Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

டோனி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டோனி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10 பிப்ரவரி 2009

டோனியின் காதலி, கல்லூரி மாணவி - திருமணம் செய்ய முடிவு

இந்திய கிரிக்கெட் அணியை புகழின் உச்சிக்கு அழைத்து சென்றவர் டோனி. அவர் கேப்டன் பதவியை ஏற்ற பிறகு இந்திய அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றிகளை பெற்றுள்ளது. கேப்டன் பதவியில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் அவர் தொடர்ந்து முத்திரை பதித்து வருகிறார். அதிரடியான ஆட்டம் மூலம் இளம் ரசிகைகளின் நெஞ்சில் நீங்கா இடம் பெற்றுள்ளார். இந்தியாவின் விலை மதிப்பு மிக்க அவரை திருமணம் செய்ய ஒவ்வொரும் போட்டி போடுகின்றனர். டோனி முதலில் நடிகை தீபிகா படுகோனேயுடன் சுற்றி திரிந்தார். பின்னர் நடிகை லட்சுமிராயுடன் இணைந்து சுற்றினார். இவர்களை எல்லாம் கைகழுவி விட்டு டோனி தற்போது புதிய காதலியை தேர்ந்தெடுத்துள்ளார். கல்லூரி மாணவியான சாக்சிசிங் ராவத்தை டோனி காதலிக்கிறார். இவர் அவுரங்காபாத்தில் உள்ள கல்லூரியில் ஹோட்டல் மானேஜ்மென்ட் படித்து வருகிறார். சமீபத்தில் தாஜ்பெங்கால் ஓட்டலில் அவர் தனது பயிற்சியை முடித்தார். அப்போதுதான் டோனியும், சாக்சியும் சந்தித்து கொண்டனர். பின்னர் நடிகை பிபாஷாபாசு அளித்த விருந்தில் இருவரும் பங்கேற்றனர். சாக்சி தனது 21-வது பிறந்த நாளை கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொண்டாடினார். அதில் டோனியும் கலந்து கொண்டனர். இருவரும் ஒன்றாக பல இடங்களுக்கு சுற்றி திரிந்தனர். சாக்சி சிங்கை திருமணம் செய்ய டோனி முடிவு செய் துள்ளார். 2010-ம் ஆண்டுக்கு பிறகு இருவரது திருமணம் நடைபெறும். இதை சாக்சி சிங்குக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்தனர். சாக்சி சிங்கின் சகோதரியும், உத்ராஞ்சல் போலீஸ் அதிகாரியுமான அபிலாசா டெலிவிஷன் பேட்டியில் கூறும் போது, இருவரும் நல்ல நண்பர்கள் சாக்சியின் படிப்பு முடிந்த பிறகுதான் அவரது திருமணம் என்றார்.பார்க்கலாம் .......???? நன்றி -THENTAMIL

06 பிப்ரவரி 2009

தோனியை மிஞ்சிய பிளிண்டாப், பீட்டர்சன்

ஐபிஎல் 20 ஓவர் போட்டிகளுக்கான வீரர்கள் ஏலத்தில் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியை இங்கிலாந்து வீரர்கள் பிளிண்டாப் மற்றும் கெவின் பீட்டர்சன் ஆகியோர் விஞ்சியுள்ளனர்.

ஐபிஎல் 20 ஓவர்கள் கிரிக்கெட் போட்டிகளுக்கான அணிகளுக்கு வீரர்களை விலைக்கு வாங்கும் ஏலம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இங்கிலாந்து வீரர் ஆன்ட்ரூ பிளிண்டாப்பை 7.5 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. இதே தொகைக்கு கெவின் பீட்டர்சனை, பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி வாங்கியது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் மிக அதிகபட்சமாக தோனி 6 கோடி ரூபாய்க்கு விலை போனார். தற்போது பிளிண்டாப் அவரை மிஞ்சியுள்ளார்.

இதே போல் மற்றுமொரு இங்கிலாந்து வீரரான கெவின் பீட்டர்சன்னை பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி 7.5 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 20 ஓவர் கிரிக்கெட் சிறப்பு ஆட்டக்காரர் டைரான் ஹென்டர்சன்னை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6.5 லட்சம் டாலருக்கு வாங்கியுள்ளது.

பெங்களூர் ராயல் சாலஞ்சர்ஸ் அணி நியூசிலாந்தை சேர்ந்த ஜெஸ்ஸி ரைடரை ஒரு லட்சத்து 60 ஆயிரம் டாலருக்கும், கைல் மில்சை ஒரு லட்சத்து 50 ஆயிரம் டாலருக்கும் ஏலம் எடுத்துள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இலங்கையின் திலான் துஷாராவை ஒரு லட்சத்து 40 ஆயிரம் டாலருக்கும், இங்கிலாந்து வீரர் ரவி போபாராவை 4.5 லட்சம் டாலருக்கும் வாங்கியுள்ளது.

டெக்கான் சார்ஜர்ஸ் அணி மேற்கிந்திய பந்துவீச்சாளர் பிடெல் எட்வர்ட்சை 1.5 லட்சம் டாலருக்கு வாங்கியுள்ளது. டெல்லி டேர் டெவில்ஸ் அணி, இங்கிலாந்து வீரர்கள் ஓவய்ஸ் ஷா மற்றும் பால் காலிங்வுட்டை தலா 2.75 லட்சம் டாலருக்கு ஏலம் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின், பந்துவீச்சார் ஸ்டுவர்ட் கிளார்க் மற்றும் இலங்கை வீரர் சமாரா கபுகெடேரா ஆகியோரை ஏலத்தில் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை.

கோவாவில் இன்று ஏலம் தொடங்கியுடன் முதலாவதாக ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஷான் டெய்ட் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 3.75 லட்சம் டாலருக்கு விலை போனார். 9.5 லட்சம் டாலருக்கு தென்னாப்பிரிக்க வீரர் டுமினியை மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com