Video review: Apple iPhone 5

New ***See tamil poem****

09 ஆகஸ்ட் 2011

முரட்டுப் பிடிவாதத்துக்குக் கிடைத்த மிகப்பெரிய பாடம்! – கருணாநிதி

சென்னை: சமச்சீர் கல்வியை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிட்டதன் மூலம் அ.தி.மு.க. அரசின் முரட்டுப் பிடிவாதத்துக்கு இந்திய உச்ச நீதிமன்றம் மிகப்பெரிய பாடத்தைப் புகட்டியுள்ளது என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

1.5 கோடி மாணவ-மாணவிகளும், அவர்களின் பெற்றோர்களும், ஆசிரியர்களும், சமூக நீதியில் அக்கறை கொண்டோரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்த சமச்சீர் கல்வி பற்றிய உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்து விட்டது.

உயர்நீதிமன்ற நீதியரசர்களும், உச்ச நீதிமன்ற நீதியரசர்களும் திரும்பத் திரும்பச் சொல்லியும் அவைகளை எல்லாம் அலட்சியப்படுத்தி விட்டு தி.மு.க. ஆட்சி அறிமுகப்படுத்தியது என்ற காரணத்திற்காகவும், ஆதிக்க வர்க்கத்திற்கு ஆதரவாகவும், சமச்சீர் கல்வித் திட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டேன் என்று நீதிமன்றங்களே நாட்களைக் குறிப்பிட்டுச் சொல்லி, அந்த தேதிக்குள் சமச்சீர் கல்விப் பாடப் புத்தகங்களை வினியோகிக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கூடக் கேளாமல் முரட்டுப் பிடிவாதம் காட்டி வந்த தமிழக அ.தி.மு.க. அரசுக்கு ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் மிகப்பெரிய பாடம் இந்திய உச்ச நீதிமன்றத்திலிருந்தே கிடைத்துள்ளது.

இதே தீர்ப்பு தி.மு. கழக ஆட்சியிலே உச்ச நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்தால், உடனடியாக கருணாநிதி பதவி விலக வேண்டும் என்று அறிக்கை விடுத்திருப்பார் அம்மையார் ஜெயலலிதா. அதைப்போல நான் தற்போது அறிக்கை விடுவதற்கு விரும்பவில்லை. இனியாவது இதுபோன்ற பிரச்சினைகளில் ஜெயலலிதா தனது பிடிவாதப் போக்கினைக் கைவிட்டு நாட்டு நலன்கருதி தன்னுடைய அணுகுமுறைகளையும், நடவடிக்கைகளையும் மாற்றிக் கொண்டு செயல்படுவார் என்று தமிழக மக்கள் எதிர் பார்க்கிறார்கள்.

சமச்சீர் கல்விக்கு கிடைத்த இந்த உச்சகட்ட வெற்றியை அங்கிங்கெனாதபடி எங்கெங்கும் உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வோம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

மக்களுக்கு இனிப்பு வழங்கிய மு க ஸ்டாலின்!

இந்நிலையில் பாளையங்கோட்டையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளரும், முன்னாள் துணை முதல்வருமான மு.க.ஸ்டாலின், “சமச்சீர் கல்வி வழக்கின் தீர்ப்பு மக்களுக்கு கிடைத்த வெற்றி. உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிர்பார்த்த ஒன்றுதான். சமச்சீர் கல்வியை உடனே அமல்படுத்த வேண்டும்.

இப்படி ஒரு தீர்ப்பு திமுக ஆட்சியில் வந்திருந்தால், கலைஞரை ராஜினாமா செய்யச்சொல்லி ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருப்பார். ஆனால் நாங்கள் அப்படி சொல்ல மாட்டோம். நாங்கள் பெருந்தன்மையாக நடந்துகொள்வோம். மாணவர் நலனே முக்கியம்,” என்றார்.

சட்டமன்றத்திற்கு செல்வீர்களா என்றபோது, “எங்களுக்கு தனியாக இடம் ஒதுக்கீடு செய்யப்படும்வரை நாங்கள் போகப்போவதில்லை” என்றார்.

பின்னர் பாளையில் இருந்து திருச்சி செல்லும் வழியில் பாளை பேருந்து நிலையத்துக்கு வந்த மு.க.ஸ்டாலின், அங்கு இறங்கி சமச்சீர் கல்வி தொடர்பான தீர்ப்பை வரவேற்று பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்க, ஏகக் கூட்டம் கூடிவிட்டது. அனைவருக்கும் இனிப்பு வழங்கிவிட்டுச் சென்றார் ஸ்டாலின்.

70 பள்ளி நாட்கள் வீண்-ராமதாஸ்:

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சமச்சீர் கல்வி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது. சமச்சீர்கல்வி தொடர்பான விசயத்தில் தமிழக அரசின் பிடிவாதப்போக்கால் காயமடைந்திருந்த மனங்களுக்கு மருந்து போடும் வகையில் அமைந்துள்ள இத்தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மாறி மாறி மேல் முறையீடு செய்தது. இதன்மூலம் ஒரு கோடியே 20 லட்சம் மாணவர்கள் கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாக பாடம் படிக்க முடியாத நிலையை ஏற்படுத்தியது. ஒருபுறம் வழக்குக்காக கோடிக் கணக்கில் மக்களின் வரிப்பணத்தை செலவழித்த தமிழக அரசு, இன்னொருபுறம் பழைய பாடத்திட்டத்தின் படியான புத்தகங்களை அவசர அவசரமாக அச்சடிப்பதற்காக 500 கோடி ரூபாய்க்கு மேல் வீணாக செலவழித்துள்ளது.

இந்தியாவின் எதிர்காலத் தூண்களான மாணவர்களின் நலனின் அக்கறையின்றி செயல்பட்டு, 70 பள்ளி வேலை நாட்களும் ரூ.500 கோடிக்கும் அதிகமான மக்களின் வரிப்பணமும் வீணடிக்கப்படுவதற்கு காரணமான அனைவரும் இதற்கு தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்,” என்று கூறியுள்ளார்.

பொதுப் பள்ளி முறை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் விடுத்துள்ள அறிக்கையில், “உச்சநீதிமன்ற தீர்ப்பை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு வரவேற்கிறது. பொதுப்பாடத்திட்டத்தை அனைத்துப்பள்ளிகளிலும் இவ்வாண்டே நடைமுறைப்படுத்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மார்க்சிஸ்டு கட்சி வலியுறுத்துகிறது.

சமச்சீர் கல்வி என்பது பொதுப்பாடத்திட்டம் மட்டு மல்ல. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் கட்டமைப்பை மேம்படுத்துவது, ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் 1:30 என்கிற வகையில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது, அனைத்து பள்ளி வாரியங்களையும் இணைத்து ஒரே பள்ளி வாரியத்தை உருவாக்குவது உள்ளிட்ட முத்துக் குமரன் பரிந்துரைகளை உடனடியாக நிறைவேற்றி பொதுப் பள்ளியை நோக்கி தமிழக பள்ளி கல்வி முன்னேற ஆவண செய்ய வேண்டுமென்று தமிழக அரசை மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி வலியுறுத்துகிறது,” என்று கூறப்பட்டுள்ளது.

கூகுள் + ஐ மொபைலில் பயன்படுத்துவது எப்படி?

மீபகாலமா ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் இணைய ரசிகர்களிடையே தவிர்க்க முடியாத ஒரு களமாக இருந்துட்டு வருது. எகிப்துல மக்கள் புரட்சி நடக்க மிக முக்கிய பங்காளனா இருந்தது இந்த ரெண்டு சமூக வலைத் தளங்களும்தான்.

இணைய பாவனையாளர்களிடம் இந்த சமூக வலைத்தளங்களுக்கு இருக்குற கிராக்கியை பார்த்துட்டு கூகுள் நிறுவனம் சமீபத்தில் அறிமுகப்படுத்திய ஒரு புதிய சோஷியல் நெட்வொர்க் தளம் தான் ‘கூகுள் பிளஸ்’.

இப்போ சோதனை ஓட்டமா இதை அறிமுகப்படுத்தியிருக்குது கூகுள்.காரணம் கூகுளோட ரசிகர்கள் இதுல ஏதேனும் குறைகளை சொன்னா அதை நிவர்த்தி பண்ணி அப்புறமா ஒரு முழுமையான தளமா குடுக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கு. கூடிய சீக்கிரம் இதுல இருக்குற சின்ன சின்ன குறைகளை எல்லாம் நிவர்த்தி பண்ணி ஃபேஸ்புக், டிவிட்டருக்கு நிகரா ‘கூகுள் பிளஸ்’ வரும்னு நாம நம்பலாம்.

ஜிமெயிலை அறிமுகப்படுத்தின புதுசுல எப்படி அதை ஏற்கனவே யூஸ் பண்ணுற ஒருத்தர் நம்மளை இன்வைட் பண்ணினா அதை பயன்படுத்த முடியும்கிற மாதிரி கூகுள் பண்ணிச்சோ அதே நிலமை தான் கூகுள் பிளஸ்க்கும். ஆமாம்,நா ம கூகுள் பிளஸ் தளத்தை முழுமையா பயன்படுத்தனும்னா அதை ஏற்கவே யூஸ் பண்ணுற நண்பர் யாராவது ஒருத்தர் நமக்கு இமெயில்ல இன்வைட் அனுப்பனும். அப்போதாம் நாம யூஸ் பண்ண முடியும்.

சரி டெஸ்க்டாப், லேப்டாப்ல கூகுள் பிளஸ் ஈசியா பயன்படுத்தலாம். மொபைல்ல அது சாத்தியமா? கண்டிப்பா சாத்தியம் தான். ஆனா அதிலேயும் இன்னும் முழுமை இல்லை. இருந்தாலும் முடிஞ்சவரைக்கும் மொபைல்ல ‘கூகுள் ப்ளஸ்’ ஐ எப்படி பயன்படுத்தலாம்னு இங்க பாக்கலாம்.

நீங்க ஆன்ட்ராய்டு ஒ.எஸ் உள்ள மொபைல்ல 2.1 இல்லேன்னா அதுக்கும் மேல உள்ள வெர்ஷன் வெச்சிருந்தீங்கன்னா முதல்ல உங்களோட ஆன்ட்ராய்டு மார்க்கெட்டை அப்டேட் பண்ணிட்டு அங்க இருக்குற சர்ச் பாக்ஸ்ல google+ ன்னு டைப் பண்ணி தேடுனீங்கன்னா வர்ற அப்ளிகேஷன்கள்ல முதல் அப்ளிகேஷன் அதுவாத்தான் இருக்கும். அதை கிளிக் பண்ணி இன்ஸ்டால் பண்ணி நீங்க ‘கூகுள் பிளஸ்’ ஐ யூஸ் பண்ண ஆரம்பிக்கலாம்.

ஆனா இப்போதைக்கு அமெரிக்காவுல இருக்குற ஆன்ட்ராய்டு மொபைல்களுக்கு மட்டும் தான் இந்த தனிப்பட்ட அப்ளிகேஷனை தரவிறக்கம் செய்யக்கூடிய வசதி இருக்குன்னு கூகுள் சொல்லியிருக்கு. மத்த நாட்டுல உள்ளவங்க நம்ம மொபைலோட ப்ரௌசர்ல m.google.com/plusன்னு அட்ரஸ் டைப் பண்ணி கூகுள் பிளஸ் யூஸ் பண்ண முடியுமாம்.

அதெப்படி அவங்க மட்டும் தனி அப்ளிகேஷனா பயன்படுத்தலாம். நம்மளால முடியாதான்னு நீங்க கேக்கலாம். கண்டிப்பா முடியும். எப்படி? ரொம்ப சிம்பிள், உங்க கணிணியில ஆன்லைன்ல போயிட்டு இந்த லிங்கை கிளிக் பண்ணுங்க, அப்புறமா ஓபன் ஆகுற பக்கத்துல நடுவுல view ன்னு இருக்குறதை கிளிக் பண்ணுனா உங்க ஆன்ட்ராய்டு போனுக்கான ‘கூகுள் பிளஸ்’ அப்ளிகேஷன் டவுன்லோடு ஆகும். அதை அப்படியே உங்க மொபைல இன்ஸ்டால் பண்ணி நீங்க ‘கூகுள் பிளஸ்’ஐ பயன்படுத்தலாம்.

இப்போதைக்கு ஆன்ட்ராய்டு ஒ.எஸ் மொபைல்களுக்கும், ஆப்பிள் ஐ-போனுக்கு மட்டும் தான் இந்த தனி அப்ளிகேஷன் வந்திருக்கு. ஆப்பிள் ஐ-போனுக்கு அப்ளிகேஷன் தரவிறக்கம் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்க. சிம்பியன் ஓ.எஸ், பிளாக்பெர்ரி ஓ.எஸ்,விண்டோஸ் மொபைல் ஓ.எஸ் போன்ற மற்ற மொபைல் ஓ.எஸ்களுக்கு இன்னும் தனி அப்ளிகேஷன் வரல. இதுலேயும் மொபைல்ல இருக்குற ப்ரௌசர்ல போயி m.google.com/plus ன்னு அட்ரஸ் டைப் பண்ணி மட்டும் தான் ‘கூகுள் ப்ளஸ்’ ஐ யூஸ் பண்ண முடியும். இந்த ஓ.எஸ் களுக்கான ‘கூகுள் ப்ளஸ்’ தனி அப்ளிகேஷனும், எஸ்.எம்.எஸ் மூலமா ‘கூகுள் ப்ளஸ்’ ஐ பயன்படுத்துற வசதியும் கொஞ்சம் லேட்டா வரும்.

THANKS-சக்திவேல்

07 ஆகஸ்ட் 2011

வீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் அனுப்புவதற்கு

வீடியோ மின்னஞ்சலை ஓன்லைன் மூலம் சில நிமிடங்களில் எந்த மென்பொருள் உதவியும் இல்லாமல் இணைய உலாவி வழியாகவே இலவசமாக அனுப்பலாம். சில நேரங்களில் நாம் என்ன தான் மின்னஞ்சல் மூலம் ஒரு செய்தியை புரிய வைப்பதற்கும் ஒரே ஒரு முறை நேரில் சந்தித்து புரிய வைப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது.

அந்த வகையில் இன்று நாம் சொல்ல வேண்டிய செய்தியை வெப் கமெரா மூலம் பேசி வீடியோ மின்னஞ்சலாக உடனடியாக அனுப்பலாம்.

இத்தளத்திற்கு சென்று Record என்று இருக்கும் பச்சை கலர் பொத்தானை சொடுக்கி நம் வெப் கமெரா மூலம் சொல்ல வேண்டிய செய்திகளை கூறலாம். Record என்ற பொத்தானை சொடுக்கியவுடன் பேசி முடித்ததும் Stop என்ற பொத்தானை சொடுக்கி உரையை நிறைவு செய்யலாம்.

அடுத்து Play என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி நாம் என்ன பேசினோம் என்பதை பார்த்து எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில் Send Video email என்ற பொத்தானை சொடுக்கி வரும் திரையில் யாருக்கு அனுப்ப வேண்டுமோ அவரின் மின்னஞ்சல் முகவரி மற்றும் நம் மின்னஞ்சல் முகவரி, பெயர், வாழ்த்து செய்தி ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் Additional text என்பதில் தட்டச்சு செய்து Send mail என்பதை சொடுக்கி அனுப்பலாம்.

அதில் Notify me when this message read என்ற செக்பொக்ஸ் தேர்வு செய்திருந்தால் அவர்கள் உங்கள் வாழ்த்துச்செய்தியை படித்ததும் உங்களுக்கு அதை தெரியப்படுத்துவதற்காக ஒரு மின்னஞ்சல் வரும்.

பெரிய அளவிலான கோப்புகளை இணையம் வழியாக அனுப்புவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் பெருமளவு மிச்சமாகும். வாழ்த்துச்செய்தியை கூட இனி வீடியோ மின்னஞ்சலாக அனுப்பலாம்.

இணையதள முகவரி

பிரபல IT நிறுவனங்களின் பெயர்கள் உருவான விதம்

தகவல் தொழில் நுட்பம் மற்றும் கம்ப்யூட்டர் துறையில் பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஒரு சில நிறுவனங்களின் பெயர்கள் நாம் அன்றாடம் சொல்லும் நிறுவனப் பெயர்களாக மாறி உள்ளன. ஆனால் எந்தக் கணமேனும் இந்த நிறுவனங்கள் எப்படி அந்தப் பெயர்களைப் பெற்றன என்று யோசித்துப் பார்த்திருப்போமா! இதோ இப்போது பார்ப்போமா!

1.அடோப் (ADOBE): இந்த பெயர் ஒரு நதியின் பெயர். இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர்களின் ஒருவரான ஜான் வார்நாக் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் லாஸ் ஆல்டாஸ் என்ற பகுதியில் வசிக்கிறார். இவரின் வீட்டிற்குப் பின்புறம் இந்த அடோப் நதி ஓடுகிறது.

2. ஆப்பிள் (APPLE): ஆப்பிள் நிறுவனத்தின் முதல் இலச்சினை வாசகம் என்ன தெரியுமா! – "Bite into an Apple" என்பதுதான். இதுதான் இந்நிறுவனத்தின் ஸ்லோகன் ஆக இருந்தது. ஆனால் இந்நிறுவனத்தின் மிகப் புகழ் பெற்ற ஸ்லோகன் "Think Different" என்பதே. எனவே இரண்டையும் கலந்து, வித்தியாசமான முறையில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஆப்பிள் நிறுவனத்தை நிறுவிய ஸ்டீவ் ஜாப்ஸ் அவரின் நிறுவனத்தை ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என வைத்திருக்க வேண்டும். ஜாப்ஸ் மற்ற நண்பர்களுடன் சேர்ந்து ஆப்பிள்களை உற்பத்தி செய்திடும் பண்ணையில் முதலில் வேலை பார்த்து வந்தாராம். அவர் நண்பர்களுடன் தன் புதிய கம்ப்யூட்டர் கம்பெனிக்குச் சரியான பெயரை அவரின் நண்பர்கள் தரவில்லை என்றால் கம்பெனிக்கு ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்று பெயர் வைத்து விடுவேன் என்று செல்லமாகவும் வேடிக்கைக்காகவும் மிரட்டி உள்ளார். ஆனால் அவரின் நண்பர்களால் வேறு எந்த மிக நல்ல பெயரையும் கொடுக்காத நிலையில் ஆப்பிள் கம்ப்யூட்டர்ஸ் என்பதே பெயரானது. அதுவே சரித்திரத்திலும் நிலைத்துவிட்டது என்பது நாம் அறிந்த வரலாறு.

3. கூகுள் (GOOGLE): சர்ச் இஞ்சின் கொண்ட நிறுவனத்தை நிறுவிய போது, இதில் தேடப்படும் தகவல்களின் எண்ணிக்கை 1 போட்டு அதன் பின் 100 சைபர்கள் கொண்ட எண்ணாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் "Googol" என்ற சொல்லை முதலில் வைத்தனர். இந்த சொல் நம் ஊர் லட்சம், கோடி என்பது போல, மேலே சொன்ன எண்ணைக் குறிக்குமாம். ஆனால் இந்த சொல்லை எழுதுகையில் அதில் ஸ்பெல்லிங் மிஸ்டேக் ஏற்பட நமக்கு "Google" என்ற பெயர் கிடைத்தது. அது கூட இந்நிறுவனத்தை ஏற்படுத்தியவர்களால் ஏற்படுத்தப்பட வில்லை. ஸ்டான்போர்டு பல்கலைக் கழகத்தில் படித்த செர்ஜி பிரின் மற்றும் லாரி பேஜ் ஆகியோரால் தான் கூகுள் தொடங்கப்பட்டது. இவர்கள் இதனைத் தொடங்குவதற்கான ப்ராஜக்ட் ரிப்போர்ட்டினைத் தயாரித்து, ஒரு முதலீட்டாளரிடம் கொடுத்து நிதி உதவி கேட்டுள்ளனர். அவர் நிதி உதவி வழங்குகையில் தந்த செக்கில் "Google"" எனத் தவறாக எழுதப்போய், தானம் கொடுத்த மாட்டின் பல்லைப் பிடித்துப் பார்க்க வேண்டாம் என இருவரும் நினைத்து அந்த தவறான ஸ்பெல்லிங்குடனே நிறுவனத்தைத் தொடங்கி இன்று மனித இனத்தின் சிந்தனைப் போக்கினையே மாற்றிவிட்டனர்.

4.ஹாட் மெயில் (HOTMAIL): இந்த நிறுவனத்தைத் தொடங்கியவர் ஜாக் ஸ்மித். இணையம் வழியாக இமெயில்களைப் பெறும் வழி குறித்து முதலில் யோசித்துள்ளார். அதாவது இணைய இணைப்பு தரும் இன்டர்நெட் சர்வீஸ் புரவைடர் துணையின்றி, அவர்கள் சர்வரில் இடம் கேட்டு வாங்கி, இமெயில் பெறும் பழக்கத்தை மாற்றி வெப் சர்வரை அடைந்து மெயிலைப் பெறும் வழி குறித்துப் பல காலம் சிந்தித்து ஹாட்மெயிலை வடிவமைத்தார். ஹாட் மெயிலின் இன்னொரு நிறுவனரான, இந்தியரான, சபீர் பாட்டியா இதற்குப் பல பெயர்களை எழுதிப் பார்த்தார். எந்த பெயராக இருந்தாலும் அது மெயில் (MAIL) என முடிய வேண்டும் என்பதில் தீர்மானமாக இருந்தார். இறுதியாக HOTMAIL என்ற பெயரே போதும் என முடிவுக்கு வந்தார். ஏனென்றால் இணையத்தில் வெப் பக்கங்களில் பயன்படுத்தப்படும் புரோகிராமிங் மொழியினை HTML Hyper Text Markup Language என அழைக்கிறோம். HOTMAIL என்பதில் HTML இருப்பதால் அதுவே இருக்கட்டும் என முடிவு செய்து ஹாட் மெயில் என அழைத்தார். 1996 ஜூலை 4ல் இது அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் இது HoTMaiL என சின்ன எழுத்தும் குறிப்பிட்ட சில பெரிய எழுத்துமாக அமைக்கப்பட்டே பயன்படுத்தப்பட்டு வந்தது. பின் நாளில் இது வழக்கமாக எழுதும் முறையில் அமைக்கப்பட்டது. 5. இன்டெல் (INTEL): இந்த நிறுவனத்தை நிறுவியவர்கள் பாப் நாய்ஸ் மற்றும் கார்டன் மூர் (Bob Noyce and Gordon Moore) என்பவர்களாவர். அவர்கள் தங்களின் புதிய நிறுவனத்தை "Moore Noyce" என அழைக்க முதலில் முடிவு செய்தனர். ஆனால் பின்னர் பார்க்கையில் இந்த பெயர் ஹோட்டல்கள் பல அடங்கிய ஒரு குரூப்பிற்கு இருப்பது தெரியவந்தது. அந்த பெயர் அந்த நிறுவனத்தால் பதியப்பட்டது தெரியவந்ததால் வேறு பெயரைச் சிந்திக்கத் தொடங்கினார்கள். அப்போது to ‘more noise’ என இருக்கட்டுமே என்று யோசித்தனர். ஆனால் ஒரு செமி கண்டக்டர் நிறுவனத்திற்கு இந்தப் பெயர் தவறான பொருளைத் தரும் என தவிர்த்துவிட்டனர். பின் முதல் ஓராண்டிற்கு NM Electronics என்ற பெயரைப் பயன்படுத்தினர். அதன் பின் INTegrated Electronics என்ற பெயரைச் சுருக்கி INTEL எனப் பெயர் வைத்தனர். அப்படியே அந்தப் பெயர் இன்றளவும் உலகில் புகழ் பெற்ற ஒரு பெயராக இருந்து வருகிறது. 6. மைக்ரோசாப்ட் (MICROSOFT)

பில் கேட்ஸின் இந்த நிறுவனம் மைக்ரோசாப்ட் எனப் பெயர் பெற்ற நிகழ்ச்சி மிகச் சாதாரணமான ஒன்றாகும். Microcomputer மற்றும் Software என்ற இரண்டையும் இணைத்து இந்த பெயர் உருவாக்கப்பட்டது. முதலில் பில் கேட்ஸ் தன் சகா பால் ஆலன் என்பவருக்கு 1975 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ல் எழுதிய கடிதத்தில் MicroSoft எனப் பிரித்து இடைக் கோடிட்டு எழுதினாராம். அதன் பின் இருவரும் சேர்ந்து தங்கள் நிறுவனத்திற்கு இன்றைய பெயரை 1976 நவம்பர் 26ல் பதிவு செய்திருக்கின்றனர். இடையே இருந்த இடைக்கோடு காலப்போக்கில் நீக்கப்பட்டு MICROSOFT என ஒரே பெயராகப் பின்னர் உருவானது. அதுவே உலக மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்ட நிறுவனத்தின் பெயராக அமைந்தது.

7. யாஹூ (YAHOO): தொடக்கத்தில் இந்த நிறுவனத்தின் பெயர் "Jerry and David’s Guide to the World Wide Web" என்பதாக இருந்தது. 1994ல் யாஹூ என்ற பெயருக்கு மாறியது. ஜொனதன் ஸ்விப்ட் என்பவர் எழுதிய கல்லிவரின் பயணங்கள் என்ற நாவலில் "Yet Another Hierarchical Officious Oracle" என்ற சொல் தொடரின் சுருக்கமாக YAHOO என்பதைப் பயன்படுத்தினார். இந்த பெயர் மிக முரட்டுத்தனமான, நாகரிகம் மற்றும் பண்பாடு தெரியாத இளைஞனைக் குறிக்கும். யாஹூ நிறுவனத்தைத் தொடங்கிய ஜெர்ரியங் மற்றும் டேவிட் பைலோ ஆகிய இருவரும் தாங்கள் அப்படிப்பட்ட இளைஞர்கள் என்று தங்களைத் தாங்களே வேடிக்கையாகக் குறிப்பிட்டுக் கொண்டு இந்த பெயரையே தங்கள் நிறுவனத்திற்கும் தேர்ந்தெடுத்தனர்.

ஆட்சி மாற்றம் பற்றி அஜீத் பரபரப்பு கருத்து!

ஆட்சி மாற்றம் பற்றி நடிகர் அஜீத் பரபரப்பு கருத்து தெரிவித்துள்ளார். டைரக்டர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் அஜீத் ஹீரோவாக நடித்திருக்கும் மங்காத்தா படம் விரைவில் ரிலீஸ் ஆகவிருக்கிறது. இதையொட்டி பத்திரிகைகளுக்கு சிறப்பு பேட்டியளித்து வரும் அஜீத், தனது எண்ணங்களை பகிர்ந்து கொண்டு வருகிறார். அவர் அளித்துள்ள பேட்டியொன்றில் ஆட்சி மாற்றம் பற்றிய கேள்விக்கு தனது கருத்தினை பதிலாக தெரிவித்திருக்கிறார். என்னுடைய கடமை... ஓட்டுப் போடுவது.

நான் அதை ஒழுங்கா செய்து வருகிறேன். மக்களின் மனதுக்கு ஏற்ப ஆட்சி மாற்றங்கள் நடக்கிறது, ரெகுலரான விஷயம்தானே? நான் ஒரு நடிகனா இருந்துட்டு, என்னுடைய சொந்த அரசியல் கருத்துகளை வெளிப்படையா சொல்ல முடியாது. அப்புறம் என்னை, இவங்க ஆள், அவங்க ஆள்னு முத்திரை குத்திடுவாங்க, என்று அஜீத் கூறியிருக்கிறார். ரசிகர் மன்றத்தை கலைத்தது பற்றிய கேள்விக்கு, இதுதான் காரணம்னு சொல்ல முடியாது.

அதை இப்போ போஸ்ட்மார்ட்டம் பண்ண விரும்பலை. நான்தான் பெரிசாப் படிக்கலை. ஆனால், என் ரசிகர்கள் நல்லாப் படிக்கணும்னு விரும்புறேன். படிங்க, வேலைக்குப் போங்க. உங்களுடைய தினசரி வேலைகளைப் பாருங்க. என் படம் நல்லா இருந்தா, தியேட்டரில் வந்து பாருங்க. அது போதும், என்று பதில் அளித்திருக்கிறார் அஜீத்!

டெஸ்ட் ஆட்டத்தில் 1000 விக்கெற் வீழ்த்த விரும்பிய முரளி!

டெஸ்ட் ஆட்டத்தில் 1000 விக்கெற்றுக்களை வீழ்த்துகின்றமை குறித்து கடந்த வருடம் பரிசீலித்து இருந்தார் என்று தெரிவித்து உள்ளார் உலகின் தலை சிறந்த பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன். இவர் கடந்த வருடம் ஜூலை மாதம் டெஸ்ட் ஆட்டத்தில் 800 ஆவது விக்கெற்றை வீழ்த்தி இருந்தார். டெஸ்ட் ஆட்டத்தில் அதிக விக்கெற்றுக்களை வீழ்த்திய வீரர் என்கிற சாதனையை இதன் மூலம் நிலைநாட்டினார். இந்திய அணிக்கு எதிரான ஆட்டம் இலங்கையில் காலி மைதானத்தில் இடம்பெற்றபோது பிரக்ஜான் ஓஜாவின் விக்கெற்றை கைப்பற்றி இச்சாதனையை புரிந்தார். இவர் இந்திய அணியுடனான ஆட்டத்தைத் தொடர்ந்து டெஸ்ட் கிறிக்கெற்றில் இருந்து ஓய்வு பெறுவார் என்று இச்சாதனைக்கு முன்கூட்டியே அறிவித்து இருந்தார். ஆனால் 800 விக்கெற்றுக்களை கைப்பற்றுகின்றமைக்கு வெறும் 08 விக்கெற்றுக்கள் மாத்திரம் இருக்கின்றன என்கிற நிலை ஏற்பட்டதில் இருந்து 1000 விக்கெற்றுக்களை வீழ்த்துகின்ற வரை தொடர்ந்து டெஸ்ட் ஆட்டத்தை விளையாடினால் என்ன? என்று இவருக்கு மனது தடுமாற தொடங்கி இருக்கின்றது. ஓய்வை பிற்போடுகின்றமை குறித்து பரிசீலித்து இருக்கின்றார். ஆனால் 1000 விக்கெற்றுக்களை வீழ்த்துகின்றமைக்கு குறைந்தது 43 வயது வரையேனும் டெஸ்ட் ஆட்டத்தில் ஈடுபட வேண்டி இருக்கும் என்று கணக்குப் பார்த்துக் கொண்டார். உடல் நிலை இடம் கொடுக்குமா? என்று யோசித்துப் பார்த்தார். பின் 1000 விக்கெற்றுக்களை வீழ்த்துகின்ற கனவை ஒரு புறம் வைத்து 800 விக்கெற்றுக்களை வீழ்த்திய வீரர் என்கிற பெருமையுடன் டெஸ்ட் கிறிக்கெற்றில் இருந்து ஓய்வு பெற்றுக் கொண்டார்.

06 ஆகஸ்ட் 2011

ஜிமெயிலில் புது வசதி: Preview Pane

தகவல் தொடர்பு சாதனங்களில் முக்கிய பங்கு வகிப்பது மின்னஞ்சல்கள் (ஈமெயில்கள்). நம்மில் பலருக்கு அதிகமான மின்னஞ்சல்கள் வரும். அவற்றில் தேவையில்லாத மெயில்களும் வரும். ஒவ்வொரு மின்னஞ்சல்களையும் திறந்து திறந்து படிக்கணும் என்றால் (என்னை போன்றவர்களுக்கு) கொஞ்சம் சிரமம் தான். நம்முடைய சிரமத்தைக்(?) கண்ட ஜிமெயில் தற்போது Preview Pane என்னும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது Microsoft Office Outlook-ல் உள்ளது போன்றாகும்.
உங்களுக்கு வந்துள்ள மின்னஞ்சல்களுக்கு வலது புறம் ஒரு Window இருக்கும். இடது புறம் உள்ள மின்னஞ்சல்களில் எதை க்ளிக் செய்கிறீர்களோ, அதனை வலது புறம் உள்ள விண்டோவில் படிக்கலாம், அங்கிருந்தே அந்த மெயில்களுக்கு பதில் அனுப்பலாம், மெயில்களை அழிக்கலாம். இந்த வசதியை பெற: 1. முதலில் https://mail.google.com/mail/#settings/labs (Gmail Lab)சென்று, அங்கு Preview Pane என்னும் Gadget-ஐ தேடவும். 2. பிறகு அந்த gadget-ல் Enable என்பதை தேர்வு செய்து, Save Changes என்னும் பட்டனை க்ளிக் செய்யவும்.
3. பிறகு உங்களுக்கு புது விண்டோ தெரியும். மின்னஞ்சல்களில் எதையாவது க்ளிக் செய்தால், அது வலது புறம் தெரியும். அவ்வளவு தான்..! மீண்டும் பழைய மாதிரியே வேண்டுமானால், மின்னஞ்சல்களுக்கு மேலே வலது ஓரம் Toggle split Pane Button இருக்கும். அதை க்ளிக் செய்து எப்பொழுது வேண்டுமானாலும் மாறிக்கொள்ளலாம்.
அவ்வாறு வரும் Preview window-வை இரண்டு விதமாக பார்க்கலாம். Toggle பட்டனுக்கு பக்கத்தில், Drop Down Arrow-வை க்ளிக் செய்தால் மூன்று விருப்பங்கள் வரும்.
No Split - ப்ரிவீவ் விண்டோ இல்லாமல் சாதாரணமாக பார்க்க Vertical Split - வலது புறம் ப்ரிவீவ் பார்க்க Horizontal Split - கீழே ப்ரிவீவ் பார்க்க இனி என் போன்றவர்களுக்கு மின்னஞ்சல்கள் படிப்பது எளிதாகிவிடும்.

“பிரபாகரனுடன் யுத்தத்தின் இறுதிவரை தொடர்பில் இருந்தேன்

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் முன்னாள் முக்கியஸ்தர் குமரன் பத்மநாதன் (கே.பி.), ஸ்ரீலங்கா ராணுவத்துக்கும் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் இறுதிவரை, பிரபாகரனுடன் தொடர்பில் இருந்ததை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த விஷயம் பற்றி ஒரு சர்ச்சை இருந்துவந்த நிலையில், இவரது கூற்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
கே.பி. நேற்று வழங்கிய பேட்டி ஒன்றில், “யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில், விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனுடன் தொடர்பை ஏற்படுத்த முடியாத காரணத்தால், புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசனுடன் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டியிருந்தது என்று கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானதே?” என்ற கேள்விக்கு பதில் அளித்திருந்தார். அந்தப் பேட்டியில்தான், இந்த விஷயத்தை அவர் உறுதிப்படுத்தியுள்ளார். “நான் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருந்தது. சில சமயங்களில் நான் நடேசன் ஊடாக பிரபாகரனுடன் தொடர்புகளை வைத்திருந்தது உண்மைதான். அவை அந்தந்த சூழ்நிலையைப் பொறுத்த விஷயம். யுத்தம் மிக உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் அது. இதனால், பிரபாகரனுடன் நீண்டநேரம் பேச முடியாத சூழ்நிலை ஏற்பட்டிருந்தது. அப்படியான சந்தர்ப்பங்களில் நடேசன் மூலமாக தகவல்களை அனுப்பியிருக்கின்றேன். அதற்காக, பிரபாகரனுடன் நான் நேரடித் தொடர்பில் இருக்கவில்லை என்று அர்த்தமல்ல. யுத்தத்தின் இறுதிவரை அவருடன் நான் தொடர்பில் இருந்தேன். அதுதான் உண்மை” என்றும் தெரிவித்துள்ளார். யுத்தத்தின் இறுதி நாட்களில் நடந்தவற்றை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்த வகையில் சேனல்-4ல் வெளியான காட்சிகள் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு அவர் கூறிய பதில் ஆச்சரியமானது. இந்தக் கேள்விக்கான பதில் என்ன தெரியுமா? கொழும்பில் இந்தப் பேட்டி பதிவு செய்யப்பட்ட அதே தினத்தில், புதுடில்லியில் இந்திய நாடாளுமன்றத்தில் வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருப்பதும், இந்தப் பதிலும் கிட்டத்தட்ட ஒரே விஷயம்தான். “அது இப்போது முக்கியமல்ல. தற்போது அங்கிருக்கும் தமிழர்களுக்குத் தேவையான புனரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதே முக்கியம்” தற்போது, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில், ஸ்ரீலங்கா பற்றிய நிலைப்பாடும் இதுதான்! நன்றி விறுவிறுப்பு .காம்.

ரஜினி - தனுஷ் இணைந்து நடிப்பார்களா? - ஐஸ்வர்யா பதில்

கணவர் தனுஷை வைத்து தான் இயக்கும் முதல் படத்துக்கு 3 என்று வித்தியாசமாக பெயர் சூட்டியுள்ளார் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இந்தப் படம் குறித்து அறிமுகம் செய்வதற்காக வெள்ளிக்கிழமை பிற்பகல் செய்தியாளர்களைச் சந்தித்தனர் ஐஸ்வர்யாவும் தனுஷும். நாயகி அமலா பாலும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். இந்த சந்திப்பில் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு ஐஸ்வர்யா மற்றும் தனுஷும் அளித்த பதில்களும்: கேள்வி: எந்த நம்பிக்கையில்ஒரு இயக்குநராக களமிறங்குகிறீர்கள்? ஐஸ்வர்யா: என் கதையைக் கேட்ட அப்பா, அந்தப் படத்தை தானே தயாரிக்க விரும்புவதாகக் கூறினார். அந்த அளவு அவருக்கு நம்பிக்கை தந்த ஸ்கிரிப்ட் இது. இப்போது என் மாமனார் தயாரிக்கிறார். கேள்வி: உங்கள் மனைவி ஐஸ்வர்யா ஒரு இயக்குநராக உங்களை விரட்டி வேலை வாங்குகிறாரா, அன்பாக வேலை வாங்குகிறாரா? தனுஷ்: விரட்டியும் வேலை வாங்குகிறார். அன்பாகவும் வேலை வாங்குகிறார். நான் மற்ற இயக்குநர்களின் படங்களில் எப்படி வேலை செய்கிறேனோ, அப்படித்தான் இந்தப் படத்திலும் வேலை செய்கிறேன். கேள்வி: உங்களுக்கு தனுஷ் உதவியாக இருக்கிறாரா? ஐஸ்வர்யா: படப்பிடிப்பு தளத்தில் அவர் நடிகர். நான் இயக்குநர். என் வேலையில் அவர் தலையிடுவதில்லை. வீட்டில் எனக்கு உதவியாக இருக்கிறார். குழந்தைகளை பார்த்துக்கொள்வதில் எனக்கு ரொம்ப உதவியாக இருக்கிறார். கேள்வி: இந்த படத்தின் கதை தனுஷுக்காக எழுதப்பட்டதா? ஐஸ்வர்யா: எங்க வீட்டில் இரண்டு நடிகர்கள் இருக்கிறார்கள். கதை எழுதும்போது இரண்டு பேருமே நினைவுக்கு வருவார்கள். இந்த கதையை பொறுத்தவரை தனுஷை மனதில் வைத்து எழுதப்பட்டதுதான். ரஜினி நடிப்பாரா? கேள்வி: இந்த படத்தில் தனுஷூடன் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இணைந்து நடிக்க வாய்ப்பு இருக்கிறதா? ஐஸ்வர்யா: இல்லை. அப்பாவிடம் நான் இதுபற்றி பேசவே இல்லை. கேள்வி: அமலா பால்தான் ஹீரோயின் என்பதை நீங்கள் முடிவு செய்தீர்களா? தனுஷா? ஐஸ்வர்யா: நான்தான் ('சொன்னா நம்புங்க... நான் இதிலெல்லாம் தலையிடுவதில்லை' என்கிறார் தனுஷ்!). கேள்வி: படத்தை இயக்குவது சிரமமாக இருக்கிறதா, சுலபமாக இருக்கிறதா? ஐஸ்வர்யா: படம் இயக்குவது சுலபம் இல்லை. நிறைய பொறுப்புகளை தோளில் சுமக்க வேண்டியிருக்கிறது. செல்வராகவன்தான் குரு: கேள்வி: படம் இயக்குவதைப் பொறுத்தவரை உங்களுக்கு குரு யார்? பதில்: செல்வராகவனிடம் இரண்டு படங்களில் உதவி இயக்குநராக இருந்தேன். நிறைய விஷயங்களை அவர் எனக்கு கற்றுத் தந்தார். அந்த வகையில் செல்வராகவன்தான் என் குரு. கேள்வி (தனுஷிடம்): சமீபத்தில் விரதம் இருந்து சபரிமலை சென்றீர்களே... என்ன வேண்டுதல்? தனுஷ்: வேண்டுதலை வெளியில் சொல்லக்கூடாது. கேள்வி: நீங்கள் படம் இயக்குவதாக கூறி வந்தீர்கள். இப்போது உங்கள் மனைவி ஆகிவிட்டார். உங்கள் ஆசையை உங்கள் மனைவி மூலம் நிறைவேற்றிக் கொள்கிறீர்களா? தனுஷ்: எனக்கு முன்பே இயக்குநராகும் திட்டத்தோடு இருந்தவர் ஐஸ்வர்யா. அவர் இயக்குநரானதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நான் இயக்குநராவது குறித்து எதுவும் முடிவு செய்யவில்லை. -இவ்வாறு இருவரும் பதிலளித்தனர்.

சல்மானுக்கு முத்தம் கொடுத்தது உண்மைதான்!

ரெடி படத்தில் சல்மான்கானுக்கு ஒரு காட்சியில் முத்தம் கொடுத்தது உண்மைதான் என நடிகை அசின் கூறியுள்ளார். இதுகுறித்து அசின் கூறுகையில், "ரெடி படத்தில் முத்தக்காட்சி உள்ளது. ஆனால் அது மற்றவர்கள் எதிர்பார்ப்பது மாதிரி ஆபாசமாக இருக்காது. என் கன்னத்தில் சல்மான்கான் முத்தமிடுவது போன்றுதான் அக்காட்சி உள்ளது. நானும் அவருக்கு முத்தம் தருவது போல அமைத்துள்ளனர். ஆனால் கவர்ச்சிக்கு அளவு வைத்துள்ளேன். அதை மீற மாட்டேன். ரெடி குடும்ப பாங்கான படம். சல்மான்கானுக்கு என்னை ரொம்ப பிடிக்கும். அவருக்கு யாராவது பிடித்து விட்டால் அவர்களுக்காக எதுவும் செய்வார்" என்றார்.

அடுத்த ஆண்டு திருமணம்... ஆனால் மணமகன் அம்ருத் இல்லை! - த்ரிஷா

ஒருவழியாக, தனக்கு அடுத்த ஆண்டு திருமணம் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார் நடிகை த்ரிஷா. அவர் கூறுகையில், எனக்கு அடுத்த ஆண்டு திருமணம் என்பது உண்மைதான். ஆனால் மணமகன் அம்ருத் அல்ல என்று கூறியுள்ளார். த்ரிஷாவின் திருமண விவகாரத்தில் அவருக்கும் அவரது அம்மாவுக்கும் மவுன யுத்தம் நடக்கிறது.

த்ரிஷாவுக்கு வயது ஏறிக் கொண்டே போவதால் எப்படியாவது சீக்கிரம் திருமணம் செய்து வைத்துவிடும் நோக்கில் மணமகன்களை அலசி வருகிறார் தாயார் உமா கிருஷ்ணன். அப்படி அவர் முடிவு செய்தவர்தான் அம்ருத் என்ற தொழிலதிபர். இவர் த்ரிஷாவின் நண்பரும் கூட. ஆனால் காதலித்துதான் திருமணம் செய்வேன் என்று தொடர்ந்து கூறிவரும் த்ரிஷா அவரது அம்மாவின் முடிவை ஏற்கவில்லை.

இதனால் த்ரிஷாவுக்கு திருமணம் என அம்மா உமா செய்தி கொடுப்பதும், அதை மறுத்து த்ரிஷா பேட்டியளிப்பதும் தொடர்ந்தது. இப்போது ஒருவழியாக அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்ள சம்மதித்துள்ளாராம் த்ரிஷா. இதுபற்றி திரிஷாவிடம் கேட்டபோது, "அடுத்த ஆண்டு என் திருமணம் நடக்கும். ஆனால் மணமகன் அம்ருத் அல்ல. அவர் என் நண்பர்தான். பல நிகழ்ச்சிகளில் நாங்கள் இருவரும் கலந்து கொண்டிருக்கிறோம். அவ்வளவுதான். எனக்கு கணவராக வருபவரை இதுவரை நான் சந்திக்கவில்லை," என்றார்.

வடிவேலு போட்ட குண்டு : விழிபிதுங்கும் சிங்கமுத்து!!

நிலமோசடியில் தனக்கு பங்கு இல்லையென்றும்; சிங்கமுத்துதான் மோசடிக்கு காரணம் என்றும் மறைமுகமாக பேசத் தொடங்கியிருக்கிறார் நடிகர் வடிவேலு. இதனால் எங்கே தன்னை மாட்டி விட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில் விழிபிதுங்கி நிற்கிறார் சிங்கமுத்து. நடிகர் வடிவேலு மீது சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ராஜேஷ்தாசிடம் ஓய்வு பெற்ற வங்கி உதவி பொது மேலாளரான அசோக் நகரைச் சேர்ந்த பழனியப்பன் சமீபத்தில் நிலமோசடி புகார் அளித்தது நினைவிருக்கலாம்.

இந்த புகாருக்கு பதில் அளித்த வடிவேலு, தான் எந்தத் தவறுமே செய்யவில்லை என்று கூறியதுடன், சிங்கமுத்து மீது மறைமுகமாக குற்றம் சாட்டி வருகிறார். வடிவேலுவின் குற்றச்சாட்டுக்கு சிங்கமுத்து சூடான பதில் அளித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், வடிவேலுவும் நானும் சண்டை இல்லாமல் ஒற்றுமையாக இருந்தபோது எனது மேற்பார்வையில் நிறைய நிலங்களை வாங்கினார். இப்படி வாங்கும் நிலங்களை நேரடியாக அவரது பெயரில் பத்திரப்பதிவு செய்ய மாட்டார்.

வருமான வரி சிக்கல் வரும் என்பதால் என் பெயரிலும், வேண்டியவர்கள் பெயரிலும் பவர் வாங்கி வைத்துக் கொள்வார். பிறகு எங்களை அழைத்து அவர் குறிப்பிடும் நபர் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொள்வார். இது போல் வாங்கிய இடங்களில் இதுவும் ஒன்று. அதில் இப்படி வில்லங்கம் இருப்பது எனக்கு தெரியாது. அவர் தான் அந்த நில உரிமையாளர் வீட்டுக்கு தினமும் சென்று பேசி குறைந்த விலைக்கு வாங்கினார். இதில் எனக்கு எந்தவித சம்பந்தமும் இல்லை. இந்த வழக்கில் என்னை பலிகடா ஆக்க வடிவேலு முயற்சிக்கிறார். அவர் மீதான குற்றங்களை ஆதாரத்துடன் வெளியிடுவேன், என்று கூறியுள்ளார்.

05 ஆகஸ்ட் 2011

ஜகத் டயசிற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டு சுமத்தி சுவிஸில் காணொளி ஒளிபரப்பு! வழக்குத் தொடரவும் முனைப்பு (Video in)

முன்னாள் உயர் படையதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் டயசிற்கு எதிராக போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி சுவிற்சர்லாந்து தொலைக்காட்சி சேவையொன்று காணொளி ஒன்றை ஒளிபரப்புச் செய்துள்ளதாக திவயின பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. சுவிற்சர்லாந்தின் எஸ்.எப்.1 என்னும் தொலைக்காட்சி அலைவரிசையில் இந்த காணொளி ஒளிபரப்புச் செய்யப்பட்டது. மேஜர் ஜெனரல் ஜகத் டயசிற்கு எதிராக போலியான போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்தி இந்த காணொளி தயாரிக்கப்பட்டுள்ளது. சுவிற்சர்லாந்து புலி ஆதரவாளர்கள், எஸ்.எப் 1 அலைவரிசையின் தலைவர் புருலோ எம்ரிக்கை சந்தித்ததன் பின்னர் இந்தக் காணொளி காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தக் காணொளி புலிகளின் தேவைக்காக ஒளிபரப்புச் செய்யப்படுவதாக சுவிஸ் வாழ் இலங்கை அமைப்பு எஸ்.எப்.1 தொலைக்காட்சிக்கு தெளிவுபடுத்திய போதிலும் அதனை அந்த தொலைக்காட்சி அலைவரிசை ஏற்றுக்கொள்ள தவறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஜகத் டயசிற்கு எதிராக வழக்குத் தொடர முனைப்பு இலங்கையின் முன்னாள் படையதிகாரி மேஜர் ஜெனரல் ஜகத் டயசிற்கு எதிராக சுவிற்சர்லாந்தில் வழக்குத் தொடர முனைப்பு எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. இரண்டு தரப்பினர் இவ்வாறு வழக்குத் தொடர்வதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜகத் டயஸ் தற்போது ஜெர்மனிக்கான இலங்கைத் தூதுவராக கடயைமாற்றி வருகின்றார். அச்சுறுத்தலுக்கான மக்கள் சமூகம் மற்றும் ட்ரயல் என்னும் இரண்டு அமைப்புக்களுமே இவ்வாறு வழக்குத் தொடரத் திட்டமிட்டுள்ளன. இது தொடர்பில் சுவிட்சர்லாந்து சட்ட மா அதிபரிடம் குறித்த அமைப்புக்கள் ஏற்கனவே முறைப்பாடு செய்துள்ளன. முன்னாள் படையதிகாரி ஜகத் டயஸ் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தியே வழக்குத் தொடரப்படவுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத் தரப்பில் எவ்வித கருத்துக்களையும் வெளியிடவில்லை.
http://www.tamilthai.com/?p=23335

யாழ் மினிகளில் காட்டப்படும் ஆபாசக்காட்சிகள்; அலைமோதும் மாணவர் கூட்டம்

யாழ் குடாநாட்டில் மாணவர்களை இலக்காகக் கொண்டு மினித் தியேட்டர்களில் ஆபாசக்காட்சிகள் காட்டப்படுகின்றன. யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரையில் மினிசினிமாத் தியேட்டர்களுக்கென்று தனி வரலாறே உண்டு.

90களில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளைகளில் தொலைக்காட்சிப் பெட்டியை வைத்து டெக்கில் ஜெனரேட்டர் மூலம் படம் காட்டுகின்ற கொட்டகைகள் யாழ்ப்பாணத்தில் இருந்தன. இவை மினிசினிமாக்கள் என்று அழைக்கப்பட்டன.

அக்காலப்பகுதிகளில் பெரும்பாலான சினிமா படங்களும் தமிழீழ விடுதலைப் புலிகளால் தயாரிக்கப்பட்ட குறும்படங்களும் போர் எழுச்சிப் படங்களும் காண்பிக்கப்பட்டு வந்தன.

அங்கு காட்டப்படுகின்ற சினிமாப் படங்களில் கூட புலிகளின் திரைப்படத் தணிக்கைக் குழுவினரால் ஆபாசக் காட்சிகள் வசனங்கள் என்பன வெட்டப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு வந்தன.

யாழில் திரையரங்குகள் இருந்தாலும் மினிசினிமாக்களும் வேறு நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட்டுவருவது யாழ் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

ஆனால் யாழ் குடாநாட்டில் தற்போது மினித்தியேட்டர்களில் ஆபாச மினிசினிமாக்கள் காட்டப்பட்டு வருகின்றமை புதிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் பல மினி தியேட்டர்கள் ஆபாசப்படம் ஓட்டியதற்காக காவல்துறையினரால் சீல் வைக்கப்பட்டாலும் யாழ் நகரப்பகுதியில் இரு மினிகள் தொடர்ந்து இயங்கிவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதில் ஒன்றுதான் கஸ்தூரியார் வீதியில் ராஜா திரையரங்கிற்கு முன்னால் இயங்கிவந்த மினி சினிமா. நெடுநாட்களாக காவல்துறையினரின் கண்களில் மண்ணைத்தூவி ஆபாசப்படங்களை இவர்கள் ஓட்டிவந்தாலும் அண்மையில் காவல்துறையினர் அந்த மினியை அடையாளம் கண்டு உரிமையாளரையும் கைதுசெய்து மினிக்கும் சீல் வைத்தார்கள்.

இரண்டாவது “செல்வா மினி”. இந்த பெயரைத் தெரியாத மாணவர்களே இருக்கமுடியாது.

அவ்வளவு பிரபலம் வாய்ந்தது. ஸ்ரான்லி வீதியில் அமைந்திருக்கிறது இந்த சினிமாக் கொட்டகை.

இந்த மினியில் வார இறுதி நாட்களில் கூட்டம் அலைமோதும். காரணம் இந்த மினிக்கு அருகாமையில் நான்கு பிரபல தனியார் கல்வி நிலையங்கள் அமைந்துள்ளன.

அதிலும் இந்த கல்விநிலையங்கள் பஸ் ஸ்ராண்டிற்கு அருகில் அமைந்திருப்பதால் வெகு தொலைதூரங்களில் இருந்து வரும் மாணவர்கள்தான் இங்கு அதிகம்.

இவ்வாறு தொலை தூரங்களில் இருந்து கல்வி கற்பதற்காக வரும் மாணவர்களை கவர்ந்திழுத்து பெரு லாபம் ஈட்டிவருகிறார்கள் இவர்கள்.

அதுவும் மாணவர்களை கவர்ந்திழுக்க இவர்கள் கையாளும் தந்திரம் கட்அவுட். முன்னர் மினிக்கு முன்னாலும் பழைய வின்சர் திரையரங்கிற்கு முன்னும் கட் அவுட்டை வைத்தார்கள்.

இப்போது வின்சர் தியேட்டரில் “சதோசா’ இயங்குவதால்; அங்கு வைக்கமுடியாது போய்விட்டது.

கட் அவுட் கூட பார்ப்பதற்கு ஆபாசமாகத்தான் இருக்கும். அதிலும் இவர்கள் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் சிக்னல் என்ன தெரியுமா? கிழமை நாட்களில் கட்டவுட்டில் இருக்கும் நடிகைகளின் ஆடைமீது வர்ணம் பூசப்பட்டிருந்தால் அன்று கட்டாயம் ஆபாச படம்தான்.

“மர்மத்தீவில் மந்திரக் கன்னி, கன்னித்தீவு கன்னிகள், அரண்மனை அழகி, ராத்திரிநேர தேவதைகள்” என்ற விதத்திலேயே படத்தின் தலைப்புகள் அமைந்திருக்கும். ஆனால் உள்ளே ஓடுவது வேறு படம்.

அதாவது “பிட்டுப்படம்” வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவே இவ்வாறான தலைப்புகள் வைக்கப்பட்டாலும் பல வேளைகளில் எம்.ஜி.ஆரின் கட் அவுட்டுடன்கூட ஆபாசப்படம் உள்ளே ஓடும்.

இது தவிர ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமைகளிலும் மாலை 6 மணிக்கு ஆபாசக்காட்சியொன்று பிரத்தியேகமாக வாடிக்கையாளர்களுக்கு மாத்திரம் காட்டப்படுகிறது.

இது முழுக்க முழுக்க ஆங்கில ஆபாசப்படம் என்றாலும் சிங்கள மொழியில் சப் டைட்டில் இடப்பட்டிருப்பதன் மூலம் இப்படங்களுக்கான ஏக விநியோகஸ்தர்கள் யாராக இருக்கமுடியுமென்று உங்களால் ஊகிக்கமுடியும்.

வாடிக்கையாளர்கள் தவிர ஏனையவர்களுக்கு இந்த காட்சியில் அனுமதியில்லை. அது மட்டுமல்லாது இந்த இடத்தில் ஓரினச் சேர்க்கையாளர்கள் கூடுவதாகவும் தெரியவந்துள்ளது.

மினியில் ஆபாசப்படம் போகும் போது இங்கு ஓரினச் சேர்க்கையாளர்கள் தமது லீலையில் மெய்மறந்து போயிருப்பர். 13 தொடக்கம் 18, 20 வயதிலுள்ளவர்களே அதிகமாக இங்கு வருகின்றனர்.

எப்பொழுதும் இவர்களது முதுகில் புத்தகப் பை தொங்கும். மற்றது 45, 50 வயதுக்கு மேற்பட்ட குடும்பஸ்தர்களும் இங்கு வருகை தருவது மட்டுமல்ல ஓரினச்சேர்க்கையிலும் ஈடுபடுவது கன்றாவியாக இருக்கிறது.

அதிகமானோர் மதுபோதையில் வருவதைக் காணக்கூடியதாகவிருக்கிறது எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன் உரிமையாளர் பாஷையூரைச் சேர்ந்தவரெனவும் தமிழ்க் கட்சியொன்றின் செல்வாக்கானவரென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து யாழ் அரச அதிபர் இமெல்டா சுகுமாருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது,

“இங்கு இப்படியான விடயங்கள் மோசமாக நடக்கின்றன. நீங்கள் இதுபற்றிய விடயங்களை வெளிப்படுத்தினால் நான் யாழ் சிரேஸ்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கும், யாழ் மாநகர சபைக்கும் தெரியப்படுத்தி இதற்கு நடவடிக்கை எடுக்க முடியும். எனக்கு நடவடிக்கை எடுக்கின்ற பொறுப்பு இருப்பதால் நான் என்ன நடவடிக்கை எப்படி எடுப்பேன் என்று சொல்லமாட்டேன். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படும். நீங்கள் விடயத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவாருங்கள்” என்று தெரிவித்தார்.

நன்றி: “இருக்கிறம்” ( 01-08-2011 )

யாழ்ப்பாணத்தில் தற்போது மண்கவ்விய கட்சியைச் சேர்ந்தவர்களின் கைக்கூலிகளே இப்படியான ஆபாசப் படம் காட்டுகின்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக தெரிய வந்துள்ளது.

அவர்களின் இலக்கு இளைய சமுதாயம் குறிப்பாக மாணவர்கள். அவர்களை இப்படியான ஆபாசப்படங்களுக்கு அடிமையாக்கி அவர்களின் போராட்ட குணத்தை மழுங்கச் செய்து அடக்கி ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்கள் இந்த சிங்களத்தின் அடிவருடிகளாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்க் கட்சியினர்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இருந்த போது தியேட்டரை விட்டு வெளியே வராமல் பதுங்கி இருந்தவர்கள் தற்போது தொழில் முறையாக ஆபாசப் படங்களைத் திரையிட்டு மாணவர்களை கெடுத்து குட்டிச் சுவராக்கி சுளை சுளையாய் சம்பாதிக்கிறார்கள்.

புலிகள் இருந்த போது கம்பீரமாக இருந்த யாழ்ப்பாணம் இன்று தமிழர்களின் கலாச்சாரம், தொன்மையான சின்னங்கள், பண்பாடு ஆகியவற்றைத் தொலைத்து கெட்டொழிந்து போய் கிடக்கிறது.

ஆட்சியாளர்களுக்கு இப்படியான விடயங்கள் தெரிந்தும் கண்ணை மூடி வாய் பொத்தி காணப்படுகிறார்கள். மீண்டு வருமா பழைய யாழ்ப்பாணம்?

மூன்று வயது சிறுவனின் அபார ஞாபக சக்தி!

யானைகள் அபார ஞாபக சக்தி உடையன என்று கூறுகின்றார்கள். ஆனால் எல்லோரையும் அசர வைக்கின்றது வெறும் மூன்று வயது உடைய சிறுவன் ஒருவரின் ஞாபக சக்தி. இவரது பெற்றோர் இந்தியாவில் கேரளா மாநிலத்தை சொந்த இடமாக கொண்ட மலையாளிகள். இக்குடும்பம் பிரித்தானியாவில் வாழ்கின்றது. சிறுவன் ஆதார்ஷ் ஜோர்ஜ் இன்னமும் பாலர் பள்ளிக்கு கூட செல்லத் தொடங்கவில்லை. ஆனால் நாடுகளின் தலைவர்கள், பிரதமர்கள், எதிர்க் கட்சித் தலைவர்கள், தலைநகரங்கள் மற்றும் நாணயங்கள், ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் பெயர், சனத் தொகை கூடிய நாடுகள் போன்ற விபரங்களை மிகவும் சரியாக சொல்கின்றார். இவர் 300 வரை இலக்கங்களை ஒழுங்காக சொல்கின்றார். சுமார் 200 நாடுகளின் தலைநகரங்களை துல்லியமாக கூறுகின்றார். விபரங்களை தகப்பனிடம் இருந்து கேட்டு அறிவார். பின் நினைவில் எப்போதும் வைத்துக் கொள்வார். கணனியை திறம்பட பயன்படுத்துகின்றமையுடன் தேடுபொறிகளைப் பயன்படுத்தி பல தகவல்களையும் சொந்தமாகவே அறிந்து கொள்கின்றார். இவருக்கு புத்தகங்கள் செய்தித் தாள்கள் மீது அலாதிப் பிரியம். வைத்தியராக அல்லது விமானியாக வர வேண்டும் என்பது இவரின் ஆசை. இவர் ஒரு பால மேதை என்று உலகப் பத்திரிகைகள் போற்றுகின்றன. ஆயினும் இவருக்கு எவ்விதம் அபார ஞாபக சக்தி கிடைக்கப் பெற்றது என்பது பெற்றோருக்குக்கூட தெரியாத இரகசியமாக உள்ளது.

முகப்பு
Share

04 ஆகஸ்ட் 2011

மகளுடன் இணைந்து அழகு நடை நடந்து அசத்திய பிபாஷாவின் தாயார் (வீடியோ இணைப்பு

ரேம்ப் வாக் நிகழ்ச்சிகளில் பிபாஷா பாசுவைப் பார்த்து அசந்தவர்களுக்கு ஒரு இனிய அதிர்ச்சியாக மகளுடன் இணைந்து அழகு நடை நடந்து அசத்தி விட்டார் பிபாஷாவின் தாயார் மமதா பாசு. மும்பையில் சர்வதேச நகை வார விழா நடந்தது. இதில் பல பிரபலங்கள், நடிகைகள், மாடல்கள் கலந்து கொண்டு பூணை நடை போட்டனர். அந்த நடைகளிலேயே அனைவரின் கண்களையும் அதிகம் கவர்ந்தது பிபாஷா பாசுவும், அவரது தாயார் மமதாவும்தான். முதல் முறையாக தனது தாயார் பூணை நடை போட்டுள்ளதாக பிபாஷா பெருமையுடன் மேடையில் கூறினார். தான் அழைத்ததற்கிணங்க, தனக்காக கொல்கத்தாவிலிருந்து மும்பை வந்துள்ளார் தனது தாயார் என்றும் அவர் கூறினார். அவருடன் இணைந்து ஜோடியாக நடந்தது பெரு்மையாகவும், பூரிப்பாகவும் இருக்கிறது என்று பிபாஷா கூற, அருகில் நின்றிருந்த அவரது தாயார் வெட்கப் புன்னகை பூக்க அந்த இடமே படு குதூகலமாகி விட்டது. சும்மா சொல்லக் கூடாது, பிபாஷாவை விட படு அழகாக காணப்பட்டார் மமதா பாசு. பிபாஷாமேலும் பேசுகையில், நமது நாட்டில் ஒரு தாய்க்கும், மகளுக்கும் உள்ள பந்தம் மிகவும் வலுவானது. பெண்களின் பலத்தை பலரும் குறைத்து மதிப்பிடுகிறார்கள். ஆனால் ஒரு குடும்பத்தை தாங்கி நிற்கும் ஆலமரமாக பெண்கள்தான் திகழ்கிறார்கள். எனக்கு மூன்று சகோதரிகள். அத்தனை பேரும் எனக்கு மிகவும் பலமாக இருக்கிறார்கள். அதேபோல எங்களது பெற்றோரும், குறிப்பாக எனது தாயார் எங்கள் நால்வருக்கும் மிக மிக பேருதவியாக, பலமாக இருக்கிறார். அவருக்கு நான் நன்றி கூறிக் கொள்கிறேன் என்றார் நெகிழ்ச்சியுடன். உங்களது தாயார் முதல் முறையாக பூணை நடை போட்டது குறித்து என்ன சொன்னார் என்று பிபாஷாவுடன் கேட்டபோது, அவருக்கு மிகவும் நம்பிக்கை இருந்தது. எனக்குத்தான் ரொம்பப் பதட்டமாகி விட்டது என்று கூறிச் சிரித்தார் பிபாஷா

உண்மையை பல நாட்கள் மறைக்க முடியாது! திரிஷா விடயத்தில் வெளிப்படை

வதந்தி வதந்தி என இத்தனை நாளும் மறுத்து வந்த சமாச்சாரம் இன்று உண்மையாகிவிட்டது. த்ரிஷாவுக்கு திருமணம் செய்யப் போகிறார் அவரது அம்மா. மணமகன் பெயர் அம்ருத். சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர். தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையான த்ரிஷா, நடிக்க வந்து 10 ஆண்டுகள் ஆகிவிட்டன. மிக பிஸியான நடிகையாக இருந்த அவர், இப்போது புதிய படங்கள் எதையும் ஒப்புக் கொள்வதில்லை. இருக்கிற படங்களை முடித்துக் கொடுப்பதில் தீவிரமாக உள்ளார். அவரது தாயார் உமா கிருஷ்ணன், த்ரிஷாவுக்கு இந்த ஆண்டு திருமணம் செய்துவிட வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளார். த்ரிஷாவுக்கு ஹைதராபாத், அமெரிக்கா, சென்னை என பல இடங்களில் மாப்பிள்ளை பார்த்து வந்தார். இதனால் அவ்வப்போது த்ரிஷா திருமணம் குறித்து செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. அதை த்ரிஷா மறுத்து வந்தார். இப்போது த்ரிஷாவுக்கு மாப்பிள்ளை யார் என்ற செய்தி வெளியாகியுள்ளது. சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான அம்ருத் என்பவரைத்தான் திரிஷா திருமணம் செய்யப் போகிறார். அம்ருத் த்ரிஷாவுக்கு புதியவரல்ல. பெரும்பாலான பார்ட்டிகளில் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டு நண்பர்களுடன் கொண்டாடி மகிழ்வது வழக்கம். கடந்த வாரம் த்ரிஷாவுக்கு ஸ்டைல் நடிகை விருது கொடுத்த போதுகூட, அம்ருத்தும் உடன் வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இருவருக்கும் வரும் செப்டம்பரில் திருமண நிச்சயதார்த்தம் நடக்கிறது. இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2012 தொடக்கத்தில் திருமணம் நடக்கும் என தெரிகிறது.

நண்பர்களை கூகுள் ப்ளஸ் ill தடை செய்வதற்கு

பேஸ்புக்கை காட்டிலும் கூகுள் பிளஸ் சமூக இணையதளம் உபயோகப்படுத்த மிகவும் சுலபமாக உள்ளது. தற்போதைய நிலவரப்படி இந்த தளம் 20 மில்லியன் வாசகர்களை தாண்டி விட்டதாக அறிவிக்கப்படுகிறது. ஆனால் இன்னும் சோதனை பதிப்பிலேயே வைத்திருக்க காரணம் வாசகர்களின் கருத்துக்களை கண்டறியவே. சமூக இணையதளங்களில் பெரும்பாலும் நாம் பகிரும் தகவல்கள் நம்முடைய கணக்கில் நண்பர்களாக உள்ள அனைவருக்கும் சென்றடையும். அவர்களும் தகவல்களை பார்த்து அதற்கு அவர்களின் கருத்துக்களை வெளிப்படுத்துவார்கள். கூகுள் பிளசில் நாம் பகிரும் தகவலை ஒரு குறிப்பிட்ட நபர் பார்க்காத வண்ணம் தடை செய்யலாம். அவ்வாறு செய்த பின் 1. அவருடைய அப்டேட்கள் இனி உங்கள் Stream பகுதியில் அப்டேட் ஆகாது. 2. நீங்கள் அப்டேட் செய்யும் செய்திகளுக்கு அவரால் கமென்ட் கூட போட முடியாது. 3. Block செய்வதால் உங்கள் Circle-ல் இருந்து நீக்கப்படுவதால் உங்களின் அப்டேட்கள் அவருக்கு செல்லாது. 4. ஆனால் முக்கியமான விடயம் நீங்கள் Public பகுதியில் பகிரும் விடயத்தை தடை செய்தாலும் அவரால் பார்க்க முடியும். இதற்கு முதலில் அந்த குறிப்பிட்ட நபரின் புரோபைல் பக்கத்திற்கு செல்லுங்கள். அவர் ஏதாவது கேமென்ட் போட்டிருந்தாலோ, உங்கள் circle-ல் அவர் இருந்தாலோ அந்த பொட்டோவை க்ளிக் செய்தால் அவரின் புரோபைல் பகுதிக்கு அழைத்து செல்லும். அடுத்து வரும் விண்டோவில் Block என்ற ஒரு லிங்க் இருக்கும் அதை க்ளிக் செய்யவும். அங்கு உள்ள Block பட்டனை அழுத்தினால் அவரின் ஐடி தடை செய்யப்பட்டு விடும். இனிமேல் உங்கள் அப்டேட்களை அவரால் பார்க்க முடியாது.

மூன்றாவது டெஸ்ட் போட்டியிலிருந்து ஹர்பஜன் விலகல்

இந்தியாவின் சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.

கடந்த சில டெஸ்ட் போட்டிகளில் பார்ம் இன்றி தவித்தார் ஹர்பஜன். டிரெண்ட்பிரிட்ஜ்ஜில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது அவருக்கு அடிவயிற்றுப் பகுதியில் காயம்பட்டது.

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலுமாக இரண்டு விக்கெட்களே சாய்த்தார் ஹர்பஜன். ட்ரெண்ட்பிரிட்ஜ் இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது ஒன்பது ஓவர்களே வீசினார்.

ஆனால் துடுப்பெடுத்தாடும் போது 46 ரன்கள் சேர்த்தார். எனவே அவரது உடற்காயம் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது. இருப்பினும் இந்திய அணி நிர்வாகம் அவருக்கு காயம் பட்டிருக்கிறது என்றும் அவர் 10லிருந்து 12 நாட்கள் ஓய்வாக இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இந்த விவகாரத்தின் பின்னணியைப் பற்றிச் சொல்லும் இந்திய கிரிக்கட் ரசிகர்கள் ஹர்பஜன் மிகவும் மோசமான பார்ம் காரணமாக விலக்கப்பட்டிருக்கலாம். இங்கிலாந்துக்கு எதிராக வெற்றி பெறும் வாய்ப்பை அவர் வீணடித்துவிட்டார் என்கின்றனர்

சங்கிலிய மன்னனின் புனருத்தாரணம் செய்யப்பட்ட சிலை திறந்து வைப்பு

யாழ். மாநகரசபையினால் யாழ்ப்பாண இராச்சியத்தின் இறுதி மன்னனான சங்கிலிய மன்னனின் புனருத்தாரணம் செய்யப்பட்ட சிலை திறப்பு விழா இன்று காலை 7.15 மணியளவில் நடைபெற்றது.

யாழ்ப்பாணம் மாநகர சபை முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட பாரம்பரிய கைத்தொழில்; மற்றும் சிறுகைத் தொழில்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சங்கிலியனின் சிலையைத் திறந்து வைத்ததுடன் நினைவுக் கல்லையும் திறந்து வைத்தார்.

பிரதம விருந்தினர் உட்பட ஏனைய பிரமுகர்களும் பருத்தித்துறை வீதியில் உள்ள குமார வீதிச் சந்தியில் இருந்து மேளவாத்தியத்துடன் ஊர்வலமாக விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள். தொடர்ந்து சமயத் தலைவர்களின் ஆசியுரைகள் இடம்பெற்றன.

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார், யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வசந்தி அரசரெட்ணம் மற்றும் யாழ்ப்பாணம் மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் இலங்கை தமிழரசுக் கட்சியின் உறுப்பினர் றெமேடியஸ் உட்பட பாடசாலை மாணவா்கள், அதிபர்கள், யாழ். செயலக அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.

கணணி ,மொபைல் ,விளையாட்டு ,பேஷன் போன்ற ,புதிய தகவல்களை பார்க்க இங்கே சொடுக்கவும் -dhileep-annai-illam.blogspot.com