Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

21 மார்ச் 2009

ஒபாமாவின் பிரச்சனைக்கும் அசின் பிரச்சனைக்கும் ஒரே தீர்வுதான்

உலகம் ஆரம்பித்த நாட்களில் எல்லாம் பிரச்சனை சந்தித்த மனிதர்கள் மட்டுமே மேலே வந்திருக்கிறார்கள். அவர்களும் பிரச்சனையை எப்படி சமாளித்திருக்கிறார்கள்? எப்படி அதை வென்றிருக்கிறார்கள் என்று பார்த்தால் அவர்கள்தான் சரித்திர் நாயகர்களாக விளங்கியிருக்கிறார்கள் என்பது புலப் படும். உலக மக்களின் பிரச்சனைகள் தீரவும், உலக சமாதானம் உருவாகவும் நம்மாளான் ஒரு பங்களிப்பாக இந்த ஆராய்ச்சியைத் தொடருகிறோம். கிரிக்கெட் விளையாட்டு. கிரிக்கெட் விளையாட்டினை எடுத்துக் கொண்டால் முதலில் காசு சுண்டுகிறார்கள். காசு சுண்டுதலில் வெற்றி பெறுதல் என்பது அதிஷ்டம் தொடர்புடைய விஷயமாக இருந்தாலும் அதைத் தொடர்ந்து நாம் பேட்டிங் , பவுலிங் தேர்ந்தெடுப்பது என்பது நமது திறமை தொடர்புடைய நிகழ்வாக அமையும். வாழ்க்கை என்பது அப்படித்தான். அதிர்ஷ்டம் வந்தாலும் அதை உபயோகிக்க தெரிந்திருக்க வேண்டும் அவர்களால்தான் வாழ்க்கையை வெற்றி பெற முடியும். பேட்டிங் தேர்ந்தெடுத்து உள்ளே செல்வது என்பது தலைமை தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி, த்லைமை சொல்வதை நாம் கண்டிப்பாக நாம் கேட்டாக வேண்டும். பேட்டிங் செய்ய தொடங்கினாலும், நம்மை அவுட் ஆக்க நம்மைச் சுற்றி வியூகம் அமைத்து செயல் படுவார்கள். அதுதான் வாழ்க்கை. சில நேரங்களில் நம்மை அவுட் ஆக்க நடுவர்கள் கூட முயற்சி செய்வார்கள். என்னதான் சிறந்த ஆட்டக் காரராக இருந்தாலும், ஒரு பந்தில் நாம் ஏமாந்தாலும் நம்மை ஆட்ட்மிழக்கச் செய்து உள்ளே அனுப்பிவிடுவார்கள். தலைமை நமக்கு கொடுக்கும் பணியினை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். உள்ளே நாம் ஆட இறங்கும் போது சற்று நிதானமாக ஆடுமாறு நமக்கு ஆலோசனை கூறப்படலம். அதன் பொருள் ரன் எடுக்காதே என்பதல்ல.. ஆட்ட்ம் இழக்காதே .. என்பது தான் பொருளாக அமையும். என்பதை உணர்ந்து கொண்டு ஆட வேண்டும், விக்கெட்டை காப்பாற்றிக் கொண்டு ஓட்டங்களைக் குவித்தால் மகிழ்ச்சியே அடைவார்கள். மட்டை பிடிக்கும் போது பந்தை எவ்வாறு அடிப்பது என்பதை பந்து வீச்சாலரின் கையிலிருந்து வெளியேறி தரையில் பட்டு திரும்பிய பின்னரே முடிவு செய்ய வேண்டும். அது சரியான பயிற்சி இல்லையென்றால் மட்டை ஓங்கும் முன்ன்ரே குச்சி காணாமல் போய்விடும். முதலிலேயே எவ்வாறு அடிப்பது என்பதை முடிவு செய்தால் சுலபமாக அவுட் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துவிடும். வாழ்க்கையும் அப்படித்தான். எந்த பிரச்சனையும் வரும்போது சரியான முறையில் சமாளிக்கும் திறமை வேண்டும். அதற்கான பயிற்சி அவசியமாக அமையும். தேவையில்லாமல் முதல் பந்தில் இரண்டாம் பந்தைப் பற்றி கவலை படவேண்டிய அவசியமில்லை.இந்த பிரச்சனையைப் பார்க்கும்போது அடுத்த பிரச்சனை பற்றி கவலைப் பட வேண்டிய அவசியமில்லை. நாம் பந்துவீசுதல் என்று வரும்போது வேகமாக வீசுதல் என்பது சில நேரங்கள் மட்டுமே உபயோகப் படும் அதுவும் துவக்க காலத்தில் மாட்டுமே உபயோகப் படும். பழகிவிட்டால் எந்த வேகத்தையும் சுலமாக சமாளித்துவிடுவார்கள். எனவே எதிராளியை ஆட்டமிழக்கச் செய்ய பலவகைகளில் முயற்சி செய்ய வேண்டும். சில ஆட்டக்காரர்கள் தானாக ஆட்டமிழ்ந்து சென்றுவிடுவார்கள். அவர்களுக்கான வசதிகளை மாட்டும் செய்து கொடுக்க வேண்டும், அதாவது அவருக்கு விருப்பமான இடத்தில் ஒரு ஃபீல்டரை நிறுத்திவிட்டால் தானே கேட்ச் கொடுத்து ஆட்டமிழ்ந்து விடுவார். சில நேரங்களில் பல வகையான பந்துகளையும், வியூகங்களையும் உபயோகப் படுத்த வேண்டும். இந்த மாதிரி வியூகங்கள் அமைப்பதற்கு ந்ல்ல தலைமையும் அவசியம். நாம் விக்கெட் எடுப்பதற்கு நல்ல தலைமையும் அவசியம். தலமைக்கு கீழ்படிதல் என்பது மிக அவசியம். த்லமை டீப் விக்கெட்டில் நிற்கச் சொல்லும்போது நாம் மிட் ஆனில் நின்றால் கண்டிப்பாக அணிக்குத்தோல்விதான். நாம் எவ்வள்வு ஸ்கோர் எடுத்திருக்கிறோம் என்பது முக்கியமில்லை. எதிராளியைவிட அதிகமாய் எடுத்திருக்கிறோமா, நம்மைவிட குறைந்த ஸ்கோரில் எதிரியைக் கட்டுப் படுத்தி இருக்கிறோமா? என்பதில்தான் நமது வெற்றியே அடங்கியிருக்கிறது. இந்த மாதிரியே கிரிக்கெட் பார்த்து விளையாடி பழகிக் கொண்டால் ஒபாமா, அசின் மட்டுமல்ல , நாமும்கூட எல்லா பிரச்சனைகளையும் எளிதில் சமாளித்துவிடலாம்.

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com