Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

17 மே 2009

கத்தால கண்ணழகிக்கு அது பிடிக்காதாம்! கேளுங்க! கேளுங்க! கேளுங்க!

"நல்ல அழகாகத்தான் இருக்கிறார், நடனத்திலும் சளைக்காதவர் தமிழ் சினிமாவை கலக்குவார்" இது தமிழ் சினிமாவின் ஆர்வலர்கள் ஸ்னிக்தா "கத்தால கண்ணால குத்தாத" என பாடிக்கொண்டு அறிமுகமானபோது சொன்ன வசனம். மராத்தி, ஹிந்தி மொழிகளில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக்கொண்டிருந்தவர் இல்லாத இடுப்பாலே என தன இடுப்பை ஆட்டி ஆட்டி ஆட்டம் போட்டே பிரபலமாகிவிட்டார். என்ன செய்ய பல இளைஞர்களின் தூக்கமும் கொஞ்சம் கெட்டுத்தான் போச்சு. ஆனாலும் இப்போ அவர் தன் செவ்விதழ் திறந்து சொன்ன வார்த்தைகள் தான் காதல் கோட்டை கட்டிய எத்தனையோ பெயரை முகவரி இல்லாமல் செய்யப்போகின்றது. அவர் அழகை பார்த்து ஆண்கள் பயப்பட்டுக்கொண்டிருக்கும்போது(வேறொன்றுமில்லை காதலில்தான்.) ஸ்னிக்தாவோ தனது பயப்பட்டியலை வெளியிட்டு எல்லோரையும் பயப்படுத்தி விட்டார். பத்திரிகையாளர்களைக் கண்டால் பயமாம்(கேட்கக்கூடாத கேள்வியை கேட்காதிங்கப்பா செல்லம் பயப்படுகிதெல்லா) அடுத்ததா சிக்கியது இவங்க என்ன சொல்றாங்கன்னே என தெரியமுடியாத பல்லிகள்.(எல்லா நடிகைகளும் பல்லி கரப்பான் பூச்சி என ஒரு லிஸ்ட் வைத்திருப்பார்கள்.) தனிமையில் பிடிச்சது பொம்மைகளாம்(அதைத்தான் கட்டிப்பிடித்துக் கொண்டு இருப்பாரா? நானும் பொம்மைமாதிரி இருப்பேனே.) பருப்புசாதம் என்றா உயிரையே விடும் ஸ்னிக்தா உயிரினும் மேலான காதலை ஒரு நோயென சொல்லிவிட்டு காதலே தனக்கு பிடிக்காதாம். அதைவிட கொடுமை ஆண்கலென்றாலே பிடிக்காதாம்.(எப்பிடிதாயே நடிப்புலகத்துக்கு வந்திங்க.) ஆண்களை பிடிக்காத அம்மணி எப்படித்தான் ஆண்களுடன் சேர்ந்து கட்டிப்பிடித்து காதல் காட்சிகளில் எல்லாம் நடிக்கின்றாரோ தெரியவில்லை. நண்பர்களே! இனிமேல் ஸ்னிக்தா பின்னால் அலையாதிங்க ஏனென்றால் அவங்களுக்கு தான் அது(காதல்+ஆண்களை) பிடிக்காதாமே.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com