திருமணம் ஆன ஆண்களுக்கு பயனான செய்தி, திருமணம் ஆன தம்பதிகளிடையே நெருக்கத்தை மேலும் மிகுக்கும் தகவல். அதை வாங்க செல்லும் வெட்கத்தை விட, வீட்டிற்குள் யாருக்கும் தெரியாமல், குழந்தைகள் கண்ணில் சிக்காத அளவுக்கு பாதுகாப்பது கொஞ்சம் ரிஸ்க். அதுக்கு மாத்திரை பரவாயில்லை. டிஸ்போஸ் பண்ணும் பிரச்சனையும் இல்லை. தற்காலிக கருத்தடை மாத்திரை திருமணம் ஆனவர்களுக்கு ரிஸ்க் என்றாலும் மான / அவமான பிரச்சனை இல்லை. ஆனால் 18+ வயது வந்தவர்கள் மாத்திரை பயன்படுத்துவது ரிஸ்க் தான். :) தகவல் இங்கே, Published in : ஆரோக்கியம், உடலே நலமா? மாத்திரை வடிவில் ஆண்களுக்கான தற்காலிக கருத்தடை சாதனம் கண்டுபிடிப்பு- இளையான்குடி பேராசிரியர் ஆபிதீனுக்கு டாக்டர் பட்டம் : இளையான்குடி டாக்டர் சாகீர் உசேன் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியர் ஆபிதீன் தனது ஆராய்சிப் படிப்பை முடித்து. மணோன்மனியம் சுந்தரனார் பல்கலைகழகத்தில டாக்டர் பட்டம் பெற்றிருக்கிறார். மேலும் படிக்க... பின்குறிப்பு : கருத்தடை மதத்தில் அனுமதிக்கப்படவில்லை என்று போர்கொடி தூக்கும் இஸ்லாமிய அமைப்புகளில் இருந்து சாகீர் உசேனை அல்லாதான் காப்பாற்ற வேண்டும் :)
விஸ்டாவில் ஏரோ கிளாஸ்
பின் இது சார்ந்த டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் ‘Windows Color and Appearance’ என இருக்கும் இடத்தைக் காணவும். இது மேலாக இருக்கும். இந்த லிங்க்கைக் கிளிக் செய்து கிடைக்கும் விண்டோவில் ‘Enable Transparency’ என்று இருப்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். பின் ஓகே கிளிக் செய்தால் விஸ்டாவில் ஏரோ கிளாஸ் ட்ரான்ஸ்பரன்சி எபக்ட் இருக்காது.
ஹார்ட் டிஸ்க் பிரித்தல்
விஸ்டா இயக்கம் ஹார்ட் டிஸ்க்கை இரண்டு அல்லது கூடுதலான பிரிவில் அமைக்க உதவிடுகிறது. இதனால் விஸ்டா ஒவ்வொரு பிரிவினையும் தனித்தனி ஹார்ட் டிஸ்க்காகக் கருதிச் செயல்படும். இதன் மூலம் டாகுமெண்ட்களையும், புரோகிராம்களையும் மற்றும் சில பைல்களையும் நம்மால் பிரித்து வைத்து சேவ் செய்து பயன்படுத்த முடியும். ஹார்ட் டிஸ்க்கில் புதிய பிரிவு ஒன்று உருவாக்க வேண்டும் என்றால் Start கிளிக் செய்து My computer என்பதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக் கும் விண்டோவில் Manage என்ற ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.
இடது பக்கம் உள்ள பிரிவில் (Left Pane) எந்த டிஸ்க்கில் புதிய பிரிவு ஏற்படுத்த வேண்டும் என எண்ணுகிறீர்களோ அந்த பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். பின் Shrink Volume என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அடுத்து சிறிய அளவில் பிரிவினை ஏற்படுத்தும் வகையில் அளவினை உருவாக்கவும். பின் Shrink என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இனி டிரைவ் ஸ்பேஸில் Unallocated என்று இருப்பதில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் New Simple Volume என்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின் கிடைக்கும் விஸார்டில் கேட்கும் கேள்விகளுக்கான உங்கள் ஆப்ஷன்களை அமைக்கவும்.
முடிவில் தேர்ந்தெடுத்த டிரைவில் பயன்படுத்தாத இடத்தைப் பிரித்து நீங்கள் குறிப் பிட்ட அளவில் புதிய டிஸ்க் பிரிவு ஒன்று கிடைக்கும்.
அழிந்த ரீசைக்கிள் பின்னை மீட்க
விஸ்டாவில் ரீ சைக்கிள் பின் ஐகானில் ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் மெனுவில் அதனை அழித்துவிட Delete என்று ஒரு ஆப்ஷன் கிடைக்கும். சிலர் இதனை அறியாமல் கிளிக் செய்து அழித்துவிடுகிறார்கள். எப்படி அழிப் பது எளிதாக உள்ளதோ அதே போல் இதனை மீண்டும் பெறுவது விஸ்டாவில் எளிதான ஒரு செயல்பாடாக உள்ளது. அழித் ததை மீண்டும் பெற டெஸ்க்டாப்பில் ரைட் கிளிக் செய்திடவும். மெனுவில் Personalise என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
பின் கிடைக்கும் விண்டோவில் இடது பக்கம் Change Desktop Icons என்பதில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். அதில் Recycle Bin என்னும் ஆப்ஷனில் கிளிக் செய்தால் மீண்டும் ரீசைக்கிள் பின் ஐகான் திரையில் தோன்றும்.
விஸ்டாவில் ரன்
விண்டோஸ் எக்ஸ்பி ஸ்டார்ட் பட்டனை இயக்கினால் கிடைக்கும் மெனுவில் கீதண என்று ஒரு பிரிவு இருக்கும். இதனை இயக்கினால் புரோகிராம்களின் பெயரை நேரடியாக டைப் செய்து இயக்கலாம். ஆனால் விஸ்டாவில் இந்த செயல்பாட்டிற்கான கீதண கட்டம் இல்லை. இருப்பினும் இதனை உருவாக்கி வைத்துக் கொள்ளலாம். Start பட்டனில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties என்பதைக் கிளிக் செய்திடவும். பின் ஸ்டார்ட் மெனு செல்லவும். இங்கு ஸ்குரோல் செய்து கீழே சென்றால் Run Command என்று ஒரு பாக்ஸ் கிடைக்கும். இதில் ஓகே கிளிக் செய்தால் ரன் பாக்ஸ் உங்களுக்கு ஸ்டார்ட் பட்டன் மெனுவில் கிடைக்கும்.
பைல்களை எளிமையாகத் தேர்ந்தெடுக்க
பைல் டைரக்டரியில் இருந்து பைல்களைத் தேர்ந்தெடுக்க பல வழிகள் உள்ளன. தொடர்ந்து இருக்கும் பைல்களைத் தேர்ந்தெடுக்க முதல் பைலைத் தேர்ந்தெடுத்துவிட்டு பின் இறுதி பைலை ஷிப்ட் கீ அழுத்தித் தேர்ந்தெடுத்தால் இரண்டிற்கும் இடையே உள்ள பைல்கள் அனைத்தும் தேர்ந்தெடுக்கப்படும்.
பைல்களை விட்டு விட்டு குறிப்பிட்டவற்றை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டும் எனில் கண்ட்ரோல் கீயினை அழுத்தியவாறு பைல்களைத் தேர்ந்தெடுத்தால் தேர்ந்தெடுக்கும் பைல்கள் வரிசையாக இல்லாதபோதும் மொத்தமாகத் தேர்ந்தெடுக்கப்படும்.
பின் இவற்றை என்ன செய்திட வேண்டுமோ செய்து கொள்ளலாம்.இது போல ஷிப்ட் மற்றும் கண்ட்ரோல் கீகளை அழுத்தி பைல்களைத் தேர்ந்தெடுக்காமல் அந்த பைல்களுக்குப் பக்கத்தில் சிறிய கட்டங்களை ஏற்படுத்தி அந்த கட்டங்களில் டிக் அடையாளம் ஏற்படுத்தி பைல்களை செலக்ட் செய்யக் கூடிய வசதி கிடைத்தால் சிறப்பாக இருக்கும் அல்லவா?
இதற்கான வசதியை விஸ்டா கொண்டுள்ளது. ஏதேனும் ஒரு போல்டரைக் கிளிக் செய்து Organize என்பதில் கிளிக் செய்திடவும். பின் அதில் Folder and search Options’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு View டேப்பிற்குச் செல்லவும். அங்கு ‘Use check boxes to select item’ என்பதில் டிக் ஏற்படுத்தி ஓகே கிளிக் செய்திடவும். பின் போல்டரைத் திறந்தால் பைல்களின் பெயருக்கு எதிரே சிறிய கட்டங் கள் கிடைக்கும். இதில் கிளிக் செய்து பைல்களைத் தேர்ந்தெடுக்கலாம்.
சென்ட் டூ மெனுவை நீட்டலாம்
Send To மெனுவில் கூடுதலாக பைல்களை பதிப்பதில், விஸ்டா இயக்கம் எக்ஸ்பி இயக்கத்தில் இருந்து சற்று மாறுபட்டுள்ளது. விஸ்டாவில் Control Panel ஐத் திறக்கவும். அதன்பின் Folder Options பிரிவைத்தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண்டோவில் View டேப்பினைத் திறக்கவும். இங்கு தரப்படும் ஆப்ஷன்களில் Show hidden Files and Folders என்பதைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்திடவும். இனி ஸ்டார்ட் – கம்ப்யூட்டர் எனக் கிளிக் செய்து சி டிரைவினைத் திறக்கவும். இதில் யூசர்ஸ் என்னும் போல்டரைத் திறக்கவும்.
இதில் உங்களுடைய பெயரை யூசர் நேமாக உள்ளதைத் தேர்தெடுக்கவும். அடுத்து App Data, Roaming, Microsoft Windows, Send To என வரிசையாகச் செல்லவும். போல்டரைக் காண முடியாவிட்டால் %AppData%\ Microsoft Windows\Send To என அட்ரஸ் பாரில் டைப் செய்திடவும். அடுத்து என்டர் செய்த பின் Send To மெனுவில் நீங்கள் உங்களுக்குத் தேவையானதை இணைக்கலாம்.
குயிக் லாஞ்ச் கீ போர்ட் ஷார்ட் கட்
அடிக்கடி பயன்படுத்தும் புரோகிராம்களை உடனுக்குடன் விரைவாக இயக்க நமக்கு Quick Launch பார் பயன்படுகிறது. இந்த பாரில் உள்ள புரோகிராம்களை ஷார்ட் கட் கீகளைக் கொண்டும் இயக்கலாம். இதற்கு விண் டோஸ் கீ அழுத்தவும்.
அதன் பின் குயிக் லாஞ்ச் பாரில் உள்ள ஐகான் எத்தனாவதாக உள்ளதோ அந்த எண்ணை அழுத்தவும். எடுத்துக் காட்டாக குயிக் லாஞ்ச் பாரில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மூன்றாவதாக அமைக்கப்பட்டிருந் தால் விண்டோஸ் கீயுடன் 3 என்ற எண்ணை அழுத்தினால் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் இயக்கப்படும். இரண்டு கீகளையும் சேர்த்து இயக்க வேண்டும்.
நிரந்தரமாக மெனு பார்
விஸ்டாவில் போல்டர்களைக் காண்கையில் மெனு பார் மறைக்கப்படும். அப்போதைக்கு இந்த மெனு தேவை எனில் அடூt கீயை அழுத்த கிடைக்கும். பின் மீண்டும் மறையும். இதற்குப் பதிலாக எப்போதும் மெனு கிடைக்கும்படியும் இதனை அமைக்கலாம்.
போல்டர் ஒன்றைத் தேர்ந்தெடுத்துப் பின் Organize பட்டனை அழுத்தவும். இதில் ‘Folder and search options’ என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் வியூ டேப்பிற்குச் செல்லவும். அங்கு ‘Always show menus’ என்று இருக்கும் இடத்தில் உள்ள பாக்ஸில் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
விண்டோஸ் பார்டர்களைக் குறைக்க: விஸ்டாவின் ஏரோ கிராபிக்ஸ் புரோகிராம்களுக்கும் போல்டர்களுக்கும் நல்ல திட்டையான பார்டர்களைத் தருகிறது. இமேஜ் எடிட்டிங் சாப்ட்வேர் போன்ற புரோகிராம்களைக் கையாள்கையில் இந்த பார்டர்கள் அதிகம் இடத்தை எடுத்துக் கொள்கின்றன. இடம் எடுத்துக் கொள்வது மட்டுமின்றி நாம் பணியாற்ற இடம் தராமல் எரிச்சலூட்டுகின்றன. இந்த பார்டர்களின் அளவைக் குறைக்க முடியாதா என்ற ஆசை நமக்கு எழும். இதற்கு வழிகளைத் தருகிறது விஸ்டா. இந்த பார்டர்களை அளவோடு வைத்திட டெஸ்க்டாப்பில் கிளிக் செய்திடவும்.
பின் பெர்சனலைஸ் என் பதைத் தேர்ந்தெடுக்கவும். கிடைக்கும் விண் டோவில் Windows Color and Appearance என்ற இடத்தில் கிளிக் செய்திடவும். இப்போது செட் செய்வதற்கான டயலாக் பாக்ஸ் கிடைக்க வேண்டும். இது கிடைக்காவிட்டால் ‘Open classic appearance properties for more color options’ என்பதில் கிளிக் செய்திடவும். அதில் Advanced என்ற பட்டனில் கிளிக் செய்திடுக. பின் கிடைக்கும் மெனுவில் Border Padding என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு சைஸ் செட்டிங் அளவை 4 க்கும் குறைவாக அமைக்கவும். அதன்பின் ஓகே இருமுறை கிளிக் செய்து வெளியேறவும். இனி எத்தனை விண்டோக்கள் திறந்தாலும் பார்டர்கள் எடுக்கும் இடம் குறைவாகவே இருக்கும்.
இப்படி ஆடியோ-வீடியோ இணையத்தில் வெளியாவதால் ஏற்படும் பரபரப்பு ப்ளஸ் பப்ளிசிட்டியைப் பார்த்த சிலர், தாங்களே அதுபோன்ற வேலைகளில் இறங்கியதும் உண்டு.
சிம்புவின் சிலம்பாட்டம் லீக் ஆகிவிட்டது, விஜய்யின் வில்லு காட்சிகள் கசிந்துவிட்டன, விண்ணைத்தாண்டி வருவாயா பாட்டு அவுட்... என்றெல்லாம் வந்த செய்திகளின் பின்னணி பற்றி ஆராய்ச்சி செய்தால், நிறைய சுவாரஸ்யமான கதைகள் வெளிவரக்கூடும்!
சில தினங்களுக்கு முன் விஜய்யின் வேட்டைக்காரன் அறிமுகப் பாட்டு என்ற பெயரில் ஒரு பாடல் இணையத்தில் வெளியானது. ஆனால் அதுபற்றி, கூறிய தயாரிப்பாளர் பாலசுப்பிரமணியன் 'அது ஒரிஜினல் பாடல் இல்லை' என்று கூறிவிட்டார்.
இப்போது அஜீத்தின் அசல் பாடலும் இணையத்தில் வெளியாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. பாடல் வரிகளைக் கூட வெளியிட்டுள்ளனர் இணையதளங்களில்.
இதுகுறித்து படத்தின் பிஆர்ஓ டைமண்ட் பாபுவிடம் கருத்து கேட்டோம். அவர் கூறியதாவது:
"இதெல்லாம் சும்மா. இன்னும் படத்துக்கு பாடல்பதிவே நடக்கவில்லை. படத்துக்கான பாடல்களை எழுதுபவர் கவிப்பேரரசு வைரமுத்து. அனைத்தும் பாடல்களையும் எழுதுபவர் அவர். வெறும் 12 வரிகளை அசல் பாடல் என்று சிலர் கூறுவது வேடிக்கையாக உள்ளது. இதை நம்ப வேண்டாம். பரபரப்புக்கா சிலர் ஏதாவது செய்திகளைக் கிளப்பிவிடுகின்றனர்" என்றார்.
வைரஸ்களைத் தடுத்து நிறுத்தி அழித்திடும் தொகுப்புகள் இன்று கம்ப்யூட்டர் பயன்பாட்டில் கட்டாயத் தேவையாய் ஆகிவிட்டன. ஆப்பரேட்டிங் சிஸ்டமும் பிரவுசர் தொகுப்பும் எத்தனை பாதுகாப்பாய் அமைக்கப்பட்டாலும் வைரஸ்களும் ஸ்பைவேர்களும் நாளுக்கு நாள் பெருகி கம்ப்யூட்டர் பயன்பாட்டிற்கு சவாலாய் உள்ளன.
எனவே தான் ஆண்டி வைரஸ்கள் பயன்படுத்தப்படுவது மட்டுமல்ல அவை அப்டேட் செய்யப்பட வேண்டும் . சைமாண்டெக், மேக் அபி, இசெட் மற்றும் மைக்ரோசாப்ட் உட்பட பல நிறுவனங்கள் ஆண்டி வைரஸ் தொகுப்புகளை தயாரித்து வழங்குகின்றன. இவற்றில் சில அனைத்து வகை பாதுகாப்பையும் தருவதாக விளம்பரப்படுத்துகின்றன. ஆனால் தொடக்க கட்டணம் ரூ.4,000 லிருந்து ரூ. 7,000 வரை உள்ளன. இதனால் தான் பலரும் இலவச தொகுப்புகளை நாடுகின்றனர்.
இந்த தொகுப்பு அவ்வப்போது உருவாகி வரும் வைரஸ்களுக்கு எதிராகத் தன்னை வளப்படுத்தி எதிர்த்து தொடர்ந்து பாதுகாப்பு வழங்குகிறது. இதனுடைய ஸ்கேனிங் செய்திடும் வேகமும் கூடுதலாகவே உள்ளது. இந்த சாப்ட்வேர் தொகுப்பினை முதலில் ஓர் ஆண்டிற்கு இலவசமாகப் பதிந்து பெற்றுக் கொள்ளலாம். வெகு எளிதாகப் பதிந்து பெறும் வசதி தரப்பட்டுள்ளது.
ஆண்டிவைரஸ் 2
1. பெயர்: Avast! AVG Antivirus 8 Free Edition
2. நிறுவனம் : Grisoft Inc
3. பைல் அளவு: 47924 கே.பி
4. கட்டணம் : இலவசம்
5. இயக்கத்தொகுப்பு : விண்டோஸ்
6.இணைய தள முகவரி : இங்கே கிளிக் செய்யவும்
பல ஆண்டுகளாகக் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்களிடையே மிகவும் அதிகமாகப் பயன்படுத்தப்படும் இலவச ஆண்டி வைரஸ் சாப்ட்வேர் தொகுப்பு இது. ஒரு சில அலுவலகங்களில் பணம் கட்டி வேறு ஆண்டி வைரஸ் தொகுப்பு வாங்கினாலும் கம்ப்யூட்டரை இயக்குபவர்கள் தங்களுக்கு இதுதான் வேண்டும் என்று ஏ.வி.ஜி. ஆண்டி வைரஸ் தொகுப்பைப் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த தொகுப்பைப் பயன்படுத்துகையில் ஓரளவிற்கே சிஸ்டம் தரும் மெமரியைப் பயன்படுத்துவதால் பிரச்னை எதுவும் இதன் இயக்கத்தால் ஏற்படுவதில்லை. பைல்களை ஸ்கேன் செய்வதில் இந்த தொகுப்பு காட்டும் வேகம் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து இலவசமாகவே இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது இதன் சிறந்த அம்சம். அதைப் போல இதன் அப்டேட்டுகளும் என்றைக்கும் இலவசமே.
ஆண்டிவைரஸ் 3
1. பெயர்: Avira Anti Personal Edition
2. நிறுவனம் : Avira GmbH
3. பைல் அளவு: 24462 kb
4. கட்டணம் : இலவசம்
5. இயக்கத்தொகுப்பு : விண்டோஸ்
முழுவதும் என்றும் இலவசமாய் இயங்கும் தொகுப்பு இது. இணையத்தில் இன்னும் பல சிறந்த ஆண்டி வைரஸ் தொகுப்புகள் உள்ளன. வரும் காலத்திலும் நிறைய கிடைக்கலாம். ஆனாலும் எச்சரிக்கையுடன் புதிய தொகுப்புகளை டவுண்லோட் செய்து பயன்படுத்த வேண்டும். எனவே தான் சோதிக்கப்பட்டு பலரால் பயன்படுத்தப்படும் பாதுகாப்பான மூன்று தொகுப்புகள் குறித்த விளக்கம் மேலே தரப்பட்டுள்ளது.
ஆனாலும் இப்போ அவர் தன் செவ்விதழ் திறந்து சொன்ன வார்த்தைகள் தான் காதல் கோட்டை கட்டிய எத்தனையோ பெயரை முகவரி இல்லாமல் செய்யப்போகின்றது. அவர் அழகை பார்த்து ஆண்கள் பயப்பட்டுக்கொண்டிருக்கும்போது(வேறொன்றுமில்லை காதலில்தான்.) ஸ்னிக்தாவோ தனது பயப்பட்டியலை வெளியிட்டு எல்லோரையும் பயப்படுத்தி விட்டார். பத்திரிகையாளர்களைக் கண்டால் பயமாம்(கேட்கக்கூடாத கேள்வியை கேட்காதிங்கப்பா செல்லம் பயப்படுகிதெல்லா)
அடுத்ததா சிக்கியது இவங்க என்ன சொல்றாங்கன்னே என தெரியமுடியாத பல்லிகள்.(எல்லா நடிகைகளும் பல்லி கரப்பான் பூச்சி என ஒரு லிஸ்ட் வைத்திருப்பார்கள்.) தனிமையில் பிடிச்சது பொம்மைகளாம்(அதைத்தான் கட்டிப்பிடித்துக் கொண்டு இருப்பாரா? நானும் பொம்மைமாதிரி இருப்பேனே.) பருப்புசாதம் என்றா உயிரையே விடும் ஸ்னிக்தா உயிரினும் மேலான காதலை ஒரு நோயென சொல்லிவிட்டு காதலே தனக்கு பிடிக்காதாம். அதைவிட கொடுமை ஆண்கலென்றாலே பிடிக்காதாம்.(எப்பிடிதாயே நடிப்புலகத்துக்கு வந்திங்க.)
ஆண்களை பிடிக்காத அம்மணி எப்படித்தான் ஆண்களுடன் சேர்ந்து கட்டிப்பிடித்து காதல் காட்சிகளில் எல்லாம் நடிக்கின்றாரோ தெரியவில்லை. நண்பர்களே! இனிமேல் ஸ்னிக்தா பின்னால் அலையாதிங்க ஏனென்றால் அவங்களுக்கு தான் அது(காதல்+ஆண்களை) பிடிக்காதாமே.
கடந்தமுறை ஐ.பி.எல் போட்டிகள் ஏனோ எல்லோரையும் கட்டிப்போட்டிருந்தது. இந்தியாவில் நடந்தது அதற்கு காரணமாக இருக்கலாம். வான வேடிக்கைகள் நிறைந்த விறுவிறுப்பான போட்டிகள் எத்தனை.(சென்னை அணி நன்றாக விளையாடியது என் ரசனைக்கு காரணமோ தெரியவில்லை.)
ஆரம்பத்திலேயே கடந்தமுறை இறுதிவரை முன்னேறிய சென்னை அணியினர் மும்பையிடம் தோற்று போட்டியின் சுவாரஸ்யத்தை கேள்விக்குறியாக்க தொடங்கினரென்றால் மறுபுறம் கடந்தமுறை உப்புசப்பு அணியாக இருந்த பெங்களூர் அணி சாம்பியன்ஸ் ராஜஸ்தானை விழுத்த மேலும் ஒரு எதிர்பார்ப்பில் அடி. இப்படியே போக கடந்தமுறை சொதப்போ சொதப்பென சொதப்பிய டெக்கான் அணி இம்முறை ஆரம்பம் முதலே பிளந்து கட்டத்தொடங்கியது. மும்பை மற்றும் டெல்லி அணிகளும் தங்களை பலமாக வெளிப்படுத்த கடந்தமுறை அசத்திய சென்னையும் ராஜஸ்தானும் நிமிரமுடியாமல் அடிவாங்கின.கொல்கத்தா அணியோ அடிவாங்கவே தான் வந்திருக்கின்றேன் என வந்தது போல் அடிமேல் அடி வாங்கி இன்று கடை நிலையில்.(ஷாருக்கானை மூட்டை கட்டி அனுப்பி வைத்த சாதனை அணி அது.)
இருந்தாலும் பயிற்றுவிப்பாளர் புச்சனன் செய்த மந்திர விளையாட்டுகள் கங்குலி என்னும் முதிர்ந்த சிங்கத்தை களங்கப்படுத்த மொத்த அணியே கரைசேரா கப்பலாகிவிட்டது.
கொஞ்சம் தலை நிமிர்ந்த ராஜஸ்தான் அணி பஞ்சாப் அணியை 214/4 என விளாசி துவைத்தெடுத்தனர். இதுவே இம்முறை ஐ.பி.எல் போட்டிகளில் இதுவரை ஒரு அணி பெற்ற அதிகூடிய ஓட்டம்.(வேறு எந்த அணியும் இருநூறை தாண்டவில்லை கேட்டால் இருபதுக்கு இருபது போட்டியாம்.)
துடுப்பாட்டத்தை பொறுத்தவரை கிழட்டு சிங்கம் ஹய்டேன் 486 ஓட்டங்களுடன் முதலிடத்திலும் தொடர்ந்து அவர் சகா கில்கிறிஸ்ட் 329 இரண்டாமிடத்திலும் AB de Villiers 366 ஓட்டங்களுடன் மூன்றாமிடத்திலும் ரைனா 322 ஓட்டங்களுடன் நான்காம் இடத்திலும்யுவராஜ் 314 ஓட்டங்களுடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளனர். தனிநபர் ஓட்டக்குவிப்பை பொறுத்தவரை AB de Villiers 105 ஓட்டங்கள் ஆட்டமிழக்காமல் விளாசி முதல் இடத்திலும் ரைனா 98, ஹய்டேன் 89 ஓட்டங்களுடனும் முதல் மூன்று இடங்களை கைப்பற்றி உள்ளனர்.
சிக்ஸர் விலாசுவதிலும் வயதான வீரர்கள் விடவில்லை. கில்கிறிஸ்ட் 21 சிக்ஸ்செர்கள், ஹய்டேன் 20 சிக்ஸ்செர்கள் என முதல் இரண்டு இடங்களையும் பிடிக்க டுவய்னே ஸ்மித், ரைனா, யுவராஜ் அவர்களை துரத்துகின்றனர். ஒரே போட்டியில் ஆறு சிக்ஸ்செர்கள் விளாசி AB de Villiers, யுஸுப் பதான், ஹய்டேன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
பந்து வீச்சை பொறுத்தவரை இலங்கையின் சுனாமி மலிங்க இந்தியாவின் இருபதுக்கு இருபது ஸ்பெசலிஸ்ட் ஆர.பி.சிங் மற்றும் நெஹெரா ஆகியோர் பதினாறு விக்கெட்டுகளுடன் முன்னிலை வகிக்க அனில்கும்ப்ளே ஒரு போட்டியில் ஐந்து ஓட்டங்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்துகின்றார்.(எதி ராஜஸ்தான்)
இம்முறை ஐ.பி.எல்லில் எந்த விக்கெடடுக்குமான அதிகபட்ச இணைப்பாட்டமாக ராஜஸ்தான் அணியின் ஓஜா மற்றும் கிரகம் ஸ்மித் ஆகியோர் 135 ஓட்டங்களை குவிக்க கடந்தமுறை ஆரம்ப இணையாக அசத்திய டெல்லியின் ஷேவாக் கம்பீர் ஜோடி தடுமாறி வருகின்றது. ஜெயசூரியா மற்றும் சச்சின் ஜோடியும் சில போட்டிகளில் விருந்து வைக்க தவறவில்லை.(இந்த வயதிலும் அப்படி ஒரு ஆட்டம் எங்களையா அணியை விட்டு நீக்க சொல்லி சொன்னீர்கள் என கேட்பதுபோல்.)
கள நிலவரம் இப்படி இருக்க கனவு தேவதைகளின் ஆட்டம் ஒரு புறம் சூடேற்றுகின்றது. நல்ல காலம் இம்முறை அவர்களை ஆவது ஆடவிட்டது. இல்லாவிட்டால் டெஸ்ட் போட்டிகள் போல் நடைபெறும் சில போட்டிகளை பார்க்கபோகும் ரசிகர் நிலை என்னவோ?
தினேஷ் கார்த்திக் கொஞ்சம் அணியை காப்பாற்றி விடுகின்றார். பிராவோ தன் பங்குக்கு கலக்கிக்கொடிருக்கின்றார். ஹர்பஜன் தன் பங்குக்கு பந்துவீச்சிலும் துடுப்பாட்டத்திலும் உதவி செய்து அணிக்கு பலம் சேர்க்கின்றார். யுஸுப் பதான் களம் இறங்கினாலே எதிரணிக்கும் கலக்கும் ஆட்டம். பாகிஸ்தான் வீரர்கள் இல்லாமல் போனதும் மறுக்கமுடியா இழப்பே. ரோகித் ஷர்மா பந்துவீச்சில் கலக்குவதொடு அவ்வப்போது மறந்து போன துடுப்பாட்டத்தை நினைவுபடுத்திப்பார்க்கின்றார். உத்தப்பா நடந்து வந்து விளாசும் சிக்ஸ்செரை பார்த்து எத்தனை மாதங்களாகிவிட்டது?
இது ஏதோ பொம்மை தாஜ்மகாலின் விலை மதிப்பு அல்ல. ஆக்ராவில் யமுனா நதிக் கரையில் அமைந்துள்ள உண்மையான தாஜ்மகாலின் மதிப்புத்தான் ஒரு ரூபாய். ஆச்சரியப் படாதீர்கள்! குதுப்மினார் போன்ற இதர கலைச்சின்னங்களும் ஒரு ரூபாய் அளவிற்கு மதிப்பிடப் பட்டுள்ளன. சற்று விவரமாக பார்ப்போம்.
தற்போது மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைகள் நடப்பு கணக்கியல் முறையில் (Cash Method) தயாரிக்கப் படுகின்றன. அதை மாற்றி சொத்து சேரும் முறைப் படி (Accrual Method) நிதிநிலை அறிக்கைகள் தயார் செய்ய புதிய முடிவு எடுக்கப் பட்டுள்ளது. இதன் படி, அரசின் கைவசம் உள்ள சொத்துக்களை மதிப்பிடும் முயற்சியில் இப்போது மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
அந்த முயற்சியின் முதல் படியாக, தாஜ் மகால், குதுப்மினார் போன்ற கலைச் சின்னங்களின் மதிப்பு ரூபாய் ஒன்று என்று நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
புதிய கணக்கியல் முறையின் படி, இருபத்து ஐந்து வருடங்களுக்கு உட்பட்ட அரசு சொத்துக்களின் மதிப்பு அவற்றின் முதலீட்டு செலவாக இருக்கும். அதே சமயத்தில் இருபத்து ஐந்து வருடங்களுக்கு முந்தைய சொத்துக்களின் மதிப்பினை அரசே நிர்ணயிக்கும். இந்த முறையில் தாஜ் மகால் விலை ஒரு ரூபாய் என்று மத்திய அரசினால் நிர்ணயிக்கப் பட்டுள்ளது.
சில வருடங்களுக்கு முன்னர் கட்டப் பட்ட சில சாதாரண அரசு கட்டிடங்களின் மதிப்பு பல லட்சம் அல்லது பல கோடியாக இருக்கும் போது, தாஜ் மகால் போன்ற ஒரு அரிய பொக்கிஷத்தின் மதிப்பு ஒரு ரூபாயாக கணக்கிடுவது ஒரு வினோதம்தான்.
அதே சமயத்தில், பலே கில்லாடியான நமது அரசியல்வாதிகள், தனியார் மயமாக்கம் என்ற பெயரில், அரசு சொத்துக்களை லாபத்தில் விற்கிறேன் என்று சொல்லிக் கொண்டு தாஜ் மகால் இரண்டு ரூபாய், தஞ்சை கோயில் மூன்று ரூபாய், செங்கோட்டை நான்கு ரூபாய் என்று கூறு போட்டு விற்று விட்டு விடக் கூடாது. ஸ்பெக்ட்ரம் விஷயத்தில் நமக்கு ஏற்கனவே நல்ல முன் அனுபவம் இருக்கிறது அல்லவா?
எஸ்.எஸ்.பிக்சர்ஸ் சார்பில் மூவேந்தன் இயக்கும் படம்தான் கண்ணுக்குள்ளே. மிதுன்தான் நாயகன். அவருக்கு ஜோடியாக அபர்ணா மற்றும் அனு ஆகிய இருவரும் நடிக்கின்றனர்.
இவர்களில் அபர்ணா, புதுக்கோட்டை சரவணன் படத்தில் அறிமுகமானவர். இடையில் காணாமல் போயிருந்த அபர்மா மீண்டும் திரும்பி வருகிறார். அனு புதுமுகம்.
இளையராஜாவின் இசையமைப்பில் உருவாகும் இப்படம்நமது கம்ப்யூட்டர் சில சமயங்களில் windows update ஆகி விடும்.update ஆனபிறகு நமது
விண்டோஸ் ஒரிஜினல் இல்லை ப்ளீஸ் இன்ஸ்டால் ஒரிஜினல் என்ற மெசேஜ் வந்துவிடும்.
கிழ்கண்ட ப
டங்களை காண்க .
ஒவ்வருமுறை ரீ ஸ்டார்ட் ஆனபிறகும் இந்த மெசேஜ் வந்து தொல்லை கொடுக்கும்.
இதை சரி செய்ய கிழ்கண்ட டூல்ச்யை டவுன்லோட் செய்து ஒருமுறை ரன் செய்யவும்.
DOWNLOAD HERE
தமிழில் 'நம்நாடு’, ‘திண்டுக்கல் சாரதி’ உள்பட சில படங்களில் நடித்திருப்பவர் நடிகை கார்த்திகா. தற்போது ‘பாலை வனச்சோலை’ படத்தில் நடித்து வருகிறார்.
இவருக்கும் அமெரிக்காவில் மருந்து கம்பெனி அதிகாரியாக இருக்கும் மெரின் மேத்யூ என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் 2 வருடங்களாக காதலித்து வந்தனர்.
மெரினுக்கு கொல்லம் அருகே உள்ள மைனாகப் பள்ளி சொந்த ஊர். தற்போது இவர்களது காதலுக்கு பெற்றோர் பச்சைக்கொடி காட்டியதைத் தொடர்ந்து திருமண ஏற்பாடு நடந்து வருகிறது.
அடுத்த மாதம் 14ம் தேதி நிச்சயதார்த்தம் நடக்கிறது. 18ம்தேதி தேவலங்கரை செயின்ட் மேரீஸ் தேவாலயத்தில் திருமணம் நடக்கிறது.
மறுநாள் கொச்சியில் வரவேற்பு நிகழ்ச்சி நடக்கிறது. திருமணத்துக்கு பிறகு கையில் உள்ள படங்களை முடித்து விட்டு கணவருடன் அமெரிக்காவில் குடியேற கார்த்திகா திட்டமிட்டுள்ளார்.