Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

03 ஜூலை 2009

பதிலடி கொடுக்குமா இந்தியா?- இன்று வெ.இண்டீசுடன் 3வது போட்டி

செயின்ட் லூசியா: இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது. இரண்டாவது போட்டியில் கிடைத்த தோல்விக்கு இந்திய அணி இப்போட்டியில் பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கலாம். வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ள இந்திய அணி நான்கு ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் வென்ற இந்திய அணி இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீசிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் பரிதாபமாக தோற்றது. இந்நிலையி்ல் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வென்றுள்ள நிலையில் தொடரை வெல்ல அடுத்து நடக்கவிருக்கும் இரண்டு போட்டிகளையும் கைப்பற்ற வேண்டிய நிலையில் இரு அணிகளும் இருக்கின்றன. இந்நிலையில் மூன்றாவது போட்டி இன்று செயின்ட் லூசியா நகரில் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்குகிறது. இங்கிலாந்தில் நடந்த டுவென்டி-20 தொடரில் அரையிறுதிக்கு கூட முன்னேறாமல் சொதப்பிய இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் தொடரை வென்று தனது பெருமையை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இதனால் இந்திய வீரர்கள் இன்று பொறுப்புணர்ந்து விளையாடுவார்கள் என எதிர்பார்க்கலாம். டோணி, யுவராஜ் சிறப்பாக விளையாடி வருகின்றனர். இரண்டாவது போட்டியில் கோட்டைவிட்ட இந்திய பேட்ஸ்மேன்கள் தங்களது தவறுகளை திருத்தி கொள்ள வேண்டும். சச்சின், ஷேவாக் இல்லாத குறை இப்போட்டியில் தெளிவாக தெரிந்தது. கம்பீர், தினேஷ் கார்த்திக், யூசுப் பதான் ஆகியோர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இந்திய வீரர்கள் அனைவரும் முழுமை திறமை வெளிப்படுத்துவார்கள், அடுத்து இரண்டு போட்டிகளையும் வென்று தொடரை கைப்பற்றுவோம் என கேப்டன் டோணி தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் தொடரை வெல்ல கடும் முயற்சி மேற்கொண்டு வருகிறது. இரண்டாவது போட்டியில் விளையாடிய அதே அணி இன்றும் விளையாடும் என அறிவித்துள்ளது. இப்போட்டியை வெல்ல இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ரசிகர்கள் மீண்டும் அதிரடி விருந்துக்கு தயாராகலாம்.
கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com