01 மார்ச் 2009
லேப்டாப் கம்ப்யூட்டர்கள் - சில யோசனைகள்
22 பிப்ரவரி 2009
எல்லா மொபைல் போனுக்கும் இனி ஒரே சார்ஜர் போதும்
அனைத்து வகை மொபைல் போன்களுக்கும் பொருந்தும் வகையில் ஒரே மாதிரியான சார்ஜர் உற்பத்தி செய்ய மொபைல் போன் நிறுவனங்கள் உறுதி அளித்துள்ளன. மொபைல் போன்களை மாற்றும் போது, தனியாக அதற்கு சார்ஜர்கள் வாங்க வேண்டியுள்ளது. ஒவ் வொரு நிறுவனத்தின், ஒவ் வொரு மாடல் மொபைல் போனுக்கும், அதற்கென மட்டும் பொருந்தும் வகையில் சார்ஜர்கள் இணைத்து வழங்கப்பட்டன. அதற்கு முன்னர் பயன்படுத்திய சார்ஜர், பயன்படுத்த தேவையின்றி, வீணாகிறது.
இந்நிலையை மாற்றி, அனைத்து மொபைல் போன்களுக்கும் பொருந்தும் வகையில் ஒரே மாதிரியான சார்ஜர்கள் கொண்டு வர ஜி.எஸ்.எம்.ஏ., மொபைல் போன் துறையினர் முடிவு செய்துள்ளனர். இந்த துறையினர் நடத்திய கூட்டத்தில் 17 மொபைல் போன் ஆபரேட்டர்கள், மொபைல் போன் தயாரிக்கும் முக்கிய நிறுவனங்கள் கலந்து கொண்டன. வரும் 2012ம் ஆண்டு முதல் விற்பனைக்கு கொண்டு வரப்படும் அனைத்து மொபைல் போன்களுக்கும், இனி சார்ஜர்கள் ஒரே மாதிரியாக இருக்கும். எந்த நிறுவனத்தின், எந்த மாடலுக்கும் இந்த சார்ஜர் பொருந்தும் வகையில் இருக்கும்.
இந்த சார்ஜர்கள், அதற்கு பின்னர் விற்பனைக்கு வரும் மற்ற மாடல் மொபைல் போன்களுக்கும் பொருந்துவதாக இருக்கும். தற்போது, பயன்படுத்த முடியாத பழைய சார்ஜர்களால் உலகம் முழுவதும், ஆண்டுக்கு 51 ஆயிரம் டன் கழிவுகள் ஏற்படுகின்றன. இதனால், சுற்றுச்சூழல் மாசு அதிகரிக்கிறது. இதையும் மனதில் கொண்டு தான், இனி ஒரே மாதிரி சார்ஜர்கள் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் ஏடி அண்டு டி, கே.டி.எப்., - எல்.ஜி., - மொபைல்கோம் ஆஸ்டிரியா, மோட்டரோலா, நோக்கியா, ஆரஞ்சு, குவால் காம், சாம்சங், சோனி எரிக்சன், வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்றன. புதிதாக வெளிவர இருக்கும் சார்ஜர்கள், மின் சிக்கனத்துக்கும் வழி வகுப்பதாக இருக்கும். தற்போது பயன்படுத்தப்படும் சார்ஜர்களில் இருந்து 50 சதவீதம் மின் சிக்கனம் கொண்டவையாக இவை இருக்கும்.
08 பிப்ரவரி 2009
கூகுளின் SMS Channel-இலவச சேவை
கூகுள் இலவச SMS Channel சேவை இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Mytoday போன்ற SMS சேவைக்குப் பிறகு சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.நீங்களாகவே ஒரு புதிய SMS சேனலை உருவாக்க முடியும்.அதன் பின் அதற்குரிய இணைய முகவரியைப் பெற்று நண்பர்களுடன் பகிர்ந்து அவர்களையும் இணையச் செய்யலாம். நாம் SMS சேனலுக்கு அனுப்பும் SMS ஆனது அதில் இணைந்துள்ள அனைவரின் அலைபேசியையும் இலவசமாகச் சென்றடையும்.
உதாரணமாக, Saaral SMS சேனலானது சாரல் சமூக நல அமைப்பின் செயல்பாடுகளை அதன் அனைத்து உறுப்பினர்களும் அறிந்து கொள்வதற்காக உருவாக்கப்பட்டது. மேலும் நம்பிக்கை ஊட்டும் கருத்துக்களையும் (உதாரணமாக:A Candle loses nothing by lighting another candle), சமூக அக்கறையுள்ள பொது அறிவுத் தகவல்களையும் (உதாரணமாக:Save Energy,Save Earth-National Energy Conservation Day Wishes(Dec 14)-SAARAL) பகிர்ந்து வருகின்றது. இது தனது உறுப்பினர்களுக்கு குறுந்தகவலாக அனுப்பி வருகிறது.
சாரல் அமைப்பின் SMS சேனலுக்கு Subscribe செய்ய இங்கே வசிக்கவும்.
கூகிள் SMS சேனலின் சிறப்பம்சங்கள்:
• நாமாக புதிய SMS சேனல் உருவாக்கிக் கொள்ளலாம்.இதன் மூலம் நண்பர்கள், ஒத்த கருத்துள்ளவர்கள் தங்களுக்கென்று ஒரு SMS சேனலைத் தொடங்கலாம்.ஏற்கனவே பல உபயோகமுள்ள சேனல்கள் உள்ளன.உதாரணத்திற்கு: NDTV National News, Business Line etc.சுனாமி, புயல் எச்சரிக்கை போன்ற தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்ளலாம்.
• நாம் அனுப்பும் செய்தியை அலைபேசி, கூகுள் இணையதளம், நம் இணையத்தின் RSS Feed மூலம் அனுப்பலாம்.
• நாம் சேர்ந்துள்ள SMS சேனலில் நம்முடைய மொபைல் எண் மற்றவர்களுக்குத் தெரியாது.
• நாம் SMS பெற நேரத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம்.உதாரணத்திற்கு: 05:00 AM to 10:00 PM
• தேவையான SMS ன் எல்லையை வரைமுறை செய்யலாம்.உதாரணத்திற்கு: Max SMS per Day:50
• எந்த நேரத்திலும் SMS சேவை பிடிக்கவில்லை என்றால் விலகிக் கொள்ளலாம்.
கூகிள் SMS சேனலில் இணையும் முறை:
• Nick Name செட் செய்யவும்
• மொபைல் எண் கொடுக்கவும்
• மொபைலுக்கு வரும் Code டைப் செய்யவும்
• விருப்பமான SMS சேனலுக்கு Subscribe செய்யலாம்.Eg:Saaral