Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

01 ஜூலை 2009

கல்யாணப் பத்திரிக்கையை வைத்து திருப்பதி கோவிலில் வழிபட்டார் மீனா

திருமணத்தையொட்டி தனது கல்யாணப் பத்திரிக்கையுடன் திருப்பதி சென்ற நடிகை மீனா அங்கு சாமி முன்பு பத்திரிக்கையை வைத்து பயபக்தியுடன் வழிபட்டார். நடிகை மீனாவுக்கு ஜூலை 12ம் தேதி திருப்பதியில் திருமணமாகவுள்ளது. மாப்பிள்ளை வித்யாசாகர் பெங்களூர்க்காரர். திருமணத்தையடுத்து சென்னையில் ஜூலை 14ம் தேதி வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கல்யாணம் நிச்சயமானதும் திருப்பதியிலிருந்து திருமலைக்கு நடந்தே வந்து தரிசனம் செய்வதாக வேண்டியிருந்தாராம் மீனா. அதன்படி தனது கல்யாணப் பத்திரிக்கையுடன் அவர் திருப்பதி சென்றார். தந்தை துரைராஜ், தாயார் மல்லிகாவுடன் திருப்பதி சென்ற அவர் கீழ் திருப்பதியிலிருந்து படிகள் வழியாக சுமார் 3 மணி நேரம் நடந்து திருமலையை அடைந்தார். அங்கு ஏழுமலையான் பாதத்தி்ல கல்யாணப் பத்திரி்க்கையை வைத்து பயபக்தியுடன் வழிபட்டார். பின்னர் பிரசாதத்தை பெற்றுக் கொண்டார். பின்னர் வெளியில் காத்திருந்த செய்தியாளர்களிடம் சிக்கிக் கொண்டார் மீனா. அவர்களிடம் அவர் பேசுகையில், திருமணமானாலும் தொடர்ந்து நடிப்பேன். டிவி தொடர்களிலும், நல்ல கேரக்டர்கள் கொண்ட படங்களிலும் தொடர்ந்து நடிப்பேன் என்றார் மீனா.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com