02 டிசம்பர் 2009
பின்னழகை எடுப்பாக்க ஆபரேஷன் - உயிரிழந்த அர்ஜென்டினா அழகி
கூகிளில் படத்தை (Image) எவ்வாறு விரும்பிய நிறத்தில் தேடுவது
இன்றைய இணைய உலகில் எங்களின் உற்ற நண்பனாகிவிட்ட கூகிள் தேடும் பொறியில் (Google search engine), எமக்கு தேவையான படத்தை (Image) எவ்வாறு நிறத்தில் தேடுவது பற்றி இந்த பதிவில் குறிப்பிடுகின்றேன். இது பற்றி பலருக்கு தெரிந்திருக்கும் என்றாலும் சிலருக்காவது என் பதிவு உதவும் என நினைக்கிறேன். நீங்கள் அழகிய மஞ்சள் நிற ரோஜா பூவைத் (Yellow colour Rose) தேட வேண்டும் என்றால், நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான்... அதாவது கூகிள் பட தேடலின் (URL- Address Bar)இல் கடைசியில் &imgcolor=yellow என்று சேர்த்தால் போதும். அதாவது http://images.google.com/images?q=rose&imgcolor=yellow படத்தை பாருங்க.....
மிகச் சிறிய MP3 பிளேயர்
- 4 GB சேமிப்பகம் (memory)
- USB ஊடாக பாடல்கள் மாற்றக்கூடிய, சார்ஜ் செய்யக்கூடிய வசதி
- மீண்டும் சார்ஜ் செய்யக்கூடிய Li battery வசதி
- Stereo ஒலி
- மேலதிக மென்பொருள் இல்லாமல் PC இல் இருந்து பாடல்களை எந்த Operating System இல் இருந்தும் மாற்றலாம்.
பொறுத்திருங்கள் நண்பர்களே, நம்மட நாட்டு சந்தைக்கு வந்து தானே ஆக வேண்டும்.
ஷாருக்கானிடம் மன்னிப்பு கேட்கமாட்டேன்-அமீர்
இது சீரியஸான மேட்டரில்லை!-ஆக்கர் ஸ்டுடியோ
ஆசினுடன் வேகமாக நெருங்கும் சல்மான்
விண்டோஸ் 7 : ஒரே சொடுக்கில் கோப்புகளைத் திறக்க
How to Open Files with a Single-Click in Windows 7
Now you can able to see File, Edit Menu on top.
Please select Folder options in Tools Menu
Click on Single click to open an item (point to select)
Press OK.
Make mouse clicking easy - change from double click to single click
Make mouse clicking easy - change from double click to single click. Click once on a floder to open it or even underline it when you hover over it.
கிளாமரில் கலக்கும் சங்கீதா
| ‘பிதாமகன்’ மூலம் இரண்டாவது என்ட்ரி கொடுத்த சங்கீதா அதன் பிறகு ‘உயிர்’, ‘தனம்’ போன்ற படங்களில் கவர்ச்சியாக நடித்தார். அதன்பிறகு தான் அவருக்கு வாய்ப்புகள் சாரமாரியாக வந்து கொட்ட ஆரம்பித்தன. |
| முன்செல்ல |
02 அக்டோபர் 2009
ஆண்ட்ரியா புகார்..செல்வராகவனை வெளியில் தள்ளிய நட்சத்திர ஓட்டல்!
இறுதிப்பந்தில் அவுஸ். வெற்றி - சாம்பியன் திரோபியில் இருந்து வெளியேறுகிறது இந்தியா!
| | | |
|
|
சினிமாவுக்கு நிலா குட்பை!
திருட்டுப் பட்டத்தால் அழகிப் பட்டத்தைத் துறந்த சிங்கப்பூர் அழகி!
திருட்டுப்பட்டம் கட்டிக்கொண்ட சிங்கப்பூர் அழகி தன்னுடைய அழகிப் பட்டத்தை துறந்தார்.
2009 ஆண்டுக்கான சிங்கப்பூர் அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரிஸ் லோ. ஆடைகள் மற்றும் அணிகலன்கள் வாங்குவதற்காக கிரெடிட் கார்டுகளை திருடினார் என்று இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனால் இவருக்கு பொதுமக்களிடையே உண்டான எதிர்ப்பு காரணமாக, தன்னுடைய அழகிப் பட்டத்தை துறந்தார்.
சிங்கப்பூர் அழகி ரிஸ் லோ கடந்த வருடம் ஒரு மருத்துவமனையில் பணியாற்றியபோது மற்றவர்களின் கிரெடிட் கார்டுகளைத் திருடி தனக்குத் தேவையான ஆடைகள், அணிகலன்கள் உள்ளிட்டவற்றை வாங்கினார் என்று உள்ளூர் பத்திரிகை ஒன்று செய்திக்கட்டுரை வெளியிட்டது. கிரெடிட் கார்டுகளைத் திருடி அவர் வாங்கிய பொருட்களின் மதிப்பு சுமார் 3 லட்ச ரூபாய் என்றும் அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சையின் விளைவாக அழகிப் பட்டத்தைத் துறந்தார் ரிஸ் லோ.
சிங்கப்பூர் அழகிப் போட்டியை நடத்திய ERM World Marketing நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ரிஸ்லோ தனது அழகிப் பட்டத்தை துறந்ததை உறுதிப்படுத்தி இருக்கிறது. அத்துடன் டிசம்பர் மாதம் தென் ஆப்ரிக்காவில் நடைபெறவிருக்கும் உலக அழகிப் போட்டியில் பங்கெடுக்கும் வாய்ப்பையும் ரிஸ் லோ இழந்துவிட்டதாகவும் கூறியுள்ளது.
ரிஸ் லோ மீது திருட்டுப் பட்டம் மட்டுமல்லாது பல குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டுள்ளது. அவருடைய ஆங்கிலம் சகிக்கவில்லை என்றும், பிகினி என்ற சொல்லைக்கூட அவரால் சரியாக உச்சரிக்க இயலவில்லை என்றும், சிங்கப்பூரின் பாரம்பரியத்தை, கலாசாரத்தை பிரதிபலிக்கும் எந்த அம்சமும் அவரிடம் இல்லை என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும்விதமாகத் தான் அவர் தனது அழகிப் பட்டத்தை துறந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
குஷ்பு குடும்பம் சென்ற படகு நடுக்கடலில் கவிழ்ந்தது!
வர இருக்கும் மொபைல்கள்
திருவிழா காலம் தொடங்கிவிட்டது. புதிய ஆடைகளுடன் வீட்டு சாதனங்களையும் புதியதாய் மாற்றும் வழக்கம் நம்மிடையே எப்போதும் உண்டு. மொபைல் போன்களைப் பொறுத்தவரை புதியதாய் என்ன வர இருக்கின்றன என்று அனைவரும் அறியும் வண்ணம், மொபைல் போன் நிறுவனங்கள் அறிவிப்பதில்லை. இருப்பினும் மற்ற நாடுகளில் அண்மையில் அறிமுகமான போன்கள், உலக அளவிலான கண்காட்சி மற்றும் கருத்தரங்குகளில் காட்சிக்கு வைக்கப்பட்ட போன்கள் ஆகியவற்றின் அடிப்படையில் சில போன்களை நாம் நிச்சயமாக இங்கு விற்பனைக்கு எதிர்பார்க்கலாம். இவற்றின் சரியான விலை விற்பனைக்கு வருகையில் தெரியவரும்.
26 செப்டம்பர் 2009
சினேகாவால் அடிவாங்கிய ரியல் எஸ்டேட் அதிபர்!
ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு மெழுகுச் சிலை
எளிதாய் சம்பாதிக்க 7 வழிகள்
இன்றைய சூழ்நிலையில் எளிய முறையில் சம்பாதிக்க பைனான்ஸ் கம்பெனி தான் சிறந்த வழி. ஒரு பைனான்ஸ் கம்பெனி தொடங்குவது முதல் மொத்த காசையும் ஆட்டயப் போட்டுக்கிட்டு எஸ்கேப் ஆவது வரை ஏதோ என்னால் முடிந்த யோசனைகள்
தேவையான பொருட்கள்: நல்ல கட்டிடம் : 1 இணையதளம்: 1 மேனேஜர்: 2 அல்ல்து 3 ரிசப்சனிஸ்ட் :2 (அழகாக இருப்பது அவசியம்) தொலைபேசி இணைப்புகள் : 3 அல்லது 4 செக்யூரிட்டிகள் : 2 மேசை நாற்காலிகள்: தேவையான அளவு கலர்விளக்குகள் : தேவையான அளவு
செய்முறை :
1) முதலில் நகர்புறத்தின் அல்லது ஒதுக்குப் புறமாக எவ்வளவு கேட்டாலும் அட்வான்ஸ் கொடுத்து ஒரு பிரம்மாண்டக் கட்டிடத்தை வாடகைகுப் பிடித்துக் கொள்ளவும்.அதன்பிறகு கொஞ்சம் செலவுசெய்து கட்டிடத்தின் வெளியே ஸ்டீல் மோல்டிங் செய்து கொள்ளவும்
2) மேஜை நாற்காலிகள் நாள் வாடகைக்குப் பிடித்து வைத்துக் கொள்ளவும். அதற்கும் வாடகை கொடுக்கத் தேவையிருக்காது. எஸ்கேப் ஆகி போகும் போது அதை வைத்துவிட்டுப் போவதால் ஏமாந்தவர்கள் அதைத்தூக்கி அடித்து விளையாட வசதிப்படும்.
3)சாப்ட்வேர் படித்தவர்கள் புதிய நபர்கள் தேவை என பேப்பரில் விளம்பரம் செய்து அவர்களில்நல்லதாகப் 10 பேரை செகச்ட் செய்து பின்னர் அவர்களிடம் நமது ஜில்பான்சி கம்பெனிக்கு ஒரு நல்ல இணையத் தளம் வடிவமைத்துத் தருமாறும் அதை வைத்துத் தான் அவர்களின் திறனை கண்டு பின்னர் அப்பாயின்மென்ட் லட்டர் தருவதாகவும் சொல்லி நல்ல கலர்கலராக வெப்சைட் ஓப்பன்செய்துகொள்ளவும்.அவர்களுக்கும் அல்வா தான். அதேபோல நல்ல அடிவாங்கும் திறன் கொண்ட அப்பாவிகள் சிலரை ஆபீஸ் பணியாளர்களாக அமர்த்த வேண்டும்.கடைசியில் அவர்கள் தான் மாட்டிக் கொண்டு முழிப்பார்கள்.
4) நமீதா, நயன்தாரா போன்ற நல்ல கலர் பிகர்களைத் தேர்வு செய்து அவர்களை ரிசப்சனிஸ்ட் வேலைக்கு அமர்த்த வேண்டும்.அவர்களுக்கு எதிராக ரிசப்சனில் சோபா செட்டுகளைப் போட்டுவிட்டால் போதும் கூட்டம் நாளுக்குநாள் அதிகரிக்கும்.
5)பிரைவேட் செக்யூரிட்டி சென்டரில் நல்ல ஆஜானுபாகுவான 2 பேரை கேட்டு வாங்கி அருகிலேயே வைத்துக் கொள்ளவும். இதன் மூலம் பணத்தை திருப்பிக்கேட்டு சண்டை போட நினைத்துக் கொண்டு வருபவர்கள் ஜம்ப் ஆகிவிடுவார்கள்.
6)முதலில் வைப்புத்தொகையாக ஒரு லட்சம் ரூபாய் செலுத்தினால் மாதாமாதம் ரூபாய் 25 ஆயிரம், வாரம் ஒருவருக்கு குலுக்கல் முறையில் ஹோண்டா சிட்டி கார் என 10 மாதங்களுக்குத் தரப்படும் என டிவி,பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்யலாம். இலவசம் என்றாலே போதும் நம் மக்கள் எதைப் பத்தியும் கண்டுகொள்ளாமல் தங்கள் காசுகளை அள்ளிக்கொண்டு வந்து கொட்டி விடுவார்கள்.
7) செலவைக் கணக்கில் கொள்ளாமல் விளம்பரங்களையும் ஸ்பான்சர்களை அள்ளி இறைக்கவும்.அது மட்டுமின்றி ஒரு நபர் மற்றொரு நபரை சேர்த்துவிட்டால் ஒரு தங்க நாணயம் எனஅள்ளிவிட வேண்டும் . நமது ஆட்களில் ஒரு 10 பேருக்கு தங்க நாணயக் கொடுப்பது போல போட்டோ எடுத்து அதை ரிசப்சனில் மாட்டி வைத்தால் போதும். இதனால் நமது ஜில்பான்சிகம்பெனியின் முதலீட்டாளர்கள் எண்ணிக்கை குபுகுபுவென உயர்ந்துவிடும்.
இது போல செய்தால் ஒரு 2 மாதத்தில் எப்படியும் 100 கோடியை எட்டிவிடலாம். அத்தோடு அதை தூக்கிக் கொண்டு எஸ்கேப் ஆகிவிடலாம். இதற்குப் பிறகு மட்டுமே சுதாரிக்கும் நம் தமிழக மக்கள் பின்னர் வாயிலும் வயித்திலும் அடித்துக் கொண்டு டிவியில் பேட்டி கொடுப்பார்கள். பிறகு ஏமாந்தோர் அசோசியேசன் அமைத்துப் புகார் கொடுப்பார்கள். பின்னர் காவல்துறை வலைவீசித் தேடும்.எனவே நாம் குளங்களிலும் கடல்களிலும் குளிக்காமல் இருப்பது நலம்.
ஆயிரம் கலைமகள் சபா, ஆயிரம் அனுபவ் குரூப் என கோடி கோடியாய் சுருட்டி பாடம்புகட்டினாலும் நம் தமிழ்மக்களுக்கு அறிவே வராது. நாளைக்கே நீங்கள் ஒரு பைனான்ஸ் கம்பெனிஆரம்பித்து டபுள் வட்டி தருவதாய் சொன்னால் கூட அதற்கென ஒரு கூட்டம் இருக்கிறது.ஆலோசனை மட்டும் தான் நான் சொல்ல முடியும், மத்தத நீங்க தான் செய்யனும். அப்படி யாராவதுஇதை பாலோ செய்து ஒரு நல்ல தொகை அடித்தால் தயவுசெய்து எனக்கும் ஒரு ஷேர் தருமாறுபணிவோடு வேண்டுகிறேன். பணம் கிடைத்தால் நான் வாங்கிக் கொள்கிறேன், வேறு ஏதாவதுகிடைத்தால்?? என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது.., விடு ஜூட்!!!!!!!!!!
உங்கள் கருத்துக்கள்