எல்லாப் பொருட்களும் அணுக்களால் ஆனது, அணுவோட ந்யூக்ளியஸ்க்கு உள்ள புரோட்டான்ஸ் இருக்கு, எலக்ட்ரான்ஸ் அதை சுத்தி வருதுங்கறது தெரியும். அப்பறம் புரோட்டான்களுக்கு உள்ள க்வார்க், எலக்ட்ரானுக்குள்ள லெப்டான்.... இதெல்லாம் இருக்குங்கறதும் தெரியும். ஆனா அதுக்கும் நுணுக்கமா ஒரு துகள் இருக்கலாம்... அதுதான் GOD Particle னு Higgs சொல்ற வரைக்கும் தெரியாது. அவர் சொன்னதால அதுக்கு Higgs Boson னு ஒரு பேரும் உண்டு. அதைத் தேடித்தான் இங்க சோதனை. பிரபஞ்சம் தோன்றினபோது அது இருந்துருக்கணும். பிரபஞ்சம் தோன்றிய (Big Bang) 10^-43 செகண்ட்க்கு என்ன நடந்திருக்கலாமோ அதை மறுபடி நிகழ வைத்து அந்த பரம ரகசியத்தை தெரிஞ்சுக்க கடந்த 40 வருஷமா இந்த திட்டம் நடக்குது. அந்த ரகசியத்தைத் தெரிஞ்சுக்கற வரைக்கும் அறிவியலாளர்களுக்கு தூக்கமே வராது. சரி.... அதை எப்பிடித் தேடறது? அணுவே கண்ணுக்குத் தெரியாத ஒண்ணு. அதையும் விட நுணுக்கமான ஒண்ணை எப்பிடி...? அங்கதான் நம்ம ஐன்ஸ்டீன் சொன்னது உதவிக்கு வரும். E=mc2. ஆற்றல்ங்கறது எந்த நிலைலயும் இருக்கு. ஆற்றலோட condensed form நிறை (mass). நிலையா இருக்கும்போது ஈர்ப்பு விசையைப் பொறுத்து ஒரு நில ஆற்றலும் (potential) இயங்கும்போது இயக்க ஆற்றலும் (kinetic) வெளிப்படுது. அப்ப ஒளியோட வேகத்துல ஒரு துகளோட ஆற்றல் எவ்வளவு இருக்கும்? நம்மால நினைச்சே பாக்க முடியாது. அந்த மாதிரி ரெண்டு எனர்ஜியை மோத விட்டா...? அப்பிடி ஒரு மோதல்ல... ஒரு ஆற்றல் மிக்க மூலத்துல இருந்துதான் பிரபஞ்சம் உண்டாச்சுங்கற சித்தாந்தத்தின் அடிப்படைல இந்த சோதனை. அப்பிடி ஒரு மோதல் நிகழும்போது இந்த GOD Particle வெளிப்படலாம். எல்லாத்துக்கும்.. எல்ல்ல்ல்ல்லாத்துக்கும்... மூல சக்தியான அந்த சக்தி என்னதுன்னு ஒருவேளை விடை கிடைக்கலாம்ங்கற முயற்சிதான் இது. எப்பிடி இந்த மோதலை நிகழ்த்தறது? ரெண்டு புரோட்டன்களை ஒளியோட வேகத்துல ஒண்ணோட ஒண்ணு மோத வைக்கலாம். ஆனா ஒளி வேகத்துல புரோட்டான் துகளை முடுக்கணும்னா நேர்கோட்டுப் பாதைல முடியாது. அவ்வளவு தொலைவுக்கு பூமில சோதனைக்கூடம் வைக்க முடியாது. மாற்று என்னன்னா, அதை ஒரு வட்டப் பாதைல முடுக்கறது. இதுக்காக பூமிக்கு 100 மீட்டர் கீழ 27 கிமீ நீளத்துக்கு ஒரு வட்டப் பாதை அமைச்சுருக்காங்க. பேரு Large Hadron Collider (LHC). அந்தப் பாதைல 5 இடத்துல சோதனைக் கூடங்கள். ஒரு துகள் முடுக்கி(Particle Accelerator) மூலமா சில பில்லியன் புரொட்டன்களை எதிரெதிர் பாதைகள்ல கிட்டத்தட்ட ஒளி வேகத்துக்கு (99.99%) முடுக்கி இந்த 27 கிமீ பாதைல அங்கங்க அதுக மோதறதுக்கு வசதியா பாதைகளை குறுக்க ஓடவெச்சு..... எங்கயாவது மோதினா அந்த நிகழ்வுகளை துல்லியமா சேகரிச்சு அனுப்ப சூப்பர் கம்ப்யூட்டர்க... எல்லாமே அதிவேக கடத்திகள். Super conductors. ப்ரோட்டான்களை முடுக்கி அதுகளை deflect பண்ணி வட்டப் பாதைல ஓட வைக்க அதிவேகக்கடத்தி இருமுனை மின்காந்தங்கள் (super conducting dipole electromagnets), புரோட்டான்களை நெருக்கமா pack பண்ணி மோதலுக்கான சாத்தியங்களை அதிகரிக்கரதுக்கு நால்முனை மின்காந்தங்கள் (quadrupole). (இந்த Dipole / Quadrupole பத்தியே ஒரு நாள் முழுக்க பேசலாம்) இந்த மின்காந்தங்கள் எல்லாமே -271Cலதான் முழுத் திறன்ல வேலை செய்ய முடியும். எல்லாமே superconductingனால ஒரு தனி cooling system. திரவ நைட்ரஜன், திரவ ஹீலியம் - மில்லியன் லிட்டர்களுக்கு மேல - இதெல்லாம் பயன்படுத்தி குளிர்விக்கறாங்க. எல்லாமே extreme technologies. மோதும்போது சிதறல்ல வேறு சில துகள்களும் - GOD particle உள்பட - கிடைக்கலாம். அதைக் கண்டுபுடிச்சு சேகரிக்க Particle Detectors இருக்கு. மேலும் இந்த பரிசோதனையின்போது TB கணக்குல சேகரிக்கற டேடாவை அனுப்ப, சேகரிக்க, ஆய்வு பண்ணன்னு பல நூதனமான தொழில்நுட்பங்கள் (grid computing) கூட இந்த ஆராய்ச்சியோட பக்க விளவுகளாக உருவாகியிருக்கு. இன்னும் சில வருடங்கள்ல அதெல்லாம் day-to-day computing முறைல வந்துடலாம். இப்பவே இந்த தொழில் நுட்பங்களை மருத்துவத் துறைல பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. போன செப்டம்பர் மாசம் இதை டெஸ்ட் பண்ணும்போது எதிர்பாராத ஒரு சின்ன மின் கசிவுல திரவ ஹீலியம் சூடாகி வாயுவாகி, அழுத்தம் அதிகமாகி 50 மின்காந்தங்களுக்கு மேல சேதமாயிடுச்சு. எல்லாம் சரியாகி மறுபடி அடுத்த டெஸ்டுக்கு இன்னும் வருஷங்கள் ஆகலாம். ஆனால் விஞ்ஞானம் "கடவுளை"த் தேடும் வேலையத் தொடர்ந்து செய்யும். விஞ்ஞானமும் மெய்ஞானமும் குவியற இடம் ரொம்ப தொலைவுல இல்லைன்னு தோணுது. மெய்ஞானத்துல கடவுளை "உணர" வைக்க முடியும்னா, அதை "காண" வைக்கறது விஞ்ஞானத்துனால முடியலாம். முடிக்கும். இப்பொதைக்கு இந்த Higgs Boson தான் அதுன்னு நாம தேடிக்கிட்டுருக்கோம். அதுவாகவும் இருக்கலாம் (அல்லது அதை விட சூட்சுமமான ஒன்றாகவும் இருக்கலாம்) அந்த ஆதார சக்தியை, மூலப் பொருளைத்தான் நம்ம வேதங்கள் எல்லாம் பரம்பொருள், மூலாதாரம், பரமார்த்த சத்யம், சத்தாமாத்ரம், சத்து அப்பிடின்னெல்லாம் பல பேர்கள்ல சொல்லுது. பார்க்கலாம்...... சரி... ரொம்ப நீளமாப் போச்சு.... ரொம்பவே மேலோட்டமா சொல்லியிருக்கேன். ஆழமா சொன்னா அறிவியல் பாடம் எடுக்கற மாதிரி ஆயிடும். சொல்ல நான் ரெடிதான்.... (கடைக்கு வர நாலு கஸ்டமரும் ஒடிட்டா?? :)))) இன்னும் சில interesting விஷயங்கள் - பொருள் ; அபொருள் (matter ; anti-matter) - சொல்ல வேண்டியிருக்கு... அடுத்த இடுகைல....
டிஸ்கி : இதைப் படிச்ச பிறகு, நான் ஆத்திகனா நாத்திகனா, அறிவியலாளனா ஆன்மீகவாதியான்னு கேட்டா.... முதல் பத்தில சொன்ன மாதிரி ரெண்டுமே complimenting each other.


17 மே 2009

கத்தால கண்ணழகிக்கு அது பிடிக்காதாம்! கேளுங்க! கேளுங்க! கேளுங்க!

"நல்ல அழகாகத்தான் இருக்கிறார், நடனத்திலும் சளைக்காதவர் தமிழ் சினிமாவை கலக்குவார்" இது தமிழ் சினிமாவின் ஆர்வலர்கள் ஸ்னிக்தா "கத்தால கண்ணால குத்தாத" என பாடிக்கொண்டு அறிமுகமானபோது சொன்ன வசனம். மராத்தி, ஹிந்தி மொழிகளில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக்கொண்டிருந்தவர் இல்லாத இடுப்பாலே என தன இடுப்பை ஆட்டி ஆட்டி ஆட்டம் போட்டே பிரபலமாகிவிட்டார். என்ன செய்ய பல இளைஞர்களின் தூக்கமும் கொஞ்சம் கெட்டுத்தான் போச்சு. ஆனாலும் இப்போ அவர் தன் செவ்விதழ் திறந்து சொன்ன வார்த்தைகள் தான் காதல் கோட்டை கட்டிய எத்தனையோ பெயரை முகவரி இல்லாமல் செய்யப்போகின்றது. அவர் அழகை பார்த்து ஆண்கள் பயப்பட்டுக்கொண்டிருக்கும்போது(வேறொன்றுமில்லை காதலில்தான்.) ஸ்னிக்தாவோ தனது பயப்பட்டியலை வெளியிட்டு எல்லோரையும் பயப்படுத்தி விட்டார். பத்திரிகையாளர்களைக் கண்டால் பயமாம்(கேட்கக்கூடாத கேள்வியை கேட்காதிங்கப்பா செல்லம் பயப்படுகிதெல்லா) அடுத்ததா சிக்கியது இவங்க என்ன சொல்றாங்கன்னே என தெரியமுடியாத பல்லிகள்.(எல்லா நடிகைகளும் பல்லி கரப்பான் பூச்சி என ஒரு லிஸ்ட் வைத்திருப்பார்கள்.) தனிமையில் பிடிச்சது பொம்மைகளாம்(அதைத்தான் கட்டிப்பிடித்துக் கொண்டு இருப்பாரா? நானும் பொம்மைமாதிரி இருப்பேனே.) பருப்புசாதம் என்றா உயிரையே விடும் ஸ்னிக்தா உயிரினும் மேலான காதலை ஒரு நோயென சொல்லிவிட்டு காதலே தனக்கு பிடிக்காதாம். அதைவிட கொடுமை ஆண்கலென்றாலே பிடிக்காதாம்.(எப்பிடிதாயே நடிப்புலகத்துக்கு வந்திங்க.) ஆண்களை பிடிக்காத அம்மணி எப்படித்தான் ஆண்களுடன் சேர்ந்து கட்டிப்பிடித்து காதல் காட்சிகளில் எல்லாம் நடிக்கின்றாரோ தெரியவில்லை. நண்பர்களே! இனிமேல் ஸ்னிக்தா பின்னால் அலையாதிங்க ஏனென்றால் அவங்களுக்கு தான் அது(காதல்+ஆண்களை) பிடிக்காதாமே.

என்ன நடக்கின்றது ஐ.பி.எல்லில்....!

கடந்தமுறை ஐ.பி.எல் போட்டிகள் ஏனோ எல்லோரையும் கட்டிப்போட்டிருந்தது. இந்தியாவில் நடந்தது அதற்கு காரணமாக இருக்கலாம். வான வேடிக்கைகள் நிறைந்த விறுவிறுப்பான போட்டிகள் எத்தனை.(சென்னை அணி நன்றாக விளையாடியது என் ரசனைக்கு காரணமோ தெரியவில்லை.)
ஒரு சில அணிகளை விட மற்ற எல்லா அணிகளும் நன்றாகத்தான் மோதின. ஷேன் வார்னேயின் அணி இறுதியில் நடத்திய திருவிழாவை டோனி மட்டுமல்ல யாருமே மறக்கமாட்டார்கள்.
அதே எதிர்பார்ப்புடன் ஆரம்பமான இம்முறை தொடர் ஆரம்பத்திலேயே தென் ஆபிரிக்காவில் ஆரம்பம் என்றவுடன் தன் களையில் முதல் படியை இழந்தது என்பது மறுக்கமுடியாத உண்மையே. கிரிக்கெட் வெறியர்களை கொண்ட இந்தியா உட்பட ஆசிய நாட்டவரை இது பெரிதும் பாதித்தது என்னவோ உண்மையே. அதன் பின் ஒருவாறு ஆரம்பமாகிவிட்டது. (கடந்தமுறையை விட இம்முறை பல முன்னணி பிரபலங்கள் களமிறங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.)
ஆரம்பத்திலேயே கடந்தமுறை இறுதிவரை முன்னேறிய சென்னை அணியினர் மும்பையிடம் தோற்று போட்டியின் சுவாரஸ்யத்தை கேள்விக்குறியாக்க தொடங்கினரென்றால் மறுபுறம் கடந்தமுறை உப்புசப்பு அணியாக இருந்த பெங்களூர் அணி சாம்பியன்ஸ் ராஜஸ்தானை விழுத்த மேலும் ஒரு எதிர்பார்ப்பில் அடி. இப்படியே போக கடந்தமுறை சொதப்போ சொதப்பென சொதப்பிய டெக்கான் அணி இம்முறை ஆரம்பம் முதலே பிளந்து கட்டத்தொடங்கியது. மும்பை மற்றும் டெல்லி அணிகளும் தங்களை பலமாக வெளிப்படுத்த கடந்தமுறை அசத்திய சென்னையும் ராஜஸ்தானும் நிமிரமுடியாமல் அடிவாங்கின.கொல்கத்தா அணியோ அடிவாங்கவே தான் வந்திருக்கின்றேன் என வந்தது போல் அடிமேல் அடி வாங்கி இன்று கடை நிலையில்.(ஷாருக்கானை மூட்டை கட்டி அனுப்பி வைத்த சாதனை அணி அது.) இருந்தாலும் பயிற்றுவிப்பாளர் புச்சனன் செய்த மந்திர விளையாட்டுகள் கங்குலி என்னும் முதிர்ந்த சிங்கத்தை களங்கப்படுத்த மொத்த அணியே கரைசேரா கப்பலாகிவிட்டது. கொஞ்சம் தலை நிமிர்ந்த ராஜஸ்தான் அணி பஞ்சாப் அணியை 214/4 என விளாசி துவைத்தெடுத்தனர். இதுவே இம்முறை ஐ.பி.எல் போட்டிகளில் இதுவரை ஒரு அணி பெற்ற அதிகூடிய ஓட்டம்.(வேறு எந்த அணியும் இருநூறை தாண்டவில்லை கேட்டால் இருபதுக்கு இருபது போட்டியாம்.) துடுப்பாட்டத்தை பொறுத்தவரை கிழட்டு சிங்கம் ஹய்டேன் 486 ஓட்டங்களுடன் முதலிடத்திலும் தொடர்ந்து அவர் சகா கில்கிறிஸ்ட் 329 இரண்டாமிடத்திலும் AB de Villiers 366 ஓட்டங்களுடன் மூன்றாமிடத்திலும் ரைனா 322 ஓட்டங்களுடன் நான்காம் இடத்திலும்யுவராஜ் 314 ஓட்டங்களுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளனர். தனிநபர் ஓட்டக்குவிப்பை பொறுத்தவரை AB de Villiers 105 ஓட்டங்கள் ஆட்டமிழக்காமல் விளாசி முதல் இடத்திலும் ரைனா 98, ஹய்டேன் 89 ஓட்டங்களுடனும் முதல் மூன்று இடங்களை கைப்பற்றி உள்ளனர். சிக்ஸர் விலாசுவதிலும் வயதான வீரர்கள் விடவில்லை. கில்கிறிஸ்ட் 21 சிக்ஸ்செர்கள், ஹய்டேன் 20 சிக்ஸ்செர்கள் என முதல் இரண்டு இடங்களையும் பிடிக்க டுவய்னே ஸ்மித், ரைனா, யுவராஜ் அவர்களை துரத்துகின்றனர். ஒரே போட்டியில் ஆறு சிக்ஸ்செர்கள் விளாசி AB de Villiers, யுஸுப் பதான், ஹய்டேன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். பந்து வீச்சை பொறுத்தவரை இலங்கையின் சுனாமி மலிங்க இந்தியாவின் இருபதுக்கு இருபது ஸ்பெசலிஸ்ட் ஆர.பி.சிங் மற்றும் நெஹெரா ஆகியோர் பதினாறு விக்கெட்டுகளுடன் முன்னிலை வகிக்க அனில்கும்ப்ளே ஒரு போட்டியில் ஐந்து ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்துகின்றார்.(எதி ராஜஸ்தான்) இம்முறை ஐ.பி.எல்லில் எந்த விக்கெடடுக்குமான அதிகபட்ச இணைப்பாட்டமாக ராஜஸ்தான் அணியின் ஓஜா மற்றும் கிரகம் ஸ்மித் ஆகியோர் 135 ஓட்டங்களை குவிக்க கடந்தமுறை ஆரம்ப இணையாக அசத்திய டெல்லியின் ஷேவாக் கம்பீர் ஜோடி தடுமாறி வருகின்றது. ஜெயசூரியா மற்றும் சச்சின் ஜோடியும் சில போட்டிகளில் விருந்து வைக்க தவறவில்லை.(இந்த வயதிலும் அப்படி ஒரு ஆட்டம் எங்களையா அணியை விட்டு நீக்க சொல்லி சொன்னீர்கள் என கேட்பதுபோல்.)
இந்த பதிவை நான் எழுத யோசித்தபோது டெல்லிக்கும் பஞ்சாபுக்கும் இடையிலான போட்டியில் தொடர்ந்து அசத்தி வந்த டெல்லி படுதோல்வி கண்டிருக்கின்றது. புள்ளிப்பட்டியலில் எந்த அணியும் தொடர்ந்து முதலிடத்தை தக்கவைப்பதாக தெரியவில்லை. அத்துடன் பலமான அணிகளுடன் ஜெயிக்கும் பெரிய அணிகள் பலம் குன்ரியதென நினைக்கும் அணிகளிடம் சுருண்டு விடுகின்றன.(இதுக்கு பெயர்தான் விட்டுக்கொடுப்போ?) கள நிலவரம் இப்படி இருக்க கனவு தேவதைகளின் ஆட்டம் ஒரு புறம் சூடேற்றுகின்றது. நல்ல காலம் இம்முறை அவர்களை ஆவது ஆடவிட்டது. இல்லாவிட்டால் டெஸ்ட் போட்டிகள் போல் நடைபெறும் சில போட்டிகளை பார்க்கபோகும் ரசிகர் நிலை என்னவோ?
எந்த அணியும் தொடர்ச்சியாக தன் பலத்தை நிரூபிக்கவில்லை அதேபோல் பல எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் சொதப்பல் ஆட்டம் ஆடுகின்றனர். சேவாக் துடுப்பாட்டத்தை மறந்து விட்டார். கம்பீர் தடுமாறுகின்றார். சனத்தோ சத்தற்றவர்போல வந்து போகின்றார்.. பீட்டேர்சன், பிளின்டோப் விளையாடுகின்ரார்களா தெரியவில்லை. முரளியிடம் பழைய விக்கெட் வேட்கை காணவே இல்லை. ஓரம் என்ன செய்கின்றாரோ?. தோனியின் தலைமை? சச்சின் ஏதோ இடைக்கிடை ஆடுகின்றார். ராவிட்டும் அப்படியே. மஹேல, சங்கக்கார மற்றும் யுவராஜ் பெரிதாக சோபிக்கவில்லை.டில்ஷான் தன் கடந்தகாலங்களில் மறந்த துடுப்பாட்டத்தை இப்போது சேர்த்து காட்டிக்கொண்டிருக்கின்றார்.
தினேஷ் கார்த்திக் கொஞ்சம் அணியை காப்பாற்றி விடுகின்றார். பிராவோ தன் பங்குக்கு கலக்கிக்கொடிருக்கின்றார். ஹர்பஜன் தன் பங்குக்கு பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் உதவி செய்து அணிக்கு பலம் சேர்க்கின்றார். யுஸுப் பதான் களம் இறங்கினாலே எதிரணிக்கும் கலக்கும் ஆட்டம். பாகிஸ்தான் வீரர்கள் இல்லாமல் போனதும் மறுக்கமுடியா இழப்பே. ரோகித் ஷர்மா பந்துவீச்சில் கலக்குவதொடு அவ்வப்போது மறந்து போன துடுப்பாட்டத்தை நினைவுபடுத்திப்பார்க்கின்றார். உத்தப்பா நடந்து வந்து விளாசும் சிக்ஸ்செரை பார்த்து எத்தனை மாதங்களாகிவிட்டது?
எதிர்பார்க்காத எத்தனையோ இளம் வீரர்களும் சர்வதேச வீரர்களும் கொஞ்சம் தங்களை நிலை நிறுத்துகின்றார்கள். சில பிரபல வீரர்கள் களம் இறங்கவே இல்லை. ஏன்? என்ன நடக்கின்றது. கடந்தமுறை கலை கட்டிய திருவிழாவா இது? எதுவுமே தெரியாமல் பாதி கடந்து விட்டது. இனியாவது சூடு பிடிக்குமா? தெரியவில்லை.

தாஜ்மகாலின் மதிப்பு ஒரு ரூபாய்!

இது ஏதோ பொம்மை தாஜ்மகாலின் விலை மதிப்பு அல்ல. ஆக்ராவில் யமுனா நதிக் கரையில் அமைந்துள்ள உண்மையான தாஜ்மகாலின் மதிப்புத்தான் ஒரு ரூபாய். ஆச்சரியப் படாதீர்கள்! குதுப்மினார் போன்ற இதர கலைச்சின்னங்களும் ஒரு ரூபாய் அளவிற்கு மதிப்பிடப் பட்டுள்ளன. சற்று விவரமாக பார்ப்போம். தற்போது மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைகள் நடப்பு கணக்கியல் முறையில் (Cash Method) தயாரிக்கப் படுகின்றன. அதை மாற்றி சொத்து சேரும் முறைப் படி (Accrual Method) நிதிநிலை அறிக்கைகள் தயார் செய்ய புதிய முடிவு எடுக்கப் பட்டுள்ளது. இதன் படி, அரசின் கைவசம் உள்ள சொத்துக்களை மதிப்பிடும் முயற்சியில் இப்போது மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. அந்த முயற்சியின் முதல் படியாக, தாஜ் மகால், குதுப்மினார் போன்ற கலைச் சின்னங்களின் மதிப்பு ரூபாய் ஒன்று என்று நிர்ணயிக்கப் பட்டுள்ளது. புதிய கணக்கியல் முறையின் படி, இருபத்து ஐந்து வருடங்களுக்கு உட்பட்ட அரசு சொத்துக்களின் மதிப்பு அவற்றின் முதலீட்டு செலவாக இருக்கும். அதே சமயத்தில் இருபத்து ஐந்து வருடங்களுக்கு முந்தைய சொத்துக்களின் மதிப்பினை அரசே நிர்ணயிக்கும். இந்த முறையில் தாஜ் மகால் விலை ஒரு ரூபாய் என்று மத்திய அரசினால் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. சில வருடங்களுக்கு முன்னர் கட்டப் பட்ட சில சாதாரண அரசு கட்டிடங்களின் மதிப்பு பல லட்சம் அல்லது பல கோடியாக இருக்கும் போது, தாஜ் மகால் போன்ற ஒரு அரிய பொக்கிஷத்தின் மதிப்பு ஒரு ரூபாயாக கணக்கிடுவது ஒரு வினோதம்தான். அதே சமயத்தில், பலே கில்லாடியான நமது அரசியல்வாதிகள், தனியார் மயமாக்கம் என்ற பெயரில், அரசு சொத்துக்களை லாபத்தில் விற்கிறேன் என்று சொல்லிக் கொண்டு தாஜ் மகால் இரண்டு ரூபாய், தஞ்சை கோயில் மூன்று ரூபாய், செங்கோட்டை நான்கு ரூபாய் என்று கூறு போட்டு விற்று விட்டு விடக் கூடாது. ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் நமக்கு ஏற்கனவே நல்ல முன் அனுபவம் இருக்கிறது அல்லவா?

மீண்டும் வரும் அபர்ணா!

கணவன், மனைவிக்கு இடையே ஏற்படும் பூசல் குறித்த கதைதான் கண்ணுக்குள்ளே. ஆனால் இந்தக் கதையில் வரும் பூசலுக்கான காரணம் வேறு, அதன் கதைக்களம் வேறு என்கிறார் படத்தின் இயக்குநர்[^] மூவேந்தன். எஸ்.எஸ்.பிக்சர்ஸ் சார்பில் மூவேந்தன் இயக்கும் படம்தான் கண்ணுக்குள்ளே. மிதுன்தான் நாயகன். அவருக்கு ஜோடியாக அபர்ணா மற்றும் அனு ஆகிய இருவரும் நடிக்கின்றனர். இவர்களில் அபர்ணா, புதுக்கோட்டை சரவணன் படத்தில் அறிமுகமானவர். இடையில் காணாமல் போயிருந்த அபர்மா மீண்டும் திரும்பி வருகிறார். அனு புதுமுகம். இளையராஜாவின் இசையமைப்பில் உருவாகும் இப்படம்[^] இசையைப் பின்னணியாகக் கொண்டதாம். படத்தின் கதை குறித்து மூவேந்தன் கூறுகையில், கணவன், மனைவிக்கு இடையே சண்டை ஏற்படும்போது 2 மணி நேரம் பேசாமல் இருக்கலாம், அதுவே 2 வருடமாக இருந்தால் என்னாகும். அந்த இடைப்பட்ட காலத்தில் ஏற்படும் விளைவுகளைக் காட்டுகிறது எனது படம்[^] என்கிறார். மூவேந்தன் டிவி[^] சீரியலை இயக்கிய அனுபவம் கொண்டவர். ஆனால் படம்[^] சீரியல் ரேஞ்சுக்கு இருக்காது என்று உறுதியளிக்கிறார்.

ஆசினுக்கு சல்மானின் புது பரிசு!

ஆசினுக்கு முதலில் வீடு கொடுத்தார். இப்போது நாய்க்குட்டி ஒன்றை பரிசளித்து அசத்தியுள்ளாராம் சல்மான் கான். ஆசினின் வரவால் இந்தி்த் திரையுலகில் ஏக களேபரமாகிக் கொண்டிருக்கிறது. ஆசின் குறித்து தினசரி ஏதாவது ஒரு செய்தி[^] வந்தவண்ணம் உள்ளது.
Asin1_002.jpg
முதலில் ஆசினுக்கும், சல்மான் கானுக்கும் காதல் என்று செய்தி[^] கள்[^] கிளம்பின. இந்தக் காதலுக்குப் பரிசாக சல்மான் கான் பெரிய வீடு ஒன்றை ஆசினுக்கு வாங்கிக் கொடுத்துள்ளதாகவும் கூறப்பட்டது. சல்மானின் இந்த திடீர் மாற்றத்தால் அவரது காதலி காத்ரீனா கைப் அப்செட் ஆகியுள்ளதாகவும் செய்தி[^] கள் கூறின. ஆனால் இதை ஆசின் மறுத்தார். ஏன்தான் இப்படியெல்லாம் வதந்தி கிளப்புகிறார்களோ என புலம்பினார். இந்த நிலையில் ஆசினுக்கு சல்மான் கான் ஒரு நாய்க்குட்டி வாங்கிக் கொடுத்துள்ளாராம். ஆசினுக்கு நாய் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதை தெரிந்து கொண்டு சர்ப்ரைஸாக ஒரு விலை உயர்ந்த நாய்க் குட்டியை வாங்கிக் கொடுத்து அசத்தி விட்டாராம் சல்மான். இருவரும் இப்போது லண்டன்[^] ட்ரீம்ஸ் படத்தில் இணைந்து நடித்து வருகிறார்கள். ஆனால் ஆசினுக்கு சல்மான் நாய் வாங்கிக் கொடுத்தது குறித்து ஆசினின் அப்பாவுக்குத் தெரியாதாம். ஆசினுக்கு நாய் பிடிக்கும், ஆனால் அது உடல் நலத்துக்கு நல்லதல்ல என்று நான் கூறியுள்ளேன். ஆனால் இப்போது சல்மான் நாய் கொடுத்தாரா என்பது எனக்குத் தெரியாது என்கிறார் ஆசினின் அப்பா ஜோசப். அப்பாவுக்குத் தெரியாமயா ஆசின்?, தப்பாச்சே!

Windows Genuine Advantage Notifications ரிமூவ் செய்வது எப்படி

நமது கம்ப்யூட்டர் சில சமயங்களில் windows update ஆகி விடும்.update ஆனபிறகு நமது விண்டோஸ் ஒரிஜினல் இல்லை ப்ளீஸ் இன்ஸ்டால் ஒரிஜினல் என்ற மெசேஜ் வந்துவிடும். கிழ்கண்ட படங்களை காண்க . ஒவ்வருமுறை ரீ ஸ்டார்ட் ஆனபிறகும் இந்த மெசேஜ் வந்து தொல்லை கொடுக்கும். இதை சரி செய்ய கிழ்கண்ட டூல்ச்யை டவுன்லோட் செய்து ஒருமுறை ரன் செய்யவும். DOWNLOAD HERE

நடிகை கார்த்திகாவுக்கு காதல் திருமணம்

தமிழில் 'நம்நாடு’, ‘திண்டுக்கல் சாரதி’ உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் நடிகை கார்த்திகா. தற்போது ‘பாலை வனச்சோலை’ படத்தில் நடித்து வருகிறார்.

இவருக்கும் அமெரிக்காவில் மருந்து கம்பெனி அதிகாரியாக இருக்கும் மெரின் மேத்யூ என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் 2 வருடங்களாக காதலித்து வந்தனர்.

மெரினுக்கு கொல்லம் அருகே உள்ள மைனாகப் பள்ளி சொந்த ஊர். தற்போது இவர்களது காதலுக்கு பெற்றோர் பச்சைக்கொடி காட்டியதைத் தொடர்ந்து திருமண ஏற்பாடு நடந்து வருகிறது.

அடுத்த மாதம் 14ம் தேதி நிச்சயதார்த்தம் நடக்கிறது. 18ம்தேதி தேவலங்கரை செயின்ட் மேரீஸ் தேவாலயத்தில் திருமணம் நடக்கிறது.

மறுநாள் கொச்சியில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. திருமணத்துக்கு பிறகு கையில் உள்ள படங்களை முடித்து விட்டு கணவருடன் அமெரிக்காவில் குடியேற கார்த்திகா திட்டமிட்டுள்ளார்.

14 மே 2009

மகளுடன் வந்து ஓட்டுப் போட்டார் ரஜினி - அரசியலுக்கு வருவது குறித்து மெளன பதில்

சென்னை: மகள் செளந்தர்யா ரஜினிகாந்துடன் வந்து வாக்களித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் . நாளை மக்கள் உங்களுக்கு ஓட்டுப் போடும் நிலை வருமா என்று செய்தியாளர்கள் கேட்டபோது, மெளனமாக வானத்தை நோக்கி கையைக் காட்டியபடி சென்றார் ரஜினி.சூப்பர் ஸ்டார் ரஜினி, தனது மகள் செளந்தர்யாவுடன் இன்று காலை 8.45 மணிக்கு ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஸ்டெல்லா மாரீஸ் கல்லூரிக்கு வந்தார்.அங்குள்ள வாக்குச் சாவடியில் ரஜினியும், செளந்தர்யாவும் வாக்களித்தனர்.பின்னர் வெளியில் வந்த ரஜினியை செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர். வழக்கம் போல யாருக்கு ஓட்டுப் போட்டீங்க என்று செய்தியாளர்கள் கேட்டபோது, யாருக்கு ஓட்டுப் போட்டேன் என்பதை வெளியில் சொல்ல மாட்டேன். ஆனால் ஓட்டுப் போட வேண்டியது நமது கடமை.ஓட்டுப்போடுவதை யாரும் தவிர்க்கக் கூடாது. எல்லாரும் கண்டிப்பாக தங்கள் ஓட்டை போட வேண்டும் என்றார் ரஜினி.பின்னர் வழக்கம் போல அரசியல் பிரவேசம் குறித்தும் செய்தியாளர்கள் கேட்டனர். இந்த முறை சற்று வித்தியாசமாக, எதிர்காலத்தில் மக்கள் இது போன்று உங்களுக்கு ஓட்டு போடும் நிலை வருமா என்று கேட்டனர். செய்தியாளர்கள் கில்லாடி என்றால் ரஜினி கில்லாடிக்கு கில்லாடி ஆச்சே. ஹா.. ஹா.. ஹா.. சிரித்துக் கொண்டே, பதில் ஏதும் சொல்லாமல், எல்லாம் அவன் செயல் என்பதை உணர்த்தும் விதமாக, வானத்தை நோக்கி இரு கைகளையும் உயர்த்திக் காட்டி விட்டுச் சென்று விட்டார்.

USB Drive ஐ NTFS File சிஸ்டத்தில் ஃபார்மேட் செய்வது எப்படி?

NTFS File சிஸ்டம் என்பது அதிக பாதுகாப்பும், வேகமும் கொண்டதாகும்.ஆரம்ப காலங்களில் விற்பனைக்கு வந்த USB டிரைவ்கள் குறைந்த கொள்ளளவு கொண்டதாக இருந்தது. எனவே அதற்கு NTFS File சிஸ்டம் தேவைப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது சந்தையில் விற்பனைக்கு வருகின்ற USB Drive கள் அதிக கொள்ளளவு கொண்டதாக உள்ளதால் இதனை NTFS File system மூலம் ஃபார்மேட் செய்வது பாதுகாப்பானதாகும்.வழக்கமாக USB Drive -ஐ ஃபார்மேட் செய்ய முற்படுகையில் அதில் FAT - option மட்டுமே இருக்கும். NTFS -option - ஐ கொண்டுவர என்ன செய்ய..,USB drive ஐ கணினியில் பொருத்துங்கள்.My Computer - ஐ ரைட் கிளிக் செய்து Device Manager க்கு செல்லுங்கள்.Select Disk Drives and expandRight Click on USB drive and select PropertiesGoto policies tab and select Optimize for performance and press OKOpen My Computer, Click on USB Drive and select Format OptionNow you can have NTFS option there.NTFS enabled USB Drives are write-able only on one PC and becomes read only on all other PCs. Hence, we can read and write on our own PC and transfer files to elsewhere without any fear of virus.

மினி மோடில் மீடியா பிளேயர்

விண்டோஸ் மீடியா பிளேயரை இயக்குகிறீர்கள் .அதன் மூலமாக ஒரு ஆடியோ அல்லது வீடியோ பைலை பாட அல்லது ஆட வைக்கிறீர்கள்.என்ன நடக்கிறது?. திரை முழுவதும் தெரிகிறது.இந்த புரோகிராமின் ஷார்ட் கட் ஐகான் அல்லது ஆல் புரோகிராம்ஸ் சென்று அக்சசரீஸ், என்டர்டெய்ன்மெண்ட் என்று சென்று அதில் விண்டோஸ் மீடியா பிளேயரைத் தேர்ந்தெடுத்து கிளிக் செய்து இயக்குகிறீர்கள்.கம்ப்யூட்டரில் மற்ற பணிகளை மேற்கொண்டிருக்கையிலே ஒரு ஓரமாக சிறிய வடிவத்தில் மீடியா பிளேயர் இயங்க வேண்டுமா?விண்டோஸ் மீடியா பிளேயரை இயக்கத்திற்கு கொண்டு வாருங்கள்.பின் டாஸ்க் பாரில் ஒன்றும் இல்லாத இடத்தில ரைட் கிளிக் செய்திடுங்கள்.
எழுந்து வரும் சிறிய மெனுவில் டூல் பார்ஸ் என்னும் பிரிவில் கிளிக் செய்தால் இன்னொரு துணை மெனு கிடைக்கும்.இதில் விண்டோஸ் மீடியா பிளேயர் என்று இருப்பதில் சிறிய டிக் அடையாளம் ஏற்படுத்துங்கள்.டாஸ்க் பாரின் வலது மூலையில் சிறிய அளவில் விண்டோஸ் மீடியா பிளேயரின் மெனு பார் காட்டப்படும்.இதில் நீங்கள் விண்டோஸ் மீடியா பிளேயரில் மேற்கொள்ளும் அனைத்து பணிகளையும் மேற்கொள்ளலாம். வீடியோ பைலைக் கிளிக் செய்தால் சிறிய கட்டத்தில் வீடியோ காட்சிகள் காட்டப்படும்.அதைப் பார்த்துக் கொண்டே மற்ற வேலைகளிலும் ஈடுபடலாம்.இது விண்டோஸ் மீடியா பிளேயர் பதிப்பு 9 வைத்திருப்பவர்களுக்கு.உங்களிடம் 10 பதிப்பு அல்லது 11 உள்ளதா? விண்டோஸ் மீடியா பிளேயரை இயக்கும்போதே சிறியதாகத் தேவையான கண்ட்ரோல்களை மட்டும் வைத்து இயக்க முடியும்.முழுமையாகத் திரை முழுவதும் இன்றி சிறியதாக இது திரையில் காட்சி அளிக்கும்.இதனை Mini Player Mode என்று கூறுகிறார்கள்.இதன் மூலம் இன்னும் கூடுதல் வசதிகளையும் மேற்கொள்ளலாம்.குறிப்பாக மியூசிக் பைல்களைத் திறந்து இசையை மட்டும் ரசிக்க விரும்புபவர்களுக்கு முழுமையான மீடியா பிளேயரின் காட்சி வேண்டாமே!
மினி பிளேயர் மோடில் இதனைத் திறக்கும்படி செட் செய்திட விண்டோஸ் மீடியா பிளேயர் விண்டோவில் Tools தேர்ந்தெடுக்கவும்.பின் அதில் Tools என்பதில் கிளிக் செய்திடவும்.இந்த விண்டோவில் "Start the Mini Player for file names that contain this text"என்ற வரியுடன் ஒரு டெக்ஸ்ட் பாக்ஸ் தென்படும்.இதில் ஏற்கனவே voiceatt.wav என்ற பைல் டைப் பெயர் தென்படும்.நீங்கள் உங்களின் அனைத்து எம்பி3 பைல்களும் இந்த மினி மோடில் திறக்கப்பட வேண்டும் என்றால் இந்த இடத்தில .mp3 என்று டைப் செய்திடவும்.அல்லது குறிப்பிட்ட டிரைவ் அல்லது போல்டரில் உள்ள பைல்களை இயக்குகையில் மினி மோடில் திறக்க வேண்டும் என எண்ணினாலும் அந்த டிரைவின் எழுத்து (D:/E:) என எதனையேனும் அமைக்கலாம்.அல்லது போலடரின் பாத் கொடுக்கலாம்.எந்த ஆடியோ மற்றும் வீடியோ பைலாக இருந்தாலும் மினி மோடில் தான் இயக்கப் பட வேண்டும் என முடிவு செய்தால் ஜஸ்ட் ஒரு கோலன் (:) டைப் செய்தால் போதும்.ஒற்றை நினைவில் கொள்ள வேண்டும்.முதலில் கூறியபடி இந்த வகை மோடில் வீடியோ காட்சிகளை இயக்க முடியாது.

சீமானை விரட்டியடித்த திமுக-காங் தொண்டர்கள்

காரைக்குடி: காரைக்குடியில் ஒரு ஓட்டுச் சாவடிக்கு வந்து இலங்கைத் தமிழர் களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்துவிட்டதாகக் கூறி, அதிமுகவுக்கு வாக்களிக்குமாறு பிரச்சாரம் செய்த இயக்குனர் சீமானை திமுகவினரும் காங்கிரசாரும் விரட்டியடித்தனர். ஓட்டுச் சாவடிக்கு அருகே வந்த சீமான், காங்கிரஸ் வேட்பாளர் ப.சிதம்பரத்துக்கு ஓட்டு போடாதீர்கள், அதிமுகவுக்கு ஓட்டு போடுங்கள் என்று அங்கு வாக்களிக்க வந்தவர்களிடம் கூறினார்.இதனால் ஆத்திரமடைந்த சிதம்பரத்தின் ஆதரவாளர்களும் திமுகவினரும் அவரை சுற்றி வளைத்தனர்.

பின்னர் அவரை அங்கிருந்து விரட்டியடித்தனர்.அடிதடி நடக்கும் சூழல் ஏற்பட்டதால் போலீசார் அவரை ஒரு ஜீப்பில் அழைத்துச் சென்று தூரமாக ஒரு இடத்தில் இறக்கி விட்டுவிட்டு வந்தனர்.இதையடுத்து தனது சொந்த ஊரான அரணையூரில் வாக்களித்தார் சீமான்.அமீருக்கு வாக்கு இல்லை.

அதே போல இலங்கைத் தமிழர் விஷயத்தில் தீவிரம் காட்டி வரும் இன்னொரு இயக்குனரான அமீரின் குடும்பத்தினர் மதுரை கே.கே. நகரில் ஒரு அபார்ட்மென்டில் வசிக்கின்றனர்.ஆனால் இந்த முறை வாக்காளர் பட்டியலில் அவர் பெயர் இல்லை. இதனால் ஓட்டு போட வந்த அவர் வாக்களிக்க முடியாமல் திரும்பினார்.அமீரின் உதவியாளர் போல இருக்கும் நடிகர் 'கஞ்சா' கருப்பின் பெயரும் சென்னையில் இல்லை. இதனால் சாலி கிராமத்தில் வசிக்கும் அவர் ஓட்டு போட முடியவில்லை.

13 மே 2009

தடை நீக்கப்பட்ட சிடி ,மக்கள் தொலைக்காட்சியுடன் கலைஞர், சன் மோதல்!

மனதைப் பிசையும் தமிழ் இனப்படுகொலை காட்சிகளுடன் ஆளும் தி.மு.க, காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களிக்காதீர்கள் என்று முழங்கும் சிடிக்களை மக்கள் தொலைக்காட்சி ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறது. சென்னையில் மக்களை பார்க்கவிடாமல் கேபிள் கட், சில இடங்களில் பவர் கட் என்று மக்கள் தொலைக்காட்சி குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறது. ஆளும் கட்சியின் நற்பெயரை(?)க் கெடுக்க சமூகவிரோதிகள் திட்டமிட்டு மின்சாரம் துண்டிப்பு, 4 பேர் கைது என்று சன்னும், கலைஞர் டிவியும் பதிலுக்கு பதில் ஏசிக் கொண்டிருக்கின்றன. ஜெயா டிவி கப்சிப் என்றிருக்கிறது. அந்த சிடியையும் கண்டுகொள்ளவில்லை, மின்வெட்டையும் கண்டுகொள்ளவில்லை. மக்கள் தொலைக்காட்சியில் நான் அந்த சிடிக்களை முழுக்கப் பார்த்துவிட்டேன். இதுவரை பார்க்காதவர்கள் உடனே மக்கள் டிவியை பார்க்கவும். போகிற போக்கைப்பார்த்தால் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணிக்கு (பிரச்சார நேரம் ஓய்ந்த பின்னும்) எதிர்பிரச்சாரமாக விடிய விடிய ஒளிபரப்பாகும் என எண்ணுகிறேன். அதே சமயம் ஆளும் தி.மு.க எப்படியாவது நீதி மன்றத் தடையை பெற்றுவிடும் என்று தோன்றுகிறது. இந்த சிடிக்கள் எப்படியும் யுடியுபில் வந்துவிடும். ஆனால் தேர்தல் பரபரப்புடன் பார்க்வேண்டுமானால் இப்போதே மக்கள் டிவி பாருங்கள். நீதி - வழக்கறிஞர்களுடன் மோதக் கூடாது. மோதினால் . . . ? பிரச்சாரம் ஓய்ந்தபின்னும், எதிர்கட்சிகளுக்கு மட்டும் பிரச்சாரம் செய்ய நீதிமன்ற அனுமதி கிடைக்கும்.

நட்பை காதலாக மாற்றுவது எப்படி?

என் அறைத்தோழனும் அவனது பக்கத்து ஆத்து பெண்ணும் சிறு வயதில் இருந்து ஒன்றாக வளர்ந்தவர்கள். பெண் இவனை விட சில வயது இளையவள். இவன் வேலைக்கு வந்த பின்பும் இருவரும் தினமும் தொலைபேசும் அளவு நட்புள்ளவர்கள்.

இவன் அவளை ரொம்ப ஆண்டுகளாக காதலித்துக்கொண்டு இருக்கிறான். எங்களிடம் சொல்லிய அவனால் அவளிடம் சொல்ல முடியவில்லை. அதற்கு காரணங்களும் அடுக்கி வைத்திருந்தான்.

இப்படி இருக்க, ஒரு நாள் ஞாயிறன்று அனைவரும் தூங்கிக்கொண்டு இருக்க, எனக்கு மட்டும் செம போர் அடித்தது. சரி ஏதோ நம்மாலான ஒரு நல்ல காரியம் செய்யலாம் என்று அவனது மொபைல்ஃபோனை எடுத்து, அந்த பெண்ணிற்கு ஒரு மெசேஜ் அனுப்பினேன்.

“சில விஷயங்களை சொற்களால் வெளிப்படுத்த முடியாது. மனதால் மட்டுமே வெளிப்படுத்த முடியும். வெளிப்படுத்த என் மனது தயார்….. இனிய காலை வணக்கம்”

சில நொடிகளில் அந்த பெண்ணிடம் இருந்து வந்த பதில்,

“என் மனதும் தயார்.”

இது போதுமே, அன்றைக்கு ஃபோனை காதில் வைத்தவன், இன்று வரை கீழே வைக்கவில்லை.

இதேபோல் நீங்களும் உங்கள் உயிர்த்தோழியை காதலியாக்க என்னாலான சில யோசனைகள்…


முதலில் உங்கள் தோழிக்கு உங்கள் மீது காதல் இருக்கின்றதா என்று சோதிக்கவேண்டும்.
  • உங்களை பார்த்ததும் சிரிக்கும் சிரிப்பில் ஒரு சந்தோஷமும், பாதுகாப்பும் இருக்கும்.
  • உங்களைப்பார்த்து சிரிக்கும் சிரிப்பிற்கும், மற்றவர்களை பார்த்து சிரிக்கும் சிரிப்பும் வித்தியாசமாக இருக்கும்
  • நீங்கள் அடுத்த பெண்ணிடம் பேசினாலோ, பசங்களுடன் பேசினாலோ ஒரு பொசசிவ்னெஸ் காண்பிப்பாள்
  • ஒரு நாள் கூட உங்களிடம் பேசாமல் இருக்க மாட்டாள்
  • விடுமுறை நாட்களில் கூட உங்களைப்பார்க்க விரும்புவாள்
  • மற்றவர்களைப்பற்றி உங்களிடம் புகார் செய்வாள் (பெண்/ஆண் நண்பர்கள்)
  • காசு விஷயத்தில் கொடுத்த காசை திரும்ப கேட்கமாட்டாள், ரெஸ்டாரண்டில் அவள் பணம் கொடுப்பாள்.
  • உங்கள் உடை விஷயத்தில் அக்கறை காட்டுவாள்
  • ஃபோனில் பேசும்போது கூட என்ன உடை அணிந்துவருகிறாய் என்று கேட்பாள்
  • ஒருமுறையாவது உங்களுக்காக அழுவாள்(அது சின்ன விஷயமாக இருந்தாலும்)
  • உங்களிடம் இருக்கும்போது, தான் பெண் என்பதை மறந்து இருப்பாள் (பாட்டு பாடலாம், உடை கலைந்து இருக்கலாம் etc)
  • சண்டை போட்டு நீங்கள் முறுக்கிக்கொண்டு இருந்தாலும், அவள் தானாக இறங்கி வருவாள்.
  • நீங்கள் அவளுடன் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசுவதற்கு சுதந்திரம் கொடுப்பாள்

காதல் இருப்பது உறுதியாயின், கீழ்க்கண்டவற்றை செயல்படுத்தி காதலாக்குங்கள்
  • தயவு செய்து முறுக்கிக்கொண்டு நிற்காமல், உடனடியாக காதலை சொல்லுங்கள்.
  • அவளுக்கு செல்லப்பெயர் வைத்து கூப்பிடுங்கள், அவளுக்கு பிடித்திருந்தால் கொஞ்சம் கொஞ்சமாக இடைவெளியை குறைத்துக்கொண்டே செல்லுங்கள்.
  • அவளை அடுத்த ஆண்களுடன் பழகவிடாதீர்கள், உங்களுக்கு பக்கத்து சீட்டை எப்போதும் அவளுக்காக துண்டு போட்டு வையுங்கள் and vice versa ;).
  • மேலே சொன்ன கதைபோல் மெசேஜ் அல்லது ஈமெயில் அனுப்புங்கள்
  • இரவு நீண்டநேரம் பேசிக்கொண்டு(கடலை) இருக்கும்போது, அப்படியே லேசாக காதலை தலையைச்சுற்றி மூக்கைத்தொடுங்கள்
  • உங்கள் வீட்டில் அவளை அறிமுகப்படுத்துங்கள், உங்கள் குடும்பம் எவ்வளவு அழகு என்று காட்டுங்கள். முக்கியமாக உங்கள் அம்மாவிற்கும் அவளிற்கும் நல்ல உறவை ஏற்படுத்திக்கொடுங்கள்.
  • அவள் எங்கு கூப்பிட்டாலும் கூடவே செல்க. நெருக்கத்தில் உங்களை மறந்து பேசிக்கொண்டு இருக்கும்போது சொல்லி விடுங்கள்.
  • காதலைச்சொல்வதற்கு முன் ஒரு நிமிடம்(நிஜமாகவே 60 நொடிகள்) அவள் கண்ணையே பார்த்துக்கொண்டிருங்கள். அவள் கண்கள் நாணி, கண்களாலேயே என்ன வேண்டும் என்று கேட்கும்போது காதலைச்சொல்லுங்கள். கண்டிப்பாக சக்ஸஸ் தான்.

அட.. அப்படியா..?ஆச்சர்யமா இருக்கே..! என்னோட COMPUTER - ல என் அனுமதி இல்லாம...

INSTALL BLOCK - A VERY POWERFUL TOOL FOR COMPUTER USERS

INSTALL, UNINSTALL மட்டுமில்ல, ஒரு சின்ன FILE அ கூட DELETE பண்ண முடியாது. உங்க பையனாலயோ, பொண்ணாலயோ GAMES INSTALL பண்ணி விளையாட முடியாது. நண்பர்கள் தேவை இல்லாதத DOWNLOAD பண்ணிINSTALL பண்ணமுடியாது. இவ்வளவு ஏன் SEARCH ல போயி ஒரு சின்ன FILE ல கூட தேட முடியாது. இன்னும் நிறைய சொல்லிக்கிட்டே போகலாம். இது எல்லாத்துக்கும் உங்களோட அனுமதி வேணும்.

இதுக்கு INSTALL BLOCK ன்னு ஒரு சின்ன மென்பொருள் இருக்குங்க, அத உங்க கணினில நிறுவிகிட்டீங்கன்னா, உங்க அனுமதி இல்லாம யாரும் மேலே சொன்ன‌ எதையும் பண்ணவே முடியாது.

இன்னும் நிறைய தெரிஞ்சுகனும்னா இத படிங்க :

Uses:

Install-Block customers are many schools and colleges, internet cafes, banks, hospitals, manufacturing plants, design firms, call centers, and small businesses. Of course parents also find the software very useful as well. Install-Block password-protects all software installs, prompting the user for a password before allowing the installation to continue. Install-Block can prevent people from using specific programs, websites, or Windows features, in addition to the ability to disable installing of new software. Install-Block can be used to secure your systems, put a stop to time-wasting activities, limit an employee or child's access to programs, and much more. Install-Block has been found useful for combatting gambling addiction -- stopping a spouse or loved one from downloading casino software or visiting online gambling websites.

கீழே கொடுக்கப்ப‌ட்டுள்ள இணைய‌ த‌ள‌ தொட‌ர்பில் மென்பொருளை ப‌திவிற‌க்க‌ம் செய்து சேமித்துக் கொள்ள‌வும். இப்பொழுது மென்பொருளை நிறுவிக் கொள்ள‌வும். அத‌னுள் இருக்கும் CRACK FOLDER - ஐ OPEN செய்து BSIB PATCH FILE - ஐ COPY செய்துகொண்டு MYCOMPUTER -> C: -> PROGRAM FILES -> BASH SOFTWARE -> INSTALL-BLOCK FOLDER ரினுள் சென்று PASTE செய்ய‌வும். அப்பொழுது ORIGINAL FILE லை REPLACE ப‌ண்ண‌ வேண்டுமா என்று கேட்கும் அத‌ற்கு YES என்று கொடுக்க‌வும்.அவ்வ‌ள‌வுதான் இப்பொழுது உங்க‌ள் INSTALL-BLOCK SOFTWARE ரெடி... அதுல‌ TUTORIAL & HELP இருக்கும் அத‌ ப‌டிச்சிங்க‌ன்னாவே எப்படி பயன்படுத்தனும்னு தெளிவா புரியும். க‌ண்டிப்பா ப‌டிங்க‌.

INSTALL-BLOCK : download link

சிகர்களின் கடனாளி நான் நெகிழும் ஏ.ஆர்.ரஹ்மான்

முதல் காதல், முதல் முத்தம்போலவே முதல் உதவியையும் மறக்காதவர்களே சிறந்த மனிதர்களாக இருப்பார்கள். இதில் ரஹ்மானும் ஒருவர்.
எப்போதோ தனக்கு உதவிய தெலுங்கு திரையுலகை நன்றியோடு நினைத்துப்பார்த்து பாராட்டியுள்ளார். தெலுங்கு திரையுலகம் சார்பில் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு பாராட்டுவிழா நடத்தப்பட்டது. இவ்விழாவில் ரஹ்மானை பாராட்டி அவருக்கு தங்க கிரீட்ம் அணிவித்தார் பின்னணி பாடகி பி.சுசிலா. கிரீடம் அணிவித்ததும் கூச்சம் ஒளிவீசியபடி ரஹ்மான் பேச ஆரம்பித்தார். "இங்கு எனக்கு தங்க கிரீடம் அணிவிக்கப்பட்டது. இதற்காக இங்கு வரவில்லை. நான் ப்ளஸ் ஒன் படித்துக்கொண்டிருந்தபோது எனது குடும்பம் பொருளாதார சிக்கலில் மாட்டிக்கொண்டது. அப்போது தெலுங்கு இசை அமைப்பாளர் ரமேஷ் நாயுடு என்னை அவரது குழுவில் இணைத்துக்கொண்டார். அதிலிருந்து என்னை வளர்த்துக்கொண்டேன். பிறகுதான் இளையராஜாவிடம் இரண்டு வருடம் பணிபுரிந்தேன். பிறகு ஆறு வருடங்கள் தெலுங்கு இசை அமைப்பாளர்கள்தான் எனக்கு உதவி புரிந்தார்கள். தெலுங்கு ரசிகர்களுக்கு இன்னும் நான் கடனாளியாகத்தான் இருக்கிறேன். நான் ஐதராபாத்தில் குடியேறினால் எனக்கு பஞ்சரா ஹில்ஸில் வீடு வாங்கி தருவதாக 10 வருடத்துக்கு முன் தயாரிப்பாளர் சுப்புராமி ரெட்டி சொன்னார்" என ப்ளாஸ்பேக்கில் மூழ்கிய ரஹ்மான், ரசிகர்களின் வேண்டுகோளுக்கு இணங்க 'ஜெய்ஹோ...' பாடலை பாடிக்காட்டினார்.

இணையத்தில் ஏ.ஆர். ரஹ்மான் பாடல்

ரஹ்மானின் பாடல்கள் இணையத்தில் டவுன்லோட் ஆவது மிகச் சாதாரண விஷயம். அவர் இசையமைப்பில் ஆடியோவே வெளியிடப்படாத படத்தின் பாடல்கள் டவுன்லோட் ஆவதுதான் ஆச்சரியம். சமீபத்தில் வேட்டைக்காரன் படப்பாடல் இணையத்தில் திருட்டுத்தனமாக வெளியிடப்பட்டது. அதேபோல், கெளதமின் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரு பாடல்கள் இணையத்தில் கேட்க கிடைக்கின்றன. விண்ணைத்தாண்டி வருவாயா படத்துக்கு ரஹ்மான் இசையமைக்கிறார். இதுவரை நான்கு பாடல்களுக்கான ஒலிப்பதிவு நடந்துள்ளதுது. இதில் இரண்டு பாடல்கள் படமாக்கப்பட்டுவிட்டன. இந்நிலையில், அன்பே என் காதலனே... எனத் தொடங்கும் பாடலும், எந்தன் நெஞ்சில் அற்புதம்... என்ற பாடலும் இணையத்தில் வெளியானது. Updated அஜித்தினுடைய அசல் படத்தின் தீம் மியூசிக்கும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

10 மே 2009

நகுலுடன் காதலா? மழுப்பும் சுனேனா

காதலில் விழுந்தேன் படத்தில் ஜோடியாக நடித்த நகுலும் சுனேனாவும் லவ்வுவதாக கோடம்பாக்கம் முழுக்க பேச்சாக இருக்க, அந்த ஜோடியே பத்திரிகையாளர்களைச் சந்தித்து தங்கள் காதல் கசமுச பற்றி பேட்டி வேறு கொடுத்துள்ளது.காதலில் விழுந்தேனுக்கு பிறகு நகுலும் சுனேனாவும் மீண்டும் மாசிலாமணி என்ற படத்தில் நடிக்கிறார்கள்.
இருவரும் ஒருவரையொருவர் தீவிரமாகக் காதலிப்பதாகக் கூறப்படுவது குறித்து நிருபர்கள் கேட்டபோது, "எனக்கு சுனேனாவை ரொம்பப் பிடிக்கும். ஆனால் இது காதல் இல்லை. பிரண்ட்ஷிப் மட்டும்தான். ஆனால் எல்லா விஷயங்களையும் வெளிப்படையா இருவரும் பகிர்ந்து கொள்ளும் அளவுக்கு நெருக்காமானவங்க" என்று குழப்பினார்.இதுபற்றி சுனேனாவிடம் கேட்டபோது, "எங்களுக்கிடையே மிகவும் இணக்கமான ஒரு உறவு உள்ளது. நகுல் இருக்கிறார் என்றால் மனதுக்கு சந்தோஷமாகவும் பாதுகாப்பாகவும் உள்ளது. அவர் எனது முதல் ஹீரோ. மிகவும் பிடித்தமானவர். அவர் நட்பு எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. இதுக்குமேல சொல்லத் தெரியல," என்று மழுப்பினார்.அப்ப இது 'அதானே...''அதேதான்!'

உங்கள் பிறந்த நாளின் மதி்ப்பை அறிய

உங்கள் பிறந்த நாளின் மதி்ப்பை அறிய(Find value of your Birthday) உங்கள் பிறந்த நாளின் மதிப்பை அறிய நான் ஏற்கனவே நமது பிறந்த நாள் முதல் இன்று வரையிலான தேதியை கணக்கிடுவதை பார்த்தோம். அந்த வலைப்பதிவை பார்க்காத வர்கள் இங்கு சென்று பார்க்கவும்.
அதுபோல் நமது பிறந்த தேதியில் உள்ள மதிப்பை அறிய இந்த தளம் நமக்கு உதவுகிறது.இதை கிளிக் செய்ததும் உங்களுங்கு இந்த மாதிரியான சரளம் ஓப்பன் ஆகும். அதில் உங்களுடைய பிறந்த தேதி-மாதம்-வருடம் கொடுத்து அதில் உள்ள submit கிளிக் செய்யவும். ஒரு சில வினாடிகளில் உங்க டைய பிறந்த நாளின் சிறப்புகளை இந்த தளம் வெளியிடும். இதில் நீங்கள் பிறந்த நாளின் கிழமை-உங்கள் அதிர்ஷ்ட எண்- ராசி -என அனைத்தும் தெரிவிக்கும். இன்றைய தேதிவரை உங்களுடைய வயது - மாதங்கள் - வாரங்கள் - நாட்கள்- மணி நேரங்கள் - நிமிடங்கள் - வினாடிகள் என அனைத்தும் வெளியிடும். தவிர உங்கள் பிறந்த நாளின் அன்று பிறந்த (உங்களுடன் சேர்த்து) மற்ற பிரபலங்களை யும் நீங்கள் அறிந்து கொள்ளலாம். நீங கள் பிறந்த வருடத்தில் பிரபலமான டாப் 10 பாடல்களையும் அறிந்து கொள்ள லாம். உங்களுடைய அடுத்த பிறந்த நாளுக்கு எத்தனை மெழுகுவர்த்திகள் தேவைப்படும் என்பதையும் அது உண்டாகும் வெப்பத்தையும் அறிந்து கொள்ளலாம்.உங்கள் அடுத்த பிறந்த நாளுக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளது எனவும் இதில் அறிந்து கொள்ளலாம். உங்கள் அதிர்ஷ்ட மலர் -மரம்- கற்கள் -எண்கள் இதில் உள்ளது். இதற்கான இணைய சுட்டி தளம் சும்மா டைம் - பாஸ்க்கு கிளி்க் செய்து பாருங்கள். பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டுப்போடுங்கள். வாழ்க வளமுடன், வேலன். பிறந்த நாளின் மதிப்பை இதுவரை அறிந்தவர்கள்வலைப்பூவில் உதிரிப்பூக்கள் உங்கள் வீட்டில் ஏற்படும் பிறப்போ - இறப்போ - எதுவாக இருந்தாலும் அன்றைய தினசரி காலண்டரின் தேதியை கிழித்து உங்கள் டைரியில் ஒட்டி விடுங்கள்.. சில நாட்கள் கழித்து குறிப்பி்ட்ட நாளின் நட்சத்திரம்-திதி நமக்கு மறக்காமல் இருக்க அது உதவும்.

'ஜெய் ஹோ': ரஹ்மானுக்கு ரூ.1.5 கோடி!

கேரளாவில் இசை நிகழ்ச்சி நடத்தியதற்காக இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மானுக்கு ரூ.1.5 கோடி சம்பளமாகத் தரப்பட்டது. ஆஸ்கர் விருதுகளை வென்ற இசை யமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்று நடத்தினார்.
ஜெய் ஹோ எனும் பெயரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ரூ.7 கோடிக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. விளம்பரதாரர்கள் செலுத்திய கட்டணத்தைச் சேர்த்தால் ரூ.10 கேடியைத் தாண்டும் என்கிறார்கள். சர்வதேச கேரள அமைப்பு நடத்திய இந்த நிகழ்ச்சியி, பங்கேற்ற ரஹ்மானுக்கு கட்டணமாக ரூ.1.5 கோடி வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியின் வருவாயில் ஒரு பகுதி எச்ஐவி பாதித்த குழந்தைகளின் நலனுக்காகவும், இன்னொரு பகுதி இந்தக் குழந்தைகளின் நலனுக்காக பெரிய பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டுவதற்கும் செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரு ஆண்டுகளுக்குள் இந்தப் பள்ளி கட்டி முடிக்கப்படும் என்று நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அப்துல் வஹாப் கூறினார்.

நேற்று, இன்று, நாளை - ஒரு அப்பாவி கணவனின் கதை

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com