Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

16 ஆகஸ்ட் 2009

ஸ்னேகாவுக்கு எஸ்எம்எஸ் மூலம் திருமண தொல்லை-பெங்களூர் நபர் கைது

சென்னை: தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நடிகை ஸ்னேகாவுக்கு கடந்த 6 மாதமாக எஸ்எம்எஸ் மூலம் தொல்லை தந்து வந்த பெங்களூர் தொழிலதிபர் கைது செய்யப்பட்டார். பெங்களூரில் இருந்து ஸ்னேகாவின் செல்போன்களுக்கு கடந்த 6 மாத காலமாக தொடர்ந்து ஒரு நபர் எஸ்எம்எஸ்கள் அனுப்பி வந்தார். அதில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஸ்னேகாவை நச்சரித்து வந்தார். ஆரம்பத்தில் இதை ஸ்னேகா பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. யாரோ ரசிகர் தொல்லை தருகிறார் என்று விட்டுவிட்டார். ஆனால், கடந்த சில வாரங்களாக இரவு-பகலாக இடைவிடாமல் எஸ்எம்எஸ்களை அனுப்பியபடியே இருந்தார் அந்த நபர். இதையடுத்து மன உலைச்சல் ஏற்பட்டதால் இது குறித்து சென்னை போலீஸ் கமிஷ்னரை சந்தித்து புகார் தந்தார் ஸ்னேகா. இது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தயபோது இந்த எஸ்எம்எஸ்களை அனுப்பியது பெங்களூரைச் சேர்ந்த ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் என்று தெரியவந்தது.
Sneha
இதைத் தொடர்ந்து பெங்களூர் சென்ற தனிப்படை போலீசார் அந்த நபரை கைது செய்தனர். அவர் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளார். அவர் மீது பெண்கள் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com