Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

09 பிப்ரவரி 2009

பாஃப்டா: ரஹ்மான் மகுடத்தில் இன்னொரு வைரம்!

லண்டன்: ஸ்லம்டாக் மில்லியனேர் படம் இந்தியாவின் வறுமையைப் பற்றி மட்டுமல்ல, இந்திய இசைக் கலைஞனின் பெருமையைப் பற்றியும் உலகமெங்கும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. எனவே இப்போதைக்கு வறுமை சர்ச்சைகளை மறந்துவிட்டு, நமது கலைஞர் ரஹ்மானின் வெற்றியைக் கொண்டாடுவோம்.

இதோ அவருக்குக் கிடைத்த இன்னுமொரு உலக விருதுச் செய்தி…

பிரிட்டனின் மிக உயர்ந்த திரைப்பட விருதான பாஃப்டா (BAFTA) விருதையும் வென்றார் தமிழகத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான்.

இந்தியர் ஒருவர் இந்த விருதைப் பொறுவது இதுவே முதல்முறை. கோல்டன் குளோப், பாஃப்டா என ஆஸ்கருக்கான முதல் இரண்டு படிகளை வெற்றிகரமாகக் கடந்துவிட்ட ரஹ்மான், அடுத்து ஆஸ்கர் விருதின் வாயிலில் கால் வைத்துவிட்டார்.

மொத்தம் 9 பிரிவுகளில் ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட ‘ஸ்லம்டாக்…’

இந்தியக் கதையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட பிரிட்டிஷ் படம் என்பதால் பாஃப்டாவிலும் நிச்சயம் விருது கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மொத்தம் 11 பிரிவுகளில் இந்தப் படத்தை பரிந்துரைத்திருந்தார்கள்.

அவற்றில் சிறந்த இசை உள்பட 7 பிரிவுகளில் பாஃப்டா விருது கிடைத்துள்ளது

.

அவற்றில் சிறந்த இயக்குநர் (டேனி பாய்லே), சிறந்த இசை (ஏஆர் ரஹ்மான்), சிறந்த திரைக்கதை (சைமன் பியூஃபோய்), சிறந்த ஒளிப்பதிவு (ஆண்டனி டாட் மாண்டில்), சிறந்த சவுண்ட் எடிட்டிங் (ரசூல் பூக்குட்டி, க்ளென் ப்ரீமாண்டில், ரிச்சர்டு ப்ரைக், டாம் சாயர்ஸ் மற்றும் இயான் டாப்) ஆகிய பிரிவுகளில் விருது கிடைத்தது. இவர்களில் ரஹ்மானும், ரசூல் பூக்குட்டியும் மட்டுமே இந்தியர்கள்.

நேற்று லண்டனில் நடந்த வண்ணமிகு விழாவில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன.

பாஃப்டா விருதை வெல்லும் முதல் இந்தியர் ஏஆர் ரஹ்மான்தான். ஏற்கெனவே கோல்டன் குளோப் விருது பெற்ற முதல் இந்தியர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.

இன்னும் சில தினங்களில் ஆஸ்கர் விருது பெறும் முதல் தமிழர் எனும் பெருமையையும் பெறப்போகிறார்.

வாழ்த்துக்கள் ரஹ்மான்!!

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com